Monday, March 09, 2009

IMF loan and ethnic cleansing of Tamils in Sri Lanka

அன்புடையீர்,

சற்றுமுன், "IMF loan and ethnic cleansing of Tamils in Sri Lanka" என்ற தலைப்பில் ஓர் எடுகோட்டு வேட்பைப் (on line petition) படித்துக் கையெழுத்திட்டேன்.

http://www.PetitionOnline.com/IMFP1/
அந்த வேட்பு சொல்லும் உண்மையை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். நீங்களும் ஏற்றுக் கொண்டால், சற்று நேரம் எடுத்து, அதைப் படித்து, உங்கள் கையெழுத்தை இடுங்கள்.
கூடவே, மற்ற நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைச் சொல்லுங்கள். உங்கள் வலைப்பதிவுகளில் எழுதுங்கள். தாளிகைகளில் தாருங்கள். குறைந்தது ஓர் இலக்கம் கையெழுத்துகளாவது அந்த வேட்பில் சேர வேண்டும். இதைச் செய்வதற்கு 2 நுணுத்தங்களே ஆகும். ஆனால் பெரும்பலன் இருக்கும்.

நண்பர்களே! உங்களுக்கே தெரியும். பொருளியலால் அடிபடாமல், பணத்தால் அடிபடாமல், சிங்கள அரசு தன் போரை நிறுத்தாது. தமிழ்கூறும் நல்லுலகம் இந்த உதவியை ஈழத் தமிழருக்குச் செய்யக் கூடாதா?

இது போன்ற பொருளியல் கடன் உதவிகளை வைத்துத் தான் சிங்கள அரசு தமிழர்களைக் கொல்லுகிறது. இவற்றை சிங்கள அரசு அடையவிடாது செய்வது தமிழர்களைக் காப்பாற்றுவதில் முகன்மையானது. சிங்கள அரசுக்கு எங்கு வலிக்குமா, அங்கு நாம் தாக்க வேண்டும். உங்கள் கையெழுத்து அதைச் செய்யும்.

அன்புடன்,
இராம.

4 comments:

Anonymous said...

போட்டாகி விட்டது ஐயா
-இளந்திரையன்

Anonymous said...

அன்பார்ந்த இராம.கி ஐயா,
தகவலுக்கு நன்றி.
நான் 474 ஆவது ஒப்பமிட்டிருக்கிறேன்..

பதி said...

தகவலுக்கு நன்றி ஐயா...

இது போன்ற நிகழ்வுகளை மனம் தளராமல் செய்வோம்....

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் தகவலுக்கு நன்றி