உடம்புத் தசைகளின் பயன்பாட்டில், பல்வேறு எலும்பியக்கங்களை செயற்படுத்துவதும் ஒன்றாகும். மூளை, நரம்புகள், தசைகள், எலும்புகள் என்ற உறுபுகளின் வழி இந்த இயக்கங்கள் நடைபெறும். சில போது முறையிலா இயக்கத்தால் ஒன்றிற்கொன்றான நரம்புகள், தசைகள் போன்றவை பிசகிக் கொள்ளும் போது (பிறழ்ச்சி ஆகும்போது) வலி எழும்புவதையும், குறிப்பிட்ட இயக்கத்தை மேற்கொண்டு செய்ய முடியாதது போலதும் கூட நடக்கலாம். மொத்தத்தில் நடக்கவேண்டிய இயக்கம் நடக்கமுடியாது போவதைத் தான் நரம்பு/தசைச் சுளுக்கு என்பார். சுளுக்குப் பிடித்தல் என்றும் சொல்வார். இச் சுளுக்கைச் சரியாக்குவதில் தான் massage எனும் மருத்துவ நடைமுறை வருகிறது. சுளுக்கு எடுத்தல் என்றும், சுளுக்கு வழித்தல் என்றும், சுளுக்கு உருவுதல் என்றும், தசைகளை நெகிழ்த்தி விடுதல் என்றும் இம்முயற்சியைச் சொல்வார்.
சுல்>சுழு>சுளு சுளுக்கு< சுருக்கு/நரம்பு பிசகுதல்
அடுத்து, உருகு(/வு)-தல் (தன்வினை) = இளகுதல், நெகிழ்தல். சுளுக்குப் பாய்ந்தவிடத்தை விரல்களால் அழுத்தி மெதுவாய் நெகிழ்த்தி விடுதல், A gentle movement of the affected part by someone else pressing with fingers and drawing the hand down a number of times, paasive movement.
உருக்கு-தல் (பிறவினை) = இளகிவிழச் செய்தல், மனம்நெகிழ்த்தல்
உருவுகை (தொழிற்பெயர்) = சுளுக்கு முதலியவற்றைப் போக்கத் தடவுதல், to massage, draw the hand down over a sprained part of the body.
இன்னொரு விதமாய், தன்வினையில் நெகிழ்(வு)-தல்> நெகுழ்(வு)-தல்> நெகு(வு)-தல்> நிகு(வு) -தல்> நீவு-தல் என்றாகும். அதுவே பிறவினையில், நெகிழ்(வி)-த்தல்> நெகுழ்(வி)-த்தல்> நெகு(வி)-த்தல்> நிகு(வி)-த்தல்> நீவி-த்தல் என்றுமாகும்.
இன்னொரு விதமாய் நெகிழ்(வி)-த்தல் என்பதில் விகரம் ஒதுக்கி நெகிழ்த்துகை என்றும் இதைச் சொல்லலாம்.
நெகிழ்த்துகை = massage
No comments:
Post a Comment