Saturday, March 19, 2022

அறுசுவைகள் - 3

16 ஆம் நூற்றாண்டு வரை ”அறுசுவைகள்” என்ற தலைப்பில் திவாகரம், பிங்கலம், சூடாமணி போன்ற நிகண்டுகள் “தித்தித்தல், புளித்தல், கூர்த்தல் (=உவர்த்தல்), துவர்த்தல், காழ்த்தல், கைத்தல்” என்றே சொல்லின. ”தித்தித்தல், கூர்த்தல்” எனும் விதப்புச் சுவைகள் எப்பொழுது  ”இனித்தல், உவர்த்தலுக்கு” மாறின என்று தெரியவில்லை, இதுபற்றி யாரும் ஆய்ந்தாரா என்றும் தெரிய வில்லை. இம்மாற்றத்தால் ஒரு சில புரிதல்களை இழந்தோமோ? தெரிய வில்லை. காழ்ப்பு>கார்ப்பு, கைப்பு>கய்ப்பு>கசப்பு என்பன பேச்சுத்திரிவு. அறுசுவைச் சொற்களின் சொற்பிறப்பைக் கீழே காண்போம்.

முதலில் வருவது தித்தித்தல். துல்> துன்- பற்றி மேலே சொன்னேன். பழங்களைத் துன்னும் போது முன்னம் பற்களால் இல்லியே (=துளையிட்டே) பழச்சுவை அறிகிறோம். துன்> தின்> திம்> தீம் என்று இச்சொல் திரியும். தீம் முன்னொட்டில் பல்வேறு சொற்கள் அகரமுதலிகளில் உண்டு. துல்> தெல்> தென்> தேன் என்பது தேனின் சொற்பிறப்பு  காட்டும். மலர்களில் தங்கும் (துல்> துள்>) துளிகள்  ஒன்றுசேர்ந்து தெளிவுற்றுத் தேனாகும். வண்டுகள் தேடிச் சேர்க்க்கும் தேன் அடைகளில் தேங்க அங்கிருந்து பெருமளவில் நாம் பெறுவோம். 3 ஆம் வளர்ச்சியில் திம்  இரட்டித்து திம்திம்> திந்திம்> திந்தி> தித்தி- என மகரம் தொலைத்துத் தித்திக்கும். (சங்க இலக்கியத்தில் தித்திப்பு இல்லை. ஆனால், தீம் 198 இடங்களிலும் தேம் 93 இடங்களிலும் பயின்றுள்ளன. எனவே தித்திப்பு பின்னை வழக்குப் போலும்.) திம்திம் என இரட்டிப்பது தமிழில் இயல்பே. ”தம்தம் எனத் தத்தித்தாள்” என்று நாட்டியத்தில் சொல்வதில்லையா? கக்க, சிச்சிறு, பப்பட என இரட்டைவழக்குப் பலவும் இதுபோல் உண்டு. 

”தேம், இழும், இனிமை, மதுரம், அமுது” என்று தித்திப்பிற்குப் பிற சொற்கள் காட்டுவர்,  தீமின் இன்னொரு வெளிப்பாடு தேம். (சுருக்கமாய்ச் சொல்ல வேண்டின், தேம்/தே நல்ல, தெளிவான சொல்.) அடுத்தது இழும், முன்சொன்ன இல்>இழு>இழியோடு தொடர்புற்றது பல்லால் கடிக்கையில் பழச்சாறு தானே இழும். இனிமை எனும் பொதுப்பெயர் தித்திப்பிற்கு எப்போது, ஏன் இறங்கியது? விளங்க வில்லை.   தேனையும் கள்ளையும் மது என்பார். மது> மதுல்> மதுர்> மதுரம் என்பது இயல்வளர்ச்சி. மதுரம் மதுகையாகிச் சிலவிடங்களில் இனிமைப் பொருள் காட்டும். (சங்க இலக்கியத்தில் 31 இடங்களில் மதுகை பயிலும். அதில் இனிமைக் கணக்கு அறியேன். மதுரமோ அங்கு இல்லை.) முல்> முலுமம்> மலுமம்> மருமம்> மம்மம்> அம்மம் என்பது முலையைக் குறிக்கும். அம்மத்தில் பெற்ற பால் அமுது, (இது 3 இடங்களிலும், இதன் நீட்சியான அமிழ்தம்/அமிர்தம் 35 இடங்களிலும் சங்க இலக்கியத்தில் பயிலும்.) 

முல்> முலு> முலை என்பது தமிழிலும்,  முலு> முலுகு> milk என்பது இந்தை யிரோப்பியத்திலும் எழும் சொல்வளர்ச்சி. milk (n.)"opaque white fluid secreted by mammary glands of female mammals, suited to the nourishment of their young," Middle English milk, from Old English meoluc (West Saxon), milc (Anglian), from Proto-Germanic *meluk- "milk" (source also of Old Norse mjolk, Old Frisian melok, Old Saxon miluk, Dutch melk, Old High German miluh, German Milch, Gothic miluks), from *melk- "to milk," from PIE root *melg- "to wipe, to rub off," also "to stroke; to milk," in reference to the hand motion involved in milking an animal. Old Church Slavonic noun meleko (Russian moloko, Czech mleko) is considered to be adopted from Germanic. மேலையர் சொற்பிறப்பு விளக்கம் ”முலையைக்” காட்டாது cognates ஐ மட்டும் சொல்லி, மாட்டுப்பால் கறப்பதை அடையாளம் காட்டும். தமிழிய மொழிகளைக் கண்டுகொள்ளாது போனதின் விளைவு இது..

சரி, இந்தையிரோப்பியனில் தித்திப்பிற்கு என்ன சொல்வார்? sweet (adj.) Old English swete "pleasing to the senses, mind or feelings; having a pleasant disposition," from Proto-Germanic *swotja- (source also of Old Saxon swoti, Old Frisian swet, Swedish söt, Danish sød, Middle Dutch soete, Dutch zoet, Old High German swuozi, German süß), from PIE root *swād- "sweet, pleasant" (Sanskrit svadus "sweet;" Greek hedys "sweet, pleasant, agreeable," hedone "pleasure;" Latin suavis "pleasant" (not especially of taste), suadere "to advise," properly "to make something pleasant to"). Words for "sweet" in Indo-European languages typically are used for other sense as well and in general for "pleasing." இதைத் தமிழில் அடையாளங் காண்பது எளிது, ”சுவைத்து> சுவத்து” என்பது பொருந்தக் கூடியதே.    

2 ஆவது சுவைச்சொல் புளித்தல், புள்>புள்ளு>புள்ளி>புளி என்பது சொற்பிறப்பு. (சங்க இலக்கியத்தில் 29 இடங்களில் புளிச் சொல் பயிலும்.) புளியம்பழச் சுவையால் இது வந்தது. புளிகளைக் கடித்துச் சுவைக்கையில் (ஊசியால் குத்துவது போல்) புள்ளுணர்ச்சி எழும். இற்றைப் புளி (Tamarindus indica) நம்மூரின் இயல் தாவரமல்ல. 14 ஆம் நூ.வில், இசுலாமியரின் எத்தியோப்பிய அடிமைகள் கொணர்ந்தது  (நம்மூர் போல் எத்தியோப்பிய உணவும் புளிச்சுவை காட்டும். மேலையர்க்கும் நமக்கும் ஒப்பீடு செய்ய விழைவோர், தம் இனப்பார்வையால், இதுபோலான ஆப்பிரிக்கப் பண்பாட்டு ஒற்றுமையை ஒதுக்குவார். சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் சொல்லும் நம்மூர்ப் புளி கோரக்கர் புளி (Garcinia cambogea). இச் சிற்றினப் புளிப்பழம் (குமரி முதல் மாராட்டாம் வரை) மேலைத் தொடர்ச்சி மலையிலும் , மேலைக் கடற்கரையிலும்  (அதன் வடக்கில் இல்லை)   விரவியது.  வட கர்நாடகம், கோவாச் சந்தைகளில் பெரிதும் விற்கப் படும்.. 

தமிழில் அம்/ஆம் = நீர். அம்புள்ளம் = புள்ள நீர். அம்பு(ள்)ளம்> அம்முளம்> அமுளம்> அமுலம்> அமிலம் என்பது தமிழ்ச்சொல்லே. ஆமிலம்> ஆமிரம் என்றும் சொல்வார். புள்ளத்தை  pungent (adj.) என்பார்.  1590s, "sharp and painful, poignant, piercing," originally figurative, of pain or grief, from Latin pungentem (nominative pungens), present participle of pungere "to prick, pierce, sting," figuratively, "to vex, grieve, trouble, afflict" (from suffixed form of PIE root *peuk- "to prick"]. எந்த அம்புளமும் செறிவிற்குத் தக்கப் புளிச்சுவை காட்டும். நம் புளிங்கை pungent இற்குள் புதைந்துள்ளது. acrid = அஃகுத் (கூர்ந்த்) தன்மை. இந்தோயிரோப்பிய ரகர நுழைப்பில் அஃகிது (acid) அஃக்ரிது ஆகும். அஃகுதை = oxide. உறைப்போடு கடுக்கும் காரணத்தால் acid ஐக் காடி என்கிறோம். அம்புளம்/ (அ/ஆ)மி(ல/ர)ம், அஃகிது, காடி என acid க்கு  3 சொற்களுண்டு.  எலுமிச்சை, புளித்த கீரை, இட்டளி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் புளிப்புச் சுவை காட்டும். 

3 ஆவது சுவைச்சொல் கூர்த்தல். குல்>குர -to be sharp. குர்ர்ர்ர்...... என்பது குத்தும் போது எழும் ஒலிக்குறிப்பு.  குர்த்தல் = குத்தல். குர்வுதல், குர்த்தலின் இன்னொரு வடிவம். குர்வு> குவுர் என்பது இடமுகட்டு (metathesis) மாற்றம். வுகரம் முன்வர, ரகரப்புள்ளி பின்னேகும், குவுர் >கூர் = sharp அடுத்த மாற்றம். உப்புளத்தில் செறிவுகூடி, உப்பானது கண்டாகும் போது, அதன் வடிவம் கட்டிக் கூடு (crystal latice) காரணமாய்க் கூர்ப்பாய் இருக்கும். உப்பளத் தொழிலார் காலில் சாக்குத் துணி கட்டியே நடமாடுவர். இல்லெனில் கீழே சிதறிக்கிடக்கும் உப்புக்கற்கள் பாதத்தைக் குத்திககிழிக்கும். கல்லுப்பின் கூர்மை அப்படி.  உப்பு, உவர்ப்பிற்குக் கூர்ப்பு எனும் மாற்றுப்பெயர் உள்ளது வியப்பில்லை.

குர்த்தல் = குத்தல். குர்த்தல்> கூர்த்தல் = உவர்த்தல். குர்த்தல் >குர்ச்சுதல்  =குர்ச்சுத் தொழில் =உப்புத்தொழில். குர்ச்சரம்>கூர்ச்சரம், உப்புத் தொழிலால் பெயர்பெற்ற இடம். உவரைச் சுற்றிக் கூர்ச்சரம் பிறைபோல் விரிந்தது. குர்ச்சு> கர்ச்சு> கச்சு =கூர்ச்சர முதல்நிலத்தின் மாற்று வடிவம். கூர்ச்சரர் =உப்புத் தொழிலார் = உமணர். சோராட்டம் (Sourashtra) உவர்மண் கொண்ட, சூரியத் தகிப்பிடம். (நம் போலவே, கூர்ச்சரரும் கடலுக்குப் பெருநிலம் இழந்தார். நமக்குக் கவாடபுரம். அவர்க்குத் துவாரகை. 2 நகரப் பெயர்களுக்கும் ஒரே பொருள்.) உப்பு விளைப்பில் இன்றும் கூர்ச்சரமே இந்தியாவில் முதலிடம். மறவாதீர். பைந்தமிழத்தில் [பஞ்ச திராவிடத்தில்] கூர்ச்சரமும் ஒன்று. நம் பங்காளிகளில் அவரும் ஒருவரே!  குர் போலவே சுல்> சுள்> சுடு> சுர் என்பது குத்துணர்ச்சி காட்டும். இதைச் ”சுரசுரப்பு” உணர்த்தும் புளித்தல் / குத்தலின் நுண்வேறுபாட்டைப் புரிந்துகொள்க. குத்துணர்வு நெடுநேரம் இராது. குத்தூசி (உப்புக்கட்டி முனை) எடுத்தவுடன் பழை உணர்விற்குப் போய்விடுவோம். புளியுணர்வு அப்படியில்லை,. நெடுக நிலைக்கும். குத்துணர்வு பூதியல் செலுத்தத்தால் (Physical process) பெறுவது, புள்ளுதல் வேதியல் செலுத்தத்தால் (chemical process) பெறுவது.

குள்> குள்வு> குவுர் போலவே, சுள்> சுள்வு> சுவுள் உண்டு. அது சுவள் என்றும் திரியும். சுவள்> சவள்> சவடு> சவர் = குத்தும் உவர்மணல். சவட்டில் (உப்பில்) பெற்ற எளிமம் சவடியம் (Sodium). இதன் தமிழ்வேர் நமக்கே தெரிவதில்லை. அந்தளவு ஆய்வு செய்யாதுள்ளோம்.) சவளம் =குந்தம் lance, pike. சவள்- >சாள்- >சாள்த்து =salt. (சவளறிந்தால் salt இன் தோற்றம் புரிந்துபோஉம். சால்> சாடு> சார்> சார்ப்பு = sharp = கூர்மை. சகரம் தொலைத்து உவள்> உவடு> உவர் ஆகி உவர்ப்பு> ஊர்ப்பு> ஊப்பு> உப்பிற்கு வந்துசேர்வோம். (உப்புச் சொற்பிறப்பில் பாவாணாரிடமிருந்து நான் வேறுபடுவேன்.) உவளின் திரிவான உமணும் உண்டு. (சங்க இலக்கியத்தில் உவர் 16 இடங்களிலும், உமண் 34 இடங்களிலும் பயிலும்.) ”சுவை” பேசுகையில் சவட்டின் தொடர்பாய் வேறு சொற்கள் பேசினேன். மேலே, நீளங் கருதித் தவிர்க்கிறேன். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவை இயல்பு உப்புமையால் உமிழ்நீர் சுரக்க வைக்கும் 


No comments: