Thursday, March 31, 2005

காணவொரு காலம் வருமோ - 3

3. வீடணர்க்காய் நின்ற கோலம்

வினைஅதிரத் தென்இலங்கை வேள்அரசைச்(a) சாய்த்தபினர்
வெற்றியுடன் பட்டம் ஏறி,
வீடணர்க்குப் பரிசாக அறிதுயிலின் திருமேனி
விழையோடு படிமம் தந்து,
நனைபொன்னி நல்அரங்கில் நல்லதிசை(b) பார்த்தவணம்
நள்ளி,குறுஞ் சிரிப்பைக் காட்டி,
"நான்நிற்கும் கோலத்தை கண்ணபுர மாநகரில்
நல்கிடுவேன் பார்க்க, நண்ப!"
எனச்சொல்லி ஈழவர்க்கும்(c), தண்டகர்க்கும்(d) கண்வருக்கும்(e)
எழுகருடப் பறவை யார்க்கும்(f),
எம்போன்ற அடியவர்க்கும், நின்றிருந்த கோலத்தில்,
எழில்காட்டும் நீல மேகா!(g)
கணப்போதும் மறவாஉன் காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இராமர் பட்டமேறிய விழாவிற்குப் பின், வீடணருக்கு தன் கிடந்த கோலப் படிமத்தைக் கொடுத்து, அது திருவரங்கத்தில் நிலை கொண்ட காட்சிக்குப் பின், நின்ற கோலத்தைக் கண்ணபுரத்தில் காண் என்று இறைவன் சொல்லியதை எடுத்துக் கூறுகிறது இந்தப் பாடல்.

a. வேள் அரசு = இராவணன்
b. நல்ல திசை = கிழக்குத் திசை
c. ஈழவர் = இங்கே இலங்கையரசன் வீடணனைக் குறிக்கிறது. ஈழம் என்ற சொல்லும் இலங்கை என்ற சொல்லும் தீவு என்ற பொதுமைப் பொருளில் உள்ள சொற்கள். ஆங்கிலத்தில் உள்ள ஐலண்ட் என்ற சொல் கூட இவற்றோடு தொடர்பு உடையது தான். அவற்றை இங்கு விரிப்பின் பெருகும். இன்னொரு முறை பார்க்கலாம். வீடணருக்கு என இராமர் கருவறையைப் பார்த்தாற் போல் கண்ணபுரத்தில் தனிக் கருவறை உண்டு.
d. தண்டகர் = ஒரு முனிவர்; கண்ணபுரத்தில் மூலவரைப் பார்ப்பதாகக் கருவறையில் இவர் உருவம் இருக்கிறது.
e. கண்வர் = இவரும் ஒரு முனிவர். இவர் உருவமும் கருவறையில் இருக்கிறது.
f. கருடப் பறவை = பெருமாளின் ஊர்தி
g. நீல மேகன் = மூலவர் பெயர்.
3. Å£¼½÷측ö ¿¢ýÈ §¸¡Äõ

In TSCII:

3. Å£¼½÷측ö ¿¢ýÈ §¸¡Äõ

Å¢¨É «¾¢Ãò ¦¾ý þÄí¨¸ §Åû «Ã¨ºî(a) º¡öò¾À¢É÷
¦ÅüÈ¢Ô¼ý Àð¼õ ²È¢,
Å£¼½÷ìÌô À⺡¸ «È¢ ТĢý ¾¢Õ§ÁÉ¢
Å¢¨Æ§Â¡Î ÀÊÁõ ¾óÐ,
¿¨É ¦À¡ýÉ¢ ¿ø «Ãí¸¢ø ¿øÄ ¾¢¨º(b) À¡÷ò¾Å½õ
¿ûÇ¢, ÌÚï º¢Ã¢ô¨Àì ¸¡ðÊ,
"¿¡ý ¿¢üÌõ §¸¡Äò¨¾ ¸ñ½Òà Á¡¿¸Ã¢ø
¿ø¸¢Î§Åý À¡÷ì¸, ¿ñÀ!"
±Éî ¦º¡øÄ¢ ®ÆÅ÷ìÌõ(c), ¾ñ¼¸÷ìÌõ(d) ¸ñÅÕìÌõ(e)
±Ø ¸Õ¼ô ÀȨŠ¡÷ìÌõ(f),
±õ §À¡ýÈ «ÊÂÅ÷ìÌõ, ¿¢ýÈ¢Õó¾ §¸¡Äò¾¢ø,
±Æ¢ø ¸¡ðÎõ ¿£Ä §Á¸¡!(g)
¸½ô §À¡Ðõ ÁÈÅ¡ ¯ý ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

þáÁ÷ Àð¼§ÁȢ ŢơŢüÌô À¢ý, Å£¼½ÕìÌ ¾ý ¸¢¼ó¾ §¸¡Äô ÀÊÁò¨¾ì ¦¸¡ÎòÐ, «Ð ¾¢ÕÅÃí¸ò¾¢ø ¿¢¨Ä ¦¸¡ñ¼ ¸¡ðº¢ìÌô À¢ý, "¿¢ýÈ §¸¡Äò¨¾ì ¸ñ½ÒÃò¾¢ø ¸¡ñ” ±ýÚ þ¨ÈÅý ¦º¡øĢ¨¾ ±ÎòÐì ÜÚ¸¢ÈÐ þó¾ô À¡¼ø.

a. §Åû «ÃÍ = þáŽý
b. ¿øÄ ¾¢¨º = ¸¢ÆìÌò ¾¢¨º
c. ®ÆÅ÷ = þí§¸ þÄí¨¸Âúý Å£¼½¨Éì ÌȢ츢ÈÐ. ®Æõ ±ýÈ ¦º¡øÖõ þÄí¨¸ ±ýÈ ¦º¡øÖõ ¾£× ±ýÈ ¦À¡Ð¨Áô ¦À¡ÕÇ¢ø ¯ûÇ ¦º¡ü¸û. ¬í¸¢Äò¾¢ø ¯ûÇ ³Äñð ±ýÈ ¦º¡ø ܼ þÅü§È¡Î ¦¾¡¼÷Ò ¯¨¼ÂÐ ¾¡ý. «Åü¨È þíÌ Å¢Ã¢ôÀ¢ý ¦ÀÕÌõ. þý¦É¡Õ Ó¨È À¡÷ì¸Ä¡õ. Å£¼½ÕìÌ ±É þáÁ÷ ¸ÕŨȨÂô À¡÷ò¾¡ü §À¡ø ¸ñ½ÒÃò¾¢ø ¾É¢ì ¸ÕÅ¨È ¯ñÎ.
d. ¾ñ¼¸÷ = ´Õ ÓÉ¢Å÷; ¸ñ½ÒÃò¾¢ø ãÄŨÃô À¡÷ôÀ¾¡¸ì ¸ÕŨÈ¢ø þÅ÷ ¯ÕÅõ þÕ츢ÈÐ.
e. ¸ñÅ÷ = þÅÕõ ´Õ ÓÉ¢Å÷. þÅ÷ ¯ÕÅÓõ ¸ÕŨÈ¢ø þÕ츢ÈÐ.
f. ¸Õ¼ô ÀȨŠ= ¦ÀÕÁ¡Ç¢ý °÷¾¢
g. ¿£Ä §Á¸ý = ãÄÅ÷ ¦ÀÂ÷.

No comments: