Wednesday, November 17, 2004

திண்ணைப் பள்ளிக்கூடம் - 1

முதலில் திண்ணை என்றால் என்னவென்று பார்ப்போம்.

நாட்டுப் புறங்களில் குறிப்பாகத் தென்தமிழ்நாட்டில் குடியிருக்கும் வீடு என்பது வானத்தைப் பார்த்த ஒரு முற்றம்; முற்றத்தைச் சுற்றிலும் ஒரு வளவு; வளவில் பல தூண்கள். வளவில் தூண்களின் மேல் ஒரு தாழ்வாரம். இன்னும் வளவைச் சுற்றிச் சில அறைகள் (இவையும் சில மாவட்டங்களில் வீடுகள் என்றே கூடச் சொல்லப் பெறும்.) வளவிற்கும் முன்னால் பட்டாலை; வளவிற்குப் பின்னால் இரண்டாம் கட்டு; (அடுப்படி என்பது இரண்டாம் கட்டில் இருக்கும்.) பட்டாலை, வளவு இரண்டையும் மூடுவது போல் தேக்கால் ஆன வீட்டின் கனத்த பெருங்கதவு இருக்கும். பெருங்கதவிற்கும் முன்னால் வீட்டின் முகப்பில் திண்ணை இருக்கும். திண்ணைக்கும் முன்னால் வெளிமுற்றம்; அதற்கும் முன்னால் வாசல். வாசலுக்கு முன்னால் தெரு அல்லது வீதி. திண்ணை என்பது வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது வந்து போகும் வெளியாட்கள், விருந்தினருக்கும் உள்ளது தான்.

இங்கே நான் விரித்திருக்கும் அடவு (design) கூட்டியோ, குறைந்தோ, செல்வநிலைக்குத் தக்க மாறுபடும். பெரும்பாலும் காவிரி ஆற்றிற்குத் தெற்கே உள்ள வீடுகள் மேலே சொன்ன கூறுகளின் ஒருசிலவற்றையாவது கொண்டிருக்கும். தமிழ்நாட்டு வீடுகளின் அமைப்பை ஆராய்ந்து ஒரு கட்டிடவியலார் கட்டுரை படைப்பது நலமாய் இருக்கும். அது என்ன குறையோ தெரியவில்லை, அப்படி எல்லாம் செய்வதற்கு யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்கள். நம் எத்தனையோ மரபுகளைத் தொலைத்துக் கொண்டிருப்பதில் இதுவும் ஒன்று.

வளவு என்பது விழா நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டாருக்கும், மிக நெருங்கிய வெளியாட்களுக்கு மட்டுமே உள்ளது. வளவிற்குள் மற்றவர்கள் சட்டென்று நுழைய மாட்டார்கள். திண்ணை என்பது யார் வேண்டுமானாலும் வரக் கூடியது. (கிட்டத்தட்ட இந்தக் கால drawing room போல அதனைப் புழங்கிக் கொள்வார்கள்.) திண்ணையில் சாய்ந்துகொள்ள சுவரோடு சுதையால் ஆன திண்டு இருக்கும். வீட்டின் தலைவர் பெரும்பாலும் பகல் நேரத்தில் திண்டில் சாய்ந்த வண்ணம் வெற்றிலைச் செல்லத்தோடு உட்கார்ந்து இருப்பார். வருவோர், போவோர் அவரோடு உரையாடுவது அங்கே தான்.

இது போன்ற வீடுகள் முன்னே சொன்னது போல் செல்வ நிலைக்குத் தக்க விரிந்தும் சுருங்கியும் இருந்தன. ஊரில் ஆசிரியர் வீட்டிலும் திண்ணைகள் இருந்தன. இந்தத் திண்ணைகளில் ஆசிரியர்கள் பள்ளிக் கூடங்களை வைத்து இருந்தனர். திண்ணையும் வெளிமுற்றமும் கலைகள் மற்றும் படிப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. ஒரு சிற்றூர் என்பதில் 20, 30 மாணாக்கர் இருப்பதே அரிது. அவருக்கு இந்த இடம் போதும். வெவ்வேறு அகவையில் இருந்த மாணவருக்கு ஒரே ஆசிரியர் பல்வேறு பாடங்களைச் சொல்லி வந்தார்.

இந்தப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராய் இருந்தவர்கள் அந்தணர் அல்லது அறிவர் என்பவர் ஆவர். (அறிவர் என்பவரை குமரியில் வள்ளுவர் என்பார்கள்; திருக்குறள் ஆசிரியரும் இப்படி ஒரு குடியில் வந்தவர் தான். வள்ளுவர் என்பது அவருடைய இயற்பெயரல்ல. அது ஒரு குடிப்பெயர்; கிட்டத்தட்ட ஆசிரியர் - scholar என்றே நாம் வழக்கில் பொருள் கொள்ள வேண்டும்.) அந்தணர்/அறிவர் (scholar) தான் ஒரு ஊரில் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள். இந்த ஆசிரியர்கள் பெருமானராய் (பிராமணராய்) இருக்க வேண்டிய தேவையில்லை. பார்ப்பனர் அல்லாதோரும் அந்தணர்/அறிவர் தான். பழந்தமிழ்ப் பாடல்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டு, அந்தணர் என்றால் பார்ப்பனர் என்று சொல்ல முற்பட்டார்கள். அந்தணருக்குள் சில பார்ப்பனர் இருக்கலாம். ஆனால், பார்ப்பனர் எல்லோருமே அந்தணர் என்ற சொல்லுக்கு இணையானவர் அல்லர். (பார்ப்பனர் என்ற சொல்லின் பிறப்பை இங்கு சொல்ல முற்படவில்லை.)

இனி அந்தணர் என்ற சொல்லின் பிறப்பைப் பார்ப்போம். அந்தை என்பதற்கு அப்பன் என்றே பொருள் உண்டு என்று புலவர் இளங்குமரன் ஆழ்ந்த விளக்கத்தோடு நிறுவியிருக்கிறார். (தம்+அந்தை>தமந்தை>தகந்தை>தந்தை என்ற வளர்ச்சி தம்+அப்பன்>தமப்பன்>தகப்பன் என்பதைப்போல.) அந்தை என்ற சொல் வேறு ஒரு ஈறு பெற்று அந்தன் என்றும் ஆக முடியும். இது அத்தன்>அச்சன் என்ற சொற்களோடு மெல்லியல் இணை கொண்டது. ஐயன் என்பதும் தமிழில் அப்பன் என்ற பொருள் கொள்ளும். ஐயனில் இருந்து பணிவு காரணமாய் ஐயனார் என்ற சொல் பிறப்பது போல் அந்தனில் இருந்து மரியாதை கருதிப் பிறந்த சொல் அந்தனர். இதில் னகரம் திரிந்து அந்தணர் என்று ஆகும். அந்தன்>அந்தனர்>அந்தணர். அம்+தணர் என்று வலிந்து பிரித்துப் பொருள் கொள்வதெல்லாம் சங்கத முறையில் தமிழ்ச் சொல்லைக் குதறுவது ஆகும்.

பொதுவாக ஒரு குமுகத்தில் ஆசிரியர் என்பவரும் தந்தையின் இடத்தில் வைத்து போற்றப் படுகிறார். இவர் கல்விக்கு, படிப்பிற்கு, பண்பாடு சொல்லித் தருவதற்குத் தந்தை. மலையாளத்தில் கத்தோலிக்கத் துறவியும் father/அச்சன் என்று சொல்லப் படுவது இப்படித்தான். அதே போல ஆசிரியராய், படித்தவராய், அறிவை ஆள்பவராய், ஊரில் நல்லது கெட்டது பற்றி மக்களை நல்வழிப்படுத்துவராய் இருந்தவரும் அந்தணர் என்று தமிழில் சொல்லப் படுகிறார். கல்வி அச்சன்களே ஆசான்களாக மலையாளத்தில் அறியப் படுகிறார்கள். ஆசான் என்பவன் சங்கத வழக்கப் படி ரகர, யகரச் சேர்க்கையில் ஆச்சார்யன் ஆவான். மீண்டும் தமிழ்ப்படுத்தி ஆசிரியன் ஆவான். (மலையாள, கன்னட இன்னும் மற்ற தமிழிய மரபுகளை ஒதுக்கிவிட்டுப் பழந்தமிழ் மரபுகளை மீட்டெடுக்க முடியாது.)

தமிழ்நாட்டில் அந்தணர்/அறிவராய் இருந்தவர் ஒரு சில இடங்களில் ஓதுவாராயும், இன்னும் சில இடங்களில் வெவ்வேறு தொழில் தெரிந்தவராயும் மாறிப் போனார்கள். இன்னும் சிலர் பார்ப்பனருக்குள்ளேயே கரைந்தும் (குறிப்பாக சிவாச்சாரியார்கள் / ஆதி சைவர்கள் / சோழியர் எனச் சில கூட்டத்தார்) போயிருக்கலாம். ஆனால் ஆழப் பார்த்தால் இப்படி ஒரு குடியினர் இருந்தது நன்றாகவே புலப்படுகிறது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் திண்ணைப் பள்ளிக்கூடம் என்ற மரபோடு அந்தணர் என்பவர் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள்.

எப்படிச் சமணத்துறவிகளோடு பள்ளிக்கூடம் என்ற சொல் தொடர்பு கொண்டதோ அதே போன்றது இது. இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எழுத்தும் எண்ணும் அல்லாது இலக்கியம், இலக்கணம், நீதிநெறி, கலைகள் ஆகியவற்றைக் கற்றுத் தந்த காலம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அவற்றின் மிச்ச சொச்சங்களை இன்னும் தென்குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் பார்க்கிறோம். வர்மக்கலை, களரிப்பயிற்று, சிலம்பாட்டம் இன்னும் இவற்றைப் போல் பிறவும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இது ஏன் என்று பின்னால் விளக்குகிறேன்.

இனி திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய என்னுடைய பட்டறிவை அடுத்த மடலில் சொல்ல முற்படுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ӾĢø ¾¢ñ¨½ ±ýÈ¡ø ±ýɦÅýÚ À¡÷ô§À¡õ.

¿¡ðÎô ÒÈí¸Ç¢ø ÌÈ¢ôÀ¡¸ò ¦¾ý¾Á¢ú¿¡ðÊø ÌÊ¢ÕìÌõ ţΠ±ýÀÐ Å¡Éò¨¾ô À¡÷ò¾ ´Õ ÓüÈõ; ÓüÈò¨¾î ÍüÈ¢Öõ ´Õ ÅÇ×; ÅÇÅ¢ø ÀÄ àñ¸û. ÅÇÅ¢ø àñ¸Ç¢ý §Áø ´Õ ¾¡úÅ¡Ãõ. þýÛõ ÅǨÅî ÍüÈ¢î º¢Ä «¨È¸û (þ¨ÅÔõ º¢Ä Á¡Åð¼í¸Ç¢ø ţθû ±ý§È Ü¼î ¦º¡øÄô ¦ÀÚõ.) ÅÇÅ¢üÌõ ÓýÉ¡ø À𼡨Ä; ÅÇÅ¢üÌô À¢ýÉ¡ø þÃñ¼¡õ ¸ðÎ; («ÎôÀÊ ±ýÀÐ þÃñ¼¡õ ¸ðÊø þÕìÌõ.) À𼡨Ä, ÅÇ× þÃñ¨¼Ôõ ãÎÅÐ §À¡ø §¾ì¸¡ø ¬É Å£ðÊý ¸Éò¾ ¦ÀÕí¸¾× þÕìÌõ. ¦ÀÕí¸¾Å¢üÌõ ÓýÉ¡ø Å£ðÊý Ó¸ôÀ¢ø ¾¢ñ¨½ þÕìÌõ. ¾¢ñ¨½ìÌõ ÓýÉ¡ø ¦ÅÇ¢ÓüÈõ; «¾üÌõ ÓýÉ¡ø Å¡ºø. Å¡ºÖìÌ ÓýÉ¡ø ¦¾Õ «øÄРţ¾¢. ¾¢ñ¨½ ±ýÀРţðÊüÌû þÕôÀÅ÷¸ÙìÌ ÁðÎÁøÄ¡Ð ÅóÐ §À¡Ìõ ¦ÅǢ¡ð¸û, Å¢Õó¾¢ÉÕìÌõ ¯ûÇÐ ¾¡ý.

þí§¸ ¿¡ý Ţâò¾¢ÕìÌõ «¼× (design) Üðʧ¡, ̨È󧾡, ¦ºøÅ¿¢¨ÄìÌò ¾ì¸ Á¡ÚÀÎõ. ¦ÀÕõÀ¡Öõ ¸¡Å¢Ã¢ ¬üÈ¢üÌò ¦¾ü§¸ ¯ûÇ Å£Î¸û §Á§Ä ¦º¡ýÉ ÜڸǢý ´Õº¢ÄÅü¨È¡ÅÐ ¦¸¡ñÊÕìÌõ. ¾Á¢ú¿¡ðΠţθǢý «¨Áô¨À ¬Ã¡öóÐ ´Õ ¸ðʼŢÂÄ¡÷ ¸ðΨà À¨¼ôÀÐ ¿ÄÁ¡ö þÕìÌõ. «Ð ±ýÉ Ì¨È§Â¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä, «ôÀÊ ±øÄ¡õ ¦ºöžüÌ Â¡Õõ ÓýÅà Á¡ð§¼ý ±ý¸¢È¡÷¸û. ¿õ ±ò¾¨É§Â¡ ÁÃÒ¸¨Çò ¦¾¡¨ÄòÐì ¦¸¡ñÊÕôÀ¾¢ø þÐ×õ ´ýÚ.

ÅÇ× ±ýÀРŢơ ¿¡ð¸û ¾Å¢÷òÐ ÁüÈ ¿¡ð¸Ç¢ø Å£ð¼¡ÕìÌõ, Á¢¸ ¦¿Õí¸¢Â ¦ÅǢ¡ð¸ÙìÌ ÁðΧÁ ¯ûÇÐ. ÅÇÅ¢üÌû ÁüÈÅ÷¸û ºð¦¼ýÚ Ñ¨Æ Á¡ð¼¡÷¸û. ¾¢ñ¨½ ±ýÀР¡÷ §ÅñÎÁ¡É¡Öõ ÅÃì ÜÊÂÐ. (¸¢ð¼ò¾ð¼ þó¾ì ¸¡Ä drawing room §À¡Ä «¾¨Éô ÒÆí¸¢ì ¦¸¡ûÅ¡÷¸û.) ¾¢ñ¨½Â¢ø º¡öóЦ¸¡ûÇ ÍŧáΠͨ¾Â¡ø ¬É ¾¢ñÎ þÕìÌõ. Å£ðÊý ¾¨ÄÅ÷ ¦ÀÕõÀ¡Öõ À¸ø §¿Ãò¾¢ø ¾¢ñÊø º¡öó¾ Åñ½õ ¦ÅüÈ¢¨Äî ¦ºøÄò§¾¡Î ¯ð¸¡÷óÐ þÕôÀ¡÷. Åէš÷, §À¡§Å¡÷ «Å§Ã¡Î ¯¨Ã¡ÎÅÐ «í§¸ ¾¡ý.

þÐ §À¡ýÈ Å£Î¸û Óý§É ¦º¡ýÉÐ §À¡ø ¦ºøÅ ¿¢¨ÄìÌò ¾ì¸ ŢâóÐõ ÍÕí¸¢Ôõ þÕó¾É. °Ã¢ø ¬º¢Ã¢Â÷ Å£ðÊÖõ ¾¢ñ¨½¸û þÕó¾É. þó¾ò ¾¢ñ¨½¸Ç¢ø ¬º¢Ã¢Â÷¸û ÀûÇ¢ì Ü¼í¸¨Ç ¨ÅòÐ þÕó¾É÷. ¾¢ñ¨½Ôõ ¦ÅÇ¢ÓüÈÓõ ¸¨Ä¸û ÁüÚõ ÀÊôÀ¢üÌô §À¡ÐÁ¡É¾¡ö þÕó¾É. ´Õ º¢üê÷ ±ýÀ¾¢ø 20, 30 Á¡½¡ì¸÷ þÕôÀ§¾ «Ã¢Ð. «ÅÕìÌ þó¾ þ¼õ §À¡Ðõ. ¦Åù§ÅÚ «¸¨Å¢ø þÕó¾ Á¡½ÅÕìÌ ´§Ã ¬º¢Ã¢Â÷ Àø§ÅÚ À¡¼í¸¨Çî ¦º¡øÄ¢ Åó¾¡÷.

þó¾ô ÀûÇ¢ìܼí¸Ç¢ø ¬º¢Ã¢Âáö þÕó¾Å÷¸û «ó¾½÷ «øÄÐ «È¢Å÷ ±ýÀÅ÷ ¬Å÷. («È¢Å÷ ±ýÀŨà ÌÁâ¢ø ÅûÙÅ÷ ±ýÀ¡÷¸û; ¾¢ÕìÌÈû ¬º¢Ã¢ÂÕõ þôÀÊ ´Õ ÌÊ¢ø Åó¾Å÷ ¾¡ý. ÅûÙÅ÷ ±ýÀÐ «ÅÕ¨¼Â þÂü¦ÀÂÃøÄ. «Ð ´Õ ÌÊô¦ÀÂ÷; ¸¢ð¼ò¾ð¼ ¬º¢Ã¢Â÷ - scholar ±ý§È ¿¡õ ÅÆ츢ø ¦À¡Õû ¦¸¡ûÇ §ÅñÎõ.) «ó¾½÷/«È¢Å÷ (scholar) ¾¡ý ´Õ °Ã¢ø ¯ûÇ À¢û¨Ç¸ÙìÌô À¡¼õ ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀÅ÷¸û. þó¾ ¬º¢Ã¢Â÷¸û ¦ÀÕÁ¡Éáö (À¢Ã¡Á½Ã¡ö) þÕì¸ §ÅñÊ §¾¨Å¢ø¨Ä. À¡÷ôÀÉ÷ «øÄ¡§¾¡Õõ «ó¾½÷/«È¢Å÷ ¾¡ý. ÀÆó¾Á¢úô À¡¼ø¸¨Çî ºÃ¢Â¡¸ô ÒâóÐ ¦¸¡ûÇ¡¾ ¸¡Ã½ò¾¡ø º¢ÄÕìÌ þó¾ì ÌÆôÀõ ²üÀðÎ, «ó¾½÷ ±ýÈ¡ø À¡÷ôÀÉ÷ ±ýÚ ¦º¡øÄ ÓüÀð¼¡÷¸û. «ó¾½ÕìÌû º¢Ä À¡÷ôÀÉ÷ þÕì¸Ä¡õ. ¬É¡ø, À¡÷ôÀÉ÷ ±ø§Ä¡Õ§Á «ó¾½÷ ±ýÈ ¦º¡øÖìÌ þ¨½Â¡ÉÅ÷ «øÄ÷. (À¡÷ôÀÉ÷ ±ýÈ ¦º¡øÄ¢ý À¢Èô¨À þíÌ ¦º¡øÄ ÓüÀ¼Å¢ø¨Ä.)

þÉ¢ «ó¾½÷ ±ýÈ ¦º¡øÄ¢ý À¢Èô¨Àô À¡÷ô§À¡õ. «ó¨¾ ±ýÀ¾üÌ «ôÀý ±ý§È ¦À¡Õû ¯ñÎ ±ýÚ ÒÄÅ÷ þÇíÌÁÃý ¬úó¾ Å¢Çì¸ò§¾¡Î ¿¢ÚŢ¢Õ츢ȡ÷. (¾õ+«ó¨¾>¾Áó¨¾>¾¸ó¨¾>¾ó¨¾ ±ýÈ ÅÇ÷ ¾õ+«ôÀý>¾ÁôÀý>¾¸ôÀý ±ýÀ¨¾ô§À¡Ä.) «ó¨¾ ±ýÈ ¦º¡ø §ÅÚ ´Õ ®Ú ¦ÀüÚ «ó¾ý ±ýÚõ ¬¸ ÓÊÔõ. þÐ «ò¾ý>«îºý ±ýÈ ¦º¡ü¸§Ç¡Î ¦ÁøÄ¢Âø þ¨½ ¦¸¡ñ¼Ð. ³Âý ±ýÀÐõ ¾Á¢Æ¢ø «ôÀý ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûÙõ. ³ÂÉ¢ø þÕóÐ À½¢× ¸¡Ã½Á¡ö ³ÂÉ¡÷ ±ýÈ ¦º¡ø À¢ÈôÀÐ §À¡ø «ó¾É¢ø þÕóÐ Á⡨¾ ¸Õ¾¢ô À¢Èó¾ ¦º¡ø «ó¾É÷. þ¾¢ø ɸÃõ ¾¢Ã¢óÐ «ó¾½÷ ±ýÚ ¬Ìõ. «ó¾ý>«ó¾É÷>«ó¾½÷. «õ+¾½÷ ±ýÚ ÅÄ¢óÐ À¢Ã¢òÐô ¦À¡Õû ¦¸¡ûŦ¾øÄ¡õ ºí¸¾ ӨȢø ¾Á¢úî ¦º¡ø¨Äì ̾ÚÅÐ ¬Ìõ.

¦À¡ÐÅ¡¸ ´Õ ÌÓ¸ò¾¢ø ¬º¢Ã¢Â÷ ±ýÀÅÕõ ¾ó¨¾Â¢ý þ¼ò¾¢ø ¨ÅòÐ §À¡üÈô Àθ¢È¡÷. þÅ÷ ¸øÅ¢ìÌ, ÀÊôÀ¢üÌ, ÀñÀ¡Î ¦º¡øÄ¢ò ¾ÕžüÌò ¾ó¨¾. Á¨Ä¡Çò¾¢ø ¸ò§¾¡Ä¢ì¸ò ÐÈÅ¢Ôõ father/«îºý ±ýÚ ¦º¡øÄô ÀÎÅÐ þôÀÊò¾¡ý. «§¾ §À¡Ä ¬º¢Ã¢Âáö, ÀÊò¾Åáö, «È¢¨Å ¬ûÀÅáö, °Ã¢ø ¿øÄÐ ¦¸ð¼Ð ÀüÈ¢ Áì¸¨Ç ¿øÅÆ¢ôÀÎòÐÅáö þÕó¾ÅÕõ «ó¾½÷ ±ýÚ ¾Á¢Æ¢ø ¦º¡øÄô Àθ¢È¡÷. ¸øÅ¢ «îºý¸§Ç ¬º¡ý¸Ç¡¸ Á¨Ä¡Çò¾¢ø «È¢Âô Àθ¢È¡÷¸û. ¬º¡ý ±ýÀÅý ºí¸¾ ÅÆì¸ô ÀÊ Ã¸Ã, ¸Ãî §º÷쨸¢ø ¬îº¡÷Âý ¬Å¡ý. Á£ñÎõ ¾Á¢úôÀÎò¾¢ ¬º¢Ã¢Âý ¬Å¡ý. (Á¨Ä¡Ç, ¸ýɼ þýÛõ ÁüÈ ¾Á¢Æ¢Â ÁÃÒ¸¨Ç ´Ð츢ŢðÎô ÀÆó¾Á¢ú ÁÃÒ¸¨Ç Á£ð¦¼Îì¸ ÓÊ¡Ð.)

¾Á¢ú¿¡ðÊø «ó¾½÷/«È¢Åáö þÕó¾Å÷ ´Õ º¢Ä þ¼í¸Ç¢ø µÐšáÔõ, þýÛõ º¢Ä þ¼í¸Ç¢ø ¦Åù§ÅÚ ¦¾¡Æ¢ø ¦¾Ã¢ó¾ÅáÔõ Á¡È¢ô §À¡É¡÷¸û. þýÛõ º¢Ä÷ À¡÷ôÀÉÕìÌû§Ç§Â ¸¨ÃóÐõ (ÌÈ¢ôÀ¡¸ º¢Å¡îº¡Ã¢Â¡÷¸û / ¬¾¢ ¨ºÅ÷¸û / §º¡Æ¢Â÷ ±Éî º¢Ä Üð¼ò¾¡÷) §À¡Â¢Õì¸Ä¡õ. ¬É¡ø ¬Æô À¡÷ò¾¡ø þôÀÊ ´Õ ÌÊ¢É÷ þÕó¾Ð ¿ýÈ¡¸§Å ÒÄôÀθ¢ÈÐ. þ¨¾ ²ý ¦º¡øÖ¸¢§Èý ±ýÈ¡ø ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ ±ýÈ ÁçÀ¡Î «ó¾½÷ ±ýÀÅ÷ À¢ýÉ¢ô À¢¨½óÐ þÕ츢ȡ÷¸û.

±ôÀÊî ºÁ½òÐÈÅ¢¸§Ç¡Î ÀûÇ¢ìܼõ ±ýÈ ¦º¡ø ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼§¾¡ «§¾ §À¡ýÈÐ þÐ. þó¾ò ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼí¸û ±ØòÐõ ±ñÏõ «øÄ¡Ð þÄ츢Âõ, þÄ츽õ, ¿£¾¢¦¿È¢, ¸¨Ä¸û ¬¸¢ÂÅü¨Èì ¸üÚò ¾ó¾ ¸¡Äõ ´ýÚ þÕó¾¢Õì¸ §ÅñÎõ. «ÅüÈ¢ý Á¢îº ¦º¡îºí¸¨Ç þýÛõ ¦¾ýÌÁâ Á¡Åð¼ò¾¢Öõ, §¸ÃÇò¾¢Öõ À¡÷츢§È¡õ. Å÷Á츨Ä, ¸ÇâôÀ¢üÚ, º¢ÄõÀ¡ð¼õ þýÛõ þÅü¨Èô §À¡ø À¢È×õ ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡Îì¸ô ÀðÊÕì¸ §ÅñÎõ. þÐ ²ý ±ýÚ À¢ýÉ¡ø Å¢Çì̸¢§Èý.

þÉ¢ ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ ÀüȢ ±ýÛ¨¼Â Àð¼È¢¨Å «Îò¾ Á¼Ä¢ø ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

7 comments:

Kasi Arumugam said...

கொங்கு நாட்டு ஊர்ப்புறங்களில் இப்படியான வடிவத்தில் வெகு சில வீடுகளே இருந்தன. ஆனால் 'வளவு' என்பது மிக அதிகமாக புழங்கப்பட்ட சொல். ஆனால் அது வேறு பொருளிலாயிற்றே! ஒரு சாதியினர் கூட்டாக வசிக்கும் (காலனி போல) பகுதிக்கு வளவு என்பது பெயர். அதிலும் ஆதிக்க சாதியினர் வசிப்பிடத்தைவிட அவர்களுக்குப் பணிசெய்யும் சாதியினர் வசிக்குமிடங்களுக்கே இது அதிகம் பொருந்தும்.

இராம.கி said...

ÅÇ× ±ýÈ ¦º¡ø ±í¸û Àì¸ ÅÆì¸ô ÀÊ, ´ÕÅ£ðÊø Àí¸¡Ç¢¸û («ö¡ì¸û Å£ðÎô Àí¸¡Ç¢¸û ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û.) Å¡Øõ ÜðÎÁ¨É; «§¾ ¦À¡ØÐ º¢Ä þ¼¹¸Ç¢ø «Ð ÜðÎÁ¨É¡¸ ÁðΧÁ þÕì¸ò §¾¨Å¢ø¨Ä. ÜðÎ °Ã¡¸×õ þÕì¸Ä¡õ; ¸¡ð¼¡¸, ÁШà §ÁÖ÷ÕìÌ «Õ¸¢ø ¸£Æ ÅÇ× (¾¡úò¾ôÀ𧼡÷ ¦¸¡¨ÄÔüÈ ¦¸¡Î¨Á ¿¢¨ÉÅ¢Õ츢Ⱦ¡?) ±ýÈ °÷ ¯ñ§¼? ¿£í¸û ¦º¡øÖÅЧÀ¡ø ´Õ °Ã¢ý À̾¢¨ÂÔõ (ÌÈ¢ôÀ¡ö ´Õ º¡Ã¡÷ ź¢ìÌõ À̾¢¨ÂÔõ) ÌÈ¢ì¸Ä¡õ. ¾Á¢ú¿¡ðÊø þôÀÊô ÀĦº¡ü¸û ¦¿Õí¸¢Â ¿¢¨Ä¢ø «§¾ ¦À¡ØÐ Åð¼¡Ãò¾¢üÌ Åð¼¡Ãõ º¢È¢Ð Å¢¾ôÀ¡É ¦À¡ÕÇ¢ø ÒÆí̸¢ýÈÉ. ¿õ¨Áô §À¡ý§È¡÷ «¨¾ô À¾¢× ¦ºö¾¡ø ¾¡ý ±¾¢÷¸¡Äò¾¢ý «ÅüÈ¢ý Åð¼¡Ãô ¦À¡Õû Å¢ÇíÌõ. ¿¡õ þýÛõ ¦Á¡Æ¢¨Âî ºÃ¢Â¡¸ô À¾¢× ¦ºö§¾¡õ þø¨Ä.

இராதாகிருஷ்ணன் said...

"அது என்ன குறையோ தெரியவில்லை, அப்படி எல்லாம் செய்வதற்கு யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்கள்". தமிழில் எழுத்தாளர் என்றாலே பெரும்பாலும் கதை, கவிதை எழுதுபவராகத்தான் இருக்கிறார்கள். பல்துறை விஷயங்களைப் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் கட்டுரைகள் கொஞ்சமாகவே வருகின்றன. தற்காலங்களில் இணையத்தின் வாயிலாக முன்னேற்றம் தெரிகிறது. குமுகத்திலும் (குமுகம், சமூகம் என்ற சொல்லிற்கான நல்ல தமிழ்ச் சொல்லா இது?) யாருக்கும் பெரிதாக அக்கறையில்லாத நிலையே தொடர்கிறது.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

காசி, கொங்கு நாட்டில் வழங்கப்படுவதாய் நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், எனக்குத் தெரிந்து ஆதிக்கம் செலுத்தப்படும் சாதிகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்ட "வளவு" அதே ஊரில் பிற இடங்களைக் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நடுவளவு, மச்சூட்டு (மச்சு வீட்டு) வளவு, வடக்கு வளவு என்று. நானறிந்தவரையில் இவை ஒரு நாலைந்து வீடுகளின் தொகுப்பாய் இருக்கும். அவற்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் இருப்பர்.

இராம.கி said...

«ýÀ¢üÌâ þᾡ¸¢Õðʽý,

ÌõÓ¾ø ±ýÀÐ Üξø ±ýÈ ¦À¡Õû¦¸¡ñ¼ Å¢¨É¡ø. ¸¸Ãõ º¸ÃÁ¡¸ Á¡Ú¾ø ¾Á¢ØìÌõ ¯ûÇ ÀÆì¸õ ¾¡ý (¨¸>¦ºö>¦ºö¾ø) ±ýÈ¡Öõ, «Ð Å¢¾ôÀ¡¸ ż¦Á¡Æ¢Â¢ø Á¢Ì¾¢Â¡¸ ¯ñÎ. ÌõӾĢý À¢ÈÅ¢¨É¡ø ÌÓì̾ø(=Üðξø); ÌÓìÌ ±ýÈ¡§Ä Üð¼õ, ¦Á¡ò¾õ ±ýÈ ¦À¡ÕðÀ¡Î¸û ¯ñÎ. ÌõÁø, ÌõÀø, ÌõÒ, ÌõÀ¢, ÌõÀõ ±ýÀÐ ±øÄ¡§Á Üð¼õ ¾¡ý. ÌõÀ¢Î¾ø ±ýÀÐ ¨¸¸û ÜÊ ÅÕÅÐ. ÌõӾĢý ¾¢Ã¢× ÌÁ¢¾ø, ÌÅ¢¾ø §À¡ýȨÅ. ÌõӾĢý ż¦Á¡Æ¢ò ¾¢Ã¢× ºõ ±ýÚ ¬¸¢ Óý¦É¡ð¼¡¸§Å ÒÆíÌõ. ¦ÀÕõÀ¡Ä¡É §Á¨Ä ¦Á¡Æ¢¸Ç¢Öõ þÐ þÕ츢ÈÐ. ¿¡ý þРӾĢø Åó¾Ð, «Ð À¢ýÉ¡ø Åó¾Ð ±ýÚ ¦º¡øÄ ÓüÀ¼Å¢ø¨Ä. ±ýÛ¨¼Â ¸½¢ôÀ¢ø þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸Ùõ, ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸Ùõ ±í§¸¡ ¦¸¡ÊÅÆ¢ ¯Èר¼Â¨Å. þó¾ ¯È¨Åô À¢ýɽ¢Â¢ø §¾Ê, ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø ¯ûÇ þ¨½î¦º¡ü¸¨Ç þÉí ¸¡½ ÓÂø¸¢§Èý.

ºã¸õ ±ýÈ ¾¢Ã¢×¡øÖìÌ ¯Ã¢Â ¾Á¢ú °üÚ¡ø ÌÓ¸õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

இராதாகிருஷ்ணன் said...

விளக்கத்திற்கு நன்றி ஐயா!

Anonymous said...

«ýÒûÇ ¸¢ðÎ «ñ½ý,
¯í¸û þΨ¸¸¨Çô ÀÊôÀ¾ü¸¡¸ «îºÊòÐ ¨Åò¾¢Õ츢§Èý. þÃñ¦¼¡ýÚ ÀÊò§¾ý. ºã¸ò¨¾ì ÌÓ¸õ ±ýÚ À¡Å¡½÷, ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ÅÆ¢ º¢Ä ÒÆì¸í¸Ç¢ø «È¢§Å§ÉÂýÈ¢ «¾ý §Å÷ãÄõ þýɦ¾ýÚ «È¢ó¾¢§Äý. þýÚ «È¢óЦ¸¡ñ§¼ý. þÂÖõ§À¡Ð ±Øи¢§Èý. ºó¾¢ìÌõ§À¡Ð ¯¨Ã¡θ¢§Èý.
Žì¸õ.
¬ÚÓ¸ò¾Á¢Æý