Thursday, June 22, 2023

ஆலயம்

 ஆலயம் என்பது நல்ல தமிழ்ச் சொல். ஆல்> ஆலு> ஆலு-தல் = சுற்றுதல். ஆலை = சுற்றி இயங்குவது. சுற்றி வருவது; ஆலத்தி> ஆரத்தி;  திருவிளக்கை இறைப் படிமத்தின் முன்னோ, திருமணத்தில் மாப்பிள்ளை முன்னோ, மேலிருந்து கீழ்வரை வலம் வருவது போல் சுற்றிக் காட்டுவது. திருச்சுற்றுகளைக் (சுற்றுமதில், சுற்றாலை) கொண்ட பெருஙகோயில். temple having prahAra. இக் கோயில்களில் 2,3 சுற்றாலைகள் கூட இருக்கலாம். திருவரங்கம் போன்ற கோயில்களில் 5 சுற்றாலைகள் இருக்கலாம்.

Monier-Williams Sanskrit-English Dictionary கீழே உள்ளவாறு போட்டிருப்பர். இதில் ஆ என்பது முன்னொட்டு. லயம் என்பதற்கு √lī என்பதைத் தாதுவாகக் காட்டுவர் வால்மீகி இராமாயணத்தைத் தொடக்கமாய்க் காட்டுவர். வால்மீகி இராமாயணம் பொ.உகத்தில் தான் முழுமையானது. ஆலய என்ற சொல் வேறு எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் கிடையாது. வேதநெறியாளருக்கு இறையைக் குறிக்கும் எந்தப் படிமமும் கிடையாது. நடு கல் பழக்கமும் வேத நெறியாருக்குக் கிடையாது. அவருக்குச் சுடுகாடு உண்டு. இடுகாடு கிடையாது. வேத நெறி என்பது பூர்வ மீமாம்சத்தில் தொடங்கி உத்தர மீமாம்சையில் நகரும். இதற்கும் இற்றைச் சிவ, விண்ணவ நெறிகளுக்கும். அற்றுவிகம் (ஆசீவிகம்), செயினம், புத்தம் ஆகிய சமண நெறிகளுக்கும் தொடர்பு கிடையாது.  

தமிழியர் பண்பாட்டில் இடு காடும், நடு கல்லும் தொடக்கம். பின்னால் நடுகல் வழிபாடே, கோயில் வழிபாடாய் மாறி வளர்ந்தது. நம்மூரில் பல கோயில்கள் பள்ளிப்படையாய் இருந்து கிளர்ந்தவை. இந்தியா வந்ததால் வேத நெறியார் இங்குள்ள பழக்கத்தோடு கொஞ்சங் கொஞ்சமாய் ஒன்றுபட்டு மாறி, நம் ஆலயத்தை அவர் கடன் கொண்டார். மோனியர் வில்லியம்சு கொடுத்த விளக்கம் கீழே உள்ளது: ஆலயம் என்ற சொல்லை அவர் கோயிலுக்கு மட்டுமின்றி எல்லாக் கட்டிடங்களுக்கும் பயில்வார். காரியாலய என்று அலுவலகத்தைக் குறிப்பார். நாம் கோயிலுக்கு மட்டுமே குறிப்போம்.    

1) Alaya (अलय):—[=a-laya] m. (√lī), non-dissolution, permanence, [Rāmāyaṇa iii, 71, 10] ([varia lectio] an-aya)

2) [v.s. ...] mfn. restless, [Śiśupāla-vadha iv, 57.]

3) Ālaya (आलय):—[=ā-laya] a See ā-√lī.

4) [=ā-laya] [from ā-lī] b m. and n. a house, dwelling

5) [v.s. ...] a receptacle, asylum, [Rāmāyaṇa; Yājñavalkya; Kathāsaritsāgara etc.]

6) [v.s. ...] (often ifc. e.g. himālaya, ‘the abode of snow.’)

ஆனாலும் ஆலயம் போல் பல சொற்களுக்கு ஒரு சிலர் ஆதாரமே இன்றி சங்கதத்தை அடையாளம் காட்டுகிறார். 

என்று தான் சங்கத விளக்கத்தை விட்டு தமிழுக்கு நாம் வருவோம்?


No comments: