Saturday, December 16, 2023

மினாவக் கிரேக்கமும், தமிழகமும், அப்புறம் யானையும், குங்குமப்பூவும்

தமிழில் யா (ல்) என்பது கருமைநிறங்  குறிக்கும். சொல்லாய்வறிஞர் அருளியின் படி, யால்நை>யானை என்பது யானைச் சொற்பிறப்பு. அதன் பொருள் கருவிலங்கு. இதை  யால்மா> யாலிமா என்றும் சொல்லலாம். தமிழின் மகர- வகரத் திரிவோடு, வெவ்வேறு நாட்டு வணிகர் கூடிய, நம்மூரைச் சேர்ந்த, அற்றைத் துறைகளில் இது யாலிவா என்றும் பலுக்கப் பட்டிருக்கலாம். பொதுவாய், இந்தியக் கிழக்கொலிப்பின் லகரம் மேற்கொலிப்பில் ரகரமாவதும், தெற்கின் ல,ழ,ளகரங்கள் வடக்கே ரகரமாவதும் இயல்பு. இதனால், மேலை நாடுகளுக்கு யானை கொண்டு போகையில் சில வணிகரால் ”யாரிவா” என்று கூட அதன் பெயர் பலுக்கப் பட்டிருக்கலாம். 

இதுபோக, மேலைநாடுகளில் pa-fa-va ஒலிக்குழப்பம் சில சொற்களிலுண்டு. open/offen. Folk/volk மாற்றங்கள் நினைவில் எழுகின்றன. கப்பலில் கேட்ட வ எனும் சொல்லொலி சில இறங்குதுறைகளில் ப ஆகலாம். கிரேக்கத்தில் இது பழக்கம் போலும். ஏனினில் அங்கு f கிடையாது. வகரம் குறைந்தே ஒலிக்கும். இவ்வொலி மாற்றால், யாரிவா> யா-ரி-பா ஆகும். Linear B Greek இல் E-re-pa என்றே எழுதப்பட்டது. elephant என்றே பொருள் சொல்வார். https://encyclopedia.pub/entry/32633 என்னும் தளத்தில் கீழுள்ள செய்தியைச் சொற்பிறப்பு ஒட்டிக் காணலாம்.

The word "elephant" is based on the Latin elephas (genitive elephantis) ("elephant"), which is the Latinised form of the Greek ἐλέφας (elephas) (genitive ἐλέφαντος (elephantos[1]), probably from a non-Indo-European language (compare Berber elu) likely via Phoenician.It is attested in Mycenaean Greek as e-re-pa (genitive e-re-pa-to) in Linear B syllabic script.As in Mycenaean Greek, Homer used the Greek word to mean ivory, but after the time of Herodotus, it also referred to the animal.The word "elephant" appears in Middle English as olyfaunt (c.1300) and was borrowed from Old French oliphant (12th century). 

மேலே பெருபெர் மொழியில் எழுந்திருக்கலாம் என்பது ஒரு பரிந்துரை. அவ்வளவு தான். அதை முடிந்த முடிவென்று கொள்ள வேண்டியதில்லை. தமிழில் எழுந்தது என்பது என் பரிந்துரை. Linear B Greek என்ற அசையெழுத்து 1400 - 800 BC யில் பழங்கிரேக்கத்தில் பயன்பட்டது. அடிப்படையில் இவ்வெழுத்து மைசீனீயன் கிரேக்கம் எழுதப் பயன்பட்டது. மைசீனியன் கிரேக்க மொழியின் தொடக்கம் 1600 BC. 1200 BC இல் தோரியன் உள்நுழைவிற்கு (Dorian Invasion) அப்புறம் இது கொஞ்சங் கொஞ்சமாய்ச் செம்மொழி கிரேக்கமாய் மாறியது. 

E-re-pa என்னும் Linear B Greek சொல்லே  E-re-pa> e-le-pha என்று Phonecian இல் திரியும் என்பார். மீண்டும் ரகரம் லகரமாயிற்று. Phonecian இல் இருந்தே மற்ற மேலை மொழிகளுக்கு இச்சொல் போனதென்பார். அப்படியாயின் யால்மா> யாலிமா என்ற தமிழ்ச்சொல் Linear B அசையெழுத்தில் E-re-ma என்று 3 எழுத்தாய் பதியப் பட்டு 1400 BC இல் இருந்து 1200 BC க்குள் மைசீனியன் கிரேக்கத்தில் நுழைந்திருக்க வேண்டும். Linear B Greek என்பது 800 BC க்கு முந்தை நிலைக்  கிரேக்கத்தைக் குறிக்கும். இதன்பொருள் அங்கும் elephant எனும் யானையே. E-re-pa எனும் Linear B Greek சொல்  பிற்கால Phonecian இல் E-re-pa> e-le-pha ஆகும். Phonecian இல் இருந்து மற்ற மேலை இரோப்பிய மொழிகளுக்கு இச்சொல் போயிருக்கலாம் என்பார். 

”அதெப்படி தமிழென உறுதியாய்ச் சொல்கிறாய்?” என்று கேட்கலாம். என் விடை எளிது. தமிழில் யா (ல்) என்பது கரு நிறங் குறிக்கும் வேர்ச்சொல். நை>னை என்பது விலங்கைக் குறிக்கும் சொல்லாக்க ஈறு. யானை எனும் விலங்கு மைசீனியன் கிரேக்கருக்கும் மற்ற மேலையருக்கும் இந்தியா, ஆப்பிரிக்கா வழி தான் தெரிந்திருக்க முடியும், ஆப்பிரிக்க யானையை  ஆகப் பழங்காலத்தில் மாந்தர் பழக்கக் கூடியதாய், உடமை விலங்காய் (domestic animal) ஆக்கிவிட முடிந்ததில்லை. தொடக்க காலத்தில் அது கண்டம் விட்டு கண்டம்  நகர்ந்ததும் இல்லை. தொடக்ககாலச் சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க, உரோமானிய யானைக் குறிப்புகள் எல்லாம் பெரிதும் இந்திய யானைகளையே குறித்திருக்கலாம் என்றே வரலாற்று ஆய்வாளர் சொல்கிறார்.    

பொ. உ. மு 1600 களில் கிரேக்க நாகரிகம் கிரீட்டில் தொடங்கியது. கிரீட்டிற்கும் தமிழருக்கும் ஆன தொடர்பு சங்கநூலில் ஒரே ஒரு இடத்தில் வெளிப்படும். கீழே இறக்குமதியாகும் வேறொரு சரக்கு பற்றி நான் சொல்வது உண்மையாகின், யானை விலங்கும், பெயரும் பழந்தமிழ் நாட்டிலிருந்தே பெரும்பாலும் ஏற்றுமதியாகி இருக்க வேண்டும். மறவாதீர். வெறும் சொற்கடன் மட்டுமின்றி, விலங்கும் சொல்லும் ஏற்றுமதியானது.

இனி என் ”சங்க இலக்கியங்களில் ஆரியர் - 5 (https://valavu.blogspot.com/2023/05/5.html)  என்ற கட்டுரைக்கு வருவோம். இதில் பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டின் சில அடிகளுக்குள் புதைந்துள்ள ஓர் அரிய பழம் வரலாற்றைப் பேசுவேன். இதற்குள் போகுமுன் முன்குறிப்புகளைப் பார்ப்போம். இரண்டாம் பத்து இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பேசுகிறது. குறிப்பிட்ட பாட்டின் தலைப்பு  *புண் உமிழ் குருதி*. பாடியவர் குமட்டூர்க் கண்ணனார். குமட்டூர் பெரும்பாலும் குமிட்டூர் ஆகலாம். 2 ஆம் பதிகத்தின் கீழ் ”பாடிப்பெற்ற பரிசில் உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதலிற் பாகங் கொடுத்தான் அக் கோ” என்ற குறிப்பு வரும். 

இக்கூற்றை வைத்து, தமிழகக் கேரள எல்லையில் இன்றுள்ள குமிழி> குமிளியே அற்றைக் குமிழூர்> குமிளூர்> குமிட்டூர் எனலாம். மரத்தொழிலர் நடுவே குமிழ மரம் குமிட்டுத் தேக்கு என்றுஞ் சொல்லப் பெறும் குமிழியில் இருந்து 4 கி.மி. தொலைவில் தேக்கடி (தேக்கு+அடி). தேக்கும், வெண் தேக்கும், குமிட்டுத் தேக்கும் அருகருகே விளைவது வியப்பல்ல.குமிழூர் சங்க காலத்தில் சேரலஞ் சேர்ந்தது தான். 

இவ்வூருக்கு அருகில் தான் இமையவரம்பன் நெடுஞ்சேரல் குமிட்டூர்க் கண்ணனாருக்கு உம்பற் காட்டு ஐநூற்றூரைப் பெருமதாயமாய் அளித்தான். குமிழிக்கு அருகில் தான், குட்ட நாடு. முல்லைப் பெரியாறு; கண்ணகி போய்ச் சேர்ந்த இடம். செங்குட்டுவன் மலைக்காட்சி கண்ட இடம். சிலம்பில் வஞ்சிக் காண்டம் தொடங்குமிடம். சேரலாதன் ஐந்நூற்றூர் தவிர தன்னாட்டு வருவாயில் ஒரு பாகத்தையும் (எத்தனை என்று தெரியவில்லை) தான் அரசனாய் வாழ்ந்த 38 ஆண்டிற் இப் புலவருக்குக் கொடுத்திருக்கிறான்.

செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப

அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்

மணிநிற யிருங்கழி நீர்நிறம் பெயர்ந்து

மனாலக் கலவை போல் வரண்கொன்று

முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை

பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்

கடியுடை முழுமுத றுமிய வேஎய்

வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்

நாரரி நறவி னார மார்பின்

போரடு தானைச் சேர லாத

என்பது பாட்டின் குறிப்பிட அடிகள். இவற்றைப் பொருள் காணத் தோதாய்ச் சொற்களைப் பிரித்து அடிகளைக் கீழே மாற்றிப் போட்டிருக்கிறேன்.   

கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு

வான்பிசிர் உடைய வரைமருள் புணரி 

வளிபாய்ந்து அட்ட துளங்குஇரும் கமஞ்சூல்

நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி

விலங்குநர் செவ்வாய் எஃகம் அறுப்ப,

மனாலக் கலவை போல 

அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்

மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, 

அரண் கொன்று

முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை

பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்

கடிஉடை முழுமுதல் துமிய ஏஎய்

இனி ஒரு சில சொற்களுக்கான விளக்கம் பார்ப்போம்.விலங்குநர் = (இச்செயல்) தடுப்போர் (கடற்கொள்ளையர்); செவ்வாய் எஃகம் = கூர்(sharp)ஓர எஃகு வாளால் (இரும்புக் கால முதல் அடையாளங்களும் பழம் எஃகுப் பொருட்களும் தொல்லாய்வின் மூலம் இப்போது தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. எஃகு = steel; எஃகம் = steel sword); அறுப்ப = அறுத்து; மனாலக் கலவை போல = குங்குமப்பூக் கலவை போல்; அருநிறம் = செந்நிறம்; அருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதியின் = செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால்; மணிநிற இருங்கழி = நீலப் பெருங்கழி, நீர்நிறம் பெயர்ந்து = நீரின் நிறம் மாற, அரண்கொன்று = (எதிர்த்தவரின்) காவலழித்து; முரண்மிகு சிறப்பின் = முரண் மிகு சிறப்பால்; உயர்ந்த ஊக்கலை = உயரூக்கம் கொண்டவனே! 

இங்கு ஓர் இடைவிலகல். ”மனாலம்” என்ற சொல் சுவடியெழுத்தில் பிழைகள் கொண்டதாகலாம். வ என்பது ல என்று இது போன்ற ஓலைச்சுவடிகளில் பல இடங்களில் மாறிப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. அடுத்தடுத்த பதிப்புகளில் மிக்கும் ம-விற்கும் இடையில் இகரக் கொக்கி தவறிப் போகலாம். இது போன்ற சுவடிப் பிழைகளை ஒரு பழம்பாவின் மூலம் முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி ”அல்லிகதை” என்ற நூலின் முன்னுரையில் வெளியிட்டுள்ளார். இன்னொரு பதிவாய் அடுத்து அதை வெளியிடுகிறேன். 

மேலே இருக்கக்கூடிய சுவடிப் பிழைகளைக் கணக்கில் கொண்டால் மனால, மினாவ ஆகும். மினாவ என்பது அப்படியே எழுத்துப் பெயர்ப்பாய்  Minoan crete ஐக் குறிக்கும். மினாவக் கலவை, உரையாசிரியர் குறிப்பின் படி குங்குமப்பூக் கலவைக் குறிக்கும். இங்குதான் நாம் Jumper prize அடிக்கிறோம் எனலாம். பொ.உ.மு. 3000 - 1100 இல் உலகின் மற்ற நாடுகளுக்கு கிரீட்டிலிருந்தே குங்குமப்பூ ஏற்றுமதியானது. இன்று காசுமீரிலிருந்து ஏற்றுமதி ஆவது போல் அன்று கிரீட்டிலிருந்து ஏற்றுமதி ஆனது.   

பார்க்க: https://en.wikipedia.org/wiki/History_of_saffron. Saffron played a significant role in the Greco-Roman pre-classical period bracketed by the 8th century BC and the 3rd century AD. The first known image of saffron in pre-Greek culture is much older and stems from the Bronze Age. A saffron harvest is shown in the Knossos palace frescoes of Minoan Crete, which depict the flowers being picked by young girls and monkeys. 

One of these fresco sites is located in the "Xeste 3" building at Akrotiri, on the Aegean island of Santorini—the ancient Greeks knew it as "Thera." These frescoes likely date from the 16th or 17th century BC` but may have been produced anywhere between 3000–1100 BC. They portray a Minoan goddess supervising the plucking of flowers and the gleaning of stigmas for use in manufacture of what is possibly a therapeutic drug. 

A fresco from the same site also depicts a woman using saffron to treat her bleeding foot. These "Theran" frescoes are the first botanically accurate visual representations of saffron's use as an herbal remedy. This saffron-growing Minoan settlement was ultimately destroyed by a powerful earthquake and subsequent volcanic eruption sometime between 1645 and 1500 BC. The volcanic ash from the destruction entombed and helped preserve these key herbal frescoes.

ஆக இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன், குறைந்தது 3100 ஆண்டுகளுக்கு முன் கிரீட்டில் இருந்து குங்குமப்பூ நம்மூரில் இறங்கியிருக்கிறது. ஏறத்தாழ அதே காலத்தில் யானை அவர் நாட்டிற்கு ஏற்றுமதியாகிள்ளது. நம் யானை பெயரை அவர் கொண்டார் அவர் அரசுப் பெயரான ”மினாவம்” என்பதோடு சேர்த்து இறக்கி மினாவக் கலவை என்று நாம் சொன்னோம். (சங்க காலம் வரைக்கும் மினோவக் கலவை என்ற பெயர் மறையவே இல்ல.) எவ்வளவு பொருத்தமாய் இரு நாட்டு உறவு அமைந்தது பாருங்கள். நம் unique product இற்கு அவர் unique product ஐ மாறு கொண்டிருக்கிறோம்.         

தவிரக் குரு>குருங்கு என்பது தமிழிற் சிவப்பு நிறங் குறிக்கும் சொல். குருங்குமம்>குங்குமம் என்பதன் வழி, நிறத்தை வைத்து ஓர் இறக்குமதிப் பொருளுக்கு ஆன பெயர் தெரிகிறது. (பருத்தி - ஒரு பிறந்த இடப் பெயர். கொட்டை> cotton - இறங்கிய இடங்களில் ஏற்பட்ட பெயர்.) ”குருங்குமம்” பின்னால் (kurkema Aramaic) இலும், krocos என கிரேக்கத்திலும் என மேலை நாடுகளிற் பரவும். அதே பொழுது azupirana என்ற akkadian சொல்லிலிருந்து Saffron என்ற இற்றை மேலைச்சொல் பிறந்தது. 

இன்னொரு விதமாயும் இதை அணுகலாம். 50% மஞ்சள்+ 50% சிவப்பு= நாரங்கை நிறம்; 75% மஞ்சள்+ 25% சிவப்பு= காவி நிறம்; கவி-தல்= மூடு-தல். கவிந்த சிவப்பு= காவி(ச் சிவப்பு). காவி என்ற சொல் தமிழே. கவி-தல் = மூடு-தல் = மங்கு-தல் 

தமிழில் நாரங்கம், நாரங்கி, நாரங்கை என்ற மூன்றும் வெவ்வேறு ஈறுகள் கொண்ட ஒரே சொற்களாகும். அதுபோல் நாரத்தம், நாரத்தை ஆகிய இரண்டும் வெவ்வேறு ஈறுகள் கொண்ட ஒரே சொற்கள். நார்+அத்து+அம், நார்+அத்து+ஐ = நாரோடு கூடியது. நார்+அங்கு+அம், நார்+அங்கு+ அம் = நார் அங்கமானது. நாரங்கையும், நாரத்தையும் உறவுள்ள ஆனால் வேறு வேறு பழங்கள். அதனால் தான் 2 சொற்கள் நம்மிடம் உள்ளன.

மேலே சொன்னது போல் காவி என்பதையும் காவம் என்று தமிழில் சொல்லலாம், கா>சா போலியில் காவம் சாவமாகும். இதில் ரகரம் உள்நுழைந்து சாவ்ரம் ஆகும், இது அக்கேடியன், அரபியில் நுழைந்து பின் மேலை மொழிகளில் saffron ஆகும்.

மேலே சொன்னது போல் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன், குறைந்தது 3100 ஆண்டுகளுக்கு முன், மீனோவக் கிரீட்டில் இருந்து நம்மூரில் குங்குமப்பூ இறங்கியுள்ளது. குங்குமப்பூவின் இன்னொரு சொல் தான் காவப்பூ என்னும் காவிப்பூ. ஆங்கிலச் சொற்பிறப்பில்,

saffron (n.)

c. 1200, safroun, "product made from the dried stigmas of flowers of the autumn crocus," from Old French safran (12c.), from Medieval Latin safranum (cognate with Italian zafferano, Spanish azafran), ultimately from Arabic az-za'faran, which is of unknown origin. The substance is noted for its sweet aroma and deep orange color. As a color word for deep yellow-orange, and an adjective, by late 14c. In reference to the crocus plant itself from early 15c. German Safran is from French; Russian shafran' is from Arabic. Related: Saffrony (adj.). also from c. 1200

என்பார். குங்குமப்பூ வணிகத்தோடு பதிற்றுப்பத்து வரியையுஞ் சேர்த்து விக்கிப்பீடியாவில் யாரேனுங் குறித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தமிழன் பெருமிதம் கூடுமே? சேரலாதன், செங்குட்டுவனின் பழங் காலமும் (’சிலம்பின்’ காலமும்) மினாவக் கலவை என்ற கூட்டுச் சொல்லால் உறுதிப் படும். 

எத்தனை இந்திய மொழிகள் அவைகளின் இலக்கியங்களில் ”மினாவத்தைப்” பதிவு செய்தன??? பிரித்தானியக் கலைக்களஞ்சியம் மினாவனுக்கு கீழுள்ளது போல் பதிவு செய்யும்  

Minoan, Any member of a non-Indo-European people who flourished (c. 3000–c. 1100 BC) on the island of Crete during the Bronze Age. The sea was the basis of their economy and power. Their sophisticated culture, based at Knossos, was named for the legendary King Minos. It represented the first high civilization in the Aegean area. The Minoans exerted great influence on the Mycenaean culture of the Greek islands and mainland. Minoan culture reached its peak c. 1600 BC and was noted for its cities and palaces, extended trade contacts, and use of writing (see Linear A and Linear B). Its art included elaborate seals, pottery, and, notably, the vibrant frescoes decorating palace walls, which depicted both religious and secular scenes, including goddesses reflective of a matriarchal religion. Palace ruins show evidence of paved streets and piped water. Familiar Minoan art motifs are the snake (symbol of the goddess) and the bull and leaping dancer, also of mystical significance.

எனக்கறிந்து இல்லை இருந்தும் தமிழின் காலத்தைக் குறைத்துக் கொண்டே இருந்துள்ளார். மினாவம் என்ற பெயர் கிரேக்கருக்கும் முந்தைய crete நாகரிகத்தைக் குறிப்பதெனில், அதை நம் இலக்கியம் குறிகிறதெனில். நம் இருப்பும் பழமை தானே? அவர்கள் இற்றைக்கு 5000 ஆண்டிலிருந்து 3100 ஆண்டுகள் என்று சொல்வர். நாம் குறைந்தது 3100 ஆண்டுகள் என்று  சொல்ல வேண்டாமா? க்டைசியில் சிவகளை தொல்லாய்வின் கரிமச் சோதனை  வரைக்கும் காக்க வேண்டியதாயிற்று. . 

இன்னுமா தமிழே ANcient Ancestral South Indian (AASI) மொழி என்று நாம் சொல்லாமல் இருக்கமுடியும்? 


No comments: