[”கிழக்கு மலேசியாவுக்கும் மேற்கு மலேசியாவிற்கும் என இரண்டு காலப் பகுந்தங்கள் (time zones) இல்லாது, ஒரே நேரம் தான் இருக்க வேண்டும்” என்ற நோக்கில் மலேசிய அரசு செந்தர நேரத்தைத் தள்ளி வைத்திருக்கிறது. மெய்யாலும் பார்த்தால், சென்னைக்கும், பினாங்குக்கும் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் தான் மாறுபட வேண்டும். ஆனாலும் மலேசிய அரசாணைப் படி 2.30 மணி நேர வேறுபாடு இன்றுள்ளது. எனவே காலை 7க்கு மேல் தான் இந்தப் பருவத்தில் பினாங்கில் பொழுது விடியும். அது போல் மாலை 7 க்கு மேல் தான் பொழுது சாயும்.]
அந்தா, இந்தாவென்று காவடிக்காரர் காவடியை எடுத்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து இறங்கி வர, அடுத்து இன்னும் அரைமணி நேரம் ஆயிற்று. ஊருலவரைத் தூக்கிவந்து தேரில் ஏற்றிக் கட்டி தேரை நகர்த்த இன்னும் அரைமணி நேரம் ஆயிற்று. பல்வேறு தீவங்களும், முடிவில் ஐங்காற் தீவமும் காட்டித் தேர் நகரும் போது 7.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. தேர் அசையத் தொடங்கியவுடன், கூட்டமும் நகரத் தொடங்கியது.
”தேர், தேர்” என்று நான் இங்கு சொன்னாலும், இது நம்மூர்த் தேர்கள் போலப் பெரியதல்ல. இது ஒரு “ரதம்” தான்; ஆனால் வெள்ளியால் ஆனது. இதை இழுத்துச் செல்ல இரண்டு முரட்டுக் காளைகளைப் பூட்டியிருந்தார். [குறிப்பிட்ட தொலைவுக்கு அப்புறம் காளைகளை மாற்றிக் கொள்கிறார்.] இந்தத் தேர் 116/117 ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூர்த் தண்டாயுதபாணிக் கோயிலுக்கெனத் தமிழ்நாட்டுக் காரைக்குடியில் செய்யப் பெற்றுக் கப்பலில்.ஏற்றி அனுப்பப் பட்டதாம். ஏதோ ஒரு குழப்பத்தில் சிங்கப்பூருக்குப் போய்ச் சேராமல், பினாங்கிலேயே இத்தேர் இறக்கப் பட்டுவிட்டதாம். பிறகு சிங்கப்பூர் கோயில் நிருவாகத்தாரும், பினாங்குக் கோயில் நிருவாகத்தாரும், ஓர் உடன்படிக்கைக்கு வந்து பினாங்கிலேயே தேரை நிலைத்துக் கொண்டார்களாம். வேறொரு தேர் மீண்டும் சிங்கப்பூருக்கு எனச் செய்யப் பட்டு, இன்றும் அங்கிருக்கிறது. [இதைத்தான் ஊழ் என்று சொல்வாரோ?]
ஊருலவருக்கு முன் நிவத்திக் காண்பித்த தீவத்தைப் பார்த்து (நிவத்தல் = உயர்த்தல்; இது போல நிவதம்>நிவேதம்>நிவேத்யம்>நைவேத்யம் = உயர்த்திக் காண்பிக்கும் படையல். இச்சொல்லைச் சங்கதம் என்பது தவறு. இது நல்ல தமிழ்ச்சொல்.)
ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே!
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே!
குன்றுருவ வேல்தாங்கி நின்றமுகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே!
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்
ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!
என வேண்டிக் கொண்டு, அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். [”ஆறுமுகம் ஆன பொருள்” என்பது இடம், வலம், முன், பின், மேல், கீழ் என்ற ஆறு திசைக் குறியீட்டால் உணர்த்தப்படும் முப்பரிமான உலகத்தைப் பரிபாலிப்பவன் முருகன் என்று பொருள்.].
தேர் அங்கிருந்து புறப்பட்டு பினாங்கு வீதியும் (Jalan Pinang) ஆயுதக் கிடங்கு வீதியும் (Jalan Magazine) சேரும் முனையில் உள்ள KOMTAR க்குப் போய் [பினாங்கில் இருக்கும் மிகப் பெரிய நீளுருளை (cylindrical)வடிவான, சற்றுப் பழைய அங்காடி/அலுவற் கட்டிடம். பெருந்தொலைவில் இருந்து சியார்ச்சு டவுனை அடையாளங் காட்டக் கூடியது. அதன் அடியில் உள்ளூர்ப் பேருந்துகள் வந்து போகின்றன.],
அந்தா, இந்தாவென்று காவடிக்காரர் காவடியை எடுத்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து இறங்கி வர, அடுத்து இன்னும் அரைமணி நேரம் ஆயிற்று. ஊருலவரைத் தூக்கிவந்து தேரில் ஏற்றிக் கட்டி தேரை நகர்த்த இன்னும் அரைமணி நேரம் ஆயிற்று. பல்வேறு தீவங்களும், முடிவில் ஐங்காற் தீவமும் காட்டித் தேர் நகரும் போது 7.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. தேர் அசையத் தொடங்கியவுடன், கூட்டமும் நகரத் தொடங்கியது.
”தேர், தேர்” என்று நான் இங்கு சொன்னாலும், இது நம்மூர்த் தேர்கள் போலப் பெரியதல்ல. இது ஒரு “ரதம்” தான்; ஆனால் வெள்ளியால் ஆனது. இதை இழுத்துச் செல்ல இரண்டு முரட்டுக் காளைகளைப் பூட்டியிருந்தார். [குறிப்பிட்ட தொலைவுக்கு அப்புறம் காளைகளை மாற்றிக் கொள்கிறார்.] இந்தத் தேர் 116/117 ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூர்த் தண்டாயுதபாணிக் கோயிலுக்கெனத் தமிழ்நாட்டுக் காரைக்குடியில் செய்யப் பெற்றுக் கப்பலில்.ஏற்றி அனுப்பப் பட்டதாம். ஏதோ ஒரு குழப்பத்தில் சிங்கப்பூருக்குப் போய்ச் சேராமல், பினாங்கிலேயே இத்தேர் இறக்கப் பட்டுவிட்டதாம். பிறகு சிங்கப்பூர் கோயில் நிருவாகத்தாரும், பினாங்குக் கோயில் நிருவாகத்தாரும், ஓர் உடன்படிக்கைக்கு வந்து பினாங்கிலேயே தேரை நிலைத்துக் கொண்டார்களாம். வேறொரு தேர் மீண்டும் சிங்கப்பூருக்கு எனச் செய்யப் பட்டு, இன்றும் அங்கிருக்கிறது. [இதைத்தான் ஊழ் என்று சொல்வாரோ?]
ஊருலவருக்கு முன் நிவத்திக் காண்பித்த தீவத்தைப் பார்த்து (நிவத்தல் = உயர்த்தல்; இது போல நிவதம்>நிவேதம்>நிவேத்யம்>நைவேத்யம் = உயர்த்திக் காண்பிக்கும் படையல். இச்சொல்லைச் சங்கதம் என்பது தவறு. இது நல்ல தமிழ்ச்சொல்.)
ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே!
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே!
குன்றுருவ வேல்தாங்கி நின்றமுகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே!
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்
ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!
என வேண்டிக் கொண்டு, அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். [”ஆறுமுகம் ஆன பொருள்” என்பது இடம், வலம், முன், பின், மேல், கீழ் என்ற ஆறு திசைக் குறியீட்டால் உணர்த்தப்படும் முப்பரிமான உலகத்தைப் பரிபாலிப்பவன் முருகன் என்று பொருள்.].
தேர் அங்கிருந்து புறப்பட்டு பினாங்கு வீதியும் (Jalan Pinang) ஆயுதக் கிடங்கு வீதியும் (Jalan Magazine) சேரும் முனையில் உள்ள KOMTAR க்குப் போய் [பினாங்கில் இருக்கும் மிகப் பெரிய நீளுருளை (cylindrical)வடிவான, சற்றுப் பழைய அங்காடி/அலுவற் கட்டிடம். பெருந்தொலைவில் இருந்து சியார்ச்சு டவுனை அடையாளங் காட்டக் கூடியது. அதன் அடியில் உள்ளூர்ப் பேருந்துகள் வந்து போகின்றன.],
பின் அங்கிருந்து சற்று மேற்கே தத்தோ கெராமத் வீதியில் (Jalan Dato Keramat) இருக்கும் நகரச் சிவன்கோயிலுக்கு நண்பகல் வந்துசேரும் என்று பலரும் சொன்னார். தேர் போகும் சாலை வழியின் தொலைவு 6 . 7 கி.மீ இருப்பதாலும், ஆங்காங்கே பற்றாளர் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல், கோயில், சீனக்கோயில் என நின்று நின்று அருச்சனைகள், சிதறு காய்களைகளை ஏற்றுக் கொண்டு மெதுவாய் நண்பகலுக்குத் தான் தேர் சிவன் கோயிலைச் சேரும் என்பதாலும், குறுக்கு வழியிற் போனால் 2 கி.மீ. இல் நகரச் சிவன் கோயிலுக்குப் போய்விடலாம் என்றும் சொன்னதாலும், ”சரி, அப்படியே போவோம்” என்று சோழியத் தெரு வழியே நடக்கத் தொடங்கினோம்.
அப்போது எங்களுக்கு முன் போய்க்கொண்டிருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் எங்களோடு நடந்த வண்ணம் முகமன் விசாரித்து ”எங்கு போகிறீர்கள்” என்று கேட்டார். நாங்கள் “ஊரைப் பார்த்துக் கொண்டே குறுக்கு வழியிற் சிவன் கோயிலுக்கு நடந்து போகிறோம்” என்று சொல்ல, அவர் “நான் அந்தப் பக்கத்திற்குத் தான் சீருந்தில் செல்கிறேன். உங்களுக்கு மறுப்பில்லை என்றால் என்னோடு வரலாம், போகும் வழியில் இறக்கிவிட்டுப் போகிறேன்” என்றார். தேரை விட்டு 400, 500 அடிகள் கூட நடந்திருக்க மாட்டோம்; சீருந்தில் ஏறிக் கொள்ளும் வாய்ப்பு வந்தது.
அந்தத் தமிழ் நண்பர் மலேசிய நாவாய்ப்படையில் (Navy) நாயகமாய் (Captain) இருப்பவர். பினாங்கில் இருந்து 3 மணிப் பயணத்தில் இருப்பதாய்ச் சொன்னார். பினாங்கு சொந்த ஊரென்றும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பூசத்திற்குப் பினாங்கு வந்துவிடுவேன் என்றும் சொன்னார். கலிங்க நாயகம் பள்ளிவாசல் (Masjid Kapitan Keling) தொடங்கிச் சோழியத் தெரு (Lebuh Chulia), பினாங்கு வீதி (Jalan Penang), பர்மா வீதி (Jalan Burma), மக்கெலிசுடர் ஒழுங்கை (Lorong Maclister - Maclister Alley/Lane), மக்கெலிசுடர் வீதி (Jalan Maclister), புது ஒழுங்கை (Lorong Baru) வழியாகச் சீருந்தில் போகும் போது, பினாங்கு பற்றிய சில கூடுதல் விவரங்களையும், வெள்ளித்தேர் பற்றியும் சொன்னார். கெலிங் என்பது தமிழரைக் குறிக்கும் சொல்; கலிங்கரை அல்ல, யாரோ ஒரு சிறந்த தமிழர் நாயகம் நிறுவிய பள்ளி வாசலாம் அது. தமிழ் முசுலீம்கள் வந்து தொழுமிடம் என்றும் சொன்னார். வெளியே பார்க்க அழகுற அமைந்திருந்தது.
அமெரிக்க அவாயில் இருக்கும் “Pearl Harbour" மேல் சப்பானியர் குண்டு போட்ட 4/5 நாள்களில் பினாங்கின் மேலும் குண்டுபோட்டதாகவும், அப்போது அருகிருக்கும் பல கட்டுமானங்கள் இடிந்துபோக, இந்தத் தேர் இருந்த கொட்டகையும், தேரும் அழியாது காப்பற்றப் பட்டது பற்றி அவருடைய தந்தையார் சொன்ன கதையை எங்களுக்குச் சொல்லி ”அவ்வளவு சிறப்பு வாய்ந்த தேர் இது” என்று சொல்லி பினாங்கு மக்கள் இந்த விழாவோடு உணர்வு பூர்வமாய் நெருங்குவதைச் சொன்னார். வியந்து கொண்டோம். சிவன் கோயிலுக்கருகில் எங்களை இறக்கிவிட்டார்.
அச் சிவன் கோயிலுக்கு எதிரே ”Times Square" என்ற பெயரில் ஒரு பெரிய ”உள்ளமைத் திட்டைப் புறத்தெற்று (Real Estate project)” உருவாகிக் கொண்டிருக்கிறது. நிழலங்காடியும் (mall), அதன் மேல் தங்கும் தளவீடுகளும் (condominium) எனப் பெரிய கட்டிடம் ஒன்று அங்கு உருவாகி அடுத்தாற்போல் இரண்டோ, மூன்றோ வானுயர் கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. .
சிவன் கோயிலுக்குள்ளும், அதற்கு முன்னால் அருகிலுள்ள காமாட்சியம்மன் கோயிலுள்ளும் போய் வழிபாடு செய்துகொண்டு, பின் ”Times Square" இல் இருந்த நிழலங்காடிக்கு வந்து அக் கட்டிடத்தின் பெருநிழலில் ஒதுங்கினாற் போல் நின்று கொண்டோம். அப்புறம் பார்த்தது என்னை மிகவும் கவர்ந்தது.
அன்புடன்,
இராம.கி.
அப்போது எங்களுக்கு முன் போய்க்கொண்டிருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் எங்களோடு நடந்த வண்ணம் முகமன் விசாரித்து ”எங்கு போகிறீர்கள்” என்று கேட்டார். நாங்கள் “ஊரைப் பார்த்துக் கொண்டே குறுக்கு வழியிற் சிவன் கோயிலுக்கு நடந்து போகிறோம்” என்று சொல்ல, அவர் “நான் அந்தப் பக்கத்திற்குத் தான் சீருந்தில் செல்கிறேன். உங்களுக்கு மறுப்பில்லை என்றால் என்னோடு வரலாம், போகும் வழியில் இறக்கிவிட்டுப் போகிறேன்” என்றார். தேரை விட்டு 400, 500 அடிகள் கூட நடந்திருக்க மாட்டோம்; சீருந்தில் ஏறிக் கொள்ளும் வாய்ப்பு வந்தது.
அந்தத் தமிழ் நண்பர் மலேசிய நாவாய்ப்படையில் (Navy) நாயகமாய் (Captain) இருப்பவர். பினாங்கில் இருந்து 3 மணிப் பயணத்தில் இருப்பதாய்ச் சொன்னார். பினாங்கு சொந்த ஊரென்றும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பூசத்திற்குப் பினாங்கு வந்துவிடுவேன் என்றும் சொன்னார். கலிங்க நாயகம் பள்ளிவாசல் (Masjid Kapitan Keling) தொடங்கிச் சோழியத் தெரு (Lebuh Chulia), பினாங்கு வீதி (Jalan Penang), பர்மா வீதி (Jalan Burma), மக்கெலிசுடர் ஒழுங்கை (Lorong Maclister - Maclister Alley/Lane), மக்கெலிசுடர் வீதி (Jalan Maclister), புது ஒழுங்கை (Lorong Baru) வழியாகச் சீருந்தில் போகும் போது, பினாங்கு பற்றிய சில கூடுதல் விவரங்களையும், வெள்ளித்தேர் பற்றியும் சொன்னார். கெலிங் என்பது தமிழரைக் குறிக்கும் சொல்; கலிங்கரை அல்ல, யாரோ ஒரு சிறந்த தமிழர் நாயகம் நிறுவிய பள்ளி வாசலாம் அது. தமிழ் முசுலீம்கள் வந்து தொழுமிடம் என்றும் சொன்னார். வெளியே பார்க்க அழகுற அமைந்திருந்தது.
அமெரிக்க அவாயில் இருக்கும் “Pearl Harbour" மேல் சப்பானியர் குண்டு போட்ட 4/5 நாள்களில் பினாங்கின் மேலும் குண்டுபோட்டதாகவும், அப்போது அருகிருக்கும் பல கட்டுமானங்கள் இடிந்துபோக, இந்தத் தேர் இருந்த கொட்டகையும், தேரும் அழியாது காப்பற்றப் பட்டது பற்றி அவருடைய தந்தையார் சொன்ன கதையை எங்களுக்குச் சொல்லி ”அவ்வளவு சிறப்பு வாய்ந்த தேர் இது” என்று சொல்லி பினாங்கு மக்கள் இந்த விழாவோடு உணர்வு பூர்வமாய் நெருங்குவதைச் சொன்னார். வியந்து கொண்டோம். சிவன் கோயிலுக்கருகில் எங்களை இறக்கிவிட்டார்.
அச் சிவன் கோயிலுக்கு எதிரே ”Times Square" என்ற பெயரில் ஒரு பெரிய ”உள்ளமைத் திட்டைப் புறத்தெற்று (Real Estate project)” உருவாகிக் கொண்டிருக்கிறது. நிழலங்காடியும் (mall), அதன் மேல் தங்கும் தளவீடுகளும் (condominium) எனப் பெரிய கட்டிடம் ஒன்று அங்கு உருவாகி அடுத்தாற்போல் இரண்டோ, மூன்றோ வானுயர் கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. .
சிவன் கோயிலுக்குள்ளும், அதற்கு முன்னால் அருகிலுள்ள காமாட்சியம்மன் கோயிலுள்ளும் போய் வழிபாடு செய்துகொண்டு, பின் ”Times Square" இல் இருந்த நிழலங்காடிக்கு வந்து அக் கட்டிடத்தின் பெருநிழலில் ஒதுங்கினாற் போல் நின்று கொண்டோம். அப்புறம் பார்த்தது என்னை மிகவும் கவர்ந்தது.
அன்புடன்,
இராம.கி.
2 comments:
//உள்ளமைத் திட்டைப் புறத்தெற்று (Real Estate project)”//
Real Estate என்பதை உள்ளமைத் திட்டு எனலாமா? ஏன் இவ்வாறு கூற வேண்டும் என தாங்கள் விளக்கினால் நன்று. Real Estate என்பதில் வீட்டு மனை வாங்கல், விற்பது மட்டுமல்லாது பலவும் கலந்த சொல்லாக இருப்பதால் சரியான சொல்லை தேடிக்கொண்டுள்ளேன். விக்சனரியுலும் சரியான பொருள் இருப்பதாக தெரியவில்லை. தங்கள் உதவி தேவை.
இலங்கையில் கிட்டங்கி என்று 'plaza'வை அழைப்போம்.
நிழலங்காடி(mall) என்ற சொல் நன்றாக உள்ளது நண்பரே.
"A mall is a very large enclosed shopping area
A plaza is an open square in a city
A plaza is a group of stores or buildings that are joined together or share common areas. "
Post a Comment