Sunday, November 16, 2003

தமிழெனும் கேள்வி

இந்த ஆண்டு ஆகசுடு 15-ல் ”கணினியில் தமிழ்” என்ற விழிப்புணர்ச்சி விழாவை அமீரகத் தமிழர் சிலர் சேர்ந்து திருவாரூரில் நடத்தினார். பாராட்டப் படவேண்டிய நல்ல முயற்சி; இதுபோன்ற உருப்படியான நிகழ்வுகள் பல ஊர்களிலும் நடத்தப் படவேண்டும். கதை, கவிதை, இன்ன பிறவற்றை மட்டுமே நமக்குள் பேசிக் கொண்டு இருப்பதில் மட்டும் பலனில்லை. அதற்கு மேலும் உள்ளவை இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். எதிர்காலத்தில் தமிழ் தொடர்ந்து வாழ நம் பங்களிப்புத் தேவை.

நிகழ்ச்சியின் பொழுது ஒரு நூலும் வெளியிடப் பட்டது. அப் பொத்தகத்தில் என் பங்களிப்பாக இருந்த கட்டுரையை உங்கள் வாசிப்பிற்காக இங்கு தருகிறேன்.

அன்புடன்,
இராம.கி.
------------------------------------------------------------------------------------------------
தமிழெனும் கேள்வி

அன்பிற்குரிய வாசகருக்கு,

இம் மலர் உமக்கு வந்துசேர்ந்து, இக் கட்டுரை வரைக்கும் விருப்பத்தோடு நீர் படிக்க முற்பட்டு இருப்பீரானால், தமிழ் மேல் உமக்கு ஏதோ ஒரு பற்று அல்லது அக்கறை உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் உம்மோடு பேசலாம்; இன்னும் சொன்னால் பேசத்தான் வேண்டும்; உம் போன்றவருடன் கலந்துரையாடாமல் வேறு யாருடன் நான் உரையாடப் போகிறேன்?

தமிழ் மொழியைப் பேச, படிக்க, மற்றும் எழுத எங்கு கற்றுக் கொண்டீர்? உம் பெற்றோரிடம் இருந்தா, ஆசிரியரிடம் இருந்தா, அல்லது உமைச் சுற்றி உள்ள சுற்றம், நட்பில் இருந்தா? நீர் எந்த இடங்களில் எல்லாம் தமிழில் பேசுகிறீர்? எங்கெல்லாம் ஆங்கிலத்தில் பேசுகிறீர்? உம் நெடு நாளைய நண்பரையோ, அல்லது முன்பின் தெரியாத தமிழரையோ பார்க்கும் பொழுது, அக் கணத்தில் நீர் தமிழில் உரையாடுகிறீரா, அல்லது ஆங்கிலத்தில் உரையாடுகிறீரா?

நீர் பேசும் ஆங்கிலத்துள் உமை அறியாமல் தமிழ் ஊடுறுவுகிறதா? அப்படி ஊடுறுவினால் அதை ஒரு நாகரிகம் இல்லாத பட்டிக்காட்டுத் தனம் என்று எண்ணிக் கொஞ்சம் வெட்கப்பட்டு, அதைத் தவிர்க்க முயன்றுள்ளீரா? உம் ஆங்கில வன்மை கூடுதற்காகப் பல்வேறு பயிற்சிகள் செய்ய முற்பட்டுள்ளீரா? உம் வீட்டில் ஆங்கிலம் - ஆங்கிலம் அகரமுதலியை வைத்திருக்கிறீரா? உமக்குத் தெரியாத ஆங்கிலச் சொற்களைப் பயிலும்போது அவற்றின் பொருள் அறிய வேண்டிச் சட்டென்று அகர முதலியைத் தேடுகிறீரா?

ஆங்கிலப் பேச்சில் சிறக்க வேண்டும் என்ற ஒய்யார எண்ணத்தால் உந்தப் பெற்று, உச்சக் கட்டமாக, தம் பெற்றோரோடும் சுற்றத்தாரோடும் இருக்கும் உறவையே கூடச் சில போது முற்றிலும் துண்டித்துக் கொள்ளச் சிலர் முயல்வார்; அவ் விவரங்கெட்ட நிலைக்கு நீர் போனதுண்டோ ? ஆங்கிலம் அறியாப் பெற்றோர், சுற்றத்தார் வாடை உமக்கும், உம் பிறங்கடையருக்கும் (successors) வரக்கூடாது என்று நீர் எண்ணியதுண்டோ ?

உம் பேச்சில் தமிழ் மிகமிகக் குறைந்து இருந்தால் அது எதனால் ஏற்படுகிறது? தமிழும், தமிழன் என்ற அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்து விலக்குகிறீரா? அல்லது சோம்பலாலும், கவனக் குறைவாலும், ஆங்கிலம் பழகினால் குமுகாயத்தில் ஒரு மேலிடம் கிடைக்கும் என்ற உந்துதலாலும் தமிழை விலக்குகிறீரா? தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது தமிழ நாகரிகத்தின் கருவூலம் என்பதை மறுத்து, அது வெறும் கருத்துப் பரிமாற்ற மொழி, இனி வரும் நாட்களில் ஆங்கிலமே போதும் என்று எண்ணுகிறீரா?

இதற்கெல்லாம் ஆம் என நீர் விடையளித்தால் உம்மோடு மேற்கொண்டு நான் உரையாடுவதில் பொருளில்லை; மேற்கு இந்தியத் தீவுகளில் இருந்துகொண்டு நாலைந்து தலைமுறைக்கு அப்புறமும் தன் பெயரை முட்டம்மா என்று வைத்து, "தன் தாத்தா தண்டபாணிக்குக் கொஞ்சம் தமிழ்தெரியும்" என்று சொல்லித் தமிழில் பேச இயலாத ஒரு பெண்ணுக்கும் உமக்கும் மிகு வேறுபாடு இல்லை. வெகு விரைவில் நீர் எமை விட்டுப் பெருந் தொலைவு விலகிப் போய்விடுவீர்; என்றோ ஒருநாள் தமிழராய் இருந்ததற்காக உம்மோடு நாங்கள் அன்பு பாராட்ட முடியும். அவ்வளவே. எங்கிருந்தாலும் வாழ்க, வளமுடன்!

மாறாக மேலுள்ள கேள்விகளுக்கு ஆம் என்று சொல்லாது கொஞ்சமாவது தடுமாறினீர் என்றால் உம்மோடு உரையாடுவதில் இன்னும் பலன் உண்டு. அந்த எண்ணத்தினாலேயே மேலும் இங்கு உரையாடுகிறேன்.

சுற்றம், நட்பு போன்ற இடங்களில் நீர் தமிழ் பேசத் தவித்திருக்கிறீரா? அலுவல் தவிர்த்து மற்றோரோடு நீர் பேசும் உரையாடல்களில் எத்தனை விழுக்காடு தமிழில் இருக்கும்? அடிப்படை வாழ்க்கைச் செய்திகளில் உம்மால் தமிழில் உரையாட முடிகிறதா? தமிழ் பேசும்போது ஆங்கிலம் ஊடுறுவினால் அதைப் பட்டிக்காட்டுத் தனமென எண்ணாது, நாகரிகமென எண்ணுகிறீரா? அந்த ஊடுறுவலைத் தவிர்க்க முடியுமென அறிவீரோ? உம் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி உள்ளதா? தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி உள்ளதா? உமக்குத் தெரியாத் தமிழ்ச்சொற்கள் பயிலும்போது உடனே தமிழ்-தமிழ் அகரமுதலி தேடுகிறீரா?

உம் பெற்றோர் அறிந்த தமிழோடு உம் தமிழை ஒப்பிட்டால் இப்பொழுது அப் பேச்சில் தமிழ் எவ்வளவு தேறும்? 98 விழுக்காடாவது தேறுமா? இரண்டு விழுக்காடு குறைந்தாலேயே ஏழாம் தலைமுறையில் முக்கால் பங்கு தமிழ் "போயே போயிந்தி" என்று உமக்குத் தெரியுமா? எந்த ஒரு மொழியிலும் கிட்டத்தட்ட 85 விழுக்காடு வினையல்லாத பெயர், இடை மற்றும் உரிச் சொற்கள் என்றும் 15 விழுக்காடுகளே வினைச்சொற்கள் என்றும் உமக்குத் தெரியுமா? சொல்வளத்தைக் கூட்டுவது என்பது பெயர்ச்சொற்களை மேலும் மேலும் அறிந்துகொள்வதே என்று கேட்டிருக்கிறீரா? நம் ஊர்ப்பக்கம் நாம் கற்றுக் கொண்டவை கூடப் புழங்கிக் கொண்டே இருக்கவில்லை எனில் மறந்துவிடும் என்று அறிவீரா? வட்டாரத்திற்கு வட்டாரம், தமிழ் ஓரளவு மாறிப் புழங்குகிறது என்று தெரியுமா? இத் தமிழ் நிலைத்திருக்க நாம் என்னெவெலாம் செய்கிறோம் என எண்ணிப் பார்த்துள்ளீரா? தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாது, மேலும் சில கடமைகள் நமக்குண்டு என்று எண்ணிப் பார்த்துள்ளீரா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் - என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.

மொழி என்பது கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வகையான ஊடகம், மிடையம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். தமிழர்க்குப் பிறந்த ஒரு குழந்தையை அக் குழந்தையின் பெற்றோருடைய பண்பாட்டுத் தாக்கம் இல்லாத குமுகாயத்தில், தமிழறியாக் குமுகாயத்தில் வளர்த்தோம் எனில், அது தமிழப் பிள்ளையாக அன்றி, வேறுவகைப் பிள்ளையாகத் தான் வளரும்; ஆனால் தமிழ் என்பது வெறும் ஊடகமா? மீனுக்கு அதைச் சுற்றிலும் உள்ள நீர் வெறும் ஊடகமா? பின் புலமா? உப்பில்லாத நல்ல தண்ணீரில் வளர்ந்த கெண்டை மீனைக் கொண்டுபோய் உப்பங் கழியில் போட்டால் அது உயிர் வாழமுடியுமோ? பின்புலத்தை மீறிய வாழ்வுண்டோ ? ஊடகம், ஊடகம் என்று சொல்லி மொழியின் பங்கைக் குறைத்து விட்டோ ம் அல்லவா? மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது பின்புலமும் கூட. இப் பின்புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. நம் சிந்தனையை ஒருவிதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப்படுகிறோம். எல்லா மாந்தரும் தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத் தானே வாழமுடியும்? பிறக்கும் போது இருந்த பின்புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்டபின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல வேறு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ? இப்பொழுது நீர் தமிழ் நாட்டில் பிறந்து விட்டீர், அல்லது வேறு நாட்டில் பிறந்தும் உம் பெற்றோர் தமிழ்ப் பின்புலத்தை விடாது காப்பாற்றி வருகிறார், இந்நிலையில் நீர் தமிழை விடமுடியுமா? ஒன்று கிணற்றைத் தாண்டாது இருக்கலாம், அல்லது முற்றிலும் தாண்டலாம்; இடைப் பட்ட நிலையில் பாதிக் கிணறு தாண்டி உயிர்வாழ முடியுமோ?

தமிழும் அது போலத்தான். தமிழ் எனும் பின்புலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்கள், இலக்கணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் தொகுப்பைக் குறிக்கிறது. அவற்றைத் தெரிந்துகொள்ளாது தமிழ் அறியாதவனாக இருக்கலாம்; அன்றித் தெரிந்துகொண்டு தமிழ் அறிந்தவனாக இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பது ஒருவகையில் ”திரிசங்கு சொர்க்கமே!” தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உம்மோடு இப்பழக்கம் நின்று போகவா நீர் இதைக் கற்றுக் கொண்டீர்? இல்லையே? வாழையடி வாழையாய் இம்மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்றுதானே உமக்கு மற்றவர் கற்றுக் கொடுத்தார்? அப்படியானால், இத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீர் தமிழ்பேசக் கற்றுக் கொடுத்தீர்? குழந்தையாய் இருந்த போது கற்றுக் கொண்ட "நிலா!நிலா! ஓடி வா" வையும், "கைவீசம்மா, கைவீசு" வையும் இன்னொரு தமிழ்க் குழந்தைக்கு நீர் கற்றுக் கொடுத்திருக்கிறீரா? வாலறுந்த நரி, சுட்ட பழம் - சுடாத பழம் போன்ற கதைகளை இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்தீரா? ஆத்திச்சூடி, திருக்குறள், நாலடியார் போன்றவற்றிலிருந்து ஒரு சிலவாவது மற்றவர்க்குச் சொல்ல முடியுமா? இக்கால பாரதி, பாரதிதாசன் ஏதாவது படித்திருக்கிறீரா? கொஞ்சம் மு.வ., கொஞ்சம் திரு.வி.க. படித்திருக்கிறீரா? ஓரளவாவது புதுமைப் பித்தன், மௌனி, இலா.ச.ரா, செயகாந்தன் படித்திருக்கிறீரா? பல்வேறு காலத் தமிழ்ப் பாட்டுக்கள், மற்றும் உரைநடைகளைப் படித்திருக்கிறீரா?

"தமிழ் சோறு போடுமா?" என்று சிலர் கேட்கிறார்; தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; தமிழ்த் தாளிகைக்காரருக்குச் சோறு போடக் கூடும்; இன்னும் சிலருக்குச் சோறு போடக் கூடும்; ஆனால் பொதுவான மற்றவருக்குச் சோறு போடாவிட்டாலும், சிந்தனையைக் கற்றுக் கொடுக்கிறது என்று அறிவீரா? மேலே நானசொன்ன தமிழ் ஆக்கங்களை எல்லாம் படிக்கும் போது, தமிழ் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளுகிறீர் அல்லவா? ஏரணம் (logic) என்பது சிந்தனை வளர்ச்சியில் காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்வது ஓரளவு முடியும் என்றாலும் தாய்மொழியில் கற்பது எளிது என்று அறிவீரா?

சிந்தனை முறை கூட மொழியால் மாறுகிறது என்று அறிவீரோ? நான் அவனைப் பார்த்தேன் என்று சொல்லும் போது கொஞ்சம் நின்று எண்ணிப் பார்த்துச் சொல்ல வேண்டியுள்ளது அல்லவா? செய்யும் பொருள், செயப்படும் பொருள் ஆகியவற்றை முன்னிலைப் படுத்திப் பிறகுதான் தமிழில் வினையைச் சொல்கிறோம். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும், குறிப்பாக தமிழிய மொழிகளில், இச் சிந்தனைமுறை இயல்பானது. இதை SOV (Subject - Object - Verb) என்று மொழியியலார் சொல்வார். மாறாக மேலை மொழிகளில் SVO - ”நான் பார்த்தேன் அவனை” என்ற முறையில் வாக்கியத்தை அமைக்க வேண்டும். SOV சிந்தனை முறை இருக்கும் ஒருவன் SVO பழக்கம் இருக்கும் ஒருவனைச் சட்டென்று புரிந்து கொள்வது கடினமே. சப்பானியர் முற்றிலும் SOV பழக்கம் உடையவர். அவர் வெள்ளைக் காரரைப் புரிந்து கொள்வதும், வெள்ளைக் காரர் சப்பானியரைப் புரிந்துகொள்வதும் மிகக் கடினம் என்பார். அதே பொழுது நாம் ஓரோ முறை இலக்கியத்தில் SVO முறையைப் பயன்படுத்துகிறோம். சீதையைப் பார்த்து வந்த சேதியைச் சொல்லும் அனுமன் இராமனிடம் சொல்வதாகக் கம்பன் சொல்வான்: "கண்டேன் சீதையை"; இதுபோன்ற சொல்லாட்சிகள் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் உண்டு. அதாவது பெரும்பான்மை SOV சிந்திக்கும் நாம் ஓரோ வழி SVO போலும் சிந்திக்கிறோம். இந்தியர் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் பாலமாக இருப்பது இதனால் தான் போலும். என்ன சொல்ல வருகிறேன் என்றால், மொழி நம் சிந்தனையைக் கட்டுப் படுத்துகிறது. ”நீர் உம் பெற்றோருக்கு எத்தனையாவது பிள்ளை?” என்ற கேள்வி தமிழில்  இயல்பாக எழும். ஆங்கிலத்தில் இதைச் சுற்றி வளைத்தே சொல்லவியலும். இதுபோல ஆங்கிலத்தில் சொல்வது சிலபோதுகளில் தமிழில் நேரடியாய்ச் சொல்ல முடியாது.

இந்தச் சிந்தனை ஒரு வகையில் பார்த்தால் பண்பாட்டு வருதியானது (ரீதியானது); மொழி வருதியானது. இதில் ஒரு மொழியின் வருதி உயர்ந்தது; இன்னொரு மொழியின் வருதி தாழ்ந்தது என்பது தவறான கூற்று. நம் வருதி நமக்கு உகந்தது என்பதை நாம் உணரவேண்டும்; இன்னும் சொன்னால் தமிழ் என்னும் வருதி தமிழனுக்கு ஒரு அடையாளம்; ஒரு முகவரி. தமிழ் நமக்கு இதைத்தான் கொடுக்கிறது.

சரி, தமிழுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? அதாவது தமிழின் பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருகிறோம்? இருக்கின்ற சொத்தோடு கூட, என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீரா? நம்மை அறியாமலேயே அலுவலுக்கு ஆங்கிலமும், நுட்பவியலுக்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கிவைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டாரா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?

இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேடவேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள்.

தமிழுக்கு நீர் என்ன செய்தீர்? கணி வழிக் கல்வி, கணிப் பயன்பாடு என எத்தனையோ படிக்கப் போகிறீர். இக் கணியுகத்திலும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க முடியும், நீர் ஒத்துழைத்தால். செய்வீரா?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þó¾ ¬ñÎ ¬¸ÍÎ 15-ø ¸½¢É¢Â¢ø ¾Á¢ú ±ýÈ Å¢Æ¢ôÒ½÷ Ţơ¨Å «Á£Ã¸ò ¾Á¢Æ÷¸û º¢Ä÷ §º÷óÐ ¾¢ÕÅ¡åâø ¿¼ò¾¢É¡÷¸û. À¡Ã¡ð¼ô À¼§ÅñÊ ¿øÄ ÓÂüº¢; þЧÀ¡ýÈ ¯ÕôÀÊÂ¡É ¿¢¸ú׸û ÀÄ °÷¸Ç¢Öõ ¿¼ò¾ô À¼§ÅñÎõ. ¸¨¾, ¸Å¢¨¾, þýÉ À¢ÈÅü¨È ÁðΧÁ ¿ÁìÌû §Àº¢ì ¦¸¡ñÎ þÕôÀ¾¢ø ÁðÎõ ÀÄÉ¢ø¨Ä. «¾üÌ §ÁÖõ ¯ûǨŠþЧÀ¡ýÈ Å¢Æ¢ôÒ½÷× ¿¢¸ú¸û. ¾Á¢ú ±¾¢÷¸¡Äò¾¢ø ¦¾¡¼÷óÐ Å¡Æ ¿õ Àí¸Ç¢ôÒò §¾¨Å.

¿¢¸ú¢ý ¦À¡ØÐ ´Õ áÖõ ¦ÅǢ¢¼ô Àð¼Ð. «ó¾ô ¦À¡ò¾¸ò¾¢ø ±ý Àí¸Ç¢ôÀ¡¸ þÕó¾ ¸ðΨè ¯í¸û Å¡º¢ôÀ¢ü¸¡¸ þíÌ ¾Õ¸¢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.
------------------------------------------------------------------------------------------------
¾Á¢¦ÆÛõ §¸ûÅ¢

«ýÀ¢üÌâ šº¸ÕìÌ,

þó¾ ÁÄ÷ ¯í¸ÙìÌ ÅóÐ §º÷óÐ, þó¾ì ¸ðΨà ŨÃìÌõ Å¢ÕôÀò§¾¡Î ¿£í¸û ÀÊì¸ ÓüÀðÎ þÕôÀ£÷¸Ç¡É¡ø, ¾Á¢ú §Áø ¯í¸ÙìÌ ²§¾¡ ´Õ ÀüÚ «øÄÐ «ì¸¨È þÕ츢ÈÐ ±ýÚ ¾¡ý ¦º¡øÄ §ÅñÎõ. «ôÀÊ¡ɡø ¯í¸§Ç¡Î §ÀºÄ¡õ; þýÛõ ¦º¡ýÉ¡ø §Àºò¾¡ý §ÅñÎõ; ¯í¸¨Çô §À¡ýÈÅ÷¸Ù¼ý ¸ÄóÐ ¯¨Ã¡¼¡Áø §ÅÚ Â¡Õ¼ý ¿¡ý ¯¨Ã¡¼ô §À¡¸¢§Èý?

¾Á¢ú ¦Á¡Æ¢¨Âô §Àº, ÀÊì¸, ÁüÚõ ±Ø¾ ±íÌ ¸üÚì ¦¸¡ñË÷¸û? ¯í¸û ¦Àü§È¡Ã¢¼õ þÕó¾¡, ¬º¢Ã¢Ââ¼õ þÕó¾¡, «øÄÐ ¯í¸¨Çî ÍüÈ¢ ¯ûÇ ÍüÈõ, ¿ðÀ¢ø þÕó¾¡? ¿£í¸û ±ó¾ þ¼í¸Ç¢ø ±øÄ¡õ ¾Á¢Æ¢ø §À͸¢È£÷¸û? ±í¦¸øÄ¡õ ¬í¸¢Äò¾¢ø §À͸¢È£÷¸û? ¯í¸û ¦¿Î ¿¡¨Ç ¿ñÀ¨Ã§Â¡, «øÄÐ ÓýÀ¢ý ¦¾Ã¢Â¡¾ ¾Á¢Æ¨Ã§Â¡ À¡÷ìÌõ ¦À¡ØÐ, «ó¾ì ¸½ò¾¢ø ¿£í¸û ¾Á¢Æ¢ø ¯¨Ã¡θ¢È£÷¸Ç¡, «øÄÐ ¬í¸¢Äò¾¢ø ¯¨Ã¡θ¢È£÷¸Ç¡?

¿£í¸û §ÀÍõ ¬í¸¢Äò¾¢üÌû ¯í¸¨Ç «È¢Â¡Áø ¾Á¢ú °ÎÚ׸¢È¾¡? «ôÀÊ °ÎÚŢɡø «¨¾ ´Õ ¿¡¸Ã¢¸õ þøÄ¡¾ ÀðÊì ¸¡ðÎò ¾Éõ ±ýÚ ±ñ½¢ì ¦¸¡ïºõ ¦Åð¸ô ÀðÎì ¦¸¡ñÎ, «¨¾ò ¾Å¢÷ì¸ ÓÂýÈ¢Õ츢ȣ÷¸Ç¡? ¯í¸û ¬í¸¢Ä Åý¨Á ÜΞü¸¡¸ô Àø§ÅÚ À¢üº¢¸û ¦ºö ÓüÀðÊÕ츢ȣ÷¸Ç¡? ¯í¸û Å£ðÊø ¬í¸¢Äõ - ¬í¸¢Äõ «¸ÃӾĢ¨Â ¨Åò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¯í¸ÙìÌò ¦¾Ã¢Â¡¾ ¬í¸¢Äî ¦º¡ü¸¨Çô À¢Öõ §À¡Ð «ÅüÈ¢ý ¦À¡Õû «È¢Â §ÅñÊî ºð¦¼ýÚ «¸Ã ӾĢ¨Âò §¾Î¸¢È£÷¸Ç¡?

¬í¸¢Äô §Àø º¢Èì¸ §ÅñÎõ ±ýÈ ´ö¡à ±ñ½ò¾¡ø ¯ó¾ô ¦ÀüÚ, ¯îºì ¸ð¼Á¡¸, ¾í¸û ¦Àü§È¡§Ã¡Îõ ÍüÈò¾¡§Ã¡Îõ þÕìÌõ ¯È¨Å§Â Ü¼î º¢Ä §À¡Ð ÓüÈ¢Öõ ÐñÊòÐì ¦¸¡ûÇî º¢Ä÷ ÓÂÖÅ¡÷¸û; «ó¾ Å¢ÅÃí ¦¸ð¼ ¿¢¨ÄìÌ ¿£í¸û §À¡ÉÐñ§¼¡? ¬í¸¢Äõ «È¢Â¡ô ¦Àü§È¡÷, ÍüÈò¾¡Ã¢ý Å¡¨¼§Â ¯í¸éìÌõ, ¯í¸û À¢Èí¸¨¼¸ÙìÌõ (successors) ÅÃìܼ¡Ð ±ýÚ ¿£í¸û ±ñ½¢ÂÐñ§¼¡?

¯í¸û §Àø ¾Á¢ú Á¢¸ Á¢¸ì ̨ÈóÐ þÕó¾¡ø «Ð ±¾É¡ø ²üÀθ¢ÈÐ? ¾Á¢Øõ, ¾Á¢Æý ±ýÈ «¨¼Â¡ÇÓõ §Åñ¼¡õ ±ýÚ ÓʦÅÎòРŢÄì̸¢È£÷¸Ç¡? «øÄÐ §º¡õÀÄ¡Öõ, ¸ÅÉì ̨ÈÅ¡Öõ, ¬í¸¢Äõ ÀƸ¢É¡ø ÌÓ¸¡Âò¾¢ø ´Õ §ÁÄ¢¼õ ¸¢¨¼ìÌõ ±ýÈ ¯óоġÖõ ¾Á¢¨Æ Å¢Äì̸¢È£÷¸Ç¡? ¾Á¢ú ±ýÀÐ ´Õ ¦Á¡Æ¢ ÁðÎÁøÄ, «Ð ¾Á¢Æ ¿¡¸Ã¢¸ò¾¢ý ¸ÕçÄõ ±ýÀ¨¾ ÁÚòÐ, «Ð ¦ÅÚõ ¸ÕòÐô ÀâÁ¡üÈ ¦Á¡Æ¢, þÉ¢ ÅÕõ ¿¡ð¸Ç¢ø ¬í¸¢Ä§Á §À¡Ðõ ±ýÚ ±ñϸ¢È£÷¸Ç¡?

þ¾ü¦¸øÄ¡õ ¬õ ±ýÚ ¿£í¸û Å¢¨¼ÂÇ¢ò¾¡ø ¯í¸§Ç¡Î §Áü¦¸¡ñÎ ¿¡ý ¯¨Ã¡Îž¢ø ¦À¡Õû þø¨Ä; §ÁüÌ þó¾¢Âò ¾£×¸Ç¢ø þÕóЦ¸¡ñÎ ¿¡¨ÄóÐ ¾¨ÄÓ¨ÈìÌ «ôÒÈÓõ ¾ý ¦À¨à Óð¼õÁ¡ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ñÎ "¾ý ¾¡ò¾¡ ¾ñ¼À¡½¢ìÌì ¦¸¡ïÝñÎ ¾Á¢ú ¦¾Ã¢Ôõ" ±ýÚ ¦º¡øÄ¢ò ¾Á¢Æ¢ø §Àº þÂÄ¡¾ ´Õ ¦ÀñÏìÌõ ¯í¸ÙìÌõ Á¢Ìó¾ §ÅÚÀ¡Î þø¨Ä. ¦ÅÌ Å¢¨ÃÅ¢ø ¿£í¸û ±í¸¨Ç Å¢ðÎô ¦ÀÕó ¦¾¡¨Ä× Å¢Ä¸¢ô §À¡öÅ¢ÎÅ£÷¸û; ±ý§È¡ ´Õ ¿¡û ¾Á¢Æáö þÕó¾¾ü¸¡¸ ¯í¸§Ç¡Î ¿¡í¸û «ýÒ À¡Ã¡ð¼ ÓÊÔõ. «ùÅǧÅ. ±í¸¢Õó¾¡Öõ Å¡ú¸, ÅÇÓ¼ý!

Á¡È¡¸ §Á§Ä ¯ûÇ §¸ûÅ¢¸ÙìÌ ¬õ ±ýÚ ¦º¡øÄ¡Áø ¦¸¡ïºÁ¡ÅÐ ¾ÎÁ¡È¢É£÷¸û ±ýÈ¡ø ¯í¸§Ç¡Î ¯¨Ã¡Îž¢ø þýÛõ ÀÄý ¯ñÎ. «ó¾ ±ñ½ò¾¢É¡§Ä§Â §ÁÖõ þíÌ ¯¨Ã¡θ¢§Èý.

ÍüÈõ, ¿ðÒ §À¡ýÈ þ¼í¸Ç¢ø ¿£í¸û ¾Á¢ú §Àºò ¾Å¢ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? «ÖÅø ¾Å¢÷òÐ Áü§È¡§Ã¡Î ¿£í¸û §ÀÍõ ¯¨Ã¡¼ø¸Ç¢ø ±ò¾¨É Å¢Ø측Π¾Á¢Æ¢ø þÕìÌõ? «ÊôÀ¨¼ Å¡úì¨¸î ¦ºö¾¢¸Ç¢ø ¯í¸Ç¡ø ¾Á¢Æ¢ø ¯¨Ã¡¼ Óʸ¢È¾¡? ¾Á¢ú §ÀÍõ §À¡Ð ¬í¸¢Äõ °ÎÚŢɡø «¨¾ô ÀðÊì ¸¡ðÎò ¾Éõ ±ýÚ ±ñ½¡Áø, ¿¡¸Ã¢¸õ ±ýÚ ±ñϸ¢È£÷¸Ç¡? «ó¾ °ÎÚŨÄò ¾Å¢÷ì¸ ÓÊÔõ ±ýÚ «È¢Å£÷¸§Ç¡? ¯í¸û Å£ðÊø ¾Á¢ú-¾Á¢ú «¸ÃӾĢ þÕ츢Ⱦ¡? ¾Á¢ú- ¬í¸¢Äõ «¸ÃӾĢ þÕ츢Ⱦ¡? ¯í¸ÙìÌò ¦¾Ã¢Â¡¾ ¾Á¢úî ¦º¡ü¸¨Çô À¢Öõ §À¡Ð ¯¼§É ¾Á¢ú-¾Á¢ú «¸ÃӾĢ¨Âò §¾Î¸¢È£÷¸Ç¡?

¯í¸û ¦Àü§È¡÷ «È¢ó¾ ¾Á¢§Æ¡Î ¯í¸û ¾Á¢¨Æ ´ôÀ¢ð¼¡ø þô¦À¡ØÐ «ó¾ô §Àø ¾Á¢ú ±ùÅÇ× §¾Úõ? 98 Å¢Ø측¼¡ÅÐ §¾ÚÁ¡? þÃñΠŢØ측Π̨È󾡧ħ ²Æ¡ÅÐ ¾¨ÄӨȢø Ó측ø ÀíÌ ¾Á¢ú "§À¡§Â §À¡Â¢ó¾¢" ±ýÚ ¯í¸ÙìÌò ¦¾Ã¢ÔÁ¡? ±ó¾ ´Õ ¦Á¡Æ¢Â¢Öõ ¸¢ð¼ò¾ð¼ 85 Å¢Ø측ΠިÉÂøÄ¡¾ ¦ÀÂ÷, þ¨¼ ÁüÚõ ¯Ã¢î ¦º¡ü¸û ±ýÚõ 15 Å¢Ø측θ§Ç Å¢¨É¡ü¸û ±ýÚõ ¯í¸ÙìÌò ¦¾Ã¢ÔÁ¡? ¦º¡øÅÇò¨¾ì ÜðÎÅÐ ±ýÀÐ ¦ÀÂ÷¡ü¸¨Ç §ÁÖõ §ÁÖõ «È¢óЦ¸¡ûÙŧ¾ ±ýÚ §¸ðÊÕ츢ȣ÷¸Ç¡? ¿õ °÷ôÀì¸õ ¿¡õ ¸üÚì ¦¸¡ñ¼¨Å ܼô ÒÆí¸¢ì ¦¸¡ñ§¼ þÕì¸Å¢ø¨Ä ±ýÈ¡ø ÁÈóÐÅ¢Îõ ±ýÚ «È¢Å£÷¸Ç¡? ¾Á¢ú Åð¼¡Ãò¾¢üÌ Åð¼¡Ãõ µÃÇ× Á¡È¢ô ÒÆí̸¢ÈÐ ±ýÚ ¦¾Ã¢ÔÁ¡? þó¾ò ¾Á¢ú ¿¢¨Äò¾¢Õì¸ ¿¡õ ±ý¦É¦ÅøÄ¡õ ¦ºö¸¢§È¡õ ±ýÚ ±ñ½¢ô À¡÷ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¾Á¢ú ±ýÀÐ ¿¡õ ÀÆÌõ ´Õ ¦Á¡Æ¢ ±ýÀ§¾¡Î ÁðÎÁøÄ¡Áø, §ÁÖõ º¢Ä ¸¼¨Á¸û ¿ÁìÌ ¯ñÎ ±ýÚ ±ñ½¢ô À¡÷ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¾Á¢ú ¿ÁìÌ ±ýÉ ¾Õ¸¢ÈÐ? ¾Á¢ØìÌ ¿¡õ ±ýÉ ¾Õ¸¢§È¡õ ±ýÈ þÕ§À¡ìÌ ¿¨¼Ó¨È¨Âì ¦¸¡ïºõ Ü÷óÐ À¡÷ô§À¡õ.

¦Á¡Æ¢ ±ýÀÐ ¸ÕòÐô ÀâÁ¡È¢ì ¦¸¡ûÇ ´Õ Ũ¸Â¡É °¼¸õ, Á¢¨¼Âõ ±ýÀ¨¾ ¿¡õ ±ø§Ä¡Õõ ´ôÒì ¦¸¡ûÙ¸¢§È¡õ. ¾Á¢Æ÷ìÌô À¢Èó¾ ´Õ ÌÆ󨾨 «ó¾ì ÌÆó¨¾Â¢ý ¦Àü§È¡÷¸Ù¨¼Â ÀñÀ¡ðÎò ¾¡ì¸õ þøÄ¡¾ ´Õ ÌÓ¸¡Âò¾¢ø, ¾Á¢ú «È¢Â¡¾ ´Õ ÌÓ¸¡Âò¾¢ø ÅÇ÷ò§¾¡õ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û, «Ð ¾Á¢Æô À¢û¨Ç¡¸ «øÄ¡Áø §ÅÚ Å¨¸ô À¢û¨Ç¡¸ò¾¡ý ÅÇÕõ; ¬É¡ø ¾Á¢ú ±ýÀÐ ¦ÅÚõ °¼¸Á¡? Á£ÛìÌ «¨¾î ÍüÈ¢Öõ ¯ûÇ ¿£÷ ¦ÅÚõ °¼¸Á¡? À¢ý ÒÄÁ¡? ¯ôÀ¢øÄ¡¾ ¿øÄ ¾ñ½£Ã¢ø ÅÇ÷ó¾ ´Õ ¦¸ñ¨¼ Á£¨Éì ¦¸¡ñÎ §À¡ö ¯ôÀí ¸Æ¢Â¢ø §À¡ð¼¡ø «Ð ¯Â¢÷ Å¡Æ ÓÊÔ§Á¡? À¢ý ÒÄò¨¾ Á£È¢Â ´Õ Å¡ú× ¯ñ§¼¡? °¼¸õ, °¼¸õ ±ýÚ ¦º¡øÄ¢ ¦Á¡Æ¢Â¢ý Àí¨¸ì ̨ÈòРŢ𧼡õ «øÄÅ¡? ¦Á¡Æ¢ ±ýÀÐ °¼¸õ ÁðÎÁøÄ; «Ð ´Õ À¢ýÒÄÓõ ܼ. þó¾ô À¢ý ÒÄõ ´Õ Ýú¿¢¨Ä¨Â ¯ÕÅ¡ì̸¢ÈÐ. «Ð ¿õ º¢ó¾¨É¨Â ´Õ Å¢¾ì ¸ðÊüÌì ¦¸¡ñÎÅÕ¸¢ÈÐ. ¿¡õ ¦Á¡Æ¢Â¡ø ¸ðÎô Àθ¢§È¡õ. Á¡ó¾Õõ ܼ ¾¡õ Å¡Øõ Ýú¿¢¨ÄìÌ ²üÀò¾¡§É þÕì¸ ÓÊÔõ? À¢ÈìÌõ §À¡Ð þÕìÌõ À¢ý ÒÄò¾¢ý ¾¡ì¸õ («Ð ¦Àü§È¡÷ ÅƢ¡¸§Å¡, Áü§È¡÷ ÅƢ¡¸§Å¡) ²üÀð¼À¢ý, ¾Á¢¨Æ ´Ð츢 ´Õ ¾£× §À¡Ä §Å¦È¡Õ ¦Á¡Æ¢Â¢ý À¢ýÒÄò¾¢ø ÅÇà ÓÊÔ§Á¡? þô¦À¡ØÐ ¿£í¸û ¾Á¢ú ¿¡ðÊø À¢ÈóРŢðË÷¸û, «øÄÐ §ÅÚ ¿¡ðÊø À¢ÈóÐõ ¯í¸û ¦Àü§È¡÷ ¾Á¢úô À¢ýÒÄò¨¾ Å¢¼¡Ð ¸¡ôÀ¡üÈ¢ ÅÕ¸¢È¡÷¸û, þó¾ ¿¢¨Ä¢ø ¿£í¸û ¾Á¢¨Æ Å¢¼ ÓÊÔÁ¡? ´ýÚ ¸¢½ü¨Èò ¾¡ñ¼¡Áø þÕì¸Ä¡õ, «øÄÐ ÓüÈ¢Öõ ¾¡ñ¼Ä¡õ; þ¨¼ô Àð¼ ¿¢¨Ä¢ø À¡¾¢ì ¸¢½ü¨Èò ¾¡ñÊ ¯Â¢÷ Å¡Æ ÓÊÔ§Á¡?

¾Á¢Øõ «Ð §À¡Äò¾¡ý. ¾Á¢ú ±Ûõ À¢ýÒÄõ ¾Á¢úô ÀñÀ¡Î, þÄ츢Âí¸û, þÄ츽í¸û, º¢ó¾¨É¸û ¬¸¢ÅüÈ¢ý ¦¾¡Ìô¨Àì ÌȢ츢ÈÐ. «Åü¨Èò ¦¾Ã¢óЦ¸¡ûÇ¡Áø ¾Á¢ú «È¢Â¡¾ÅÉ¡¸ þÕì¸Ä¡õ; «øÄÐ ¦¾Ã¢óÐ ¦¸¡ñÎ ¾Á¢ú «È¢ó¾ÅÉ¡¸ þÕì¸Ä¡õ. þ¨¼ôÀð¼ ¿¢¨Ä ±ýÀÐ ´ÕŨ¸Â¢ø ¾¢Ã¢ºíÌ ¦º¡÷츧Á! ¾Á¢ú ¸üÀÐ ±ýÀÐ ´Õ ÀñÀ¡ðÎò ¦¾¡¼÷. ¯í¸§Ç¡Î þó¾ô ÀÆì¸õ ¿¢ýÚ §À¡¸Å¡ ¿£í¸û þ¨¾ì ¸üÚì ¦¸¡ñË÷¸û? þø¨Ä§Â? Å¡¨ÆÂÊ Å¡¨Æ¡ö þó¾ ¦Á¡Æ¢ §ÀÍõ ÀÆì¸õ ¦¾¡¼Ã §ÅñÎõ ±ýÚ¾¡§É ¯í¸ÙìÌ ÁüÈÅ÷¸û ¸üÚì ¦¸¡Îò¾¡÷¸û? «ôÀÊ¡ɡø, þó¾ò ¦¾¡¼÷¨Âì ¸¡ôÀ¡üÈ Â¡Õ즸øÄ¡õ ¿£í¸û ¾Á¢ú §Àºì ¸üÚì ¦¸¡Îò¾£÷¸û? ÌÆó¨¾Â¡ö þÕó¾ §À¡Ð ¸üÚì ¦¸¡ñ¼ "¿¢Ä¡!¿¢Ä¡! µÊ Å¡" ¨ÅÔõ, "¨¸Å£ºõÁ¡, ¨¸Å£Í" ¨ÅÔõ þý¦É¡Õ ¾Á¢úì ÌÆó¨¾ìÌ ¿£í¸û ¸üÚì ¦¸¡Îò¾¢Õ츢ȣ÷¸Ç¡? Å¡ÄÚó¾ ¿Ã¢, Íð¼ ÀÆõ - ͼ¡¾ ÀÆõ §À¡ýÈ ¸¨¾¸¨Ç þý¦É¡ÕÅÕìÌî ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¬ò¾¢î ÝÊ, ¾¢ÕìÌÈû, ¿¡ÄÊ¡÷ §À¡ýÈÅüÈ¢ø þÕóÐ ´Õ º¢ÄÅ¡ÅÐ ÁüÈÅ÷ìÌî ¦º¡øÄ ÓÊÔÁ¡? þó¾ì ¸¡Ä À¡Ã¾¢, À¡Ã¾¢¾¡ºý ²¾¡ÅÐ ÀÊò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¦¸¡ïºõ Ó.Å., ¦¸¡ïºõ ¾¢Õ.Å¢.¸. ÀÊò¾¢Õ츢ȣ÷¸Ç¡? µÃÇÅ¡ÅÐ ÒШÁô À¢ò¾ý, ¦ÁªÉ¢, Ä¡.º.á, ¦ºÂ¸¡ó¾ý ÀÊò¾¢Õ츢ȣ÷¸Ç¡? Àø§ÅÚ ¸¡Äò ¾Á¢úô À¡ðÎì¸û, ÁüÚõ ¯¨Ã¿¨¼¸¨Çô ÀÊò¾¢Õ츢ȣ÷¸Ç¡?

"¾Á¢ú §º¡Ú §À¡ÎÁ¡?" ±ýÚ º¢Ä÷ §¸ð¸¢È¡÷¸û; ¾Á¢ú ¸üÚì ¦¸¡ÎìÌõ ´Õ º¢ÄÕìÌî §º¡Ú §À¡¼ì ÜÎõ; ¾Á¢úò ¾¡Ç¢¨¸ì¸¡ÃÕìÌî §º¡Ú §À¡¼ì ÜÎõ; þýÛõ ´Õ º¢ÄÕìÌî §º¡Ú §À¡¼ì ÜÎõ; ¬É¡ø ¦À¡ÐÅ¡É ÁüÈÅÕìÌî §º¡Ú §À¡¼¡Å¢ð¼¡Öõ, º¢ó¾¨É¨Âì ¸üÚì ¦¸¡Î츢ÈÐ ±ýÚ «È¢Å£÷¸Ç¡? §Á§Ä ¿¡ý ¦º¡ýÉ ¾Á¢ú ¬ì¸í¸¨Ç ±øÄ¡õ ÀÊìÌõ §À¡Ð, ¾Á¢ú Å¡ú쨸 ӨȨÂì ¸üÚì ¦¸¡ûÙ¸¢È£÷¸û «øÄÅ¡? ²Ã½õ (logic) ±ýÀÐ º¢ó¾¨É ÅÇ÷¢ø ¸¡Ã½ ¸¡Ã¢Âõ À¡÷ìÌõ Ó¨È; þ¨¾ §ÅÚ ´Õ ¦Á¡Æ¢Â¢ý ãÄõ ¸üÚì ¦¸¡ûÙÅÐ µÃÇ× ÓÊÔõ ±ýÈ¡Öõ ¾¡ö¦Á¡Æ¢Â¢ø ¸üÀÐ ±Ç¢Ð ±ýÚ «È¢Å£÷¸Ç¡?

º¢ó¾¨É Ó¨È Ü¼ ¦Á¡Æ¢Â¡ø Á¡Ú¸¢ÈÐ ±ýÚ «È¢Å£÷¸§Ç¡? ¿¡ý «Å¨Éô À¡÷ò§¾ý ±ýÚ ¦º¡øÖõ §À¡Ð ¦¸¡ïºõ ¿¢ýÚ ±ñ½¢ô À¡÷òÐî ¦º¡øÄ §ÅñÊ þÕ츢ÈÐ «øÄÅ¡? ¦ºöÔõ ¦À¡Õû, ¦ºÂôÀÎõ ¦À¡Õû ¬¸¢ÂÅü¨È ÓýÉ¢¨Äô ÀÎò¾¢ô À¢È̾¡ý ¾Á¢Æ¢ø Å¢¨É¨Âî ¦º¡øÖ¸¢§È¡õ. þó¾¢Â ¦Á¡Æ¢¸û ±øÄ¡ÅüÈ¢Öõ, ÌÈ¢ôÀ¡¸ ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø, þó¾î º¢ó¾¨É Ó¨È þÂøÀ¡ÉÐ. þ¨¾ SOV (Subject - Object - Verb) ±ýÚ ¦Á¡Æ¢Â¢ÂÄ¡÷ ¦º¡øÖÅ¡÷¸û. Á¡È¡¸ §Á¨Ä ¦Á¡Æ¢¸Ç¢ø SVO - ¿¡ý À¡÷ò§¾ý «Å¨É ±ýÈ Ó¨È¢ø š츢Âò¨¾ «¨Áì¸ §ÅñÎõ. SOV º¢ó¾¨É Ó¨È þÕìÌõ ´ÕÅý SVO ÀÆì¸õ þÕìÌõ ´ÕŨÉî ºð¦¼ýÚ ÒâóÐ ¦¸¡ûÙÅÐ ¸ÊɧÁ. ºôÀ¡É¢Â÷¸û ÓüÈ¢Öõ SOV ÀÆì¸õ ¯¨¼ÂÅ÷¸û. «Å÷¸û ¦Åû¨Çì ¸¡Ã÷¸¨Çô ÒâóÐ ¦¸¡ûÙÅÐõ, ¦Åû¨Çì ¸¡Ã÷¸û ºôÀ¡É¢Â¨Ãô ÒâóЦ¸¡ûÙÅÐõ Á¢¸ì ¸ÊÉõ ±ýÀ¡÷¸û. «§¾ ¦À¡ØÐ ¿¡õ µ§Ã¡ Ó¨È þÄ츢Âò¾¢ø SVO ӨȨÂô ÀÂýÀÎòи¢§È¡õ. º£¨¾¨Âô À¡÷òÐ Åó¾ §º¾¢¨Âî ¦º¡øÖõ «ÛÁý þáÁÉ¢¼õ ¦º¡øÖž¡¸ì ¸õÀý ¦º¡øÖÅ¡ý: "¸ñ§¼ý º£¨¾¨Â"; þÐ §À¡ýÈ ¦º¡øġ𺢸û ¾Á¢ú þÄ츢Âò¾¢ø ÀÄ þ¼í¸Ç¢ø ¯ñÎ. «¾¡ÅÐ ¦ÀÕõÀ¡ý¨Á SOV ±ýÈ º¢ó¾¢ìÌõ ¿¡õ µ§Ã¡ ÅÆ¢ SVO ±ýÀÐ §À¡Öõ º¢ó¾¢ì¸¢§È¡õ. þó¾¢Â÷¸û ¸¢Æ츢üÌõ §Áü¸¢üÌõ þ¨¼Â¢ø À¡ÄÁ¡¸ þÕôÀÐ þ¾É¡ø ¾¡ý §À¡Öõ. ±ýÉ ¦º¡øÄ ÅÕ¸¢§Èý ±ýÈ¡ø, ¦Á¡Æ¢ ¿õ º¢ó¾¨É¨Âì ¸ðÎô ÀÎòи¢ÈÐ. ¿£ ¯ý ¦Àü§È¡ÕìÌ ±ò¾¨É¡ÅÐ À¢û¨Ç ±ýÈ §¸ûÅ¢ ¾Á¢Æ¢ø Á¢¸ þÂøÀ¡¸ ±Øõ. ¬í¸¢Äò¾¢ø þ¨¾î ÍüÈ¢ ŨÇòÐò¾¡ý ¦º¡øÄ þÂÖõ. þÐ §À¡Ä ¬í¸¢Äò¾¢ø ¦º¡øÖÅÐ º¢Ä§À¡Ð¸Ç¢ø ¾Á¢Æ¢ø §¿ÃÊ¡öî ¦º¡øÄ ÓÊ¡Ð.

þó¾î º¢ó¾¨É ´Õ Ũ¸Â¢ø À¡÷ò¾¡ø ÀñÀ¡ðÎ ÅÕ¾¢Â¡ÉÐ (㾢¡ÉÐ); ¦Á¡Æ¢ ÅÕ¾¢Â¡ÉÐ. þ¾¢ø ´Õ ¦Á¡Æ¢Â¢ý ÅÕ¾¢ ¯Â÷ó¾Ð; þý¦É¡Õ ¦Á¡Æ¢Â¢ý ÅÕ¾¢ ¾¡úó¾Ð ±ýÀÐ ¾ÅÈ¡É ÜüÚ. ¿õ ÅÕ¾¢ ¿ÁìÌ ¯¸ó¾Ð ±ýÀ¨¾ ¿¡õ ¯½Ã§ÅñÎõ; þýÛõ ¦º¡ýÉ¡ø ¾Á¢ú ±ýÛõ ÅÕ¾¢ ¾Á¢ÆÛìÌ ´Õ «¨¼Â¡Çõ; ´Õ Ó¸Åâ. ¾Á¢ú ¿ÁìÌ þ¨¾ò¾¡ý ¦¸¡Î츢ÈÐ.

ºÃ¢, ¾Á¢ØìÌ ¿¡õ ±ýÉ ¦¸¡Î츢§È¡õ? «¾¡ÅÐ ¾Á¢Æ¢ý ÀñÀ¡ðÎ ÅÕ¾¢ìÌ ¿¡õ ±ýÉ ¦ºö¸¢§È¡õ? ¿ÁìÌ «Îò¾ ¾¨ÄӨȢÉÕìÌ ±ýÉ ¾Õ¸¢§È¡õ? þÕ츢ýÈ ¦º¡ò§¾¡Î ܼ, ±ýÉ §º÷òÐ ¨ÅòÐô §À¡¸¢§È¡õ? þý¨ÈìÌò ¾Á¢ú ±ýÀÐ ÀÆõ ¦ÀÕ¨Á §À;üÌõ, À¨Æ þÄ츢Âõ, þÄ츽õ, «ñ¨Á측Äì ¸¨¾, ¸Å¢¨¾, ¸ðΨÃ, ÐÏì̸û, ¦¸¡ïºõ «Ãº¢Âø, ²Ã¡Çõ ¾¢¨ÃôÀ¼õ ÀüÈ¢ «È¢Â ÁðΧÁ ÀÂýÀðÎ ÅÕÅÐ ´Õ ¦ÀÕíÌ¨È ±ýÚ «È¢Å£÷¸Ç¡? ¿õ¨Á «È¢Â¡Á§Ä§Â «ÖÅø ±ýÀ¾üÌ ¬í¸¢ÄÓõ, ÑðÀÅ¢Âø ±ýÀ¾üÌ ¬í¸¢ÄÓõ, ÁüÈÅüÈ¢üÌò ¾Á¢Øõ ±É ¬ì¸¢¨Åò¾¢ÕôÀÐ ±ùÅÇ× ºÃ¢? ÒÐô ÒÐ «È¢×¸¨Çì ¸¨Ä¸¨Çò ¾Á¢Æ¢ø ¦º¡øÄÅ¢ø¨Ä ±ýÈ¡ø ¾Á¢ú ̨ÈÀðÎô §À¡¸¡¾¡? «ôÒÈõ ¾Á¢Æ¢ø ±ýÉ þÕ츢ÈÐ ±ýÈ ¿õ À¢Èí¸¨¼¸û §¸ð¸ Á¡ð¼¡÷¸Ç¡? ¿¡õ ¦º¡øÄ¢ô À¡÷òÐ «¾ý ãÄõ ¦Á¡Æ¢ ÅÇõ Üð¼Å¢ø¨Ä ±ýÈ¡ø ¿õ ¦Á¡Æ¢ ÀÂÉ¢øÄ¡¾ ´ýÚ ±ýÚ þýÛõ ´Õ ¾¨Ä ӨȢø «Æ¢óÐ §À¡¸¡¾¡? ¿¡õ ¾Á¢ØìÌ ±ýÉ ¦ºö§¾¡õ? ¿ÁìÌò ¦¾Ã¢ó¾ ¦ºö¾¢¸¨Ç, «È¢¨Åò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ¢ô À¡÷츢§È¡Á¡? ¬í¸¢Äõ ¦¾Ã¢Â¡¾ ¿õ Áì¸ÙìÌô Òâ ¨Å츢§È¡Á¡? ±øÄ¡ÅüÈ¢üÌõ ¬í¸¢Ä§Á ÒÆí¸¢ ¿õ ±¾¢÷¸¡Äò¨¾ ¿¡§Á §À¡ì¸¢ì ¦¸¡ûÙ¸¢§È¡§Á, «Ð ±¾É¡ø?

þó¾ì ¸ðΨâø §¸ûÅ¢¸¨Ç ÁðΧÁ ±ØôÀ¢ì ¦¸¡ñÎ þÕ츢§Èý. «¾ü¸¡É Å¢¨¼¸¨Ç ¿£í¸û §¾¼§ÅñÎõ ±ýÈ ±ñ½õ ¸Õ¾¢§Â §¸ûÅ¢¸¨Ç ±ØôÒ¸¢§Èý. ±ñ½¢ô À¡Õí¸û.

¾Á¢ØìÌ ¿£í¸û ±ýÉ ¦ºö¾£÷¸û? ¸½¢ ÅÆ¢ì ¸øÅ¢, ¸½¢ô ÀÂýÀ¡Î ±É ±ò¾¨É§Â¡ ÀÊì¸ô §À¡¸¢È£÷¸û. þó¾ì ¸½¢Ô¸ò¾¢Öõ ¾Á¢ú ¾¨Ä ¿¢Á¢÷óÐ ¿¢ü¸ ÓÊÔõ, ¿£í¸û ´òШÆò¾¡ø. ¦ºöÅ£÷¸Ç¡?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Wednesday, November 05, 2003

வெண்பாவின் விதங்கள்

வெண்பாக்கள் என்பவை மரபு இலக்கிய வடிவத்தில் பெரிதும் சிறப்புப் பெற்றிருக்கின்றன. இந்தப் பாக்களின் உள்ளடக்கம் என்பதை யாராலும் கட்டுப் படுத்த முடியாது; இதில் புகுந்து எந்தக் கருத்தை வேண்டுமானாலும், எல்லா இலக்கிய உத்திகளுடன் கையாளலாம். அதே பொழுது நாம் காணும் சில விளையாட்டுக்கள், நாட்டியம், இசை போன்ற ஒவ்வொரு கலைக்கும் வெவ்வேறு கட்டுக்கள் உள்ளது போல் வெண்பா வடிவத்திற்கும் சில கட்டுக்கள் உண்டு. சொற்கட்டுகள் உள்ள வெண்பா வடிவம், அதில் உள்ள தளைகள், இலக்கணம் போன்றவை ஏதோ தங்களை நகர முடியாமல் கட்டிப் போடுவது போலவும், அதன் மூலம் தங்களுடைய கருத்தைச் சொல்ல முடியாது அடைக்கப் படுவதாகவும், இதில் என்ன கவிதை இருக்கிறது என்றும், இது வெறும் படிவம் நிரப்புவது என்றும், சிலர் சொல்லி வருகிறார்கள். (அதே பொழுது இப்படிச் சொல்பவர்களே வேறு ஏதோ கட்டுக்குள் இருக்கிறார்கள் என்பது வியத்தகும் இன்னொரு முரண்.) கட்டுக்கள் இருந்தாலும், வெண்பா என்ற வடிவத்தைக் கையாளுவது ஒன்றும் சரவலான செயல் இல்லை என்று அமைந்து, அசராமல் இலந்தையார், அனந்தர், பசுபதி, அரி, இரா.முருகன் மற்றும் பலர் அவ்வப்போது புகுந்து விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெண்பாவைச் சிலர் குறைத்து மதிப்பிடும் போக்கு இதில் உள்ள கட்டுமானங்களை இவர்கள் உணராததால் வந்ததோ என்றே எண்ணத் தோன்றுகிறது. வெண்பாக்களின் தளைகள், இலக்கணங்கள் எல்லாம் எத்தனை விதமான வெண்பாக்களை உருவாக்க முடியும் என்று அதன் அரங்கையும் (range) வீச்சையும் காட்டுகின்றன. கணிதத்தின் வழி இந்த அரங்கின் விரிவைக் காட்டவே இந்த மடலை இங்கு எழுதுகிறேன். "என்னடா, கவிதையைக் கணக்குள் கொண்டு வருகிறார்களே?" என்று சிலர் புறம்பாகக் கருதலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் வெண்பாவில் காட்டும் ஒவ்வொரு பட்டவமும் (pattern) அதன் அழகுக்காக அறியப் படவேண்டியதே. இங்கே நான் கூறுகின்ற கணிதத்தில் தவறு இருப்பின் தெரியப் படுத்துங்கள்.

முதலில் ஓரிரண்டு வரையறைகளைச் சொல்ல வேண்டும். வெண்பாவில் ஈரசைகளும் மூவசைகளும் பயிலுவதால், கணக்கிட எளிமைக்காக இங்கே மேலசை (meta-sylaable) என்ற சொல்லை வரையறுக்கிறேன்.

மேலசை என்பது நாம் ஏற்கனவே அறிந்த நேர், நிரை போன்றவைகளும், அவற்றின் ஈரசைக் கூட்டுச் சேர்க்கைகளும் ஆகும். அதாவது "நேர், நிரை, நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை" எல்லாவற்றையும் மேலசை என்ற சொல்லால் அழைக்கிறேன். மரபுத் தமிழ்ப் பாக்களில் வரும் ஒவ்வொரு சீரும் இரண்டு மேலசைகளைக் கொண்டது. ஒரு பாவில் நாலு சீர்கள் வந்தால் அதில் 8 மேலசைகள் இருப்பதாகப் பொருள். இந்த எட்டு மேலசைகளில் ஒற்றைப்படை மேலசை (1,3,5,7) என்பது நாம் முழுதும் அறிந்த ஒற்றை அசைகளைப் போலவே வாய்ப்பாடு கொள்ளும் (அதாவது நேர், நிரை மட்டுமே). இரட்டைப்படை மேலசை என்பதைக் கூட்டு அசைகளாகவும், ஒற்றை அசைகளாகவும் வாய்ப்பாடு கொள்ளலாம். (அதாவது இரட்டைப்படை மேலசையாக நேர், நிரை, நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.) இது தவிர வெண்பாவின் இறுதியில் குற்றியல் அசை (கு,சு,டு,து,பு,று) என்பது வந்தும் வராமலும் இருக்கலாம்.

கூர்ந்து கவனித்தால், வெண்பாவின் எந்த ஒரு ஈற்றடியும் ஐந்து மேலசைகளையும், ஒரு குற்றியல் அசையையும் கொண்டிருக்கும். இடை, முதல் அடிகள் 8 மேலசைகளையும் கொண்டிருக்கும். ஒரு குறட்பா என்பது ஒரு முதலடியும், ஒரு ஈற்றடியும் கொண்டது எனவே அது 13 மேலசைகளையும் ஒரு குற்றியலசையையும் கொண்டிருக்கும். சிந்தியல் வெண்பா ஒரு முதல் அடி, ஒரு இடை அடி, ஒரு ஈற்றடி கொண்டது. அதாவது அதில் 21 மேலசைகளும் 1 குற்றியலசையும் இருக்கும். அளவியல் வெண்பாவில் ஒரு முதலடி, இரண்டு இடையடிகள், ஒரு ஈற்றடி. அதனால் 29 மேலசைகளும் 1 குற்றியலசையும் அளவியல் வெண்பாவில் இருக்கும்.

ஒவ்வொரு பாவிலும் இரட்டைப்படை மேலசைகள் குறிப்பிட்டதாகவே இருக்கும். காட்டாக, எந்த வெண்பாவிலும் மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் மட்டுமே பயிலும் என்றவுடன், இரண்டாம் மேலசையில் நேர், நிரை, நேர்நேர், நிரைநேர் என்ற நாலு மட்டுமே இருக்க முடியும் என்று புரிந்து கொள்ளுகிறோம்.

இனித் தளை என்பதைப் பார்ப்போம். இது அடுத்தடுத்த இரு சீர்களில் முதற்சீரின் இரண்டாம் மேலசைக்கும், இரண்டாம் சீரின் முதல் மேலசைக்கும் இருக்கும் உறவைக் குறிப்பது. சீரொதுக்கி வெறும் அசைகளை மட்டும் பார்த்தால், தளை என்பது ஒரு பாவில் இரட்டைப்படை மேலசைகளை அதற்கு அடுத்துவரும் ஒற்றைப்படை மேலசைகளோடு தொடர்பு படுத்திக் காட்டுவது. இந்திந்தத் தளைகள் இந்தப் பாவில் பயின்று வரும் என்றால் சில கூட்டுக்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன என்று கொள்ள வேண்டும்.

எந்தப் பாவிலும் தொடக்கத்தில் உள்ள மேலசையும் ஈற்றில் உள்ள குற்றியல் அசை மட்டுமே தளையில்லாது விட்ட விடுதலையாய் நம் விழைவுக்கு ஏற்பத் தேரக் கூடியவை.

இப்பொழுது வெண்பா என்று வரும் போது, இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே தளைக்க வேண்டும் என்பதால் கீழ்க்கண்ட தளைகள் மட்டுமே வெண்பாவில் ஏற்கப் படும்.

இரட்டைப்படை X ஒற்றைப்படை
மேலசை மேலசை
நிரை X நேர்
நேர்நேர் X நேர்
நிரைநேர் X நேர்
நேர் X நிரை

இப்பொழுது தனித்து நிற்கும் ஒரு வெண்பா ஈற்றடியைப் பார்ப்போம். இதில் முதல் மேலசையை நம் விருப்பம் போல் தேர்ந்தெடுக்கலாம். இதில் இரண்டு வகை தான் உண்டு (நேர், நிரை). இரண்டாவது மேலசையைத் தேர்ந்தெடுத்தால், மேலே கூறிய வெண்டளைகள் காரணமாய் மூன்றாவது மேலசையையும் தேர்ந்தெடுத்ததாக ஆகும். அதாவது 2X3 என்ற இரு மேலசைகளையும் சேர்த்தே தான் எடுக்க வேண்டும். இதே போல 4X5 யையும் சேர்ந்தே எடுக்க வேண்டும். 2X3 யை 4 விதமாய்த் தேர்ந்தெடுக்கலாம்; அதே போல 4X5 யை 4 விதமாகத் தேர்ந்தெடுக்கலாம். 6 வது மேலசை வெண்பாவின் இலக்கணப்படி குற்றியல் அசை; இது இருக்கலாம்; இல்லாது போகலாம். இன்னொரு நோக்கில் சொன்னால் இரண்டுவிதமாய் இந்த குற்றியல் மேலசையைக் குறிக்கலாம்.

மேலசை 1 2X3 4X5 6
விதங்கள் 2 4 4 2

மொத்த விதங்கள் = 2*4*4*2 = 64

எனவே 64 விதமான ஈற்றடிகள் உருவாக்க முடியும். இனி அடுத்து குறட்பாக்களைப் பார்ப்போம். இது மொத்தம் 14 மேலசைகளைக் கொண்டது

மேலசை 1 2X3 4X5 6X7 8X9 10X11 12X13 14
விதங்கள் 2 4 4 4 4 4 4 2

மொத்த விதங்கள் = 2*4^6*2 = 16384

இந்தக் கணிப்பில் இது காறும் எதுகை என்ற கருத்தை உள்ளே கொண்டுவரவில்லை. எதுகையின் ஒருவித இலக்கணப் படி, முதல் மேலசை நேர் என்றால் 9 வது மேலசையும் நேர் என இருக்க வேண்டும். அதே பொழுது ஒன்பதாவது மேலசைக்கு இணையாக 3 விதமாக 8வது மேலசையைத் தேர்ந்தெடுக்கலாம்.னைதே போல், முதல் மேலசை நிரை என்றால் 9 வது மேலசையும் நிரையாக இருக்கவேண்டும். அதே பொழுது ஒன்பதாவது மேலசைக்கு இணையாக 1 விதம் மட்டும் தான் 8 வது மேலசையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

இந்தக் கட்டுகளோடு, இப்பொழுது முதல் மேலசை நேர் என்று வைத்துக் கொள்ளுங்கள்

மேலசை 1 2X3 4X5 6X7 8X9 10X11 12X13 14
விதங்கள் 1 4 4 4 3 4 4 2

மொத்த விதங்கள் = 1*4^5*3*2 = 6144

இப்பொழுது முதல் மேலசை நிரை என்று வைத்துக் கொள்ளுங்கள்

மேலசை 1 2X3 4X5 6X7 8X9 10X11 12X13 14
விதங்கள் 1 4 4 4 1 4 4 2

மொத்த விதங்கள் = 1*4^5*1*2 = 2048

ஆக மொத்த விதங்கள் = 6144+2048 = 8192

அதாவது 8192 விதமான இன்னிசைக் குறட்பாக்களைத் தளை தவறாமல் செய்ய முடியும். எதுகை என்ற கட்டை விதித்தவுடன் முதலில் கணித்த 16384 பிணைப்புக்கள் 8192 பிணைப்புகளாய்ச் சுருங்கிவிட்டன பாருங்கள். அதே பொழுது அழகு கூடி இருக்கிறது. எதுகையுள்ள குறட்பா கேட்க அழகாய் இருக்கிறது அல்லவா? இந்த கணிப்பைக் கூட்டிக் கொண்டு போகலாம்.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா (மூவடி வெண்பா), எதுகைக் கட்டைச் சேர்த்துப் பார்த்தால், நேரசைத் தொடங்கலுக்கு 1179648 விதமும், நிரையசைத் தொடங்கலுக்கு 131072 விதமும், ஆக மொத்தம் 1310720 விதங்களில் பாக்களை உருவாக்க முடியும்.

இன்னிசை அளவியல் வெண்பா (நாலடி வெண்பா), எதுகைக் கட்டைச் சேர்த்துப் பார்த்தால், நேரசைத் தொடங்கலுக்கு 226492416 விதமும், நிரையசைத் தொடங்கலுக்கு 8388608 விதமும், ஆக மொத்தம் 234881024 விதங்களில் பாக்களை உருவாக்க முடியும்.

நேரிசை வெண்பாக்களின் விதங்களையும் இது போலவே காணமுடியும். செய்ய வேண்டியது, தனிச்சீரின் எதுகைக் கட்டை உள்ளே பிணைப்பதுதான். காட்டாக 1, 9,15,17,25 வது மேலசைகள் எல்லாமே நேர் அசை என்றால் 169869312 விதமும், நிரையசைத் தொடங்கலுக்கு 2097152 விதமும், ஆக மொத்தம் 171966464 விதமுமாகப் பாக்களை உருவாக்க முடியும்.

இத்தனை பட்டவங்களையும் ஒரு மாந்தன் தனித்துச் செய்வது என்பது முடியாத கதை. 234 மில்லியனுக்கும் மேல் இன்னிசை அளவியல் வெண்பாக்கள் இருக்கின்றன என்பது தெரிந்த பிறகுமா, படிவம் நிரப்புதல் என்று ஒருவர் சொல்ல முடியும்? வெண்பா இயற்றுவது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல; மிகச் சிறிய ஒழுங்குகளைக் கைக்கொண்டால் அது வெட்ட வெளியில் பறப்பது தான்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¦ÅñÀ¡Å¢ý Å¢¾í¸û

¦ÅñÀ¡ì¸û ±ýÀ¨Å ÁÃÒ þÄ츢 ÅÊÅò¾¢ø ¦ÀâÐõ º¢ÈôÒô ¦ÀüÈ¢Õ츢ýÈÉ. þó¾ô À¡ì¸Ç¢ý ¯ûǼì¸õ ±ýÀ¨¾ ¡áÖõ ¸ðÎô ÀÎò¾ ÓÊ¡Ð; þ¾¢ø ÒÌóÐ ±ó¾ì ¸Õò¨¾ §ÅñÎÁ¡É¡Öõ, ±øÄ¡ þÄ츢 ¯ò¾¢¸Ù¼ý ¨¸Â¡ÇÄ¡õ. «§¾ ¦À¡ØÐ ¿¡õ ¸¡Ïõ º¢Ä Å¢¨Ç¡ðÎì¸û, ¿¡ðÊÂõ, þ¨º §À¡ýÈ ´ù¦Å¡Õ ¸¨ÄìÌõ ¦Åù§ÅÚ ¸ðÎì¸û ¯ûÇÐ §À¡ø ¦ÅñÀ¡ ÅÊÅò¾¢üÌõ º¢Ä ¸ðÎì¸û ¯ñÎ. ¦º¡ü¸ðθû ¯ûÇ ¦ÅñÀ¡ ÅÊÅõ, «¾¢ø ¯ûÇ ¾¨Ç¸û, þÄ츽õ §À¡ýȨŠ²§¾¡ ¾í¸¨Ç ¿¸Ã ÓÊ¡Áø ¸ðÊô §À¡ÎÅÐ §À¡Ä×õ, «¾ý ãÄõ ¾í¸Ù¨¼Â ¸Õò¨¾î ¦º¡øÄ ÓÊ¡Р«¨¼ì¸ô ÀΞ¡¸×õ, þ¾¢ø ±ýÉ ¸Å¢¨¾ þÕ츢ÈÐ ±ýÚõ, þÐ ¦ÅÚõ ÀÊÅõ ¿¢ÃôÒÅÐ ±ýÚõ, º¢Ä÷ ¦º¡øÄ¢ ÅÕ¸¢È¡÷¸û. («§¾ ¦À¡ØÐ þôÀÊî ¦º¡øÀÅ÷¸§Ç §ÅÚ ²§¾¡ ¸ðÎìÌû þÕ츢ȡ÷¸û ±ýÀРŢÂò¾Ìõ þý¦É¡Õ ÓÃñ.) ¸ðÎì¸û þÕó¾¡Öõ, ¦ÅñÀ¡ ±ýÈ ÅÊÅò¨¾ì ¨¸Â¡ÙÅÐ ´ýÚõ ºÃÅÄ¡É ¦ºÂø þø¨Ä ±ýÚ «¨ÁóÐ, «ºÃ¡Áø þÄó¨¾Â¡÷, «Éó¾÷, ÀÍÀ¾¢, «Ã¢, þá.ÓÕ¸ý ÁüÚõ ÀÄ÷ «ùÅô§À¡Ð ÒÌóРŢ¨Ç¡Êì ¦¸¡ñξ¡ý þÕ츢ȡ÷¸û.

¦ÅñÀ¡¨Åî º¢Ä÷ ̨ÈòÐ Á¾¢ôÀ¢Îõ §À¡ìÌ þ¾¢ø ¯ûÇ ¸ðÎÁ¡Éí¸¨Ç þÅ÷¸û ¯½Ã¡¾¾¡ø Å󾧾¡ ±ý§È ±ñ½ò §¾¡ýÚ¸¢ÈÐ. ¦ÅñÀ¡ì¸Ç¢ý ¾¨Ç¸û, þÄ츽í¸û ±øÄ¡õ ±ò¾¨É Å¢¾Á¡É ¦ÅñÀ¡ì¸¨Ç ¯ÕÅ¡ì¸ ÓÊÔõ ±ýÚ «¾ý «Ãí¨¸Ôõ (range) ţÔõ ¸¡ðθ¢ýÈÉ. ¸½¢¾ò¾¢ý ÅÆ¢ þó¾ «Ãí¸¢ý Ţâ¨Åì ¸¡ð¼§Å þó¾ Á¼¨Ä þíÌ ±Øи¢§Èý. "±ýɼ¡, ¸Å¢¨¾¨Âì ¸½ìÌû ¦¸¡ñÎ ÅÕ¸¢È¡÷¸§Ç?" ±ýÚ º¢Ä÷ ÒÈõÀ¡¸ì ¸Õ¾Ä¡õ. ¬É¡ø ±ý¨Éô ¦À¡Úò¾ Ũâø ¦ÅñÀ¡Å¢ø ¸¡ðÎõ ´ù¦Å¡Õ Àð¼ÅÓõ (pattern) «¾ý «ÆÌ측¸ «È¢Âô À¼§Åñʧ¾. þí§¸ ¿¡ý ÜÚ¸¢ýÈ ¸½¢¾ò¾¢ø ¾ÅÚ þÕôÀ¢ý ¦¾Ã¢Âô ÀÎòÐí¸û.

ӾĢø µÃ¢ÃñΠŨèȸ¨Çî ¦º¡øÄ §ÅñÎõ. ¦ÅñÀ¡Å¢ø ®Ã¨º¸Ùõ ãŨº¸Ùõ À¢Öž¡ø, ¸½ì¸¢¼ ±Ç¢¨Á측¸ þí§¸ §ÁĨº (meta-sylaable) ±ýÈ ¦º¡ø¨Ä ŨÃÂÚ츢§Èý.

§ÁĨº ±ýÀÐ ¿¡õ ²ü¸É§Å «È¢ó¾ §¿÷, ¿¢¨Ã §À¡ýȨŸÙõ, «ÅüÈ¢ý ®Ã¨ºì ÜðÎî §º÷쨸¸Ùõ ¬Ìõ. «¾¡ÅÐ "§¿÷, ¿¢¨Ã, §¿÷§¿÷, ¿¢¨Ã§¿÷, §¿÷¿¢¨Ã, ¿¢¨Ã¿¢¨Ã" ±øÄ¡Åü¨ÈÔõ §ÁĨº ±ýÈ ¦º¡øÄ¡ø «¨Æ츢§Èý. ÁÃÒò ¾Á¢úô À¡ì¸Ç¢ø ÅÕõ ´ù¦Å¡Õ º£Õõ þÃñÎ §ÁĨº¸¨Çì ¦¸¡ñ¼Ð. ´Õ À¡Å¢ø ¿¡Ö º£÷¸û Åó¾¡ø «¾¢ø 8 §ÁĨº¸û þÕôÀ¾¡¸ô ¦À¡Õû. þó¾ ±ðÎ §ÁĨº¸Ç¢ø ´ü¨ÈôÀ¨¼ §ÁĨº (1,3,5,7) ±ýÀÐ ¿¡õ ÓØÐõ «È¢ó¾ ´ü¨È «¨º¸¨Çô §À¡Ä§Å Å¡öôÀ¡Î ¦¸¡ûÙõ («¾¡ÅÐ §¿÷, ¿¢¨Ã ÁðΧÁ). þÃð¨¼ôÀ¨¼ §ÁĨº ±ýÀ¨¾ì ÜðÎ «¨º¸Ç¡¸×õ, ´ü¨È «¨º¸Ç¡¸×õ Å¡öôÀ¡Î ¦¸¡ûÇÄ¡õ. («¾¡ÅÐ þÃð¨¼ôÀ¨¼ §ÁĨºÂ¡¸ §¿÷, ¿¢¨Ã, §¿÷§¿÷, ¿¢¨Ã§¿÷, §¿÷¿¢¨Ã, ¿¢¨Ã¿¢¨Ã ±É ±Ð §ÅñÎÁ¡É¡Öõ þÕì¸Ä¡õ.) þÐ ¾Å¢Ã ¦ÅñÀ¡Å¢ý þÚ¾¢Â¢ø ÌüÈ¢Âø «¨º (Ì,Í,Î,Ð,Ò,Ú) ±ýÀÐ ÅóÐõ ÅáÁÖõ þÕì¸Ä¡õ.

Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø, ¦ÅñÀ¡Å¢ý ±ó¾ ´Õ ®üÈÊÔõ ³óÐ §ÁĨº¸¨ÇÔõ, ´Õ ÌüÈ¢Âø «¨º¨ÂÔõ ¦¸¡ñÊÕìÌõ. þ¨¼, Ó¾ø «Ê¸û 8 §ÁĨº¸¨ÇÔõ ¦¸¡ñÊÕìÌõ. ´Õ ÌÈðÀ¡ ±ýÀÐ ´Õ Ó¾ÄÊÔõ, ´Õ ®üÈÊÔõ ¦¸¡ñ¼Ð ±É§Å «Ð 13 §ÁĨº¸¨ÇÔõ ´Õ ÌüÈ¢ÂĨº¨ÂÔõ ¦¸¡ñÊÕìÌõ. º¢ó¾¢Âø ¦ÅñÀ¡ ´Õ Ó¾ø «Ê, ´Õ þ¨¼ «Ê, ´Õ ®üÈÊ ¦¸¡ñ¼Ð. «¾¡ÅÐ «¾¢ø 21 §ÁĨº¸Ùõ 1 ÌüÈ¢ÂĨºÔõ þÕìÌõ. «ÇÅ¢Âø ¦ÅñÀ¡Å¢ø ´Õ Ó¾ÄÊ, þÃñÎ þ¨¼Âʸû, ´Õ ®üÈÊ. «¾É¡ø 29 §ÁĨº¸Ùõ 1 ÌüÈ¢ÂĨºÔõ «ÇÅ¢Âø ¦ÅñÀ¡Å¢ø þÕìÌõ.

´ù¦Å¡Õ À¡Å¢Öõ þÃð¨¼ôÀ¨¼ §ÁĨº¸û ÌÈ¢ôÀ¢ð¼¾¡¸§Å þÕìÌõ. ¸¡ð¼¡¸, ±ó¾ ¦ÅñÀ¡Å¢Öõ Á¡îº£÷, Å¢Ç÷, ¸¡ö÷ ÁðΧÁ À¢Öõ ±ýÈ×¼ý, þÃñ¼¡õ §ÁĨºÂ¢ø §¿÷, ¿¢¨Ã, §¿÷§¿÷, ¿¢¨Ã§¿÷ ±ýÈ ¿¡Ö ÁðΧÁ þÕì¸ ÓÊÔõ ±ýÚ ÒâóÐ ¦¸¡ûÙ¸¢§È¡õ.

þÉ¢ò ¾¨Ç ±ýÀ¨¾ô À¡÷ô§À¡õ. þÐ «Îò¾Îò¾ þÕ º£÷¸Ç¢ø Ó¾üº£Ã¢ý þÃñ¼¡õ §ÁĨºìÌõ, þÃñ¼¡õ º£Ã¢ý Ó¾ø §ÁĨºìÌõ þÕìÌõ ¯È¨Åì ÌÈ¢ôÀÐ. º£¦Ã¡Ð츢 ¦ÅÚõ «¨º¸¨Ç ÁðÎõ À¡÷ò¾¡ø, ¾¨Ç ±ýÀÐ ´Õ À¡Å¢ø þÃð¨¼ôÀ¨¼ §ÁĨº¸¨Ç «¾üÌ «ÎòÐÅÕõ ´ü¨ÈôÀ¨¼ §ÁĨº¸§Ç¡Î ¦¾¡¼÷Ò ÀÎò¾¢ì ¸¡ðÎÅÐ. þó¾¢ó¾ò ¾¨Ç¸û þó¾ô À¡Å¢ø À¢ýÚ ÅÕõ ±ýÈ¡ø º¢Ä ÜðÎì¸û ÁðΧÁ «ÛÁ¾¢ì¸ô Àθ¢ýÈÉ ±ýÚ ¦¸¡ûÇ §ÅñÎõ.

±ó¾ô À¡Å¢Öõ ¦¾¡¼ì¸ò¾¢ø ¯ûÇ §ÁĨºÔõ ®üÈ¢ø ¯ûÇ ÌüÈ¢Âø «¨º ÁðΧÁ ¾¨Ç¢øġРŢð¼ Ţξ¨Ä¡ö ¿õ Å¢¨Æ×ìÌ ²üÀò §¾Ãì ÜʨÅ.

þô¦À¡ØÐ ¦ÅñÀ¡ ±ýÚ ÅÕõ §À¡Ð, þÂüº£÷ ¦Åñ¼¨ÇÔõ, ¦Åñº£÷ ¦Åñ¼¨ÇÔõ ÁðΧÁ ¾¨Çì¸ §ÅñÎõ ±ýÀ¾¡ø ¸£úì¸ñ¼ ¾¨Ç¸û ÁðΧÁ ¦ÅñÀ¡Å¢ø ²ü¸ô ÀÎõ.

þÃð¨¼ôÀ¨¼ X ´ü¨ÈôÀ¨¼
§ÁĨº §ÁĨº
¿¢¨Ã X §¿÷
§¿÷§¿÷ X §¿÷
¿¢¨Ã§¿÷ X §¿÷
§¿÷ X ¿¢¨Ã

þô¦À¡ØÐ ¾É¢òÐ ¿¢üÌõ ´Õ ¦ÅñÀ¡ ®üÈʨÂô À¡÷ô§À¡õ. þ¾¢ø Ó¾ø §ÁĨº¨Â ¿õ Å¢ÕôÀõ §À¡ø §¾÷ó¦¾Îì¸Ä¡õ. þ¾¢ø þÃñΠŨ¸ ¾¡ý ¯ñÎ (§¿÷, ¿¢¨Ã). þÃñ¼¡ÅÐ §ÁĨº¨Âò §¾÷ó¦¾Îò¾¡ø, §Á§Ä ÜȢ ¦Åñ¼¨Ç¸û ¸¡Ã½Á¡ö ãýÈ¡ÅÐ §ÁĨº¨ÂÔõ §¾÷ó¦¾Îò¾¾¡¸ ¬Ìõ. «¾¡ÅÐ 2X3 ±ýÈ þÕ §ÁĨº¸¨ÇÔõ §º÷ò§¾ ¾¡ý ±Îì¸ §ÅñÎõ. þ§¾ §À¡Ä 4X5 ¨ÂÔõ §º÷ó§¾ ±Îì¸ §ÅñÎõ. 2X3 ¨Â 4 Å¢¾Á¡öò §¾÷ó¦¾Îì¸Ä¡õ; «§¾ §À¡Ä 4X5 ¨Â 4 Å¢¾Á¡¸ò §¾÷ó¦¾Îì¸Ä¡õ. 6 ÅÐ §ÁĨº ¦ÅñÀ¡Å¢ý þÄ츽ôÀÊ ÌüÈ¢Âø «¨º; þÐ þÕì¸Ä¡õ; þøÄ¡Ð §À¡¸Ä¡õ. þý¦É¡Õ §¿¡ì¸¢ø ¦º¡ýÉ¡ø þÃñÎÅ¢¾Á¡ö þó¾ ÌüÈ¢Âø §ÁĨº¨Âì ÌÈ¢ì¸Ä¡õ.

§ÁĨº 1 2X3 4X5 6
Å¢¾í¸û 2 4 4 2

¦Á¡ò¾ Å¢¾í¸û = 2*4*4*2 = 64

±É§Å 64 Å¢¾Á¡É ®üÈʸû ¯ÕÅ¡ì¸ ÓÊÔõ. þÉ¢ «ÎòÐ ÌÈðÀ¡ì¸¨Çô À¡÷ô§À¡õ. þÐ ¦Á¡ò¾õ 14 §ÁĨº¸¨Çì ¦¸¡ñ¼Ð

§ÁĨº 1 2X3 4X5 6X7 8X9 10X11 12X13 14
Å¢¾í¸û 2 4 4 4 4 4 4 2

¦Á¡ò¾ Å¢¾í¸û = 2*4^6*2 = 16384

þó¾ì ¸½¢ôÀ¢ø þÐ ¸¡Úõ ±Ð¨¸ ±ýÈ ¸Õò¨¾ ¯û§Ç ¦¸¡ñÎÅÃÅ¢ø¨Ä. ±Ð¨¸Â¢ý ´ÕÅ¢¾ þÄ츽ô ÀÊ, Ó¾ø §ÁĨº §¿÷ ±ýÈ¡ø 9 ÅÐ §ÁĨºÔõ §¿÷ ±É þÕì¸ §ÅñÎõ. «§¾ ¦À¡ØÐ ´ýÀ¾¡ÅÐ §ÁĨºìÌ þ¨½Â¡¸ 3 Å¢¾Á¡¸ 8ÅÐ §ÁĨº¨Âò §¾÷ó¦¾Îì¸Ä¡õ.¨É§¾ §À¡ø, Ó¾ø §ÁĨº ¿¢¨Ã ±ýÈ¡ø 9 ÅÐ §ÁĨºÔõ ¿¢¨Ã¡¸ þÕ츧ÅñÎõ. «§¾ ¦À¡ØÐ ´ýÀ¾¡ÅÐ §ÁĨºìÌ þ¨½Â¡¸ 1 Å¢¾õ ÁðÎõ ¾¡ý 8 ÅÐ §ÁĨº¨Âò §¾÷ó¦¾Îì¸ ÓÊÔõ.

þó¾ì ¸ðθ§Ç¡Î, þô¦À¡ØÐ Ó¾ø §ÁĨº §¿÷ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û

§ÁĨº 1 2X3 4X5 6X7 8X9 10X11 12X13 14
Å¢¾í¸û 1 4 4 4 3 4 4 2

¦Á¡ò¾ Å¢¾í¸û = 1*4^5*3*2 = 6144

þô¦À¡ØÐ Ó¾ø §ÁĨº ¿¢¨Ã ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û

§ÁĨº 1 2X3 4X5 6X7 8X9 10X11 12X13 14
Å¢¾í¸û 1 4 4 4 1 4 4 2

¦Á¡ò¾ Å¢¾í¸û = 1*4^5*1*2 = 2048

¬¸ ¦Á¡ò¾ Å¢¾í¸û = 6144+2048 = 8192

«¾¡ÅÐ 8192 Å¢¾Á¡É þýÉ¢¨ºì ÌÈðÀ¡ì¸¨Çò ¾¨Ç ¾ÅÈ¡Áø ¦ºö ÓÊÔõ. ±Ð¨¸ ±ýÈ ¸ð¨¼ Å¢¾¢ò¾×¼ý ӾĢø ¸½¢ò¾ 16384 À¢¨½ôÒì¸û 8192 À¢¨½ôҸǡöî ÍÕí¸¢Å¢ð¼É À¡Õí¸û. «§¾ ¦À¡ØÐ «ÆÌ ÜÊ þÕ츢ÈÐ. ±Ð¨¸ÔûÇ ÌÈðÀ¡ §¸ð¸ «Æ¸¡ö þÕ츢ÈÐ «øÄÅ¡? þó¾ ¸½¢ô¨Àì ÜðÊì ¦¸¡ñÎ §À¡¸Ä¡õ.

þýÉ¢¨ºî º¢ó¾¢Âø ¦ÅñÀ¡ (ãÅÊ ¦ÅñÀ¡), ±Ð¨¸ì ¸ð¨¼î §º÷òÐô À¡÷ò¾¡ø, §¿Ã¨ºò ¦¾¡¼í¸ÖìÌ 1179648 Å¢¾Óõ, ¿¢¨Ã¨ºò ¦¾¡¼í¸ÖìÌ 131072 Å¢¾Óõ, ¬¸ ¦Á¡ò¾õ 1310720 Å¢¾í¸Ç¢ø À¡ì¸¨Ç ¯ÕÅ¡ì¸ ÓÊÔõ.

þýÉ¢¨º «ÇÅ¢Âø ¦ÅñÀ¡ (¿¡ÄÊ ¦ÅñÀ¡), ±Ð¨¸ì ¸ð¨¼î §º÷òÐô À¡÷ò¾¡ø, §¿Ã¨ºò ¦¾¡¼í¸ÖìÌ 226492416 Å¢¾Óõ, ¿¢¨Ã¨ºò ¦¾¡¼í¸ÖìÌ 8388608 Å¢¾Óõ, ¬¸ ¦Á¡ò¾õ 234881024 Å¢¾í¸Ç¢ø À¡ì¸¨Ç ¯ÕÅ¡ì¸ ÓÊÔõ.

§¿Ã¢¨º ¦ÅñÀ¡ì¸Ç¢ý Å¢¾í¸¨ÇÔõ þÐ §À¡Ä§Å ¸¡½ÓÊÔõ. ¦ºö §ÅñÊÂÐ, ¾É¢îº£Ã¢ý ±Ð¨¸ì ¸ð¨¼ ¯û§Ç À¢¨½ôÀо¡ý. ¸¡ð¼¡¸ 1, 9,15,17,25 ÅÐ §ÁĨº¸û ±øÄ¡§Á §¿÷ «¨º ±ýÈ¡ø 169869312 Å¢¾Óõ, ¿¢¨Ã¨ºò ¦¾¡¼í¸ÖìÌ 2097152 Å¢¾Óõ, ¬¸ ¦Á¡ò¾õ 171966464 Å¢¾ÓÁ¡¸ô À¡ì¸¨Ç ¯ÕÅ¡ì¸ ÓÊÔõ.

þò¾¨É Àð¼Åí¸¨ÇÔõ ´Õ Á¡ó¾ý ¾É¢òÐî ¦ºöÅÐ ±ýÀÐ ÓÊ¡¾ ¸¨¾. 234 Á¢øÄ¢ÂÛìÌõ §Áø þýÉ¢¨º «ÇÅ¢Âø ¦ÅñÀ¡ì¸û þÕ츢ýÈÉ ±ýÀÐ ¦¾Ã¢ó¾ À¢ÈÌÁ¡, ÀÊÅõ ¿¢ÃôÒ¾ø ±ýÚ ´ÕÅ÷ ¦º¡øÄ ÓÊÔõ? ¦ÅñÀ¡ þÂüÚÅÐ ´ýÚõ ¸õÀÝò¾¢Ãõ «øÄ; Á¢¸î º¢È¢Â ´Øí̸¨Çì ¨¸ì¦¸¡ñ¼¡ø «Ð ¦Åð¼ ¦ÅǢ¢ø ÀÈôÀÐ ¾¡ý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Friday, October 17, 2003

பேராயக் கட்சிக்கு ஒரு பாராட்டு

எத்தனை பேருக்கு இப்பொழுது நினைவிருக்கிறது என்று தெரியவில்லை. 1967 க்கு முன்னர் தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி வரை படிக்கும் பாடமொழியாகவும், 100க்கு 98/99 பேர் படிக்கும் மொழிப்பாடமாகவும் தமிழ் கொடிகட்டிப் பறந்தது. அன்றைய நிலையில் கல்லூரியில் எப்படித் தமிழைப் பாடமொழி ஆக்குவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். திரு. சி.சுப்பிரமணியம் முதலில் பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையிலும் பின் திரு. பக்தவத்சலம் அமைச்சரவையிலும் நல்ல பணிகளைக் கல்வி அமைச்சராய்ச் செய்து வந்தார். பேரறிஞர் அண்ணா முதல்வரான பிறகும் கூட இந்த உருப்படியான நிலை நீடித்தது. கலைக் கல்லூரிகளில் தமிழ் பாடமொழி ஆகிவிடும் என்று தான் எல்லோரும் கனவு கொண்டிருந்தார்கள்.

பிறகு நடந்ததுதான் கூத்து. முன்னேற்றங்கள் பின்னேற்றங்கள் ஆகச் சறுக்கினர். எங்கும் பணம் பண்ணுவதே குறியாகிப் போனது; கழுதை தேய்ந்து கட்டெறும்பாகித் தமிழ் பாடமொழியாவது குதிரைக் கொம்பாகி, மொழிப்பாடம் என்பது கூடக் குறைந்து போனது. தமிழ் படிக்காமலே ஒரு தமிழர்/தமிழ்நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகளாவது இருந்தவர் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை வந்து சேர்ந்தது. இப்பொழுது மழலைப் பருவத்திலும் கூடத் தமிழ் படிக்காத ஓர் உயர்ந்த முன்னேற்றத்திற்கு(?)ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

ஒரு ஒன்றரை ஆண்டுகள் முன்னம் தற்செயலாக பேராசிரியர் தமிழண்ணலோடு ஒரு விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் முந்தைய ஆட்சியில் தமிழ்ப் பாடமொழி பற்றி நடந்த கூத்துக்களையும் மடிக்குழைப் பள்ளிகளில் தமிழ் ஒழிந்து போன கொடுமையையும் கூறி, அவை பெருகிப் போனதும் பற்றியும் சொல்லி, எப்படி ஒரு இந்திய நிர்வாகத் துறை அதிகாரியின் சொல்லுக்குத் தலையாட்டி, இந்தப் பக்கம் தமிழ்ச் சான்றோர் பேச்சைக் கேளாது, வெறும் பரிவுரை அரசாணையோடு கலைஞர் அரசு நின்றுகொண்டது என்று சொன்னார். வியந்து போனேன். சட்டப்பேரவையைக் கூட்டி தனக்கிருந்த உறுப்பினர் பலத்தைக் கொண்டு அந்த ஆணையைச் சட்டம் ஆக்காமல் தயங்கி நின்ற தமிழினத் தலைவர் (?) பற்றி வருத்தத்தோடு சொன்னார். "வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் இவரிடம்?" என்று நான் கேட்டேன்.

இதை இங்கு எழுதியதால், அடுத்த கழகம் பற்றி இங்கு கூறவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம். தாய் எட்டடி பாய்த்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கு உகந்த கழகம் தான் அதுவும். தமிழ், தமிழ் என்று சொல்லிக் குழிபறிப்பதில் அண்ணனுக்கும் தம்பிக்கும் போட்டி; இதில் என்ன ஒப்பீடு வேண்டியிருக்கிறது? சொல்ல வருவது இதுதான். ஆயிரம் குறையைப் பேராயக் கட்சி மீது சொன்னாலும், அவர்கள் ஆண்ட போது கண்ணும் கருத்துமாகத் தான் தமிழைப் பேணி வந்தார்கள். தமிழ் வளர்ச்சிக்கு ஆவன செய்தார்கள்.

இப்பொழுது சரிந்து போன நிலையை முட்டுக் கட்டி நிறுத்துவதும் பேராயக் கட்சிதான். அடுத்துள்ள புதுச்சேரி மாநிலம் தங்கள் மாநிலத்தில் எந்தப் பள்ளியில் படித்தாலும் அவர்கள் தமிழர்களாக இருப்பின்/ குறிப்பிட்ட காலம் தமிழ் பேசும் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களாக இருப்பின், தமிழ்மொழிப் பாடத்தை எட்டாவது வரை கட்டாயமாகப் படித்தே தீரவேண்டும் என்று சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.

அவர்கள் துணிவுள்ளவர்கள்; பாராட்டத்தான் வேண்டும். மயிலே மயிலே இறகு போடு என்றால் அது இறகு போடாது என்பது தமிழ்ப் பழமொழி. மக்களாட்சி என்பது பொறுப்பற்ற, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஆட்சி அல்ல. அரசின் ஆட்சி என்பது ஒருவகையில் அதிரடிச் செயல் தான்.

தமிழ் தழைக்க வேண்டுமானால்........என்ன செய்யலாம்?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

±ò¾¨É §ÀÕìÌ þô¦À¡ØÐ ¿¢¨ÉÅ¢Õ츢ÈÐ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. 1967 ìÌ ÓýÉ÷ ¾Á¢ú¿¡ðÊø ¯Â÷¿¢¨Äô ÀûÇ¢ Ũà ÀÊìÌõ À¡¼¦Á¡Æ¢Â¡¸×õ, 100ìÌ 98/99 §À÷ ÀÊìÌõ ¦Á¡Æ¢ôÀ¡¼Á¡¸×õ ¾Á¢ú ¦¸¡Ê¸ðÊô ÀÈó¾Ð. «ý¨È ¿¢¨Ä¢ø ¸øæâ¢ø ±ôÀÊò ¾Á¢¨Æô À¡¼¦Á¡Æ¢ ¬ìÌÅÐ ±ýÚ §Àº¢ì ¦¸¡ñÊÕó¾¡÷¸û. ¾¢Õ. º¢.ÍôÀ¢ÃÁ½¢Âõ ӾĢø ¦ÀÕó¾¨ÄÅ÷ ¸¡Ááº÷ «¨ÁîºÃ¨Å¢Öõ À¢ý ¾¢Õ. Àì¾ÅòºÄõ «¨ÁîºÃ¨Å¢Öõ ¿øÄ À½¢¸¨Çì ¸øÅ¢ «¨ÁîºÃ¡öî ¦ºöÐ Åó¾¡÷. §ÀÃÈ¢»÷ «ñ½¡ Ó¾øÅÃ¡É À¢ÈÌõ ܼ þó¾ ¯ÕôÀÊÂ¡É ¿¢¨Ä ¿£Êò¾Ð. ¸¨Äì ¸øæâ¸Ç¢ø ¾Á¢ú À¡¼¦Á¡Æ¢ ¬¸¢Å¢Îõ ±ýÚ ¾¡ý ±ø§Ä¡Õõ ¸É× ¦¸¡ñÊÕó¾¡÷¸û.

À¢ÈÌ ¿¼ó¾Ð¾¡ý ÜòÐ. Óý§ÉüÈí¸û À¢ý§ÉüÈí¸û ¬¸î ºÚ츢É÷. ±íÌõ À½õ ÀñÏŧ¾ ÌȢ¡¸¢ô §À¡ÉÐ; ¸Ø¨¾ §¾öóÐ ¸ð¦¼ÚõÀ¡¸¢ò ¾Á¢ú À¡¼¦Á¡Æ¢Â¡ÅР̾¢¨Ãì ¦¸¡õÀ¡¸¢, ¦Á¡Æ¢ôÀ¡¼õ ±ýÀРܼì ̨ÈóÐ §À¡ÉÐ. ¾Á¢ú ÀÊ측Á§Ä ´Õ ¾Á¢Æ÷/¾Á¢ú¿¡ðÊø ̨Èó¾Ð 10 ¬ñθǡÅÐ þÕó¾Å÷ ÀûÇ¢ô ÀÊô¨À ÓÊì¸ ÓÊÔõ ±ýÈ ¿¢¨Ä ÅóÐ §º÷ó¾Ð. þô¦À¡ØÐ ÁƨÄô ÀÕÅò¾¢Öõ ܼò ¾Á¢ú ÀÊ측¾ µ÷ ¯Â÷ó¾ Óý§ÉüÈò¾¢üÌ(?)ô §À¡öì ¦¸¡ñÊÕ츢§È¡õ.

´Õ ´ýȨà ¬ñθû ÓýÉõ ¾ü¦ºÂÄ¡¸ §ÀẢâÂ÷ ¾Á¢Æñ½§Ä¡Î ´Õ ŢơŢø §Àº¢ì ¦¸¡ñÊÕó¾§À¡Ð «Å÷ Óó¨¾Â ¬ðº¢Â¢ø ¾Á¢úô À¡¼¦Á¡Æ¢ ÀüÈ¢ ¿¼ó¾ ÜòÐ츨ÇÔõ ÁÊį̀Æô ÀûÇ¢¸Ç¢ø ¾Á¢ú ´Æ¢óÐ §À¡É ¦¸¡Î¨Á¨ÂÔõ ÜÈ¢, «¨Å ¦ÀÕ¸¢ô §À¡ÉÐõ ÀüÈ¢Ôõ ¦º¡øÄ¢, ±ôÀÊ ´Õ þó¾¢Â ¿¢÷Å¡¸ò Ð¨È «¾¢¸¡Ã¢Â¢ý ¦º¡øÖìÌò ¾¨Ä¡ðÊ, þó¾ô Àì¸õ ¾Á¢úî º¡ý§È¡÷ §Àî¨ºì §¸Ç¡Ð, ¦ÅÚõ Àâרà «Ãº¡¨½§Â¡Î ¸¨Ä»÷ «ÃÍ ¿¢ýÚ¦¸¡ñ¼Ð ±ýÚ ¦º¡ýÉ¡÷. Å¢ÂóÐ §À¡§Éý. ºð¼ô§ÀèŨÂì ÜðÊ ¾É츢Õó¾ ¯ÚôÀ¢É÷ ÀÄò¨¾ì ¦¸¡ñÎ «ó¾ ¬¨½¨Âî ºð¼õ ¬ì¸¡Áø ¾Âí¸¢ ¿¢ýÈ ¾Á¢Æ¢Éò ¾¨ÄÅ÷ (?) ÀüÈ¢ ÅÕò¾ò§¾¡Î ¦º¡ýÉ¡÷. "§ÅÚ ±ýÉ ±¾¢÷À¡÷츢ȣ÷¸û þÅâ¼õ?" ±ýÚ ¿¡ý §¸ð§¼ý.

þ¨¾ þíÌ ±Ø¾¢Â¾¡ø, «Îò¾ ¸Æ¸õ ÀüÈ¢ þíÌ ÜÈÅ¢ø¨Ä§Â ±ýÚ Â¡Õõ ±ñ½ §Åñ¼¡õ. ¾¡ö ±ð¼Ê À¡öò¾¡ø ÌðÊ À¾¢É¡ÈÊ À¡Ôõ ±ýÈ ÀƦÁ¡Æ¢ìÌ ¯¸ó¾ ¸Æ¸õ ¾¡ý «Ð×õ. ¾Á¢ú, ¾Á¢ú ±ýÚ ¦º¡øÄ¢ì ÌÆ¢ÀÈ¢ôÀ¾¢ø «ñ½ÛìÌõ ¾õÀ¢ìÌõ §À¡ðÊ; þ¾¢ø ±ýÉ ´ôÀ£Î §ÅñÊ¢Õ츢ÈÐ? ¦º¡øÄ ÅÕÅÐ þо¡ý. ¬Â¢Ãõ ̨ȨÂô §ÀáÂì ¸ðº¢ Á£Ð ¦º¡ýÉ¡Öõ, «Å÷¸û ¬ñ¼ §À¡Ð ¸ñÏõ ¸ÕòÐÁ¡¸ò ¾¡ý ¾Á¢¨Æô §À½¢ Åó¾¡÷¸û. ¾Á¢ú ÅÇ÷ìÌ ¬ÅÉ ¦ºö¾¡÷¸û.

þô¦À¡ØÐ ºÃ¢óÐ §À¡É ¿¢¨Ä¨Â ÓðÎì ¸ðÊ ¿¢ÚòÐÅÐõ §ÀáÂì ¸ðº¢¾¡ý. «ÎòÐûÇ ÒÐâ Á¡¿¢Äõ ¾í¸û Á¡¿¢Äò¾¢ø ±ó¾ô ÀûǢ¢ø ÀÊò¾¡Öõ «Å÷¸û ¾Á¢Æ÷¸Ç¡¸ þÕôÀ¢ý/ ÌÈ¢ôÀ¢ð¼ ¸¡Äõ ¾Á¢ú §ÀÍõ À̾¢¸Ç¢ø Å¡úóÐ ¦¸¡ñÊÕó¾Å÷¸Ç¡¸ þÕôÀ¢ý, ¾Á¢ú¦Á¡Æ¢ô À¡¼ò¨¾ ±ð¼¡ÅРŨà ¸ð¼¡ÂÁ¡¸ô ÀÊò§¾ ¾£Ã§ÅñÎõ ±ýÚ ºð¼õ þÂüÈ¢ þÕ츢ȡ÷¸û.

«Å÷¸û н¢×ûÇÅ÷¸û; À¡Ã¡ð¼ò¾¡ý §ÅñÎõ. Á¢§Ä Á¢§Ä þÈÌ §À¡Î ±ýÈ¡ø «Ð þÈÌ §À¡¼¡Ð ±ýÀÐ ¾Á¢úô ÀƦÁ¡Æ¢. Áì¸Ç¡ðº¢ ±ýÀÐ ¦À¡ÚôÀüÈ, ±¨¾ §ÅñÎÁ¡É¡Öõ ¦ºöÂÄ¡õ ±ý¸¢È ¬ðº¢ «øÄ. «Ãº¢ý ¬ðº¢ ±ýÀÐ ´ÕŨ¸Â¢ø «¾¢ÃÊî ¦ºÂø ¾¡ý.

¾Á¢ú ¾¨Æì¸ §ÅñÎÁ¡É¡ø........±ýÉ ¦ºöÂÄ¡õ?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Thursday, October 16, 2003

தோல்பித்தவன்

சென்ற வாரத்திற்கு முந்திய காரிக் கிழமை (சனிக்கிழமை)யன்று பிற்பகலில் பொழுது போகாமல் தொலைக்காட்சியில் வரும் ஓடைகளை மாற்றிக் கொண்டு இருந்தேன். கையில் தூரக்கட்டு இருந்தால் ஓர் ஓடையில் நிலைக்காமல் இப்படி மாற்றிக் கொண்டே இருக்கச் சொல்லும்; வீட்டுக்காரி பல தடவை சொல்லி இருக்கிறாள்; இன்னும் கேட்கிற படியாய் இல்லை;
கெட்ட பழக்கம் தான், இருந்தாலும் மன நிலை அந்த நேரத்தில் அப்படி இருந்தது, எதிலும் நிலை கொள்ளவில்லை.

இந்த விவரம் கெட்ட அலைவில், திடீரென்று ஆசியா நெட் மலையாளத் தொலைக்காட்சி அகப்பட்டது. மலையாளம் ஓரளவு தெரியும் என்பதால், சில போது மலையாளத் திரைப்படங்களின் தொடக்கமும் முடிவும் அறியாமல் கூட, பார்க்கும் இடைப்பட்ட நேரத்தில் என்னை மறந்து ஆழ்ந்து போனது உண்டு. அன்றைக்கு ஒரு மோகன்லால் திரைப்படம். அழுத்தம் திருத்தமான ஒலிப்போடு மோகன்லால் மலையாளம் பேசும் பாணி என்னை எப்பொழுதுமே கவர்ந்தது உண்டு.

ஒரு இடத்தில் "ஞங்களைத் தோல்பிச்சவனை ஞான் தோல்பிக்கணும்" என்ற வாசகம் கேட்டு எங்கோ நெஞ்சுள் மணி ஒலிக்கத் தொடங்கியது; இப்படி ஒரு வினை தமிழில் ஏன் இல்லாது போனது? எப்போது தொலைத்தோம்? மனம் வேறொரு பக்கம் யோசிக்கத் தொடங்கியது. நாம் தொலைத்ததை மலையாளமாவது காப்பாற்றி வைத்திருக்கிறதே என்று நிறைவு கொண்டேன்.

நான் தோற்றேன்; தோற்கிறேன்; தோற்பேன் இப்படித் தமிழில் உண்டு. ஆனால் பிறவினை என்று வரும்போது நம்மை அறியாமல் பெயர்ச் சொல்லோடு துணை வினை போட்டு ஏன் சுற்றி வளைக்கிறோம்? அவனை நான் தோற்கச் செய்தேன் என்று சுற்றி வளைத்து ஏன் சொல்கிறோம்? இல்லாவிட்டால் தோற்க வைத்தேன் என்று சொல்லுகிறோம் இல்லையா? மலையாளத்தில் உள்ளது போல் தோற்பித்தேன் என்று எளிதாகச் சொல்லலாமே? என்ன ஆயிற்று நமக்கு? பகரம் வேண்டாம் என்றால் வகரம் இட்டுச் சொல்லலாமே! தோல்வித்தேன் என்று கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறோம்? செய்தேன்/செய்வித்தேன், படித்தேன்/ படிப்பித்தேன் என்று வரும் போது தோற்றேன்/தோற்பித்தேன் என்பது ஏன் வழக்கில்லாமற் போயிற்று?

எளிதாக இரண்டு மூன்று அசையில் சொல்லக் கூடிய வினைச் சொற்களை எல்லாம் இப்படித் தொலைத்தெறிந்து பெயர்ச் சொல்லோடு துணைவினை சேர்க்கும் பழக்கம் அளவிற்கு மீறி இந்தக் காலத் தமிழுக்கு எப்பொழுது வந்தது? 18, 19ம் நூற்றாண்டுகளிலா? தெரியவில்லை. இது ஒரு செயற்கையான சுற்றி வளைத்த கிரியோல் மொழியை உருவாக்குகிறது அல்லவா? யாராவது ஆராய்ச்சி பண்ணினால் தெரியக் கூடும்.

இந்தச் சிந்தனையில் எழுந்த, நண்பர்கள் செய்யக் கூடிய, ஒரு நல்ல உருப்படியான பணி பற்றிச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். தமிழும் மலையாளமும் நன்கு அறிந்த ஒரு நண்பர் (என் மலையாள அறிவு அவ்வளவு ஆழமானது அல்ல; ஏதோ ஓரளவு ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.) தனித்தோ, அல்லது இன்னொரு தமிழ் தெரிந்த மலையாள நண்பருடன் கூடியோ, தமிழில் உள்ள வினைச்சொற்கள், அதற்கு இணையான மலையாளச் சொற்கள், தமிழில் இல்லாத முறையில் மலையாளத்தில் அதைப் புழங்கும் பாங்கு, அதே புழக்கத்தைத் தமிழில் கொண்டுவர முடியுமானால் எப்படிக் கொண்டுவரலாம், அதற்கு உள்ள முன்னீடு என்று ஒரு பட்டியல் இடலாமே? அகர முதலி செய்பவர்களுக்கும் பயன்படுமே?

இது போன்ற ஒரு ஆக்கத்தை, தமிழுக்குச் செய்யும் நல்ல தொண்டை, தமிழ் உலகம் போன்ற மடற்குழுவில் உள்ள ஆவணக் காப்பில் இடலாம். வெறும் பேச்சு மட்டும் இல்லாமல் நம்முடைய பகுதி நேர உழைப்பும் நாட்படப் பயனாகுமே? யாராவது முன்வருவீர்களா?

மேலே சொன்னது போல் கன்னடத்திலும், தெலுங்கிலும் கூடச் செய்யலாம். தமிழுக்கு மிக நெருங்கியது மலையாளம், அடுத்தது கன்னடம். கொஞ்சம் தள்ளித் தெலுங்கு. இந்த மூன்று மொழிகளில் இருந்து, தமிழ் வளருவதற்காக, நாம் மீட்கவேண்டிய மொழி மரபுகள், புழக்கங்கள் மிகப் பல என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

§¾¡øÀ¢ò¾Åý

¦ºýÈ Å¡Ãò¾¢üÌ Óó¾¢Â ¸¡Ã¢ì ¸¢Æ¨Á (ºÉ¢ì¸¢Æ¨Á)ÂýÚ À¢üÀ¸Ä¢ø ¦À¡ØÐ §À¡¸¡Áø ¦¾¡¨Ä측ðº¢Â¢ø ÅÕõ µ¨¼¸¨Ç Á¡üÈ¢ì ¦¸¡ñÎ þÕó§¾ý. ¨¸Â¢ø àÃì¸ðÎ þÕó¾¡ø µ÷ µ¨¼Â¢ø ¿¢¨Ä측Áø þôÀÊ Á¡üÈ¢ì ¦¸¡ñ§¼ þÕì¸î ¦º¡øÖõ; Å£ðÎ측â ÀÄ ¾¼¨Å ¦º¡øÄ¢ þÕ츢ȡû; þýÛõ §¸ð¸¢È ÀÊ¡ö þø¨Ä;
¦¸ð¼ ÀÆì¸õ ¾¡ý, þÕó¾¡Öõ ÁÉ ¿¢¨Ä «ó¾ §¿Ãò¾¢ø «ôÀÊ þÕó¾Ð, ±¾¢Öõ ¿¢¨Ä ¦¸¡ûÇÅ¢ø¨Ä.

þó¾ Å¢ÅÃõ ¦¸ð¼ «¨ÄÅ¢ø, ¾¢Ë¦ÃýÚ ¬º¢Â¡ ¦¿ð Á¨Ä¡Çò ¦¾¡¨Ä측𺢠«¸ôÀð¼Ð. Á¨Ä¡Çõ µÃÇ× ¦¾Ã¢Ôõ ±ýÀ¾¡ø, º¢Ä §À¡Ð Á¨Ä¡Çò ¾¢¨ÃôÀ¼í¸Ç¢ý ¦¾¡¼ì¸Óõ ÓÊ×õ «È¢Â¡Áø ܼ, À¡÷ìÌõ þ¨¼ôÀð¼ §¿Ãò¾¢ø ±ý¨É ÁÈóÐ ¬úóÐ §À¡ÉÐ ¯ñÎ. «ý¨ÈìÌ ´Õ §Á¡¸ýÄ¡ø ¾¢¨ÃôÀ¼õ. «Øò¾õ ¾¢Õò¾Á¡É ´Ä¢ô§À¡Î §Á¡¸ýÄ¡ø Á¨Ä¡Çõ §ÀÍõ À¡½¢ ±ý¨É ±ô¦À¡ØЧÁ ¸Å÷ó¾Ð ¯ñÎ.

´Õ þ¼ò¾¢ø "»í¸¨Çò §¾¡øÀ¢îºÅ¨É »¡ý §¾¡øÀ¢ì¸Ïõ" ±ýÈ Å¡º¸õ §¸ðÎ ±í§¸¡ ¦¿ïÍû Á½¢ ´Ä¢ì¸ò ¦¾¡¼í¸¢ÂÐ; þôÀÊ ´Õ Å¢¨É ¾Á¢Æ¢ø ²ý þøÄ¡Ð §À¡ÉÐ? ±ô§À¡Ð ¦¾¡¨Äò§¾¡õ? ÁÉõ §Å¦È¡Õ Àì¸õ §Â¡º¢ì¸ò ¦¾¡¼í¸¢ÂÐ. ¿¡õ ¦¾¡¨Äò¾¨¾ Á¨Ä¡ÇÁ¡ÅÐ ¸¡ôÀ¡üÈ¢ ¨Åò¾¢Õ츢ȧ¾ ±ýÚ ¿¢¨È× ¦¸¡ñ§¼ý.

¿¡ý §¾¡ü§Èý; §¾¡ü¸¢§Èý; §¾¡ü§Àý þôÀÊò ¾Á¢Æ¢ø ¯ñÎ. ¬É¡ø À¢ÈÅ¢¨É ±ýÚ ÅÕõ§À¡Ð ¿õ¨Á «È¢Â¡Áø ¦ÀÂ÷î ¦º¡ø§Ä¡Î Ш½ Å¢¨É §À¡ðÎ ²ý ÍüÈ¢ ŨÇ츢§È¡õ? «Å¨É ¿¡ý §¾¡ü¸î ¦ºö§¾ý ±ýÚ ÍüÈ¢ ŨÇòÐ ²ý ¦º¡ø¸¢§È¡õ? þøÄ¡Å¢ð¼¡ø §¾¡ü¸ ¨Åò§¾ý ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ þø¨Ä¡? Á¨Ä¡Çò¾¢ø ¯ûÇÐ §À¡ø §¾¡üÀ¢ò§¾ý ±ýÚ ±Ç¢¾¡¸î ¦º¡øÄÄ¡§Á? ±ýÉ ¬Â¢üÚ ¿ÁìÌ? À¸Ãõ §Åñ¼¡õ ±ýÈ¡ø ŸÃõ þðÎî ¦º¡øÄÄ¡§Á! §¾¡øÅ¢ò§¾ý ±ýÚ Ü¼ ²ý ¦º¡øÄ Á¡ð§¼ý ±ý¸¢§È¡õ? ¦ºö§¾ý/¦ºöÅ¢ò§¾ý, ÀÊò§¾ý/ ÀÊôÀ¢ò§¾ý ±ýÚ ÅÕõ §À¡Ð §¾¡ü§Èý/§¾¡üÀ¢ò§¾ý ±ýÀÐ ²ý ÅÆ츢øÄ¡Áü §À¡Â¢üÚ?

±Ç¢¾¡¸ þÃñÎ ãýÚ «¨ºÂ¢ø ¦º¡øÄì ÜÊ Ţ¨Éî ¦º¡ü¸¨Ç ±øÄ¡õ þôÀÊò ¦¾¡¨Äò¦¾È¢óÐ ¦ÀÂ÷î ¦º¡ø§Ä¡Î Ш½Å¢¨É §º÷ìÌõ ÀÆì¸õ «ÇÅ¢üÌ Á£È¢ þó¾ì ¸¡Äò ¾Á¢ØìÌ ±ô¦À¡ØÐ Åó¾Ð? 18, 19õ áüÈ¡ñθǢġ? ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. þÐ ´Õ ¦ºÂü¨¸Â¡É ÍüÈ¢ ŨÇò¾ ¸¢Ã¢§Â¡ø ¦Á¡Æ¢¨Â ¯ÕÅ¡ì̸¢ÈÐ «øÄÅ¡? ¡áÅÐ ¬Ã¡ö Àñ½¢É¡ø ¦¾Ã¢Âì ÜÎõ.

þó¾î º¢ó¾¨É¢ø ±Øó¾, ¿ñÀ÷¸û ¦ºöÂì ÜÊÂ, ´Õ ¿øÄ ¯ÕôÀÊÂ¡É À½¢ ÀüÈ¢î ¦º¡øÄÄ¡õ ±ýÚ ±ñϸ¢§Èý. ¾Á¢Øõ Á¨Ä¡ÇÓõ ¿ýÌ «È¢ó¾ ´Õ ¿ñÀ÷ (±ý Á¨ÄÂ¡Ç «È¢× «ùÅÇ× ¬ÆÁ¡ÉÐ «øÄ; ²§¾¡ µÃÇ× ´ô§ÀüÈ¢ì ¦¸¡ûÇÄ¡õ ±ýÚ §ÅñÎÁ¡É¡ø ¦º¡øÄÄ¡õ.) ¾É¢ò§¾¡, «øÄÐ þý¦É¡Õ ¾Á¢ú ¦¾Ã¢ó¾ Á¨ÄÂ¡Ç ¿ñÀÕ¼ý Üʧ¡, ¾Á¢Æ¢ø ¯ûÇ Å¢¨É¡ü¸û, «¾üÌ þ¨½Â¡É Á¨Ä¡Çî ¦º¡ü¸û, ¾Á¢Æ¢ø þøÄ¡¾ ӨȢø Á¨Ä¡Çò¾¢ø «¨¾ô ÒÆíÌõ À¡íÌ, «§¾ ÒÆì¸ò¨¾ò ¾Á¢Æ¢ø ¦¸¡ñÎÅà ÓÊÔÁ¡É¡ø ±ôÀÊì ¦¸¡ñÎÅÃÄ¡õ, «¾üÌ ¯ûÇ ÓýɣΠ±ýÚ ´Õ ÀðÊÂø þ¼Ä¡§Á? «¸Ã ӾĢ ¦ºöÀÅ÷¸ÙìÌõ ÀÂýÀΧÁ?

þÐ §À¡ýÈ ´Õ ¬ì¸ò¨¾, ¾Á¢ØìÌî ¦ºöÔõ ¿øÄ ¦¾¡ñ¨¼, ¾Á¢ú ¯Ä¸õ §À¡ýÈ Á¼üÌØÅ¢ø ¯ûÇ ¬Å½ì ¸¡ôÀ¢ø þ¼Ä¡õ. ¦ÅÚõ §ÀîÍ ÁðÎõ þøÄ¡Áø ¿õÓ¨¼Â À̾¢ §¿Ã ¯¨ÆôÒõ ¿¡ðÀ¼ô ÀÂɡ̧Á? ¡áÅÐ ÓýÅÕÅ£÷¸Ç¡?

§Á§Ä ¦º¡ýÉÐ §À¡ø ¸ýɼò¾¢Öõ, ¦¾Öí¸¢Öõ Ü¼î ¦ºöÂÄ¡õ. ¾Á¢ØìÌ Á¢¸ ¦¿Õí¸¢ÂÐ Á¨Ä¡Çõ, «Îò¾Ð ¸ýɼõ. ¦¸¡ïºõ ¾ûÇ¢ò ¦¾ÖíÌ. þó¾ ãýÚ ¦Á¡Æ¢¸Ç¢ø þÕóÐ, ¾Á¢ú
ÅÇÕžü¸¡¸, ¿¡õ Á£ð¸§ÅñÊ ¦Á¡Æ¢ ÁÃÒ¸û, ÒÆì¸í¸û Á¢¸ô ÀÄ ±ý§È §¾¡ýÚ¸¢ÈÐ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

ஆணுறை அணிதல் - 2

ஆணுறை அணிதல் என்ற சொல்லாட்சி ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்ற உரையாட்டைத் தொடங்கி ஒரு விளம்பரத்தை குறிப்பிட்டிருந்தேன். அந்த விளம்பரம் தேவையா என்ற கேள்விக்குள் போகாது, சொற்களின் நெகிழ்ச்சித் தன்மை பற்றிய கேள்வியையே இங்கு எழுப்பியிருந்தேன். விளம்பரங்கள், அவற்றில் உள்ள மொழிபெயர்ப்புக் குழப்பங்கள் பற்றிய செய்திகளைச் சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். அந்தச் செய்திகளை நான் மறுக்கக் கூடியவன் அல்லன்.

இருந்தாலும் நான் சொல்ல வந்தது வேறு ஒன்றைப் பற்றியது. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், புள் என்னும் வேரில் இருந்து போடுதலும், முள் என்ற வேரில் இருந்து மாட்டுதலும், அள் என்ற வேரில் இருந்து அணிதலும் பிறந்திருக்க வேண்டும்.

முதலில் போடுதலைப் பற்றிப் பார்ப்போம். புள்>(பூள்)>பூண்>பூட்டு = பொருத்து; பொருத்துதல், எறிதல், இடுதல், தரித்தல், ஈனுதல், இணைத்தல், தொடுத்தல், செருகுதல், செலுத்துதல், உட்கொள்ளுதல்; பூட்டுதல்>போட்டுதல்>போடுதல்; இன்னொரு விதமாகப் பார்த்தால், புள்குதல்>புஃகுதல்>புகுதல்>புகுத்துதல்>புகட்டுதல்>போட்டுதல்>போடுதல்; மேலே உள்ள இரண்டு முறைகளில் எந்த முறையில் போட்டுதல்>போடுதல் என்ற வினையின் சொற்பிறப்பு எழுந்தது என்று தெளிவாகச் சொல்ல முடிவதில்லை.

அடுத்தது மாட்டுதல் என்ற சொல் பிறந்த வகை. முள்>மூள் மூளுதல் = பொருந்துதல்; மூள்>மூள்+து>மூட்டு>மூட்டுதல் = பொருத்துதல், இணைத்தல், தைத்தல்; முட்டுதல் = எதிர்ப்படுதல், நெருங்குதல், கூடுதல், பொருந்துதல், இடுகுதல்; மூட்டு = உடல், அணி முதலியவற்றின் பொருத்து, "கவசத்தையும் மூட்டறுத்தான்" (கம்பரா.சடாயுவ.113); மூட்டை = பொதி; மூட்டு>*(மோட்டு)>மாட்டு, மாட்டுதல் = இணைத்தல், பொருத்துதல், அளவிக் காட்டுதல், கொளுவிக் கொள்ளுதல், பற்றிக் கொள்ளுதல்

கடைசியாக அணிதல் என்ற சொல்பிறந்த வகை; அள்>அள்+நு>அண்ணு = நெருங்கு; அண்ணுதல்>அண்ணித்தல்>அணிதல்; அண்ணித்தல் = கிட்டுதல், பொருந்துதல், சூடல், சாத்துதல், புனைதல், அழகாதல், அலங்கரித்தல், உடுத்தல், பூணுதல், பொருந்துதல், படைவகுத்தல், சூழ்தல்

கிட்டத்தட்ட மூன்று சொற்கள் இப்படி அருகருகே நெருங்கிய பொருட்பாடுகளைக் கொண்டிருந்தும், ஒன்றை மட்டுமே இப்பொழுது புழங்கி, மற்றவற்றின் வழக்குக் குறைந்துவருவது ஏன் என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். போடுதல், மாட்டுதல், அணிதல் என்ற மூன்று வினைகளில் இப்பொழுதெல்லாம் அணிதல் என்பதேயே மிகவும் பயனாக்குகிறோம். அது ஏன்? மூன்றிற்கும் உள்ள ஒரு பொதுவான கருத்து பொருத்துதலே. ஒன்றை இன்னொன்றோடு இணைப்பது, பொருத்துவது என்றே மற்ற பொருட்பாடுகள் கிளைக்கும். மூன்று சொற்களில் ஒன்று உயர்த்தி, மற்றவை தாழ்த்தி என்ற பொருளா? அல்லது இது பழக்கத் தோயமா? ஏன் இப்பொழுது எழுத்துத் தமிழில் எல்லாவற்றையும் மாட்டிக் கொள்ளாது, போட்டுக் கொள்ளாது, அணிந்து கொள்ளுவதில் பெருமைப் படுகிறோம்? ஆணுறை போட்டுக் கொள்ளுதல் என்பது சரியான புழக்கம் தான் என்றாலும் அணிதல் என்னும் போது ஒரு நளினம் வந்ததாக உணருகிறோமா? ஒருவேளை அணிதல் என்பது விதப்பாக நகை அணிதலுக்குப் பயன்பட்டு, அணிதல் என்ற வினைக்கே செல்வத் தோற்றம் வந்து, பிறகு மற்றவற்றையும் அணிவதாகச் சொல்லுகிறோமோ? மொத்தத்தில் இதுவும் ஒருவகை இடக்கர் அடக்கல் தானோ?

இது போல வாத்தியார் என்ற சொல் கொச்சையாகவும், ஆசிரியர் என்ற சொல் உயர்ச்சியாகவும் பலருக்கும் தோன்றுகிறது இல்லையா? மாந்த வாழ்வில் குமுகாய அழுத்தத்தில் இப்படிச் சுமையேற்றிய சொற்கள் எப்படித் தோன்றுகின்றன? அதைப் பற்றிக் கவனித்திருக்கிறீர்களா? மொழியின் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¬Ï¨È «½¢¾ø - 2

¬Ï¨È «½¢¾ø ±ýÈ ¦º¡øġ𺢠²üÚì ¦¸¡ûÇì Üʾ¡ ±ýÈ ¯¨Ã¡ð¨¼ò ¦¾¡¼í¸¢ ´Õ Å¢ÇõÀÃò¨¾ ÌÈ¢ôÀ¢ðÊÕó§¾ý. «ó¾ Å¢ÇõÀÃõ §¾¨Å¡ ±ýÈ §¸ûÅ¢ìÌû §À¡¸¡Ð, ¦º¡ü¸Ç¢ý ¦¿¸¢úò ¾ý¨Á ÀüȢ §¸ûÅ¢¨Â§Â þíÌ ±ØôÀ¢Â¢Õó§¾ý. Å¢ÇõÀÃí¸û, «ÅüÈ¢ø ¯ûÇ ¦Á¡Æ¢¦ÀÂ÷ôÒì ÌÆôÀí¸û ÀüȢ ¦ºö¾¢¸¨Çî º¢Ä ¿ñÀ÷¸û ¦º¡øĢ¢Õó¾¡÷¸û. «ó¾î ¦ºö¾¢¸¨Ç ¿¡ý ÁÚì¸ì ÜÊÂÅý «øÄý.

þÕó¾¡Öõ ¿¡ý ¦º¡øÄ Åó¾Ð §ÅÚ ´ý¨Èô ÀüÈ¢ÂÐ. ¦¸¡ïºõ ¬úóÐ À¡÷ò¾¡ø, Òû ±ýÛõ §Åâø þÕóÐ §À¡Î¾Öõ, Óû ±ýÈ §Åâø þÕóÐ Á¡ðξÖõ, «û ±ýÈ §Åâø þÕóÐ «½¢¾Öõ À¢Èó¾¢Õì¸ §ÅñÎõ.

ӾĢø §À¡Î¾¨Äô ÀüÈ¢ô À¡÷ô§À¡õ. Òû>(âû)>âñ>âðÎ = ¦À¡ÕòÐ; ¦À¡Õòоø, ±È¢¾ø, þξø, ¾Ã¢ò¾ø, ®Û¾ø, þ¨½ò¾ø, ¦¾¡Îò¾ø, ¦ºÕ̾ø, ¦ºÖòоø, ¯ð¦¸¡ûÙ¾ø; âðξø>§À¡ðξø>§À¡Î¾ø; þý¦É¡Õ Å¢¾Á¡¸ô À¡÷ò¾¡ø, Òû̾ø>ҷ̾ø>Ò̾ø>ÒÌòоø>Ò¸ðξø>§À¡ðξø>§À¡Î¾ø; §Á§Ä ¯ûÇ þÃñΠӨȸǢø ±ó¾ ӨȢø §À¡ðξø>§À¡Î¾ø ±ýÈ Å¢¨É¢ý ¦º¡üÀ¢ÈôÒ ±Øó¾Ð ±ýÚ ¦¾Ç¢Å¡¸î ¦º¡øÄ ÓÊž¢ø¨Ä.

«Îò¾Ð Á¡ðξø ±ýÈ ¦º¡ø À¢Èó¾ Ũ¸. Óû>ãû ãÙ¾ø = ¦À¡Õóоø; ãû>ãû+Ð>ãðÎ>ãðξø = ¦À¡Õòоø, þ¨½ò¾ø, ¨¾ò¾ø; Óðξø = ±¾¢÷ôÀξø, ¦¿Õí̾ø, Üξø, ¦À¡Õóоø, þÎ̾ø; ãðÎ = ¯¼ø, «½¢ ӾĢÂÅüÈ¢ý ¦À¡ÕòÐ, "¸Åºò¨¾Ôõ ãð¼Úò¾¡ý" (¸õÀá.º¼¡ÔÅ.113); ã𨼠= ¦À¡¾¢; ãðÎ>*(§Á¡ðÎ)>Á¡ðÎ, Á¡ðξø = þ¨½ò¾ø, ¦À¡Õòоø, «ÇÅ¢ì ¸¡ðξø, ¦¸¡ÙÅ¢ì ¦¸¡ûÙ¾ø, ÀüÈ¢ì ¦¸¡ûÙ¾ø

¸¨¼º¢Â¡¸ «½¢¾ø ±ýÈ ¦º¡øÀ¢Èó¾ Ũ¸; «û>«û+Ñ>«ñÏ = ¦¿ÕíÌ; «ñϾø>«ñ½¢ò¾ø>«½¢¾ø; «ñ½¢ò¾ø = ¸¢ðξø, ¦À¡Õóоø, ݼø, º¡òоø, Ҩɾø, «Æ¸¡¾ø, «Äí¸Ã¢ò¾ø, ¯Îò¾ø, âϾø, ¦À¡Õóоø, À¨¼ÅÌò¾ø, Ýú¾ø

¸¢ð¼ò¾ð¼ ãýÚ ¦º¡ü¸û þôÀÊ «Õ¸Õ§¸ ¦¿Õí¸¢Â ¦À¡ÕðÀ¡Î¸¨Çì ¦¸¡ñÊÕóÐõ, ´ý¨È ÁðΧÁ þô¦À¡ØÐ ÒÆí¸¢, ÁüÈÅüÈ¢ý ÅÆìÌì ̨ÈóÐÅÕÅÐ ²ý ±ýÀÐ ÀüÈ¢ ¿¡õ §Â¡º¢ì¸ §ÅñÎõ. §À¡Î¾ø, Á¡ðξø, «½¢¾ø ±ýÈ ãýÚ Å¢¨É¸Ç¢ø þô¦À¡Ø¦¾øÄ¡õ «½¢¾ø ±ýÀ§¾§Â Á¢¸×õ ÀÂÉ¡ì̸¢§È¡õ. «Ð ²ý? ãýÈ¢üÌõ ¯ûÇ ´Õ ¦À¡ÐÅ¡É ¸ÕòÐ ¦À¡Õòо§Ä. ´ý¨È þý¦É¡ý§È¡Î þ¨½ôÀÐ, ¦À¡ÕòÐÅÐ ±ý§È ÁüÈ ¦À¡ÕðÀ¡Î¸û ¸¢¨ÇìÌõ. ãýÚ ¦º¡ü¸Ç¢ø ´ýÚ ¯Â÷ò¾¢, ÁüȨŠ¾¡úò¾¢ ±ýÈ ¦À¡ÕÇ¡? «øÄÐ þÐ ÀÆì¸ò §¾¡ÂÁ¡? ²ý þô¦À¡ØÐ ±ØòÐò ¾Á¢Æ¢ø ±øÄ¡Åü¨ÈÔõ Á¡ðÊì ¦¸¡ûÇ¡Ð, §À¡ðÎì ¦¸¡ûÇ¡Ð, «½¢óÐ ¦¸¡ûÙž¢ø ¦ÀÕ¨Áô Àθ¢§È¡õ? ¬Ï¨È §À¡ðÎì ¦¸¡ûÙ¾ø ±ýÀÐ ºÃ¢Â¡É ÒÆì¸õ ¾¡ý ±ýÈ¡Öõ «½¢¾ø ±ýÛõ §À¡Ð ´Õ ¿Ç¢Éõ Å󾾡¸ ¯½Õ¸¢§È¡Á¡? ´Õ§Å¨Ç «½¢¾ø ±ýÀРŢ¾ôÀ¡¸ ¿¨¸ «½¢¾ÖìÌô ÀÂýÀðÎ, «½¢¾ø ±ýÈ Å¢¨É째 ¦ºøÅò §¾¡üÈõ ÅóÐ, À¢ÈÌ ÁüÈÅü¨ÈÔõ «½¢Å¾¡¸î ¦º¡øÖ¸¢§È¡§Á¡? ¦Á¡ò¾ò¾¢ø þÐ×õ ´ÕŨ¸ þ¼ì¸÷ «¼ì¸ø ¾¡§É¡?

þÐ §À¡Ä Å¡ò¾¢Â¡÷ ±ýÈ ¦º¡ø ¦¸¡î¨ºÂ¡¸×õ, ¬º¢Ã¢Â÷ ±ýÈ ¦º¡ø ¯Â÷¡¸×õ ÀÄÕìÌõ §¾¡ýÚ¸¢ÈÐ þø¨Ä¡? Á¡ó¾ Å¡úÅ¢ø ÌÓ¸¡Â «Øò¾ò¾¢ø þôÀÊî ͨÁ§ÂüȢ ¦º¡ü¸û ±ôÀÊò §¾¡ýÚ¸¢ýÈÉ? «¨¾ô ÀüÈ¢ì ¸ÅÉ¢ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¦Á¡Æ¢Â¢ý ¬Æõ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ô ÒâÔõ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Tuesday, October 07, 2003

ஆணுறை அணிதல் - 1

எங்கு பார்த்தாலும் எங்களூரில் இப்பொழுது புள்ளிராசாவைப் பற்றித் தான் பேச்சு. "புள்ளிராசா குடிபோதையில் ஆணுறை அணிய மறந்து போவாரா?" என்ற புதுக் கேள்வி சென்ற ஒரு வாரத்தில் ஒரு சுற்றாக வந்திருக்கிறது. இன்னும் என்னென்ன கேள்விகள் வருமோ என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் இருக்கிறது. "விழிப்புணர்வு கொண்டு வருவதற்காக இது போல விளிம்பிற்கு அருகில் உள்ள விளம்பரங்களைப் பொது இடத்திற் செய்யலாமா? இதில் நல்லது விளையுமா?" என்ற உரையாடலுக்குள் நான் போகவில்லை.

என் கவனிப்பு இந்தச் சொற்றொடரில் தமிழ் புழங்கும் முறையைப் பற்றியது. இங்கே வரும் 'அணிய' என்ற சொல் எப்படி எல்லாம் நெகிழ்ந்து போயிருக்கிறது, பார்த்தீர்களா? மலர் அணிவதில் தொடங்கி, நகை அணிவதாக நீண்டு, பின் ஆடை அணிவதற்கும் மாறி இப்பொழுது எது எதோ அணிவதாக இறங்கிப் போயிருக்கிறது பாருங்கள். மொழி என்பது இப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கிறது. அதனால் தான் மொழியில் நீக்குப் போக்கு இருக்க வேண்டும்; முழு ஏரணம் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள். புதிய பயன்பாட்டிற்கு மிக இயல்பாக வளைந்து கொடுக்க வேண்டும். தமிழ் வளைந்து கொடுக்கிறது என்பதால் தான் எதிர்காலம் நம்பிக்கை கொடுக்கிறது. புதுக் கருத்துக்களைத் தமிழில் சொல்ல முடியும் என்ற உறுதி வலுக்கிறது.

இடக்கர் அடக்கல் என்பது நம் மொழியில் உள்ள பெரும் விந்தைதான். இங்கே மாட்டிக் கொண்டார் என்று சொன்னால் ஏதோ போல் இருக்கிறது. போட்டுக் கொண்டார் என்றாலோ இன்னும் சப்பென்று இருக்கிறது. உடுத்திக் கொண்டார் என்று சொல்ல முடியாது; கடைசியில் அணிந்து கொண்டார் என்றால் ஒரு மரியாதை வந்து விடுகிறது, இல்லையா? இப்படி சில சொற்களின் அடிப்பொருள் உயர்வதும் தாழ்வதும் மொழியின் புழக்கத்தில் நிகழ்வது தான். கர்ப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? - முன்னுள்ளே பொருளே வேறு. இன்றைக்கு ஆண்டாள் போல் எழுத முடியுமோ?

இனி அணிதல் என்ற வினைக்குத் திருப்பியும் வருவோம். இங்கே பூ,மலர் அணிதலும், நகை அணிதலும், ஆணுறை அணிதலும் ஒன்றா? இது என்ன அலங்காரமா? இல்லையே? அப்படி என்றால் அணிதல் என்பதின் இன்றையப் பொருள் என்ன? இந்தப் பொருள் விரிவு பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? நண்பர்களே! ஓர்ந்து பாருங்களேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¬Ï¨È «½¢¾ø - 1

±íÌ À¡÷ò¾¡Öõ ±í¸éâø þô¦À¡ØÐ ÒûǢạ¨Åô ÀüÈ¢ò ¾¡ý §ÀîÍ. "ÒûǢạ ÌʧÀ¡¨¾Â¢ø ¬Ï¨È «½¢Â ÁÈóÐ §À¡Å¡Ã¡?" ±ýÈ ÒÐì §¸ûÅ¢ ¦ºýÈ ´Õ Å¡Ãò¾¢ø ´Õ ÍüÈ¡¸ Åó¾¢Õ츢ÈÐ. þýÛõ ±ý¦ÉýÉ §¸ûÅ¢¸û ÅÕ§Á¡ ±ýÈ ±¾¢÷À¡÷ôÒõ ÀÄâ¼õ þÕ츢ÈÐ. "ŢƢôÒ½÷× ¦¸¡ñÎ ÅÕžü¸¡¸ þÐ §À¡Ä ŢǢõÀ¢üÌ «Õ¸¢ø ¯ûÇ Å¢ÇõÀÃí¸¨Çô ¦À¡Ð þ¼ò¾¢ü ¦ºöÂÄ¡Á¡? þ¾¢ø ¿øÄРިÇÔÁ¡?" ±ýÈ ¯¨Ã¡¼ÖìÌû ¿¡ý §À¡¸Å¢ø¨Ä.

±ý ¸ÅÉ¢ôÒ þó¾î ¦º¡ü¦È¡¼Ã¢ø ¾Á¢ú ÒÆíÌõ ӨȨÂô ÀüÈ¢ÂÐ. þí§¸ ÅÕõ '«½¢Â' ±ýÈ ¦º¡ø ±ôÀÊ ±øÄ¡õ ¦¿¸¢úóÐ §À¡Â¢Õ츢ÈÐ, À¡÷ò¾£÷¸Ç¡? ÁÄ÷ «½¢Å¾¢ø ¦¾¡¼í¸¢, ¿¨¸ «½¢Å¾¡¸ ¿£ñÎ, À¢ý ¬¨¼ «½¢Å¾üÌõ Á¡È¢ þô¦À¡ØÐ ±Ð ±§¾¡ «½¢Å¾¡¸ þÈí¸¢ô §À¡Â¢Õ츢ÈÐ À¡Õí¸û. ¦Á¡Æ¢ ±ýÀÐ þôÀÊ ±øÄ¡ÅüÈ¢üÌõ ŨÇóÐ ¦¸¡Î츢ÈÐ. «¾É¡ø ¾¡ý ¦Á¡Æ¢Â¢ø ¿£ìÌô §À¡ìÌ þÕì¸ §ÅñÎõ; ÓØ ²Ã½õ þÕì¸ì ܼ¡Ð ±ýÚ ¦º¡øÖ¸¢È¡÷¸û. Ò¾¢Â ÀÂýÀ¡ðÊüÌ Á¢¸ þÂøÀ¡¸ ŨÇóÐ ¦¸¡Îì¸ §ÅñÎõ. ¾Á¢ú ŨÇóÐ ¦¸¡Î츢ÈÐ ±ýÀ¾¡ø ¾¡ý ±¾¢÷¸¡Äõ ¿õÀ¢ì¨¸ ¦¸¡Î츢ÈÐ. ÒÐì ¸ÕòÐ츨Çò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÓÊÔõ ±ýÈ ¯Ú¾¢ ÅÖ츢ÈÐ.

þ¼ì¸÷ «¼ì¸ø ±ýÀÐ ¿õ ¦Á¡Æ¢Â¢ø ¯ûÇ ¦ÀÕõ Ţ󨾾¡ý. þí§¸ Á¡ðÊì ¦¸¡ñ¼¡÷ ±ýÚ ¦º¡ýÉ¡ø ²§¾¡ §À¡ø þÕ츢ÈÐ. §À¡ðÎì ¦¸¡ñ¼¡÷ ±ýÈ¡§Ä¡ þýÛõ ºô¦ÀýÚ þÕ츢ÈÐ. ¯Îò¾¢ì ¦¸¡ñ¼¡÷ ±ýÚ ¦º¡øÄ ÓÊ¡Ð; ¸¨¼º¢Â¢ø «½¢óÐ ¦¸¡ñ¼¡÷ ±ýÈ¡ø ´Õ Á⡨¾ ÅóРŢθ¢ÈÐ, þø¨Ä¡? þôÀÊ º¢Ä ¦º¡ü¸Ç¢ý «Êô¦À¡Õû ¯Â÷ÅÐõ ¾¡úÅÐõ ¦Á¡Æ¢Â¢ý ÒÆì¸ò¾¢ø ¿¢¸úÅÐ ¾¡ý. ¸÷ôâÃõ ¿¡Ú§Á¡? ¸ÁÄôâ ¿¡Ú§Á¡? - ÓýÛû§Ç ¦À¡Õ§Ç §ÅÚ. þý¨ÈìÌ ¬ñ¼¡û §À¡ø ±Ø¾ ÓÊÔ§Á¡?

þÉ¢ «½¢¾ø ±ýÈ Å¢¨ÉìÌò ¾¢ÕôÀ¢Ôõ Åէšõ. þí§¸ â,ÁÄ÷ «½¢¾Öõ, ¿¨¸ «½¢¾Öõ, ¬Ï¨È «½¢¾Öõ ´ýÈ¡? þÐ ±ýÉ «Äí¸¡ÃÁ¡? þø¨Ä§Â? «ôÀÊ ±ýÈ¡ø «½¢¾ø ±ýÀ¾¢ý þý¨ÈÂô ¦À¡Õû ±ýÉ? þó¾ô ¦À¡Õû Å¢Ã¢× ÀüÈ¢ ±ñ½¢ô À¡÷ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¿ñÀ÷¸§Ç! µ÷óÐ À¡Õí¸§Çý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Sunday, October 05, 2003

சங்கப் பலகை

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை தான்.

இன்று அலுவத்தில் (office) இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, ஒரு பேருந்தின் பின் பக்கம் தொங்கிக் கொண்டிருந்ததில் "சங்கப் பலகை" என்ற விளம்பரம் பார்த்தேன். இதைப் பற்றி முன்னரே முனைவர் சந்திர போசு தமிழ் உலகத்தில் (tamil ulagam e-mail list) தெரிவித்திருக்கிறார்.

"தமிழில் எழுத, படிக்க, தமிழ்க் கணினி" என்று விளம்பரம் செய்து குயவுப் பலகையோடு (key board) ஒரு பொதி வட்டைச் (compact disc) சேர்த்து ரூ 500 க்கு விற்பதாகச் சொல்லி நிறுவனத்தின் பெயரும், முகவரியும், தொலைபேசி எண்ணும் குறித்திருந்தனர். (compact disc - இதை குறுவட்டு, குறுந்தட்டு என்றெல்லாம் மொழி பெயர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த வட்டின் குறு அளவு முகமையானதல்ல. அது இன்னும் கூடக் குறுகலாம்; யார் கண்டார்கள்? அதற்குள் பொதிந்திருக்கும் அடக்கம், பொதிப்புத் (compactness) தான் மிகப் பெரிது. அவ்வளவு விவரங்களை உள்ளே அடக்கிப் பொதித்திருப்பதால் தான் அது பொதிவட்டு. விட்டத்தால் எந்த அளவாக இருந்தாலும் அது பொதிவட்டுத் தான். )

அங்கும் இங்கும் துள்ளுந்திலும் (scooter), நகரி (மிதி) வண்டியிலும் (motor cycle), சீருந்திலும் (car), பேருந்திலும் (bus) பயணிக்கும் சென்னைக்காரர்களுக்கு, குறிப்பாக பாதைச் சந்திப்புகளில் (road junction) ஒளிச் சைகைக்காகக் (signal) காத்துக் கிடக்கும் நேரத்தில், பேருந்தின் பின்புறம் இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கத் தூண்டுவது ஒரு பெரிய மாறுகூற்று (marketing) உத்தி (tactic) தான். அதற்குப் பலன் உண்டு. இப்படி கணித்தமிழ் பரப்புவதில் அந்த உத்தி பயன்பட்டது எனக்கு வியப்பு.

அந்த நிறுவனத்தார் மென்மேலும் வளரட்டும். இது போன்ற உத்திகளை மற்ற தமிழ்க்கணி (tamil computer) வணிகர்கள் பயன்படுத்துவது தமிழகத்தில் கணியறிவைக் கூட்டுவதற்குப் பயன்படும். செய்வார்களா என்று தெரியாது. ஆண்டோ பீட்டர் போன்றவர்கள் ஓர்ந்து பார்க்க வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் பயனொன்றில்லை. விளம்பரம் இல்லாமல் இன்று எதுவும் இல்லை. வாய்பகரம் (trade-வியாபாரம்) செய்வதும் பகர்ச்சிக்கு (price - விலை பற்றிய இன்னொரு தமிழ்ச்சொல்) விற்பதும் குறைபட்டதல்ல.

புலம்பெயர் தமிழர்களுக்கு எளிதில் கணியின் அணுக்கம் (contact) இருப்பதால், இ-கலப்பை, முரசு அஞ்சல் போன்றவற்றை இலவயமாகக் (இலவசமாய்) கீழிறக்கி அஞ்சல் முறையில் பயன்படுத்தி தமிழில் எழுதுவது எளிதாக இருக்கலாம். TSCII வளரலாம். ஆனால், அதை இலவயமாகச் செய்ய முடியும் என்று சொல்லுவதற்குக் கூட இங்கே தமிழ்நாட்டில் ஆளில்லை. ரூ.25000 கொடுத்து கணி வைத்திருக்கிற தமிழ்நாட்டுத் தமிழருக்கு ரூ 500 ல் தமிழ் எழுத்துக்கள் உள்ள பொத்தான்கள் கொண்ட குயவுப் பலகையும் கொடுத்து இப்படி ஒரு பொதிவட்டையும் கொடுக்கும் போது சற்று விலை கூட என்றாலும் வாங்குவார்கள் என்றே தோன்றுகிறது. இப்படியாகத் தானே TAB தமிழ்நாட்டில் பரவுவது வியப்பில்லை. அதே பொழுது TSCII காரர்கள் இது போன்ற உத்திகளைக் கொண்டுவந்து தமிழ்நாட்டிற்குள் எப்பொழுது விற்பார்கள் என்று தெரியவில்லை. மாறுகூற்று உத்திகள் (marketing tactics) பற்றி அவர்கள் சிந்திக்கவில்லையா என்று தோன்றுகிறது.

கொஞ்சம் போட்டியைக் கொண்டு வாருங்கள், அய்யா! ரூ500, இந்தப் போட்டியில் ரூ.200 ஆகட்டும். நண்பர்களே, ஒருங்குறி விளையாட்டிற்கு இப்பொழுது நான் வரவில்லை. :-). இந்த மடலுக்குப் பின்னூட்டு செய்பவர்கள் தயவு செய்து அதைக் காட்டாதீர்கள். :-) வேறொரு மடலில் அதை விவாதிக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ºí¸ô ÀĨ¸

ÓÂýÈ¡ø ÓÊ¡¾Ð ´ýÚõ þø¨Ä ¾¡ý.

þýÚ «ÖÅò¾¢ø (office) þÕóÐ ¾¢ÕõÀ¢ ÅóÐ ¦¸¡ñÊÕìÌõ §À¡Ð ´Õ §ÀÕó¾¢ý À¢ý Àì¸õ ¦¾¡í¸¢ì ¦¸¡ñÊÕó¾¾¢ø "ºí¸ô ÀĨ¸" ±ýÈ Å¢ÇõÀÃõ À¡÷ò§¾ý. þ¨¾ô ÀüÈ¢ Óýɧà ӨÉÅ÷ ºó¾¢Ã §À¡Í þíÌ ¾Á¢ú ¯Ä¸ò¾¢ø ¦¾Ã¢Å¢ò¾¢Õ츢ȡ÷.

"¾Á¢Æ¢ø ±Ø¾, ÀÊì¸, ¾Á¢úì ¸½¢É¢" ±ýÚ Å¢ÇõÀÃõ ¦ºöÐ ÌÂ×ô ÀĨ¸§Â¡Î (key board) ´Õ ¦À¡¾¢ Åð¨¼î (compact disc) §º÷òÐ å 500 ìÌ Å¢üÀ¾¡¸î ¦º¡øÄ¢ ¿¢ÚÅÉò¾¢ý ¦ÀÂÕõ, Ó¸ÅâÔõ, ¦¾¡¨Ä§Àº¢ ±ñÏõ ÌÈ¢ò¾¢Õó¾É÷. (compact disc - þ¨¾ ÌÚÅðÎ, ÌÚó¾ðÎ ±ý¦ÈøÄ¡õ ¦Á¡Æ¢ ¦ÀÂ÷ôÀ¨¾ ±ýÉ¡ø ²üÚì ¦¸¡ûÇ ÓÊÂÅ¢ø¨Ä. «ó¾ ÅðÊý ÌÚ «Ç× Ó¸¨Á¡ɾøÄ. «Ð þýÛõ ܼì Ìڸġõ; ¡÷ ¸ñ¼¡÷¸û? «¾üÌû ¦À¡¾¢ó¾¢ÕìÌõ «¼ì¸õ, ¦À¡¾¢ôÒò ¾¡ý Á¢¸ô ¦ÀâÐ. compactness. «ùÅÇ× Å¢ÅÃí¸¨Ç ¯û§Ç «¼ì¸¢ô ¦À¡¾¢ò¾¢ÕôÀ¾¡ø ¾¡ý «Ð ¦À¡¾¢ÅðÎ. Å¢ð¼ò¾¡ø ±ó¾ «ÇÅ¡¸ þÕó¾¡Öõ «Ð ¦À¡¾¢ÅðÎò ¾¡ý. )

«íÌõ þíÌõ ÐûÙó¾¢Öõ (scooter), ¿¸Ã¢ (Á¢¾¢)ÅñÊ (motor cycle), º£Õó¾¢Öõ (car), §ÀÕó¾¢Öõ (bus) À½¢ìÌõ ¦ºý¨É측Ã÷¸ÙìÌ, ÌÈ¢ôÀ¡¸ À¡¨¾î ºó¾¢ôҸǢø (road junction) ´Ç¢î ¨º¨¸ì¸¡¸ì (signal) ¸¡òÐì ¸¢¼ìÌõ §¿Ãò¾¢ø §ÀÕó¾¢ý À¢ýÒÈõ þÐ §À¡ýÈ Å¢ÇõÀÃí¸¨Çô À¡÷ì¸ò àñÎÅÐ ´Õ ¦Àâ Á¡ÚÜüÚ (marketing) ¯ò¾¢ (tactic) ¾¡ý. «¾üÌô ÀÄý ¯ñÎ. þôÀÊ ¸½¢ò¾Á¢ú ÀÃôÒž¢ø «ó¾ ¯ò¾¢ ÀÂýÀð¼Ð ±ÉìÌ Å¢ÂôÒ.

«ó¾ ¿¢ÚÅÉò¾¡÷ ¦Áý§ÁÖõ ÅÇÃðÎõ. þÐ §À¡ýÈ ¯ò¾¢¸¨Ç ÁüÈ ¾Á¢ú츽¢ Ž¢¸÷¸û ÀÂýÀÎòÐÅÐ ¾Á¢Æ¸ò¾¢ø ¸½¢ÂÈ¢¨Åì ÜðΞüÌô ÀÂýÀÎõ. ¦ºöÅ¡÷¸Ç¡ ±ýÚ ¦¾Ã¢Â¡Ð. ¬ñ§¼¡ À£ð¼÷ §À¡ýÈÅ÷¸û µ÷óÐ À¡÷ì¸ §ÅñÎõ. Á¨ÈÅ¡¸ ¿ÁìÌû§Ç ÀÆí¸¨¾¸û §ÀÍž¢ø À¦ɡýÈ¢ø¨Ä. Å¢ÇõÀÃõ þøÄ¡Áø þýÚ ±Ð×õ þø¨Ä. Å¡öÀ¸Ãõ (trade-Ţ¡À¡Ãõ) ¦ºöÅÐõ À¸÷ìÌ (price - Å¢¨Ä ÀüȢ þý¦É¡Õ ¾Á¢ú¡ø) Å¢üÀÐõ ̨ÈÀð¼¾øÄ.

ÒÄõ¦ÀÂ÷ ¾Á¢Æ÷¸ÙìÌ ±Ç¢¾¢ø ¸½¢Â¢ý «Ïì¸õ (contact) þÕôÀ¾¡ø, þ-¸Äô¨À, ÓÃÍ «ïºø §À¡ýÈÅü¨È þÄÅÂÁ¡¸ì (þÄźÁ¡¸ì) ¸£Æ¢È츢 «ïºø ӨȢø ÀÂýÀÎò¾¢ ¾Á¢Æ¢ø ±ØÐÅÐ ±Ç¢¾¡¸ þÕì¸Ä¡õ. TSCII ÅÇÃÄ¡õ. ¬É¡ø, «¨¾ þÄÅÂÁ¡¸î ¦ºö ÓÊÔõ ±ýÚ ¦º¡øÖžüÌì ܼ þí§¸ ¾Á¢ú¿¡ðÊø ¬Ç¢ø¨Ä. å.25000 ¦¸¡ÎòÐ ¸½¢ ¨Åò¾¢Õì¸¢È ¾Á¢ú¿¡ðÎò ¾Á¢ÆÕìÌ å 500 ø ¾Á¢ú ±ØòÐì¸û ¯ûÇ ¦À¡ò¾¡ý¸û ¦¸¡ñ¼ ÌÂ×ô ÀĨ¸Ôõ ¦¸¡ÎòÐ þôÀÊ ´Õ ¦À¡¾¢Åð¨¼Ôõ ¦¸¡ÎìÌõ §À¡Ð ºüÚ Å¢¨Ä ܼ ±ýÈ¡Öõ Å¡íÌÅ¡÷¸û ±ý§È §¾¡ýÚ¸¢ÈÐ. þôÀÊ¡¸ò ¾¡§É TAB ¾Á¢ú¿¡ðÊø ÀÃ×ÅРŢÂôÀ¢ø¨Ä. «§¾ ¦À¡ØÐ TSCII ¸¡Ã÷¸û þÐ §À¡ýÈ ¯ò¾¢¸¨Çì ¦¸¡ñÎÅóÐ ¾Á¢ú¿¡ðÊüÌû ±ô¦À¡ØРŢüÀ¡÷¸û ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. Á¡ÚÜüÚ ¯ò¾¢¸û (marketing tactics) ÀüÈ¢ «Å÷¸û º¢ó¾¢ì¸Å¢ø¨Ä¡ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ.

¦¸¡ïºõ §À¡ðʨÂì ¦¸¡ñÎ Å¡Õí¸û, «ö¡! å500, þó¾ô §À¡ðÊ¢ø å.200 ¬¸ðÎõ. ¿ñÀ÷¸§Ç, ´ÕíÌÈ¢ Å¢¨Ç¡ðÊüÌ þô¦À¡ØÐ ¿¡ý ÅÃÅ¢ø¨Ä. :-) þó¾ Á¼ÖìÌô À¢ýëðÎ ¦ºöÀÅ÷¸û ¾Â× ¦ºöÐ «¨¾ì ¸¡ð¼¡¾£÷¸û. :-) §Å¦È¡Õ Á¼Ä¢ø «¨¾ Ţš¾¢ì¸Ä¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Tuesday, September 23, 2003

காலங்கள் - 5

நிலவோடும் பொழுதோடும்

சென்ற காரிக் கிழமையில் புதிய மாமல்லபுரம் சாலை வழியே சென்னையை நோக்கி நானும் என் மனைவியும் வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது திருவான்மியூரில் உள்ள மருந்தீசர் கோயிலுக்குப் போய் நெடுநாட்கள் ஆயிற்று, ஒரு முறை போய் வரலாம் என்று முடிவெடுத்துச் சென்றால் அங்கே சனிப் பிரதோசம் என்று ஒரே கூட்டம். இந்தப் பல்லவர் காலத்துக் கோயிலுக்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் கூட அவ்வளவு கூட்டம் வராது. அன்றைக்கோ கூட்டம் அலை மோதியது. காலம் மாறிப் போயிற்று, போலும்! இப்பொழுதெல்லாம் சிவன் கோயில்களுக்குக் கூட்டம் எக்கச் சக்கமாகவே வருகிறது.

இந்தக் கோளால் கெடுதல், அந்தக் கோளால் கெடுதல் என்று ஒருவித மருட்டை ஊரெல்லாம் தெளித்து அதனால் ஊரெங்கும் மக்களைக் கூட்டி, சோதியர்களும், குருக்கள்மாரும் யாகம், ஓமம், பரிகாரம் என்று சக்கைப் போடு போடுகிறார்கள். விளைவு? வாழ்க்கையிற் சந்திக்கும் சரவல்களை ஏற்க முடியாமற் தடுமாறி, எங்காவது ஓரிடத்தில் பற்றுக்கோடு நாடி, ஆதரவு வேண்டி, நம்பிய சாமியார்களால் அலைக் கழிக்கப் பட்டு, முடிவில் இறைவனே சரண் என்று எல்லாத் தர மக்களும் கோயிலுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். இது சரியான சமய நம்பிக்கைக்கு அறிகுறியா என்பது தான் தெரியவில்லை.

மருந்தீசர் கோயிலுக்குள் கிட்டத்தட்ட எள் போட்டால் விழ முடியாத அளவுக்குக் கூட்டம். கோயிலின் உள்வட்டத்தில் வெள்ளி விடை (இடபம்) வாகனத்தில் இறைவனின் திருமேனி உலா நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலாவின் பின்னால் தேவாரம் பாடிய வண்ணம் சிவநெறித் தொண்டர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுக்கு வந்த சூலை நோயைக் குணப்படுத்திய "மந்திரமாவது நீறு" என்ற சம்பந்தர் தேவாரம் தொலைவில் நின்ற என் காதுகளுக்கு குறைந்த வெள்ளத்தில் விட்டுவிட்டு ஒலித்தது. ஊர்ப்பட்ட பேர் பூசனைப் பாடல்கள் அடங்கிய பொத்தகத்தைக் கையில் வைத்து கொண்டு கூடவே ஓதிக் கொண்டு போனார்கள். உலா நிலை கொள்ளும் வரை இருக்கவொண்ணாத காரணத்தால், அந்தக் கூட்டத்தின் நடுவிலும் இறைவனை வணங்கியபின், மெதுவாக உலா நகரும் பொழுது, நாங்களும் நகர்ந்து நடுவழியில் மேற்கு அரச கோபுரத்தைக் கடந்து வெளியே வந்தோம். கோயிலுக்குப் போய் வந்த அமைதியின் ஊடே, பிரதோசம் பற்றிய சிந்தனையில் வீட்டுக்கு வந்தும் ஆழ்ந்து இருந்தேன்.

நம்முடைய சமயச் சிந்தனைகளில் இந்த வடமொழி தான் எப்படி எல்லாம் தன் வயப் படுத்திக் கொண்டு நீக்கமற நிறைந்துவிட்டது? ஏதொன்றையும் வடமொழியின் துணையால் அன்றி தமிழால் தனித்து அறிய முடியா வண்ணம், எப்படி நாம் இந்த மொழியைத் தொலைத்தோம்? தமிழ் என்பது நம் கோயில்களுள் வெறுமே பொறுத்துக் கொள்ளும் ஓர் ஒட்டு மொழியாய் ஆகிப் போனதே? எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பது போல தமிழில் அருச்சனை செய்யப்படும் என்று ஒப்புக்கு எழுதிப் போட்டு விட்டு, உண்மையில் அதை பெரும்பாலான குருக்கள்மார் செய்ய மறுப்பது தமிழருக்கு நேரடிச் சறுக்கல் தானே? எத்தனை தமிழ்க் குடிமகன்கள் வந்தும் என்ன பயன்?

சிந்தனை மேலும் இப்படி விரவுவதற்கு முன், இந்த பிரதோசத்தின் தமிழ் மூலம் தான் எது, இதை எப்படிக் காணுவது என்று சொல்ல முற்படுகிறேன்.

இந்தத் தொடரில் ஏற்கனவே புவியின் தன்னுருட்டல் (rotation), வலையம் (revolution), கிறுவாட்டம் (gyration), நெற்றாட்டம் (nutation) என்று நான்கு விதமான இயக்கங்கள் பற்றிப் பார்த்தோம். பல ஆண்டு காலப் புரிதல்களுக்குப் பின் புவியின் ஒவ்வொரு தன்னுருட்டலையும் நாள் என்று தமிழர்கள் சொல்லத் தொடங்கினோம். சூரியனைப் புவி சுற்றிவரும் வலையத்தின் காலத்தை ஒரு ஆண்டு என்று பெயரிட்டுக் கொண்டு, இந்தக் காலத்திற்குள் எத்தனை தன்னுருட்டுக்கள் நடக்கின்றன என்றும் கணக்கிட்டால் 365.256364 தன்னுருட்டுக்கள் என்று புலப்படும். இனி ஒவ்வொரு ஆண்டையும் அறவட்டாக 12 மாதங்கள் என்று பிரித்தால், ஒரு மாதம் என்பது 30.43803 நாட்கள் ஆகின்றது. மாத நாட்களை முழு நாட்கள் ஆக்குவதற்காகக் கூட்டியும் குறைத்தும் வைத்துக் கொள்ளுவது உண்டு. வெறும் வலையக் காலமான ஒரு ஆண்டை பன்னிரண்டு பங்காக்கி ஒவ்வொரு பங்கையும் சூரிய மான மாதம் என்று சொல்லுகிறோம்.

ஏற்கனவே புவி சுற்றி வரும் வலையத்தின் பின்புலமாக விண்மீன்கள் இரைந்து கிடப்பதையும் அவற்றை ஓரை அல்லது இராசி என்று அழைப்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுவோம். இந்த ஓரைகளை தமிழ் முறையில் மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று சொல்லுகிறோம். இதையே பாதி வடமொழிப் படுத்தி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம் என்று சொல்லுவார்கள். பாதி வடமொழிப் பேச்சே இன்றைக்கு நம்மில் பலருக்கும் பழக்கமாகிப் போனது, அதனால் இந்த வரிசைகளை இருமுறைப் படியும் கொடுத்திருக்கிறேன். முழுத் தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பார்த்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஓரைகளின் பெயர்களையே சூரிய மான மாதத்திற்கும் பெயர்களாகச் சொல்லுவது கால காலமான மரபு. சூரிய மான மாதத்தை ஞாயிறு என்ற சொல்லால் அழைத்துச் சோழர் காலக் கல்வெட்டுக்களில் குறித்திருக்கிறார்கள். கடக ஞாயிறு, கும்ப ஞாயிறு என்று அவற்றில் சொற்கள் புழங்கும். சித்திரை, வைகாசி......பங்குனி என்ற பெயர் கொடுத்து அழைக்கும் மாதங்கள் சந்திர மானக் கணக்கில் வருபவை. இவற்றைத் திங்கள் மாதங்கள் என்போம். திங்கள் மாதங்களுக்கும் ஞாயிற்று மாதங்களுக்கும் இருக்கும் உறவைப் பின்னொரு அதிகாரத்தில் பார்ப்போம். இரண்டுவிதமான கணக்குகளும் சங்க காலம் தொட்டே நம்மிடம் இருந்து வருகின்றன.

அடுத்து வலையத்தைப் பற்றிய ஒரு செய்தி. உண்மையில் புவிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்றாலும், சூரியனே நம்மைச் சுற்றி வலைத்து வருவது போல நமக்குத் தோற்றுகிறது. அப்படிப் புவியைச் சுற்றுவதாகத் தோற்றம் அளிக்கும் சூரியனின் சுற்றுத்தளம் புவியின் நடுக் கோட்டுத் தளத்தை 23.5 பாகையில் விழுந்து வெட்டுவது போலக் காட்சியளிக்கிறது. இந்த இரு தளங்களின் வெட்டு விழுப்பை "விழு" என்றே தமிழில் சொல்ல முற்பட்டனர். ஒரு வட்டத் தளம் இன்னொரு வட்டத் தளத்தை இரண்டு இடங்களில் அல்லவா வெட்டி விழ வேண்டும்? அதையொட்டி இரண்டு விழுக்கள் நமக்குப் புரிபடுகின்றன.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோருக்குத் தெரிந்த தோற்றத்தின் படி ஒரு விழு மேழ ஓரையைப் பின்புலமாகக் கொண்ட மேழ விழு. மற்றொன்று துலை ஓரையைப் பின்புலமாகக் கொண்ட துலை விழு. அதாவது ஒரு விழு மேழ இராசி இருக்கும் திசையிலும், மற்றொன்று துலை இராசி இருக்கும் திசையிலும் அப்பொழுது காட்சியளித்தன. அந்தப் பழைய பார்வையை இன்று வரை எடுத்துக் கொண்டு, இன்றைக்கு மேழவிழு மேழ ஓரையில் இருந்து கிறுவாட்டம் காரணமாய்த் தள்ளிப் போய் விட்டாலும், அறவட்டாகத் தமிழ்நாட்டு வழக்கின்படி ஆண்டுப்பிறப்பு என்பது மேழ ஓரையில் தொடங்குவதாகக் கொண்டே மாதங்களைக் கணக்கிடுகிறோம். அப்படித்தான் தமிழாண்டுப் பிறப்பு ஏப்ரல் 14 - ல் தொடங்குகிறது. இதைப் பற்றி முன்னே பேசியிருக்கிறோம்.

அடுத்து ஒரு நாளின் சிறுபகுதிகளைப் பற்றிப் பார்ப்போம். சங்க காலத்திற்குச் சில நூற்றாண்டுகள் முன்னால், ஒரு நாள் என்பதை 60 சிறு பகுதிகளாகவே பிரித்தார்கள். இந்த சிறு பகுதியைத்தான் நாழிகை என்று நம் முன்னவர்கள் சொன்னார்கள். ஒரு நாழிகை என்பது 24 நுணுத்தம்; இரண்டரை நாழிகைகள் என்பது ஒரு மணி நேரம். நாள் என்ற சொல் முதலில் 30 நாழிகைப் பொழுதாய் இருள் தொடங்கி இருள் முடிவதையே குறித்தது. பிறகு இருளில் தொடங்கி ஒளிவந்து மீண்டும் இருள் வரும் வரை உள்ள 60 நாழிகைப் பொழுதைக் குறித்தது. 30 நாழிகைப் பொழுதைக் குறிக்கும் இந்தச் சொல் 60 நாழிகைப் பொழுதைக் குறிப்பதாக நீண்ட பின்னர், 60 நாழிகைப் பொழுது எப்பொழுது தொடங்கினால் என்ன என்ற போக்கில் இந்தக் காலத்தில் ஒளிதொடங்கி இருள் வந்து மீண்டும் ஒளிதோன்றும் வரை உள்ள காலத்தை நாள் என்று சொல்லுகிறோம். சிலபொழுது இன்னும் சிறப்பாக நாள் என்ற சொல்லை காலை, பகல், எற்பாடு என்ற முத்தொகுதியைக் குறிக்கவும், அல் என்ற சொல்லை மாலை, யாமம், விடியல் என்ற முத்தொகுதியைக் குறிக்கவும் பயன்படுத்துகிறோம். அல்லை இரவு என்று தான் இந்தக் காலத்தில் குறிக்கிறோம்.

ஒரு நாளுக்கு ஆகும் மொத்த நேரத்தை 6 சிறு பொழுதுகளாகவும் ஒவ்வொரு சிறுபொழுதுக்கும் 10 நாழிகைகளாகவும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னால் தமிழர்கள் பகுத்திருக்கிறார்கள். காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், விடியல் (=வைகறை) என்ற இந்த ஆறு சிறு பொழுதுகளைச் சொல்லுவார்கள். ஒளி அடங்கும் ஏற்பாடு, இருள் தொடங்கும் மாலை ஆகியவை சந்திக்கும் நேரமும், இருள் குறையும் வைகறை, ஒளி தோன்றும் காலை ஆகியவை சந்திக்கும் நேரமும் மாந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்கின்றன. எல் எனும் சூரியன் பட்டுக்கொண்டே வரும் நேரம் எற்பாடு. அந்த எற்பாட்டிற்கு அப்புறம் உள்ள 10 நாழிகைகளில் சூரியன் முற்றிலும் வலுவிழந்து தொய்ந்து போய் விடுகிறான். இருள் தொடங்குகிறது. அந்த நிலையில் இருளும் ஒளியும் முயங்கிக் கிடக்கும் 10 நாழிகைகள் மயங்குகின்ற நேரமாய், மயலுகின்ற நேரமாய், மயலையாய், மாலையாய் ஆகிப் போகிறது. பகலா, இரவா என்று மலங்குகின்ற நேரம் தான் மாலை. மலங்குவது என்பதும் மயங்குதலே. மல்>மர்>மருட்டு என்ற சொல்லும் இந்த வேரில் இருந்து எழுந்ததே.

இரவு மாந்தனுள் பலவிதமான உணர்வுகளைக் கொடுத்திருக்கிறது. அது ஓய்வுக்கும் ஆய்வுக்கும் மாந்தனை ஈடுபடுத்தியது போல், விதப்பாக மருட்டிற்கும் ஆளாக்கி இருக்கிறது. இன்றைக்கு நுட்பவியல் வளர்ந்து எல்லாவித ஏந்துகளும் வந்தபிறகும் கூட நமக்கு இரவு என்பது ஒரு மிரட்டலைக் கொடுக்கும் போது விலங்காண்டி நிலையில் இரவின் தொடக்கம் ஒரு மருட்சியைக் கொடுக்கும் தானே? இரவிற்கு முன் வரை விலங்காண்டி மாந்தன் விழிப்போடு இருந்து தற்காப்பைப் பேண முடியும். இரவு தொடங்கியவுடன் விலங்காண்டி மாந்தன் வலிவிழந்து அல்லவா போய்விடுவான்? பூச்சி பொட்டுக்கள் எந்த நேரமும் அவனைத் தாக்கலாமே? குறிப்பாக நாகங்கள், நச்சு, ஆலகாலம் பற்றிய மிரட்சி இன்றையக் காலம் வரை இந்திய வாழ்க்கையில் உண்டே? இந்த நாகங்களுக்கு எதிர் ஆயுதம் நெருப்பு ஒன்றே என்பது நாளாவட்டில் புலப்படுகிறது.

நாகங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சுவதால், கற்கால மாந்தன் தான் வாழும் குகையின் முன்னே வாயிலில் நெருப்பை எழுப்பி பூச்சி பொட்டுக்கள் நுழையாமல் இருக்க வழி செய்தான்; ஆனால் தூங்கும் போது நெருப்பு அணையாமல் இருக்க வேண்டுமே?. வேண்டிய விறகுகளைப் போட்டு வைத்தாலும் நெருப்பு அணையாமல் காப்பாற்ற வேண்டுமே? இதற்கு இறைவன் தான் துணை செய்ய வேண்டும் என்ற எண்ண மேலீட்டில் வேண்டிக் கொள்ளுகிறான். இலிங்கம்/தெய்வம் என்ற கருத்தும் சேயோன்/சிவன் என்ற முழுமுதல் இறைக்கருத்தும் நெருப்பில் இருந்து பிறந்தவை தான். இருள் தொடங்குமுன் நெருப்பை மூட்டி நெருப்பையே வணங்கித் தன்னைக் காப்பதற்கு பழங்கால மனிதன் இறைவனை வேண்டுவது மிக இயல்பான ஒரு போக்கு. நெருப்புத் தான் தெய்வத்தின் தோற்றம்; சிவனின் உருவம். தன்னை மீறிய ஒரு பேராற்றலே இறைவன் என்பதை உணர்ந்து, தான் துயின்ற பிறகு தன்னைக் காப்பாற்றிப் பின் இறைவன் தூங்குவதாகவும், காலைக்குச் சற்று முந்தி விடியலின் கடைசியில் தான் எழும்போது, இறைவனுக்கும் பள்ளி எழுச்சி செய்யவேண்டும் என்ற புரிதலும் தமிழ மாந்தனுக்கு வந்தது தன்னைப் போல் இறைவனை உருவகித்துப் பார்க்கும் பழக்கத்தால்தான். மாலைக்கு முன்னாலும், காலைக்கு முன்னாலும் இறைவனை வணங்குவது ஒரு வகையில் பன்னெடுங்காலம் விலங்காண்டி காலத்தில் இருந்த மிகப் பழைய பழக்கமாக இருந்திருக்க வேண்டும்.

எற்பாட்டின் முடிவிலும், மாலையின் தொடக்கிலுமாகக் கதிரவன் துய்கிறான், அதாவது சாய்கிறான். சூரியன் சாய்கிறச்சே என்பதை சாய்ரட்சை என்ற வடமொழிப் படுத்திப் பார்ப்பனர் சொல்லுவது உண்டு. துய்யுதல் என்பது சாய்தலையும், துயிலுதலையும், அழிதலையும் கூட உணர்த்தும். துய்யுதல் என்பது தொய்யுதல் என்றும் திரியும். தொய் என்னும் வினைப் பகுதியில் இருந்து தொய்வு என்ற பெயர்ச்சொல்லை ஆக்கிக் கொண்ட நாம் தொய்யம் என்ற இன்னொரு பெயர்ச்சொல்லைப் பேணாது விட்டோ ம். மாறாக, அதைக் கொஞ்சம் போல் திரித்து வடமொழி காப்பாற்றிக் கொண்டது.

நம்முடைய மாலையின் இன்னொரு பெயர் தான் தொய்யம். சூரியன் குறைப்பட்டுப் போன நேரத்தை தொய்யம்>தோயம்>தோஷம் என்றே வடமொழி அழைக்கிறது. முடிவில் குறைப்பட்டதெல்லாம் குற்றமாகி அதையும் தோஷம் என்றே வடமொழியினர் சொல்லுகின்றனர். (தமிழில் இன்னும் தொய் என்ற சொல் குற்றத்தை உணர்த்தி அகரமுதலிகளில் இருப்பதாலேயே தொய்யம் என்ற சொற்பிறப்பை உன்னித்து உணர முடிந்தது.) இந்தத் தொய்யத்திற்கு முந்திய (=புறம் உள்ள) ஐந்து நாழிகைகள் (அதாவது எற்பாட்டின் பின் பாதி) ஒரு நாளில் இருக்கும் புறத்தொய்ய நேரம் (இதுவே வடமொழியில் ப்ரதோஷ காலம்) என்று அழைக்கப் படுகிறது. இந்தப் புறத்தொய்யத்திற்கு இன்னொரு பரிமானம் உண்டு; அதைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.

புவியின் தன்னுருட்டு சிறுபொழுதுகளுக்கும், புவியின் வலையம் பெரும்பொழுதுகளுக்கும் காரணமானது போல, புவியைச் சுற்றிவரும் நிலவின் இயக்கமும் மாந்தனுக்கு நடுத்தர அளவுப் பொழுதுகளை உணர்த்துகிறது. நெடுங்கால உள் நோக்கின் பின், தூரத்தில் இருக்கும் ஒரு விண்மீனொடு நிலவைச் சேர்த்துப் பார்த்து, பின் நிலவு புவியைச் சுற்றி வந்து, 360 பாகைச் சுற்றை முடித்து, மீண்டும் அதே விண்மீனோடு பொருந்திவரும் காலம் கிட்டத்தட்ட 27.3216615 நாட்கள் ஆவதை தமிழன் கூர்ந்து பார்த்திருக்கிறான். இந்தக் காலத்தை நிலவின் உடுப்பருவம் (sidereal period) என்றும் சந்திரமான மாதம் என்றும் இன்று சொல்லுகிறோம். இந்தக் கால அளவின் படி புவியில் இருந்து பார்க்கும் போது நிலவு ஒரு நாளுக்கு 360/27.3216615, அதாவது 13.17635825 பாகையைக் கடக்கிறது.

இதே ஒரு நாளில் சூரியன் எத்தனை பாகை கடக்கிறது என்று பார்ப்போம். புவி சூரியனை வலைப்பதற்கு 365. 256364 நாட்கள் ஆனால், அதற்குள் 360 பாகையைச் சுற்றினால், ஒரு நாளில் சூரியன் 360/365.256364 = 0.98560911 பாகையைக் கடக்கிறது என்று தானே பொருள்? இப்பொழுது எங்கோ தொலைவில் இருக்கும் இன்னொரு விண்மீனையும் நிலவையும் இணைத்துப் பார்ப்பதற்கு மாறாக ஒரு சூரிய மான மாதத்தில் ஏதோ ஒரு நாளில் நிலவையும் சூரியனையும் ஒன்று சேரப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம்; ஒன்று சேர்ந்திருந்ததற்கு அடுத்த நாள் பார்த்தால் சூரியன் 0.98560911 பாகை நகர்ந்திருக்கும். ஆனால் நிலவோ 13.17635825 பாகை கடந்திருக்கும். இந்தச் செலவில் நிலவுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட கோணத் தொலைவு 13.17635825 - 0.98560911= 12.19074914 பாகை ஆகியிருக்கும். இந்தக் கோணத்தொலைவு நீண்டுகொண்டே போய் 360 பாகை அளவுக்கு ஒரு சுற்று ஆக 29.5305888 நாட்கள் பிடிக்கும். இந்தப் பொழுதை, அதாவது புவியோடு நிலவும் சூரியனும் மீண்டும் ஒன்று சேரப் பொருந்திவரும் காலத்தைச் சூரியச் சந்திரமான மாதம் என்று அழைப்பார்கள்.

சூரியச் சந்திரமான மாதம் தான் இந்த நாவலந்தீவின் பைஞ்சாங்கம் (பஞ்சாங்கம்) எல்லாவற்றிற்கும் அடிப்படை. இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாவலந்தீவின் வானியலைப் புரிந்து கொள்ள முடியாது. சூரியன், நிலவு, புவி என்ற மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதில் இரண்டு விதமான ஒழுங்குகள் இருக்கின்றன. சூரியனுக்கும் புவிக்கும் இடையில் நிலவு வந்து விட்டால், நமக்கு அந்த நேரத்தில் நிலவின் மேல் மறுபளிக்கப் பட்ட ஒளி தெரிவதில்லை. நமக்கு நிலவு ஒளியற்றதாகத் தெரிகிறது. மாறாக சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் புவி இருந்தால் நிலவு மிகுந்த ஒளியுள்ளதாகத் தெரிகிறது. நிலவிற்கு இன்னொரு தமிழ்ப் பெயர் உவா என்பது. ஒளியற்ற நிலவை அம(ந்த) உவா (விளக்கு அமந்து போச்சு என்றால் ஒளியில்லாமற் போயிற்று என்றுதானே பொருள்?) என்றும் ஒளி மிகுந்த நிலவை பூரித்த உவா>பூரணை உவா என்றும் சொல்லுகிறோம். அமை உவாவை அம உவை>அமவாய்>அமாவாய்>அமாவாஸ்>அமாவாசை என்றும் பூரணை உவாவை பௌர்ணவி>பௌர்ணமி என்றும் வடமொழியில் திரித்துச் சொல்லுகிறார்கள்.

நிலவு அமை உவாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி பூரணை உவாவில் முழுதாகிப் பின் குறைந்துகொண்டே வந்து மீண்டும் அமை உவாவாகிறது. இந்த மாற்றத்திற்கான நாட்கள் தான் 29.5305888 நாட்கள். சூரியச் சந்திர மான மாதங்களை இப்படி அமை உவாவில் தொடங்கி அமை உவாவில் முடிவதாக கருதுவது அமைந்த கணக்கு. பூரணையில் தொடங்கி பூரணையில் முடிவதாகக் கருதுவது பூரணைக் கணக்கு.

அமைந்த கணக்கு கருநாடகம், ஆந்திரம், மராட்டியம் என்ற மூன்று மாநிலங்களிலும், பூரணைக் கணக்கு பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசத்தானம், அரியானா, காசுமீர் போன்ற மாநிலங்களிலும் பின்பற்றப் படுகின்றன. குசராத்தும் ஒரு வகையில் அமைந்த கணக்கையே ஆனால் சில வேறுபாடுகளுடன் பின் பற்றுகிறது. திரிபுரா, அசாம், வங்காளம், தமிழ்நாடு, மாற்றும் கேரள மாநிலங்கள் பொதுக் காரியங்களுக்குச் சூரிய மாதத்தையும் (30.43803 நாட்கள்) விழாக்கள், சமயக் காரியங்களுக்கு சந்திரமானத்தையும் பின்பற்றுகின்றன. பழைய பஞ்ச திராவிடப் பகுதிகளும், இவர்களின் தாக்கம் இருந்த நாவலந்தீவின் கிழக்குப் பகுதிகளும் அமைந்த கணக்கையே பின் பற்றுவது ஒரு வரலாற்றுச் செய்தியைச் சொல்லுகிறது. அதை இங்கு விரிப்பின் பெருகும் என்பதால் விடுக்கிறேன்.

அமைந்த கணக்கின் படி சந்திரமான மாதங்கள் அமையுவாவில் தொடங்குகின்றன. அமையுவாவில் இருந்து பூரணை வரை உள்ள காலத்தைச் சொக்கொளிப் பக்கம் (சுக்ல பக்ஷம்) என்றும், பூரணையில் இருந்து திரும்பவும் அமையுவா வரும் வரை உள்ள காலம் கருவின பக்கம் (க்ருஷ்ண பக்ஷம்) என்றும் அழைக்கப் படுகிறது. ஆண்டைச் சூரிய மானத்தில் அறவட்டாக 12 ஆகப் பகுத்தது போல நிலவு போகும் வட்டப் பாதையை அறவட்டாக 30 பகுதியாகப் பிரிக்கிறோம். இதில் ஒவ்வொரு பகுதியும் 12 பாகை கொண்டது. இந்தப் பகுதிகளுக்குத் திகழிகள் என்று பெயர். நிலவு ஒவ்வொரு விதமாகத் திகழுகிறது, அல்லது ஒளி தருகிறது. திகழி மறுவித் திகதி என்று ஆகி இன்னும் திரிந்து வடமொழியில் திதி என்று சொல்லப் படுகிறது. சந்திர மானக் கணக்கின் படி நிலவின் சுற்று 30 திகழி/திகதி/திதிகள் அடங்கியது. ஒரு சூரிய மான மாதத்திற்கும் கிட்டத்தட்ட 30 நாட்கள் என்னும் போது பெயர்ப் பிறழ்ச்சியில் திகதி தேதியாகி சூரிய மானத்து நாட்களையும் குறிக்கத் தொடங்கிற்று. ஈழத்தார் இன்னும் திகதி என்ற சொல்லைக் காப்பாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேதி என்று சொல்லிவருகிறோம். ஈழத்தார் சொல் இல்லையேல் இந்தச் சொற்பிறப்பைக் கண்டறிந்திருக்க முடியாது.

நிலவின் சொக்கொளிப் பக்கத்திற்கு 15 திகழிகளும், கருவின பக்கத்திற்கு 15 திகழிகளுமாக வைத்துக் கொண்டு உள்ளோம். ஒரு திகழியை நிலவு கடக்கும் நேரம் 1.015895762 நாட்கள். ஒரு நாளில் எப்படி ஒளிதோன்றும் நேரமும், இருள் தோன்றும் நேரமும் நம் முன்னவருக்கு ஆழ்ந்த குறிப்பானதாகத் தோன்றியதோ, அது போல நிலவு போகும் பாதையில் பூரணையும், அமையுவாவும் ஆழ்ந்த குறிப்புள்ளவையே. இன்னொரு விதமாகச் சொன்னால் எப்படி ஒரு நாளில் இரவு எழும் முன் உள்ள ஐந்து நாழிகைகள் முகமையாகிப் ஒரு நாளின் புறத்தொய்ய நேரம் ஆனதோ அது போலவே, 12 1/2 -இல் இருந்து 15 வது திகழி வரை உள்ள கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள், புறத்தொய்ய நாட்கள் ஆகின. சிறப்பாக 12 1/2 - ஆவது திகழி, புறத்தொய்ய நாள் ஆகி இன்றும் பைஞ்சாங்கத்தில் குறிக்கப் படுகிறது. ஒரு நாளில் மாலைக்கு முன்னாலும், காலைக்கு முன்னாலும் இருளை ஒட்டி எழுந்த மருட்டால் இறைவனை நாடித் தன்னைக் காப்பாற்றத் தமிழமாந்தன் பரவியது போலவே, அமையுவாவிற்கு முன்னும், பூரணைக்கு முன்னும் உள்ள புறத்தொய்ய நாளில் இறைவனை, குறிப்பாக இலிங்க வடிவினனான சிவனைத் தொழும் பழக்கம் தோன்றி இருக்கிறது.

அப்படியானால் திரு நீலகண்டம், பாற்கடல், ஆலகால நஞ்சு என்பதெல்லாம் என்னவாயிற்று என்று கேட்பீர்கள். தொன்மங்கள் என்பவை அடிப்படை உள்ளுறைகளை மூடினாற்போல் வைத்து கொஞ்சம் கதைப் போக்கில் சொல்ல முற்படும் புலனங்கள் என்றே என்னால் விடை சொல்ல முடியும். இந்தத் தொன்மங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய அவற்றை அப்படியே நடந்ததாகக் கொள்ளுவது நம்பிக்கையின் பாற்பட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

புறத்தொய்ய நேரம், புறத்தொய்ய நாள் என்ற கருத்துக்கள் ஆழமானவை; வானவியலோடு தொடர்பு கொண்டவை; தமிழ் மாந்தனின் இறைத்தொழுகைக் காலம் பற்றிய அடிப்படைச் செய்தியைக் குறிப்பவை.

இதுபோல புறத்தோயை மாதமும் இருக்கிறது. அதைத் தான் உருமாற்றி புரட்டாசி மாதம் என்று சொல்லுகிறோம். மாதங்கள் பற்றிக் குறிக்கும் இன்னொரு அதிகாரத்தில் அதை விளக்கமாகப் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.
--------------------------------------------------------------------------------------------------------------------
இருளைக் கண்டு மருளுவது ஒரு வகை; இருளே சிலருக்கு இல்லாது போவது தெரியுமோ? சுவைக்க வேண்டிய பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் ஒரு பாட்டு.

நல்லோர்க்கும் அஃதே

புரைமிகு உரைவாய்ப் புளிங்கள் நாற
முறை அறப் பழகும் முழு மாந்தர்க்கும்
இமையா நோக்கின் எல்லை காக்கும்
அமையாத் தோளின் பூட்கையோர்க்கும்
ஈன்றோர் இசைதர ஊன்றியோர் மணந்து
தலைநாள் புல்லிய கழி இளவோர்க்கும்
கை வளை உகுப்ப விழிநீர் கழல
மெய்கெடத் தணந்த மெல்லியலார்க்கும்
நெடுநிலை முன்றின் நிலாப்பனி நனைப்ப
அடுசுவர் ஒடுங்கும் அளியினோர்க்கும்
இலை ஆகின்றே இரவே
நல்லோர்க்கும் அஃதே நயந்திசின் நாடே!

நூறாசிரியம் - 84
பொழிப்பு:

குற்றம் மிகுந்த சொற்களைப் பேசுகின்ற வாயினின்றும் புளித்த கள்ளின் நாற்றம் வெளிப்பட, யாவரிடத்தும் ஒழுங்கின்றிப் பழகும் முட்டாள்களுக்கும்,
கண் இமையாது நோக்குதலால் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கும் எழுச்சி கொண்ட தோளையுடைய கொள்கை மறவர்கட்கும், பெற்றோர்தம் ஒப்புதலோடும் தம் உள்ளத்து வரித்தாரை மணந்து முதல் நாளில் கூடிய மிக்க இளமையுடையோருக்கும், முன்கை வளையலை நெகிழவிடவும், விழி நீர் வெளிப்படுத்தவும் யாக்கை பொலிவிழப்பவும், தம் வாழ்க்கைத் துணைவரைப் பிரிந்த மெல்லிய இயல்பினரான மகளிர்க்கும்; உயர்ந்த கட்டடங்களின் தாழ்வாரத்தே நிலாக்காலத்துப் பனி நனைத்தலால் பொருந்திய சுவரோரத்தில் குளிரால் ஒடுங்கிக் கிடக்கும் இரங்கத் தக்கார்க்கும், இராப்பொழுது இல்லாது ஒழிகின்றது. நாட்டு நலம் நாடிப் பாடுபடும் சான்றோர்க்கும் அந்நிலையேயாம்.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும், பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

வாழ்க வளமுடன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¸¡Äí¸û - 5

¿¢Ä§Å¡Îõ ¦À¡Ø§¾¡Îõ

¦ºýÈ ¸¡Ã¢ì ¸¢Æ¨Á¢ø Ò¾¢Â Á¡ÁøÄÒÃõ º¡¨Ä ÅÆ¢§Â ¦ºý¨É¨Â §¿¡ì¸¢ ¿¡Ûõ ±ý Á¨ÉÅ¢Ôõ ÅóÐ ¦¸¡ñÊÕ󧾡õ. «ô¦À¡ØÐ ¾¢ÕÅ¡ýÁ¢äâø ¯ûÇ ÁÕ󾣺÷ §¸¡Â¢ÖìÌô §À¡ö ¦¿Î¿¡ð¸û ¬Â¢üÚ, ´Õ Ó¨È §À¡ö ÅÃÄ¡õ ±ýÚ ÓʦÅÎòÐî ¦ºýÈ¡ø «í§¸ ºÉ¢ô À¢Ã§¾¡ºõ ±ýÚ ´§Ã Üð¼õ. þó¾ô ÀøÄÅ÷ ¸¡ÄòÐì §¸¡Â¢ÖìÌ ³ó¾¡Ú ¬ñθÙìÌ ÓýÉ¡ø ܼ «ùÅÇ× Üð¼õ ÅáÐ. «ý¨È째¡ Üð¼õ «¨Ä §Á¡¾¢ÂÐ. ¸¡Äõ Á¡È¢ô §À¡Â¢üÚ, §À¡Öõ! þô¦À¡Ø¦¾øÄ¡õ º¢Åý §¸¡Â¢ø¸ÙìÌì Üð¼õ ±ì¸î ºì¸Á¡¸§Å ÅÕ¸¢ÈÐ.

þó¾ì §¸¡Ç¡ø ¦¸Î¾ø, «ó¾ì §¸¡Ç¡ø ¦¸Î¾ø ±ýÚ ´ÕÅ¢¾ ÁÕ𨼠°¦ÃøÄ¡õ ¦¾Ç¢òÐ «¾É¡ø °¦ÃíÌõ Á츨Çì ÜðÊ, §º¡¾¢Â÷¸Ùõ, ÌÕì¸ûÁ¡Õõ ¡¸õ, µÁõ, À⸡Ãõ ±ýÚ ºì¨¸ô §À¡Î §À¡Î¸¢È¡÷¸û. Å¢¨Ç×? Å¡ú쨸¢ü ºó¾¢ìÌõ ºÃÅø¸¨Ç ²ü¸ ÓÊ¡Áü ¾ÎÁ¡È¢, ±í¸¡ÅÐ µÃ¢¼ò¾¢ø ÀüÚ째¡Î ¿¡Ê, ¬¾Ã× §ÅñÊ, ¿õÀ¢Â º¡Á¢Â¡÷¸Ç¡ø «¨Äì ¸Æ¢ì¸ô ÀðÎ, ÓÊÅ¢ø þ¨ÈÅ§É ºÃñ ±ýÚ ±øÄ¡ò ¾Ã Áì¸Ùõ §¸¡Â¢ÖìÌô §À¡¸ò ¦¾¡¼í¸¢Å¢ð¼¡÷¸û. þÐ ºÃ¢Â¡É ºÁ ¿õÀ¢ì¨¸ìÌ «È¢ÌȢ¡ ±ýÀÐ ¾¡ý ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

ÁÕ󾣺÷ §¸¡Â¢ÖìÌû ¸¢ð¼ò¾ð¼ ±û §À¡ð¼¡ø Å¢Æ ÓÊ¡¾ «Ç×ìÌì Üð¼õ. §¸¡Â¢Ä¢ý ¯ûÅð¼ò¾¢ø ¦ÅûÇ¢ Å¢¨¼ (þ¼Àõ) Å¡¸Éò¾¢ø þ¨ÈÅÉ¢ý ¾¢Õ§ÁÉ¢ ¯Ä¡ ¿¨¼¦ÀüÚì ¦¸¡ñÊÕó¾Ð. ¯Ä¡Å¢ý À¢ýÉ¡ø §¾Å¡Ãõ À¡Ê Åñ½õ º¢Å¦¿È¢ò ¦¾¡ñ¼÷¸û ¦ºýÚ ¦¸¡ñÊÕó¾¡÷¸û. À¡ñÊÂý ¿¢ýȺ£÷ ¦¿ÎÁ¡ÈÛìÌ Åó¾ Ý¨Ä §¿¡¨Âì ̽ôÀÎò¾¢Â "Áó¾¢ÃÁ¡ÅÐ ¿£Ú" ±ýÈ ºõÀó¾÷ §¾Å¡Ãõ ¦¾¡¨ÄÅ¢ø ¿¢ýÈ ±ý ¸¡Ð¸ÙìÌ Ì¨Èó¾ ¦ÅûÇò¾¢ø Å¢ðÎÅ¢ðÎ ´Ä¢ò¾Ð. °÷ôÀð¼ §À÷ ⺨Éô À¡¼ø¸û «¼í¸¢Â ¦À¡ò¾¸ò¨¾ì ¨¸Â¢ø ¨ÅòÐ ¦¸¡ñΠܼ§Å µ¾¢ì ¦¸¡ñÎ §À¡É¡÷¸û. ¯Ä¡ ¿¢¨Ä ¦¸¡ûÙõ Ũà þÕ츦šñ½¡¾ ¸¡Ã½ò¾¡ø, «ó¾ì Üð¼ò¾¢ý ¿ÎÅ¢Öõ þ¨ÈÅ¨É Å½í¸¢ÂÀ¢ý, ¦ÁÐÅ¡¸ ¯Ä¡ ¿¸Õõ ¦À¡ØÐ, ¿¡í¸Ùõ ¿¸÷óÐ ¿ÎÅƢ¢ø §ÁüÌ «Ãº §¸¡ÒÃò¨¾ì ¸¼óÐ ¦ÅÇ¢§Â Å󧾡õ. §¸¡Â¢ÖìÌô §À¡ö Åó¾ «¨Á¾¢Â¢ý °§¼, À¢Ã§¾¡ºõ ÀüȢ º¢ó¾¨É¢ø Å£ðÎìÌ ÅóÐõ ¬úóÐ þÕó§¾ý.

¿õÓ¨¼Â ºÁÂî º¢ó¾¨É¸Ç¢ø þó¾ ż¦Á¡Æ¢ ¾¡ý ±ôÀÊ ±øÄ¡õ ¾ý ÅÂô ÀÎò¾¢ì ¦¸¡ñÎ ¿£ì¸ÁÈ ¿¢¨ÈóÐÅ¢ð¼Ð? ²¦¾¡ý¨ÈÔõ ż¦Á¡Æ¢Â¢ý Ш½Â¡ø «ýÈ¢ ¾Á¢Æ¡ø ¾É¢òÐ «È¢Â ÓÊ¡ Åñ½õ, ±ôÀÊ ¿¡õ þó¾ ¦Á¡Æ¢¨Âò ¦¾¡¨Äò§¾¡õ? ¾Á¢ú ±ýÀÐ ¿õ §¸¡Â¢ø¸Ùû ¦ÅÚ§Á ¦À¡ÚòÐì ¦¸¡ûÙõ µ÷ ´ðÎ ¦Á¡Æ¢Â¡ö ¬¸¢ô §À¡É§¾? ±í¸û Å£ðÎ측ÃÕõ ¸î§ºÃ¢ìÌô §À¡É¡÷ ±ýÀÐ §À¡Ä ¾Á¢Æ¢ø «Õîº¨É ¦ºöÂôÀÎõ ±ýÚ ´ôÒìÌ ±Ø¾¢ô §À¡ðΠŢðÎ, ¯ñ¨Á¢ø «¨¾ ¦ÀÕõÀ¡Ä¡É ÌÕì¸ûÁ¡÷ ¦ºö ÁÚôÀÐ ¾Á¢ÆÕìÌ §¿ÃÊî ºÚì¸ø ¾¡§É? ±ò¾¨É ¾Á¢úì ÌÊÁ¸ý¸û ÅóÐõ ±ýÉ ÀÂý?

º¢ó¾¨É §ÁÖõ þôÀÊ Å¢ÃמüÌ Óý, þó¾ À¢Ã§¾¡ºò¾¢ý ¾Á¢ú ãÄõ ¾¡ý ±Ð, þ¨¾ ±ôÀÊì ¸¡ÏÅÐ ±ýÚ ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

þó¾ò ¦¾¡¼Ã¢ø ²ü¸É§Å ÒŢ¢ý ¾ýÛÕð¼ø (rotation), ŨÄÂõ (revolution), ¸¢ÚÅ¡ð¼õ (gyration), ¦¿üÈ¡ð¼õ (nutation) ±ýÚ ¿¡ýÌ Å¢¾Á¡É þÂì¸í¸û ÀüÈ¢ô À¡÷ò§¾¡õ. ÀÄ ¬ñÎ ¸¡Äô Òâ¾ø¸ÙìÌô À¢ý ÒŢ¢ý ´ù¦Å¡Õ ¾ýÛÕð¼¨ÄÔõ ¿¡û ±ýÚ ¾Á¢Æ÷¸û ¦º¡øÄò ¦¾¡¼í¸¢§É¡õ. Ýâ¨Éô ÒÅ¢ ÍüÈ¢ÅÕõ ŨÄÂò¾¢ý ¸¡Äò¨¾ ´Õ ¬ñÎ ±ýÚ ¦ÀÂâðÎì ¦¸¡ñÎ, þó¾ì ¸¡Äò¾¢üÌû ±ò¾¨É ¾ýÛÕðÎì¸û ¿¼ì¸¢ýÈÉ ±ýÚõ ¸½ì¸¢ð¼¡ø 365.256364 ¾ýÛÕðÎì¸û ±ýÚ ÒÄôÀÎõ. þÉ¢ ´ù¦Å¡Õ ¬ñ¨¼Ôõ «ÈÅ𼡸 12 Á¡¾í¸û ±ýÚ À¢Ã¢ò¾¡ø, ´Õ Á¡¾õ ±ýÀÐ 30.43803 ¿¡ð¸û ¬¸¢ýÈÐ. Á¡¾ ¿¡ð¸¨Ç ÓØ ¿¡ð¸û ¬ìÌžü¸¡¸ì ÜðÊÔõ ̨ÈòÐõ ¨ÅòÐì ¦¸¡ûÙÅÐ ¯ñÎ. ¦ÅÚõ ŨÄÂì ¸¡ÄÁ¡É ´Õ ¬ñ¨¼ ÀýÉ¢ÃñÎ Àí¸¡ì¸¢ ´ù¦Å¡Õ Àí¨¸Ôõ Ýâ Á¡É Á¡¾õ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

²ü¸É§Å ÒÅ¢ ÍüÈ¢ ÅÕõ ŨÄÂò¾¢ý À¢ýÒÄÁ¡¸ Å¢ñÁ£ý¸û þ¨ÃóÐ ¸¢¼ôÀ¨¾Ôõ «Åü¨È µ¨Ã «øÄÐ þẢ ±ýÚ «¨ÆôÀ¨¾Ôõ ¿¢¨É× ÀÎò¾¢ì ¦¸¡û٧šõ. þó¾ µ¨Ã¸¨Ç ¾Á¢ú ӨȢø §ÁÆõ, Å¢¨¼, ¬¼¨Å, ¸¼¸õ, Á¼í¸ø, ¸ýÉ¢, ШÄ, ¿Ç¢, º¢¨Ä, ÍÈÅõ, ÌõÀõ, Á£Éõ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þ¨¾§Â À¡¾¢ ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ §Á„õ, â„Àõ, Á¢ÐÉõ, ¸¼¸õ, º¢õÁõ, ¸ýÉ¢, ÐÄ¡õ, Å¢Õ¸õ, ¾ÛŠ, Á¸Ãõ, ÌõÀõ, Á£Éõ ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û. À¡¾¢ ż¦Á¡Æ¢ô §À þý¨ÈìÌ ¿õÁ¢ø ÀÄÕìÌõ ÀÆì¸Á¡¸¢ô §À¡ÉÐ, «¾É¡ø þó¾ Å⨺¸¨Ç þÕÓ¨Èô ÀÊÔõ ¦¸¡Îò¾¢Õ츢§Èý. ÓØò ¾Á¢úî ¦º¡ü¸¨Çì ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ ÓÂýÚ À¡÷òÐ ¿¨¼Ó¨ÈìÌì ¦¸¡ñÎ Åà §ÅñÎõ.

µ¨Ã¸Ç¢ý ¦ÀÂ÷¸¨Ç§Â Ýâ Á¡É Á¡¾ò¾¢üÌõ ¦ÀÂ÷¸Ç¡¸î ¦º¡øÖÅÐ ¸¡Ä ¸¡ÄÁ¡É ÁÃÒ. Ýâ Á¡É Á¡¾ò¨¾ »¡Â¢Ú ±ýÈ ¦º¡øÄ¡ø «¨ÆòÐî §º¡Æ÷ ¸¡Äì ¸ø¦ÅðÎì¸Ç¢ø ÌÈ¢ò¾¢Õ츢ȡ÷¸û. ¸¼¸ »¡Â¢Ú, ÌõÀ »¡Â¢Ú ±ýÚ «ÅüÈ¢ø ¦º¡ü¸û ÒÆíÌõ. º¢ò¾¢¨Ã, ¨Å¸¡º¢......ÀíÌÉ¢ ±ýÈ ¦ÀÂ÷ ¦¸¡ÎòÐ «¨ÆìÌõ Á¡¾í¸û ºó¾¢Ã Á¡Éì ¸½ì¸¢ø ÅÕÀ¨Å. þÅü¨Èò ¾¢í¸û Á¡¾í¸û ±ý§À¡õ. ¾¢í¸û Á¡¾í¸ÙìÌõ »¡Â¢üÚ Á¡¾í¸ÙìÌõ þÕìÌõ ¯È¨Åô À¢ý¦É¡Õ «¾¢¸¡Ãò¾¢ø À¡÷ô§À¡õ. þÃñÎÅ¢¾Á¡É ¸½ì̸Ùõ ºí¸ ¸¡Äõ ¦¾¡ð§¼ ¿õÁ¢¼õ þÕóÐ ÅÕ¸¢ýÈÉ.

«ÎòРŨÄÂò¨¾ô ÀüȢ ´Õ ¦ºö¾¢. ¯ñ¨Á¢ø ÒÅ¢¾¡ý Ýâ¨Éî ÍüÈ¢ ÅÕ¸¢ÈÐ ±ýÈ¡Öõ, Ý̢夃 ¿õ¨Áî ÍüÈ¢ ŨÄòÐ ÅÕÅÐ §À¡Ä ¿ÁìÌò §¾¡üÚ¸¢ÈÐ. «ôÀÊô ÒÅ¢¨Âî ÍüÚž¡¸ò §¾¡üÈõ «Ç¢ìÌõ ÝâÂÉ¢ý ÍüÚò¾Çõ ÒŢ¢ý ¿Îì §¸¡ðÎò ¾Çò¨¾ 23.5 À¡¨¸Â¢ø Å¢ØóÐ ¦ÅðÎÅÐ §À¡Äì ¸¡ðº¢ÂǢ츢ÈÐ. þó¾ þÕ ¾Çí¸Ç¢ý ¦ÅðΠŢØô¨À "Å¢Ø" ±ý§È ¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÓüÀð¼É÷. ´Õ Åð¼ò ¾Çõ þý¦É¡Õ Åð¼ò ¾Çò¨¾ þÃñÎ þ¼í¸Ç¢ø «øÄÅ¡ ¦ÅðÊ Å¢Æ §ÅñÎõ? «¨¾¦Â¡ðÊ þÃñΠŢØì¸û ¿ÁìÌô ÒâÀθ¢ýÈÉ.

þÃñ¼¡Â¢ÃòÐ ³áÚ ¬ñθÙìÌ ÓýÉ¡ø ¿õ Óý§É¡ÕìÌò ¦¾Ã¢ó¾ §¾¡üÈò¾¢ý ÀÊ ´Õ Å¢Ø §ÁÆ µ¨Ã¨Âô À¢ýÒÄÁ¡¸ì ¦¸¡ñ¼ §ÁÆ Å¢Ø. Áü¦È¡ýÚ Ð¨Ä µ¨Ã¨Âô À¢ýÒÄÁ¡¸ì ¦¸¡ñ¼ Ð¨Ä Å¢Ø. «¾¡ÅÐ ´Õ Å¢Ø §ÁÆ þẢ þÕìÌõ ¾¢¨ºÂ¢Öõ, Áü¦È¡ýÚ Ð¨Ä þẢ þÕìÌõ ¾¢¨ºÂ¢Öõ «ô¦À¡ØÐ ¸¡ðº¢ÂÇ¢ò¾É. «ó¾ô À¨Æ À¡÷¨Å¨Â þýÚ Å¨Ã ±ÎòÐì ¦¸¡ñÎ, þý¨ÈìÌ §ÁÆÅ¢Ø §ÁÆ µ¨Ã¢ø þÕóÐ ¸¢ÚÅ¡ð¼õ ¸¡Ã½Á¡öò ¾ûÇ¢ô §À¡ö Å¢ð¼¡Öõ, «ÈÅ𼡸ò ¾Á¢ú¿¡ðÎ ÅÆ츢ýÀÊ ¬ñÎôÀ¢ÈôÒ ±ýÀÐ §ÁÆ µ¨Ã¢ø ¦¾¡¼íÌž¡¸ì ¦¸¡ñ§¼ Á¡¾í¸¨Çì ¸½ì¸¢Î¸¢§È¡õ. «ôÀÊò¾¡ý ¾Á¢Æ¡ñÎô À¢ÈôÒ ²ôÃø 14 - ø ¦¾¡¼í̸¢ÈÐ. þ¨¾ô ÀüÈ¢ Óý§É §Àº¢Â¢Õ츢§È¡õ.

«ÎòÐ ´Õ ¿¡Ç¢ý º¢ÚÀ̾¢¸¨Çô ÀüÈ¢ô À¡÷ô§À¡õ. ºí¸ ¸¡Äò¾¢üÌî º¢Ä áüÈ¡ñθû ÓýÉ¡ø, ´Õ ¿¡û ±ýÀ¨¾ 60 º¢Ú À̾¢¸Ç¡¸§Å À¢Ã¢ò¾¡÷¸û. þó¾ º¢Ú À̾¢¨Âò¾¡ý ¿¡Æ¢¨¸ ±ýÚ ¿õ ÓýÉÅ÷¸û ¦º¡ýÉ¡÷¸û. ´Õ ¿¡Æ¢¨¸ ±ýÀÐ 24 ÑÏò¾õ; þÃñ¼¨Ã ¿¡Æ¢¨¸¸û ±ýÀÐ ´Õ Á½¢ §¿Ãõ. ¿¡û ±ýÈ ¦º¡ø ӾĢø 30 ¿¡Æ¢¨¸ô ¦À¡Ø¾¡ö þÕû ¦¾¡¼í¸¢ þÕû ÓÊŨ¾§Â ÌÈ¢ò¾Ð. À¢ÈÌ þÕÇ¢ø ¦¾¡¼í¸¢ ´Ç¢ÅóÐ Á£ñÎõ þÕû ÅÕõ Ũà ¯ûÇ 60 ¿¡Æ¢¨¸ô ¦À¡Ø¨¾ì ÌÈ¢ò¾Ð. 30 ¿¡Æ¢¨¸ô ¦À¡Ø¨¾ì ÌÈ¢ìÌõ þó¾î ¦º¡ø 60 ¿¡Æ¢¨¸ô ¦À¡Ø¨¾ì ÌÈ¢ôÀ¾¡¸ ¿£ñ¼ À¢ýÉ÷, 60 ¿¡Æ¢¨¸ô ¦À¡ØÐ ±ô¦À¡ØÐ ¦¾¡¼í¸¢É¡ø ±ýÉ ±ýÈ §À¡ì¸¢ø þó¾ì ¸¡Äò¾¢ø ´Ç¢¦¾¡¼í¸¢ þÕû ÅóÐ Á£ñÎõ ´Ç¢§¾¡ýÚõ Ũà ¯ûÇ ¸¡Äò¨¾ ¿¡û ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. º¢Ä¦À¡ØÐ þýÛõ º¢ÈôÀ¡¸ ¿¡û ±ýÈ ¦º¡ø¨Ä ¸¡¨Ä, À¸ø, ±üÀ¡Î ±ýÈ Óò¦¾¡Ì¾¢¨Âì ÌÈ¢ì¸×õ, «ø ±ýÈ ¦º¡ø¨Ä Á¡¨Ä, ¡Áõ, Å¢ÊÂø ±ýÈ Óò¦¾¡Ì¾¢¨Âì ÌÈ¢ì¸×õ ÀÂýÀÎòи¢§È¡õ. «ø¨Ä þÃ× ±ýÚ ¾¡ý þó¾ì ¸¡Äò¾¢ø ÌȢ츢§È¡õ.

´Õ ¿¡ÙìÌ ¬Ìõ ¦Á¡ò¾ §¿Ãò¨¾ 6 º¢Ú ¦À¡Øиǡ¸×õ ´ù¦Å¡Õ º¢Ú¦À¡ØÐìÌõ 10 ¿¡Æ¢¨¸¸Ç¡¸×õ ¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ¸¡Äò¾¢üÌ ÓýÉ¡ø ¾Á¢Æ÷¸û ÀÌò¾¢Õ츢ȡ÷¸û. ¸¡¨Ä, À¸ø, ±üÀ¡Î, Á¡¨Ä, ¡Áõ, Å¢ÊÂø (=¨Å¸¨È) ±ýÈ þó¾ ¬Ú º¢Ú ¦À¡Øи¨Çî ¦º¡øÖÅ¡÷¸û. ´Ç¢ «¼íÌõ ²üÀ¡Î, þÕû ¦¾¡¼íÌõ Á¡¨Ä ¬¸¢Â¨Å ºó¾¢ìÌõ §¿ÃÓõ, þÕû ̨ÈÔõ ¨Å¸¨È, ´Ç¢ §¾¡ýÚõ ¸¡¨Ä ¬¸¢Â¨Å ºó¾¢ìÌõ §¿ÃÓõ Á¡ó¾ Å¡ú쨸¢ø ²§¾¡ ´Õ Ũ¸Â¢ø ¿õ¨Á ®÷츢ýÈÉ. ±ø ±Ûõ ÝâÂý ÀðÎ즸¡ñ§¼ ÅÕõ §¿Ãõ ±üÀ¡Î. «ó¾ ±üÀ¡ðÊüÌ «ôÒÈõ ¯ûÇ 10 ¿¡Æ¢¨¸¸Ç¢ø ÝâÂý ÓüÈ¢Öõ ÅÖÅ¢ÆóÐ ¦¾¡öóÐ §À¡ö Ţθ¢È¡ý. þÕû ¦¾¡¼í̸¢ÈÐ. «ó¾ ¿¢¨Ä¢ø þÕÙõ ´Ç¢Ôõ ÓÂí¸¢ì ¸¢¼ìÌõ 10 ¿¡Æ¢¨¸¸û ÁÂí̸¢ýÈ §¿ÃÁ¡ö, ÁÂÖ¸¢ýÈ §¿ÃÁ¡ö, Á¨Ä¡ö, Á¡¨Ä¡ö ¬¸¢ô §À¡¸¢ÈÐ. À¸Ä¡, þÃÅ¡ ±ýÚ ÁÄí̸¢ýÈ §¿Ãõ ¾¡ý Á¡¨Ä. ÁÄíÌÅÐ ±ýÀÐõ ÁÂí̾§Ä. Áø>Á÷>ÁÕðÎ ±ýÈ ¦º¡øÖõ þó¾ §Åâø þÕóÐ ±Ø󾧾.

þÃ× Á¡ó¾Ûû ÀÄÅ¢¾Á¡É ¯½÷׸¨Çì ¦¸¡Îò¾¢Õ츢ÈÐ. «Ð µö×ìÌõ ¬ö×ìÌõ Á¡ó¾¨É ®ÎÀÎò¾¢ÂÐ §À¡ø, Å¢¾ôÀ¡¸ ÁÕðÊüÌõ ¬Ç¡ì¸¢ þÕ츢ÈÐ. þý¨ÈìÌ ÑðÀÅ¢Âø ÅÇ÷óÐ ±øÄ¡Å¢¾ ²óиÙõ Åó¾À¢ÈÌõ ܼ ¿ÁìÌ þÃ× ±ýÀÐ ´Õ Á¢Ãð¼¨Äì ¦¸¡ÎìÌõ §À¡Ð Å¢Äí¸¡ñÊ ¿¢¨Ä¢ø þÃÅ¢ý ¦¾¡¼ì¸õ ´Õ ÁÕ𺢨Âì ¦¸¡ÎìÌõ ¾¡§É? þÃÅ¢üÌ Óý Ũà ŢÄí¸¡ñÊ Á¡ó¾ý ŢƢô§À¡Î þÕóÐ ¾ü¸¡ô¨Àô §À½ ÓÊÔõ. þÃ× ¦¾¡¼í¸¢Â×¼ý Å¢Äí¸¡ñÊ Á¡ó¾ý ÅĢŢÆóÐ «øÄÅ¡ §À¡öÅ¢ÎÅ¡ý? â ¦À¡ðÎì¸û ±ó¾ §¿ÃÓõ «Å¨Éò ¾¡ì¸Ä¡§Á? ÌÈ¢ôÀ¡¸ ¿¡¸í¸û, ¿îÍ, ¬Ä¸¡Äõ ÀüȢ Á¢Ã𺢠þý¨ÈÂì ¸¡Äõ Ũà þó¾¢Â Å¡ú쨸¢ø ¯ñ§¼? þó¾ ¿¡¸í¸ÙìÌ ±¾¢÷ ¬Ô¾õ ¦¿ÕôÒ ´ý§È ±ýÀÐ ¿¡Ç¡ÅðÊø ÒÄôÀθ¢ÈÐ.

¿¡¸í¸û ¦¿Õô¨Àì ¸ñÎ «ïÍž¡ø, ¸ü¸¡Ä Á¡ó¾ý ¾¡ý Å¡Øõ ̨¸Â¢ý Óý§É š¢Ģø ¦¿Õô¨À ±ØôÀ¢ â ¦À¡ðÎì¸û ѨÆ¡Áø þÕì¸ ÅÆ¢ ¦ºö¾¡ý; ¬É¡ø àíÌõ §À¡Ð ¦¿ÕôÒ «¨½Â¡Áø þÕì¸ §ÅñΧÁ?. §ÅñÊ ŢÈ̸¨Çô §À¡ðÎ ¨Åò¾¡Öõ ¦¿ÕôÒ «¨½Â¡Áø ¸¡ôÀ¡üÈ §ÅñΧÁ? þ¾üÌ þ¨ÈÅý ¾¡ý Ш½ ¦ºö §ÅñÎõ ±ýÈ ±ñ½ §ÁÄ£ðÊø §ÅñÊì ¦¸¡ûÙ¸¢È¡ý. þÄ¢í¸õ/¦¾öÅõ ±ýÈ ¸ÕòÐõ §º§Â¡ý/º¢Åý ±ýÈ ÓØÓ¾ø þ¨Èì¸ÕòÐõ ¦¿ÕôÀ¢ø þÕóÐ À¢Èó¾¨Å ¾¡ý. þÕû ¦¾¡¼íÌÓý ¦¿Õô¨À ãðÊ ¦¿Õô¨À§Â Å½í¸¢ò ¾ý¨Éì ¸¡ôÀ¾üÌ ÀÆí¸¡Ä ÁÉ¢¾ý þ¨ÈÅ¨É §ÅñÎÅÐ Á¢¸ þÂøÀ¡É ´Õ §À¡ìÌ. ¦¿ÕôÒò ¾¡ý ¦¾öÅò¾¢ý §¾¡üÈõ; º¢ÅÉ¢ý ¯ÕÅõ. ¾ý¨É Á£È¢Â ´Õ §Àáü餀 þ¨ÈÅý ±ýÀ¨¾ ¯½÷óÐ, ¾¡ý ТýÈ À¢ÈÌ ¾ý¨Éì ¸¡ôÀ¡üÈ¢ô À¢ý þ¨ÈÅý àíÌž¡¸×õ, ¸¡¨ÄìÌî ºüÚ Óó¾¢ Å¢ÊÂÄ¢ý ¸¨¼º¢Â¢ø ¾¡ý ±Øõ§À¡Ð, þ¨ÈÅÛìÌõ ÀûÇ¢ ±Ø ¦ºö§ÅñÎõ ±ýÈ Òâ¾Öõ ¾Á¢Æ Á¡ó¾ÛìÌ Åó¾Ð ¾ý¨Éô §À¡ø þ¨ÈÅ¨É ¯ÕŸ¢òÐô À¡÷ìÌõ ÀÆì¸ò¾¡ø¾¡ý. Á¡¨ÄìÌ ÓýÉ¡Öõ, ¸¡¨ÄìÌ ÓýÉ¡Öõ þ¨ÈÅ¨É Å½íÌÅÐ ´Õ Ũ¸Â¢ø Àý¦ÉÎí¸¡Äõ Å¢Äí¸¡ñÊ ¸¡Äò¾¢ø þÕó¾ Á¢¸ô À¨Æ ÀÆì¸Á¡¸ þÕó¾¢Õì¸ §ÅñÎõ.

±üÀ¡ðÊý ÓÊÅ¢Öõ, Á¡¨Ä¢ý ¦¾¡¼ì¸¢ÖÁ¡¸ì ¸¾¢ÃÅý Ðö¸¢È¡ý, «¾¡ÅÐ º¡ö¸¢È¡ý. ÝâÂý º¡ö¸¢È ±ýÀ¨¾ º¡öÃ𨺠±ýÈ Å¼¦Á¡Æ¢ô ÀÎò¾¢ô À¡÷ôÀÉ÷ ¦º¡øÖÅÐ ¯ñÎ. ÐöÔ¾ø ±ýÀÐ º¡ö¾¨ÄÔõ, Т־¨ÄÔõ, «Æ¢¾¨ÄÔõ ܼ ¯½÷òÐõ. ÐöÔ¾ø ±ýÀÐ ¦¾¡öÔ¾ø ±ýÚõ ¾¢Ã¢Ôõ. ¦¾¡ö ±ýÛõ Å¢¨Éô À̾¢Â¢ø þÕóÐ ¦¾¡ö× ±ýÈ ¦ÀÂ÷¡ø¨Ä ¬ì¸¢ì ¦¸¡ñ¼ ¿¡õ ¦¾¡öÂõ ±ýÈ þý¦É¡Õ ¦ÀÂ÷¡ø¨Äô §À½¡Ð Ţ𧼡õ. Á¡È¡¸, «¨¾ì ¦¸¡ïºõ §À¡ø ¾¢Ã¢òРż¦Á¡Æ¢ ¸¡ôÀ¡üÈ¢ì ¦¸¡ñ¼Ð.

¿õÓ¨¼Â Á¡¨Ä¢ý þý¦É¡Õ ¦ÀÂ÷ ¾¡ý ¦¾¡öÂõ. ÝâÂý ̨ÈôÀðÎô §À¡É §¿Ãò¨¾ ¦¾¡öÂõ>§¾¡Âõ>§¾¡„õ ±ý§È ż¦Á¡Æ¢ «¨Æ츢ÈÐ. ÓÊÅ¢ø ̨ÈôÀ𼦾øÄ¡õ ÌüÈÁ¡¸¢ «¨¾Ôõ §¾¡„õ ±ý§È ż¦Á¡Æ¢Â¢É÷ ¦º¡øÖ¸¢ýÈÉ÷. (¾Á¢Æ¢ø þýÛõ ¦¾¡ö ±ýÈ ¦º¡ø ÌüÈò¨¾ ¯½÷ò¾¢ «¸ÃӾĢ¸Ç¢ø þÕôÀ¾¡§Ä§Â ¦¾¡öÂõ ±ýÈ ¦º¡üÀ¢Èô¨À ¯ýÉ¢òÐ ¯½Ã ÓÊó¾Ð.) þó¾ò ¦¾¡öÂò¾¢üÌ Óó¾¢Â (=ÒÈõ ¯ûÇ) ³óÐ ¿¡Æ¢¨¸¸û («¾¡ÅÐ ±üÀ¡ðÊý À¢ý À¡¾¢) ´Õ ¿¡Ç¢ø þÕìÌõ ÒÈò¦¾¡ö §¿Ãõ (þЧŠż¦Á¡Æ¢Â¢ø ô羡„ ¸¡Äõ) ±ýÚ «¨Æì¸ô Àθ¢ÈÐ. þó¾ô ÒÈò¦¾¡öÂò¾¢üÌ þý¦É¡Õ ÀâÁ¡Éõ ¯ñÎ; «¨¾ô ÀüÈ¢ì ¦¸¡ïºõ ¬ÆÁ¡¸ô À¡÷ô§À¡õ.

ÒŢ¢ý ¾ýÛÕðÎ º¢Ú¦À¡ØиÙìÌõ, ÒŢ¢ý ŨÄÂõ ¦ÀÕõ¦À¡ØиÙìÌõ ¸¡Ã½Á¡ÉÐ §À¡Ä, ÒÅ¢¨Âî ÍüÈ¢ÅÕõ ¿¢ÄÅ¢ý þÂì¸Óõ Á¡ó¾ÛìÌ ¿Îò¾Ã «Ç×ô ¦À¡Øи¨Ç ¯½÷òи¢ÈÐ. ¦¿Îí¸¡Ä ¯û §¿¡ì¸¢ý À¢ý, àÃò¾¢ø þÕìÌõ ´Õ Å¢ñÁ£¦É¡Î ¿¢Ä¨Åî §º÷òÐô À¡÷òÐ, À¢ý ¿¢Ä× ÒÅ¢¨Âî ÍüÈ¢ ÅóÐ, 360 À¡¨¸î Íü¨È ÓÊòÐ, Á£ñÎõ «§¾ Å¢ñÁ£§É¡Î ¦À¡Õó¾¢ÅÕõ ¸¡Äõ ¸¢ð¼ò¾ð¼ 27.3216615 ¿¡ð¸û ¬Å¨¾ ¾Á¢Æý Ü÷óÐ À¡÷ò¾¢Õ츢ȡý. þó¾ì ¸¡Äò¨¾ ¿¢ÄÅ¢ý ¯ÎôÀÕÅõ (sidereal period) ±ýÚõ ºó¾¢ÃÁ¡É Á¡¾õ ±ýÚõ þýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þó¾ì ¸¡Ä «ÇÅ¢ý ÀÊ ÒŢ¢ø þÕóÐ À¡÷ìÌõ §À¡Ð ¿¢Ä× ´Õ ¿¡ÙìÌ 360/27.3216615, «¾¡ÅÐ 13.17635825 À¡¨¸¨Âì ¸¼ì¸¢ÈÐ.

þ§¾ ´Õ ¿¡Ç¢ø ÝâÂý ±ò¾¨É À¡¨¸ ¸¼ì¸¢ÈÐ ±ýÚ À¡÷ô§À¡õ. ÒÅ¢ ÝÃ¢Â¨É Å¨ÄôÀ¾üÌ 365. 256364 ¿¡ð¸û ¬É¡ø, «¾üÌû 360 À¡¨¸¨Âî ÍüȢɡø, ´Õ ¿¡Ç¢ø ÝâÂý 360/365.256364 = 0.98560911 À¡¨¸¨Âì ¸¼ì¸¢ÈÐ ±ýÚ ¾¡§É ¦À¡Õû? þô¦À¡ØÐ ±í§¸¡ ¦¾¡¨ÄÅ¢ø þÕìÌõ þý¦É¡Õ Å¢ñÁ£¨ÉÔõ ¿¢Ä¨ÅÔõ þ¨½òÐô À¡÷ôÀ¾üÌ Á¡È¡¸ ´Õ Ýâ Á¡É Á¡¾ò¾¢ø ²§¾¡ ´Õ ¿¡Ç¢ø ¿¢Ä¨ÅÔõ Ýâ¨ÉÔõ ´ýÚ §ºÃô À¡÷츢§È¡õ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡û٧šõ; ´ýÚ §º÷ó¾¢Õó¾¾üÌ «Îò¾ ¿¡û À¡÷ò¾¡ø ÝâÂý 0.98560911 À¡¨¸ ¿¸÷ó¾¢ÕìÌõ. ¬É¡ø ¿¢Ä§Å¡ 13.17635825 À¡¨¸ ¸¼ó¾¢ÕìÌõ. þó¾î ¦ºÄÅ¢ø ¿¢Ä×ìÌõ ÝâÂÛìÌõ þ¨¼ôÀð¼ §¸¡½ò ¦¾¡¨Ä× 13.17635825 - 0.98560911= 12.19074914 À¡¨¸ ¬¸¢Â¢ÕìÌõ. þó¾ì §¸¡½ò¦¾¡¨Ä× ¿£ñΦ¸¡ñ§¼ §À¡ö 360 À¡¨¸ «Ç×ìÌ ´Õ ÍüÚ ¬¸ 29.5305888 ¿¡ð¸û À¢ÊìÌõ. þó¾ô ¦À¡Ø¨¾, «¾¡ÅÐ ÒÅ¢§Â¡Î ¿¢Ä×õ ÝâÂÛõ Á£ñÎõ ´ýÚ §ºÃô ¦À¡Õó¾¢ÅÕõ ¸¡Äò¨¾î ÝâÂî ºó¾¢ÃÁ¡É Á¡¾õ ±ýÚ «¨ÆôÀ¡÷¸û.

ÝâÂî ºó¾¢ÃÁ¡É Á¡¾õ ¾¡ý þó¾ ¿¡ÅÄó¾£Å¢ý ¨Àﺡí¸õ (Àﺡí¸õ) ±øÄ¡ÅüÈ¢üÌõ «ÊôÀ¨¼. þ¨¾ô ÒâóÐ ¦¸¡ûÇÅ¢ø¨Ä ±ýÈ¡ø ¿¡ÅÄó¾£Å¢ý šɢ¨Äô ÒâóÐ ¦¸¡ûÇ ÓÊ¡Ð. ÝâÂý, ¿¢Ä×, ÒÅ¢ ±ýÈ ãýÚõ ´§Ã §¿÷ §¸¡ðÊø ÅÕž¢ø þÃñΠŢ¾Á¡É ´Øí̸û þÕ츢ýÈÉ. ÝâÂÛìÌõ ÒÅ¢ìÌõ þ¨¼Â¢ø ¿¢Ä× ÅóРŢð¼¡ø, ¿ÁìÌ «ó¾ §¿Ãò¾¢ø ¿¢ÄÅ¢ý §Áø ÁÚÀÇ¢ì¸ô Àð¼ ´Ç¢ ¦¾Ã¢Å¾¢ø¨Ä. ¿ÁìÌ ¿¢Ä× ´Ç¢ÂüȾ¡¸ò ¦¾Ã¢¸¢ÈÐ. Á¡È¡¸ ÝâÂÛìÌõ ¿¢Ä×ìÌõ þ¨¼Â¢ø ÒÅ¢ þÕó¾¡ø ¿¢Ä× Á¢Ìó¾ ´Ç¢ÔûǾ¡¸ò ¦¾Ã¢¸¢ÈÐ. ¿¢ÄÅ¢üÌ þý¦É¡Õ ¾Á¢úô ¦ÀÂ÷ ¯Å¡ ±ýÀÐ. ´Ç¢ÂüÈ ¿¢Ä¨Å «(¨)Á(ó¾) ¯Å¡ (Å¢ÇìÌ «ÁóÐ §À¡îÍ ±ýÈ¡ø ´Ç¢Â¢øÄ¡Áü §À¡Â¢üÚ ±ýÚ¾¡§É ¦À¡Õû?) ±ýÚõ ´Ç¢ Á¢Ìó¾ ¿¢Ä¨Å ââò¾ ¯Å¡>âè½ ¯Å¡ ±ýÚõ ¦º¡øÖ¸¢§È¡õ. «(¨)Á ¯Å¡¨Å «Á ¯¨Å>«ÁÅ¡ö>«Á¡Å¡ö>«Á¡Å¡Š>«Á¡Å¡¨º ±ýÚõ âè½ ¯Å¡¨Å ¦Àª÷½Å¢>¦Àª÷½Á¢ ±ýÚõ ż¦Á¡Æ¢Â¢ø ¾¢Ã¢òÐî ¦º¡øÖ¸¢È¡÷¸û.

¿¢Ä× «¨Á ¯Å¡Å¢ø þÕóÐ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ô ¦À⾡¸¢ âè½ ¯Å¡Å¢ø Óؾ¡¸¢ô À¢ý ̨ÈóЦ¸¡ñ§¼ ÅóÐ Á£ñÎõ «¨Á ¯Å¡Å¡¸¢ÈÐ. þó¾ Á¡üÈò¾¢ü¸¡É ¿¡ð¸û ¾¡ý 29.5305888 ¿¡ð¸û. ÝâÂî ºó¾¢Ã Á¡É Á¡¾í¸¨Ç þôÀÊ «¨Á ¯Å¡Å¢ø ¦¾¡¼í¸¢ «¨Á ¯Å¡Å¢ø ÓÊž¡¸ ¸ÕÐÅÐ «¨Áó¾ ¸½ìÌ. âè½Â¢ø ¦¾¡¼í¸¢ âè½Â¢ø ÓÊž¡¸ì ¸ÕÐÅÐ âè½ì ¸½ìÌ.

«¨Áó¾ ¸½ìÌ ¸Õ¿¡¼¸õ, ¬ó¾¢Ãõ, ÁáðÊÂõ ±ýÈ ãýÚ Á¡¿¢Äí¸Ç¢Öõ, âè½ì ¸½ìÌ À£¸¡÷, ¯ò¾Ãô À¢Ã§¾ºõ, Áò¾¢Âô À¢Ã§¾ºõ, þáºò¾¡Éõ, «Ã¢Â¡É¡, ¸¡ÍÁ£÷ §À¡ýÈ Á¡¿¢Äí¸Ç¢Öõ À¢ýÀüÈô Àθ¢ýÈÉ. ̺áòÐõ ´Õ Ũ¸Â¢ø «¨Áó¾ ¸½ì¨¸§Â ¬É¡ø º¢Ä §ÅÚÀ¡Î¸Ù¼ý À¢ý ÀüÚ¸¢ÈÐ. ¾¢Ã¢Òá, «º¡õ, Åí¸¡Çõ, ¾Á¢ú¿¡Î, Á¡üÚõ §¸ÃÇ Á¡¿¢Äí¸û ¦À¡Ðì ¸¡Ã¢Âí¸ÙìÌî Ýâ Á¡¾ò¨¾Ôõ (30.43803 ¿¡ð¸û) Ţơì¸û, ºÁÂì ¸¡Ã¢Âí¸ÙìÌ ºó¾¢ÃÁ¡Éò¨¾Ôõ À¢ýÀüÚ¸¢ýÈÉ. À¨Æ Àïº ¾¢Ã¡Å¢¼ô À̾¢¸Ùõ, þÅ÷¸Ç¢ý ¾¡ì¸õ þÕó¾ ¿¡ÅÄó¾£Å¢ý ¸¢ÆìÌô À̾¢¸Ùõ «¨Áó¾ ¸½ì¨¸§Â À¢ý ÀüÚÅÐ ´Õ ÅÃÄ¡üÚî ¦ºö¾¢¨Âî ¦º¡øÖ¸¢ÈÐ. «¨¾ þíÌ Å¢Ã¢ôÀ¢ý ¦ÀÕÌõ ±ýÀ¾¡ø Å¢Î츢§Èý.

«¨Áó¾ ¸½ì¸¢ý ÀÊ ºó¾¢ÃÁ¡É Á¡¾í¸û «¨ÁÔÅ¡Å¢ø ¦¾¡¼í̸¢ýÈÉ. «¨ÁÔÅ¡Å¢ø þÕóÐ âè½ Ũà ¯ûÇ ¸¡Äò¨¾î ¦º¡ì¦¸¡Ç¢ô Àì¸õ (ÍìÄ À‡õ) ±ýÚõ, âè½Â¢ø þÕóÐ ¾¢ÕõÀ×õ «¨ÁÔÅ¡ ÅÕõ Ũà ¯ûÇ ¸¡Äõ ¸ÕÅ¢É Àì¸õ (ìÕ‰½ À‡õ) ±ýÚõ «¨Æì¸ô Àθ¢ÈÐ. ¬ñ¨¼î Ýâ Á¡Éò¾¢ø «ÈÅ𼡸 12 ¬¸ô ÀÌò¾Ð §À¡Ä ¿¢Ä× §À¡Ìõ Åð¼ô À¡¨¾¨Â «ÈÅ𼡸 30 À̾¢Â¡¸ô À¢Ã¢ì¸¢§È¡õ. þ¾¢ø ´ù¦Å¡Õ À̾¢Ôõ 12 À¡¨¸ ¦¸¡ñ¼Ð. þó¾ô À̾¢¸ÙìÌò ¾¢¸Æ¢¸û ±ýÚ ¦ÀÂ÷. ¿¢Ä× ´ù¦Å¡Õ Å¢¾Á¡¸ò ¾¢¸Ø¸¢ÈÐ, «øÄÐ ´Ç¢ ¾Õ¸¢ÈÐ. ¾¢¸Æ¢ ÁÚÅ¢ò ¾¢¸¾¢ ±ýÚ ¬¸¢ þýÛõ ¾¢Ã¢óРż¦Á¡Æ¢Â¢ø ¾¢¾¢ ±ýÚ ¦º¡øÄô Àθ¢ÈÐ. ºó¾¢Ã Á¡Éì ¸½ì¸¢ý ÀÊ ¿¢ÄÅ¢ý ÍüÚ 30 ¾¢¸Æ¢/¾¢¸¾¢/¾¢¾¢¸û «¼í¸¢ÂÐ. ´Õ Ýâ Á¡É Á¡¾ò¾¢üÌõ ¸¢ð¼ò¾ð¼ 30 ¿¡ð¸û ±ýÛõ §À¡Ð ¦ÀÂ÷ô À¢Èú¢ø ¾¢¸¾¢ §¾¾¢Â¡¸¢ Ýâ Á¡ÉòÐ ¿¡ð¸¨ÇÔõ ÌÈ¢ì¸ò ¦¾¡¼í¸¢üÚ. ®Æò¾¡÷ þýÛõ ¾¢¸¾¢ ±ýÈ ¦º¡ø¨Äì ¸¡ôÀ¡üÈ¢ ÅÕ¸¢È¡÷¸û. ¾Á¢ú¿¡ðÊø §¾¾¢ ±ýÚ ¦º¡øÄ¢ÅÕ¸¢§È¡õ. ®Æò¾¡÷ ¦º¡ø þø¨Ä§Âø þó¾î ¦º¡üÀ¢Èô¨Àì ¸ñ¼È¢ó¾¢Õì¸ ÓÊ¡Ð.

¿¢ÄÅ¢ý ¦º¡ì¦¸¡Ç¢ô Àì¸ò¾¢üÌ 15 ¾¢¸Æ¢¸Ùõ, ¸ÕÅ¢É Àì¸ò¾¢üÌ 15 ¾¢¸Æ¢¸ÙÁ¡¸ ¨ÅòÐì ¦¸¡ñÎ ¯û§Ç¡õ. ´Õ ¾¢¸Æ¢¨Â ¿¢Ä× ¸¼ìÌõ §¿Ãõ 1.015895762 ¿¡ð¸û. ´Õ ¿¡Ç¢ø ±ôÀÊ ´Ç¢§¾¡ýÚõ §¿ÃÓõ, þÕû §¾¡ýÚõ §¿ÃÓõ ¿õ ÓýÉÅÕìÌ ¬úó¾ ÌÈ¢ôÀ¡É¾¡¸ò §¾¡ýȢ§¾¡, «Ð §À¡Ä ¿¢Ä× §À¡Ìõ À¡¨¾Â¢ø âè½Ôõ, «¨ÁÔÅ¡×õ ¬úó¾ ÌÈ¢ôÒûǨŧÂ. þý¦É¡Õ Å¢¾Á¡¸î ¦º¡ýÉ¡ø ±ôÀÊ ´Õ ¿¡Ç¢ø þÃ× ±Øõ Óý ¯ûÇ ³óÐ ¿¡Æ¢¨¸¸û Ó¸¨Á¡¸¢ô ´Õ ¿¡Ç¢ý ÒÈò ¦¾¡ö §¿Ãõ ¬É§¾¡ «Ð §À¡Ä§Å, 12 1/2 -þø þÕóÐ 15 ÅÐ ¾¢¸Æ¢ Ũà ¯ûÇ ¸¢ð¼ò¾ð¼ þÃñ¼¨Ã ¿¡ð¸û, ÒÈò¦¾¡ö ¿¡ð¸û ¬¸¢É. º¢ÈôÀ¡¸ 12 1/2 - ¬ÅÐ ¾¢¸Æ¢, ÒÈò¦¾¡ö ¿¡û ¬¸¢ þýÚõ ¨Àﺡí¸ò¾¢ø ÌÈ¢ì¸ô Àθ¢ÈÐ. ´Õ ¿¡Ç¢ø Á¡¨ÄìÌ ÓýÉ¡Öõ, ¸¡¨ÄìÌ ÓýÉ¡Öõ þÕ¨Ç ´ðÊ ±Øó¾ ÁÕð¼¡ø þ¨ÈÅ¨É ¿¡Êò ¾ý¨Éì ¸¡ôÀ¡üÈò ¾Á¢ÆÁ¡ó¾ý ÀÃÅ¢ÂÐ §À¡Ä§Å, «¨ÁÔÅ¡Å¢üÌ ÓýÛõ, âè½ìÌ ÓýÛõ ¯ûÇ ÒÈò¦¾¡ö ¿¡Ç¢ø þ¨ÈŨÉ, ÌÈ¢ôÀ¡¸ þÄ¢í¸ ÅÊÅ¢ÉÉ¡É º¢Å¨Éò ¦¾¡Øõ ÀÆì¸õ §¾¡ýÈ¢þÕ츢ÈÐ.

«ôÀÊ¡ɡø ¾¢Õ ¿£Ä¸ñ¼õ, À¡ü¸¼ø, ¬Ä¸¡Ä ¿ïÍ ±ýÀ¦¾øÄ¡õ ±ýÉÅ¡ÔüÚ ±ýÚ §¸ðÀ£÷¸û. ¦¾¡ýÁí¸û ±ýÀ¨Å «ÊôÀ¨¼ ¯û٨ȸ¨Ç ãÊÉ¡ü§À¡ø ¨ÅòÐ ¦¸¡ïºõ ¸¨¾ô §À¡ì¸¢ø ¦º¡øÄ ÓüÀÎõ ÒÄÉí¸û ±ý§È ±ýÉ¡ø Å¢¨¼ ¦º¡øÄ ÓÊÔõ. þó¾ò ¦¾¡ýÁí¸Ç¢ý ¯ð¦À¡Õ¨Çô ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñΧÁ ´Æ¢Â «Åü¨È «ôÀʧ ¿¼ó¾¾¡¸ì ¦¸¡ûÙÅÐ ¿õÀ¢ì¨¸Â¢ý À¡üÀð¼Ð ±ý§È ¦º¡øÄ §ÅñÊ¢Õ츢ÈÐ.

ÒÈò¦¾¡ö §¿Ãõ, ÒÈò¦¾¡ö ¿¡û ±ýÈ ¸ÕòÐì¸û ¬ÆÁ¡É¨Å; Å¡ÉާġΠ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼¨Å; ¾Á¢ú Á¡ó¾É¢ý þ¨Èò¦¾¡Ø¨¸ì ¸¡Äõ ÀüȢ «ÊôÀ¨¼î ¦ºö¾¢¨Âì ÌÈ¢ôÀ¨Å.

þЧÀ¡Ä ÒÈò§¾¡¨Â Á¡¾Óõ þÕ츢ÈÐ. «¨¾ò ¾¡ý ¯ÕÁ¡üÈ¢ ÒÃ𼡺¢ Á¡¾õ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. Á¡¾í¸û ÀüÈ¢ì ÌÈ¢ìÌõ þý¦É¡Õ «¾¢¸¡Ãò¾¢ø «¨¾ Å¢Çì¸Á¡¸ô À¡÷ì¸Ä¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.
--------------------------------------------------------------------------------------------------------------------
þÕ¨Çì ¸ñÎ ÁÕÙÅÐ ´Õ Ũ¸; þÕ§Ç º¢ÄÕìÌ þøÄ¡Ð §À¡ÅÐ ¦¾Ã¢Ô§Á¡? ͨÅì¸ §ÅñÊ À¡ÅÄ÷ ²Ú ¦ÀÕﺢò¾¢Ãɡâý ´Õ À¡ðÎ.

¿ø§Ä¡÷ìÌõ «·§¾

Ò¨ÃÁ¢Ì ¯¨ÃÅ¡öô ÒÇ¢í¸û ¿¡È
Ó¨È «Èô ÀÆÌõ ÓØ Á¡ó¾÷ìÌõ
þ¨Á¡ §¿¡ì¸¢ý ±ø¨Ä ¸¡ìÌõ
«¨Á¡ò §¾¡Ç¢ý â𨸧¡÷ìÌõ
®ý§È¡÷ þ¨º¾Ã °ýÈ¢§Â¡÷ Á½óÐ
¾¨Ä¿¡û ÒøĢ ¸Æ¢ þǧš÷ìÌõ
¨¸ Å¨Ç ¯ÌôÀ ŢƢ¿£÷ ¸ÆÄ
¦Áö¦¸¼ò ¾½ó¾ ¦ÁøÄ¢ÂÄ¡÷ìÌõ
¦¿Î¿¢¨Ä ÓýÈ¢ý ¿¢Ä¡ôÀÉ¢ ¿¨ÉôÀ
«ÎÍÅ÷ ´ÎíÌõ «Ç¢Â¢§É¡÷ìÌõ
þ¨Ä ¬¸¢ý§È þçÅ
¿ø§Ä¡÷ìÌõ «·§¾ ¿Â󾢺¢ý ¿¡§¼!

áÈ¡º¢Ã¢Âõ - 84
¦À¡Æ¢ôÒ:

ÌüÈõ Á¢Ìó¾ ¦º¡ü¸¨Çô §À͸¢ýÈ Å¡Â¢É¢ýÚõ ÒÇ¢ò¾ ¸ûÇ¢ý ¿¡üÈõ ¦ÅÇ¢ôÀ¼, ¡Åâ¼òÐõ ´Øí¸¢ýÈ¢ô ÀÆÌõ Óð¼¡û¸ÙìÌõ,
¸ñ þ¨Á¡Р§¿¡ì̾ġø ¿¡ðÊý ±ø¨Ä¨Âì ¸¡òÐ ¿¢üÌõ ±Ø ¦¸¡ñ¼ §¾¡¨ÇÔ¨¼Â ¦¸¡û¨¸ ÁÈÅ÷¸ðÌõ, ¦Àü§È¡÷¾õ ´ôÒ¾§Ä¡Îõ ¾õ ¯ûÇòÐ Åâò¾¡¨Ã Á½óÐ Ó¾ø ¿¡Ç¢ø ÜÊ Á¢ì¸ þǨÁÔ¨¼§Â¡ÕìÌõ, Óý¨¸ ŨÇ嬀 ¦¿¸¢ÆÅ¢¼×õ, ŢƢ ¿£÷ ¦ÅÇ¢ôÀÎò¾×õ ¡쨸 ¦À¡Ä¢Å¢ÆôÀ×õ, ¾õ Å¡ú쨸ò Ш½Å¨Ãô À¢Ã¢ó¾ ¦ÁøĢ þÂøÀ¢ÉÃ¡É Á¸Ç¢÷ìÌõ; ¯Â÷ó¾ ¸ð¼¼í¸Ç¢ý ¾¡úÅ¡Ãò§¾ ¿¢Ä¡ì¸¡ÄòÐô ÀÉ¢ ¿¨Éò¾Ä¡ø ¦À¡Õó¾¢Â ÍŧáÃò¾¢ø ÌǢáø ´Îí¸¢ì ¸¢¼ìÌõ þÃí¸ò ¾ì¸¡÷ìÌõ, þáô¦À¡ØÐ þøÄ¡Ð ´Æ¢¸¢ýÈÐ. ¿¡ðÎ ¿Äõ ¿¡Êô À¡ÎÀÎõ º¡ý§È¡÷ìÌõ «ó¿¢¨Ä§Â¡õ.

þôÀ¡¼ø ¦À¡ÐÅ¢Âø ±ýÛõ ÒÈò¾¢¨½Ôõ, ¦À¡Õñ¦Á¡Æ¢ì ¸¡ïº¢ ±ýÛõ ШÈÔÁ¡õ.

Å¡ú¸ ÅÇÓ¼ý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Friday, September 19, 2003

இன்னுமொரு தன்னேர்ச்சி

ஆலமரம் போலே அடிமரமா நின்னவுக,
காலை மலரையிலே காலனையா தேடுவாக?
தொண்டு கிழவீட்டில் தோய்ந்த பழுதெல்லாம்,
கண்டு சரிபண்ண கையாள் கிடைக்கலியா?

அப்படியென் னவசரமோ? அஞ்சு மணியாலே
கப்பும் இருட்டுக்குள் கற்காரை நீர்தெளிக்க!
கற்காரை பாவிக் கடியதளம் போட்டபினர்
நிற்க உரமூட்ட நீரைத் தெளிப்பதுதான்?

ஆனாலும் ஏனைய்யா அந்தப் படபடப்பு?
வீணாய் விழுந்து மின்கசியும் கம்பிபட,
தட்டுத் தடுமாறி பின்தலையில் தான்வீழ,
பட்டென்று நெஞ்சில் படுவிழுதோ மின்னூட்ட,

என்ன கொடுமையிது? இத்தனையும் மன்னவர்க்கா?
சின்ன உயிருக்கும் சேமத்தைப் பார்த்தவரே!
ஆலையிலே சேமமிலா ஆட்சியதின் ஊழறிவீர்!
சாலையிலே தன்னேர்ச்சி சாடுவதும் தானறிவீர்!

வீட்டிற்குள் சேமநிலை பேணுவதை ஏன்துறந்தீர்?
வாட்டிக் கதறவிட்டு வாழ்நாள் தொலைப்பதற்கோ?
சங்கிலியாய் தன்னேர்ச்சி; சத்தவடம் போவதற்குள்,
எங்களுக்கும் தேராம எல்லாம் நிகழ்ந்தாச்சு;

பாழும் பணியைத்தான் பார்க்கப் பொறுத்திருந்தால்,
ஏழு மணியாலே எத்தனைபேர் வந்திருப்பர்?
சித்தாளு; கொத்தர்; சிறப்பான மேலாளு;
எத்தனைபேர் நீர்தெளிக்க இன்னும் பலசெய்ய;

பேரரசு போயிரண்டு ஆட்டை பிறந்ததனால்,
வேர்விட்ட ஆலந்தான் விழுதோட போயிருச்சோ?
வெட்டவெளி வானம் விரிநிழலைத் தந்திடுமோ?
பொட்டல் மணலும் புழுதிப் புறப்பாடும்,

வையைக் கரைக்காடும் வாவரசிக் கூவல்களும்
பொய்யாய் உறைஞ்சதெலாம் பொள்ளிக் கொணர்ந்திடுமோ?
எத்தனையில் பந்தலிட? எத்தனையில் எரியூட்ட?
எத்தனையில் அங்கெடுக்க? எத்தனையில் கல்லெடுக்க?

எத்தனையில் சீரங்கம்? எத்தனையில் வாரணசி?
எத்தனையில் பிண்டமிட? எத்தனையில் தீவமிட?
எத்தனைநாள் வெற்றுநிலை? என்றதற்குச் சொன்னார்கள்,
"சித்தம் சிவம்சேர்த்துக் கொள்".

(ஆறுதல் கூறிய அன்பர் அனைவருக்கும் நன்றி. வாழ்வு மேலும் நகரத்தான் வேண்டும்.)

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þýÛ¦Á¡Õ ¾ý§É÷

¬ÄÁÃõ §À¡§Ä «ÊÁÃÁ¡ ¿¢ýÉ׸,
¸¡¨Ä ÁĨâ§Ä ¸¡Ä¨É¡ §¾ÎÅ¡¸?
¦¾¡ñÎ ¸¢ÆÅ£ðÊø §¾¡öó¾ Àئ¾øÄ¡õ,
¸ñÎ ºÃ¢Àñ½ ¨¸Â¡û ¸¢¨¼ì¸Ä¢Â¡?

«ôÀʦÂý ÉźçÁ¡? «ïÍ Á½¢Â¡§Ä
¸ôÒõ þÕðÎìÌû ¸ü¸¡¨Ã ¿£÷¦¾Ç¢ì¸!
¸ü¸¡¨Ã À¡Å¢ì ¸Ê¾Çõ §À¡ð¼À¢É÷
¿¢ü¸ ¯Ããð¼ ¿£¨Ãò ¦¾Ç¢ôÀо¡ý?

¬É¡Öõ ²¨Éö¡ «ó¾ô À¼À¼ôÒ?
Å£½¡ö Å¢ØóÐ Á¢ý¸º¢Ôõ ¸õÀ¢À¼,
¾ðÎò ¾ÎÁ¡È¢ À¢ý¾¨Ä¢ø ¾¡ýÅ£Æ,
Àð¦¼ýÚ ¦¿ïº¢ø ÀÎŢا¾¡ Á¢ýëð¼,

±ýÉ ¦¸¡Î¨Á¢Ð? þò¾¨ÉÔõ ÁýÉÅ÷측?
º¢ýÉ ¯Â¢ÕìÌõ §ºÁò¨¾ô À¡÷ò¾Å§Ã!
¬¨Ä¢§Ä §ºÁÁ¢Ä¡ ¬ðº¢Â¾¢ý °ÆȢţ÷!
º¡¨Ä¢§Ä ¾ý§É÷ º¡ÎÅÐõ ¾¡ÉȢţ÷!

Å£ðÊüÌû §ºÁ¿¢¨Ä §ÀÏŨ¾ ²ýÐÈó¾£÷?
Å¡ðÊì ¸¾ÈÅ¢ðÎ Å¡ú¿¡û ¦¾¡¨ÄôÀ¾ü§¸¡?
ºí¸¢Ä¢Â¡ö ¾ý§É÷; ºò¾Å¼õ §À¡Å¾üÌû,
±í¸ÙìÌõ §¾Ã¡Á ±øÄ¡õ ¿¢¸úó¾¡îÍ;

À¡Øõ À½¢¨Âò¾¡ý À¡÷ì¸ô ¦À¡Úò¾¢Õó¾¡ø,
²Ø Á½¢Â¡§Ä ±ò¾¨É§À÷ Åó¾¢ÕôÀ÷?
º¢ò¾¡Ù; ¦¸¡ò¾÷; º¢ÈôÀ¡É §ÁÄ¡Ù;
±ò¾¨É§À÷ ¿£÷¦¾Ç¢ì¸ þýÛõ ÀĦºöÂ;

§ÀÃÃÍ §À¡Â¢ÃñÎ ¬ð¨¼ À¢Èó¾¾É¡ø,
§Å÷Ţ𼠬Äó¾¡ý Ţا¾¡¼ §À¡Â¢Õ¡?
¦Åð¼¦ÅÇ¢ Å¡Éõ Ţ⿢ƨÄò ¾ó¾¢Î§Á¡?
¦À¡ð¼ø Á½Öõ Òؾ¢ô ÒÈôÀ¡Îõ,

¨Å¨Âì ¸¨Ã측Îõ Å¡Åú¢ì ÜÅø¸Ùõ
¦À¡ö¡ö ¯¨Èﺦ¾Ä¡õ ¦À¡ûÇ¢ì ¦¸¡½÷ó¾¢Î§Á¡?
±ò¾¨É¢ø Àó¾Ä¢¼? ±ò¾¨É¢ø ±Ã¢äð¼?
±ò¾¨É¢ø «í¦¸Îì¸? ±ò¾¨É¢ø ¸ø¦ÄÎì¸?

±ò¾¨É¢ø º£Ãí¸õ? ±ò¾¨É¢ø šýº¢?
±ò¾¨É¢ø À¢ñ¼Á¢¼? ±ò¾¨É¢ø ¾£ÅÁ¢¼?
±ò¾¨É¿¡û ¦ÅüÚ¿¢¨Ä? ±ýȾüÌî ¦º¡ýÉ¡÷¸û,
"º¢ò¾õ º¢Åõ§º÷òÐì ¦¸¡û".

(¬Ú¾ø ÜȢ «ýÀ÷ «¨ÉÅÕìÌõ ¿ýÈ¢. Å¡ú× §ÁÖõ ¿¸Ãò¾¡ý §ÅñÎõ.)

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Thursday, September 04, 2003

நடவாதோ இதுபோல் நமக்கும்?

இன்றைக்கு time ஆசியப் பதிப்பில் ஒரு கட்டுரை படித்தேன். வியந்து போனேன். முன்னாளில் தோர் அயெர்தால் என்ற நார்வே நாட்டுக்காரரின் கோன் டிக்கி, ரா, டைகிரீசு, மற்றும் பல கடற்பயணங்கள் பற்றி ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். என்னைத் தன்வயப்படுத்திய நூல்கள் அவை. அதுபோன்ற ஒரு கடற்பயணம் இந்தோனேசிய போரபுதூரில் இருக்கும் ஒரு சிற்பத்தை வைத்து இப்பொழுது எழுவது வியப்புத்தான். கடற்பயணம் பற்றிப் பேசும் நம் இலக்கியங்கள் கப்பல் கட்டுவது பற்றி எங்காவது குறிப்புக்கள் கொடுத்திருக்கின்றனவா? இத்தனை கோயில்கள் பல்லவர் காலத்தில் இருந்து இருக்கின்றனவே? எங்காவது ஒரு சிற்பம் அகப்படாதா? அதில் ஒரு விவரம் தெரியாதா? நண்பர்களே தெரிந்தால் சொல்லுங்கள். மற்ற தமிழர்களுக்குத் தெரியப் படுத்துவோம். அதன் மூலம் ஆர்வத்தைக் கூட்டுவோம். இது போன்ற ஒரு பயணத்தை தமிழகத்தில் நடத்திக் காட்டுவதற்கு நாம் உறுதுணையாக இருப்போம். நம்மூரில் கப்பல் கட்டும் நுட்பம் இருந்ததா என்று நிறுவிக் காட்டவேண்டும். என்ன சொல்லுகிறீர்கள்?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þý¨ÈìÌ time ¬º¢Âô À¾¢ôÀ¢ø ´Õ ¸ðΨà ÀÊò§¾ý. Å¢ÂóÐ §À¡§Éý. ÓýÉ¡Ç¢ø §¾¡÷ «¦Â÷¾¡ø ±ýÈ ¿¡÷§Å ¿¡ðÎ측Ãâý §¸¡ý Ê츢, á, ¨¼¸¢Ã£Í, ÁüÚõ ÀÄ ¸¼üÀ½í¸û ÀüÈ¢ ¬÷Åòмý ÀÊò¾¢Õ츢§Èý. ±ý¨Éò ¾ýÅÂôÀÎò¾¢Â áø¸û «¨Å. «Ð§À¡ýÈ ´Õ ¸¼üÀ½õ þ󧾡§Éº¢Â §À¡ÃÒàâø þÕìÌõ ´Õ º¢üÀò¨¾ ¨ÅòÐ þô¦À¡ØÐ ±ØÅРŢÂôÒò¾¡ý. ¸¼üÀ½õ ÀüÈ¢ô §ÀÍõ ¿õ þÄ츢Âí¸û ¸ôÀø ¸ðÎÅÐ ÀüÈ¢ ±í¸¡ÅÐ ÌÈ¢ôÒì¸û ¦¸¡Îò¾¢Õ츢ýÈÉÅ¡? þò¾¨É §¸¡Â¢ø¸û ÀøÄÅ÷ ¸¡Äò¾¢ø þÕóÐ þÕ츢ýÈɧÅ? ±í¸¡ÅÐ ´Õ º¢üÀõ «¸ôÀ¼¡¾¡? «¾¢ø ´Õ Å¢ÅÃõ ¦¾Ã¢Â¡¾¡? ¿ñÀ÷¸§Ç ¦¾Ã¢ó¾¡ø ¦º¡øÖí¸û. ÁüÈ ¾Á¢Æ÷¸ÙìÌò ¦¾Ã¢Âô ÀÎòЧšõ. «¾ý ãÄõ ¬÷Åò¨¾ì ÜðΧšõ. þÐ §À¡ýÈ ´Õ À½ò¨¾ ¾Á¢Æ¸ò¾¢ø ¿¼ò¾¢ì ¸¡ðΞüÌ ¿¡õ ¯ÚШ½Â¡¸ þÕô§À¡õ. ¿õãâø ¸ôÀø ¸ðÎõ ÑðÀõ þÕ󾾡 ±ýÚ ¿¢ÚÅ¢ì ¸¡ð¼§ÅñÎõ. ±ýÉ ¦º¡øÖ¸¢È£÷¸û?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.
September 8, 2003 / Vol. 162 No. 9
Travel
Sailing in History's Wake
A replica of an ancient ship goes to sea
BY JAMIE JAMES

Twenty-one years ago, a quiet young Englishman named Philip Beale visited Java and fell in love with a ship. To be precise, it was a picture of a ship, a sculptural relief of a jaunty schooner, its bow thrust upward by a swell, carved some 1,200 years ago at Borobudur, the magnificent Buddhist monument not far from Yogyakarta. Roaming across the Indonesian islands on a grant to study traditional ships, Beale had read that sailors from the Malay Archipelago regularly crossed the Indian Ocean, and even established colonies in East Africa, centuries before Borobudur was built. As he gazed at the sculpture, a great idea possessed him: this, he thought, was the very ship that the ancient Indonesians sailed to Africa. With the boldness and singular clarity of youth, he decided he would build that ship and make that voyage.

Such grandiose fancies are usually discarded when the footloose dreamer returns home, where the demands of "real" life make themselves known. Yet for two decades, Beale inwardly nourished his obsession, and now it has taken on hardwood reality: Beale's reconstruction of the eighth century Indonesian schooner depicted at Borobudur is now under sail in the Indian Ocean, on its way to Africa, manned by a multinational crew. The 19-meter-long ship is retracing the route of its ancient prototypes, which are believed to have formed the earliest transoceanic sailing fleet in history.

Beale's preparation for his epic voyage was a bit peculiar: he spent most of his time after that fateful visit to Borobudur toiling in the City of London as an investment-fund manager. Although he had previously spent two years in the Royal Navy, he himself admits that he's not much of a seaman. He's no scholar of ancient shipping and had spent little time in Indonesia before he started building his ship.

As an expedition leader, he is perhaps more lovable than inspirational, usually to be found below deck, sweating over a laptop and dog-eared papers, rather than breasting the wind on deck as his ship slices through the shimmering swells. Yet when he talks about the project, his resolve glints through his mild demeanor. "We're following the ancient Cinnamon Route," he says proudly, seated atop a coil of rope in the ship's bow as it skims across the Java Sea. "Indonesian ships sailed it thousands of years ago, bringing the spices of the islands to Africa and returning with iron, luxury goods such as ivory and leopard skins, and slaves. It was the beginning of global commerce."

Though largely unknown outside of the region, this was one of the first great achievements in marine exploration: centuries before anybody else engaged in regular long-distance voyages, mariners from the Malay Archipelago ruled the Indian Ocean. The Roman historian Pliny wrote in the first century A.D. about sailors arriving in Africa from the eastern sea on rafts, propelled not by sails but by "the spirit of man and human courage," carrying cinnamon and other spices.

Modern scholars identify these voyagers as ancient Indonesians, based upon the indelible linguistic and DNA footprints they left behind in East Africa. However, Madagascar is only the mid-point of Beale's projected voyage: from there, he plans to sail the ship around the Cape of Good Hope, one of the most perilous sea passages on earth, and then north to Ghana, ending his odyssey beneath the cliffs of Accra. The historic evidence for Indonesian contact with West Africa is shaky, as Beale readily concedes. The case relies largely upon striking similarities in traditional African and Indonesian music. The Madagascar-Ghana portion of the trip is thus at once the most daring and speculative of the expedition. Beale explains: "Academics pose questions such as, 'Could the ancient Indonesians have done this or that?' If we succeed, it won't prove they did it, but then no one can say they couldn't do it. It seems to me an interesting thing to do for itself."

Beale's amateur fascination with such questions might never have been satisfied if two years ago he had not met Nick Burningham, a maritime-heritage consultant who specializes in replicas of early Southeast Asian ships. Beale commissioned Burningham to create a design based upon the sculpture at Borobudur and then hired Assad Abdullah, an Indonesian with 30 years experience as a shipwright, to build the vessel.

Burningham has built several replica ships, but the Borobudur, he says, was "my greatest challenge, the most speculative reconstruction I've ever worked on." In addition to the handful of ship carvings at Borobudur and a few vaguely analogous shipwrecks, he was also guided by Assad's instincts and experience. Burningham built a model based upon historical estimates of load and the limits of materials available at the time, then gave it to Assad to construct on the Indonesian island of Pagerungan Kecil. "He not only built from the model," says Burningham, "he also interpreted it."

The ship was constructed from seven kinds of hardwood native to Indonesia and joined entirely by pegs, which Assad calls "tree nails." Burningham declares himself "just about satisfied" with the results. "Stability is adequate, not excellent, and the maximum speed is about 7 1/2 knots. She has a terrific motion and doesn't pitch or roll." The ship that he and Assad built is a funny-looking duck, with masts like narrow pointed ladders, canted sails and stout bamboo outriggers. The ship's captain, Alan Campbell, a Scotsman now living in Tasmania, recalls his first impression: "Some ships, when you first see them, you're not sure which end is the front and which is the back. When I first saw a picture of this ship, I wasn't sure which end was the top." Yet when she cuts through the water, the Borobudur possesses an undeniable majesty.

Modifications in the design continued even a few days before the launch. Assad's team used traditional caulking, the sere bark of the paper tree, but it proved leaky, so they switched to standard marine waterproofing. Modern navigation and communications technology, such as the satellite-based global-positioning system, or GPS, have been installed with no apologies. Ports are cut in the ship's sides so that it can be propelled with paddles if there's no wind. The toilet, at least, can't be surpassed for authenticity: a meter-square box attached to the ship's starboard side, with a hole in the bottom and a canvas curtain across the top.

When the launch finally came on Aug. 15, it was a grand and surprisingly emotional affair. President Megawati Sukarnoputri oversaw the gala ceremony in Jakarta and impulsively stepped aboard to take a closer look. For the Indonesian crew, led by I Gusti Putu Ngurah Sedana, a navy captain from Bali, the expedition is clearly a tremendous source of national pride.

Philip Beale looked a bit dazed. His adventure has every appearance of being just what he says it is: an extravagant youthful dream he has clung to for 20 years and which he is now riding out into the broad world, where so much can go awry. As his ship poked its nose out into the sea, he tried once again to explain what on earth possessed him, why someone with no background as an adventurer and no special expertise in maritime history would undertake such an arduous voyage. Baffled, it seems, that anyone might fail to grasp the logic of his epic expedition, he murmured with quiet conviction, "I just want to prove that it can actually be done."