Sunday, March 19, 2006

சமயம்-6

இனிச் சமயத்தோட தொடர்பு கொண்ட சொற்களைப் பார்ப்போம்.

சமயக்கட்டு = மதக் கட்டுப் பாடு
சமயம் இருத்தல் = ஓலக்கம் இருத்தல் (இங்கே பார்த்தால் நொதுவல்- neutral- ஆன பொருள் விளங்கும். சம்மணம் போட்டு திருவோலக்க மண்டபத்துலே உட்கார்ந்து இருக்குறதே, சமயம் இருத்தல் ஆகும்.)

சமாதி = மனத்தைப் பரம்பொருளோடு ஒன்றுபடுத்தி நிறுத்துகை (சமாதி வடமொழின்னு நினைச்சுக்கிட்டு ருக்கோம்.; அதன் ஈறு 'ஆதி'தான் வடமொழி. இது ஓர் இருபிறப்பிச் சொல்.)
சமாதிக் குழி = நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர்களைப் புதைக்கும் குழி.
சமாதி நிலை = யோக நிலையில் அமர்தல்
சமிதி = சபைக் கூட்டம் (இதுவும் தமிழோடு தொடர்பு கொண்ட ஒரு வடமொழிச் சொல்.)
சமைதல் = ஆயுத்தமாதல், அமைதல், பொருத்தமாதல், தொடங்குதல், நிரம்புதல், புழுங்குதல், அழிதல், முடித்தல், பூப்படைதல்
சமைவு = நிலைவு, அழிவு, மன அமைதி
சவை = கூட்டம்
சமயம் = மதம், நூல், மரபு, சமய தீட்சை
= காலம், தருணம், அவகாசம்
சம்மயம் = சமயம் = உடன்படிக்கை

சும்மா = தொழில் இன்றி, இயல்பாய், அமைதியாய், வறிதாக, காரணம் இன்றி

சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) அல்லது மாந்தன் இறைவன் திருவடிகளை அல்லது வீட்டின்பத்தை அடையச் சமைவாகும் (தகுதியாகும்) நிலைமை. அந் நிலைமைக்குரிய ஒழுக்க நெறி. (இந்தப் பொருள் கருத்தியல் வாத வழியைச் சொல்றது. பொருண்மை வாத வழியைச் சொல்றது அல்ல. அதாவது இயல்புப் பொருள் அல்ல; தருவிக்கப் பட்ட பொருள்.)

"நேரத்தைக் குறிக்குஞ் சொல் வடிவில் மகர ஐகாரமும், மதத்தைக் குறிக்குஞ் சொல்வடிவில் மகரமும், வரல் வேண்டும் என வேறுபாடு அறிக. வடமொழியில் மகரமுள்ள வடிவேயுண்டு. அமையம் என்ற முலச் சொல்லும் அங்கில்லை. வடவர் ஸமய என்னுஞ் சொல்லை ஸம்+அய என்று பகுத்து, உடன்வருதல், கூடுதல், இணங்குதல், உடன்படிக்கை, ஒப்பந்தம், ஏற்பாடு, ஒழுங்கு, மரபு, அட்டம், நெறி, மதம் என்று பொருள் வரிசைப் படுத்துவர். ஸம் = கூட; அய = இயக்கம், செலவு, வருகை. இது இய என்னும் தென் சொற் திரிபாகும் " - அப்படின்னு பாவாணர் சொல்லுவார்.

சிவ நெறி நோக்குலே பார்த்தா சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்னும் ஆறும் அகச் சமயங்கள்; உலகாய்தம், மீமாஞ்சை, புத்தம், ஆருகம் (சைனம்), மாயாவாதம், பஞ்ச ராத்திரம் ஆகிய ஆறு கொள்கைகளும் புறச் சமயங்கள்.

ஒரு வியப்பு என்னன்னா, விண்ணெறியை மற்றொரு சமயம்னே சிவ நெறி நினைக்கலே! அது ஏன்? தெரியலை. ஆசீவகத்தையும் மேலே சொல்ற வரிசையிலே விட்டுட்டாக! ஒருவேளை இந்த வாசகம் ஏற்பட்ட போது ஆசீவகம் என்பதே சுத்தமா அழிஞ்சு போச்சோ, என்னவோ?

அண்ணாச்சி, நிரம்பவே சொல்லியாச்சு! அதே சமையம், இன்னுஞ் சொல்லலாம்! அளவுக்கு மிஞ்சினா அமுதும் நஞ்சுன்னு சொல்லியிருக்காக! இப்போதைக்கு நிப்பாட்டிக்கிருவோம். இன்னொரு தடவை பார்க்கலாம் அண்ணாச்சி! ஒரு வாட்டி, கடம்பு பத்திச் சொல்றேன்னு சொன்னேன். ஆனா இன்னும் முடியலை. திணறிக்கிட்டே இருக்கேன்.

வரட்டுமா?

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Thangamani said...

சமயம் பற்றிய இந்தத் தொடரை தொடர்ந்து படிந்த்துவந்தேன். நன்றி!

Anonymous said...

«ýÒûÇ ¸¢ðÎ «ñ½ÛìÌ,

«õÁ½õ ±ýÛ了¡ø À¢ýÉ¡Ç¢ý ¦º¡ø¦Äý§È
Íó¾ÃÉ¡÷ Àø¸¨Ä¢ý ¬º¡ý - ÀÃÁº¢Åý
¦º¡ø¸¢ýÈ¡÷ «ñ§½ þ¾ü§¸¾¡ý ¾ì¸Å¢¨¼
¿ø¸¢¼§Å §ÅñʧÉý ¾¡.

''¿¢÷Å¡½õ ±ýÀРż¦º¡øÄ¡Ìõ. «¾üÌ ¿¢¸Ã¡É ¾Á¢úî ¦º¡øÄ¡¸ «õÁ½õ ±ýÀÐ ÅÆí¸ôÀθ¢ýÈÉÐ. «õÁ½õ ±ýÈ ¦º¡ø «ó¾ô ¦À¡ÕÇ¢ø ¾Á¢Æ¢Ä츢Âò¾¢ø ±íÌõ ¸¡½ôÀ¼Å¢ø¨Ä. '«õÁ½õ ÀðÊÄ¡ ¨Å¦Â¢üÚ ³¨Â¨Âì ¸ñ¼¡§Â¡ §¾¡Æ¢' ±ýÛõ º¢ÄôÀ¾¢¸¡Ãõ (ÅÃó¾Õ¸¡¨¾) þó¾î ¦º¡ø¨Ä ±Îò¾¡Çì ¸¡ñ¸¢§È¡õ. þó¾î ¦º¡ø '̨È×' ±ýÈ ¦À¡ÕÇ¢ø ÁðΧÁ «ó¾ì ¸¡Äò¾¢ø ÅÆí¸¢ÔûÇÐ. '¬¨¼Â¢ýÈ¢' ±ýÈ ¦À¡ÕÇ¢ø Áì¸û ÅÆ츢ø ÁðÎõ¾¡ý ¸¡½ôÀθ¢ÈÐ, þÄ츢Âí¸Ç¢ø ¸¡½ôÀ¼Å¢ø¨Ä.
̨Èó¾Ð ¸¢.Ó. Ӿġõ áüÈ¡ñÊø ¾Á¢ú¿¡ðÊø º½Á Á¾õ ѨÆóÐ ¦ºøÅ¡ìÌô ¦ÀüÚŢ𼦾ýÚ ºí¸ þÄ츢Âõ ¸¡ðθ¢ýÈÐ. ¬É¡Öõ ¾Á¢Æ¢Ä츢Âô ÀÃôÀ¢ø ¨ºÅ, ¨Å½Å þÄ츢Âí¸Ç¢§Ä§Â ¨ƒÉ÷¸¨Çì ÌÈ¢ì¸î ºÁ½÷, «Á½÷ ¬¸¢Â ¦º¡ü¸û ÅÆí¸ôÀðÊÕ츢ýÈÉ. ºÁ½Á¾õ ÐÈÅ¢¨Éô ¦ÀÕ¨ÁôÀÎò¾¢Â Á¾Á¡Ìõ. ºÁ½ò ÐÈÅ¢¸Ç¢ø ¾¢¸õÀÃ÷ (¾¢¨º¸¨Ç§Â ¬¨¼Â¡¸ ¯Îò¾¢ÂÅ÷, À¢Èó¾§ÁÉ¢Âáö þÕôÀÅ÷), ͧžõÀÃ÷ (¦Åû¨Ç¡¨¼ ¯Îò¾¢ÂÅ÷) ±É þÃñÎ À¢Ã¢Å¢É÷ þÕó¾É÷. Á¨Äį̀¸¸¨Çô À¡Æ¢¸Ç¡ Á¡üÈ¢ò ¾Åõ ¦ºöÐÅó¾Å÷¸û ¾¢¸õÀÃò ÐÈÅ¢¸§Ç. ¦Åû¨Ç¡¨¼ ¯Îò¾¢Â ÐÈÅ¢¸û ÀûÇ¢¸¨Ç (Á¼í¸¨Ç) «¨ÁòÐ Å¡úó¾É÷. «õÁ½õ ±É ÅÆíÌõ ¦º¡ø ¬¨¼Â¢øÄ¡ «Á½÷¸¨Çì ÌÈ¢ì¸ô Ò¾¢¾¡¸ò §¾¡ýÚ¸¢ÈÐ.
¿¢÷Å¡½õ ±ýÈ ¦ºÂ¨ÄÔõ §¸¡ðÀ¡ð¨¼Ôõ ¾Á¢úî ºã¸õ ¾ÉÐ ÅÃÄ¡üÈ¢ø ¦¾¡¼÷óÐ ²üÚ즸¡ûÇ ÁÚò§¾ Åó¾¢Õ츢ÈÐ...'' (¦¾¡. ÀÃÁº¢Åý, ÀñÀ¡ðÎ «¨º×¸û, ¸¡ÄîÍÅÎ ¦ÅǢ£Î, Àì. 93-94).
¬ÚÓ¸ò¾Á¢Æý