Sunday, January 21, 2024

பெண்பாற் சொற்கள்

 அண்மையில், “மாந்தன், மன்னன், அமைச்சன், புலவன், கவிஞன், கலைஞன், சிற்பி, கஞ்சன், ஒற்றன், தச்சன், வணிகன், காப்பாளன், வீரன், அறிஞன், மூடன், தொண்டன், சீடன், தளபதி, ஆசான், பங்காளி - இவற்றின் பெண்பாற் சொற்கள் என்ன?” என்று திரு. தாமரைச்செல்வன், தமிழ்ச் சொல்லாய்வுக் களத்தில் கேட்டிருந்தார்.

நான் பின்பற்றும் முறை கீழே வருகிறது. 

----------------------  

பொதுவாய், அன் ஈற்றை எடுத்தபின், மிஞ்சிய பகுதி: 

1. கு,சு,டு,து,பு,று என முடிந்தால், அள் ஈறும் (காட்டு: அமைச்சள், ஆசாள். ஒற்றள், கஞ்சள், சீடள், தச்சள், தொண்டள், மாந்தள், மூடள், வணிகள்),    

2. கு,சு,டு,து,பு,று என முடியேல், மெய்ம்மயக்கம் கண்டு, ஐகார மெய்யும் (காட்டு: அறிஞை, கவிஞை, கலைஞை, புலவை, மன்னை, வீரை) 

சேர்க்கலாம். மூன்றாம் முறையாய், எல்லாவற்றிற்கும் அன் ஈறு எடுத்துப் பின் அத்துச் சாரியை + இகரம் இட்டும் சொல்லலாம்.

சிற்பி, (தள)பதி, (பங்கு)ஆளி  போன்றவை பால் குறியாச் சொற்கள்.

காப்பாளன் என்று சொல்லாது காப்பாளி என்பது சிறப்பு. 

No comments: