இப்போதெல்லாம் ”சம்பவம்” என்ற இருபிறப்பிச் சொல் மக்களிடையே பெரிதாய்ப் புழங்குகிறது. இதன் தோற்றம் எப்படி எழுந்தது?
உம்முதல்> கும்முதல்> சம்முதல் = சேருதல், கூடுதல், உம் என்பது தமிழில் பன்மையைக் குறிக்கும் ஓர் ஈறு. அவனும் நானும் வந்தோம். சம் என்பது சங்கதத்திலும் பெரிதாய்ப் பயிலப் படுகிறது. மேலை நாடுகளில் com, cum என்று பயன்படும். தமிழிய, இந்தையிரோப்பிய மொழிக் குடும்பங்களில் இது பயன்படுகிறது.
புல்>புள்>.புழு> புகு>பூ-த்தல் = தோன்றுதல்; பூ- என்பது புகு->புவு- என்றும் திரியும். பூவைப் பூவு என்றும் பேச்சுவழக்கில் சொல்வோம். புவ்வு>பவ்வு-தல். ”புவ்வத் தாமரை புதையுங் கண்ணன்” என்பது 15 ஆம் பரிபாடலின் 49 அடியில் வரும். bhava = coming into existence. பவ்வு-நம்>பவ்வுனம்>பவனம் என்பது புதிதாய்த் தோன்றிய வீடு, அரண்மனை. நிலம், துறக்கம் போன்றவற்றையும் இது குறிக்கும். பவம் = புதிதாய்த் தோன்றிய கட்டுமானம்.
ஆக, சம்மும், பவமும் தனித்தனியே பார்த்தால், தமிழ் தான். அதே பொழுது, இரண்டையும் ஒன்றுசேர்த்த கூட்டுச்சொல்லைத் தமிழில் பயிலமாட்டோம். . சங்கதத்தில் கூடவே பயில்வார். கோயிலில் சங்கத மொழி வழி அருச்சனை செய்யும் போது வேண்டுதலில் ”பவதே” என்று வரும்.
சம்பவம் = கூடி உண்டாவது. = நிகழ்வு.
No comments:
Post a Comment