Friday, November 19, 2004

மூடி களைந்து முகம் ஆடி பார்ப்பமோ?

ஒத்தி யெடுப்பு(1) ஊரைச் சுற்றிலும்;
சுத்திச் சுத்தி முகமூடி போட்டு,
ஊருள் அலைவது நாய்பட்ட வேலை;

எங்கு பார்த்தாலும் இன்னொரு வன்போல்,
ஏதொன்றும் எடுத்து இதமாய் ஒத்தி....
ஏரா ளம்பேர்; என்னவோர் அழற்சி?

ஆனாலும், இப்படி ஒத்தி உழல்வதை,
காணாது காண்பதாய் கைதட்டிக் களிப்பு;
ஒருவனைப் போலவே ஓரா யிரம்பேர்,
முகத்தை மூடி மூளுணர் வொளித்து;
யாருக்கும் இங்கே வெட்கமும் இல்லை;
எதையும் நோக்கிக் கவலையும் இல்லை;

நேற்றைய இரவில் பயணம் முடித்து,
அண்ணா முனையம்(2) வான்புகல்(3) நுழைந்து,
ஆரவா ரத்தொடு அணுகிய வர்களாய்,
பேச்சு, நடையுடை, பாவனை, எதிலும்
பெருகி விரவிய அமெரிக்கத் தோற்றம்;
"அஞ்சு மேனியில்(4) அடங்கிய தமிழை
ஆங்கிலம் பேசி அளவினால் தானே,
அவர்கள் மூடிகள் முகத்தில் நிலைக்கும்?"

இவர்களின் இலக்கியப் படிப்பறி வெல்லாம்
வான்புகல் இக்கிம் பாதாம் கடையின்
முன்னூறு உருபா தாள்கட்டு(5) அளவில்,
துள்ளிடு புதினமாய்த் தூவிய கவர்ச்சி;
உள்ளே மறைத்த காமஞ் சொட்டினால்
இன்னும் தெளிவாம் இலக்கியச் செறிவு;

புதினப் பொத்தகம் வாங்கா திருந்தால்,
அதற்குப் பகரியாய்(6) மானகைப்(7) பொத்தகம்;
இந்தவா ரம்தான் வெளியே வந்தது;
அன்றேல் இந்தியச் சாத்திரம் பற்றி
ஆரோ வெள்ளையர் அருளுரைத் தொகுப்புகள்;

இன்னும் அழுத்தி இவரிடம் கேட்டால்,
என்றோ தமிழில் படித்த மறந்த
புதுக்கவி தைகளும் ஐக்கூ வரிகளும்;
சமயத்தில் இவற்றை எழுதியும் காட்டுவர்;
சொற்களை மடித்துப் சொக்கட்டான் ஆட
வெள்ளையன் இவர்க்குச் சொல்லா திருப்பனோ?

பார்க்கும் திரைப்பட நெறியா ளுநரோ(8)
எங்கோ சுட்ட மெக்சிகப் படத்தையும்,
ஈரான், அங்கெரி பிரசீலியப் படத்தையும்,
மாற்றிப் போட்டு கலவையைச் செய்து,
நெறிஞர் என்ற முகமூடி பிழைப்பர்;
நடிகர், இசைஞர், கலைஞர் எல்லாம்
லெபனான், பிரஞ்சு, இன்னும் இதுபோல்
ஏதோ வொன்றை இங்கே கொணர்ந்து
சரக்கு விற்றால் சரியாய்ப் போச்சு;
திலகம் என்று சொல்லிட மாட்டொமோ?

நாமெலாம் நாமாய் இருப்பதெப் பொழுது?
இரவில் ஆவது இருந்து தொலைப்பமோ?
மூடி களைந்து முகம்ஆடி பார்ப்பமோ?

அன்புடன்,
இராம.கி.

1. ஒத்தியெடுப்பு = imitation
2. முனையம் = terminal
3. வான்புகல் = airport
4. அஞ்சு மேனி = 5%
5. தாள்கட்டு = paper-back
6. பகரி = substitute
7. மானகை = management
8. நெறியாளுநர் = director

In TSCII:

´ò¾¢ ¦ÂÎôÒ(1) °¨Ãî ÍüÈ¢Öõ;
Íò¾¢î Íò¾¢ Ó¸ãÊ §À¡ðÎ,
°Õû «¨ÄÅÐ ¿¡öÀ𼠧ŨÄ;

±íÌ À¡÷ò¾¡Öõ þý¦É¡Õ Åý§À¡ø,
²¦¾¡ýÚõ ±ÎòÐ þ¾Á¡ö ´ò¾¢....
²Ã¡ Çõ§À÷; ±ýɧš÷ «Æüº¢?

¬É¡Öõ, þôÀÊ ´ò¾¢ ¯ÆøŨ¾,
¸¡½¡Ð ¸¡ñÀ¾¡ö ¨¸¾ðÊì ¸Ç¢ôÒ;
´ÕŨÉô §À¡Ä§Å µÃ¡ ¢Ãõ§À÷,
Ó¸ò¨¾ ãÊ ãÙ½÷ ¦Å¡Ç¢òÐ;
¡ÕìÌõ þí§¸ ¦Åð¸Óõ þø¨Ä;
±¨¾Ôõ §¿¡ì¸¢ì ¸Å¨ÄÔõ þø¨Ä;

§¿ü¨È þÃÅ¢ø À½õ ÓÊòÐ,
«ñ½¡ Ó¨ÉÂõ(2) Å¡ýÒ¸ø(3) ѨÆóÐ,
¬ÃÅ¡ Ãò¦¾¡Î «Ï¸¢Â Å÷¸Ç¡ö,
§ÀîÍ, ¿¨¼Ô¨¼, À¡Å¨É, ±¾¢Öõ
¦ÀÕ¸¢ Å¢ÃŢ «¦Áâì¸ò §¾¡üÈõ;
"«ïÍ §Áɢ¢ø(4) «¼í¸¢Â ¾Á¢¨Æ
¬í¸¢Äõ §Àº¢ «ÇŢɡø ¾¡§É,
«Å÷¸û ãʸû Ó¸ò¾¢ø ¿¢¨ÄìÌõ?"

þÅ÷¸Ç¢ý þÄ츢Âô ÀÊôÀÈ¢ ¦ÅøÄ¡õ
Å¡ýÒ¸ø þ츢õ À¡¾¡õ ¸¨¼Â¢ý
ÓýëÚ ¯ÕÀ¡ ¾¡û¸ðÎ(5) «ÇÅ¢ø,
ÐûǢΠҾ¢ÉÁ¡öò àŢ ¸Å÷;
¯û§Ç Á¨Èò¾ ¸¡Áï ¦º¡ðÊÉ¡ø
þýÛõ ¦¾Ç¢Å¡õ þÄ츢Âî ¦ºÈ¢×;

Ò¾¢Éô ¦À¡ò¾¸õ Å¡í¸¡ ¾¢Õó¾¡ø,
«¾üÌô À¸Ã¢Â¡ö(6) Á¡É¨¸ô(7) ¦À¡ò¾¸õ;
þó¾Å¡ Ãõ¾¡ý ¦ÅÇ¢§Â Åó¾Ð;
«ý§Èø þó¾¢Âî º¡ò¾¢Ãõ ÀüÈ¢
¬§Ã¡ ¦Åû¨ÇÂ÷ «ÕÙ¨Ãò ¦¾¡ÌôÒ¸û;

þýÛõ «Øò¾¢ þÅâ¼õ §¸ð¼¡ø,
±ý§È¡ ¾Á¢Æ¢ø ÀÊò¾ ÁÈó¾
ÒÐì¸Å¢ ¨¾¸Ùõ ³ìÜ Åâ¸Ùõ;
ºÁÂò¾¢ø þÅü¨È ±Ø¾¢Ôõ ¸¡ðÎÅ÷;
¦º¡ü¸¨Ç ÁÊòÐô ¦º¡ì¸ð¼¡ý ¬¼
¦Åû¨ÇÂý þÅ÷ìÌî ¦º¡øÄ¡ ¾¢ÕôÀ§É¡?

À¡÷ìÌõ ¾¢¨ÃôÀ¼ ¦¿È¢Â¡ Ù¿§Ã¡(8)
±í§¸¡ Íð¼ ¦Á캢¸ô À¼ò¨¾Ôõ,
®Ã¡ý, «í¦¸Ã¢ À¢Ãº£Ä¢Âô À¼ò¨¾Ôõ,
Á¡üÈ¢ô §À¡ðÎ ¸Ä¨Å¨Âî ¦ºöÐ,
¦¿È¢»÷ ±ýÈ Ó¸ãÊ À¢¨ÆôÀ÷;
¿Ê¸÷, þ¨º»÷, ¸¨Ä»÷ ±øÄ¡õ
¦ÄÀÉ¡ý, À¢ÃïÍ, þýÛõ þЧÀ¡ø
²§¾¡ ¦Å¡ý¨È þí§¸ ¦¸¡½÷óÐ
ºÃìÌ Å¢üÈ¡ø ºÃ¢Â¡öô §À¡îÍ;
¾¢Ä¸õ ±ýÚ ¦º¡øÄ¢¼ Á¡ð¦¼¡§Á¡?

¿¡¦ÁÄ¡õ ¿¡Á¡ö þÕôÀ¦¾ô ¦À¡ØÐ?
þÃÅ¢ø ¬ÅÐ þÕóÐ ¦¾¡¨ÄôÀ§Á¡?
ãÊ ¸¨ÇóÐ Ó¸õ¬Ê À¡÷ôÀ§Á¡?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

1. ´ò¾¢¦ÂÎôÒ = imitation
2. Ó¨ÉÂõ = terminal
3. Å¡ýÒ¸ø = airport
4. «ïÍ §ÁÉ¢ = 5%
5. ¾¡û¸ðÎ = paper-back
6. À¸Ã¢ = substitute
7. Á¡É¨¸ = management
8. ¦¿È¢Â¡Ù¿÷ = director

Thursday, November 18, 2004

திண்ணைப் பள்ளிக்கூடம் - 2

திண்ணைப் பள்ளிக்கூடம் என்பதை ஏட்டுப் பள்ளிக்கூடம் என்றும் எங்கள் ஊர்ப்பக்கம் சொல்லுவது உண்டு. ஏனென்றால் அந்தக் காலத்தில் இளம் அகவைப் படிப்பெல்லாம் ஏட்டில் தான் இருந்தது. ஏட்டில் ஆசிரியர் எழுதுவதை, நாம் முதலில் மனத்தால் சொல்லிப் பழகவேண்டும்; பின் மணலில் எழுதிப் பழகவேண்டும். இதுபோல், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, குறள் என்று ஒவ்வொன்றாய்ப் படிப்பது பெருகும். (கூடவே வீடுகளில் தேவாரம், நாலாயிரப் பனுவல், சிவபுராணம், விநாயகர் அகவல் ஆகியவை படிப்பதும் உண்டு.) இது தவிர 16ம் வாய்பாடு வரை ஒப்பிக்க வேண்டும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று எண் கணக்குகள் கொஞ்சங் கொஞ்சமாய் விரியும். வர்க்க மூலம், பரப்பளவு, கன அளவு என்று கணக்கின் ஆழமும் கூடும். ஒவ்வொரு கணக்கும் நடைமுறைப் பயிற்சியில் படிப்பதே ஒழிய தேற்றம், நிரூபணம் என்ற கிரேக்க முறையில் போகாது. கிட்டத்தட்ட அவ்வளவு கணக்குகளும் அன்றாட வாழ்க்கையில் தொடர்பு கொண்டவையாகவே இருக்கும்; பறவைகள், மரங்கள், இயற்கை அறிவியல் ஆகிய படிப்புக்கள் மாணாக்கனின் இயல்பான வாழ்க்கையில் தெரியவேண்டியவை என்பதால் அவற்றைத் தனியே பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் வழக்கம் கிடையாது. இப்படி எண்ணும் எழுத்தும் தெரிந்துகொள்ளுவது ஒருவிதமான படிப்பு. இன்றைக்குப் பலரும் அத்தகைய படிப்பை ஒப்புக் கொள்ளாமற் போகலாம்.

ஏட்டில் எழுதித் தருவதை நாம் மணலில் எழுதுவதிலிருந்து, நாளா வட்டத்தில் கரும்பலகை, அதில் எழுதப் பயன்படும் குச்சி என நம்முடைய எழுதுபுலன்கள் விரியும். மணிக்கட்டு ஒடியும்படி எழுத்துப் பயிற்சி இருக்கும். ஒழுங்கான கையெழுத்து பழக்கத்திற்கு வரும்வரையில் விளம்பி எழுதும் பயிற்சியும் (ஆசிரியர் எழுதியதின் மேல் அப்படியே பின்பற்றி எழுதுவதை விளம்புதல் என்று சொல்லுவார்கள்), திரும்பித் திரும்பி பலமுறை உட்பொதிக்கும் (imposition) பயிற்சியும் இருக்கும். ஆசான் எழுதித் தர, எழுதித் தர, எத்தனை நாட்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோமோ அதற்கேற்ப, ஏட்டுச் சுவடியின் கனம் கூடிவரும். பள்ளிக்கூடத்தில் சேரும் போது நாம் அறியும் சுவடி எழுத்து கிட்டத்தட்ட அரை அணுங்குழை (அங்குலம்) அளவுக்குக் கூட இருக்கும். நாளாக நாளாக, எழுத்தையும் எண்ணையும் நாம் நன்கு கற்று முடிந்த சூழ்நிலையில், ஏட்டில் உள்ள எழுத்தின் நறுக்களவு (size) கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுருங்கும்.

பொதுவாக ஏடு என்பது ஆசான் எழுதுவதற்கு மட்டுமே அந்தக் காலத்தில் இருந்தது. எழுத்தாணியைப் பிடித்து மாணவர்கள் ஏட்டில் எழுதப் பழகியதெல்லாம், எங்களுக்கு இரண்டு மூன்று தலைமுறைகள் முன்னால் நின்றிருக்க வேண்டும். புறனடையாக, அங்கொன்றும், இங்கொன்றுமாய்த் தனிப்படச் சிலர் ஏட்டில் எழுதப் பழகியிருக்கலாம். [எங்கள் பக்கத்தில், 30, 40 ஆண்டுகள் முன்பு வரை திருமண வீடுகளில் எழுதப்படும் பணத்து இருப்பு ஏடு, இசைகுடிமான ஏடு, போன்ற பரம்பரை ஏடுகளை ஒரு சிலர் மட்டும் எழுத்தாணியால் எழுதக் கற்றிருந்தார்கள். பின்னால் இவையும் மரக்கூழ்த் தாளில் வந்துவிட்டன. சிலர் இப்போது அச்சடித்தும் வெளியிடுகிறார்கள்.] ஒருகாலத்தில் வீட்டு வரவு செலவுக் கணக்குகள் கூட பனையோலையில் வீச்செழுத்தில் எழுதப்பட்டு வந்தன. [ஆனால் அதில் பதின்மக் கணக்கு (decimal accounting) இருக்காது; எல்லாமே பின்னக் கணக்குத்தான், கீழ்வாய் இலக்கம் தெரியாதவர்கள் இந்தக் கணக்குகளைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.] எழுத்தாணி பிடித்து எழுதும் கலை இப்பொழுது காப்பாற்றப் படாமல் அழிந்து கொண்டிருக்கிற ஒரு கலை. இன்றைக்கு அது பயன்படாமல் போனது நுட்பியலின் படி சரிதான் என்றாலும், வரலாற்றுத் தன்மை கருதி இது போன்ற கலைகளை காட்சிக் கூடங்களிலாவது காப்பாற்றியிருக்கலாம்.

எழுத்தாணி என்பதை நிகண்டுகளில் ஓலை தீட்டும் படை, கண்டம், ஊசி, இலேகை, எழுதுகோல், தூலிகை (துகிலிகை) என்றெல்லாம் சொல்லுவார்கள். கண்டம், ஊசி என்பன கூர்மைப் பொருளைக் குறிக்கின்றன. இல் என்ற வேரும் குறி, கூர் என்ற கூர்மைப் பொருளையே குறிக்கிறது. இல்>இலக்கு = குறி; இல்லென்னும் வேரில் இருந்து பிறந்த சொல்தான் இல்>இழு>எழு>எழுதுதல்; அதே போல இலக்கித்தல் என்பதும் எழுதுதலையே குறிப்பிடும். இழுப்பியது லிபி என்று வடபால் திரியும். இலக்கியது இலகை>இலேகை>இரேகை என்றும் பொருள் விரியும்; இலகுபவன்>இலேகன்>இலேகுகன் என்றும் சொல்லப் படுவான்.

ஏட்டுச்சுவடிகளில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் படிக்கப் பழகும் சுவடி. இன்னொன்று பெரிய நூல்கள், கணக்குகள் எழுதும் சுவடி.

முதலில் சுவடிகள் பற்றி ஒரு சில அடிப்படைச் செய்திகளைப் பார்ப்போம். எப்படி மண்ணில் அடி பதித்துத் தடம் பொறிப்பதைச் சுவடு என்று சொல்கிறோமோ, அதே போல எழுத்தின் தடம் பொறிப்பதும் சுவடி என்று ஆயிற்று. கால் தடம் எப்படி ஒன்றிற்கு மேல் அமைகிறதோ (குறைந்தது இரண்டு சுவடுகள் வரும் இல்லையா?) அது போல சுவடி என்ற சொல்லும் இரண்டையும், இரண்டிற்கும் மேலும் உள்ள தொகுதியையும் குறிக்கிறது. நாளாவட்டத்தில் சுவடி என்றாலே இரண்டு என்ற பொருள் கூட ஏற்பட்டது. சுவடி>சோடி என்றும் திரியும்.

சுவடி என்பது ஓலைகளால் ஆனது. ஓலை என்ற சொல்லிற்குத் தாள், இதழ், ஏடு, மடல், மாழை, தோடு என்ற ஒருபொருள் இணைச்சொற்களும் உண்டு. பனை ஓலையில் ஒரு காம்பு, இரண்டு தாள்கள் இருக்கும். (தாள்கள் என்ற சொல்லின் பொருட்பாடு பனையோலையோடு தொடங்கியது. தாள்>தாழை மடல் என்ற சொல்லாட்சி இன்னொரு வகை. இன்றையத் தமிழில் தாள் என்ற சொல் மரக்கூழால் ஆன எழுது பரப்பைக் குறிப்பதாய் பொருள் நீட்சி பெற்று விட்டது.) பனை ஓலையின் காம்பை எடுக்காமல் நீரில் ஊறப்போட்டுப் பின் ஓரங்களை தமக்கு வேண்டிய அளவு நறுக்கிப் பாடம் பண்ணி, பிறகு மாணாக்கர் சுவடியில் பயன்படுத்துவார்கள். ஓலையை ஒழுங்குற நறுக்கியோ, முறித்தோ, கிள்ளியோ செய்வதால், ஓலைக்கு நறுக்கு, முறி, கிள்ளாக்கு என்றும் பெயருண்டு.

ஒரு ஓலையின் நறுக்கு ஒரு முழம் (கிட்டத்தட்ட 16.5 அணுங்குழை) இருக்கும். நறுக்கின் அகலம் கிட்டத்தட்ட இரண்டு பெருவிரல் இருக்கும். (அதாவது ஒன்றரை அணுங்குழை; தமிழ் நீட்டல் அளவையின் படி 8 நெல் = 1 பெருவிரல்; 12 பெருவிரல் = 1 சாண்; 2 சாண் = 1 முழம்; 4 முழம் = 1 கோல் = 66 inches; 4 முழம் வேட்டி, 8 முழம் வேட்டி என்ற சொல்லாட்சிகளை நினைவு கொள்ளுங்கள்.) நீரில் போட்டுப் பின் பாடம் பண்ணுவதால், ஒரு தட்டை நிலை இந்த ஓலைகளுக்குக் கிடைக்கும். வேண்டிய அளவு நீளம் கொண்ட, கூடிய மட்டும் முறுக்கு அடையாத தட்டை ஓலைகளைச் சுவடிக்கெனப் பயன்படுத்த வேண்டும். நறுக்கிய ஓலைகளில் காம்பு இருப்பது இளையர் சுவடிக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுக்கும். காம்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அளவாக வெட்டிச் செய்யப்பட்ட ஓலைக்கு ஓலை-நறுக்கு என்று பெயர். வெவ்வேறு அளவில் வெவ்வேறு நறுக்கு. (ஓலை என்பது தான் கிட்டத்தட்ட folio என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக உள்ள தமிழ்ச்சொல். நறுக்கு என்ற சொல் ஆங்கிலத்தில் உள்ள size என்ற விதப்பான சொல்லுக்கு இணையாக இருக்கும். அளவு என்ற சொல்லை விதப்பாக இல்லாமல் பொதுமையாகப் பயன்படுத்துவது நல்லது. நறுக்குத் தெறித்தாற் போல என்ற சொலவடை size என்பதையே நடைமுறையில் குறிக்கிறது.)

மாணாக்கர் சுவடிகளில் பயன்படும் காம்புள்ள நறுக்குத் தாள்களின் உட்பக்கத்தில் எதுவும் எழுதுவதில்லை. மாறாக காம்பை நீக்கி, ஒவ்வொரு தாளையும் எழுது பொருளாக்கும் இன்னொரு வகையில் தாளின் தடிமனுக்கேற்ப இருபக்கமோ, ஒருபக்கமோ எழுத்தாணியால் எழுதுவது உண்டு. இந்த இரண்டாவது முறைதான் பெரிய சுவடிகளில் பயன்படும் முறை.

இரண்டு முறைகளிலுமே, ஓலையில் எழுதிய எழுத்துத் தெரியவேண்டும் என்பதற்காக கரித்தூளை நீரில் குழைத்து அப்புவது உண்டு. கூடவே மங்கலப் பொருளாய் மஞ்சளையும் அங்கங்கே சேர்த்துத் தடவும் போது படிக்கின்ற ஏடு பார்ப்பதற்கு ஒரு வண்ணக் கோலமாய் இருக்கும். ஓவ்வொரு ஆண்டும் சரசுவதி பூசையை ஓட்டி சந்தனத் தெளிப்பு பெறும் சுவடிகள் இன்னும் கொடுத்து வைத்தவை. அந்தக் கோலம் மணக்கவும் செய்யும்.

ஓலை நறுக்கில் கிட்டத்தட்ட 4-க்கு ஒருபங்கு அளவில் ஒரு துளை செய்யப்பட்டு, ஒரு நுனியில் முடிச்சுப் போட்ட கயிற்றை இந்தத் துளையில் கொடுத்து, ஓலைகள் சேரச்சேர நூற் கயிறால் கட்டுவார்கள். (விவாம் தெரிந்தவர்கள் இந்தத் தொலைவைச் சரியாகச் சொல்லலாம்.) பின்னால் சுவடிகள் சேர்த்துத் துணியால் கட்டப்பட்டு தூக்கிலோ, பரணிலோ இருத்தப் பெறும். எழுதப்பட்டது ஓரிரு ஓலைத்தாள்களாய் இருப்பின், அந்த ஓலைத்தாள்களைச் சுருட்டி ஒரு கொட்டானுக்குள் வைப்பார்கள்; இவற்றை ஓலைச்சுருள் என்று சொல்வார்கள்.

சுவடிகள் பற்றிச் சொன்னது இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். இனி பள்ளிக்கூடத்தில் சேருவதைப் பார்ப்போம்.

படிப்பு என்பதை எண்ணும், எழுத்தும் என்பதாக மட்டுமே நம் முன்னோர் கருதவில்லை. பல்வேறு விற்றைகளைக் கற்பதையும் படிப்பு என்றே நினைத்தார்கள். (வில்+து = விற்று>வித்து; விற்று+ஐ = விற்றை>வித்தை; வித்து என்ற விதப்பான சொல்லுக்கு பொதுவான அறிவு என்ற பொருள் வந்தது பின்னால் ஏற்பட்டது. ஒவ்வொரு மொழியிலும் விதப்பான கருத்து/சொற்களில் இருந்தே பொதுமையான கருத்து/சொற்கள் எழும். வடமொழி உள்ள "வித்" என்னும் அடிச்சொல் வித்தைக்கு வேர்ச்சொல்லாக ஆகமுடியாது. வில் எனும் விதப்பு வேரில் இருந்து பிறந்த பொதுமைச்சொல் வித்தை. வில் என்பது காட்டுவிலங்காண்டி காலத்தில் எழுந்த குறுஞ்சொல். வில்விடுவதைச் சொல்லிக் கொடுப்பதே முதலில் அறிந்த வித்தை.) மொத்தத்தில் மாணவன் ஒருவன் ஆளாவதற்குத் தேவையான எல்லாவற்றையுமே ஒரு ஆசான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்தார். (அய்யன், ஆயன், ஆயான்; அய்யன்>அச்சன்>ஆசான்>ஆசார்யன்>ஆச்சாரியன்>ஆசிரியன், அய்யன்>அஞ்ஞன்>அந்நன்>அண்ணன்>அண்ணாவி, அய்யன்>அஞ்ஞன்>அந்நன்>அந்தன்>அந்தணன்; அய்யன்>அச்சன்>அத்தன்> உப+அத்தன்>உபாத்யன் எனப் பலசொற்கள் தமிழில் இருந்தும் பின் வடமொழி வழியும் கிளைக்கும். எல்லாமே பெரியவன் என்ற பொருளில் எழுந்த சொற்கள். பெருமான்கள் (ஹகரத்தை ருகரத்திற்கு அடுத்துப் பலுக்கிக் கொணர்ந்தால் brahmans>brahmins = பார்ப்பனர்கள் என்று வந்துவிடும். வடபால் மொழிகளில் ஹகர ஒலி இப்படிப் பல இடங்களில் இயல்பாக உள் நுழையும்.) என்ற சொல்லும் பெரியவர்கள் என்ற பொருளையே கொடுக்கும். (தமிழை விடுத்து வடமொழி வழி வேறு வலிந்த பொருளையெல்லாம் கொடுக்கப் பார்ப்பது தேவையல்லாதது. தஞ்சைப் பெருகவுடையார் பிரகதீசர் ஆனது இந்தப் பெருமைச்சொல்லின் திரிவில் தான். சிவபெருமான், விண்ணவப் பெருமாள் எல்லாம் இப்படிச் சொல் விரிந்தது தான். சிவபெருமான் என்ற சொல் தான் வடமொழித் திரிவில் சு ப்ரமண்யன் என்று ஆகும். தமிழ்ச் சேயோனும் சிவனும் ஒன்றில் இருந்து இன்னொன்றாய்க் கிளைத்த கருத்துக்களே.)

நாளாவட்டத்தில் மற்ற கலைகளைச் சொல்லிக் கொடுக்கும் திறன் (அல்லது ஈடுபாடு) இல்லாத ஆசான்கள் (குறிப்பாகப் பார்ப்பன ஆசான்கள்) எண்ணும் எழுத்தும் மட்டுமே சொல்லிக் கொடுத்தார்கள். இதனால் எண்ணையும் எழுத்தையும் சொல்லிக் கொடுப்பதில் இருந்து மற்ற வித்தைகள் சொல்லிக்கொடுக்கும் ஆசான்கள் ஒதுங்கினார்கள். இப்படியாகப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் இதற்கு ஒரு ஆசான், அதற்கு ஒரு ஆசான் என்று ஒருவகை விதப்பேற்றம் (specialization) ஏற்பட்டது. இன்றையக் குமரி மாவட்டத்தில் உள்ள கொடிவழி ஆசான்கள் (இவர்களைத் தமிங்கிலப் படுத்தி master என்றும் சிலர் சொல்லுகிறார்கள்) சொல்லிக் கொடுக்கும் வருமக் கலை, சேரலத்தில் உள்ள களரிப் பயிற்று (இதைக் கூட இந்தக் காலத் தமிழ் ஊடகங்கள் களர்ப்பாயட் என்று ஆங்கிலத்தில் இருந்து வழுவாய் உணர்ந்து குழப்படி செய்கிறார்கள்; நல்ல தமிழ்ச்சொல் நாறடிக்கப் படுகிறது. தொப்பூள்க் கொடி அறுந்தால் நம் உறவு ஏதென்றே தெரியாமல் மரபைத் தொலைக்கிற நிலை தமிழ்நாட்டில் விரவிக் கிடக்கிறது.) போன்ற மரபுப் படிப்பு முறைகள், மதுரையை ஒட்டிய தென்பாண்டி மாவட்டங்களில் இருக்கும் சிலம்பப் பயிற்சி, வாள், வேல் போன்ற பயிற்சிகள், இன்னும் இது போன்ற மிச்ச சொச்சங்கள், வெல் பதின்ம (விசய தசமி) நாளின் போது தென்பாண்டி மண்டிலத்தில் கேரளசிங்க வளநாட்டில் (வெள்ளாற்றிற்கும், வைகைக்கும் இடைப்பட்ட பரப்பு இந்த வளநாடு; கிட்டத்தட்ட பழைய இராமநாதபுரம் மாவட்டம்; ஒவ்வொரு வளநாடும் இரு பெரும் ஆறுகளுக்கு இடைப்பட்டவை) செய்யும் கிலுக்கி குத்துதல், அம்பு போடுதல் போன்ற சில சடங்குகள், அகநானூறு 187 -ம் பாடலில் மாமூலனரால் சொல்லப்படும் பூந்தொடை விழா ஆகிய பல்வேறு செய்திகளும் "ஒருகாலத்தில் (குருகுலங்களின் தொடர்ச்சியான) திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எண்ணும் எழுத்தோடு, களரிப் பயிற்று, வருமக்கலை, வில், வாள் சிலம்பம் போன்ற படைக்கலப் பயிற்சிகள், பச்சிலை மருத்துவம், இன்ன பிறவையும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்" என்று நமக்கு உணர்த்துகின்றன. ஒரு பெரிய படிப்பு மரபு நம் குமுகாயத்தில் எங்கோ தடைப்பட்டுப் போயிருக்கிறது. வரலாற்று ஆராய்ச்சியால் இங்கே மீட்டெடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

இனி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேருகின்ற நிகழ்விற்கும் ஒன்பான் திகழிகள் அல்லது ஒன்பான் இராக்கள் (நவராத்திரி), வெல் பதின்மம் ஆகிவற்றிற்கும் ஏற்பட்ட தொடர்பை வானியல் வழிக் காலங்களின் அடிப்படையில் புரிந்து கொள்ளுவோம். (முன்னால் தமிழ் உலகம் மடற்குழுவில் காலங்கள் என்ற தொடரை எழுதிவந்தேன்; இன்னும் முடிவுறாமல் அந்தத் தொடர் ஒரு தொய்வோடு இருக்கிறது. இங்கே சொல்லுகிற ஒரு சில கருத்துக்கள் அங்கே விரிவாகச் சொல்லப் பட்டன.) அடுத்த மடலில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ ±ýÀ¨¾ ²ðÎô ÀûÇ¢ìܼõ ±ýÚõ ±í¸û °÷ôÀì¸õ ¦º¡øÖÅÐ ¯ñÎ. ²¦ÉýÈ¡ø «ó¾ì ¸¡Äò¾¢ø þÇõ «¸¨Åô ÀÊô¦ÀøÄ¡õ ²ðÊø ¾¡ý þÕó¾Ð. ²ðÊø ¬º¢Ã¢Â÷ ±ØÐŨ¾, ¿¡õ ӾĢø ÁÉò¾¡ø ¦º¡øÄ¢ô ÀƸ§ÅñÎõ; À¢ý Á½Ä¢ø ±Ø¾¢ô ÀƸ§ÅñÎõ. þЧÀ¡ø, ¬ò¾¢îÝÊ, ¦¸¡ý¨È§Åó¾ý, ãШÃ, ÌÈû ±ýÚ ´ù¦Å¡ýÈ¡öô ÀÊôÀÐ ¦ÀÕÌõ. (ܼ§Å ţθǢø §¾Å¡Ãõ, ¿¡Ä¡Â¢Ãô ÀÛÅø, º¢ÅÒá½õ, Å¢¿¡Â¸÷ «¸Åø ¬¸¢Â¨Å ÀÊôÀÐõ ¯ñÎ.) þÐ ¾Å¢Ã 16õ Å¡öÀ¡Î Ũà ´ôÀ¢ì¸ §ÅñÎõ. Üð¼ø, ¸Æ¢ò¾ø, ¦ÀÕì¸ø, ÅÌò¾ø ±ýÚ ±ñ ¸½ì̸û ¦¸¡ïºí ¦¸¡ïºÁ¡ö ŢâÔõ. Å÷ì¸ ãÄõ, ÀÃôÀÇ×, ¸É «Ç× ±ýÚ ¸½ì¸¢ý ¬ÆÓõ ÜÎõ. ´ù¦Å¡Õ ¸½ìÌõ ¿¨¼Ó¨Èô À¢üº¢Â¢ø ÀÊôÀ§¾ ´Æ¢Â §¾üÈõ, ¿¢åÀ½õ ±ýÈ ¸¢§Ãì¸ Ó¨È¢ø §À¡¸¡Ð. ¸¢ð¼ò¾ð¼ «ùÅÇ× ¸½ì̸Ùõ «ýÈ¡¼ Å¡ú쨸¢ø ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼¨Å¡¸§Å þÕìÌõ; ÀȨŸû, ÁÃí¸û, þÂü¨¸ «È¢Å¢Âø ¬¸¢Â ÀÊôÒì¸û Á¡½¡ì¸É¢ý þÂøÀ¡É Å¡ú쨸¢ø ¦¾Ã¢Â§ÅñʨŠ±ýÀ¾¡ø «Åü¨Èò ¾É¢§Â ÀûǢ¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡ÎìÌõ ÅÆì¸õ ¸¢¨¼Â¡Ð. þôÀÊ ±ñÏõ ±ØòÐõ ¦¾Ã¢óЦ¸¡ûÙÅÐ ´ÕÅ¢¾Á¡É ÀÊôÒ. þý¨ÈìÌô ÀÄÕõ «ò¾¨¸Â ÀÊô¨À ´ôÒì ¦¸¡ûÇ¡Áü §À¡¸Ä¡õ.

²ðÊø ±Ø¾¢ò ¾ÕŨ¾ ¿¡õ Á½Ä¢ø ±ØО¢Ä¢ÕóÐ, ¿¡Ç¡ Åð¼ò¾¢ø ¸ÕõÀĨ¸, «¾¢ø ±Ø¾ô ÀÂýÀÎõ Ì ±É ¿õÓ¨¼Â ±ØÐÒÄý¸û ŢâÔõ. Á½¢ì¸ðÎ ´ÊÔõÀÊ ±ØòÐô À¢üº¢ þÕìÌõ. ´Øí¸¡É ¨¸¦ÂØòÐ ÀÆì¸ò¾¢üÌ ÅÕõŨâø Å¢ÇõÀ¢ ±ØÐõ À¢üº¢Ôõ (¬º¢Ã¢Â÷ ±Ø¾¢Â¾¢ý §Áø «ôÀʧ À¢ýÀüÈ¢ ±ØÐŨ¾ Å¢ÇõÒ¾ø ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û), ¾¢ÕõÀ¢ò ¾¢ÕõÀ¢ ÀÄÓ¨È ¯ð¦À¡¾¢ìÌõ (imposition) À¢üº¢Ôõ þÕìÌõ. ¬º¡ý ±Ø¾¢ò ¾Ã, ±Ø¾¢ò ¾Ã, ±ò¾¨É ¿¡ð¸û «ó¾ô ÀûÇ¢ìܼò¾¢ø ÀÊ츢§È¡§Á¡ «¾ü§¸üÀ, ²ðÎî ÍÅÊ¢ý ¸Éõ ÜÊÅÕõ. ÀûÇ¢ìܼò¾¢ø §ºÕõ §À¡Ð ¿¡õ «È¢Ôõ ÍÅÊ ±ØòÐ ¸¢ð¼ò¾ð¼ «¨Ã «ÏíÌ¨Æ («íÌÄõ) «Ç×ìÌì ܼ þÕìÌõ. ¿¡Ç¡¸ ¿¡Ç¡¸, ±Øò¨¾Ôõ ±ñ¨½Ôõ ¿¡õ ¿ýÌ ¸üÚ ÓÊó¾ Ýú¿¢¨Ä¢ø, ²ðÊø ¯ûÇ ±Øò¾¢ý ¿Úì¸Ç× (size) ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡öî ÍÕíÌõ.

¦À¡ÐÅ¡¸ ²Î ±ýÀÐ ¬º¡ý ±ØОüÌ ÁðΧÁ «ó¾ì ¸¡Äò¾¢ø þÕó¾Ð. ±Øò¾¡½¢¨Âô À¢ÊòÐ Á¡½Å÷¸û ²ðÊø ±Ø¾ô ÀƸ¢Â¦¾øÄ¡õ, ±í¸ÙìÌ þÃñÎ ãýÚ ¾¨ÄӨȸû ÓýÉ¡ø ¿¢ýÈ¢Õì¸ §ÅñÎõ. ÒÈɨ¼Â¡¸, «í¦¸¡ýÚõ, þí¦¸¡ýÚÁ¡öò ¾É¢ôÀ¼î º¢Ä÷ ²ðÊø ±Ø¾ô ÀƸ¢Â¢Õì¸Ä¡õ. [±í¸û Àì¸ò¾¢ø, 30, 40 ¬ñθû ÓýÒ Å¨Ã ¾¢ÕÁ½ ţθǢø ±Ø¾ôÀÎõ À½òÐ þÕôÒ ²Î, þ¨ºÌÊÁ¡É ²Î, §À¡ýÈ ÀÃõÀ¨Ã ²Î¸¨Ç ´Õ º¢Ä÷ ÁðÎõ ±Øò¾¡½¢Â¡ø ±Ø¾ì ¸üÈ¢Õó¾¡÷¸û. À¢ýÉ¡ø þ¨ÅÔõ ÁÃìÜúò ¾¡Ç¢ø ÅóÐÅ¢ð¼É. º¢Ä÷ þô§À¡Ð «îºÊòÐõ ¦ÅǢ¢θ¢È¡÷¸û.] ´Õ¸¡Äò¾¢ø Å£ðÎ ÅÃ× ¦ºÄ×ì ¸½ì̸û ܼ À¨É§Â¡¨Ä¢ø ţØò¾¢ø ±Ø¾ôÀðÎ Åó¾É. [¬É¡ø «¾¢ø À¾¢ýÁì ¸½ìÌ (decimal accounting) þÕ측Ð; ±øÄ¡§Á À¢ýÉì ¸½ìÌò¾¡ý, ¸£úÅ¡ö þÄì¸õ ¦¾Ã¢Â¡¾Å÷¸û þó¾ì ¸½ì̸¨Çô ÀÊòÐô ÒâóÐ ¦¸¡ûÇ ÓÊ¡Ð.] ±Øò¾¡½¢ À¢ÊòÐ ±ØÐõ ¸¨Ä þô¦À¡ØÐ ¸¡ôÀ¡üÈô À¼¡Áø «Æ¢óÐ ¦¸¡ñÊÕì¸¢È ´Õ ¸¨Ä. þý¨ÈìÌ «Ð ÀÂýÀ¼¡Áø §À¡ÉÐ ÑðÀ¢ÂÄ¢ý ÀÊ ºÃ¢¾¡ý ±ýÈ¡Öõ, ÅÃÄ¡üÚò ¾ý¨Á ¸Õ¾¢ þÐ §À¡ýÈ ¸¨Ä¸¨Ç ¸¡ðº¢ì ܼí¸Ç¢Ä¡ÅÐ ¸¡ôÀ¡üȢ¢Õì¸Ä¡õ.

±Øò¾¡½¢ ±ýÀ¨¾ ¿¢¸ñθǢø µ¨Ä ¾£ðÎõ À¨¼, ¸ñ¼õ, °º¢, þ§Ä¨¸, ±ØЧ¸¡ø, àÄ¢¨¸ (и¢Ä¢¨¸) ±ý¦ÈøÄ¡õ ¦º¡øÖÅ¡÷¸û. ¸ñ¼õ, °º¢ ±ýÀÉ Ü÷¨Áô ¦À¡Õ¨Çì ÌȢ츢ýÈÉ. þø ±ýÈ §ÅÕõ ÌÈ¢, Ü÷ ±ýÈ Ü÷¨Áô ¦À¡Õ¨Ç§Â ÌȢ츢ÈÐ. þø>þÄìÌ = ÌÈ¢; þø¦ÄýÛõ §Åâø þÕóÐ À¢Èó¾ ¦º¡ø¾¡ý þø>þØ>±Ø>±Øоø; «§¾ §À¡Ä þÄ츢ò¾ø ±ýÀÐõ ±Øо¨Ä§Â ÌÈ¢ôÀ¢Îõ. þØôÀ¢ÂРĢÀ¢ ±ýÚ Å¼À¡ø ¾¢Ã¢Ôõ. þÄ츢ÂÐ þĨ¸>þ§Ä¨¸>þ§Ã¨¸ ±ýÚõ ¦À¡Õû ŢâÔõ; þÄÌÀÅý>þ§Ä¸ý>þ§Ä̸ý ±ýÚõ ¦º¡øÄô ÀÎÅ¡ý.

²ðÎîÍÅʸǢø þÃñΠŢ¾í¸û ¯ñÎ. ´ýÚ ÀûÇ¢ìܼò¾¢ø Á¡½¡ì¸÷¸û ÀÊì¸ô ÀÆÌõ ÍÅÊ. þý¦É¡ýÚ ¦Àâ áø¸û, ¸½ì̸û ±ØÐõ ÍÅÊ.

ӾĢø ÍÅʸû ÀüÈ¢ ´Õ º¢Ä «ÊôÀ¨¼î ¦ºö¾¢¸¨Çô À¡÷ô§À¡õ. ±ôÀÊ Áñ½¢ø «Ê À¾¢òÐò ¾¼õ ¦À¡È¢ôÀ¨¾î ÍÅÎ ±ýÚ ¦º¡ø¸¢§È¡§Á¡, «§¾ §À¡Ä ±Øò¾¢ý ¾¼õ ¦À¡È¢ôÀÐõ ÍÅÊ ±ýÚ ¬Â¢üÚ. ¸¡ø ¾¼õ ±ôÀÊ ´ýÈ¢üÌ §Áø «¨Á¸¢È§¾¡ (̨Èó¾Ð þÃñÎ ÍÅθû ÅÕõ þø¨Ä¡?) «Ð §À¡Ä ÍÅÊ ±ýÈ ¦º¡øÖõ þÃñ¨¼Ôõ, þÃñÊüÌõ §ÁÖõ ¯ûÇ ¦¾¡Ì¾¢¨ÂÔõ ÌȢ츢ÈÐ. ¿¡Ç¡Åð¼ò¾¢ø ÍÅÊ ±ýÈ¡§Ä þÃñÎ ±ýÈ ¦À¡Õû ܼ ²üÀð¼Ð. ÍÅÊ>§º¡Ê ±ýÚõ ¾¢Ã¢Ôõ.

ÍÅÊ ±ýÀÐ µ¨Ä¸Ç¡ø ¬ÉÐ. µ¨Ä ±ýÈ ¦º¡øÄ¢üÌò ¾¡û, þ¾ú, ²Î, Á¼ø, Á¡¨Æ, §¾¡Î ±ýÈ ´Õ¦À¡Õû þ¨½î¦º¡ü¸Ùõ ¯ñÎ. À¨É µ¨Ä¢ø ´Õ ¸¡õÒ, þÃñÎ ¾¡û¸û þÕìÌõ. (¾¡û¸û ±ýÈ ¦º¡øÄ¢ý ¦À¡ÕðÀ¡Î À¨É§Â¡¨Ä§Â¡Î ¦¾¡¼í¸¢ÂÐ. ¾¡û>¾¡¨Æ Á¼ø ±ýÈ ¦º¡øġ𺢠þý¦É¡Õ Ũ¸. þý¨ÈÂò ¾Á¢Æ¢ø ¾¡û ±ýÈ ¦º¡ø ÁÃìÜÆ¡ø ¬É ±ØÐ ÀÃô¨Àì ÌÈ¢ôÀ¾¡ö ¦À¡Õû ¿£ðº¢ ¦ÀüÚ Å¢ð¼Ð.) À¨É µ¨Ä¢ý ¸¡õ¨À ±Î측Áø ¿£Ã¢ø °Èô§À¡ðÎô À¢ý µÃí¸¨Ç ¾ÁìÌ §ÅñÊ «Ç× ¿Ú츢ô À¡¼õ Àñ½¢, À¢ÈÌ Á¡½¡ì¸÷ ÍÅÊ¢ø ÀÂýÀÎòÐÅ¡÷¸û. µ¨Ä¨Â ´ØíÌÈ ¿Ú츢§Â¡, ÓÈ¢ò§¾¡, ¸¢ûÇ¢§Â¡ ¦ºöž¡ø, µ¨ÄìÌ ¿ÚìÌ, ÓÈ¢, ¸¢ûÇ¡ìÌ ±ýÚõ ¦ÀÂÕñÎ.

´Õ µ¨Ä¢ý ¿ÚìÌ ´Õ ÓÆõ (¸¢ð¼ò¾ð¼ 18 «Ïį́Æ) þÕìÌõ. ¿Ú츢ý «¸Äõ ¸¢ð¼ò¾ð¼ þÃñÎ ¦ÀÕÅ¢Ãø þÕìÌõ. («¾¡ÅÐ ´ýȨà «Ïį́Æ; ¾Á¢ú ¿£ð¼ø «Ç¨Å¢ý ÀÊ 8 ¦¿ø = 1 ¦ÀÕÅ¢Ãø; 12 ¦ÀÕÅ¢Ãø = 1 º¡ñ; 2 º¡ñ = 1 ÓÆõ; 4 ÓÆõ = 1 §¸¡ø = 72 inches; 4 ÓÆõ §ÅðÊ, 8 ÓÆõ §ÅðÊ ±ýÈ ¦º¡øġ𺢸¨Ç ¿¢¨É× ¦¸¡ûÙí¸û.) ¿£Ã¢ø §À¡ðÎô À¢ý À¡¼õ ÀñÏž¡ø, ´Õ ¾ð¨¼ ¿¢¨Ä þó¾ µ¨Ä¸ÙìÌì ¸¢¨¼ìÌõ. §ÅñÊ «Ç× ¿£Çõ ¦¸¡ñ¼, ÜÊ ÁðÎõ ÓÚìÌ «¨¼Â¡¾ ¾ð¨¼ µ¨Ä¸¨Çî ÍÅÊ즸Éô ÀÂýÀÎò¾ §ÅñÎõ. ¿Ú츢 µ¨Ä¸Ç¢ø ¸¡õÒ þÕôÀÐ þ¨ÇÂ÷ ÍÅÊìÌ ´Õ À¡Ð¸¡ô¨Àì ¦¸¡ÎìÌõ. ¸¡õÒ þÕó¾¡Öõ, þøÄ¡Å¢ð¼¡Öõ «ÇÅ¡¸ ¦ÅðÊî ¦ºöÂôÀð¼ µ¨ÄìÌ µ¨Ä-¿ÚìÌ ±ýÚ ¦ÀÂ÷. ¦Åù§ÅÚ «ÇÅ¢ø ¦Åù§ÅÚ ¿ÚìÌ. (µ¨Ä ±ýÀÐ ¾¡ý ¸¢ð¼ò¾ð¼ folio ±ýÈ ¬í¸¢Äî ¦º¡øÖìÌ þ¨½Â¡¸ ¯ûÇ ¾Á¢ú¡ø. ¿ÚìÌ ±ýÈ ¦º¡ø ¬í¸¢Äò¾¢ø ¯ûÇ size ±ýÈ Å¢¾ôÀ¡É ¦º¡øÖìÌ þ¨½Â¡¸ þÕìÌõ. «Ç× ±ýÈ ¦º¡ø¨Ä Å¢¾ôÀ¡¸ þøÄ¡Áø ¦À¡Ð¨Á¡¸ô ÀÂýÀÎòÐÅÐ ¿øÄÐ. ¿ÚìÌò ¦¾È¢ò¾¡ü §À¡Ä ±ýÈ ¦º¡ÄŨ¼ size ±ýÀ¨¾§Â ¿¨¼Ó¨È¢ø ÌȢ츢ÈÐ.)

Á¡½¡ì¸÷ ÍÅʸǢø ÀÂýÀÎõ ¸¡õÒûÇ ¿ÚìÌò ¾¡û¸Ç¢ý ¯ðÀì¸ò¾¢ø ±Ð×õ ±ØО¢ø¨Ä. Á¡È¡¸ ¸¡õ¨À ¿£ì¸¢, ´ù¦Å¡Õ ¾¡¨ÇÔõ ±ØÐ ¦À¡ÕÇ¡ìÌõ þý¦É¡Õ Ũ¸Â¢ø ¾¡Ç¢ý ¾ÊÁÛ째üÀ þÕÀ츧Á¡, ´ÕÀ츧Á¡ ±Øò¾¡½¢Â¡ø ±ØÐÅÐ ¯ñÎ. þó¾ þÃñ¼¡ÅРӨȾ¡ý ¦Àâ ÍÅʸǢø ÀÂýÀÎõ Ó¨È.

þÃñΠӨȸǢ֧Á, µ¨Ä¢ø ±Ø¾¢Â ±ØòÐò ¦¾Ã¢Â§ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸ ¸Ã¢òà¨Ç ¿£Ã¢ø ̨ÆòÐ «ôÒÅÐ ¯ñÎ. ܼ§Å Áí¸Äô ¦À¡ÕÇ¡ö ÁﺨÇÔõ «í¸í§¸ §º÷òÐò ¾¼×õ §À¡Ð ÀÊ츢ýÈ ²Î À¡÷ôÀ¾üÌ ´Õ Åñ½ì §¸¡ÄÁ¡ö þÕìÌõ. µù¦Å¡Õ ¬ñÎõ ºÃÍž¢ ⨺¨Â µðÊ ºó¾Éò ¦¾Ç¢ôÒ ¦ÀÚõ ÍÅʸû þýÛõ ¦¸¡ÎòÐ ¨Åò¾¨Å. «ó¾ì §¸¡Äõ Á½ì¸×õ ¦ºöÔõ.

µ¨Ä ¿Ú츢ø ¸¢ð¼ò¾ð¼ 4-ìÌ ´ÕÀíÌ «ÇÅ¢ø ´Õ Ð¨Ç ¦ºöÂôÀðÎ, ´Õ Ñɢ¢ø ÓÊîÍô §À¡ð¼ ¸Â¢ü¨È þó¾ò ШÇ¢ø ¦¸¡ÎòÐ, µ¨Ä¸û §ºÃà áü ¸Â¢È¡ø ¸ðÎÅ¡÷¸û. (Ţšõ ¦¾Ã¢ó¾Å÷¸û þó¾ò ¦¾¡¨Ä¨Åî ºÃ¢Â¡¸î ¦º¡øÄÄ¡õ.) À¢ýÉ¡ø ÍÅʸû §º÷òÐò н¢Â¡ø ¸ð¼ôÀðÎ à츢§Ä¡, Àý¢§Ä¡ þÕò¾ô ¦ÀÚõ. ±Ø¾ôÀð¼Ð µÃ¢Õ µ¨Äò¾¡û¸Ç¡ö þÕôÀ¢ý, «ó¾ µ¨Äò¾¡û¸¨Çî ÍÕðÊ ´Õ ¦¸¡ð¼¡ÛìÌû ¨ÅôÀ¡÷¸û; þÅü¨È µ¨ÄîÍÕû ±ýÚ ¦º¡øÅ¡÷¸û.

ÍÅʸû ÀüÈ¢î ¦º¡ýÉÐ þùÅÇ× §À¡Ðõ ±ýÚ ¿¢¨É츢§Èý. þÉ¢ ÀûÇ¢ìܼò¾¢ø §ºÕŨ¾ô À¡÷ô§À¡õ.

ÀÊôÒ ±ýÀ¨¾ ±ñÏõ, ±ØòÐõ ±ýÀ¾¡¸ ÁðΧÁ ¿õ Óý§É¡÷ ¸Õ¾Å¢ø¨Ä. Àø§ÅÚ Å¢ü¨È¸¨Çì ¸üÀ¨¾Ôõ ÀÊôÒ ±ý§È ¿¢¨Éò¾¡÷¸û. (Å¢ø+Ð = Å¢üÚ>Å¢òÐ; Å¢üÚ+³ = Å¢ü¨È>Å¢ò¨¾; Å¢òÐ ±ýÈ Å¢¾ôÀ¡É ¦º¡øÖìÌ ¦À¡ÐÅ¡É «È¢× ±ýÈ ¦À¡Õû Åó¾Ð À¢ýÉ¡ø ²üÀð¼Ð. ´ù¦Å¡Õ ¦Á¡Æ¢Â¢Öõ Å¢¾ôÀ¡É ¸ÕòÐ/¦º¡ü¸Ç¢ø þÕó§¾ ¦À¡Ð¨ÁÂ¡É ¸ÕòÐ/¦º¡ü¸û ±Øõ. ż¦Á¡Æ¢ ¯ûÇ "Å¢ò" ±ýÛõ «Ê¡ø Å¢ò¨¾ìÌ §Å÷¡øÄ¡¸ ¬¸ÓÊ¡Ð. Å¢ø ±Ûõ Å¢¾ôÒ §Åâø þÕóÐ À¢Èó¾ ¦À¡Ð¨Á¡ø Å¢ò¨¾. Å¢ø ±ýÀÐ ¸¡ðÎÅ¢Äí¸¡ñÊ ¸¡Äò¾¢ø ±Øó¾ ÌÚ了¡ø. Å¢øÅ¢ÎŨ¾î ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀ§¾ ӾĢø «È¢ó¾ Å¢ò¨¾.) ¦Á¡ò¾ò¾¢ø Á¡½Åý ´ÕÅý ¬Ç¡Å¾üÌò §¾¨ÅÂ¡É ±øÄ¡Åü¨ÈÔ§Á ´Õ ¬º¡ý ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾¡÷. («öÂý, ¬Âý, ¬Â¡ý; «öÂý>«îºý>¬º¡ý>¬º¡÷Âý>¬îº¡Ã¢Âý>¬º¢Ã¢Âý, «öÂý>«ï»ý>«ó¿ý>«ñ½ý>«ñ½¡Å¢, «öÂý>«ï»ý>«ó¿ý>«ó¾ý>«ó¾½ý; «öÂý>«îºý>«ò¾ý> ¯À+«ò¾ý>¯À¡òÂý ±Éô ÀĦº¡ü¸û ¾Á¢Æ¢ø þÕóÐõ À¢ý ż¦Á¡Æ¢ ÅÆ¢Ôõ ¸¢¨ÇìÌõ. ±øÄ¡§Á ¦ÀâÂÅý ±ýÈ ¦À¡ÕÇ¢ø ±Øó¾ ¦º¡ü¸û. ¦ÀÕÁ¡ý¸û (†¸Ãò¨¾ Õ¸Ãò¾¢üÌ «ÎòÐô ÀÖì¸¢ì ¦¸¡½÷ó¾¡ø brahmans>brahmins = À¡÷ôÀÉ÷¸û ±ýÚ ÅóÐÅ¢Îõ. żÀ¡ø ¦Á¡Æ¢¸Ç¢ø †¸Ã ´Ä¢ þôÀÊô ÀÄ þ¼í¸Ç¢ø þÂøÀ¡¸ ¯û ѨÆÔõ.) ±ýÈ ¦º¡øÖõ ¦ÀâÂÅ÷¸û ±ýÈ ¦À¡Õ¨Ç§Â ¦¸¡ÎìÌõ. (¾Á¢¨Æ Å¢ÎòРż¦Á¡Æ¢ ÅÆ¢ §ÅÚ ÅÄ¢ó¾ ¦À¡Õ¨Ç¦ÂøÄ¡õ ¦¸¡Îì¸ô À¡÷ôÀÐ §¾¨ÅÂøÄ¡¾Ð. ¾ï¨ºô ¦Àոר¼Â¡÷ À¢Ã¸¾£º÷ ¬ÉÐ þó¾ô ¦ÀÕ¨Á¡øÄ¢ý ¾¢Ã¢Å¢ø ¾¡ý. º¢Å¦ÀÕÁ¡ý, Å¢ñ½Åô ¦ÀÕÁ¡û ±øÄ¡õ þôÀÊî ¦º¡ø Ţâó¾Ð ¾¡ý. º¢Å¦ÀÕÁ¡ý ±ýÈ ¦º¡ø ¾¡ý ż¦Á¡Æ¢ò ¾¢Ã¢Å¢ø Í ôÃÁñÂý ±ýÚ ¬Ìõ. ¾Á¢úî §º§Â¡Ûõ º¢ÅÛõ ´ýÈ¢ø þÕóÐ þý¦É¡ýÈ¡öì ¸¢¨Çò¾ ¸ÕòÐ츧Ç.)

¿¡Ç¡Åð¼ò¾¢ø ÁüÈ ¸¨Ä¸¨Çî ¦º¡øÄ¢ì ¦¸¡ÎìÌõ ¾¢Èý («øÄÐ ®ÎÀ¡Î) þøÄ¡¾ ¬º¡ý¸û (ÌÈ¢ôÀ¡¸ô À¡÷ôÀÉ ¬º¡ý¸û) ±ñÏõ ±ØòÐõ ÁðΧÁ ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾¡÷¸û. þ¾É¡ø ±ñ¨½Ôõ ±Øò¨¾Ôõ ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀ¾¢ø þÕóÐ ÁüÈ Å¢ò¨¾¸û ¦º¡øĢ즸¡ÎìÌõ ¬º¡ý¸û ´Ðí¸¢É¡÷¸û. þôÀÊ¡¸ô À¢û¨Ç¸ÙìÌî ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀ¾¢ø þ¾üÌ ´Õ ¬º¡ý, «¾üÌ ´Õ ¬º¡ý ±ýÚ ´ÕŨ¸ Å¢¾ô§ÀüÈõ (specialization) ²üÀð¼Ð. þý¨ÈÂì ÌÁâ Á¡Åð¼ò¾¢ø ¯ûÇ ¦¸¡ÊÅÆ¢ ¬º¡ý¸û (þÅ÷¸¨Çò ¾Á¢í¸¢Äô ÀÎò¾¢ master ±ýÚõ º¢Ä÷ ¦º¡øÖ¸¢È¡÷¸û) ¦º¡øÄ¢ì ¦¸¡ÎìÌõ ÅÕÁì ¸¨Ä, §ºÃÄò¾¢ø ¯ûÇ ¸Çâô À¢üÚ (þ¨¾ì ܼ þó¾ì ¸¡Äò ¾Á¢ú °¼¸í¸û ¸Ç÷ôÀ¡Âð ±ýÚ ¬í¸¢Äò¾¢ø þÕóÐ ÅØÅ¡ö ¯½÷óÐ ÌÆôÀÊ ¦ºö¸¢È¡÷¸û; ¿øÄ ¾Á¢ú¡ø ¿¡ÈÊì¸ô Àθ¢ÈÐ. ¦¾¡ôâûì ¦¸¡Ê «Úó¾¡ø ¿õ ¯È× ²¦¾ý§È ¦¾Ã¢Â¡Áø ÁèÀò ¦¾¡¨Äì¸¢È ¿¢¨Ä ¾Á¢ú¿¡ðÊø Å¢ÃÅ¢ì ¸¢¼ì¸¢ÈÐ.) §À¡ýÈ ÁÃÒô ÀÊôÒ Ó¨È¸û, ÁШè ´ðÊ ¦¾ýÀ¡ñÊ Á¡Åð¼í¸Ç¢ø þÕìÌõ º¢ÄõÀô À¢üº¢, Å¡û, §Åø §À¡ýÈ À¢üº¢¸û, þýÛõ þÐ §À¡ýÈ Á¢îº ¦º¡îºí¸û, ¦Åø À¾¢ýÁ (Å¢ºÂ ¾ºÁ¢) ¿¡Ç¢ý §À¡Ð ¦¾ýÀ¡ñÊ ÁñÊÄò¾¢ø §¸ÃǺ¢í¸ ÅÇ¿¡ðÊø (¦ÅûÇ¡üÈ¢üÌõ, ¨Å¨¸ìÌõ þ¨¼ôÀð¼ ÀÃôÒ þó¾ ÅÇ¿¡Î; ¸¢ð¼ò¾ð¼ À¨Æ þáÁ¿¡¾ÒÃõ Á¡Åð¼õ; ´ù¦Å¡Õ ÅÇ¿¡Îõ þÕ ¦ÀÕõ ¬Ú¸ÙìÌ þ¨¼ôÀð¼¨Å) ¦ºöÔõ ¸¢Ö츢 Ìòоø, «õÒ §À¡Î¾ø §À¡ýÈ º¢Ä º¼í̸û, «¸¿¡ëÚ 187 -õ À¡¼Ä¢ø Á¡ãÄÉáø ¦º¡øÄôÀÎõ â󦾡¨¼ Ţơ ¬¸¢Â Àø§ÅÚ ¦ºö¾¢¸Ùõ "´Õ¸¡Äò¾¢ø (ÌÕÌÄí¸Ç¢ý ¦¾¡¼÷¡É) ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø ±ñÏõ ±Øò§¾¡Î, ¸Çâô À¢üÚ, ÅÕÁ츨Ä, Å¢ø, Å¡û º¢ÄõÀõ §À¡ýÈ À¨¼ì¸Äô À¢üº¢¸û, À¨Ä ÁÕòÐÅõ, þýÉ À¢È¨ÅÔõ ¸üÚì ¦¸¡Îò¾¢Õì¸ §ÅñÎõ" ±ýÚ ¿ÁìÌ ¯½÷òи¢ýÈÉ. ´Õ ¦Àâ ÀÊôÒ ÁÃÒ ¿õ ÌÓ¸¡Âò¾¢ø ±í§¸¡ ¾¨¼ôÀðÎô §À¡Â¢Õ츢ÈÐ. ÅÃÄ¡üÚ ¬Ã¡ö¡ø þí§¸ Á£ð¦¼Îì¸ §ÅñÊÂÐ ¿¢¨È þÕ츢ÈÐ.

þÉ¢ ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø §ºÕ¸¢ýÈ ¿¢¸úÅ¢üÌõ ´ýÀ¡ý ¾¢¸Æ¢¸û «øÄÐ ´ýÀ¡ý þáì¸û (¿Åáò¾¢Ã¢), ¦Åø À¾¢ýÁõ ¬¸¢ÅüÈ¢üÌõ ²üÀð¼ ¦¾¡¼÷¨À Å¡É¢Âø ÅÆ¢ì ¸¡Äí¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ÒâóÐ ¦¸¡û٧šõ. (ÓýÉ¡ø ¾Á¢ú ¯Ä¸õ Á¼üÌØÅ¢ø ¸¡Äí¸û ±ýÈ ¦¾¡¼¨Ã ±Ø¾¢Åó§¾ý; þýÛõ ÓÊ×È¡Áø «ó¾ò ¦¾¡¼÷ ´Õ ¦¾¡ö§Å¡Î þÕ츢ÈÐ. þí§¸ ¦º¡øÖ¸¢È ´Õ º¢Ä ¸ÕòÐì¸û «í§¸ Ţâš¸î ¦º¡øÄô Àð¼É.) «Îò¾ Á¼Ä¢ø À¡÷ô§À¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Wednesday, November 17, 2004

திண்ணைப் பள்ளிக்கூடம் - 1

முதலில் திண்ணை என்றால் என்னவென்று பார்ப்போம்.

நாட்டுப் புறங்களில் குறிப்பாகத் தென்தமிழ்நாட்டில் குடியிருக்கும் வீடு என்பது வானத்தைப் பார்த்த ஒரு முற்றம்; முற்றத்தைச் சுற்றிலும் ஒரு வளவு; வளவில் பல தூண்கள். வளவில் தூண்களின் மேல் ஒரு தாழ்வாரம். இன்னும் வளவைச் சுற்றிச் சில அறைகள் (இவையும் சில மாவட்டங்களில் வீடுகள் என்றே கூடச் சொல்லப் பெறும்.) வளவிற்கும் முன்னால் பட்டாலை; வளவிற்குப் பின்னால் இரண்டாம் கட்டு; (அடுப்படி என்பது இரண்டாம் கட்டில் இருக்கும்.) பட்டாலை, வளவு இரண்டையும் மூடுவது போல் தேக்கால் ஆன வீட்டின் கனத்த பெருங்கதவு இருக்கும். பெருங்கதவிற்கும் முன்னால் வீட்டின் முகப்பில் திண்ணை இருக்கும். திண்ணைக்கும் முன்னால் வெளிமுற்றம்; அதற்கும் முன்னால் வாசல். வாசலுக்கு முன்னால் தெரு அல்லது வீதி. திண்ணை என்பது வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது வந்து போகும் வெளியாட்கள், விருந்தினருக்கும் உள்ளது தான்.

இங்கே நான் விரித்திருக்கும் அடவு (design) கூட்டியோ, குறைந்தோ, செல்வநிலைக்குத் தக்க மாறுபடும். பெரும்பாலும் காவிரி ஆற்றிற்குத் தெற்கே உள்ள வீடுகள் மேலே சொன்ன கூறுகளின் ஒருசிலவற்றையாவது கொண்டிருக்கும். தமிழ்நாட்டு வீடுகளின் அமைப்பை ஆராய்ந்து ஒரு கட்டிடவியலார் கட்டுரை படைப்பது நலமாய் இருக்கும். அது என்ன குறையோ தெரியவில்லை, அப்படி எல்லாம் செய்வதற்கு யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்கள். நம் எத்தனையோ மரபுகளைத் தொலைத்துக் கொண்டிருப்பதில் இதுவும் ஒன்று.

வளவு என்பது விழா நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டாருக்கும், மிக நெருங்கிய வெளியாட்களுக்கு மட்டுமே உள்ளது. வளவிற்குள் மற்றவர்கள் சட்டென்று நுழைய மாட்டார்கள். திண்ணை என்பது யார் வேண்டுமானாலும் வரக் கூடியது. (கிட்டத்தட்ட இந்தக் கால drawing room போல அதனைப் புழங்கிக் கொள்வார்கள்.) திண்ணையில் சாய்ந்துகொள்ள சுவரோடு சுதையால் ஆன திண்டு இருக்கும். வீட்டின் தலைவர் பெரும்பாலும் பகல் நேரத்தில் திண்டில் சாய்ந்த வண்ணம் வெற்றிலைச் செல்லத்தோடு உட்கார்ந்து இருப்பார். வருவோர், போவோர் அவரோடு உரையாடுவது அங்கே தான்.

இது போன்ற வீடுகள் முன்னே சொன்னது போல் செல்வ நிலைக்குத் தக்க விரிந்தும் சுருங்கியும் இருந்தன. ஊரில் ஆசிரியர் வீட்டிலும் திண்ணைகள் இருந்தன. இந்தத் திண்ணைகளில் ஆசிரியர்கள் பள்ளிக் கூடங்களை வைத்து இருந்தனர். திண்ணையும் வெளிமுற்றமும் கலைகள் மற்றும் படிப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. ஒரு சிற்றூர் என்பதில் 20, 30 மாணாக்கர் இருப்பதே அரிது. அவருக்கு இந்த இடம் போதும். வெவ்வேறு அகவையில் இருந்த மாணவருக்கு ஒரே ஆசிரியர் பல்வேறு பாடங்களைச் சொல்லி வந்தார்.

இந்தப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராய் இருந்தவர்கள் அந்தணர் அல்லது அறிவர் என்பவர் ஆவர். (அறிவர் என்பவரை குமரியில் வள்ளுவர் என்பார்கள்; திருக்குறள் ஆசிரியரும் இப்படி ஒரு குடியில் வந்தவர் தான். வள்ளுவர் என்பது அவருடைய இயற்பெயரல்ல. அது ஒரு குடிப்பெயர்; கிட்டத்தட்ட ஆசிரியர் - scholar என்றே நாம் வழக்கில் பொருள் கொள்ள வேண்டும்.) அந்தணர்/அறிவர் (scholar) தான் ஒரு ஊரில் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள். இந்த ஆசிரியர்கள் பெருமானராய் (பிராமணராய்) இருக்க வேண்டிய தேவையில்லை. பார்ப்பனர் அல்லாதோரும் அந்தணர்/அறிவர் தான். பழந்தமிழ்ப் பாடல்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டு, அந்தணர் என்றால் பார்ப்பனர் என்று சொல்ல முற்பட்டார்கள். அந்தணருக்குள் சில பார்ப்பனர் இருக்கலாம். ஆனால், பார்ப்பனர் எல்லோருமே அந்தணர் என்ற சொல்லுக்கு இணையானவர் அல்லர். (பார்ப்பனர் என்ற சொல்லின் பிறப்பை இங்கு சொல்ல முற்படவில்லை.)

இனி அந்தணர் என்ற சொல்லின் பிறப்பைப் பார்ப்போம். அந்தை என்பதற்கு அப்பன் என்றே பொருள் உண்டு என்று புலவர் இளங்குமரன் ஆழ்ந்த விளக்கத்தோடு நிறுவியிருக்கிறார். (தம்+அந்தை>தமந்தை>தகந்தை>தந்தை என்ற வளர்ச்சி தம்+அப்பன்>தமப்பன்>தகப்பன் என்பதைப்போல.) அந்தை என்ற சொல் வேறு ஒரு ஈறு பெற்று அந்தன் என்றும் ஆக முடியும். இது அத்தன்>அச்சன் என்ற சொற்களோடு மெல்லியல் இணை கொண்டது. ஐயன் என்பதும் தமிழில் அப்பன் என்ற பொருள் கொள்ளும். ஐயனில் இருந்து பணிவு காரணமாய் ஐயனார் என்ற சொல் பிறப்பது போல் அந்தனில் இருந்து மரியாதை கருதிப் பிறந்த சொல் அந்தனர். இதில் னகரம் திரிந்து அந்தணர் என்று ஆகும். அந்தன்>அந்தனர்>அந்தணர். அம்+தணர் என்று வலிந்து பிரித்துப் பொருள் கொள்வதெல்லாம் சங்கத முறையில் தமிழ்ச் சொல்லைக் குதறுவது ஆகும்.

பொதுவாக ஒரு குமுகத்தில் ஆசிரியர் என்பவரும் தந்தையின் இடத்தில் வைத்து போற்றப் படுகிறார். இவர் கல்விக்கு, படிப்பிற்கு, பண்பாடு சொல்லித் தருவதற்குத் தந்தை. மலையாளத்தில் கத்தோலிக்கத் துறவியும் father/அச்சன் என்று சொல்லப் படுவது இப்படித்தான். அதே போல ஆசிரியராய், படித்தவராய், அறிவை ஆள்பவராய், ஊரில் நல்லது கெட்டது பற்றி மக்களை நல்வழிப்படுத்துவராய் இருந்தவரும் அந்தணர் என்று தமிழில் சொல்லப் படுகிறார். கல்வி அச்சன்களே ஆசான்களாக மலையாளத்தில் அறியப் படுகிறார்கள். ஆசான் என்பவன் சங்கத வழக்கப் படி ரகர, யகரச் சேர்க்கையில் ஆச்சார்யன் ஆவான். மீண்டும் தமிழ்ப்படுத்தி ஆசிரியன் ஆவான். (மலையாள, கன்னட இன்னும் மற்ற தமிழிய மரபுகளை ஒதுக்கிவிட்டுப் பழந்தமிழ் மரபுகளை மீட்டெடுக்க முடியாது.)

தமிழ்நாட்டில் அந்தணர்/அறிவராய் இருந்தவர் ஒரு சில இடங்களில் ஓதுவாராயும், இன்னும் சில இடங்களில் வெவ்வேறு தொழில் தெரிந்தவராயும் மாறிப் போனார்கள். இன்னும் சிலர் பார்ப்பனருக்குள்ளேயே கரைந்தும் (குறிப்பாக சிவாச்சாரியார்கள் / ஆதி சைவர்கள் / சோழியர் எனச் சில கூட்டத்தார்) போயிருக்கலாம். ஆனால் ஆழப் பார்த்தால் இப்படி ஒரு குடியினர் இருந்தது நன்றாகவே புலப்படுகிறது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் திண்ணைப் பள்ளிக்கூடம் என்ற மரபோடு அந்தணர் என்பவர் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள்.

எப்படிச் சமணத்துறவிகளோடு பள்ளிக்கூடம் என்ற சொல் தொடர்பு கொண்டதோ அதே போன்றது இது. இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எழுத்தும் எண்ணும் அல்லாது இலக்கியம், இலக்கணம், நீதிநெறி, கலைகள் ஆகியவற்றைக் கற்றுத் தந்த காலம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அவற்றின் மிச்ச சொச்சங்களை இன்னும் தென்குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் பார்க்கிறோம். வர்மக்கலை, களரிப்பயிற்று, சிலம்பாட்டம் இன்னும் இவற்றைப் போல் பிறவும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இது ஏன் என்று பின்னால் விளக்குகிறேன்.

இனி திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய என்னுடைய பட்டறிவை அடுத்த மடலில் சொல்ல முற்படுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ӾĢø ¾¢ñ¨½ ±ýÈ¡ø ±ýɦÅýÚ À¡÷ô§À¡õ.

¿¡ðÎô ÒÈí¸Ç¢ø ÌÈ¢ôÀ¡¸ò ¦¾ý¾Á¢ú¿¡ðÊø ÌÊ¢ÕìÌõ ţΠ±ýÀÐ Å¡Éò¨¾ô À¡÷ò¾ ´Õ ÓüÈõ; ÓüÈò¨¾î ÍüÈ¢Öõ ´Õ ÅÇ×; ÅÇÅ¢ø ÀÄ àñ¸û. ÅÇÅ¢ø àñ¸Ç¢ý §Áø ´Õ ¾¡úÅ¡Ãõ. þýÛõ ÅǨÅî ÍüÈ¢î º¢Ä «¨È¸û (þ¨ÅÔõ º¢Ä Á¡Åð¼í¸Ç¢ø ţθû ±ý§È Ü¼î ¦º¡øÄô ¦ÀÚõ.) ÅÇÅ¢üÌõ ÓýÉ¡ø À𼡨Ä; ÅÇÅ¢üÌô À¢ýÉ¡ø þÃñ¼¡õ ¸ðÎ; («ÎôÀÊ ±ýÀÐ þÃñ¼¡õ ¸ðÊø þÕìÌõ.) À𼡨Ä, ÅÇ× þÃñ¨¼Ôõ ãÎÅÐ §À¡ø §¾ì¸¡ø ¬É Å£ðÊý ¸Éò¾ ¦ÀÕí¸¾× þÕìÌõ. ¦ÀÕí¸¾Å¢üÌõ ÓýÉ¡ø Å£ðÊý Ó¸ôÀ¢ø ¾¢ñ¨½ þÕìÌõ. ¾¢ñ¨½ìÌõ ÓýÉ¡ø ¦ÅÇ¢ÓüÈõ; «¾üÌõ ÓýÉ¡ø Å¡ºø. Å¡ºÖìÌ ÓýÉ¡ø ¦¾Õ «øÄРţ¾¢. ¾¢ñ¨½ ±ýÀРţðÊüÌû þÕôÀÅ÷¸ÙìÌ ÁðÎÁøÄ¡Ð ÅóÐ §À¡Ìõ ¦ÅǢ¡ð¸û, Å¢Õó¾¢ÉÕìÌõ ¯ûÇÐ ¾¡ý.

þí§¸ ¿¡ý Ţâò¾¢ÕìÌõ «¼× (design) Üðʧ¡, ̨È󧾡, ¦ºøÅ¿¢¨ÄìÌò ¾ì¸ Á¡ÚÀÎõ. ¦ÀÕõÀ¡Öõ ¸¡Å¢Ã¢ ¬üÈ¢üÌò ¦¾ü§¸ ¯ûÇ Å£Î¸û §Á§Ä ¦º¡ýÉ ÜڸǢý ´Õº¢ÄÅü¨È¡ÅÐ ¦¸¡ñÊÕìÌõ. ¾Á¢ú¿¡ðΠţθǢý «¨Áô¨À ¬Ã¡öóÐ ´Õ ¸ðʼŢÂÄ¡÷ ¸ðΨà À¨¼ôÀÐ ¿ÄÁ¡ö þÕìÌõ. «Ð ±ýÉ Ì¨È§Â¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä, «ôÀÊ ±øÄ¡õ ¦ºöžüÌ Â¡Õõ ÓýÅà Á¡ð§¼ý ±ý¸¢È¡÷¸û. ¿õ ±ò¾¨É§Â¡ ÁÃÒ¸¨Çò ¦¾¡¨ÄòÐì ¦¸¡ñÊÕôÀ¾¢ø þÐ×õ ´ýÚ.

ÅÇ× ±ýÀРŢơ ¿¡ð¸û ¾Å¢÷òÐ ÁüÈ ¿¡ð¸Ç¢ø Å£ð¼¡ÕìÌõ, Á¢¸ ¦¿Õí¸¢Â ¦ÅǢ¡ð¸ÙìÌ ÁðΧÁ ¯ûÇÐ. ÅÇÅ¢üÌû ÁüÈÅ÷¸û ºð¦¼ýÚ Ñ¨Æ Á¡ð¼¡÷¸û. ¾¢ñ¨½ ±ýÀР¡÷ §ÅñÎÁ¡É¡Öõ ÅÃì ÜÊÂÐ. (¸¢ð¼ò¾ð¼ þó¾ì ¸¡Ä drawing room §À¡Ä «¾¨Éô ÒÆí¸¢ì ¦¸¡ûÅ¡÷¸û.) ¾¢ñ¨½Â¢ø º¡öóЦ¸¡ûÇ ÍŧáΠͨ¾Â¡ø ¬É ¾¢ñÎ þÕìÌõ. Å£ðÊý ¾¨ÄÅ÷ ¦ÀÕõÀ¡Öõ À¸ø §¿Ãò¾¢ø ¾¢ñÊø º¡öó¾ Åñ½õ ¦ÅüÈ¢¨Äî ¦ºøÄò§¾¡Î ¯ð¸¡÷óÐ þÕôÀ¡÷. Åէš÷, §À¡§Å¡÷ «Å§Ã¡Î ¯¨Ã¡ÎÅÐ «í§¸ ¾¡ý.

þÐ §À¡ýÈ Å£Î¸û Óý§É ¦º¡ýÉÐ §À¡ø ¦ºøÅ ¿¢¨ÄìÌò ¾ì¸ ŢâóÐõ ÍÕí¸¢Ôõ þÕó¾É. °Ã¢ø ¬º¢Ã¢Â÷ Å£ðÊÖõ ¾¢ñ¨½¸û þÕó¾É. þó¾ò ¾¢ñ¨½¸Ç¢ø ¬º¢Ã¢Â÷¸û ÀûÇ¢ì Ü¼í¸¨Ç ¨ÅòÐ þÕó¾É÷. ¾¢ñ¨½Ôõ ¦ÅÇ¢ÓüÈÓõ ¸¨Ä¸û ÁüÚõ ÀÊôÀ¢üÌô §À¡ÐÁ¡É¾¡ö þÕó¾É. ´Õ º¢üê÷ ±ýÀ¾¢ø 20, 30 Á¡½¡ì¸÷ þÕôÀ§¾ «Ã¢Ð. «ÅÕìÌ þó¾ þ¼õ §À¡Ðõ. ¦Åù§ÅÚ «¸¨Å¢ø þÕó¾ Á¡½ÅÕìÌ ´§Ã ¬º¢Ã¢Â÷ Àø§ÅÚ À¡¼í¸¨Çî ¦º¡øÄ¢ Åó¾¡÷.

þó¾ô ÀûÇ¢ìܼí¸Ç¢ø ¬º¢Ã¢Âáö þÕó¾Å÷¸û «ó¾½÷ «øÄÐ «È¢Å÷ ±ýÀÅ÷ ¬Å÷. («È¢Å÷ ±ýÀŨà ÌÁâ¢ø ÅûÙÅ÷ ±ýÀ¡÷¸û; ¾¢ÕìÌÈû ¬º¢Ã¢ÂÕõ þôÀÊ ´Õ ÌÊ¢ø Åó¾Å÷ ¾¡ý. ÅûÙÅ÷ ±ýÀÐ «ÅÕ¨¼Â þÂü¦ÀÂÃøÄ. «Ð ´Õ ÌÊô¦ÀÂ÷; ¸¢ð¼ò¾ð¼ ¬º¢Ã¢Â÷ - scholar ±ý§È ¿¡õ ÅÆ츢ø ¦À¡Õû ¦¸¡ûÇ §ÅñÎõ.) «ó¾½÷/«È¢Å÷ (scholar) ¾¡ý ´Õ °Ã¢ø ¯ûÇ À¢û¨Ç¸ÙìÌô À¡¼õ ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀÅ÷¸û. þó¾ ¬º¢Ã¢Â÷¸û ¦ÀÕÁ¡Éáö (À¢Ã¡Á½Ã¡ö) þÕì¸ §ÅñÊ §¾¨Å¢ø¨Ä. À¡÷ôÀÉ÷ «øÄ¡§¾¡Õõ «ó¾½÷/«È¢Å÷ ¾¡ý. ÀÆó¾Á¢úô À¡¼ø¸¨Çî ºÃ¢Â¡¸ô ÒâóÐ ¦¸¡ûÇ¡¾ ¸¡Ã½ò¾¡ø º¢ÄÕìÌ þó¾ì ÌÆôÀõ ²üÀðÎ, «ó¾½÷ ±ýÈ¡ø À¡÷ôÀÉ÷ ±ýÚ ¦º¡øÄ ÓüÀð¼¡÷¸û. «ó¾½ÕìÌû º¢Ä À¡÷ôÀÉ÷ þÕì¸Ä¡õ. ¬É¡ø, À¡÷ôÀÉ÷ ±ø§Ä¡Õ§Á «ó¾½÷ ±ýÈ ¦º¡øÖìÌ þ¨½Â¡ÉÅ÷ «øÄ÷. (À¡÷ôÀÉ÷ ±ýÈ ¦º¡øÄ¢ý À¢Èô¨À þíÌ ¦º¡øÄ ÓüÀ¼Å¢ø¨Ä.)

þÉ¢ «ó¾½÷ ±ýÈ ¦º¡øÄ¢ý À¢Èô¨Àô À¡÷ô§À¡õ. «ó¨¾ ±ýÀ¾üÌ «ôÀý ±ý§È ¦À¡Õû ¯ñÎ ±ýÚ ÒÄÅ÷ þÇíÌÁÃý ¬úó¾ Å¢Çì¸ò§¾¡Î ¿¢ÚŢ¢Õ츢ȡ÷. (¾õ+«ó¨¾>¾Áó¨¾>¾¸ó¨¾>¾ó¨¾ ±ýÈ ÅÇ÷ ¾õ+«ôÀý>¾ÁôÀý>¾¸ôÀý ±ýÀ¨¾ô§À¡Ä.) «ó¨¾ ±ýÈ ¦º¡ø §ÅÚ ´Õ ®Ú ¦ÀüÚ «ó¾ý ±ýÚõ ¬¸ ÓÊÔõ. þÐ «ò¾ý>«îºý ±ýÈ ¦º¡ü¸§Ç¡Î ¦ÁøÄ¢Âø þ¨½ ¦¸¡ñ¼Ð. ³Âý ±ýÀÐõ ¾Á¢Æ¢ø «ôÀý ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûÙõ. ³ÂÉ¢ø þÕóÐ À½¢× ¸¡Ã½Á¡ö ³ÂÉ¡÷ ±ýÈ ¦º¡ø À¢ÈôÀÐ §À¡ø «ó¾É¢ø þÕóÐ Á⡨¾ ¸Õ¾¢ô À¢Èó¾ ¦º¡ø «ó¾É÷. þ¾¢ø ɸÃõ ¾¢Ã¢óÐ «ó¾½÷ ±ýÚ ¬Ìõ. «ó¾ý>«ó¾É÷>«ó¾½÷. «õ+¾½÷ ±ýÚ ÅÄ¢óÐ À¢Ã¢òÐô ¦À¡Õû ¦¸¡ûŦ¾øÄ¡õ ºí¸¾ ӨȢø ¾Á¢úî ¦º¡ø¨Äì ̾ÚÅÐ ¬Ìõ.

¦À¡ÐÅ¡¸ ´Õ ÌÓ¸ò¾¢ø ¬º¢Ã¢Â÷ ±ýÀÅÕõ ¾ó¨¾Â¢ý þ¼ò¾¢ø ¨ÅòÐ §À¡üÈô Àθ¢È¡÷. þÅ÷ ¸øÅ¢ìÌ, ÀÊôÀ¢üÌ, ÀñÀ¡Î ¦º¡øÄ¢ò ¾ÕžüÌò ¾ó¨¾. Á¨Ä¡Çò¾¢ø ¸ò§¾¡Ä¢ì¸ò ÐÈÅ¢Ôõ father/«îºý ±ýÚ ¦º¡øÄô ÀÎÅÐ þôÀÊò¾¡ý. «§¾ §À¡Ä ¬º¢Ã¢Âáö, ÀÊò¾Åáö, «È¢¨Å ¬ûÀÅáö, °Ã¢ø ¿øÄÐ ¦¸ð¼Ð ÀüÈ¢ Áì¸¨Ç ¿øÅÆ¢ôÀÎòÐÅáö þÕó¾ÅÕõ «ó¾½÷ ±ýÚ ¾Á¢Æ¢ø ¦º¡øÄô Àθ¢È¡÷. ¸øÅ¢ «îºý¸§Ç ¬º¡ý¸Ç¡¸ Á¨Ä¡Çò¾¢ø «È¢Âô Àθ¢È¡÷¸û. ¬º¡ý ±ýÀÅý ºí¸¾ ÅÆì¸ô ÀÊ Ã¸Ã, ¸Ãî §º÷쨸¢ø ¬îº¡÷Âý ¬Å¡ý. Á£ñÎõ ¾Á¢úôÀÎò¾¢ ¬º¢Ã¢Âý ¬Å¡ý. (Á¨Ä¡Ç, ¸ýɼ þýÛõ ÁüÈ ¾Á¢Æ¢Â ÁÃÒ¸¨Ç ´Ð츢ŢðÎô ÀÆó¾Á¢ú ÁÃÒ¸¨Ç Á£ð¦¼Îì¸ ÓÊ¡Ð.)

¾Á¢ú¿¡ðÊø «ó¾½÷/«È¢Åáö þÕó¾Å÷ ´Õ º¢Ä þ¼í¸Ç¢ø µÐšáÔõ, þýÛõ º¢Ä þ¼í¸Ç¢ø ¦Åù§ÅÚ ¦¾¡Æ¢ø ¦¾Ã¢ó¾ÅáÔõ Á¡È¢ô §À¡É¡÷¸û. þýÛõ º¢Ä÷ À¡÷ôÀÉÕìÌû§Ç§Â ¸¨ÃóÐõ (ÌÈ¢ôÀ¡¸ º¢Å¡îº¡Ã¢Â¡÷¸û / ¬¾¢ ¨ºÅ÷¸û / §º¡Æ¢Â÷ ±Éî º¢Ä Üð¼ò¾¡÷) §À¡Â¢Õì¸Ä¡õ. ¬É¡ø ¬Æô À¡÷ò¾¡ø þôÀÊ ´Õ ÌÊ¢É÷ þÕó¾Ð ¿ýÈ¡¸§Å ÒÄôÀθ¢ÈÐ. þ¨¾ ²ý ¦º¡øÖ¸¢§Èý ±ýÈ¡ø ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ ±ýÈ ÁçÀ¡Î «ó¾½÷ ±ýÀÅ÷ À¢ýÉ¢ô À¢¨½óÐ þÕ츢ȡ÷¸û.

±ôÀÊî ºÁ½òÐÈÅ¢¸§Ç¡Î ÀûÇ¢ìܼõ ±ýÈ ¦º¡ø ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼§¾¡ «§¾ §À¡ýÈÐ þÐ. þó¾ò ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼí¸û ±ØòÐõ ±ñÏõ «øÄ¡Ð þÄ츢Âõ, þÄ츽õ, ¿£¾¢¦¿È¢, ¸¨Ä¸û ¬¸¢ÂÅü¨Èì ¸üÚò ¾ó¾ ¸¡Äõ ´ýÚ þÕó¾¢Õì¸ §ÅñÎõ. «ÅüÈ¢ý Á¢îº ¦º¡îºí¸¨Ç þýÛõ ¦¾ýÌÁâ Á¡Åð¼ò¾¢Öõ, §¸ÃÇò¾¢Öõ À¡÷츢§È¡õ. Å÷Á츨Ä, ¸ÇâôÀ¢üÚ, º¢ÄõÀ¡ð¼õ þýÛõ þÅü¨Èô §À¡ø À¢È×õ ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡Îì¸ô ÀðÊÕì¸ §ÅñÎõ. þÐ ²ý ±ýÚ À¢ýÉ¡ø Å¢Çì̸¢§Èý.

þÉ¢ ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ ÀüȢ ±ýÛ¨¼Â Àð¼È¢¨Å «Îò¾ Á¼Ä¢ø ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.