Sunday, November 08, 2020

Stationary shop - 2

1500 ஆண்டுகளுக்கு முன் நம்மூரில் எழுது பொருள் என்பது பனையோலை.. தாழை மடல், எழுத்தாணி, பித்திகை, செம்பஞ்சுக் குழம்பு, கரி, சுண்ணம், மாக்கட்டி, மஞ்சள் என இவ்வளவு தான். மிஞ்சி மிஞ்சிப் போனால், கல்,  செப்பு போன்ற மாழைத்தகடு,  உளி, சிறு சுத்தியல் ஆகியவை சேரும். இவற்றைச் செய்யப் பனைமரமும். கொல்லன் பட்டறையும் போதும்.  நம்மூரில் பனை மிகுத்து வளர்ந்தது பனையோலை எளிதாகக் கிடைத்தது. எனவே paper எனும் புது நுட்பியல் ஏற்படத் தேவை நமக்கு எழவில்லை. பனையோலை கிடைத்த இடத்திலேயே எழுத்தும் ஏற்பட்டது. (பனை மிகுந்த பாண்டிநாட்டிலும், சேர நாட்டிலும் சுவடிகள் கூடின. பனை குறைந்த சோழநாட்டில் கல்வெட்டுகள் மிகுந்தன, சுவடிகள் குறைந்தன. 

தமிழகத்தில் சுவடி கூடிய இடங்களில் இயல்பாகவே படிப்பு வளர்ந்தது. நூலாக்கம் கூடியது. (வடக்கே கூட பனை கூடிய மகதத்தில் தான் படிப்பு கூடியது. மற்ற இடங்களில் நூலாக்கம் குறைவு தான். இற்றைப் பீகாருக்கும் தமிழகத்திற்கும் இருந்த உறவுகள் அதிகம். காரணமின்றி அசோகன் நம் பெயரைச் சொல்லவில்லை. “சிலம்பின் காலம்” என்ற என் நூலைப் படியுங்கள்.)  அதே பொழுது சுவடியில் எழுதிய எழுத்துகள் ஒன்றிற்கொன்று வேறுபாடு காட்டாது நாளாகும் பயன்பாட்டில் எல்லாம் வட்டமாகிச் சிதைந்தன. கல்வெட்டில் எழுதியதில் அவ்வளவு எழுத்துச் சிதைவு ஏற்பட வில்லை. ஒரே தமிழி எழுத்தாய்த் தொடங்கியது, காலவெள்ளத்தில், எழுத்து நுட்ப வேறுபாட்டால், இரு வேறு எழுத்துகளாய் மாறியது, காலஞ் செல்லச் செல்லப்  பாண்டிய எழுத்துச் சிதைவு பொருட்புரிதலைக் குறைத்தது. பேரரசன்  இராசராசன் தன் அரசாணையால், சோழர் எழுத்தைப் பாண்டி மண்டலத்தில் புகுத்தி வட்டெழுத்திலிருந்து படிப்போரை விடுவித்தான், மொத்தத்தில் கி,பி,10 ஆம் நூற்றாண்டு வரை பாண்டிநாட்டில்  இலக்கியம் வளர்ந்தது சோழநாட்டில். எழுத்துக் காப்பாற்றப் பட்டது. முடிவில் இரு வேறு மரபுகளும்  கி.பி. 10 ஆ ம் நூற்றாண்டிற்கு அப்புறம் தான் ஒன்று கலந்தன.. 

17 ஆம் நூற்றாண்டு வரை stationary shop என்பது தமிழ்நாட்டில் தனியே எழவே இல்லை. தாள் என இக்காலத்தில் paper ஐச் சொல்கிறோமே, அது பனை யோலையை ஒப்பிட்டுச் சொன்னது. paper பயன்படுத்தும் தேவை நம்மூரில் எழ வில்லை. அது எகிப்திலும், சீனத்திலும் எழுந்தது, சீனப் பழக்கத்தை நானிங்கு விவரிக்கவில்லை. எகிப்துப் பழக்கம் விவரிக்கிறேன். Cyperus papyrus (https://en.wikipedia.org/wiki/Cyperus_papyrus) என்பது அவர் நாட்டு நாணல் கோரைக்கு ஆன அறிவியல் பெயர். அடியில் ஒரு தண்டு; மேலே ஒரு குரல் கொத்து என்றே அது காட்சியளிக்கும் அந்தக் கோரை எகிப்து, phoenicia ஆகியவற்றில் மட்டும் இன்றி,  சிந்து சமவெளியிலும். ஏன் நம்மூரிலும் கூட ஆற்றங் கரைகளில் விளைந்தது. குரலை வெட்டி, தண்டின் மேல் தோலையும் சீவி, உள்ளிருக்கும் நார்ப் பொருளிலிருந்து தாள்தாளாய்ச் சீவி அப்படிப் பெற்ற தாள்களைப் பின்னி அதை அழுத்திப் பிணைய வைத்து உலர்த்திப் paper எனும் எழுது பொருளைச் செய்தார்.  புது நுட்பம் எழுந்தது. (அருமையன விழியம் ஒன்றைப் பாருங்கள். https://www.youtube.com/watch?v=DCR8n7qS43w) இக்கோரை paper இக்கு மட்டுமின்றிப் புணை செய்யவும் பயன்பட்டது. Thor Heyerdahl இன் ”Raa”, ”Tigris” ஆகிய நூல்களைப் படித்தால் கோரையின் பரந்த விரிவும் அதன் இன்னொரு பயனும் செய்முறையும் புரியும். 

கோர்த்தாளை (கோல்>கோலை>கோரைத் தாளை) phoenician மொழி வழி அறிந்த கிரேக்கர் அந்நுட்பத்தைக் கற்றார், paper ஏற்றுமதிப் பொருள் ஆனது. Chartes, chartion or charterion என்று கிரேக்கர் paper ஐ அழைத்தார். (தமிழுக்கும் phoenician உக்கும்  ஏதோ தொடர்பு இருந்திருக்குமென்றே நான் நம்புகிறேன். phoenician வழிப்பட்ட கிரேக்கச் சொல் தமிழோடு நெருக்கம் காட்டுகிறது.)  χάρτης (khartes, meaning "layer of papyrus") என்று கிரேக்கத்தில் ”கோரைத் தாள்” எழுதப் பட்டது.  Egyptian இல் இது pa-p-ouro பாப்பிரசு "the material of the Pharaoh" என்றும் வேறு பெயரில் அழைத்தார். பாப்பிரசு பெரிதும் விளைந்த phoenician துறை ரகர- லகரத் திரிவில் பைபிலோசு என அழைக்கப் பட்டது. byblos "Phoenician port of byblos" என்பதும் paper க்கு இன்னொரு பெயரானது, பைபிலோசு எனும் எழுது பொருளில் எழுதப்பட்ட நூல் பைபிள் (தாளில் எழுதப்பட்டது என்பது அதன் பொருள்) எனப்பட்டது. 

phonecian தாக்கத்தால்  தாளும் எழுத்தும் கிரேக்கரிடம் பரவின. கிரேக்க எழுத்தும் phonecian இல் இருந்தே தோன்றியது). Phoeniciaச் சொல்லான ḥrṭit (Hebrew letters חרטית, ~khartit interpreted as 'something written', cognate with Biblical Hebrew khereṭ חֶרֶט 'stylus' or by extension 'style of writing' phonecian சொல் எப்படி எழுந்தது என்று தெரியாது. கிடைத்திருக்கும் விளக்கங்கள் பொருத்தமாய்த் தெரியவில்லை) என்பது கிரேக்கத்தில் χάρτης கார்த்தெ ஆகி,  உசுபெசுகித்தான் தஜிக்கித்தான் ஆகிய இட்ங்களில் புழங்கும் சோகுதியனில்  (sogdian) காக்தி kʾγδ(y)ʾஎன்றும், Uighur இல் kägdä என்றும், Georgian இல் kaɣaldi என்றும், Turkish இல்  kâğıt என்றும், அரபியில் kāḡad என்றும், Persian இல் kāḡaḏ என்றும் ,சங்கதத்தில் kākali என்றும்,  Bengali இல் kagôj என்றும்.  Hindi இல் ‎kāġaz என்றும், தமிழில் காகிதம் என்றும் திரிந்துள்ளது. 

என்னைக் கேட்டால், paper ஐக் கோரைத்தாள் என்றே நாம் சொல்லலாம்.  அது காகிதத்திற்கு ஒப்பானதே. தாள் தவிர பட்டை/பட்டம் என்ற சொல்லும் தமிழிலுண்டு. பட்டத்தைச் சங்கதம்  பத்ரம் (patrā (पत्रा).—m. A thin plate, leaf, or sheet (of metal &c.) என்று கடன் வாங்கிக் கொள்ளும். இற்றை நிலையில் paper இன் பயன்பாடு கூடிவிட்டது,. புதுப் புது நுட்பங்கள், இயல்பொருள்கள், தொழில் முறைகள் வந்துவிட்டன. விதமான தாள்கள். அட்டைகள், மையூற்றுகள், வண்ணங்கள்,. ஈயக் கரிக் குச்சிகள், ஒட்டுப் பொருள்கள், கண்ணாடித் தாள்கள். தூரிகைகள், எழுதுகருவிகள் என ஏராளம் வந்துவிட்ட்ன. இவை விற்கும் இடம் stationary shop என்று அதன் பீடிகைத் தளம் கொண்டே அழைக்கப் படுகிறது. 100க் கணக்கான பொருள்கள் அங்கு விற்கையில் பண்டப் பெயரில் அல்லாது நிலைத்த கடை என்றே சொல்கிறார் எழுதுபொருள் கடை என்று உலகெங்கும் விதந்து சொல்லப்படுவதில்லை. நாமும் விதக்கவேண்டியது இல்லை என்பதே என் கருத்து,     

ஆங்கிலத்தில் stationer (n.) என்ற சொல்லின் சொற்பிறப்பு "book-dealer, seller of books and paper," early 14c. (late 13c. as a surname), from Medieval Latin stationarius "tradesman who sells from a station or shop," noun use of Latin stationarius (see stationary). Roving peddlers were the norm in the Middle Ages; sellers with a fixed location often were bookshops licensed by universities; hence the word acquired a more specific sense than its etymological one என விவரிக்கப்படும். நான் மேற்சொன்ன கருத்து இவ்வரையறையில் வெளிப்படுவதைக் காணலாம்.

stationary shop. = பீடிகைக் கடை. விளக்கம் சொல்லும் போது எழுதுபொருளைக் குறிப்பிடலாம்.

அன்புடன்,

இராம.கி.


No comments: