Saturday, September 25, 2021

ஆவி - ஆதன் - ஆன்மா

 வாய்திறந்து மூச்சுவெளிவிடுதலை ”ஆவென மூச்சுவிட்டான்” என்போம். ஆவுதலின் வழிப்பிறந்த பெயர்ச்சொல் ஆவி. முக்கால்/வாயால் வெளிவிடுங் காற்றைக் குறிக்கும். ஆவி தமிழே. உள்ளிழுக்கும் செயலை உய்தலென்றும், வெளிவிடுஞ் செயலை ஆதல்/ஆவுதல் என்றுஞ்சொல்வோம். இதற்கு உண்டாதல், நிகழ்தல், ஒப்பாதல், அமைதல் வளர்தல் போன்ற அசைவுப் பொருள் காட்டுவோம். உய்தலிற் பிறந்தபெயர் உயிரானது போல். ஆதலிற் பிறந்தது ஆவி. ஆவிக்குப் பகரி ஆதன். விலங்காண்டி மாந்தருக்கு உயிரெனும் கருத்துப்பொருள் புரியாவிடினும், மூக்கால்/வாயால் உள்ளிழுப்பதும் வெளி விடுவதும் நின்றுபோயின், ”ஆள் இறந்துபட்டான்” என்பது பட்டறிவால் தெரியும். காற்றெனும் பருப்பொருளை வைத்தே கருத்துப் பொருள் அறிந்தார். கொட்டாவி என்பது சட்டென்று தனையறியாது மாந்தர் வாயால் வெளிவிடும் காற்று. வாய்க்காற்றுக்கு வாயுவென்றும் பெயருண்டு. வாயுவும் தமிழே. (பலவற்றைச் சங்கதத்திற்கு ஈந்து ஏமாளியாய்த் தமிழிருக்கிறது.) ’ஆ’வெனும் ஓரெழுத்து மொழிக்கு உயிரென்ற பொருளுமுண்டு. உடலசைவிற்கு ஆதன் காரணமென எண்ணத் தொடங்கினார். ’ஆ’னும் மா (=விலங்கு) ஆன்மா ஆயிற்று. இந்தையிரோப்பியனிலும் ஆ-வென்பது மூச்சு விடுதலே. 

அதன் ஆங்கில வரையறையைப் பாருங்கள். animal (n.) early 14c., "any sentient living creature" (including humans), from Latin animale "living being, being which breathes," noun use of neuter of animalis (adj.) "animate, living; of the air," from anima "breath, soul; a current of air" (from PIE root *ane- "to breathe;" compare deer). A rare word in English before c. 1600, and not in KJV (1611). Commonly only of non-human creatures. It drove out the older beast in common usage. Used derisively of brutish humans (in which the "animal," or non-rational, non-spiritual nature is ascendant) from 1580s. உயிருள்ள விலங்கு ஆன்மாவாகிப் பின் உயிருக்கென விதப்பான பெயராயிற்று. ஆதல், ஆகுதல், ஆயுதல், ஆவுதல், ஆனுதல் எனும் எல்லாவற்றிற்கும் தமிழில் ஒரே பொருள் தான். ’ஆ’தும் மா ஆத்மா. இது சங்கதம் போன்ற வடபுல மொழிகளில் புழங்கியது. தமிழில் ஆதனும் உண்டு, ஆன்மாவும் உண்டு. ஆத்மாவை ஒதுக்குவார். ஏனெனில் ஆதுமா என்பது ஆத்மா எனவொலிக்கும்போது தமிழில் பழகா ஒலியாய்த் தோற்றும். எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆவெனும் ஒலியே. உயிரும் ஆதனும் ஒன்றே.  


No comments: