Monday, January 30, 2006

கொன்றையும் பொன்னும் - 7

மகர வரிசையும் வகர வரிசையும்
--------------------------------------------
மல்>மல்லல் = பொலிவு, அழகு, செல்வம்
மல்குதல் = பொலிதல், அதிகப் படுதல்; இந்த அதிகப்படுதல் என்ற பொருளில் தான் multiply என்ற ஆங்கிலச்சொல் புழங்குகிறது. multi என்ற முன்னொட்டுக்கு இணையானது நம்முடைய மல்கு/மல்கிய என்னும் முன்னொட்டு.

மல்>மலர்>மலர்தல் = பொலிவு, பூ விரிதல்,
மச்சப் பொன் = மாற்று அறிய வைத்திருக்கும் மாதிரிப் பொன்; மாற்று = தூய்மையின் அளவு
மட்டப்பொன் = மாற்றுக் குறைவான பொன்
மல்>மால்>மாழை = பொன், உலோகம்;

மல்>மள்>மளி>மளிகாரம் = வெண்காரம்
மள்>மண் = புழுதி, சுண்ணச் சாந்து, தரை

மள்>மாள்>மாளம் = கத்தூரி மஞ்சள்
மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்
மாடு>மாடை = பொன், அரை வராகன், உலோகம்; மாழையின் திரிவாக மாடை என்ற இந்தச் சொல் கூட நாணயம் என்ற பொருளில் புழங்கியிருக்கிறது. குறிப்பாக பெருஞ்சோழர் காலத்தில்.

மல்கு>மலுகு>மலிகு= பெருகுதல்;

மலிகு>மலிங்கு>மயிங்கு>மய்ங்கு>மங்கு>மங்கல் = ஒளி பெருகி மஞ்சளாகக் காட்சி அளிப்பது.
மங்கல்>மங்கள்>மஞ்சள் = நிறம், மஞ்சள் பொருள்
மங்கல்>மங்கலம் = சிறப்பான நிகழ்வு, பொலிவு
மங்கு>மங்கை = மங்கலமாகிய மணப்பருவம் அடைந்த பெண்.
மங்கலம்>மங்கல வாரம் = வட மொழியில் செவ்வாய்க் கோள் (மங்கல் என்பது இங்கே சிவப்பு என்ற பொருள்லெ வந்திருக்கு)
மங்கல்>மங்கலியம் = பொன்
மங்கலியம்>மாங்கலியம் = பொன்னால் ஆன தாலி
மஞ்சள்>மஞ்சுளம் = அழகு
மஞ்சு>மஞ்சுதல் = மஞ்சள் நீரால் முழுக்காட்டுதல்
மஞ்சுதல்>மஞ்சனம் = நீராட்டு.
மஞ்சுதல்>மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீராட்டுதல், அலங்கரித்தல்
மண்ணுநீர் = மஞ்சன நீர்
மண்>மணிகம் = நீர்க்குடம்
மணம் = கல்யாணம்; இந்தக் காலத்துலே மாப்பிளை, பொண்ணுக்குத் தாலிகட்டுறது தான் கல்யாணம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனாச் சங்க காலத்துலெ அப்படி இல்லை; தாலியப் பத்தியெ பேச்சே இல்லை. அகநானூறு 86-லே ஒரு திருமணக் காட்சி வருது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக!/ என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை

தலை உச்சிலெ குடத்தை வச்சுக்கிட்டுச் சில பெண்கள், புதிய மண்பாண்டத்தை (அதுக்கு உருண்டையா இருக்குற மண்டைன்னு பேரு.) வச்சுக்கிட்டிருக்குற இன்னுஞ் சில பெண்கள், ஆரவாரம் பண்ணிக்கிட்டுச் சடங்கு செய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள், இவங்கள்லாம் ஒண்ணொண்ணா பொருள்கள எடுத்துத்தர, புள்ளைகளப் பெத்தெடுத்த நாலு மகராசிகள் (பசலை போட்டிருக்குற அவங்க நகையெல்லாம் அணிஞ்சிருக்காங்க) " அம்மாடி, பொண்ணே, சொல்லுத் திறம்பாம (சொன்ன சொல்லு மாறிடாதே), எல்லாருக்கும் உதவி செஞ்சு, கொண்டவன் விருப்பத்துக்கு தக்க நடந்துக்குறவளா இரும்மா" ன்னு வாழ்த்தி கூந்தலுக்கு மேலெ, நீரைச் சொரிஞ்சு, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவி கல்யாணம் முடிஞ்சுது. அவ்வளவு தாங்க! மொத்தத்துலே மஞ்ச நீர் ஆடுறதும், பூ, நெல் சொரியுறதும், வாழ்த்துறதும் தாங்க, மண்ணுதல்-ங்குற மணம்.

[சொல்லுத் திறம்பாம இருக்குறது தாங்க கற்புங்குறது. இது ஆண், பெண் ரெண்டு பேருக்கும் உள்ளது தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தப் புலனத்துலே ஒரே கூச்சலும், குழப்பமும் எழுந்துது. பெண்ணின் தொடைகளுக்கு நடுவே கற்பைத் தமிழர்கள் காணலை. இந்தக் கற்பு பத்தித் தனியே ஒரு கட்டுரை எழுதணும். அத இன்னொரு நாள் பார்ப்போம்.]

கல்யாணத்துக்கு முதநாளே, நெல்லோட பல கூலங்களையும், சில பயறுகளையும் கலந்து ஈரத்தோட முளைக்க விட்டு அதைப் பாலோட கலந்து வைக்குறதுக்கு முளைப் பாலிகைன்னு பேர். இந்த முளைப்பாலிகையையும், பாலிலெ பூவிதழ்களைப் பிச்சுப் போட்டு வைக்குறதையும் தான் மணமக்கள் மேலே சொரியுறதுக்குப் பயன்படுத்துறது. அதே போல மஞ்சநீர் ஆடுறதும் முக்கியம். மஞ்ச நீர் ஆடுறது, 60-ம் கல்யாணத்திலேயும் செய்யுறது தான். இந்த மஞ்ச நீர் ஆடுறது இன்னைக்கும் 60-ம் கலயாணத்துலெ இருக்கு.

உல்>வல்>வல்லிகம் = மஞ்சள்
வல்>வல்லியம் > வல்லியம் பொருப்பு = கொல்லிமலை
வல்> வழு>வழகம் = பவளம்

வல்>வன்>வன்னி = நெருப்பு, சிவப்பு
வல்>வன்>வன்னம் = தங்கம்
வன்னம்>வண்ணம் = நிறம், ஒளி
வண்ணம்>வண்ணன்>வண்ணான் = அழுக்கைப் போக்கித் துணியை வெளுப்பவன்

வன்னி>வன்னியர் = முல்லை நிலத்தார், சோழ நாட்டு வீரர்
வன்னி>வன்னிக்காடு = அடர்ந்த பொற்பூக்களைக் கொடுக்கும் மரங்கள் அடங்கிய காடு.
வன்னம்>வனம் = பொற்பூக்களைக் கொடுக்கும் மரங்கள் நிறஞ்ச காடு.

வல்>வள்>வளம் = பொலிவு பட இருத்தல்
வள்>வாள் = ஒளி
வல்>வழு>வழுத்தல் = பாராட்டுதல்
வழு>வாழ்= வளம் பட இருத்தல்

வள்>வெள்>வெளுத்தல் = ஒளி படக் காட்சியளித்தல்
வெள்>விள்>விளங்கு = ஒளிர்தல்
வெள்>விள்>விளர்தல் = வெளுத்தல்
வல்>வரம் = மஞ்சள்
வராகம் = வார்த்தெடுத்த பொன் நாணயம்

இன்னும் நிறையச் சொல்லலாம் ஆனா இப்பவே ஊரம்பட்டுக்கு வந்திருச்சு. இதுக்கு மேலே போனா நீங்க அடிக்க வந்துருவீக. ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் எழுதலெ; அப்படிச் செய்ஞ்சா நீண்டுரும். இந்தத் தொகுதியை ஒரு சீராப் பார்த்தா உள்ளே உள்ள அடிப்படை புரியும்னு தான் கொடுத்துருக்கேன். அடுத்த பகுதிலே கொன்றை பத்திப் படம், புதலியல் விவரம் - இன்னும் சிலவற்றைச் சொல்றதோட நிறுத்திக்கிறேன்.
இன்னோரு வாட்டி கடம்ப மரம் பத்திப் பாக்கலாம் அண்ணாச்சி! அதுவரைக்கும் வரட்டுங்களா?

அன்புடன்,
இராம.கி/

Saturday, January 28, 2006

கொன்றையும் பொன்னும் - 6

'பொல்' எனும் அடிவேர்:
-------------------------------
'கொல்'லைப் போலவே ரொம்பவும் பயனுள்ள வேர் இந்தப் 'பொல்'. இதுலேர்ந்தும் ஏகப்பட்ட சொற்கள் பிறந்துருக்கு.

பொல் = மஞ்சள் நிறம்;
பொல்>பொலிவு>பொலிதல் = தோற்ற அழகு கூடுதல் (மஞ்சள் சேர்ந்தாலே, வெளிச்சம் சேர்ந்தாலே, ஆங்கிலத்துலே bright-ஆ ஆனா, தோற்ற அழகு கூடுனதா நாம நினைச்சுக்குறோம்.)
பொலி>பொலிவுதல்>பொலிகுதல்>பொலுகுதல்>பொலுவுதல் = அதிகப்படுதல்
பொல்>பொலம்>பொலங்கலம் = பொன்னால செஞ்ச நகை
பொல்>பொன்; பொன்னுங்குறதை தெலுங்குலெயும் கன்னடத்துலேயும் ஹொன்னுன்னு சொல்லுவாங்க; கன்னடத்துலெ 'பொ' ன்னு
தொடங்குற சொல்லு 'ஹொ' ன்னு ஆயிரும்.

பொன்னுலெ நாலு வகை இருக்கு, அண்ணாச்சி!
முதல் வகை - சாதரூபம் - பிறந்தபடியே இயற்கையா இருக்குறதுக்கு உள்ள பேரு இது.
ரெண்டாவது - கிளிச்சிறை - கிளிச்சிறகு போல கொஞ்சூண்டு பசியச் (பச்சைச்) சாயல் கொண்ட பொன்
மூணாவது - ஆடகம் - கொஞ்சூண்டு குங்குமச் சாயல் கொண்டது; ஆடகன் = பொன்னிற முடைய இரண்ய கசிபு, ஆடக மாடம் னா பொன் பதிச்ச உப்பரிகை. திருவனந்த புரத்துப் பெருமாளை ஆடக மாடத்துப் பெருமாளாச் சொல்லுவாரு; சிலப்பதிகாரத்துலே வஞ்சிக் காண்டத்துலே வரும். நாக. இளங்கோவன் சிலம்பு மடல்லெ படிச்சிருப்பீங்களே!
நாலாவது - சாம்பூநதம் - ஒளி சாம்பி, மங்கிப் போன பொன்.

(மேலெ ரெண்டு பேரு - சாதரூபம், சாம்பூநதம் - வடமொழி வடிவத்துலே இருக்குறது மனசுக்கு ஒரு மாதிரியாத்தான் இருக்கு; என்ன பண்ணுறது அண்ணாச்சி, இடைக்காலத்துலே, நம்மாளுக அளவுக்கு மீறி வடமொழியைப் பயன்படுத்திட்டாக. இதுக்கெல்லாம் தமிழ் எதுவோ, அது தெரியாமலெ போச்சு. வேணுமின்னாப் புதுசா இப்ப வச்சிக்கிடலாம். என்ன பண்றது, தமிழ்லெ பேசுனா இளக்காரம், தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசினா ஒசத்தின்னு நெனைக்கிற அடிமைப் புத்தி நம்மள விட்டுப் போகலியே!)

பொன் செய்தல் = நற்செயல் செய்தல்
பொன்பாவை = திருமகள்
பொன்வரை = மா மேரு மலை, மேருமலைங்குறது ஒரு கற்பிதமான மலை; இது இருந்துதுன்னு சிலர் சொல்றாக; ஆனா நமக்குப் புரிபடலை.

பொல்>பொக்கன் = தோற்றப் பொலிவுள்ளவன்; இது போக பணத்தக் கையாளும் treasurer என்ற பொருளும் உண்டு. பொக்குன்னா பை. பொக்கன் பொக்கியன் ஆகிப் பொக்கிஷன்னும் ஆகும். பணம் வச்சிருக்கிற பை பொக்கு. கல்வெட்டுக்கள்லெ இந்தச் சொல் பயனாகி இருக்கு.

பொக்கம்>போக்கம் = பொலிவு

பொற்கோள் = வியாழன்; (செவ்வாய் = சிவப்பு நிறம் கொண்ட கோள்; வெள்ளி = வெளிறிய நிறம் கொண்டது. சுல்வத்தில் இருந்து வந்த சொல்லுதான் அண்ணாச்சி, சுக்கிரன்; அதே போல பொன் நிறம் கொண்ட கோள் = வியாழன்; கரு நிறம் கொண்டது = காரி என்ற சனி, நம்மாளுங்க சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க. புடவி (earth) தவிர்த்து மற்ற கோள் எல்லாமெ நிறத்தை வச்சுத்தான்.)
பொன்னவன் = வியாழன், இரணிய கசிபு

பொன்னுலகாளி = இந்திரன்; ஏற்கனவே பொன்னுலகு = சுவர்க்கம் னு பார்த்தீங்கள்லெ அண்ணாச்சி. சுவர்க்கத்தின் தலைவன் இந்திரன்னு தானே தொன்மம்!

பொற்சுண்ணம் = மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து செய்த தூள்; (பெருமாள் கோயில்லே தாயார் (சீதேவி) கருவறைக்கு முன்னாடிக் கொடுக்குறது பொற்சுண்ணம்; ஆண்டாள் (பூதேவி) கருவறைக்கு முன்னாடிக் கொடுக்குறது குங்குமம். பொற்சுண்ணத்துக்கும் குங்குமத்துக்கும் செய்முறையிலெயும் மஞ்சள், சுண்ணாம்பு கலக்குற விழுக்காட்டுலேயும் கொஞ்சம் வேறுபாடு. பொற்சுண்ணத்துலே மஞ்ச நிறம் தூக்கித் தெரியும்; பொற்சுண்ணத்துக்கும் குங்குமத்துக்கும் வேறுபாடு தெரிஞ்சு, எந்தக் கருவறையிலெ எதைக் கொடுக்கோணும்கிறது கூடத் தெரியாத பட்டர்கள் விண்ணவக் கோயில்லே கூடிட்டே வர்றாங்க. பொதுவா, எங்கெ பார்த்தாலும், நம்மோட நெறி அடிப்படை தெரியாம, கோயில்கள் எல்லாமெ வணிகமா மாறியிருக்கு.
(இப்படித்தான் போன வாரம் இங்கே பக்கத்துலே ஒரு முருகன் கோயிலுக்குப் போனேன். "ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே" என்ற பாடல் எழுதிப் போட்டு இருந்துது. எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச பாட்டுத் தான். "மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே"ங்குற வரியை "மாறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே"ன்னு போட்டிருந்துது. அங்கே இருக்கிற குருக்கள்ட்டெ- கருவறைக் காரியம் கவனிப்பவர் சிவன் கோயில்லே குருக்கள், பெருமாள் கோயில்லே பட்டர், பெருமானர் அல்லாத அம்மன் கோயில்லெ பூசாரி, முருகன் கோயில்லெ பண்டாரம்ன்னு சொல்லொணும் அண்ணாச்சி - "ஐயா, இது தப்பில்லியா, கொஞ்சம் நிர்வாகத்துலெ சொல்லித் திருத்தி எழுதுங்க"ன்னேன். அவரு, இள அகவை, அதைக் காதுலே வாங்கிக்காம, முன்னாடி எழுதியிருக்கிறதே சரின்னு வாதாடுனாரு. தலையிலெ அடிச்சுக்கிட்டு வந்துட்டேன். முட்டாப் பயக கூடிப்போனாய்ங்க; இப்படித்தான் மூட நம்பிக்கை நம்ம கோயில்கள்லெ கூடீட்டே வருது. விவரம் தெரிஞ்ச ஆட்கள் குறஞ்சு போனாக! எல்லாமே ஏனோ தானோன்னு போயிட்டிருக்கு.)

பொல்+பு = பொற்பு = அழகு, பொலிவு, மிகுதி
பொற்பு>பொற்பித்தல் = அலங்கரித்தல்

பொற்பிதிர் = பசலை

பொல்>பொறு>பொறி = புள்ளி, சிதறிய தீப்பொறி
பொறு>பொறுக்கு = சிதறிய துகள், சிதறிய துகளைத் தெரிந்தெடுத்தல். கொழிச்செடுக்கும் போது பொன்னைப் பொறுக்கித்தானே ஆகணும்? தங்கம்னா கவனம் வேணுமில்லெ?

பொறையன் = பொன், பொன்னன்; சேரரின் ஒரு கிளைக்கு இரும்பொறைங்கிற பெயரைப் பார்த்தா, பொறைங்கிறது மாழைங்கிற பொதுப் பொருளை அடைஞ்சிருக்கொணும்.. இரும்பொறை = இரும்பு மாழையைப் போன்ற உறுதி கொண்டவன், அல்லது இரும்பு கிடைக்கும் இடத்துக்குச் சொந்தக்காரன். இரும்பொறைக்காரங்க இந்தக் காலத்து தமிழ் நாட்டுக் கரூர்/சேலம் பகுதிகளில் இருந்து ஆட்சி செஞ்சாங்கன்னுதான் பலரும் சொல்றாங்க. சேலத்துக்குப் பக்கத்துலெ தானே இரும்பு கிடைக்குது. (கொஞ்சம் கூர்ந்து பாத்தா, சேரலம்>சேலம்; சேரல்ராயன் மலை>சேர்வராயன் மலை; சேரர் காடு>சேரக்காடு>ஏரக்காடு>ஏர்க்காடு எல்லாம் புரியும்.)

பொல்>பொலி=தூற்றாத நெற்குவியல், தூற்றிய நெல், களத்தில் நெல் அளக்கும் போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர். முன்னாடிச் சொன்ன மாதிரி, பொலி, ரெண்டு, மூணுன்னு களத்துமேட்டுலெ நெல்லு அளக்குற போது எண்ணுறதும் ஒரு பழக்கம் தான். தென்பாண்டி நாட்டுப் பொறத்துலே, வளம் ஏற்படுறதுக்கு பல இடங்கள்லெ, கல்யாணம், காட்சின்னா, சொல்ற சொலவம் " பொலியோ பொலி"
பொலி>பொலிப்பாட்டு, மேலே சொன்ன 'பொலியோ பொலி"ங்குற சொலவம்.

பொலியோ பொலி தான் பொங்கலோ பொங்கல்னு இன்னைக்கும் இருக்குது. அரிசிப் பொங்கல் பொங்குற போது பொலியோ பொலி, இல்லாட்டிப் பொங்கலோ பொங்கல்ன்னு சொல்லிச் சங்கூதுறது எங்க பக்கத்துப் பழக்கம். இந்தச் சமயத்துலே குலவைகூட களத்து மேட்டுலெ பொங்குனா உண்டு; சிவகங்கைப் பக்கம் சங்குங்குறது மங்கலத்துக்கும் உண்டு; அமங்கலத்துக்கும் உண்டு. எதுக்குன்னாலும் சங்கே முழுங்குதான். யாரும் சங்கூதுறதுக்குக் கூச்சப் பட மாட்டாக! ஒவ்வொரு வீட்டுலெயும் கத்தி, கவடா, அரிவாள் மாதிரி, ஒரு சங்கு இருக்கும். சின்னப் புள்ளைக சங்கூதக் கத்துக்குறது முக்கியம்.

பொலி>பொலிக்கொடி = மஞ்சள் நிற வைக்கோல்

பொல்>பொலியை>பொலிசை = விளைச்சல்லே ஆதாயமா வர்றது பொலிசை. ஒரு முதல் போட்டு அதுலெ வர்ற வட்டியும் பொலிசைதான்; வட்டிங்குற சொல்லும் (வட்டமான தட்டு) அளந்து போடுறதைக் குறிக்கும், கடகம் (= ஓலைக் கூடை; கடகம்/கடாகம்கிறது எங்கூர்ப் பக்கத்து வட்டாரச் சொல்) போல வட்டிலெ நெல்லை அளந்து போடுறது தான். (சாப்பிடுற தட்டையும் எங்கூர்ப் பக்கம் வட்டின்னு சொல்லுவாக. அதுக்குப் பக்கத்துலே கறிகாய் வச்சுக்குற சின்னத் தட்டைக் கிண்ணின்னு சொல்லுவாக. கிண்ணம்னா பெருசு; கிண்ணின்னாச் சிறுசு.) வட்டி/பொலிசை தான் வெள்ளைக்காரன் சொல்ற interest. வட்டிச்சு வர்றதுன்னாத் திரும்பித் திரும்பிப் பெருகி ஒவ்வொரு ஆண்டுக்கும் வர்றது.

பொலிசை>பலிசை; இதுவும் கல்வெட்டுகள்லே நெடுக வர்ற சொல். ஒவ்வொரு மண்டகப் படிக்காரரும், கோயில் பண்டாரத்துலே (களஞ்சியம், treasury) குறிப்பிட்ட பணம் செலுத்தி, அதுலெ வர்ற பொலிசை/பலிசை (interest)யிலேந்து, அரிசி, உளுந்து, நெய், மிளகு, உப்பு, கறி(காய்), வெத்திலை, அடைப்பக்காய் (அதாங்க கொட்டைப்பாக்கு), சந்தனக் காப்பு, இன்னும் பலது வாங்குறதுக்கு பயன்படுத்தி கொள்வதாகக் கல்வெட்டுலே பதிஞ்சிருக்காக. இந்தக் கல்வெட்டெல்லாம் நம்மள்லெ எத்தனை பேரு படிக்கிறோம்? ஆனா, தமிழ் பிழைக்கோணும், வரலாறு தெரியோணும் னு நீங்க நினைச்சீகன்னா கல்வெட்டெல்லாம் யாராவது படிச்சு, இந்தக்காலத்துத் தமிழ்லெ மாத்திச் சொல்லோணும் அண்ணாச்சி. இது ஒரு பெரிய வேலை; செய்யுற ஆளத்தான் விரலை விட்டு எண்ணிறலாம் போலேருக்கு.

பொல்>பொலியூட்டு = பொலிசை கிடைக்க வைக்குற முதல் = அதாவது capital. தமிழ்லே மூலதனம்னு ஒரே ஒரு சொல் மட்டும்தான் இருக்குன்னு நினச்சுக்குறோம். இன்னோண்ணு இந்தா இருக்கு அண்ணாச்சி, மூல தனத்திலேயும் தனம்குறது தங்கம் தான். பொலியூட்டுலெயும், பொலிகுறது தங்கம் தான். ஆகத் தங்கம் இல்லாம எதுவுமே இல்லை.

பொலி>பொலிவிடு>பொலிவூடு>பொலுவூடு = இதுதான் அண்ணாச்சி, வெள்ளைக்காரன் சொல்ற புரோவிடு =profit; சுருக்கமாப் பொலுவு/பொலுவம் னே சொல்லலாம். இலாவம், பொலுவு/பொலுவம் ஆக ரெண்டு சொற்கள் இருக்கு. ரெண்டுக்கும் தமிழ்தான் அடிப்படை.

பொலிகை>பொயிகா>பெயிகா>பேகவா = மராத்திலெ கொன்றைக்கான பேரு.

பொலிதல்>பொழிதல் = நிறையக் கொட்டுதல்
பொல்>பொழில் = பொன் போல பூத்துக் குலுங்கும் சோலை
பொல்>பொழு>பொழுது= காலையில் சூரியன் தோன்றும் போதோ, மாலையில் சூரியன் மறையும் போதோ உள்ள நேரம். பொழுது புலர்ந்தது'ன்னா மஞ்ச நிற ஒளி வந்துருச்சுன்னு அருத்தம். அதே போல பொழுது சாயுதுன்னா, ஒளிதர்ற சூரியன் சாய்றான்னு அருத்தம்; பொழுதுங்குற சொல்லே சூரியனாகவும் பொருள் குறிக்குது. பின்னாடித்தான் வெறுமே நேரங்கிற பொதுப் பொருள் வந்திருக்கு.

பொல்>புல்>புன்>புனை = அழகு, பொலிவு
புல்>புல்லை=மங்கலான மஞ்சள் நிறம்
புல்>புலம் = ஒளியிருந்தாக் கண்ணுக்குத் தெரியுற இடம்.
புல்>புலத்தி = வண்ணாத்தி = அழுக்கான உருப்படிகளைத் தூய்மை செய்து வெளிற வைப்பவள்
புல்>புலவர் = அறிவுத் தெளிவு உள்ளவர், பிறருக்குத் தெளிவு ஏற்படுத்துபவர்

புல்>புலம்பல் = ஒளி
புல்>புலர்தல் = ஒளியின் வருகையால் பொருள்கள் தோன்றுதல்
புலர்>புலரி = சூரியன் = புலர வைப்பவன்
புல்>புலன் = புலப்பட வைக்கும் அறிவு, sense

புல்>புழகு = செந்நிறப் பூவுள்ள செடி
புல்>புலவு = செந்நிறங் கொண்ட தசை
புல்>புலது = குருதி (blood; இங்கிலீசுக்காரன் சொல்லும் அதே மாதிரித்தான் இருக்கு)
புலவு>புலாவு = ஊன், புலவுசோறுங்குறது தான் 'பிரியாணி'யைக் குறிக்கும் தமிழ்ச்சொல். அப்புறம் சைவப் பிரியாணி = மரக்கறிச் சோறு.

புல்>புலை>புலையன் = அரத்தப் பொருள்களைக் கையாளுபவன்; இன்றைக்குச் சாதியப் பொருள் வந்து கிடக்கு. அந்தப் பொருளைத் தொலைச்செறிஞ்சா, ஊரு விளங்கும்.
புலை>புலைத்தி = புலையனின் பெண்பால்

புல்>புலவு>புலவூட்டு>புலவூட்டம் = pollution (மாசு படுத்தல்னு இந்தக் காலத்துலெ சொல்றோம்.) எங்கு பார்ர்த்தாலும் புலவூட்டிக் கொண்டிருக்கிறோம். இயற்கையைப் பேண மாட்டோ ங்குறோம்.

புல்>பூ = தீப்பொறி, மலர்
பூத்தல் = பொலிவு பெறுதல், தோன்றுதல்

பூ>பூஞ்சை>பூஞ்சி = மஞ்சள் நிறம்
பூஞ்சை>பூஞ்சணம் = மஞ்சள் நிறம் கொண்ட நுண்ணுயிர்த் தொகுதி,

பூங்கதிர் = ஒளி, வெண் நிறம்
பூதி = பொன்

பூந்துகள்>பூந்தூள்>பூந்தாது = பொன்னிறமான துகள்

பூத்துப் போதல் = கண்பார்வை மங்கி, வெளிறிப் போதல்
பூலித்தல்>பூரித்தல் = நிறைதல், பொலிதல்
பூரணம் = முழுமை, நிறைவு, முற்றிலும் மஞ்சள்
பூரி = பொன்

பூவல் = சிவப்பு

பொழு>பழு = பொன்னிறம்
பழுக்கக் காய்ச்சுதல் = நிறம் ஏறப் பொன்னைத் தீயில் காய்ச்சுதல்
பழுக்குதல் = நிறம் மாறுதல்
பழுப்பு = பூங்காவி நிறம், பொன்னிறம், சிவப்பு, முதிர்ந்து மஞ்சள் நிறங் கொண்ட இலை
பழு>பளபளத்தல் = ஒளிர்தல்
பளிச்சிடுதல் = ஒளிவீசுதல்
பளிங்கு = ஒளிவீசும் பொருள்

புல்லை>பில்லை = மங்கிய மஞ்சள் நிறம்
புல்>பில்>பிறங்கு>பிறங்கல் = ஒளி
பில்>பிறு>பிறை = சந்திரனின் மங்கிய ஒளி
பிறு>பிறகிடுதல் = தோற்றதல்
பிறு>பிறத்தல் = தோன்றுதல்
பில்>பீலி = பொன்

அன்புடன்,
இராம.கி.

Friday, January 27, 2006

கொன்றையும் பொன்னும் - 5

உயிரெழுத்து வரிசை:
----------------------------
தமிழ்லெ ஒரு பழக்கம். பல இடங்கள்லெ 'க'வை மெலிஞ்சாப்புலே 'ஹ' ன்னு ஒலிப்போம் (தென் தமிழ் நாடு வந்தீங்கன்னா தெரியும்.). இது பெரும்பாலும் சொல்லுக்கு நடுவிலேயும், சில வேளை முதல்லேயும், சிலவேளை கடேசியிலேயும் வரும். இதே போல கன்னடத்துலே 'ப'வை 'ஹ'ன்னு ஒலிப்பாங்க. கன்னடப் பழக்கத்துக்கு ஒருவகையான ஆதாரம் கிரந்த எழுத்து. அதப் பத்தி இங்கே எழுதுனா விரியும்கிறதாலே விட்டுர்றேன். அந்தக் காலத்துலே தக்கணத்துலெ எழுத்து ரெண்டு வகை; ஒண்ணு வட தமிழ் நாட்டுலேயும், வடுகு நிலத்துலேயும் (அதாவது இன்னைய ஆந்திரா, கர்நாடகா), சோழர், சாதவா கனர், பல்லவர் அரசுகள்லே புழங்கியது; இன்னோண்ணு தென் தமிழ் நாடு, கேரளாவுலெ, பாண்டியர், சேர அரசுகள்லெ இருந்த வட்டெழுத்து. ரெண்டுக்குமே தமிழிங்குற பழைய எழுத்து அடிப்படை. வட்டெழுத்துத் தான் கிரந்த எழுத்தா மாறுனது. இதுலேர்ந்து தான், தெலுங்கு, கன்னடம், ஒரியா, சிங்களம், பின்னாடி தென்கிழக்கு ஆசியா நாடுகள்லே இருந்த பர்மிய எழுத்து, தாய்லாந்து எழுத்து எல்லாம் வந்துச்சு. இந்தக் கிரந்த எழுத்தோட தாக்கம் தமிழுக்கும், திராவிட மொழிகளுக்கும் ரொம்பவே இருக்கு. அது இந்த நாட்டோ ட கண்டு பிடிப்புத்தான். ஆனாக் கிரந்த எழுத்து வந்தது வடமொழியை எழுதுறதுக்கு; தமிழ் என்னும் மொழியை எழுதுறதுக்கு அல்ல.

சரி, நம்ம புலனத்துக்கு வருவோம்.

கொல்>ஒல்>ஒல்வை = காலம், நாள், பொழுது
ஒல்>ஒள்>ஓளி= சோதி, விளக்கம், சூரியன், சந்திரன், விண்மீன், மின்னல்
ஒளிமரம் = இதைச் வட மொழியுலே சோதிவிருட்சம்'னு சொல்லுவாக. வைரமுத்துக் கூட ஒரு திரைப்படப் பாட்டுலே 'சோதிமரங்கள்' பத்திச் சொல்லியிருக்காரு. இந்த இராமர் பிள்ளை கூட மூலிகை எரி பொருளுக்கு இதைத்தான் காட்டுனார்னு சொல்லுவாக.
ஒளி>ஓளிறுதல் = ஒளிகாட்டுதல்

ஒல்>அல்>அலர் = மஞ்சள், மஞ்சள் பூ
அல்>அலங்கல் = ஒளி, பூமாலை
அலங்கல்>அலங்காரம் = ஒளி நிறைஞ்சாப்புலெ தங்கம், பூ - இப்படிப் பலதும் வச்சுச் சோடிக்கிறது அலங்காரம்

அல்>அழு>அழல்= நெருப்பு
அழல்>அழி = அழிக்கிறது = தீக்கிரையாக்குவது.

அல்>அழு = அப்புவது. அழு>அழகு = மஞ்சள் பூசியது. அழகு' ன்னாலே ஒளிவிட்டாப்புலெ bright -ஆ இருக்கோணும். beauty -ங்கிறதெ அது தாணுங்களே. 'அழகிய முக'ங்குற போது 'அழகிய'ங்குற முன்னொட்டு ஒரு வினைச் சொல்லக் காட்டுதுல்லெ; அப்படின்னா அழகுவதுன்னா என்ன? அழகுவதுங்கிறதே மஞ்சப் பூசுறது தான், அண்ணாச்சி. மஞ்சளைப் பூசிக்கிட்டா, நம்மூர்லே யாருமே அழகுதான் அண்ணாச்சி, வியப்பா இருக்குல்லெ. அழகுக்குள்ளே மஞ்சள் இருக்குன்னு பலரும் விளங்கிக்கிர்றது இல்லெ.
அல்>அளர்= மஞ்சள்

அல்>அல்தம்>அத்தம்>அத்தாணி மண்டபம் = அரசன் கொலு வீற்றிருக்கும் பொன் வேலைப்பாடு கொண்ட மண்டபம்; பொன் வேலைப்பாடுன்னா, பொன் தகடு வேலைப்பாடுன்னு அருத்தம்.

அல்>எல்= ஒளி, சூரியன். (கிரேக்கக்காரன் helios னு சொல்லுவான். கொஞ்சம் தொடர்பைப் பாருங்க.)
எல்லி,எல்லை, எல்லோன் = சூரியன்.
எல்லை = yellow = மஞ்சள்; ஆங்கிலச் சொல்லு புரியுதா?
எல்லம்மா = ஒளித் தோற்றம் உள்ள கொற்றவை
எல்>ஏல்>ஏழல்>ஏரல்>ரேல = தெலுங்கில் கொன்றைக்கான பேரு.

எல்>எலும்பு = வெளிறிய மஞ்சள் தோற்றம் அளிக்கும் bone
எலுமிச்சை = வெளிறிய மஞ்சள் நிறம் கொண்ட ஒரு பழம்.

எல்>எழு>எழில்= அழகு (மறுபடியும் மஞ்சள் தொடர்பு), தோற்றப் பொலிவு
எழி>எழினி = அதியமானின் குடும்பப் பெயர், மஞ்சள் நிறக் காடு, மலைப் பகுதிகளுக்குச் சொந்தக்காரன். (ஏற்கனவே குதிரை/கொழுதை மலை பத்திச் சொன்னோமே)

ஒல்>உல்>உல்லரி = மஞ்சளான தளிர்
உல்>உலோகு>உலோகம் = மஞ்சளான பொன், மாழையின் பொதுப் பெயர், தாம்பரத்துக்கும் (செம்பு) இதுவே வட மொழியில் பெயராச்சு
உலோகம்> உலோகிதம் = செம்பு (வடமொழியிலெ இந்தச் சொல் லோகிதம்னு ரொம்பவே புழங்கி இருக்கு.)

எல்>இல்> இலகுதல் = விளங்குதல், ஒளி செய்தல்
இலகுதல்>இலங்குதல் = ஒளி விடுதல்
இலகுதல்>இலவுதல்>இலவம்>இலாவம்>இலாபம் = விளச்சல்லேயும், வணிகத்துலேயும், பொலிவா, மிகுதியாக் கிடைக்குறது. அதுனாலே இன்னைக்கும் , களத்துமேட்டுலெ நெல் அளக்குற போதோ, வணிகஞ் செய்யுறவுங்க எண்ணுற போதோ, இலாபம், ரெண்டு, மூணு.... அப்படின்னு எண்ணுவாக. தமிழ்லே profit என்பதற்கு இரண்டு சொற்கள் உண்டு அண்ணாச்சி, அதுலெ ஒண்ணு இலாவம், இன்னொண்ணு பொலிவு/பொலிவூட்டு
.
இலங்கு>இலங்கை = ஒளிவிடுற இடம்; காடெல்லாம் மஞ்சளாப் பூத்துதோ, என்னமோ தெரியாது. ஈழத்துக்காரங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கோணும். இல்லை, தங்கமே கிடைச்சுதோ, தெரியாது. இலம்>ஈலம்>ஈழம் = இதுவும் ஒளி விடுற இடம் தான். இலங்கை/ஈழம் பற்றிய பெயர்க்காரணம் இன்னும் பலவிதமாச் சொல்றாக' அதனாலெ, இந்த இலங்கை/ ஈழம் பத்தி நேரம் கிடைக்குற போது பார்க்கலாம்.

இல்>இலங்கு>இலக்கு>இலக்குமி = ஓளி விடுகிற தெய்வப் பெண் = திருமகள்

இலங்கு>இலிங்கு>இலிங்கம் = ஓளித் தோற்றம் காட்டும் சிவனின் அடையாளம். திருவண்ணாமலை பார்த்தவங்களுக்குப் புரியும். ஓளிதான் சிவனின் முதல் அடையாளம்; அதை இன்றைக்கு இருக்குற இலிங்கப் படிமத்தோடு ஒன்றுபடுத்துற தொன்மங்கள இங்கே சொன்னா கட்டுரை நீண்டுறும்; இலிங்கம் பத்தி விவரம் புரியாம, திரு.மலர் மன்னன் திண்ணை இதழ்லெ, இந்த வாரம்னு நினைக்கிறேன், எழுதியிருக்கார்; அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுத ஆரம்பிச்சேன், அப்படியே நிக்குது. அண்ணாச்சி, ஓரளவு மேலெ சொல்லியிருக்கு; மிச்சத்தை இன்னோரு நாள் தான் பார்க்கொணும்.

'யால்'னா தமிழ்லெ இருட்டு, கருமைன்னு அருத்தம். ஏகப்பட்ட சொற்கள்லெ யகர எழுத்து முதல்லெயோ, நடுவிலெயோ வந்து பின்னாடி ய>ஞ>ந அப்படின்னு பல இடத்துலே மாறி இருக்கு. மேலெ கூட ரெண்டு மூணு இடத்துலெ பார்த்தோம். இதப்பத்தி விவரமாப் பாக்கோணும்னா ப.அருளியோட "யா" ங்குற பொத்தகத்தை நீங்க படிக்கொணும். இதைப் பத்தி இணையத்துலே ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன், அண்ணாச்சி. தஞ்சாவூர் பல்கலைக் கழகத்துலெ இருக்குற திரு.அருளி ஒரு தலை சிறந்த ஆய்வாளர், அண்ணாச்சி. அவரு மாதிரி இன்னும் பல பேரு வரணும்.

யாழல் = இது ஒளி மங்கி வர்ற நேரம்; மாலைன்னு அருத்தம் (மாலைன்னாலும் ஒளி மங்கி இருட்டிக்கிணு வர்ற நேரம் தான்; மால் = கருப்பு)
ஒருபக்கம் இருட்டினா, இன்னோரு பக்கம் ஒளி மங்கி மஞ்சளா ஆவுதுன்னுதானே பொருள்.
யாழல்>ஞாழல் = பொழுது சாயுற நேரம், மஞ்சள் பூக் கொண்ட ஒரு மரம், அதாவது மயிற்கொன்றை மரம், புலிநகக் கொன்றை மரம். இங்கே ஒரு சிறப்புப் பாருங்க. ஒரு பக்கம் மஞ்ச நிறம்; இன்னோரு பக்கம் மயில் மாதிரி ஒரு கருப்புக் கலந்த பொட்டு/சாயல். இந்த நிறச் சேர்க்கைக்கு, ஞாழல்னு பேர் வச்சிருக்காங்க. ஞாழல்>நாழல்

எல்>யெல்>ஞெல்>ஞெலி = தீ; ஞெலிகோல் = தீ உண்டாக்கும் கோல்
ஞெல்>நெல் = மஞ்சளாக உள்ள கூலம்
நெல்>நல்>நலம் = மங்கலமான நடப்பு, (நெல்லு விளஞ்சு அறுவடை ஆச்சுன்னா நலம் தானே, அண்ணாச்சி! நலம், நல், நன்மை எல்லாமே இப்படித்தான் அண்ணாச்சி; நல்லதா முடியோணும்னா மங்கலமா முடியோணும்னு அருத்தம். நலமா இருக்கியான்னா, கெடுதல் இல்லாமெ மங்கலமா இருக்கியான்னு அருத்தம்.)

நல்>நல்கை>நகை = பொன்னால் செய்த அணி
நெல்>நில்>நிலவு>நிலா = மஞ்சள் ஒளி தரும் சந்திரன்
நெல்>நெல்லி = மஞ்சள் காய் தரும் மரம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, January 26, 2006

கொன்றையும் பொன்னும் - 4

சகர வரிசை:
----------------
இப்பச் சகர' வரிசைக்கு வருவோம். க்/ச் தான் போலி'ன்னு முன்னாடியே சொன்னேன்லெ அண்ணாச்சி!

கொல்>சொல் = சொலிப்பு, ஒளி
சொல்>solar = சூரியன் ஒளி
சொல்+ஐ = சொலை>சோலை>சுவாலை= flame; சொலி>சுவாலி = ஒளியிடு; இப்படித்தான் இங்கே, தமிழ்ச்சொல் வடமொழியாட்டம் பலுக்கப் படும்; நாமளும் இது அங்கேர்ந்து வந்தது போலிருக்குன்னு நெனச்சிக்கிடுவோம். இப்படித்தடுமார்ற சொற்கள் பல.
சொலை>சோலை = பொன்னிறப் பூக்கள் மலரும் மரங்களைக் கொண்ட காடு. இப்படித்தாங்க சோலைமலை = அழகர்கோயில்; மேலே பெரியாழ்வார் பாட்டுப் படிச்சீகளா?

சொல்=ஒளி, நெல் (மஞ்சளா இருக்கிற கூலம்).
சொல்>சொன்>சொன்றி = சோறு
சொல்>சோல்>சோலு>சோறு; மங்குனாப்புலே தான் இயற்கை அரிசிச் சோறு இருக்கும்; இந்தக் காலத்துலே வெள்ளை வெளேர்னு பாசுமதியோ, பொன்னியோ இருந்தாத்தான் பலருக்குப் புடிக்குது; இதுல்லாம் அறிவியல் பண்ண வேலைகள்.

சொல்>சோல்>சோலு>சோளு>சோளம் = இதுவும் மஞ்சளாக இருக்கும் இன்னொரு கூலம்

சொல்>சோல்>சோழன் = பொன், ஒளிதரும் சூரியனின் குலத்தவன்; பாண்டியன், சேரன் என்பதுக்கெல்லாம் வேரை வேற இடத்துலே பார்க்கலாம்.

சொல்+நம் = சொன்னம்>சொர்னம்>சொர்ணம் = தங்கம், நாணயம்; வழக்கம் போல வடமொழிப் பலுக்கு உள்ளே வந்துருது பாருங்க.
சொர்ணம்>சுவர்ணம்>சுவர்ணகா = வடமொழியிலெ கொன்றைக்கு உள்ள பேரு.
சொன்னம்>சொன்னல்>சொனாலி = வங்காளிலெ கொன்றைக்குப் பேரு. சொன்னல்> சொந்தல்>சொந்தால்னும் வங்காளிலெ வரும். அசாமியிலே சொனாறுன்னு பேரு (அந்தக் காலத்துலே அறுபதுகள்லெ "சோனாரே, சோனாரே" ன்னு ஒரு பேர் பெற்ற இந்தித் திரைப்படப் பாட்டு, ஆராதனான்னு நினைக்கிறேன். தங்கமானவளேன்னு காதலியக் கூப்பிடுவான்.)

சொன்னம்>சொன்னகாரன் = பொன் வேலை செய்யுற தட்டான்
சொல் +நை = சொன்னை>சோனை>சோணை= தங்க நிற ஆறு. விகாரை மாநிலத்துலே (பீகாருலெ), பாடலிபுரத்துக்கு பக்கத்துலே இருக்குற ஆறு. கங்கையும் சோனையும் அங்கே பண்பாட்டுலே முகமை. கங்கை கருப்பு; சோணை வெளுப்பு; தங்க நிறம்; (நிறம் வச்சு ஆத்துக்குப் பெயரிடுறது நெடுக உள்ள வழக்கம் தான். நம்மூர்லே பொன்னி = தங்கம், வையை = வெள்கை = வெள்ளி, தாம்பர பெருநை = செவப்பு; ஆறுகள் பத்தி ஒரு முறை சொல்லியிருக்கேன், அண்ணாச்சி; அதை இன்னொரு முறை வேற சமயத்துலே பார்க்கலாம்.)

சோணம் = பொன், தீ, சிவப்பு
சோண அசலம்> சோணாசலம் > சோணேசலம் = திருவண்ணாமலை (அசலம்னா மலை; அசையலம்>அசலம் = அசையாதது; வடமொழிலே பெருகிய வழக்கு; இந்த ஊருக்கும் சோதிக்கும் உள்ள தொடர்பு தெரிஞ்சது தானே; நெருப்பை வச்சு இந்த ஊரு ரொம்பப் பெரிசாச்சு; எல்லாரும் இப்ப "கிரிவலம்" போகத் தொடங்கிட்டாக! அஞ்சு பூதத் தலத்துலே இது நெருப்பு. திருக் காலத்தி = காற்று; கால்னாக் காற்று; திருக் கச்சி = காஞ்சிபுரம் = மண்; திரு ஆனைக்கா = நீரு; தில்லை = காய வெளி; ஒண்ணொன்னும் ஒவ்வொரு மாதிரி; ஆனாப் பார்த்துட்டு வாங்க. விட்டுராதீங்க! நான் பார்த்துட்டேன்.)

சொர்ண பூமி = சுமத்திராத் தீவு. இயற்கை எழிலோட, தங்கநிற பூக்கள் சிதறிக் கிடக்கிற தீவு; (இல்லை தங்கமே அங்கு கிடைச்சுதோ என்னவோ தெரியாது.)

சொல்+கு = சொக்கு = தங்கம். (சொக்குத் தங்கம்' ங்கிறது இரட்டைக் கிளவி.) மதுரைச் சொக்கன் பொன்னானவன்; ஏன்னா அதுதான் அவன் நிறம்.; சொக்கிப் போனான் என்றால் சொலிப்பைக் கண்டு வியந்து போனான்னு பொருள்; சொக்கம்>சொர்க்கம் = 'பொன்னுலகு'ங்குற கற்பிதமான மேல் உலகு; இங்கேயும் வடமொழிப் பலுக்குங்குறதாலே நாம குழம்புறோம். தங்கம் கிடைக்காத, தங்கம் கொறச்சுப் புழங்குன நாட்டுலே சொக்கம்னு சொல்லு வராது அண்ணாச்சி; பொன்னுலகுங்குற கற்பிதம் முழுக்க முழுக்கத் தமிழ்க் கற்பிதம் தான்.

சொக்கம்>சொகம்>சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; சுகமா இருக்கீங்களா என்றால் சோர்வில்லாமல் முகத்திலே ஒளிவிடுறாப்புலே இருக்கீங்களான்னு அருத்தம். health ங்குறதுக்கு இப்ப நாம அந்தச் சொல் தான் புழங்குறோம். வெள்ளைக்காரன் கொழிதா இருக்கீங்களான்னே கேக்குறான். கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம்.

சொல்+தி = சொல்தி>சோதி = ஒளிவிடுகிற நெருப்பு
சொல்தி>சொல்தகம்>சோதகம்= தூய்மை செய்தல்
சோதனை = உலோகங்களின் தரத்தைச் சோதித்தல். (அந்தக் காலத்துக் கல்லூரிப் புகுமுக வகுப்புலெ (Pre-University), அல்லது இந்தக் காலத்து +2 படிப்புலெ, flame test னு ஒரு வேதியல் முறை. Bunsen சுவாலையில், தெரியாத உப்பைக் காட்டி, சுவாலையின் நிறம் மாறுறத வச்சு, இந்த மாழையின் உப்பாக இது இருக்கும்னு சொல்றோம்லெ, இது தான் அண்ணாச்சி சோதிக்கிறது. பாருங்க, அடிப்படை வேதியல், தமிழ்ச் சொல்லைச் சொன்னாலெயெ நெருப்போட தொடர்பைக் காட்டி வெளிப்படுது! இதுக்குத்தான் தமிழ்லெ அறிவியல் வரணும்னு சொல்றோம். "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"ன்னு சரியாத்தான் தொல்காப்பியர் சொல்லியிருக்கார். யாரு செய்யுறம்கிறா? உள்ளதுக்கே தொள்ளைக் காதான்னு ஆயிப் போச்சுது; அஞ்சாப்பு மட்டுக்கும் கூடத் தமிழ் இருக்குமான்னு ஆயிப் போச்சு; என்னத்தச் சொல்றது, விளங்காத பயக, கோட்டிப் பயக, பெருகிட்டாய்ங்க.)

சோதி>சோதியர்>சோதிஷர்>சோதிடர் = விண்ணிலெ ஒளிவிட்டு இருக்குற விண்மீன்கள், கோள்களை வச்சு எதிர்காலத்தைக் கணிக்கிறவர்.
சொல்>சொலு>சொலுவு>சொருவு>சொரூவம்/சொரூபம் = சொலிக்கிற திருமேனி/படிமம்/தோற்றம்; சொல்லு வடமொழி; வேரு தமிழு.

சொருபு>சோபு>சோபை>சோபிதம் = ஒளி; மறுபடியும் வடமொழிச் சொல்

சொல்>சோதி>சோடிப்பது= ஒளி பொருந்திய வகையில் அலங்காரம் பண்ணுவது; மதுரய்க்காரய்ங்க சாமானை ஜாமான்னு, மதுரையை மெஜுரான்னு ஏதோ ஒப்பனையாச் சொல்றாப்புலே சொல்லுவாய்ங்க; அது மாறி சோடியை ஜோடின்னு சொல்லி அதன் அடிப்படையை நாம மறந்துட்டம்.

சொலி>சொலித்து >சொத்து = பொன். அந்தக் காலத்தில் பொன்னு தாங்க சொத்து; மத்ததெல்லாம் பின்னாலெதான்; ஏன்னா பொன்னு தானே செலாவணியா இருந்துது. பணமே பொன்னு தானுங்களே!; பொன்னு இல்லைன்னா மனுசனை மதிக்க மாட்டான்; பொன்னுக்கு வீங்குற ஆளு உலகத்துலேயே தமிழங்க தான். இப்போ சமீபத்துலெ Time தாளிகை ஒரு கட்டுரை போட்டிருந்தது, படிச்சீகளா? பொன்னுன்னா நம்மாட்களுக்குப் பித்து.

சொல்>சொய்>சொய்ம்>சொம் = சொத்து= பொன் (ல்/ய் போலி); சொத்துக்குரியவன் சொந்தக்காரன். (எங்கூர்ப்பக்கம் தந்தை வழியைப் பங்காளிம்பாய்ங்க. தாய் வழியை தாய புள்ளைக'ம்பாய்ங்க. பங்காளி சொந்தக்காரன்; தாயபுள்ளை - உறவுக்காரன்; உறவுக்காரனுக்குச் சொத்து இல்லை. சொந்தக்காரனுக்குச் சொத்து வரலாம்; அண்ணன், தம்பி, பெரியப்பா புள்ளெ, சித்தப்பா புள்ளெ இப்படித் தானுங்களே சொத்துப் பிரிக்கிறது. மாமன், மச்சானுக்கு அன்பாலே கொடுத்தாத் தான் உண்டு);

சொல்>செல்>செல்வம் = சொத்து, அழகு, செழிப்பு, பணம், பொருள்; செல்வந்தன் னா பொன்னு போல நிறைய வச்சிருக்கிறவன்னு பொருள்.

செல்>செலியம் = தங்க நிற ஊடாடும் பசிய இலாமிச்சைப் புல்

சொல்>சால் = நிறைவு; சாலுதல் = நிறைதல்; சாலி = செந்நெல் (இது ஒருவகை கருஞ் சிவப்பு; ரத்தம் ஓடுற போது சிவப்பாத் தெரியும்; ஆனாச் செறிந்து (concentrated) உறையுற போது கருப்பாக் காட்டும். சிவப்புக் கருப்பின் தொடர்ச்சியை மாந்தன் புரிஞ்சிக்குனதே ரத்தத்தெ வச்சுத் தான்), சாலிங்குறது நெற்பயிரின் பொதுப்பெயர். இந்தோனேசியாவுலெ இருக்குற சாவகத் தீவுக்கு சாலித் தீவுன்னும் ஒரு பேரு. (சாவகம்'கிற பேரு இன்னோடு வகையிலே 'யா' - 'சால்' - 'ஆச்சா' மரத்தோட தொடர்பு; அதை இங்கே நான் சொல்லலை; அதுவும் தெரிஞ்சுக்க வேண்டியது தான். வேறொரு முறை பாக்கலாம்.) கவுனி அரிசின்னு ஒரு அரிசி கருப்பாவும், கருஞ் சிவப்பாவும், சிலப்போ வெளிறிய சிவப்பாவும், பருக்கை ஒண்ணுக்கொண்ணு ஒட்டிக்கிறாப்புலெ இருக்கும். அது மலேசியா, இந்தோனேசியா, மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ரொம்பக் கிடைக்கும். இந்தப் பக்கங்கள்லேர்ந்து எங்கூருக்கு இதை விரும்பிக் கொண்டாருவாக. அண்மையிலே போன வருசக் கடைசியிலே மலேசியாவின் காழக (காடக>கெடாக>kedah) மாநிலத்துக்குப் போன போது நானும் விரும்பி வாங்கியார்ந்தேன்; சீனி, தேங்காய்ப் பூ, எல்லாம் போட்டுச் செய்ஞ்சா, நல்லாச் சுவையா இருக்கும் அண்ணாச்சி; இப்பச் சென்னையிலும் கிடைக்குது. ஆனா, இது கேரளாவிலே கிடைக்குற சிவப்பரிசின்னு நினச்சிடாதீக, இது வேறே வகை. ஒரு தடவை வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க. இந்தக் கவுனி அரிசி தான் அந்தக் காலத்துச் சாலி அரிசி);

சாலேயம் = செந்நெல் விளையும் நிலம்

சால்>சால அக்கரம்> சால அக்ஷரம் > சாலாக்ஷரம் >சாலேக்ஷரம்> சாளேக்ஷரம் >சாளேட்சரம் = வெள்ளெழுத்து. மங்கிப் போன எழுத்து. மறுபடியும் ஒளி, மஞ்சள் தொடர்பு (அக்கரம் னா எழுத்து; அகரம், ஆகாரம், ஈகாரம்னு சொல்றோம் இல்லியா; அந்தவகையிலே இது அக்கரம்; இது தமிழ் தான், அண்ணாச்சி; அட்சரம்னு சொல்லி மூலம் தெரியாமப் பலர் இருக்கோம். தமிழ் மூலம் தொலச்சு, உருப்படாமப் போனது, போதும். இனிமேல் ஆகப் பிடாது.)

சால்>சாய்>சாயம்= நிறம், வண்ணம்; காலை நேரம் எப்படி ஒளியோடு தொடர்பு இருக்கோ, அப்படித்தான் சாயுங் காலமும்; பொழுது சாயும் போது மஞ்சளா ஆகும். மஞ்சள் தானே நிறம்கிறதுக்கு பொதுவான சொல்லா ஆயிருக்கு (கெழு'ங்குற சொல்லை முன்னாடிப் பாத்தமே!); பொழுது சாய்கிறச்சேங்குறதெ சில ஆட்கள் சாய்கிறச்சே>சாய்ரட்சை என்று எழுதி அதையும் வடமொழின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாய்ங்க. வடமொழிக்குத் தெண்டனிட்டே நாம பெருமிதத்தை இழந்து தடுமாறிப் போயிட்டோ ம்.

சாய்>சாயல் = நிறம், அழகு, மஞ்சள்; சாய்>சாய்மி>சாமி= பொன் நிறம்; சாமி>சுவாமி = பொன் நிறம் கொண்ட சிவன்; இதெப் பெரும்பாலும் பெருமாளுக்குச் சொல்றதுல்லே; ஓரொரு சமயம் விதிவிலக்காச் சிலர் விண்ணவனுக்குப் பயன்படுத்துவாக; அந்தப் புழக்கம் அருகியது.

சாய்>சாய்ம்புதல்>சாம்புதல் = நெருப்பு அடங்கிப் போதல்
சாம்பு>சாம்பல் = நெருப்பு அடங்கிய பின் கிடைக்கும் பொடி; கங்கின் மேல் சாம்பல் கிடக்குறதாலெ தான், சிவன் சாம்பல் பூசியவன் ஆகுறான்; சாம்ப சிவன் என்ற சொல்லாட்சியும் அப்படித்தான்; தொன்மம் பிறக்குறது இப்படித்தான். இயற்கைலெ ஒண்ணப் பார்ப்போம்; அப்புறம் கற்பனை பறக்கும்; கொஞ்சம் அலங்காரம் பண்ணுவோம்; தொன்மம் பிறந்திடும். சிலர் அதை அப்படியே எழுதியிருக்குற படியே நடந்ததா நம்பிருவான். என்ன பண்றது சொல்லுங்க?

நெருப்பின் சுவாலை ஆடுவதால் தான் சிவன் நடவரசன். சுவாலையின் அடியும் முடியும் காண முடியாததால் தான், சிவனின் அடியும் முடியும் காணமுடியாது என்ற தொன்மம் பிறந்தது. (திருவண்ணாமலையில் தான் இந்தத் தொன்மம் உண்டு.) நெருப்பும், கரியும் கூடச் சேர்ந்து இருப்பதால் தான் அவன் அறுத்த(அர்த்த) நாரி; ஆணும் பொண்ணும் சேர்ந்ததா ஓர் உருவகம். குளிர்ச்சியான நீர் நெருப்பை அணைப்பதும், குளிர்ச்சி/பச்சையை அம்பாளுக்கு உரியதாச் சொல்றதையும் எண்ணிப் பாருங்க அண்ணாச்சி. இந்தத் தொன்மங்களுக்கு ஒரு ஆதிகால அடிப்படை இருக்கோணும்லெ. தொன்மங்களெத் தூக்கி எறியோணும்னு நான் சொல்லலை; அதனோட பொருளைச் சரியாப் புரிஞ்சுக்கோணும்னு சொல்றேன். தொன்மம் ஒருவகையில் நம்ம பண்பாட்டு வளர்ச்சியின் தொகுப்பு.

சம்பா நெல் = மஞ்சள் நிறம் கூடிய ஒரு வகையான உயர்ந்த வகை நெல். (சம்பா நெல்லெல்லாம் எங்கேயோ போயிருச்சு அண்ணாச்சி, நான் சின்னப் புள்ளையா இருந்த போது சாப்பிட்டிருக்கேன்; இப்போ ஐயார் எட்டும் (IR 8), இருபதும், பொன்னியும் தான் பலருக்குத் தெரியுது; ராமஞ் சம்பா சாப்பிட்டு இருக்கீகளோ? சுவைன்னா அதுதான் சுவை; பாசுமதி கணக்கா இருக்கும். குங்குமச் சம்பா'ங்கிறது இன்னோரு வகை; சம்பா பழைய காலம் அண்ணாச்சி.)

சம்பா>ஜம்பா = மராத்திலெ கொன்றைக்கான பேரு.

சொல்>சுல்>சுல்லு = வெள்ளி; சுடரா ஒளியா வெள்ளையாத் தெரியுற மாழை; சுல்>சுல்வம் = வெள்ளி (இங்கிலீசுக் காரன் silver னு சுருக்காச் சொல்லிருவான்.) சுல்வம்கிறது வடமொழியிலும் இருக்கும் ஒரு பலுக்கு.

சுல்>சுழியச்சு = பொன்னை உருக்கி வார்க்கும் அச்சு
சுழியாரை>சுழாரை = பொன்னா விரைச் செடி
சுல்>சுள்>சுள்ளி = மயிற் கொன்றை மரம் (இதைத் தமிழ்லெ சொல்லாம, பல ஆளு gul mohar னு சொல்லிட்டுத் திரியுறாக. கொஞ்சம் உள்ளே போங்க அண்ணாச்சி. கொல் தான் கொன்றையின் வேர்னு சொன்னேன்லே; கொல் gul ஆகிருக்கு. மயில்>maur>mohar னு ஆகும். (லகர, ரகரப் போலி) maurya என்பதும் மயில்லே வந்தது தான். வேறே ஒண்ணுமில்லே, அவுங்க கருப்பு, அவ்வளவு தான். அதுவரைக்கு இருந்த சில அரச பரம்பரை சிவப்பு; உயர்ந்த சாதி; இவய்ங்க கருப்பு; தாழ்ந்த சாதி; ஆனாலும் தோள் வலியால் அரசனாயிட்டாய்ங்க; மக்கள் இவுங்களைக் கருப்பு ராசான்னு ஆக்கிப் புட்டாய்ங்க. gul mohar ங்குறது நம்ம மயில் கொன்றையைத் தலைகீழாப் போட்டது தான்.
சுள்>சுளுந்து = தீப்பந்தம்; சுள்ளி, சுளுந்துங்குற சொற்களைப் பார்த்தா மயிற் கொன்றையையும் ஏன் flame of the forest ன்னு சிலர் சொல்றாங்கன்னு விளங்குதா? உண்மையுலே flame of the forest ங்குற பெயர், முருக்க மரம் / பலாச மரம் / புரச மரத்துக்குத் தான் சரி வரும்; ஆனாலும் பலர் மயிற் கொன்றையையும் அப்படிச் சொல்றாக.

ஒண்ணு சொல்லோணும் அண்ணாச்சி! நீங்கள்லாம் கோவிச்சுக்கப் படாது. நம்மூரு மரங்களை, படம் விளக்கமெல்லாம் கொடுத்து, நம்மூருப் பெயர்களோடும், புதலியல் (botany) பெயரோடும் போட்டுப் பொத்தகம் எல்லாம் வந்திருக்கு; கொஞ்சம் வாங்குங்க; படிங்க. நம்மூரு இயற்கையைப் படிக்காம, செடார், பைன் அப்படின்னு ஊசியிலைக் காடு பத்தியெல்லாம் சட்டுப் புட்டுன்னு இந்தக் காலத் தமிழ்ப் புள்ளைக சொல்லுது.

அட, மக்கா புள்ளெ, கொன்றைன்னா தெரியாமக் கிடக்கியேன்னு மனசுக்குள்ளே வருத்தமாக் கிடக்கு. நம்மூரு மரம், செடி, கொடி, பூ, காய், பழம் தெரிய வைக்காம, நம்ம குழந்தைகளுக்கு, நம்முர எப்படிப் புடிக்க வைக்க முடியும், புரிஞ்சிக்க வைக்க முடியும்னு சொல்லுங்க?

அன்புடன்,
இராம.கி.

Wednesday, January 25, 2006

கொன்றையும் பொன்னும் - 3

'கொல்' எனும் அடிவேர்:
-------------------------------
ககர வரிசை:
----------------
இப்பக் கொன்றையோட வேர்ச்சொல்லுக்கு வருவோம். கொன்றைங்கிறதை மலையாளத்திலே "கொல்+நை = கொன்னை" ங்கிற முறையிலே சொல்லுவாக. தமிழ்லெ "கொல்+ந்+தை = கொன்றை" ங்கிற முறையிலே வரும். மலையாளத்துலே கொல்தை>கொருதை>கிருத மலம் 'னு ஒரு வட மொழிப் பேரும் இருக்கு. மதுரை நகரத்துக்கு முன்னாடி, வையை ஆறு ரெண்டாப் பிரிஞ்சு மறுபடியும் மதுரைக்கு வெளியே சேர்றதாச் சொல்லுவாக. நம்ம மருத்துவர் செய பாரதி கூட முன்னாடி மடற்குழுக்கள்லெ சொன்னாகள்லெ, ஞாபகம் இருக்கா? இப்படிப் பிரிஞ்ச வைகைக் கிளைக்கு கிருத மால்' னு வடமொழிப் பெயர் சொல்லுவாக. அதுவும் கொன்றை மரம் ரெண்டு கரையிலே இருந்ததாலே வந்ததோன்னு நினைக்க வேண்டியிருக்கு. இதே ஒலியோட கூர்ச்சரத்துலெ, கர்மாடோ ன்னு கொன்றைக்கு ஒரு பேரும் இருக்கு.

கொன்னை, கொன்றை என்ற ரெண்டுக்குமே 'கொல்'ங்கிறது தான் வேர்ச்சொல். 'கொல்'லை வச்சு ஏகப்பட்ட சொற்கள் தமிழ்லெ இருக்கு அண்ணாச்சி!. எல்லாமே மஞ்சள், ஒளி, பொன்னுங்கிற பொருளும் அதுலேந்து கிளர்ந்த பொருள்களும் தான். இது எப்படின்னா, பொல்>பொன், பொல்>பொல்லம்>பொலம் - கிறாற் போல வரும்.

கொல்>கொல்லம்>கொலம்>கோலம். கோலம்னா தங்கம் தான். பின்னாடித் தான் மகிழ்ச்சி, அழகுங்கிற பொருள் எல்லாம் வந்திருக்கு கோலாகலமாக இருந்தான்னு சொன்னா, செல்வத்தோட மகிழ்ச்சியா இருந்தான்னு அருத்தம்.

கோலாள புரம் தான், குவலாளபுரம்னு ஆயிப் பின்னாடி கோலார்-னும் ஆச்சு. நம்ம நாட்டுலெக் கால காலமாத் தங்கம் கிடைக்கிற ஊரே அது தானுங்களே (இல்லைன்னா, 3 கிலோ மீட்டர் ஆழத்துக்குச் சுரங்கம் இருக்குமா; எவ்வளவு காலம் எத்தனை பேரு தோண்டியிருக்கோணும்; உலத்துலெ ரொம்ப நாள்பட்ட சுரங்கம் இதுதான்னு சொல்றாக, அண்ணாச்சி).

இந்த ஊருதான் ஒரு காலத்துலே கங்கர்களின் தலைநகர். [கொஞ்ச காலம் தான் காவிரி பொறக்கிற தலைக்காடு (இல்லை, சிலபேரு சொல்றாப்புலெ தழைக்காடு) ஊரு தலைநகரா இருந்துருக்கு.] அன்னையிலேந்து இன்னை வரைக்கும் கோலாரைப் புடிச்சவன்தான் தென்புலத்துலே பேரரசன். இதப் புடிக்க தமிழ் மூவேந்தர்கள் எல்லாக் காலமும் சண்டை போட்டுத்தான் இருந்திருக்காக. சங்க காலத்திலேந்து வரலாத்தைப் பார்த்திங்கன்னா தெரியும், அண்ணாச்சி. தமிழ் நாட்டிலே பெரும்பாலான சண்டை கொங்கு நாடு, கங்கர் நாடு, கட்டியர் நாடு இப்படி எங்கெல்லாம் உலோகம் கிடைக்குதோ அதுக்குத்தான் சண்டை. இந்தக் கோணத்திலே, பொருளியல் நோக்குலே, தமிழக வரலாத்தைப் பார்த்தாப் பல சங்கதி விளங்கும். ஆனா, நாம பார்ப்போமா?

இந்தக் கொல்-தான், தாதுன்னு இல்லாமேத் தானாகவே கிடைக்கிற உலோகம். முதல்லே கிடைச்சதும் கூட இதுதான். அதனாலே பின்னாடிக் கிடைச்சதுக்கெல்லாம் இதுவே பொதுமைப் பெயராச்சு. விதப்புப் (special) பெயரோடெ இதச் சேர்த்துக்குவாக

பொன் - தங்கம். இதையே உலோகங்கிற பொதுப்பெயரா ஒருகாலத்துலே பயன்படுத்தியிருக்காக. பின்னாடி,
செம்பொன்- - செம்பு - சிவந்த மாழை - தாம்பரம் (copper),
வெளிம்பொன் - வெண்பொன் - வெளிரிய மாழை - வெள்ளி (silver),
இரும்பொன் - இருண்ட, கருத்த மாழை - இரும்பு (iron)

இப்படிப் பயன்பாடு கூடியிருக்கு. பாருங்களே! இங்கிலீசுக்காரன் சொல்லுற சொல்லும் இரும்பை அப்படியே அச்சடிச்சாப்பிலே இருக்கு பாருங்க. எங்கேயோ தொடர்பு இருக்கோணும்ட்டு தோணலை. இரும்பு நுட்பம் எங்கேர்ந்து கெளம்பிருக்கோணும்னு பார்க்கோணும்; (செம்பொன்கிறதுக்கு செம்பு மட்டுமில்லாமத் தூய்மையான, மாத்துக் கொறையாத, பொன்னுன்னும் ஒரு பொருள் உண்டு.)

அதே போல 'கொல்' லை வச்சு வேலை செய்ஞ்சவன் கொல்லன். இன்னைக்கு 'பொற் கொல்லன்'னு சொல்லுறது 'நீள வரிசை'ன்னு சொல்ற மாதிரி. வரிசைன்னாலே நீளம்தானே அண்ணாச்சி! இருந்தாலும் சேத்துச் சொல்றோம்லே!. அதே சமயம் இந்தக் காலத்துலே எத்தனை பேருக்கு 'கொல்' லுன்னா தங்கம்னு விளங்கும்? இரும்புக் கொல்லன்-னு நினைச்சுக்குவோம். அப்படியே பயன்படுத்தவும் செய்வோம். பின்னாடிக் கொல்>கொழு ன்னு ஆனப்புறம் இரும்பு மாழைங்கிற பொருளிலே, ஏர்லெ பூட்டியிருக்கிற கொழுவையும் சொல்ல ஆரம்பிச்சாக. இரும்புங்கிற பொருள் வந்த பிறகுதான், 'கொல்' ங்கிற இறப்புப் பொருள் கூட வந்திருக்கணும்! இறப்புப் பொருளை இன்னோரு வாட்டி பார்த்துக்கலாம். இப்ப மங்கலமா வர்றதப் பாப்போம், அண்ணாச்சி.

கொல்>கொலு; அரசன் கொலு வீற்றிருக்கிறான்னா தங்கக் கட்டில்லே திருவோலக்கமா உக்கார்ந்திருக்கிறான்னு அருத்தம். (திரு ஓலக்கம் = தர்பார்); திரு ஓலை மந்திரம் - அரசன் சொல்றதை எழுதுறவர். அத்தாணி மண்டபத்துலே தான் அரசன் கொலு இருக்குறது.

கொல்-லுலே ஆனது தான் கொலுசுங்கிற காலணி. சின்னப் பொம்பிளைப் புள்ளைக கொலுசுன்னா உசுரை விட்டுறுவாக. பின்னாடி வெள்ளிக் கொலுசுன்னு ஒண்ணு வந்துச்சு, கிட்டத்தட்டக் கடலை எண்ணெய் மாதிரி. எத்தனை பேருக்கு எள்ளின் நெய் தான் எண்ணெய்-னு தெரியும்? விதப்புச் சொல் பொதுமைச் சொல்லா மாறிப் பின்னாடி இன்னொரு பெரிய அளவிலே மீண்டும் விதப்புச் சொல்லாத் தென்படும். இது புரியாம, மேலோட்டமா பார்த்தா எல்லாம் கடலை எண்ணெய் மாதிரி முரணாத் தான் தெரியும்.

கொலு>கொழு. கொழு கொழுன்னு இருக்கான்னா செல்வத்தோடு இருக்கான், சதை போட்டிருக்கான்னு அருத்தம். கொழுத்தாலே கொஞ்சம் மஞ்ச நிறம் ஊடெ போட்டிரும்லே அண்ணாச்சி, பசலை நிறம் மாதிரி. பசலைக்குத்தான் கொன்றையை உவமையாச் சொல்லியிருக்காகளே! கொழுத்தவன் செழுத்துருவான். தமிழ்லே கொ-வும் சொ/செவும் போலி. செழுப்புலே பொறந்தது செழிப்பு.

கொழிக்கிறது - ன்னா, சொளகுலே அரிசி புடைக்கிறப்ப, எடுத்துப் போடுறது, தெளிக்கிறது தான். கொழிக்கிறதுங்கிற சொல்லே, நம்மூர்லே தங்கம் கிடைச்சு panning பண்ணிருக்கோம்னு காட்டுது. அப்படி இல்லைன்னா, இந்தச் சொல்லு வரவே வாய்ப்பில்லை. செல்வம் கொழிக்கிறதுங்கிற பொருளும் தங்கம் இருப்பதைத்தான் சொல்லுது.

கொன்றை மரம் முல்லை நிலத்தைச் சேர்ந்தது. முல்லைக் காட்டிலே கொன்றையா, மஞ்சப்பூவாக் கொட்டிக் கிடந்தா, 'கொல்லை'ன்னுதானே சொல்லுவோம். கடைசிலே கொல்லைன்னாலே காடுன்னு ஆச்சு. இப்பக் கொல்லைக் காடுன்னு சொல்றோம். மறுபடியும் டிரங்குப் பொட்டி கதைதான்.

இன்னும் பாருங்க, கொழுந்துன்னா புதிய இளவட்டான இலைன்னு அருத்தம்; புதிய இலை மஞ்ச வட்டாக் கிளிப்பச்சையா, அதே சமயம் குராலும் (brown அல்லது light red) கலந்து தானே இருக்கும். தீ கொழுந்து விட்டு எரியுதுன்னாலும், மஞ்சளா எரியுதுன்னு பொருள். (கொழுஞ்சோதி - நம்மாழ்வார், நாலாயிரப்பனுவல் 3102).

இதையே தான், கொழுந்து>கொழுது = gold -ன்னு இங்கிலீசுக்காரன் தங்கத்துக்குச் சொல்லுறான்.

கொழு>colour = நிறம்; கொழு>கோழ் = கொழுமை; கொழுமை - ன்னாலே நிறம் - கிற பொதுவான பொருள்தான். கொழு>கோழ் = கொழுமை; கொழுமுதல்ங்கிறது கழுமுதலாவும் மாறும்; நிறைஞ்சதுன்னு அருத்தம்.

கொழுது>கொழ்து>கோது>கோதுமை = மஞ்சளா இருக்குற ஒரு கூலம் (ஒரு காலத்துலே வடபுலத்துலே தமிழ் உறுதியா இருந்திருக்கோணும் அண்ணாச்சி; காரணமில்லாம தமிழ்ச்சொற்கள் எழுவது இல்லை.)

கொழு>கூழை= பொன். கொழு>கொழிஞ்சி = கிச்சிலி; நாரத்தை மரம்; மஞ்சள் சாயல் உள்ளதுதான் நாரங்கை நிறம் (நாரங்கை நிறத்தைத் தான் Orange நிறம்னு சொல்றோம்.)

பொறப்புட்ட இடத்துலேந்து பொன் துகளையெல்லாம் சேர்த்துக்குணு வர்ற ஆறு பொன்னின்னு ஆனாப்புலே, கோழியூர் = உறையூர் -ன்னு சொல்லுறதுக்கும் தொடர்பு இருக்கோன்னு தோணுது. (கோழிப் பறவை வந்துது; யானையை எதுத்துது; அதுனாலே வீரம் விளைஞ்ச மண்ணுன்னு சொல்லி சோழன் தலைநகரை அங்கே வச்சாங்கிற புனைகதையை என்னாலே ஏத்துக்க முடியலை.)

'கோழித்தலைக் கந்தகம்' னா சிவந்த கந்தகம் னு அருத்தம். கோழியோட கொண்டை சிவந்ததுதானே! அப்பக் "கோழி"ன்னா சிவந்தது; பொன்னிறம்னு அருத்தம் இருக்கப்படாதா? இதுனாலே தான் கோழியூர் = உறந்தை = பொன்னிக்குப் பக்கத்துலே இருக்குற பெரிய ஊருங்கிற எண்ணமே எனக்கு மேலே வந்தது. இருந்தாலும் இப்போதைக்கு என்னாலெ உறுதியாச் சொல்ல முடியலை.

இந்தப் பொன்னியாறு எத்தனையோ தரம் தடம் மாறி ஓடியிருக்கிறதா புவியியலார் கூறியிருக்காங்க. பொன்னிக்கு பக்கத்திலே இருந்ததாலே தில்லைக் கோயில் பொன்னம்பலம் ஆச்சுதோ, பின்னாடி பொன் வேய்ஞ்சாங்களோன்னும் தோணுது. கொள்ளிடம் பத்தியும் நல்லாப் பார்க்கோணும்.

கொல்+கை = கொற்கை; கொன்றை மரம் நெறைய இருந்திருக்கோணும். "கக்கெகிடா" ங்குறது கொன்றைக்குக் கன்னடத்துலெ பேரு.

இதே போல கேரளத்துலே இருக்குற கொல்லத்திலும் கொன்றை நெறையப் பூத்திருக்கோணும். மங்களூருக்கு (இதுவும் மஞ்சள் தான் அண்ணாச்சி)ப் பக்கத்துலே இருக்குற கொல்லூர் (அதாங்க மூகாம்பிகை கோயில்) கூட மஞ்சளை ஒட்டித்தான்.

கொல்லி மலை - கொன்றை மரம் நிறைஞ்சு கிடந்த மலை; ஒரு வேளை கொல்-பொன் அந்தக் காலத்திலே இங்கே கிடைச்சுதோ, என்னவோ? எனக்குத் தெரியாது. தகடூர் அதியமான், குதிரை மலைக்குச் சொந்தக்காரன். அதியமான் நாட்டுக்குள்ளெ தான் கோலாரு இருந்துருக்கு; இன்னைக்கும் 24 காரட் தங்கத்தை எங்க பக்கம், அந்தக் காலத்துப் பொம்பிளைக 'குதிரைப் பொன்'னுன்னு சொல்லுவாக. (இல்லை, இது இரட்டைக் கிளவியா கொழுதுப் பொன்னான்னு தெரியலை; குதிரையும், குருதையும் போலியாச்சுதுங்களே! கொழுது>குருது>குருதை?) மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து பொண்ணு வீட்டுக்குப் பொன் கொண்டு போற போது குதிரைப் பொன்னாப் பாத்து வாங்கிட்டுப் போகணும். இல்லைன்னா மதிக்க மாட்டாக.

கொல்>கொலுவை>கொலவை; தென் தமிழ் நாட்டுலே, மறவர் பகுதி எல்லாம், மங்கலமான நேரத்துலே வளமா இருங்கன்னு வாழ்த்துறதுக்கு பொம்பிளைக கூட்டமா நின்னு தங்கள் வாய்க்குள்ளேர்ந்து ஒரு விதமான ஒலியைக் கிளப்புவாக, அதுதான் இந்தக் கொலவை. மங்கலமான ஒலி. கேட்டாத்தான் விளங்கும். படிச்ச நாம தான் புரியாமப் பொத்தகத்தைப் புத்தகம் ஆக்கி, பின்னாடிப் புஸ்தகம்னு ஆக்கிப் புட்டொம்லெ, அது மாதிரி இதெக் குலவைன்னு சொல்லிப் பொருள் விளங்காமெக் கிடக்கோம்.

கொல்>கொள்>கொள்ளி; ஒளி=நெருப்பு---> நெருப்புக் கட்டை
கொள்>கொளு = விளக்குதல், தீப்பற்ற வைத்தல்
கொளூ>கொளூந்து = தீச் சுவாலை

கொல்>கல்> கல்லம் = கல்லாரம் = மஞ்சள்; இதெக் 'கலேயம்'னு வடமொழிலே சொல்லுவாக.
கல்>கலை/களை = ஒளி, அழகு
கல்>கலன் - தங்கத்தால் ஆன அணி, பூண்
கல்>கலாதன் - தங்க வேலை, அணிகலன் செய்கிற தட்டான்
கல்>கலிப்பு - பொலிவு
கல்>கழு>கழுகு - கழுத்திலே பொன்னிறம் கொண்ட பறவை.
கல்>கழு>கழஞ்சு - பொன்னுக்கான ஒரு எடுத்தல் அளவை

கழு>கெழு>கேழ் =நிறம்; கொழு>colour = நிறம்; கெழுமிய = நிறைந்த = செல்வம் பொருந்திய. நிறத்துக்கும் நிறைவுக்கும் தொடர்பு மாதிரி கெழுவுக்கும் 'கெழுமிய'ன்னு ஒரு தொடர்பு. "அன்பு கெழுமிய மனைவிக்கு, அம்மாவுக்கு, அப்பாவுக்கு....," அப்படின்னு எழுதுறது ஒரு காலத்துலெ பழக்கம். அன்பு நிறைந்த - ன்னு பொருள்.

கல்>கன்>கனி; கன்னிப் போச்சுன்னா, சிவந்து போச்சுன்னு அருத்தம். மஞ்சளா ஆனாத்தானே காய் கனியும்.

கல்>கன்>கனகு>கனகம் = பொன்
கல்>கன்>கனம்>கணம் = ஒளிக்கதிர், 'கணகண'ன்னு எரியுதுன்னா ரொம்பவும் சுவாலையிட்டு எரியுது'ன்னு அருத்தம்.
கணம்>க்ரணம் (வடமொழி)>கிரணம் (மீண்டும் தமிழ்ப்படுத்தப்பட்டது)= ஒளிக்கதிர், (இப்படித் தமிழில் மூலம் இருந்து வடமொழி போய்ப் பின்னாடி மீண்டும் தமிழுக்கு வந்து சேர்ந்தது எக்கச் சக்கம், அண்ணாச்சி; கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தா, மூலம் விளங்கிரும்.)

க்ரணம்>ஹ்ரணம்>ஹ்ரண்ய = தங்கம் (வடமொழியில்)
ஹ்ரண்ய>ஹ்ரண்யன்>ஹ்ரண்ய கசிபு>இரணியன் (மீண்டும் தமிழ்ப் படுத்தப்பட்டது) = பொன்னவன் என்ற அரக்கன்

கணம்>காணம் = பொன், பொற்காசு

கல்+யாணம் = கல்யாணம் = மங்கலமான நிகழ்வு, நிறைந்த அழகு, பொன் (யாணம் =அழகு)

கல்>கால்>காலை; காலைன்னா, ஒளி மஞ்சளா, மெதுவா, கொஞ்சமா, வர்றது தானே? கால்தல்'னாத் தோன்றுதல்னும் அருத்தம். இருள் போய் ஒளி வர்றது, பொருட்கள் கண்ணுக்குத் தோன்ற வகை செய்யுது, இல்லைங்களா? காலைன்னா சூரியனும் கூட. (இந்த நேரம், காலம், நாள் பத்தி ரொம்பவே சொல்லலாம் அதை, இன்னோருதரம் பார்த்துக்கலாம் அண்ணாச்சி.).

கால்>காய்>காய்ஞ்சனம்>காஞ்சனம்>காஞ்சனி = மஞ்சள், பொன் (ல்/ய் போலி)

காஞ்சி = கரூருக்குப் பக்கத்துலெ இருக்குற நொய்யலாற்றுக்கு இன்னொரு பெயர், ஆக, மறுபடியும் கொன்றை மரத்தோடும், இரும்பொறை என்ற சேர அரசக் கிளையோடும் தொடர்பு.

காஞ்சிபுரம் = "நகரேஷு காஞ்சி"ங்குறது வடமொழிச் சொலவம்; நகரங்கள்லெ சிறந்தது காஞ்சின்னு சொல்லுவாங்க

கெழு>கிழு>கிழி = பொன்; (பொற்கிழின்னா ரெண்டு வகை. ஒண்ணு: பொற்சரிகையாலெ ஆகிக் கிழிச்சது; இன்னோண்ணு இரட்டைக் கிளவியா பொற்கிழி- பொன்னால் ஆன பொருள்)

கல்>கெல்>கில்>கிள்>கிள்ளி = சோழர்கள் பொதுமைப் பேர்லெ ஒண்ணு. கிள்ளி - ஒளியுடையவன்; சூரிய குலத்தவன்னு அருத்தம்.

கில்>கில்வலி = இந்திலே கொன்றைக்கு உள்ள பெயர்; இதைக் கிரால், சினார்னும் கூட அவுக சொல்றாக.

கிள்>கிளர் = ஒளி; கிளர்தல் = விளங்குதல்
கிள்>கிளத்தல் = சொல்ல வந்ததைப் புலப்படக் கூறுதல். (அதாவது தெளியவைக்கிறது, வெளிச்சம் போட்டு காட்டுறதுன்னு அருத்தம்.) கிளத்திக் காட்டுதல்>கிளச்சிக் காட்டுதல் (glass ன் தொடர்பு விளங்குதா/)

அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 24, 2006

கொன்றையும் பொன்னும் - 2

சிவநெறி, விண்ணெறிகளில் கொன்றை:
-------------------------------------
þதுவரைக்கும், தலைவன், தலைவி மட்டுந்தானே சங்க þலக்கியங்கள்லெ பார்த்தோம். þப்ப சிவநெறியிலெ கொன்றை பத்தி என்ன சொல்றாங்கன்னு பாப்போம். கொன்றைன்னா, சிவனுக்கு ரொம்ப பிடிச்சது. கொன்றை சூடி = கொன்றை மாலை சூடிய சிவன்.
"கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை" ன்னு ரொம்பச் சிறப்பா புற நானூறு - கடவுள் வாழ்த்துப் பாட்டுலெ வரும். "கொன்றை வேந்தன்" - னு þடைக்கால அவ்வையார் எழுதியதை நீங்க சின்னப் புள்ளையிலே படிச்சுருப்பீக.

"அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் கொன்றையஞ் சடை முடி மன்றப் பொதியினில் வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்" ன்னு சாத்தனார் சிலப்பதிகாரம்-பதிகம் 39-41- ல் சொல்லுவார். கல்லாடத்திலேயும் பல þடத்திலெ கொன்றையும் சிவனும் பற்றி வரும்.

கொன்றைப் புறவு அகற்றி - கல்லாடம் 1.21,
கடுக்கை மலர் மாற்றி - கல்லாடம் 2.9,
கடுக்கைஅம் சடையினன் - கல்லாடம் 82.15;
பொன் சுடர் விரித்த கொத்தலர் கொன்றையும் - கல்லாடம் 20.25-28,
கொன்றை அம் துணரில்செவ்வழி குறித்து - கல்லாடம் 56.1-6)

þப்படியெல்லாம் சிவநெறியில் கொன்றை சிவனோட சேர்ந்தே வரும்.

þன்னும் தமிழிசையிலெ கூடக் கொன்றை þருக்கு. கொல்> கொன்றை> கொன்றையந் தீங்குழல் = கொன்றையில் செய்த குழல்
கொன்றை> கொன்றையந் தீம்பாணி = சுத்த சாவேரி ( ச ரி2 ம ப த2 ச. þது ஐந்து சுரங் கொண்ட ஒரு திறப் பண்.)
முல்லைத் தீம்பாணியோட (மோகனத்தோட) þளி (பஞ்சமம்), குரலாக (சட்சமம்) ஆனது கொன்றைத் தீம்பாணி (சுத்த சாவேரி).

தமிழிசையிலெ ஏகப்பட்ட பேரை வடமொழியிலெ மாத்தித் தொலச்சு, பாட்டெல்லாம் வேற மொழியிலெ பாடித் தமிழிசையே þல்லைன்னு ஆக்கிப் புட்டாங்க. நாமளும், þதெல்லாம் விளங்காத சங்கதின்னு நினைச்சு, அப்படியே விட்டுட்டு, மெல்லிசை, திரைப்படம், ராப்பு, பாப்புன்னு போய்க்கிட்டு þருக்கோம். நமக்கும் பொறுமையோட சொல்லித் தரவும் ஆளில்லை. þப்படி மீட்டுக் கொண்டார்றது ஏகப்பட்ட வேலைங்க. þதுலெ þந்தக் காலத்துலெ வீ.ப.கா.சுந்தரனாரப் பாáட்டனுங்க. அவரு பாட்டுப்பாடச் சொல்லித் தர மாட்டாரு. ஆனா நம்ம பரம்பரை என்னான்னு சொல்லித் தருவாரு. அவரு பொத்தகங்களைப் படிங்க. அதைப் படிக்கப் படிக்கத் தான் தமிழிசைன்னா என்னன்னு கொஞ்சÁ¡ÅÐ விளங்கும். அப்புறம் வேறெ யார்ட்டெயாவது þசை கத்துக்கலாம். அவரு சொல்ற படி, முல்லைத் தீம்பாணியும், அதிலேந்து பிறக்குற நாலு திறப்பண்களும் (¦¸¡ý¨Èò ¾£õÀ¡½¢ «Ð§Ä ´ñÏ) உலகத்துலே எல்லா நாடுகள்லேயும் ஆதிகாலந்தொட்டு þருக்காம். ¬¸ì கொன்றைத் தீம்பாணி அவ்வளவு ஒசத்தி.

பெரிய புராணத்துலெ ஆனாயர் புராணம் படிச்சீங்கன்னா, þது புடிபடும். ஆனாயர் கொன்றை மரத்தயே சிவனா நினச்சு வழிபடுறார்.

ஆனா, விண்ணெறியிலெ (வைணவத்திலெ) þப்படி þல்லைங்க; அவுங்களுக்கு கொன்றை மேலே கொஞ்சம் பிடிப்பு þல்லெ போலே þருக்கு. காந்தள் (அதுவும் மஞ்சள் கலந்த சிவப்புத்தான்; சில þடங்கள்லெ கருஞ் சிவப்பு) பத்திப் பல þடங்கள்லெ சொல்ற அவுங்களுக்கு கொன்றையை பத்தி ஒரு ஓர வஞ்சனை §À¡Ä; நாலாயிரப் பனுவல் முழுக்கப் படிச்சிங்கின்னா மொத்தமா ரெண்டு þடம் தவிர மிச்ச எங்கெயும் கொன்றையைப் பத்திச் சொல்லிற மாட்டாங்க (¦ÃñÎìÌ §ÁÄ þÕìÌíÌÈ ±ý À¢¨Æ Àò¾¢ì ¸£§Æ Å÷§Èý).

"கார்க்கோடல் பூச் சூடி வருகிற தாமோதரா" ன்னு கருஞ்சிவப்புக் காந்தள்ப் பூவைப் பத்திச் சொல்ற பெரியாழ்வார் (பனுவல் - 246), அதே நிறம் கொண்ட கொன்றையை ஒரே ஒரு þடத்துலெ (பனுவல் 349) மட்டும் சொல்றார்.

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச்சென்ற
உருப்பனை யோட்டிக் கொண்டு þட்டு உறைத்திட்ட உறைப்பன், மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறியாழியுங் காசும் கொண்டு
விருப்பொடு பொன்வழங்கும் வியன்மால் þருஞ் சோலையதே!

என்ன பண்றது! சோலைமலை (þது தாங்க மதுரைக்குப் பக்கத்தில் þருக்கும் அழகர் கோயில்) ஆச்சுதுங்களே. சொலிக்கிற சோலை மரம் கொன்றை தானுங்களே, சொல்லியாகணுமே, அதனாலே சொல்லிட்டாரு. (அதே நேரத்துலே பொருளை ரொம்பச் சிறப்பா வச்சுட்டாரு.) þன்னொரு þடம், சிவனை ஒட்டி, திருமாலை ஒசத்தி, திருமழிசை ஆழ்வார் சொன்னது.

தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்
நீதியால் வணங்குபாத நின்மலா! நிலாயசீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான வேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே!

அவ்வளவுதான்; பெருமாள் அடியாருக்கு என்னவோ, கொன்றை மேலே ஒரு வேண்டாமை; ஆனா, கொல்லி காவலன்னு பல þடத்துலே குலசேகர ஆழ்வார் சொல்லிக்கிறார். அது வே¦È கதை. þன்னோரு சமயம் பார்க்கலாம்.
----------------------------------------------
þப்படி "கொன்றை மேல் என்னவோ ஒரு வேண்டாமை பெருமாள் அடியாருக்கு" என்று நா எழுதியவுடன், விண்ணவத்தில் ஆழ்ந்து தோய்ந்த நண்பர் நா.கண்ணன், "எனக்கென்னவோ இதில் முழு உடன்பாடு கிடையாது. ஆய்ந்ததில் இக்கூற்று பிழை என்றே படுகிறது." என்று சொல்லி "உருப்பிணி நங்கை தன்னை" என்ற பெரியாழ்வார் பாடலையும், "கோங்கலரும் பொழில் மாலிருஞ் சோலையில்" என்ற ஆண்டாள் பாசுரத்தையும், "மலர்ந்தே ஒழிந்தில மாலையும்" என்ற நம்மாழ்வார் திருவிருத்தத்தையும் முன்வைத்து அவர் கருத்தைச் சொல்ல விழைﺡர். அவருடைய அந்த மடலைத் தேடி𧼠þருக்§¸ý. þன்னும் அகப்படலை. அவருக்கு நான் அளித்த மறுமொழியை þங்§¸ þணைÕ째ý.
-------------------------------------------------
அண்ணாச்சி,

வெறுஞ் சப்பைக் கட்டு செய்யுறதுலே யாருக்குப் பலன்? திருமால் அடியாருக்கு முன்னே பிழையைப் பிழை என்று
ஒப்புக் கொள்றது தான் நாகரிகம். எட்டங்கம் (அஷ்டாங்கம்) தரையில் படக் கீழே விழவா? :-) எனக்கு நாலாயிரப்
பனுவல்லெ, விவரம் போதாது, இன்னும் ஆழம் போகோணும்னு நீங்க உணர்த்தியிருக்கீங்க. செய்யுறேன். கடல்லே
படகோட்டுறது எம்பூட்டு வேலைங்க! பெருமாள் தான் வழி காட்டோணும்.

ஆனாலும் பாருங்க இன்னும் எனக்கு மீசையிலே மண்ணொட்டல ;-).

நீங்க கூறிய இடங்கள்லெ, "உருப்பிணி நங்கை தன்னை" என்ற பெரியாழ்வார் பாடலும், "கோங்கலரும்
பொழில் மாலிருஞ் சோலையில்" என்ற ஆண்டாள் பாசுரமும், "மலர்ந்தே ஒழிந்தில மாலையும்" என்ற
நம்மாழ்வார் திருவிருத்தமும் கொன்றையை இயற்கை அளவிலேயே குறிக்கின்றன. மற்றவைகள் சிவனை இணைத்துத்
தானே குறிக்கின்றன? கொன்றை, தமிழகத்துலெ ஒரு காலத்துலெ பரந்து கிடந்த மரம். எனக்கென்னமோ,
ரொம்பக் கூடவே ஆழ்வார்கள் சொல்லியிருக்கலாமுண்ணு தோணுது :-).

அப்புறம், என்னங்க, இப்படி நினைச்சிட்டீக, சிவ நெறிக்கும் விண்ணெறிக்கும் பேதமுண்ணு நான்
சொல்லுவேணுங்களா? அதுவும் முடிவேந்தப் பெருமாளை நானே வணங்கும் போது?

சிவனை ஏற்றிப் பெருமாளைக் குறைச்சுச் சொல்றதும், பெருமாளை ஏற்றிச் சிவனைக் குறைச்சுச் சொல்றதும்
தமிழ்ச் சமய இலக்கியத்தில் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டென்றே நான் எண்ணுகிறேன். அது மாமன்,
மச்சான், கணவன்/மனைவி கேலிசெய்து பேசிக் கொள்வது போல நமக்குள் அமைந்து கொண்டே தான் இருக்கும்.
ஒவ்வொன்றிலும் ஒரு சுவை இருந்து கொண்டே இருக்கும். என் கட்டுரையில் அந்தப் பகுதியைத் திரும்பிப் படித்துப்
பாருங்க. அப்பொழுது அந்த ஓர வஞ்சனையின் அடிப் பொருள் புலப்படும். அது மலர்ச் செண்டாலெ அடிக்கிறது
மாதிரி. உண்மையிலெயெ கண்டனம் செய்ஞ்சிருந்தா, தோரணை வேற மாதிரி இருந்திருக்குங்களெ!

பொன்னியின் செல்வன் படிச்சிருப்பீகளே, அதிலெ ஆழ்வார்க்கடியானுக்கும் வந்தியத்தேவனுக்கும் அங்கங்கே
இந்த விளையாட்டு வரும். அங்கே இன்னொருத்தரைக் குறை சொல்றதுண்ணு வராது. ஆனாலும் இந்த இடையாட்டு
நடந்து கொண்டே இருக்கும். கூடவே ஒரு நெருக்கமும் இருக்கும்.

ஓரவஞ்சனை, கோபங்கிறது எல்லாம் நாட்டுப்புற வழக்கில் ஒரு பேச்சுத் தோரணை, அண்ணாச்சி.

"ஏ, புள்ளெ, உங்ஙொப்பன் என்ன சொல்றாரு; எட்டுக் கல்லு மோதிரம் போட்டாக் குறைஞ்சா போயிருவாரு?
இல்ல, போட வக்கில்லயா? உக்கும், உங்க வீட்டப் பத்தி எனக்குத் தெரியாதாக்கும்; எல்லாம் ஓர்
ஓரவஞ்சனை; பொச கெட்ட பயக........" - இப்படிப் போல ஒரு நெருக்கமான பேச்சு அண்ணாச்சி.

இப்ப சிவ நெறியிலே திருத்துழாயையோ, காயாம்பூவையோ யாராவது உசத்திப் பேசுவாங்களோ?
(அண்ணாச்சி, தேவாரத்திலே, திருவாசகத்துலெ இந்த இடத்துலே துழாய் பத்திப் பேசுறாங்கண்ணுட்டு
யாராச்சும் திமிசு கட்டிக்குணு வந்திராதீக! இந்த ஞான சுழியத்துக்குத் தாங்காது:-)), அது போல
கொன்றையைத் திருமாலோட சேர்த்துப் பேசிர மாட்டாங்கங்குறது அடிப்படையிலெ சரிதானுங்களே!

இது ஒருவிதமான பாவனை; அது இன்னொரு விதமான பாவனை.

அரியும் சிவனும் ஒண்ணுதாங்க அண்ணாச்சி! இதுக்கு யாராவது மல்லாடுவாகளா? யாரு யாரு மார்பிலெ
பாயுறது? அடுத்த கதையைப் பார்ப்போம். என்ன சொல்றீக?

அன்புடன்,
þராம.கி.

Monday, January 23, 2006

கொன்றையும் பொன்னும் - 1

(அமீரகத்தில் வெளிவரும் கானல் ஆண்டுமலரில் முன்னால் வெளிவந்தது.)

அண்ணாச்சி,

ஆவணி புரட்டாசிலே, மஞ்ச மஞ்சளா, கொத்துக் கொத்தா, பளபளன்னு நெருப்புக் கணக்கா கொன்றை பூக்குமே, அந்தப் பூவுக்குளே தங்கப் பொடியாட்டம் தாது இருக்குமே, எப்பவாவது பார்த்திருக்கீகளோ? இலைகூடச் சின்னச் சின்னதா, அழகா, அச்சடிச்சாப்புலே, பளபளன்னு இருக்கும். சித்திரை வைகாசிலெ, ரொம்பவுமே இலையை உதுத்து, ஆனாலும் மலர்ந்துக்கிட்டே இருக்குமே, அந்த மரத்தைப் பார்த்ததில்லையா? பழம் (இல்லை..காயோ) கூட குழல் கணக்கா கருப்பா, கரும் பழுப்பா, பளபளன்னு (3-வது தடவை 'பளபள' சொல்லிட்டேன்லே! ஒரு சொகம்தான்) இருக்கும். அந்தப் பழத்தின் தோலெ உரிச்சு, உள்ளே பாத்தீகன்னா அடுக்கடுக்கா, உள்ளீடே இல்லாமே, இத்துணியோண்டு தப்பட்டை, தட்டுக் கணக்கா சுளைக, பழுப்பா விதையோடெ இருக்கும். ஓரொரு தட்டையும் எடுத்து, ஊசி வச்சு, ஓட்டை போட்டு, உதட்டுலெ வச்சு, ஊதிப் பார்த்திகன்னா, விதை துடிதுடிக்க, அதிலே வர்ற வீளை (whistle), காதப் பிச்சிட்டுப் போகும். இல்லைன்னா, தோலை உரிக்காமலேயே, குழலுக்குள்ளே நீளமா ஒரு ஓட்டையைப் போட்டு எல்லா விதையும் உதுத்துட்டு, ஊதாங்குழையாட்டம் (புல்லாங்குழலை இப்படிச் சொன்னாக் கொஞ்சம் தரங் குறைச்சலாத் தெரியுதோ?) ஊதிருக்கீகளா? அந்த ஓசை கூட ஓவியந் தான்.

சின்னப் பையனா இருந்த காலத்திலேந்து இந்தக் கொன்றையை இன்னமும் நான் மறக்கலை. எங்கூர்லெ பெரிய பள்ளிக்கூடத்துக்கு முன்னாடி ரெண்டு மரம். பின்னாடிப் பொட்டல்லெ ரெண்டு மரம். அந்தப் பூ, குழல், இவையோட பளபளப்பு, பொன் போலெ நிறம், ஒளி, தாது, கார்காலம், மழை அப்படியே மனசிலே ரொம்பி இருக்கு. இவ்ளோ நாள் கழிச்சுத் திடீர்னு ஞாபகம் வந்துருச்சு. மனசு கொள்ளலை; எழுத ஆரம்பிச்சுட்டேன்.

கொன்றையப் பத்தியும் அதோட வர்ற உறவுச் சொற்களையும் பத்திச் சொல்ல நிறையவே இருக்கு. அண்ணாச்சி, உங்களுக்குத் தான் பொழுது இருக்கான்னு தெரியலை! நீங்கள்லாம் 'கடுதாசியப் பாத்தமா, உடனெ படிச்சிட்டு போனமா'- ங்குற விரசான ஆளுக. இருந்தாலும், கோடீசுவரன் ஆகுறதுக்கு ஆலாப் பறக்குறதுக்கு இடையிலெ, கொஞ்சம் நேரம் எடுத்துப் படிங்க அண்ணாச்சி! இந்தக் காலத்துலேயும் பொன்னுன்னாக் கசக்குமா? நான் ready, நீங்க ready-யா?

சங்க காலத்துக் கொன்றை:
-------------------------------------
கொன்றையிலெ சரக்கொன்றை, சிறுகொன்றை, புலிநகக் கொன்றை, மயிற்கொன்றை அப்படின்னு பலது இருக்கு. இதை இதழி, கடுக்கை- என்றெல்லாம் சங்க காலத்துலேந்து சொல்லியிருக்காக. ஞாழல்/நாழல்னு கூடப் பெயர் இருக்கு. இதப் பத்தி ரொம்பவே இருக்குன்னாலும், கொஞ்சம்தான் இங்கே எடுத்து விடுறேன். பல இடங்கள்லெ மூலத்தை மட்டும் காட்டுறதோட விட்டுர்றேன், எல்லா இடத்தையும் விளக்கிச் சொன்னா நல்லாத்தான் இருக்கும். ஆனா சொல்ல வர்ற செய்தி நெறைய; அதனாலே நீங்கதான் பார்த்துக்கோணும். உங்களுக்குப் புரிஞ்சுக்க முடியாதா, என்ன? இல்லை, இதுக்காகவே சங்க இலக்கியப் பொத்தகங்களை வாங்கிப் படிக்க மாட்டிங்களா' ன்னு ஒரு நப்பாசை.

கீழே வர்றதெல்லாமே பொன்னோடெ தொடர்பு வச்சு வர்ற வாசகங்கள். வாசகங்களில் வர்ற சொற்களைக் கண்டு, அண்ணாச்சி, விலகிராதீங்க. பக்கத்துலே அந்தந்தப் பொத்தகத்தை வச்சுக்கிட்டு ஆழ்ந்து படிங்க. கொஞ்சம் கொஞ்சமாப் புரிபடும். நாம தொலைச்சது எல்லாம் நமக்குப் புரியும். விளாம்பழத் தோடை உடைக்காம விழுதைச் சாப்பிட முடியுமோ?

கார்விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர் - அகநானூறு கடவுள் வாழ்த்து (1-2),
பைங் காற் கொன்றை - அகநானூறு 4 - (1-2)
ஒள் இணர்ச் சுடர்ப் பூங் கொன்றை - அகநானூறு 115.11-12
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புங்கம் - அகநானூறு 393 9-16
ஒலுகு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ - அகநானூறு 399 10
பொன் என மலர்ந்த கொன்றை - ஐங்குறு நூறு 420,
குறுங்கால் கொன்றை அடர்பொன் என்னச் சுடர் இதழ் பகரும் - ஐங்குறு நூறு -430,
சுடுபொன் அன்ன கொன்றை - ஐங்குறு நூறு - 432,
பொலன் அணி கொன்றை - ஐங்குறு நூறு - 435,
நன்பொன் அன்ன சுடர் இணர்க் கொன்றை - ஐங்குறு நூறு - 436,
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் காசின் அன்ன போது ஈன் கொன்றை - குறுந்தொகை 148
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன - குறுந்தொகை 233
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் கொன்றை ஒள் இணர் கோடு தொறும் தூங்க - நற்றிணை -221,
பொன் வீக் கொன்றை - நற்றினை 246,
சுடர் வீக் கொன்றை - நற்றிணை 302,
தூங்கு இணர்க் கொன்றை - குறிஞ்சிபாட்டு 85-89,
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால - முல்லைப் பாட்டு 91-96,
தேறு வீப் பொன் கொன்றை - பொருநர் ஆற்றுப்படை 199-204,
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல் பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க - பெரும்பாணாற்றுப் படை 328-329
நாள் இணர்க் கொன்றை - பதிற்றுப்பத்து 67.13,
கொன்றைத் தார் சுவற் புரள - கலித் தொகை - கடவுள் வாழ்த்து
வயங்கு இணர்க் கொன்றை -கலித்தொகை 102,
மெல் இணர்க் கொன்றை - கலித்தொகை 103,
அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான் இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல - கலித்தொகை 150,
வயங்கு இணர்க் கொன்றை -கலித்தொகை 102,
மெல் இணர்க் கொன்றை - கலித்தொகை 103,
தூங்கு இணர்க் கொன்றை - சிலப்பதிகாரம் காட்சிக் காதை 17-20
கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் காடெலாம் - திணைமாலை நூற்றைம்பது 120-

கீழே, சிலதுக்கு மட்டும் சுருக்கமா விளக்கம் தந்திருக்கேன்.

கொன்றைப் பூ:
--------------------
தலைவனை எண்ணி ஏங்குற தலைவிக்கு பசலை தட்டிப் போச்சுன்னு ('வெளிறிப் போச்சு'ன்னு) சொல்றாகள்லே அதுக்கு இந்தக் கொன்றைய உவமையா ஓர் இடத்திலே சொல்லியிருக்கு. (கொன்றை ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி, அகநானூறு 398. 4-5).

கண் இமைக்கு மேலே கூட 'வெளிறிப் போயிரும்'னு சொல்லுறாங்க (கொன்றைப் பூவின் பசந்த இண்கண்- ஐங்குறு நூறு -500).

இன்னொரு இடத்துலேத் தலைகீழாச் சொல்றாங்க; "நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா" ன்னு கேள்விப்பட்டிருக்கீகளா! 'கொன்றை மாதிரி நமக்குப் பசலை' ங்கிறதுக்குப் பதிலா, நமக்குப் பசலை வர்ற மாதிரி மரத்துலே கொன்றை பூத்திருக்காம். எப்படி இருக்கு கதை! (சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ நம் போல் பசக்கும் காலை - குறுந்தொகை 183)

மேலே உள்ளதுலெ, பூவையும் பசலையும் தானே பார்த்தோம்; இனிமேப் பழத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

கொன்றைப் பழம்:
-----------------------
கொத்தாக் கிடக்குற குழற்பழம் முதுந்து போச்சாம் (துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன - ஐங்குறு நூறு - 458).

பாணர் பறையை முழக்குற குறுந்தடியோன்னு ஐயம் வர்ற மாதிரி கொன்றைக் கனிகள், காம்போட பாறையிலெ அறைஞ்சு விழுறாப்போல, கிளைகள் அசையுதாம் (பாணர் அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, பறை அறை கடிப்பின் - நற்றிணை 46).

யானையோடெ ஒடம்பு பட்டுப் பொரிஞ்ச அடிமரமும், நெரிஞ்ச உள் தொளையுள்ள காயும் இருக்குற கொன்றை மரங்க, நீண்ட சடை, நீராடாத உடம்போட குன்று மேலே இருக்குற சாமியார் போல இருக்காம் (யானையின் மருங்குல் தீண்டி, பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போல - நற்றிணை 141).

இலுப்பை மரத்திலே உதுத்த புதுப் பூவை எடுத்துக் தின்ன கரடி, தூசிபறக்கக் கொன்றைப் பழத்தைச் சிதறடிச்சுதாம் (அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் துய்த்த வாய, துகள் நிலம் பரக்க கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி - அகநானூறு 15. 13-15).

இன்னொருத்தர் சொல்றபடி "கொற்றவையின் குழல் கொன்றையம் பூங்குழல் போல இருக்காம்" (வென்றி மழவிடை யூர்ந்தாற்கு உரியள் இக் கொன்றையம் பூங்குழ லாள் - சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை - கொளு)

கொன்றையும் காரும்:
-----------------------------
காருன்னா மழை காலம் அண்ணாச்சி.

கொன்றைக்கும் காருக்கும் அப்படி ஒரு தொடர்பு சங்க இலக்கியங்கள்லெ பல இடத்திலெ சொல்லியிருக்கு. (குறும்பல் கோதை கொன்றை மலர நெடும் செம் புற்றம் ஈயல் பகர மா பசி மறுப்பக் கார் தொடங்கின்றே - ஐங்குறு நூறு - 497,

பொன் எனக் கொன்றை மலர், மணி எனப் பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, கார் தொடங்கிற்றே - நற்றிணை 242,

கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல பிடவமும், கொன்றையும், கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே - நற்றிணை 99)

நேரங்கெட்ட நேரத்திலே மழை பெய்ஞ்சிருச்சாம்; கொன்றை மரம், கார்காலம்னு தப்பா நினச்சு பூத்துருச்சாம்; (ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய பேதையங் கொன்றை - ஐங்குறு நூறு - 462)

மழை/கொன்றை பற்றி இன்னோரு அருமையான காட்சி திணைமாலை நூற்றைம்பது - 98ம் பாட்டில் வருது, அண்ணாச்சி!

மழைக்கும் கொன்றைக்கும் இருக்கிற ஊடாட்டை கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.

வீயும் வியப்புறவின் வீழ்துளியான் மாக்கடுக்கை
நீயும் பிறரொடுங்காண் நீடாதே - ஆயுங்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்கரியாய்க் கூர்ந்து.

சிறுமியர் கழற்சிக் காயை வச்சு விளையாடிட்டு இருக்காங்க. (காய்களைத் தூக்கிப் போட்டு கீழே விழுறதுக்குள்ளே அடியிலே இருக்கிற காய்களை ஒண்ணொண்ணா, ரெண்டிரண்டா, மூணுமுணா, மத்த காயைத் தொடாமக் கழந்து (நீக்கி) ஆடுற சொட்டாங்காய் விளையாடிருக்கீங்களா? (கொன்றை விதை தான் இங்கே சொட்டாங்காயா உருமாறுது; கழல்ந்து ஆடும் காய் கழற்சிக் காய்; கழல்+சி = கழற்சி)

என்னது, பொம்பிளைப் புள்ளைகளோட எப்படி ஆடுறதுன்னு கேக்கீணகளோ? என்ன அண்ணாச்சி, பொம்பிளை, ஆம்பிளை எல்லாம் ஒண்ணாத் தானே சின்னப் பருவத்துலே விளையாடி இருக்கோம். நீங்க மட்டும் வேறேயா, என்ன?)

கார்கால மழை பெய்யுது; நீர்த்துளிக பட்டு, நிலத்திலெ கிடக்கிற கழற்சிக் காய்க, முதல்லெ தெரியுது; மழை இன்னம் விழுது; கொன்றை வீ (மலர்ந்து முதிர்ந்து விழும் பூவுக்கு வீ -ன்னு தமிழ்லே பேரு.) கீழே விழுந்து சின்னப் புள்ளைங்க விளையாடுற இடம், சூதாடுற இடமாட்டம், பொன்வட்டா மாறுது; மேலும் மேலும் மழை; இன்னும் வீ கீழே விழுது. இப்போ, கொன்றைப் பூவெல்லாம் சேர்ந்து மாலையாக மாறிட்டுது. வீ உதிர்ந்து மடலாகுது (மடல்னா பூவிதழ்); பொடி சிதறுது; இன்னும் மழை; கொன்றைப்பழம் கொத்துக் கொத்தாய் விழுது. தலைவியோட குழற் கத்தை மாதிரிக் காட்சியளிக்குது.

விவரிப்பு எப்படி இருக்கு, பார்த்தீங்களா, அண்ணாச்சி! இன்னோரு காட்சி ஐந்திணை எழுபது -18-ல் வருது.

கதழுறை வானம் சிதற இதழகத்துத்
தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅய்
இடிப்பது போலும் எழில்வானம் நோக்கித்
துடிப்பது போலும் உயிர்.

வானம் சிதறுது; மழை வருது. அந்த நேரத்திலே எரி வளர்க்கிறாப் போல கொன்றை, பூத்துக் கிடக்குது. "இது எப்படி, மழையும் நெருப்பும் ஒண்ணா இருக்க முடியுமுன்னு வானம் என்னை இடிக்கிறது, என் உயிரும் துடிக்குது" ன்னு தோழிக்கிட்டெ சொல்றாளாம் தலைவி.

மேலுமொரு காட்சி குறுந்தொகை 21-ல் வருது.

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், கார் எனக் கூறினும்,
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே

இங்கேயும் ஓர் ஏமாத்துத் தான், கார்காலத்திலே வந்திருவேன்னு தலைவன் சொல்லிட்டுப் போயிருக்கான். திடீருன்னு மழை பெய்ஞ்சிருச்சு; மரம் ஏமாந்துருச்சு, கொன்றையும் பூத்துருச்சு, பக்கத்திலே குழற்பழமும் இருக்கு, "நான் என்ன மக்கா, எனக்குத் தெரியும்டி, என்னை ஏமாற்ற முடியாது, அவர் பொய் சொல்லமாட்டார், இது கார்காலம் இல்லை"ங்கிறா தலைவி.

இதே போல இன்னோரு ஏமாந்த காட்சி தோழி தலைவிக்குச் சொல்ற மாதிரி குறுந்தொகை - 66 - இலும் வருது. தலைவனை விட்டுக் கொடுக்காம, இன்னொரு காட்சி நற்றிணை 296-ல் வருது.

என் ஆவது கொல்? தோழி! - மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப,
புழற்காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும்,
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,

யானையோட புள்ளி முகத்திலே பொன்னால் செய்த முகபடாம் போல கொன்றை பூத்திருக்கு; "இது கார்காலம்னு என் தலைவருக்குத் தெரியாதா? எனக்குத் தெரியுமடி, அவரு வந்துருவாரு, நீ சொல்லாதே"ன்னு தலைவி தோழிக்குச் சொல்றாளாம்.

இன்னோரு இடத்திலே (நற்றிணை 371) தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்றான்.

காயாங் குன்றத்துக் கொன்றை போல
மா மலை விடர் அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
பெயல் தொடங்கினவே,

"அப்பா, பாகனே! கொன்றை பூத்துருச்சு, மழையும் வந்திருச்சு, கார்காலமாச்சே, என்னைக் காணுமே'ன்னு தலைவி அழ ஆரம்பிச்சுருவா, நான் வேகமாப் போகணும்பா, வண்டிய ஓட்டு"

சொல்லச் சொல்ல நீண்டுக்குணே போகும். அடுத்து சமய நூல்களுக்கு வருவோம்.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Saturday, January 21, 2006

மரக்கறி - 2

நண்பர்களே,

மரக்கறி பற்றிய என் இடுகைக்கு வந்த பின்னூட்டுக்களைப் படித்தேன். சிலபொழுது ஒரு சில பின்னூட்டுக்கள் நாம் சொல்ல வந்த கருத்தை மீண்டும் ஆழ்ந்து பார்க்க வைத்துவிடும். இந்த மரக்கறி பற்றிய செய்தியில் முன்னால் மடற்குழுவிலும், இப்பொழுது வலைப்பதிவிலும் எழுப்பிய பின்னூட்டுக்களும் அப்படியே இருந்தன.

வெறுமே படித்துக் கொண்டு மோனமாய் இருப்பதில் என்ன பயன்? வெறுமே படிப்பது திரைக்காட்சி பார்ப்பது போல; பின்னூட்டுத் தருவது தாளிகையின் ஆசிரியருக்கு மடல் எழுதுவது போல. பின்னூட்டு என்பது ஓர் வினையூக்கி (catalyst) என்றே நான் கொள்ளுகிறேன். இன்னொரு விதமாய்ச் சொன்னால், இறைப்பி(pump)யோடு தொடர்பிட்டுச் சொல்லலாம்.

இறைப்பிகளில் இரண்டுவகை உண்டு. ஒருவகையில், இறைப்பியின் பாத வாவியில் (foot valve) இருந்து உள்ளறை (inner chamber) வரை, நிரம்ப நீரைக் கொட்டி, எங்கும் ஒழுக்கு (leak) இல்லாத நிலையில், வெளியீட்டு வாவியின்(discharge valve) வாயில் இருந்து நீரை வரச் செய்து, இறைப்பியின் உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றினால் தான், இறைப்பி தன் வேலையைச் செய்யும். இப்படிச் செய்யும் செயலுக்குப் பெரும்புதல் (priming) என்று பெயர். "கலம் பெருகி ஊற்றுகிறது" என்று சொல்லுகிறோம் இல்லையா? அதே கருத்தை இங்கே பிறவினையில் சொல்லும் போது பெருக்குதல், பெரும்புதல் என்று சொல்லலாம். பெருக்குதல் என்பதற்கு வேறொரு பயன்பாட்டுப் பொருள் உண்டு. எனவே பெரும்புதல் என்பதை நிறைப்பது என்ற பொருளில் ஆளலாம். இந்தக் காலத்தில், அடுக்ககங்களில் இருக்கும் பலருக்கும் பெரும்புகிற வேலை தெரிந்திருக்கும். [பொதுவாக, நம்மூரைப் போன்று ஆண் ஆதிக்கம் இருக்கும் இடங்களில் பெருக்கும் வேலையை மகளிருக்குக் கொடுத்துப் பெரும்பும் வேலையை வீட்டுக்காரர் தன் வயம் வைத்துக் கொள்ளுவார்.]

இன்னொரு வகை இறைப்பி தன்பெரும்பும் வகையைச் (self-priming type) சேர்ந்தது. மடற்குழுக்கள்/ வலைப்பதிவுகளில் இருக்கும் பலருள்ளும் தன்பெரும்பாய் இருப்பவர்களை விரலை விட்டு எண்ணிவிடலாம் :-). பொதுவாக மற்றவர்களால் அவ்வப்போது பெரும்பி நிறைக்கப்படும் போதுதான் நம் கருத்து வெளியீடு ஏற்படுகிறது; எனவே இப்படி ஒருவருக்கொருவர் பெரும்பிக் கொள்ளத்தான் வேண்டும். நானும் ஒரு தன்பெரும்பன் அல்லன். நாலுபேர் கேட்கும் போது தான், "சரி, தேடிப் பார்த்து எழுதுவோமே" என்று என்ற முன்முனைப்புத் தோன்றுகிறது. இது போல் தான் 100க்கு 99 பேர் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். எனவே பின்னூட்டு என்பது மடற்குழுக்களிலும் வலைப்பதிவுகளிலும் இன்றியமையாதது என்பது என் மொழிபு. இல்லையென்றால் இறைப்பியில் இருந்து காற்றுத்தான் வரும். நீர் ஏறாது.

இனி மரக்கறி பற்றி முந்தைய பதிவில் வந்த பின்னூட்டுகளுக்கு என் மறுமொழி.

(கள் என்னும் பன்மை விகுதி, அதைப் புழங்குவதில் இருக்கும் குழப்பம் பற்றி வசந்தன், குமரன், anonymous, ஜி.ராகவன் ஆகியோர் கேட்டிருந்தார்கள்; இன்னொரு முறை வேறொரு இடுகையில் பேசலாம்.)

"அரக்கப் பரக்க" என்ற புழக்கம் பற்றி நண்பர்கள் பிரகாசும், ஞானவெட்டியானும் கூறினார்கள்.

"சைவம் என்ற சொல்லுக்கும், உணவுப் பழக்கத்துக்கும் தொடர்பே இல்லையா? அப்படி என்றால், இது எப்படி புழக்கத்துக்கு வந்தது?" என்ற பிரகாசின் கேள்வியைப் போலவே முன்னொரு நாள் புதிய மாதவி அவர்கள்

"எப்போது மரக்கறி சைவமானது? ஏன்? சைவநெறி விலங்குகளின் பலியிடலை ஏற்றுக்கொண்டதுதானே! நீங்கள் கூட தமிழுலகத்தில் இப்போது சிவன் கோவில்களில் இருக்கும், எலுமிச்சை பழங்களை வெட்டி பலியிடும் பலிபீடம், ஒரு காலத்தில் ரத்த பலிபீடமாகவே இருந்தது என்பதை எழுதியிருந்தீர்கள். (நீங்கள் எழுதியதாகத்தான் நினைவு. தவறு என்றால் மன்னிக்கவும் வாசித்தது தமிழுலகில்தான்) இதில் நிறைய வரலாற்று செய்திகள் புதைந்து கிடப்பது போலிருக்கின்றதே? எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ளும்வண்ணம் எழுதினால் பயனுள்ளதாக அமையுமே?"

என்று தமிழுலகம் மடற்குழுவில் கேட்டிருந்தார். முன்பு கொடுத்த என் நீண்ட விளக்கம் இது (பலிபீடம் பற்றிய செய்தியை இங்கு தவிர்க்கிறேன். அதை எழுதினால் இடுகை இன்னும் நீண்டுவிடும்):
-------------------------------------------
மரக்கறி என்பதைச் சிவநெறியோடு பொருத்தியது ஒருவிதமான எதிர் விளைவு.

சங்க காலத்திலும் கூட சிவநெறி, விண்ணெறி போன்றவை இருந்திருக்கின்றன. இவற்றை ஆதாரம் காட்டிச் சொல்ல முடியும். ஆனால் அந்தக் காலத்தில் மரக்கறி உணவை அழுத்திச் சொன்னதாய் உணர முடியவில்லை. சிவ, விண்ணவ நெறிகளுக்கான மெய்யியல் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். ஆனால் அதைத் தெள்ளத் தெளிவாய் உறுதிசெய்ய நம்மிடம் நூற் சான்றுகள் இல்லை.

நான் கொஞ்சம் மறைமலை அடிகள் வழிப் பட்டவன். சங்கம் மருவிய காலத்தில், களப்பாளர்கள் நுழையத் தொடங்கிய 3ம் நூற்றாண்டில், மாணிக்கவாசகர் இருந்திருக்க வேண்டும் என்ற மறைமலையாரின் ஆய்வை ஏரண வரிதியில் ஒப்புக் கொள்ளுகிறவன். (அதே பொழுது பல இடங்களில் மறைமலையாரிடமிருந்து நான் வேறுபடுவேன். அவர் சொல்லும் எல்லாவற்றையும் என்னால் ஒப்ப முடியாது; இருந்தாலும் மறைமலையார் சொல்லும் மாணிக்க வாசகர் கால முடிபு எனக்கு உடன்பாடே. வரலாற்றில் அக்கறை உள்ள பலரும் மறைமலையாரின் "மாணிக்க வாசகரின் வரலாறும் காலமும்" என்ற பொத்தகத்தைப் படிக்க வேண்டும். அண்மையில் பூம்புகார் பதிப்பகம் ஆகசுடு 2003ல் மறுபதிப்பு செய்திருக்கிறது.) மாணிக்கவாசகர் தான் சிவநெறிக்கு மெய்யியலை முதலில் வரைந்தவர். அவருடைய மெய்யியல் அப்படியே திருமூலரிடமும், கல்லாட ஆசிரியரிடமும், தேவார மூவரிடமும் உண்டு. மாணிக்க வாசகருக்கு முன் சிவநெறி மெய்யியல் நூல்கள் தமிழில் இருந்திருக்கலாம்; ஆனால் அவை நமக்குக் கிடைக்கவில்லை.

விண்ணவ நெறிக்கு உள்ள மெய்யியல், நமக்கு ஆழ்வார்கள் காலத்திற்கு முன் கிடைக்கவில்லை. பரிபாடற் பாட்டுக்கள் மெய்யியலை, ஒரு விளிம்பில் மட்டும் தான் தொடுகின்றன. அவற்றின் முழுமையான உள்ளீடு நமக்குப் புலப்படுவதில்லை.

இது போக ஆசீவகம் என்ற ஊழ்நெறியும், உலகாய்தம் என்னும் இறை நம்பா நெறியும் (உலகை ஆயும் நாத்திக நெறி) நம்மூரில் தான் பிறந்தன. இந்த இரண்டு நெறியின் அடிப்படை நூல்கள் மற்ற நெறியினரால் முற்றிலும் அழிக்கப் பட்டன. இந்தக் கொள்கைகளை மற்ற நெறியினரின் நூல்கள் வழியே பர பக்கமாய் (from another side) மட்டுமே நாம் அறிந்து கொள்ளுகிறோம். இத்தனைக்கும் ஆசீவகப் பாட்டுக்கள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன. (ஊரெங்கும் பரவிய "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றன் பாட்டுக் கூட ஆசீவகப் பாட்டுத்தான். எத்தனை பேர் அதை ஆசீவகம் என்று புரிந்து கொண்டுள்ளார்கள்?) ஆசீவகத்தின் பெருமை நம்மிலக்கியங்களில் கரந்து கிடக்கிறது; தேடி அறிய வேண்டும்.

இனி வடக்கிருந்து நம்மூர் வந்த மூன்று நெறிகள் வேதநெறி, செயின நெறி மற்றும் புத்த நெறியாகும். நம்மூரில் ஆட்சியாளர் நெறி சிவநெறி, விண்ணெறி ஆனது போல், வடபுலத்தில் கி.மு.600க்கு முன் வேதநெறிதான் ஆட்சிநெறி. வேதநெறியால் ஏற்பட்ட நெருக்கடி, மக்களை வேறு வேறு நெறிகளைத் தேட வைத்தது. அரசனை எதிர்த்த நிலை புத்தமும், செயினமும் ஆகிய இந்த நெறிகளை அடிமட்ட மக்களின் நெறிகளாகத் தோற்ற வைத்தது.

கி.மு.5,6-ம் நூற்றாண்டுகளில் மகத அரசு இராச கிருகத்தில் இருந்து விரிய, விரியக் காடுகள் எரித்து அழிக்கப் பட்டன. (இப்படித்தான் இந்தக் கால விகாரை - Bihar, named after Buddha vihara - மாநிலமும், உத்தர - Uttar pradesh - மாநிலமும் உருவாயின.) நாகரிகம் என்பது வடபுலத்தில் மேற்கில் இருந்து கிழக்கிற்கு வரவில்லை. கிழக்கில் இருந்து மேற்கே விரிந்தது. இப்படிக் கிடைத்த நிலங்களில் மக்கள் குடியேற்றப் பட்டனர். அவர்கள் முல்லைத் தொழிலையும் மருதத் தொழிலையும் (slash-burn-plough வெட்டி, எரித்து உழுதல் என்ற வேளாண்மை) அரசன் ஆணையால் செய்யத் தொடங்கினர். தங்களுடைய விளைப்பில் அரசுக்கு 3ல் ஒரு பங்கு என்று வரி கொடுக்கத் தொடங்கிப் பின் அதுவும் சரிந்து 6ல் ஒரு பங்கு என்ற அளவில் பங்கு கொடுத்தார்கள். பொருள்நூலில் இதைப் பற்றிச் சாணக்கியன் மிக நன்றாகவே விவரிக்கிறான். இந்தப் புதிய குடியேறிகளுக்கு மாடு என்பது செல்வம் போன்றது. (நாவலந்தீவு எங்கணும் இதுதான் நிலை. அதனால் தான் மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருள் நம் மொழியில் ஏற்பட்டது. நம் புற நானூற்றில் புறத்திணைகள் பற்றிச் சொல்லும் போது வெட்சித் திணையே ஆநிரைகளைக் கவர்வதாய் முதலில் சொல்லப் படும்.) அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கியோ, அல்லது வலிவு கொண்டு அடித்துச் சென்றோ, யாரோ ஒரு அரசன் அல்லது பெருங்குடிக்காரன் செய்யும் வேள்விக்கு ஆகுதியாய்க் கொண்டு செல்லும் போது, அப்படி அடித்துச் செல்லும் செயல் / தடிமாட்டு விலைக்கு வாங்கும் செயல்/ வரைமுறை அற்று மிகுந்து போன போது, மக்கள் முனகத் தொடங்கினார்கள்; கூக்குரலிட்டார்கள்.

இதே கால கட்டத்தில், ஓர் அமைதிப் போராட்ட நெறியாக செயினம் உருவெடுத்தது. (செகுத்தல் = வெல்லுதல்; கொல்லுவதால் வெல்லுதல்; ககரத்திற்கு யகரம் போலியாகி செகுத்தல்>செகித்தல்>செயித்தல் என்று ஆயிற்று. பின்னால் செயம்>ஜெயம் என்று வடமொழியில் போய்ச் சேரும். இங்கே உணர்வை, ஆசைகளைச் செகுத்த காரணத்தால் இவர் செகுனர்>செகினர்>செயினர்>ஜெயினர்; "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று" என்ற குறளை எண்ணிப் பார்த்தால் செகுத்தலின் உட்பொருள் புரியும்.) அதோடு வேத நெறி சொன்னதையெல்லாம் செயினம் எதிர்த்தது; கேள்வி கேட்டது; ஏதொன்றையும் ஏரணம் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்றது. செயினத்தின் தாக்கம் வடபுலத்தில் மகதத்தைச் சுற்றிலும் அதிகமாகவே இருந்தது.

சரசுவதி ஆற்றங்கரையில் சரியென்று தென்பட்டு, உத்தர பாதை வழியே மகதம் வந்து சேர்ந்த வேத நெறி, இந்தக் கேள்விகளின் காரணத்தால், எதிர்ப்புகளால், கங்கை யாற்றங் கரையில் தடுமாறத் தொடங்கியது; செயினத்தின் நடைமுறைக் கேள்வி உயிர்க்கொலை பற்றியதே. ஆகுதிக்கென உயிர்களைக் கொல்வது தவறென்று அது அழுத்திச் சொன்னது; இந்த அழுத்தம் கண்டு மக்கள் பெரிதும் அசந்து போனார்கள்; ஏனென்றால் மகதம் என்ற பேரரசில், அதையொட்டிய நாடுகளில், நடந்த வேள்விகளில் கணக்கற்ற விலங்குகள் ஆகுதியாய் ஆகின. நாட்டின் ஆநிரை குறைந்ததால், வாழ்வு ஆடிப் போனது. இதைத் தவிர்க்கச் சொன்ன செயினம், போரையும் தவறென்று சொன்னது; விளைவு மக்களை அது ஈர்க்கத் தொடங்கியது. சிறிது சிறிதாக பெருங்குடியினரும், குறுநில அரசர்களும், ஏன் மகதப் பேரரசனுமே முடிவில் செயினத்தின் பக்கம் சாயத் தொடங்கினார்கள். வேள்வி நெறி வடபுல நாட்டில் ஒரு நெருக்கடிக்குள் சிக்கியது; செயினத்தின் கேள்விகளுக்கு மறுப்பாய் உபநிடதங்கள் எழுந்தன. முதல்முறையாக வேதநெறியில் மெய்யியல் தேடல் என்பது உபநிடதங்களின் வழியாய்ப் பிறந்தது செயினத்தின் எதிர்விளைவால் ஏற்பட்டதுதான். இதை மறுக்க முடியாது.

செயினம் உயர்ந்துவரும் போது அதனுடைய கடினமான நெறிமுறைகள் (இங்கு நம்மூரில் எழுந்த ஆசிவகரைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஆசிவகத்தின் நெறிமுறைகளும் கடினம் தான். ஆசீவகம் பற்றித் தனியே எழுத வேண்டும். இங்கு சொன்னால் விரியும்.) மக்களைக் கொஞ்சம் பயமுறுத்தின. எனவே (வேள்விநெறிக்கும் செயினநெறிக்கும் இடைப்பட்ட) நடுப்பாதையாய் புத்தம் எழுந்தது.

சமணம் என்ற சொல் செயினர், புத்தர், ஆசிவகர் என்ற மூவரையுமே குறிக்கும் ஒரு பொதுச்சொல். இன்றைக்குப் பல ஆராய்ச்சியாளரும் இந்தச் சொல்லை செயினருக்கு என விதப்பாய்ச் சொல்லுகிறார்கள். நான் புரிந்து கொண்டவரை, அது தவறு. இந்தத் தவற்றால் ஆசிவகர்களின் செய்திகள் எல்லாம் செயினருக்கு உள்ளதாய், ஆசீவகர்களுக்கென நம் அரசர்கள் ஏற்படுத்திய பள்ளிகள்/படுகைகள் முதற்கொண்டு எல்லாமே தமிழ் வரலாற்றில் மாற்றிச் சொல்லப் படுகின்றன.

செயினரும், புத்தரும், ஆசீவகரும் பொதுமக்கள் பக்கம் நின்றதால் வடநாட்டில் மக்கள் வழக்கான பெருகதத்தைத் (prakrit) தூக்கிப் பிடித்தார்கள். பெருங்குடியினரைச் சார்ந்திருந்த வேதநெறியோ தக்கசீலத்து சந்த (chandas) மொழியைத் தூக்கிப் பிடித்தது. முடிவில் சந்தமும் பெருகதமும் இணைந்து, வெகுநாட்கள் கழிந்து சங்கதம் உருவாயிற்று. பாணினியம் இலக்கணம் வகுத்தது சந்த மொழிக்குத் தானே ஒழியச் சங்கதத்திற்கு அல்ல. சங்கதம் பிறந்தது பாணினியத்திற்குப் பிறகு. இந்த உண்மையை உணர்ந்தால் தான் இந்திய வரலாறு ஒழுங்காய்ப் புரியும். ஆனாலும் பலரும் இதைச் செய்யவொட்டாமல் குழறுபடி செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன நிகழ்ப்போ (agenda-வோ) ?

செயினரும், புத்தரும் தெற்கே வர வர, உயிர்க்கொலை பற்றிய கருத்தும் கொஞ்சம் கொஞ்சமாய் நம்மூரில் மாறத் தொடங்கியருக்க வேண்டும். (ஏனென்றால் சங்க இலக்கியங்கள் உயிர்க் கொலை கூடாது என்று எங்கும் சொல்ல வில்லை; சங்கம் மருவிய காலத்து நூல்கள் தான் முதலில் சொல்லுகின்றன.) முக்கண்ணனைத் தொழுவதும், அவன் வழியான செவ்வேளைத் தொழுவதும், மாயோனைத் தொழுவதும், அதை ஒட்டிய மெய்யறிவுக் கொள்கைகளும், உயிர்க்கொலை பற்றி தமிழர்கள் பொதுவாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், செயினமும், புத்தமும் நம்மூரில் பெரிதும் பரவாமல் இருந்தவரை, அதாவது கி.பி.2ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, நமக்கு இயல்பானவையே.

சங்கம் மருவிய காலத்துச் செயினமும், புத்தமும் இங்கே விரியத் தொடங்கும் போது, அதற்கும் சற்று 200, 300 ஆண்டுகளின் முன் இன்னொரு அலையாய் வேத நெறி நம்மூரில் பரவியிருந்தது. இந்தப் பொழுதில் தான் வடமர் (vadama) என்ற வகையினர் தென்னாடு போந்து நம்மூரில் ஏற்கனவே இருந்த பெருகணப் (brhacchanam) பெருமானர்களோடு (பெருமானர்> brahmins) கலந்தனர். பெருமானர்கள், அவர்களின் கோத்திரங்கள், அவர்கள் தமிழ்நாட்டில் பிற்காலப் பேரரசுகளின் ஆதரவால் பெரிதும் கலந்தமை போன்ற செய்திகள் நம்மூர் வரலாற்றோடு சேர்ந்து அறியப்படவேண்டியவை. அறிந்ததைச் சொல்லுவதற்குத்தான் ஆளில்லை. பெருமானர்களின் வரலாற்றைத் தமிழ்நாட்டு வரலாற்றில் இருந்து விலக்க முடியாது. ஆனால் பெருமானரும், பெருமானர் அல்லாதோரும் ஆகிய இரண்டு வகையினரும் தவறாக விதப்பு (speciality) ஏற்படுத்திக் கொண்டு கூட்டுகை (context) மாற்றிச் சொல்லி வருகிறார்கள்.

சங்கப் பாடல்கள் ஒரு சிலவற்றில் வேத நெறி ஊடுருவி இருப்பது உண்மைதான். பிந்து சாரன் (அசோகனின் தந்தை) தமிழகத்தின் எல்லை வரை படையெடுத்ததற்கு அப்புறமே, வடநாட்டில் ஏற்பட்ட நெரிசலால், தக்கணப் பாதை வழியாக உஞ்சை, நூற்றுவர் கன்னர் தலைநகரான படித்தானம் (Paithan near modern Aurangabad) வரை வந்து பின் அங்கிருந்து ஐம்பொழில் (Aihole - Hampi in Karnataka), தகடூர் வழியாக தமிழகத்தில் வேத நெறி நுழைந்தது. செயினம் நுழைந்ததும் இதே வழிதான். புத்தம் மட்டும் படித்தானம் வரை இப்படி வந்து பின் ஆந்திரத்தில் உள்ள நாகார்ச்சுன மலை அமராவதிக்கு வந்து பின் வறண்ட மாவட்டங்கள் வழியாய் காஞ்சி வந்து தமிழகத்தில் சேர்ந்தது.

தமிழர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, மரக்கறி சாப்பிடப் பெரிதும் முற்பட்டது கிட்டத்தட்ட கி.பி. 300ம் அதற்குச் சற்று முன்னும் பின்னும் தான். ஆனாலும் மரக்கறிப் பழக்கம் இங்கு ஊறுவதற்கு நெடுநாட்கள் ஆனது. சேரலத்தில் பெரும்பான்மையானவர் கறிச் சாப்பாட்டிலும், ஏன் மாட்டுக் கறியிலும் இன்றும் ஆழ்ந்துயிருப்பது இதை நமக்கு உணர்த்தும். மாட்டுக்கறி என்பது நெல்லை மாவட்டத்திலோ, குமரி மாவட்டத்திலோ, இன்றும் கூட நெற்றி நுதலைக் குறுக வைக்காது. வட மாவட்டங்களில் வேண்டுமானால் ஒருவேளை அப்படிச் செய்யக் கூடும். அதே போல விதவிதமான கறிவகைகள், காடை, கவுதாரி எனத் தென்மாவட்டங்களில் கிடைப்பது போல் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருப்பதில்லை. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் மரக்கறிச் சாப்பாடு நமக்கு வடமாவட்டங்களின் வழியே தான் பரவியது. என்று சொல்லத் தான். அது நமக்கு வெளியூரில் இருந்து வந்த பழக்கம் தான்.

இன்றைக்குத் தமிழகத்தில் யாராரெல்லாம் செயினம், புத்தம் ஆகிய நெறிகளில் கி.பி.300 வரை நெருக்கம் கொண்டார்களோ (அவர்கள் பின்னாளில் மீண்டும் சிவம் அல்லது விண்ணவத்திற்கு மாறியிருக்கலாம்) அவர்களின் வழிமுறையினரெல்லாம் மரக்கறிதான். [காட்டு: நாட்டுக் கோட்டை நகரத்தார்கள்; ஒருகாலத்தில் சமணத்தோடு (செயினம், புத்தம், ஆசீவகம் ஆகிய மூன்று நெறிகளோடு) நெருங்கி இருந்து பின் சிவநெறிக்கு மீண்டவர்கள் இவர்கள். இவர்களில் மரக்கறி சாப்பிடுபவர்கள் மிகுதி. ஆனாலும் கணிசமானவர்கள் இன்றைக்கும் கறி சாப்பிடத் தான் செய்கிறார்கள்]. நான் இங்கு கூறுவது நிரவலான பேச்சு. நீங்கள் உடனே "அந்தக் குமுகம் செயினம், புத்தம், ஆசிவகத்திற்குப் போகவே இல்லை, ஆனால் இப்பொழுது மரக்கறி தானே சாப்பிடுகிறார்கள்" என்று ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் காட்டிக் கேட்டால் என்னிடம் மறுமொழி கிடையாது. இந்தச் சிக்கலில் எத்தனையோ இழைகள் பின்னிக் கிடக்கின்றன. நான் பொதுவான செய்தியே சொன்னேன். இருக்கின்ற ஆய்வுச் செய்திகள் குறைவே.
-------------------------------------------
இனி மடற்குழுவில் எழுந்த பின்னூட்டுக்களும் அதற்கு நான் கொடுத்த மறுமொழிகளும்:

மலையாளிகள் மரக்கறியைப் பச்சக் கறி என்று சொல்லுவதாக நண்பர் சாபு முன்பு மடற்குழுவில் சொன்னார். தெரிந்து கொள்ள வேண்டிய சொல் தான்.

இண்டி ராம் என்ற நண்பர் "கறி என்பது மாம்சத்தை குறிப்பிடுவதால் எந்த வார்த்தையும் தன்னுள் "கறி" யை கொண்டிருந்தால் அது சந்தேகத்தை விளைவிக்கும் என்ற எண்ணத்தால் மரக்கறி பிரயோகம் தவிர்க்கப்படுகிறது. பல தமிழர்களின் வாயில் இப்பொதெல்லாம் வெஜ் நான்வெஜ்தான் சரளமாக உழன்று வருகிறது" என்று மடற் குழுவில் சொன்னார். மரக்கறி என்ற சொல் கறியில் இருந்து விதப்பி அறியச் சொன்னது தான். அதன் பொருள் "பெரும்பான்மை மக்கள் கறி சாப்பிட்டார்கள்; சிலர் விதப்பாக மரக்கறி சாப்பிட்டார்கள்" என்பதாகும். இப்பொழுது நெறியையும் சாப்பாட்டு வகையையும் குழப்பிக் கொண்டதால், நாம் புழங்கும் சைவம் என்ற சொல்லில் சைவம் என்பது பெரும்பான்மை; அசைவம் என்பது சிறுபான்மை என்றாகிறது. ஆனால், களத்தின் உண்மை நிலை அதுவல்ல.

அடுத்து அபிராமிப் பட்டர் என்ற நண்பர், "தமிழ் நாட்டில் மரக்கறி என்ற சொல் இல்லாமல் போனாலும், சிங்கையிலும், மலேசியாவி லும் இன்னும் இந்தச் சொல் வழக்கத்தில் தான் உள்ளது. சிங்கையில் உள்ள (இதுவரைக்கும் நான் பார்த்த) தமிழர்கள் மரக்கறி என்று தான் சொல்கிறார்கள். இன்னும் Vegetarian என்ற சொல் புழக்கத்திற்கு வரவில்லை :-)" என்று சொன்னார். இது இயற்கை. குடியேறிகள் பொதுவாக பழைய சொற்களை விடாது புழங்குவர். நீங்கள் தென்னமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டில் உள்ள இந்தியக் குடியினரைப் பார்த்தால் அவர்கள் 19ம் நூற்றாண்டு இந்துத்தானியை இன்னும் புழங்கிக் கொண்டிருப்பார்கள். இந்தியாவிலோ இந்தி மொழி மிகவும் மாறிப் போய்விட்டது. இதில் எது சரி என்பது கடினமான கேள்வி.

இனி பானுகுமார் என்ற நண்பர், "மரக்கறி உணவிற்கு ஆருத உணவு என்ற பெயரும் உண்டு. ஆருகதர்கள் என்றால் சமணர்கள். தமிழ் நாட்டில் சில இடங்களிலும், இலங்கையில் இன்றளவும் ஆருத உணவு என்ற சொல்வழக்கு புழக்கத்தில் உள்ளது என்பார் மயிலையார். இலங்கைவாழ் தமிழர்கள்தான் சொல்லவேண்டும் " என்று சொன்னார். அவருக்கு நான் சொல்ல நினைப்பது சமணர் என்ற பொதுச்சொல் பற்றியது. செயினர் என்பதே விதப்பானது. நம்மில் பலரும் சமணம் என்ற பொதுச்சொல்லை விதப்பாய்ப் புழங்கிக் கொண்டு இருக்கிறோம். துல்லியம் வேண்டின் இந்த விதப்பை விளங்கிக் கொள்ள வேண்டும். மயிலையார் சொன்னது ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன். இன்றைய நிலை அதுவா என்று எனக்குத் தெரியாது. தமிழ்நாட்டில் அப்படிக் கிடையாது என்று அழுத்தமாய்ச் சொல்ல முடியும்.

இனி நா. கணேசன் சொன்னார்: "தமிழகத்தில், (இந்தியாவில் பொதுவாக) முன்பு சாதி பிரமிடு உணவுகோள் மூலம் கட்டப்பட்டது. மாடுண்போர் தாழ்த்தப்பட்டனர், பசு, பன்றி தவிர்த்துப் பிறவுண்போர், சைவ வேளாளர், பிராமணர் என்று 19-ம் நூற்றாண்டில் இருந்தது."

உணவு கொள்ளும் முறையில் சாதிப் பாகுபாடு பார்க்கப் பட்டது என்பது உண்மைதான். ஆனால் சாதியின் அடிப்படை உணவு அல்ல. உணவு என்பது சாதிமுறை என்ற சிக்கலின் ஒரு விளிம்பு.

நண்பர் பூபதி மாணிக்கம் " ஊரில்.. குறிப்பாக புகைவண்டி நிலையங்களில்.. மரக்கறி உணவகம் என்றும் போட்டிருப்பார்களே..!?!" என்று கேட்டிருந்தார். உண்மை தான். ஆனால் அண்மையில் பல இருவுள் (rail) நிலையங்களில் மரக்கறி என்ற சொல் மறைக்கப் பட்டுவிட்டது, இருவுள் நிலைய உணவுக் கடைகளையும் சேர்த்து பெரும்பாலான இடங்களில் "உயர்தர சைவ உணவகம்" தான் மிஞ்சி நிற்கிறது.

நண்பர் பழனி, சிங்கையில் உள்ள சில செட்டிநாட்டு உணவகங்களில் மரக்கறி சாப்பாடு என்று சொல்லுவதாகவும், அவர் வீட்டுக்காரம்மா "மரக்கறி சாப்பாடுதானே உங்களுக்குச் சமைக்கணும்?" என்று கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் சொன்னார். ஏற்கனவே சொன்ன மறுமொழிதான். "நீங்கள் எல்லாம் பண்பாட்டு மிச்சங்கள். பழைய பழக்கத்தைக் காத்து வருகிறீர்கள். பொதுவாக மற்ற நாட்டிற்குக் குடியேறிய தமிழர்கள் தமிழ்ச்சொற்கள் பலவற்றைக் காப்பாற்றி வருவார்கள்."

இனி மருத்துவர் செயபாரதி சீனர்களின் கடைகளில் கறியைப் போல சோயா மாவில் செய்த போலிக்கறி உணவுகள் பற்றிச் சொன்னார். அவர் சொல்லுவது போல், விவரம் தெரியவில்லை என்றால் "ஏதுண்மை; எது போலி" என்று தெரியாத அளவிற்கு அவ்வளவு நுண்ணிய உருவாக்கம் சோயாவில் செய்யும் போலிக்கறி. உணவைச் செய்தவர் சொன்னால் தான் நம்மால் அது மரக்கறி என்று நம்ப முடியும். இதைப் பழனியும் வழிமொழிந்திருந்தார்.

நண்பர் இண்டிராம் சீன புத்தத் துறவிகள் கறி சாப்பிடுவதில்லை என்ற கருத்துத் தெரிவித்திருந்தார். அது சரியா என்று சொல்ல முடியவில்லை. கோதம புத்தரே கறி சாப்பிட்டவர் தான். அவர் இறந்த அன்று கெட்டுப்போன பன்றிக் கறி சாப்பிட்டுத்தான் உணவு நச்சில் இறந்தார். திபெத்திய துறவிகள், தலாய் லாமா முதற்கொண்டு, கறி சாப்பிடுகிறார்கள் தான். சீனப் பெருநாட்டில் புத்தத்துறவிகள் கறி சாப்பிடுவார்கள் என்றுதான் படித்திருக்கிறேன். சிங்களத் துறவிகள் எல்லோருமே மரக்கறியாளர்கள் என்று சொல்ல முடியாது. மரக்கறிதான் சாப்பிட வேண்டும் என்று தம்ம பதம் சொன்னதாக நான் படித்ததில்லை. செயினம் சொல்லியிருக்கிறது. ஆசீவகம் சொன்னதாக நான் படிக்கவில்லை.

உணவுப் பழக்கம் என்பதை "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற மொழியின் படி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

நான் பிறந்த பொழுது மரக்கறிதான். திருச்சி புனித வளனார் கல்லூரி புது விடுதியில் சேர்ந்தபின்னால் சூழ்நிலை கருதி கறிச் சாப்பாடு (அது ஒரு பெரிய கதை; இன்னொரு முறை பார்க்கலாம்.) இப்பொழுது ஓரிரு ஆண்டுகளாய்ப் பெரிதும் மரக்கறி தான். எப்பொழுதாவது கட்டாயத்தின் பேரில் கறிச் சாப்பாடு. இது போலப் பலரும் மரக்கறிக்கும், கறிக்கும் விட்டு விட்டு மாறியிருப்பார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன்.

முடிவில் நண்பர் சாபு துபாயில் மரக்கறி பரவும் செய்தியைச் சொன்னார்; உலகம் எங்கும் மரக்கறி சிறிது சிறிதாகப் பரவிக் கொண்டு இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்.

எனக்கு என்ன வியப்பு என்றால் நான் எதற்காக "மரக்கறி" என்ற தலைப்பில் மடல் எழுதினேனோ அந்தப் பொருளை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பதுதான். பலமுறை ஒருவர் எழுத்திற்கு இப்படி நடப்பதுண்டு. ஒருவர் எதையோ நினைத்து எழுதியிருப்பார். அது பொருட்படுத்தப் படாமல், வேறொன்று அலசப்பட்டுக் கொண்டு இருக்கும். நான் எழுதியது மொழிபெயர்ப்புச் செய்யும் போது எந்த அளவு மாறுகடை உளவியல் (marketing psychology) இங்கே உள்நுழைகிறது என்பதைப் பற்றியது.

மாறுகடையியலின் ஊடுறுவல் இந்தக் கால வாழ்வில் மிகுந்து கிடக்கிறது என்று சொல்ல வந்தேன். முடிவில் "மரக்கறி என்ற சொல் வழக்கிழந்ததே, அதை மீட்டுக் கொண்டு வரமுடியாதா?" என்ற ஒரு ஏக்கத்தைச் சொல்லியிருந்தேன்.

ஏக்கம் நண்பர்களிடம் பற்றிக் கொண்டது. மாறுகடைத்தல் என்ற உள்ளீடு எங்கோ போயிற்று. எனக்கு வியப்புத்தான்.

அன்புடன்,
இராம.கி,

Tuesday, January 17, 2006

மரக்கறி - 1

பொதுவாகச் சிவகங்கை மாவட்டத்தார் பலரும் ஓர் இருப்புக் கொள்ளாதது போல, ஆண்டின் பல நாட்கள் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு ஊருக்குப் போய் வந்த வண்ணம் இருப்பார்கள். தனியார் பேருந்து, அரசினர் பேருந்து, இன்னும் இருவுள் நிர்வாகம் (railway administration) எனப் பணம் பண்ணுபவர்கள் இவர்களைப் போன்றவர்களாலேயே பயனடைகிறார்கள். சட்டென்று எங்கள் ஊருக்குப் பயணச்சீட்டுப் பெறுவதென்றால் மாத முழுத்த (முகூர்த்த) நாட்களில் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இப்படி அரக்கப் பரத்தல் என்பது மற்ற மாவட்டத்தாரைப் பார்க்க எங்கள் மாவட்டத்தவரிடம் அதிகம் என்றே எனக்குத் தோன்றுவது உண்டு. நான் மட்டும் புறனடையா என்ன, இப்படித்தான் ஒரு முழுத்த நாளுக்கு முந்திய இரவு ஊருக்குப் புறப்பட்டுப் போய், மொய், அன்பளிப்பு என்று முழுத்த நாளில் என் முகத்தைக் காட்டிவிட்டு அடுத்த நாள் காலை சென்னைக்குத் திரும்பி வந்தேன்.

ஊருக்கு அவ்வப் பொழுது போகும் போது பெரும்பாலும் தனியார் ஒப்பந்தப் பேருந்துகளில் போவதுண்டு. இந்தப் பேருந்துகள் சில குறிப்பிட்ட இடங்களில் சாப்பிடுவதற்கோ, மற்றபடி சிறுநீர் கழிப்பதற்கோத் தோதான வகையில், திருச்சி, உளுந்தூர் பேட்டை போன்ற இடங்களில் நிறுத்துவார்கள்.

ஒரு முறை போய் வந்தது K.P.N பேருந்து. இது சென்னை நோக்கி வரும் பொழுது, திருச்சியில் உள்ள புறவழிப் பாதையில் "ஆர்யாஸ்" என்னும் உணவகத்தின் முன் நிற்கும். பலமுறை அப்படி நின்றிருந்த போதும் கூர்ந்து கவனிக்காத நான், ஒருமுறை உணவகத்தின் பெயர்ப்பலகையில் கவனித்தேன்.

அப்படிக் கவனித்த போதுதான், மாறுகடையியல் (marketing) என்பது பெரிதும் வளர்ந்துவிட்டது என்பதைப் பெயர்ப் பலகையின் வழி உணர்ந்தேன். அந்த உணவகத்தின் முன்னால், பெயர்ப்பலகை தமிழ், ஆங்கிலம், மலையாளம் என்ற மூன்று எழுத்துகளில் எழுதியிருக்கும். "ARYAAS Vegetarian family restaurant" என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை "ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகம்" என்று தமிழிலும், மலையாளத்தில் வெறுமே எழுத்துப் பெயர்ப்பாய் "ARYAAS family restaurant" என்று மலையாள எழுத்தில் எழுதி இருந்தார்கள்.

இப்படி எழுதியிருப்பதற்கு மேலோட்டமான பொருள் இருந்தாலும், உள்ளூற இருக்கும் சில பொருட்பாடுகள் எனக்கு அப்பொழுது புலப்பட்டன. அவற்றை உங்களோடு பரிமாறிக் கொள்ளுகிறேன்.

ஆங்கிலத்தில் vegetarian family என்பதை தமிழில் சைவக் குடும்பம் என்று எழுதினால் பொருளே பிறழ்ந்து போய்விடுவதைப் பார்த்தீர்களா? ஏதோ சைவப் பிள்ளைமாருக்கு இருக்கும் உணவகம் போலத் தோற்றமளித்து விடுகிறது அல்லவா? பார்த்தார் மொழிபெயர்த்தவர், குடும்பம் என்ற சொல்லையே தவிர்த்துவிட்டு உயர்தர என்ற அடையைச் சேர்த்துவிட்டார். இப்பொழுது சாதிப் பொருள் போய் பொதுப்பொருள் வந்துவிட்டது.

அந்த "உயர்தர" என்ற அடையிலும் ஒரு சூக்குமம் இருக்கிறது. அது மாறுகடையாளர்களுக்கு (marketers) நன்றாகத் தெரியும். இந்தியாவில் பெரும்பாலான விரைவாய் நகரும் நுகர் பொருட்களில் (fast moving consumer goods) உயர்ந்த தரம் உள்ளவை தென்னகத்திலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும், தரம் குறைந்தாலும் சரி, விலையில் சல்லிசாய் இருப்பதே வடநாட்டிற்குமாய் விலைபோகின்றன. காட்டாக, நிர்மா சவர்க்காரக் (detergent) கட்டி வட நாட்டில் போகும் அளவு தமிழ்நாட்டில் போகாது, விலை கூடியிருந்தாலும், சர்வ் (Surf), ஏரியல் (Ariel), எங்க்கோ(Henko) போன்றவை தான் இங்கு விற்கின்றன. இத்தனைக்கும் நம்மூரில் "பொன்வண்டு, பவர், டிஸ்கவுண்ட்" எனப் பல உள்ளூர்க் கட்டிகளும் இருக்கின்றன. ஓரளவு இவை ஊர்ப் புதுக்கு (local product) என்ற அளவில் போகத்தான் செய்கின்றன. இருந்தாலும் சர்வ், ஏரியல், எங்க்கோ அளவிற்குப் போவதில்லை. இது போலத்தான் மற்ற நுகர் பொருட்களும்.

என்னமோ தெரியவில்லை, உயர்தரத்தைத் தேடும் குணம் தமிழர்களிடையே இருக்கிறது என்பது மாறுகடையைப் பொறுத்து முற்றிலும் உண்மை. இதை அறிந்து தமிழரிடையே ஒரு ஆதரவான நெருங்கிய உணர்வையே உருவாக்குவதற்காக தமிழ்நாட்டு விளம்பரங்களில் "உயர்தர" என்ற சொல்லைப் புழங்கப் பலரும் தயங்குவதில்லை.

சரி, மலையாளத்தில் மொழிபெயர்க்காமல் ஏன் எழுத்துப் பெயர்ப்புச் செய்கிறார்கள்? அதற்கு அவர்களின் பழக்கத்தைத்தான் சொல்லவேண்டும். பொதுவாக எழுத்துப் பெயர்ப்பு என்பது அங்கு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. தமிழர்கள் அளவுக்கு "மொழிபெயர்ப்பு வேண்டும்" என்று அவர்கள் அழுத்துவதில்லை. சரி, vegetarian என்ற சொல்லை மலையாளத்தில் மொழிபெயர்க்காமலேயே ஏன் விட்டார்கள் என்பது அடுத்த கேள்வி. தமிழ்நாடு அளவுக்கு vegetarian என்ற கருத்தீடு கேரளத்தில் அதிகம் பரவவில்லை என்பதே காரணமாய்த் தோன்றுகிறது. கேரளத்தில் பாலக்காடு ஐயர்களின் உணவகம் தவிர்த்து வேறு எங்கு போனாலும் பொதுவாய்க் கறிச் சாப்பாடுதான். "மாம்சம் இல்லாத்த ஊணு கழிக்கான் உண்டோ ?" அங்கு vegetarian என்ற சொல்லைப் போடுவதனால், ஆட்கள் அதிகம் வரப்போவதில்லை. இப்படி ஓர்ந்து பார்த்தால் மாறுகடை உளவியல் தான் உள்ளே வேலை செய்கிறது என்று புரியும்.

சரி மரக்கறி என்ற சொல் என்ன ஆயிற்று? "மரக்கறி, குடும்ப உணவகம்" என்று சொன்னால் ஆங்கிலப் பொருள் வந்து விடுமே என்று எனக்குத் தோன்றாமல் இல்லை. ஆனால் இப்பொழுது யாரும் அப்படிப் போடுவது அரிது தான். ஒரு 50, 60 ஆண்டுளுக்கு முன் இருந்த நல்ல தமிழ்ச் சொல் போயே போச்சு; தமிழ்நாடெங்கும் இப்பொழுதெல்லாம் ஒரே சைவம் தான், மரக்கறி என்ற சொல் பெரிதும் புழங்கிய தென்பாண்டி மண்டலத்தையும் சேர்த்துத் தான் இந்த நிலை.

என்னவோ தெரியவில்லை, மரக்கறி என்று சொல்லத் தயங்குகிறோம். "சைவம்" என்ற சொல்லை உணவிற்கும் நெறிக்குமாய் குழப்பிக் குழப்பிப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, January 14, 2006

முகந்தம் தொடர்ச்சி

அண்மையில், முகந்தம் பற்றிய என் இடுகையைப் பார்த்து தமிழ் உலகம் மடற்குழுவின் மட்டுறுத்தர் சிங்கைப் பழனி "சான்று என்னும் சொல் ஏற்கனவே இருக்கிறதே? அது சரியில்லையா?" என்ற கேள்வி கேட்டிருந்தார். சான்று மட்டும் இல்லை; சாட்சியம் என்ற சொல்லும், ஆதாரம் என்ற இன்னொரு சொல்லும் கூட evidence என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையாய்ப் பயன்பட்டு வருகின்றன. திருக்குறள் 25, 245, 1060 ஆகியவற்றில் தோற்றம் காட்டும் கரி என்ற பழைய சொல்லும் உண்டு.

இருந்தாலும், துல்லியம் என்று பார்த்தால், முகந்தம், ஆதாரம், சான்று [சாட்சியம் என்பது சான்றின் பகரி (substitute) ஆகும்.] கரி ஆகிய இந்தச் சொற்கள் ஒன்றிற்கு ஒன்று பகரியாய் இருப்பன அல்ல. ஒவ்வொன்றும் சற்று வேறுபடுபவை. அவை வெவ்வேறு கூட்டுகையில் (context) வெவ்வேறு விதமாய்ப் புழங்க வேண்டியவையே.

ஆதாரம் என்பது அடிப்படை என்ற பொருளில் basis என்பதற்கு இணையாய்ப் புழங்கினால், மிகச் சரியாய் வரும்.

சாட்சியம் என்ற சொல் தமிழ் மூலத்தினின்று வடமொழியிற் போய் சாக்கு>சாக்கியம்>சாக்ஷியம்>சாட்சியம் என்ற முறையில் உரு மாறி மீண்டும் தமிழில் வந்த சொல். தென்பாண்டி வழக்கில் "நீதாம்பா சொல்றே! மத்தவுக சொல்லலையே! இப்படி நடந்தது என்பதற்குச் சாக்கி யாரு?" என்று கேட்பார்கள். சாக்கு>சாக்கி என்பது சாட்சியைத்தான் குறிக்கிறது. சாட்சி என்பவர் "கண்ணால் விஷயத்தைக் கண்டவர்" என்று அபிதான சிந்தாமணி கூறும். அந்த வகையில் சாக்கி என்பவன் ஒரு நிகழ்வு நடந்ததை நேரே இருந்து பார்த்தவன். சாக்கிரதை என்ற இன்னொரு சொல்லும் (ஜாக்கிரதை என்பது, சாமான் என்பதை ஜாமான் என்பது போன்ற, ஒரு வலிந்த பலுக்கல்) கூட ஒரு தொடர்பான பொருளில் புழங்கும் இருபிறப்பிச் சொல் தான். "போற இடத்துலே, பார்த்துச் சாக்கிரதையாகப் போ" என்னும் போது அங்கே ஓர் இரட்டைக் கிளவி (பார்த்துச் சாக்கிரதை) உள்ளே தொக்கி நிற்கிறது. நாம் தான் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம். சாக்(கி)ரதை என்பது பேச்சு வழக்கில் விழிப்பைத் தான் குறிக்கிறது. பலுக்கும் போது ரகரம் உள் நுழைவதால் இந்தச் சொல்லும் நமக்கு வடமொழித் தோற்றம் காட்டுகிறது. (சாக்ரதை என்ற சொல்லில் இருக்கும் ஈற்றைக் கொஞ்சம் மாற்றிச் சாகரணம்/சாகரம் என்ற இன்னும் இரண்டு இருபிறப்பிச் சொற்கள் விழித்திருக்கையைக் குறிப்பதாய் அகரமுதலிகளில் இருக்கின்றன.) "கண்கூடாக, வெளிப்படையாக" என்ற பொருளில் கையாளப்படும் சாட்சாத்து என்ற சொல்லிற்குள்ளும் சாக்கு என்பதின் வேர் இருக்கிறது. இந்தச் சொற்களுக்கெல்லாம் முதலாய்ச் சாக்கு என்ற அடிப்படைச் சொல்லைக் கவனிக்க வேண்டும்.

சாக்கு என்பதற்கும் சான்று என்பதற்கும் சால் என்பதே சொல்லடி ஆகும். அதனால் தான் இவை இரண்டையும் ஒரு பொருட்சொற்கள் என்று சொல்லுகிறோம். சால் என்பது கருமைப் பொருளையும், கூர்மைப் பொருளையும், நிறைவுப் பொருளையும் குறிக்கும் ஒரு பக்கவேர். முதல் இரண்டு பொருள்களின் காரணமாய் கண் என்னும் உறுப்பையும் அந்தச் சொல் குறித்திருக்க வேண்டும் என்றே நாம் முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது. (அதே பொழுது அகரமுதலிகளில் சால் என்பதற்கு கண் என்று நேரடியாகப் பொருள் குறிக்கவில்லை என்பதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.) மாறாக ஒரு சில கூட்டுச் சொற்களில் கண் என்னும் பொருள் உள்தொக்கி நிற்கிறது. காட்டாக, சாலகம் என்ற சொல் கட்டடங்களில் அமையும் பலக(ண்)ணியைக் குறிக்கும். சாலகம் என்ற இந்தச் சொல் சாலேகம், சாளரம் என்றும் கூடத் திரியும். சால் என்பதற்கு வழி என்ற பொருளைச் சொல்லி "சாலகம் = காற்றுவரும் வழி" என்று ஒருசிலர் ஆற்றுப் படுத்துவார்கள். அது பொருந்தக் கூறும் கூற்று; சரியான விளக்கம் அல்ல. இன்னொரு சொல் சல்லடை. ச(஡)ல்களைக் கொண்டு அடைப்பது சல்லடை. அதில் கண் கண்ணாக அடைந்து கிடக்கிறதல்லவா? சல்லடையின் வழியாய் அரிசியையும் உமியையும் பிரிப்பது ச(ல்)லித்தல் என்ற வினையாய் பொருள் நீட்சி பெறும். கண்கட்டு வித்தைதையைச் சாலம் (>ஜாலம்) என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்கள். மாய சாலம் என்பது "மறைப்பதால் கண்கட்டும் வித்தை". இது போன்ற காட்டுகளால், சால்>சல் என்பது கண்ணைக் குறிக்கும் சொல் தான் என்பதை ஓர்ந்து பார்த்துப் புரிந்து கொள்ளுகிறோம்.

சல்>சல்க்கு>சக்கு என்பது கண்ணைக் குறிப்பதாய் நிகண்டுகள் குறிக்கும். சக்கு என்பதில் இருந்து சகரம் தவிர்க்க வரும் சொல் அக்கு. இதன் வழிப்படும் அக்கம், அக்கி என்பனவும் கண்ணைக் குறிப்பனவே. அக்கு, அக்கம், அக்கி என்பன கூர்மைப் பொருளையும் முள் என்ற உறுப்பையும் குறிக்கும் சொற்கள் தான். மீன் அக்கி>மீனாக்கி>மீனாக்ஷி>மீனாட்சி = கயற்கண்ணி, வியல அக்கி>விசல அக்கி>விசாலாக்கி>விசாலாக்ஷி>விசாலாட்சி = தடங் கண்ணி, காம அக்கி>காமாக்கி>காமாக்ஷி>காமாட்சி = காமக் கண்ணி என்பனவெல்லாம் இந்த அக்கியின் உட்பொருளைக் காட்டும்.

சால் என்பதற்கு வேராக கருமைப் பொருளில் யா என்னும் ஓரொழுத்து ஒருமொழியைச் சொல்லலாம். யா பற்றிய விளக்கங்களைச் சொல்லியல் அறிஞர் ப.அருளியின் பொத்தகத்தில் விரிந்து காணலாம். யா என்னும் ஓரெழுத்து ஞா>நா என்று திரிவது போலவே சா என்றும் அது திரிவது இயற்கை தான். தமிழில் பல சொற்களின் முதல், இடை, கடை நிலைகளில் வரும் யகரம் சகரமாகத் திரிவதைப் பரக்கக் காணலாம்.

யாமம்>சியாமம்>சாமம் என்று கருமையான இரவைக் குறிக்கும் சொல் எப்படிப் பிறந்ததோ அதே போல யா>யால்>சியால்>சால் என்றும் பிறக்க வழியுண்டு. (சாமம் என்ற சொல் சாமளம் என்றும் நீண்டு, விண்ணவனின் கருமை நிறத்தைக் குறிக்கும்.) சால் என்ற சொல்லுக்குப் பல வழிப்பொருள்கள் இருந்தாலும், அடிப்படையில் அது கருமை, கூர்மை, நிறைவு என்ற பொருள்களை மட்டுமே குறிக்கிறது. இங்கே கூர்மைப் பொருளுக்கு நான் அழுத்தம் கொடுக்கவில்லை. (ஏரால் உழும் போது அமையும் சால் கூர்மைப் பொருளில் இருந்து பெறப்பட்டதே! தவிர சால் = போக்கு, சாக்கு = வீண்காரணம், சாக்கிடுதல் = போக்குச் சொல்லுதல், சாகாடு = வண்டி, வண்டியுருளை என்பவையும் அதே பொருளில் பெறப்படும் மற்ற சொற்கள். சால் என்ற சொல்லின் உள்ளே இருக்கும் கூர்மைப் பொருளில் சாலினி என்பவள் வேட்டுவ மகளாயும், தேவராட்டியாயும் ஆவாள். அதே கூர்மைப் பொருளில் துணி நெய்வோன் சாலியன் எனப்படுவான்); நிறைவுப் பொருளையும் நான் பேசவில்லை. (நீரிறைக்கும் சால், சாதித்தல் = நிறைவேற்றுதல், நிலைநாட்டுதல், சான்றோன் = அறிவு நிறைந்தவன் போன்ற சொற்களும் இந்த நிறைவுப் பொருளில் எழுந்தவையே!)

சால் என்ற சொல் கருமைப் பொருளில் வந்து கருநிற ஆச்சா மரத்தைக் குறிக்கிறது. யாவகம்>சாவகம் எனப் புழங்கியதை எண்ணிப் பார்க்க வேண்டும். யா மரங்கள் நிறைந்த தீவு யாவகத்தீவு என்னும் சாவகத்தீவு ஆகும். பனி மலையில் இருந்து வழிந்தோடும் கண்டகி நதிக்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் (கம்மம் என்றால் ஊர்) சாலக்கம்மம்>சாலக்கமம்>சாலக்கிராமம்>சாளக்கிராமம் என்று ஆகும். சாலக் கமம் என்பது இன்னொரு விதத்தில் கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒரு விதக் கருஞ் சாயற் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite. சாலி என்பது கருஞ்சிவப்பு நிற அரிசி (கவுணி அரிசி என்று செட்டிநாட்டுப் பகுதியில் சொல்லுவார்கள். மலேசியாவின் காழக மாநிலத்தில் - கடார மாநிலத்தில் - விதப்பாகக் கிடைப்பது.). இந்த அரிசி யாவகத்தீவிலும் சிறப்பாகக் கிடைப்பதால் அந்தத் தீவிற்குச் சாலித்தீவு என்றும் பெயர். மணிமேகலையில் சாலித்தீவு என்றே இது குறிப்பிடப் பெறும்.

சால் என்னும் சொல்லைப் பார்த்து அது கண்ணைக் குறிப்பிட இயலுமை (possibility) உண்டு என்று பார்த்த நாம், முடிப்பதற்கு முன் சுருக்கமாய் கண் என்ற பொருளில் நிகண்டுகளில் வரும் "நயனம், நேத்திரம், நாட்டம், நோக்கம், சக்கு, அக்கம், அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, தாரை, விழி, விலோசனம், பார்வை, அம்பகம், கோ" என்ற சொற்களையும் மேலோட்டமாய்ப் பார்ப்போம்.

இதில் நயனம், நேத்திரம், நாட்டம், நோக்கம் ஆகிய நாலும் யா>ஞா>நா என்ற நீட்சியில் திரிந்து கருமைப் பொருளில் எழுந்த சொற்கள். இவற்றை ப.அருளி தன் பொத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருப்பார்.

சக்கு, அக்கம், அக்கி ஆகியவற்றை மேலே சொன்னபடி கருமைப்பொருளில் சால்>சல் என்ற வேரின் வழி பார்க்க முடியும்.

துல் என்னும் வேரில் இருந்து தெல்>தெர்>தெரி>தெரிதல் = காணுதல் என்ற வளர்ச்சி ஏற்படும்; தெரி என்னும் சொல்லடியில் இருந்து மற்ற பெயர்ச்சொற்கள் பிறக்கும். தெரியி>தெரிஷி>தெருஷ்டி>திருட்டி>திட்டி; தெரிக்கு>திருக்கு.

கண்ணில் நீர் உகுக்கும் காரணம் பற்றிப் பின்னாளில் தாரை என்ற சொல்லும் கண் என்னும் உறுப்பைக் குறிப்பால் உணர்த்தும்.

அடுத்தது விழி, விலோசனம் போன்றவை. வில்>வில்லி>விலி>விரி; விலி>விழி; இமைகளை விரித்துக் காண்பதால் கண் விழியாயிற்று. விரியின் திரிவு தான் விடி>விடியல். தமிழில் விடிதல் என்ற வினைக்கும் இலத்தீனில் உள்ள vidi என்ற சொல்லுக்கும் உள்ள இணை வியந்து பார்க்கக் கூடியது. evidence என்ற சொல்லுக்குள்ளூம் இந்த vidi இருப்பதை ஆழ்ந்து பார்த்தால் உணரலாம். நேரில் பார்த்து வெளிக்காட்டுதே evidence என்று ஆகும். விலியம்>விலயம்>விலசம்>விலோசம்>விலோசன்>விலோசனம் என்ற முறையில் வடமொழியிலும் இருபிறப்பியாய் விரியும். வி என்னும் முன்னொலியைத் தவிர்த்து லோசனம் என்றே வடமொழியில் பெரிதும் பயன்படத் துவங்கும். மீனலோசனி என்று கயற்கண்ணி அழைக்கப் படுவாள். சு லோசனி என்று எழிற்கண்ணி அழைக்கப் படுவாள்.

இனி, இமைகள் பரந்து நிற்பதும் விரிந்து நிற்பதே என்ற காரணத்தால் பரவை>பார்வை என்ற சொல்லும் புதிதாய்க் கிளைக்கும்.

கூர்மைப் பொருளில் அம்பகம் என்ற சொல்லும், கோ என்ற சொல்லும் எழுந்து கண்ணைக் குறிக்கும்.

முடிவாக சான்று/சாட்சியம் என்பன ஏற்கனெவே நிகழ்ச்சி நடந்ததைத் பார்த்திருந்த eye-witness என்ற பொருளையே தரும். (wit என்பதற்குள்ளே vidi என்பது இருப்பதை ஓர்ந்து பார்க்க வேண்டும்.). முகந்தம் என்பது நிகழ்வு நடந்திருக்கலாம் என்பதை அங்கிருக்கும் பொருள்கள் இன்னும் மற்றவைகளை வைத்து ஏரண வழி உய்த்தறிந்து பார்ப்பது. இங்கே நேரே கண்டிருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் முன்வருதல் என்ற நிலை ஏற்படவேண்டும். கிட்டத்தட்ட inference என்றே பொருள் கொள்ளலாம். ஆதாரம் என்பது basis. கரி என்பது அடையாளம் (tell-tale signs). கருதல்/கருத்தல் என்ற வினையில் இருந்து பெறப்பட்டது.

சான்றிதழ் (certificate) என்பது ஒன்று நடந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று ஒருவரைப் பற்றி இரண்டாமவர் மூன்றாமவருக்குக் கொடுப்பது.

அன்புடன்,
இராம.கி.

Monday, January 09, 2006

முகந்தம்

Is there any evidence for what you say?

evidence என்ற சொல்லை முதலில் ஆங்கில மொழியில் ஓர் ஆவணத்தில் ஆண்டது 1382 என்று சொற்பிறப்பியல் அகரமுதலி குறிக்கும். சொற்பிறப்பு இப்படிக் குறிக்கப் படுகிறது.

from L. evidentem (nom. evidens) "perceptible, clear, obvious," from ex- "fully, out of" + videntem (nom. videns), prp. of videre "to see." Evidence (c.1300) is L.L. evidentia "proof," originally "distinction." After c.1500 it began to oust witness in legal senses.

இனி இதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது? ஊடே வரும் வேர், தொடர்ச்சொற்களையும் பார்ப்போம்.

"முன்வருதல்" என்ற பொருளில் உள்ள ஒரு தமிழ் வினைச் சொல் முகுதல் எனப்படும்; முல் என்பது அந்தச் சொல்லின் வேர்; முல் என்னும் வேரில் இருந்து பிறந்தது மூலம் என்ற சொல். ஒரு செடிவேரின் அடியும் கூட மூலம் தான்.

முகுதலில் இருந்து கிளைத்த சொற்கள் முகம், முகனை போன்றவை. முகுதலில் பிறந்த இன்னொரு சொல் முதல் எனப்படும்.

முகுதல் என்பது தன்வினை; முகுதலின் பிறவினை முகுத்தல். முகுத்தலின் திரிவு மூத்தல்; மூத்தலில் இருந்த பிறந்த சொல் மூத்தவன் (முன் வந்தவன்). ஆதாரம், மூலம் என்ற பொருட்பாடுகள் முகுத்தலுக்கு வந்ததும் இப்படித்தான்.

முகுதலின் மெலிவுத் திரிவு முகுந்தல் = முன்வருதல்; முகுந்தல் என்ற சொல்லில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் முகுநை. முகுநை>முகநை>முகனை என்று மாறும்; முகனையின் திரிவு மோனை. முதலெழுத்து யாப்பில் பொருந்தி வருதல் மோனை என்றாகும்;

முகுந்தம்>முகந்தம்>முகாந்தம்>முகாந்த்ரம் என்று, வழக்கம் போல் வடமொழிக்குச் சென்று ஆகாரம் கூட்டி, கூடவே ரகரத்தை நுழைத்து, பின் தமிழுக்கு திரும்பவும் கொண்டுவந்து முகாந்திரம் என்று திரித்துதழைப்பார்கள். அப்படி வந்து சேர்ந்தவுடன், நம்முடைய மூலம் நம்மில் பலருக்கும் சட்டென மறந்து போகும். விளைவாக இது வடசொல் என்று நம் உறவை ஒருசிலர் வெட்டிவிடுவார்கள்; இப்படியாகத் தமிழிற் தொலைத்த சொற்கள் பல்லாயிரம் தேறும்.

நல்ல தமிழில் சொல்ல வேண்டுமானால் evidence என்பதற்கு முகாந்திரம் என்று சொல்லாமல், முகந்தம் என்று அழைப்பதே சரி.

"Is there any evidence for what you say?"
"நீ சொல்வதற்கு ஏதேனும் முகந்தம் இருக்கிறதா?"

தமிழ் மிக இயல்பான மொழி. கொஞ்சம் கொஞ்சமாய் நம்முடைய மூலங்களை நாம் மீட்டுக் கொண்டு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.