நான் அறிந்தவரை திராவிட மொழிகளுக்கான சொற்பிறப்பியல் பேரகரமுதலி என்பது பாவாணர் ஆய்வின் வழி உருவான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மட்டும் தான். ஆனால் அது வேறு வழியில், தமிழுக்காக மட்டும் உருவாக்கப் பட்டது. இப்போது உள்ள நிலையில் செ.சொ.பே. எல்லாத் தமிழ்ச் சொற்களுக்கும் சொற்பிறப்பு தருவதில்லை. இந்த அகரமுதலியின் உள்ளக ஒத்திசைவு (internal consistency) இன்னும் சரிபார்க்கப் படவில்லை. ஏராளம் அதில் சரி செய்ய வேண்டும். என்னைக் கேட்டால், digital முறையில் இதை ஒரு குழு சரிபார்க்க வேண்டும். தேடக்கூடிய தரவடியாய் (searchable database) இது மாறவேண்டும். வெறுமே தாள் வடிவில் கண்ணித்த (scanned paper version) pdf ஆக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. தவிர, இப்போது இருப்பதற்கும் மேலாக, மற்ற திராவிட மொழிகளின் இணைச்சொற்கள் (cognates) அதில் சேர்க்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment