28 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சிங்கையில் இருந்து ஒரு பேருந்திற் புறப்பட்டு அன்று மாலை 6.45 மணியளவில் பினாங்கிலுள்ள தங்கும் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம். விக்டோரியாத் தெரு. விக்டோரியா இண் (Victorio Inn). இதற்கு முன்பு 4 முறை இத்தீவைப் பார்த்திருந்தாலும், தீவின் பெருநகரான சியார்ச்சு டவுனை (ஒருகாலத்தில் Tanjong என்றழைக்கப்பட்ட சிற்றூர் இன்று George Town ஆகப் பெருநகராய் நிற்கிறது.) தைப்பூச விழாக் கோலத்தில், தேர் போகும் வழியில் எங்கு பார்த்தாலும்,
தண்ணீர்ப் பந்தல்,
கொடையாளர் விளம்பரங்கள்,
திருவிழாப் பதாகைகள்,
அலங்காரத் தோரணங்கள்,
விடுமுறையோடு சேர்ந்த கடையடைப்பு,
ஒழுங்கை, தெரு, வீதி, சாலையெங்கும் பரபரப்பு,
வழிப்போக்கரின் கவனமற்ற ஒயில்நடை,
பத்தில் இருவர், மூவராவது குவியறையோடு (camera) அங்குமிங்கும் அலைகிறார். பளிச், பளிச், “இங்கே பாருங்க, கொஞ்சம் சிரிங்க......”
சாலையின் நடுவத்திலும் (median), இரு பக்க அஞ்சடியிலும் இன்னாருடையது எனும் அடையாளக் குறிப்போடு கிடக்கும் தேங்காய்க் குமியல்கள்.
சாலையின் நடுவத்திலும் (median), இரு பக்க அஞ்சடியிலும் இன்னாருடையது எனும் அடையாளக் குறிப்போடு கிடக்கும் தேங்காய்க் குமியல்கள்.
(அஞ்சடி என்பது மலேசியாவில் platform நடைமேடையைக் குறிக்க உருவான கலைச்சொல். மற்ற ஊர்த் தமிழாக்கங்களில் நான் பார்த்ததில்லை.)
- என்ற விந்தைத் தோற்றத்தில் நான் பார்த்ததில்லை. மூச்சை முட்டவைக்கும் முன்னேற்பாடுகள். அம்மம்மா!
அத் தீவை காலப்போக்கில் விதம் விதமாய்ப் பாக்குத் தீவு (Pulau Pinang), பிரின்சு ஆவ் வேல்சு தீவு (Prince of Wales Island), முத்தாரத் தீவு (pulau Muthiara, Orient Island of Pearls) - என்று பல பெயரிட்டுப் பொருளோடு அழைத்திருக்கிறார்.
பாக்குத் தீவு என்பது புதலியற் (botany) கரணியத்தால் முதலில் ஏற்பட்ட பெயர். தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக மலேசியா, பிலிப்பைன்சில் தோன்றி, மற்ற நாடுகளுக்குப் பாக்குமரம் பரவியிருக்கக் கூடும் என்றே புதலியலார் ஊகிக்கிறார். இத்தீவின் கடற்கரையைச் சுற்றிப் பாக்குமரம் பெரிதாய் வளர்ந்தது போலும். தீவிற்குள் நுழைந்த பலருக்கும், பாக்கு மரங்கள் சட்டென்று காட்சியளித்திருக்கக் கூடும். பாக்கு பற்றிய குறிப்பு சிலம்பிலேயே வருகிறது. அம்மரம் நம்மூருக்கு எப்போது வந்து சேர்ந்தது என வரலாறு சொல்லமுடியாது. பாக்குத் தீவு எனும் பொருளில் மாலத்தீவில் Fua Mulaku என்ற பெயரிலும், இந்திய அசாம் மாநிலத்தின் தலைநகராய் Guwahati - யும் அமைந்திருப்பதாகச் சொல்வார்.
அடுத்த பெயர் ஏற்பட்ட கதை வரலாற்றுச் சுவையாரமானது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் வழி புறப்பட்டுப் போன, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பணியைச் சேர்ந்த விரான்சிசு லைட் (Francis Light) என்பவர், கடார அரசரை (= கெடா சுல்தானை) ஏமாற்றி, அவர் மகளை மணந்து, இத்தீவைச் சீதனமாய்ப் பெற்று, பின்னால் படைகள், உடன்படிக்கை, பொய்யுறுதி, --- இத்தாதிகள் மூலம் தீவிற்கு அப்பால் முகனை (main) நிலத்தில் இருந்து மேலும் இரு மடங்கு நிலம் பெற்று, மொத்தத்தில் நாமெல்லாம் நன்கு படித்த ”இராபர்ட் கிளைவ் வேலைகளைச்” செய்து, இத் தீவிற்கு மேன்மை தாங்கிய பிரிட்டிசு இளவரசரின் பட்டப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.
- என்ற விந்தைத் தோற்றத்தில் நான் பார்த்ததில்லை. மூச்சை முட்டவைக்கும் முன்னேற்பாடுகள். அம்மம்மா!
அத் தீவை காலப்போக்கில் விதம் விதமாய்ப் பாக்குத் தீவு (Pulau Pinang), பிரின்சு ஆவ் வேல்சு தீவு (Prince of Wales Island), முத்தாரத் தீவு (pulau Muthiara, Orient Island of Pearls) - என்று பல பெயரிட்டுப் பொருளோடு அழைத்திருக்கிறார்.
பாக்குத் தீவு என்பது புதலியற் (botany) கரணியத்தால் முதலில் ஏற்பட்ட பெயர். தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக மலேசியா, பிலிப்பைன்சில் தோன்றி, மற்ற நாடுகளுக்குப் பாக்குமரம் பரவியிருக்கக் கூடும் என்றே புதலியலார் ஊகிக்கிறார். இத்தீவின் கடற்கரையைச் சுற்றிப் பாக்குமரம் பெரிதாய் வளர்ந்தது போலும். தீவிற்குள் நுழைந்த பலருக்கும், பாக்கு மரங்கள் சட்டென்று காட்சியளித்திருக்கக் கூடும். பாக்கு பற்றிய குறிப்பு சிலம்பிலேயே வருகிறது. அம்மரம் நம்மூருக்கு எப்போது வந்து சேர்ந்தது என வரலாறு சொல்லமுடியாது. பாக்குத் தீவு எனும் பொருளில் மாலத்தீவில் Fua Mulaku என்ற பெயரிலும், இந்திய அசாம் மாநிலத்தின் தலைநகராய் Guwahati - யும் அமைந்திருப்பதாகச் சொல்வார்.
அடுத்த பெயர் ஏற்பட்ட கதை வரலாற்றுச் சுவையாரமானது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் வழி புறப்பட்டுப் போன, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பணியைச் சேர்ந்த விரான்சிசு லைட் (Francis Light) என்பவர், கடார அரசரை (= கெடா சுல்தானை) ஏமாற்றி, அவர் மகளை மணந்து, இத்தீவைச் சீதனமாய்ப் பெற்று, பின்னால் படைகள், உடன்படிக்கை, பொய்யுறுதி, --- இத்தாதிகள் மூலம் தீவிற்கு அப்பால் முகனை (main) நிலத்தில் இருந்து மேலும் இரு மடங்கு நிலம் பெற்று, மொத்தத்தில் நாமெல்லாம் நன்கு படித்த ”இராபர்ட் கிளைவ் வேலைகளைச்” செய்து, இத் தீவிற்கு மேன்மை தாங்கிய பிரிட்டிசு இளவரசரின் பட்டப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.
படிக்கப் படிக்க நம்மூர்ப் பாளையக்காரர் ஏமாந்த கதை அப்படியே மனத்திரையில் ஓடுகிறது. எப்படி ஒரே கதையை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வெள்ளையர் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டங்களில், நடத்தி நிலம் கவர்ந்தார் என்பது நம் ஆழ்ந்த வியப்பிற்கும் ஆய்விற்கும் உரியது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் இருந்து வெள்ளையர் நாட்டாமை நடைபெற்றிருக்கிறது. அந்தமானுக்கு முன்னால், இத் தீவுதான் இந்திய விடுதலைப் போராளிகளைச் சிறைவைத்த இடமாகும். எம் சிவகங்கை மருதுபாண்டியரின் கொடிவழியைப் பூண்டோடு ஒழித்துப் பின் எஞ்சியிருந்தோரைக் கொண்டுபோய்ச் சேர்த்த இடமும் பினாங்குத் தீவு தான். மலேசியாவின் பெருந்தலைவர் (அன்றும் இன்றும்) பலர் எழுந்ததும் இந்தத் தீவு, அருகிலுள்ள நெற்களஞ்சியமான கடார மாநிலமும் தான்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் இருந்து வெள்ளையர் நாட்டாமை நடைபெற்றிருக்கிறது. அந்தமானுக்கு முன்னால், இத் தீவுதான் இந்திய விடுதலைப் போராளிகளைச் சிறைவைத்த இடமாகும். எம் சிவகங்கை மருதுபாண்டியரின் கொடிவழியைப் பூண்டோடு ஒழித்துப் பின் எஞ்சியிருந்தோரைக் கொண்டுபோய்ச் சேர்த்த இடமும் பினாங்குத் தீவு தான். மலேசியாவின் பெருந்தலைவர் (அன்றும் இன்றும்) பலர் எழுந்ததும் இந்தத் தீவு, அருகிலுள்ள நெற்களஞ்சியமான கடார மாநிலமும் தான்.
தஞ்சாவூர்க்காரர் மாதிரி கடாரத்தாரை நினைத்துக் கொள்ளுங்கள். கடாரம், பினாங்கு இரண்டிலும் பழைய இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைச் சீமைகளின் மிச்ச சொச்சங்கள், தொட்டுத் தொடர்புகள், பேச்சுவழக்குகள், மரபுப் பண்பாடுகள், மூன்று நான்கு தலைமுறைக்கு அப்புறமும் பெரிதும் வழங்குகின்றன.
“வாங்கண்ணே, எப்ப வந்தீக? பசியாறிட்டிகளா?.....”
மூன்றாவது பெயர், கும்பணியின் ஆட்சிக்குள் பினாங் மாநிலம் பெருகி வளர்ந்த பிறகு, அதன் துறைமுகம், மலாக்கா நீரிணையின் (Malacca starits) கிடுக்கான (critical) இடத்தில் இருந்துகொண்டு, ஊடுவரும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திச் சுங்கம் பெற்றிருக்கிறது. அப்படிப் பெற்ற செல்வத்தையும், பெருகிவளர்ந்த வணிகத்தையும் குறிக்கும் முகமாய் ஏற்பட்ட பெயர் தான் முத்தாரத் தீவு எனும் நல்ல தமிழ்ப்பெயர். மலாய் மொழியில் pulau Muthiara என்று அப்படியே எழுத்துப் பெயர்ந்திருக்கிறார். ஆங்கிலத்திலோ Orient Island of Pearls என்று மொழிபெயர்ந்திருக்கிறார். அப் பெயருக்குள் இருக்கும் தமிழ்ப் பங்களிப்பு இன்றைக்கு யாருக்குத் தெரிகிறது சொல்லுங்கள்?
மூன்றாவது பெயர், கும்பணியின் ஆட்சிக்குள் பினாங் மாநிலம் பெருகி வளர்ந்த பிறகு, அதன் துறைமுகம், மலாக்கா நீரிணையின் (Malacca starits) கிடுக்கான (critical) இடத்தில் இருந்துகொண்டு, ஊடுவரும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திச் சுங்கம் பெற்றிருக்கிறது. அப்படிப் பெற்ற செல்வத்தையும், பெருகிவளர்ந்த வணிகத்தையும் குறிக்கும் முகமாய் ஏற்பட்ட பெயர் தான் முத்தாரத் தீவு எனும் நல்ல தமிழ்ப்பெயர். மலாய் மொழியில் pulau Muthiara என்று அப்படியே எழுத்துப் பெயர்ந்திருக்கிறார். ஆங்கிலத்திலோ Orient Island of Pearls என்று மொழிபெயர்ந்திருக்கிறார். அப் பெயருக்குள் இருக்கும் தமிழ்ப் பங்களிப்பு இன்றைக்கு யாருக்குத் தெரிகிறது சொல்லுங்கள்?
பினாங்குத் தீவில் இன்று 10 % ஆயிருக்கும் தமிழர், தீவு வளர்ச்சிக்கு ஏறத்தாழ 180, 190 ஆண்டுகள் உயிர் கொடுத்துள்ளார். நீரிணைத் தொடக்கத்தில் பினாங்கும், நீரிணை முடிவில் சிங்கையுமிருந்து ஊடுபோன போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய காலம் இன்று மாறிவிட்டது. பினாங்கின் ஒளி கிள்ளானுக்குப் (Port Klang) போய்விட்டது. [S.S.Rajulaa, S.S.State of Madras, M.V.Chidambaram என்பவை எல்லாம் எம் மக்களிடையே மக்கிப் போன பழங்கதைகள்......
[சென்னையில் இருந்து பினாங்கிற்குச் சென்ற வாரம் ஏர் ஆசியா நேரடிப் பறனைப் போக்குவரத்தைத் தொடங்கியிருக்கிறதாம். இது ஒரு புதுக்கதை எழுப்புகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.]
பினாங்குத் தீவின் துறைமுகச் செல்வாக்கு இன்று குறைந்தாலும் சிங்கைத் துறைமுகத்தின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை. சிங்கையின் தொடக்க காலத்திலும் தமிழர் பங்களிப்பு மிகப் பெரிதே.
அன்புடன்,
இராம.கி.
அன்புடன்,
இராம.கி.
1 comment:
குவியறை - இச்சொல் புதிதாக இருக்கிறது. சொற்பிறப்பினை வேறெங்கேனும் சொல்லியிருக்கிறீர்களா ஐயா?
Post a Comment