Sunday, October 13, 2024

stratamolite = தட்டமக் கல்

 இந்தச் சொல் stratum எனும் ஆங்கிலச்சொல்லோடு தொடர்புற்றது. இதற்கு "horizontal layer," 1590s, from Modern Latin special use of Latin stratum "thing spread out, coverlet, bedspread, horse-blanket; pavement," noun uses of neuter of stratus "prostrate, prone," past participle of sternere "to spread out, lay down, stretch out," from nasalized form of PIE root *stere- "to spread” என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் விளக்கஞ் சொல்வர். 

stratum என்பதோடு ”தட்டம்” தொடர்புள்ளது. தட்டிற் பெரியது தட்டம். சில மண்ணடுக்குகளும், கல்லடுக்குகளும் தட்டுத் தட்டாய்த் தோற்றங் காணும். அத்தோற்றம் வெவ்வேறு வகையில் ஏற்படலாம். இங்கே இது செந்நீலப் பட்டுயிரியால் (cayanobacteria) ஏற்படுகிறது. இதை வெறும் உயிர்வேதியற் சொல்லாய்ப் பாராது பொதுவாய்க் காண்பது நல்லது. 

தட்டத்தின்  மேல் சில இயல்திரிவு விதிகளைப் பொருத்திப் பார்த்தால், தமிழியம், இந்தையிரோப்பியம் ஆகிய இருவேறு மொழிக்குடும்பங்களின் ஊடே இருக்கும் இணைப்புப் புரியும். ”தட்டத்தில்” முதலில் வரும் தகரத்துள் ரகரவொலி நுழைத்தால், ’த’ என்பது ‘த்ர’ என்றாகும். ’த்ர’ நெடிலாகின், ’த்ரா’ ஆகும். முடிவில் ஸகர ஒலியை முன்னே சேர்த்தால், தட்டம்> த்ரட்டம்> த்ராட்டம்> ஸ்த்ராட்டம் = stratum என்றாகும். இதே விதிகள் எல்லாத் தமிழ்ச் சொற்களிலும் கையாளப் படுவதாய் நான் சொல்லவில்லை. மேலும்,”ஒரு மொழியின் திரிவாக இன்னொன்று அமைந்தது” என்றுஞ் சொல்லவில்லை. ”ஒரு மொழிக்குடும்பச் சொல்லுக்கும் இன்னொரு மொழிக்குடும்பச் சொல்லுக்கும் இடையில் வரும் இணைப்பைக் கண்டுபிடிக்க இதுபோன்ற விதிகள் பயனாகும்” என்று மட்டுமே சொல்கிறேன். 

பல்வேறு இந்தையிரோப்பியச் சொற்களையும், அதே பொருள் கொண்ட தமிழ்ச் சொற்களையும் ஒப்பிட்டுச் சில விதிகளைப் பட்டியலிட்டு வைத்துள்ளேன். அவற்றில் எது இங்கு பொருந்துமெனப் பார்க்கிறேன். உள்ளிருக்கும் தமிழ்ச் சொல்லை பெரும்பாலும் அடையாளங் காண முடிகிறது. சிக்கல் தருஞ் சொற்களைத் தனியாக வைத்து வேறு புதிய வகைப்பாடு இருக்கிறதா என்றுங் கற்றுக் கொள்கிறேன். இத்தகைய “செய்து பார்த்துச் சரி செய்யும்” முறையை நான் பயன்படுத்துவது கண்டே, அதை ஏற்காதவர் “நான் ஏதோ ஆங்கில ஒலிப்பில் சொற்கள் படைப்பதாய்” முரண் கொள்கிறார். 

வரலாற்று மொழியியலில் (historical linguistics) நான் செய்வது ஓர் அடிப்படை வேலை. ஒரு மொழிக் குடும்பத்திற்கும், இன்னொரு மொழிக் குடும்பத்திற்கும் இடையே சீரிய ஒழுங்குகள் இருக்கின்றனவா என்று அவதானிக்கிறோம். ஓர் அறிவியலாளன் என்பவன் இதைத்தான் செய்யமுடியும். நானும் அப்படித் தான் அணுகுகிறேன். இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் தமிழிய மொழிக் குடும்பத்திற்கும் உறவிருப்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். stratamo- என்பதிலும் இது இருக்கிறது. ஆயினும் என் மேற் பழி சொல்வது தொடர்கிறது. என்றிதற்கு விடிவு வருமோ? தெரியவில்லை. இனி இச் சொல்லுக்கு வருவோம்.   

stratum = தட்டம் என்றால், strata = தட்டங்கள் என்றும், stratify = தட்டாக்கு என்றுமாகும். stratum என்பதை முன்னொட்டாக மாற்றுகையில் strati-, strato-, stratamo- என்று 3 விதமாய் ஆங்கிலம் பயன் கொள்ளும். நாமும், தட்டய, தட்டக, தட்டம என்று 3 வகையில் நுணுகிய வேறுபாட்டைக் கொண்டு வரலாம். stratigraphy = தட்டய வரைவியல் அல்லது தட்டயக் கிறுவியல்; stratification = தட்டயவாக்கம் என்றும், stratocracy = தட்டக ஆட்சி, strato-cumulus = தட்டகக் குமியல், stratography = தட்டக வரைவியல் அல்லது தட்டகக் கிறுவியல், stratosphere = தட்டகக் கோளம், stratovolcano = தட்டக எரிமலை- என்றுஞ் சொல்லலாம். முடிவாக stratamo- = தட்டம- என்பதோடு கூட்டுச் சொல்லாக்க lite என்ற சொல்லைச் சேர்ப்பார். இது lithos என்ற கிரேக்கச் சொல்லின் இன்னொரு வடிவம் இதன் பொருள் கல் என்பதே. எனவே stratamolite என்பதைத் தட்டமக் கல் என்றே சொல்லலாம்.

அன்புடன்,

இராம.கி.   


Friday, June 21, 2024

பாவாணரும், குமரிக்கண்டமும்

 பாவணரை நான் பெரிதும் மதித்தவன். அவரை என் மொழியியல் வழிகாட்டியாய்க் கொண்டவன். இருந்தாலும் அவரை வழிபாடு செய்பவன் அல்லன். அவர் தவறிய இடங்கள் மிகப்பல. அவற்றில் ஒன்று இந்தக் குமரிக்கணடம். இன்னொன்று ”தமிழ் உலக முதன்மொழி” என்றது.


அவர் காலத்தில் இருந்த கடல்கிறுவியல் (oceanography) செய்திகளை, குறிப்பாக 1940 க்கு அப்புறம் வந்த செய்திகளை, அவர் அறியவில்லை. அப்போது கடல் ஆழம் பற்றிய விவரங்கள் யாருக்குமே தெரியாது. அவை 1950 களில் தான் வெளிப்பட்டன. மேலே கொடுக்கப்பட்ட படம், 1950 க்கு அப்புறமும், அதற்கு மேலும் நுண்மைப்பட்ட கடலியல் செய்திகளைக் கொண்டு உருவானது. எப்படிப் பார்த்தாலும், (அதை ஓரிடுகையில் சொல்லமுடியாது. ஒரு நூலே எழுத வேண்டும். குமரிக்கண்டம் பேசுகிறவர் எந்த அறிவியல் ஆதாரமும் தராமலேயே, வெறும் இலக்கியக் கூற்றையும், வழிபாட்டின் வழி தான் சார்ந்த அரசியல் கூற்றுக்களையுமே சொல்கிறார்.) Oceanography பற்றி அவர் எதுவுமே சொல்வதில்லை. அறிவியல் செய்திகளை ஒன்றுசேர்த்து ஆய்ந்தால் இற்றைக் குமரி முனைக்குக் கீழே ஒரு கண்டம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. வேறு கருத்து உள்ளவராய் நீங்கள் இருந்தால் ஆதாரம் கொடுங்கள், அவர், இவர் என்று பெரிய, பெரிய ஆளுமைகளின் பெயரைச் சொல்லாதீர்கள். Quoting names is not a scientific method.

எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்தவரில்லை. அது கடவுளுக்கு மட்டுமே முடியும். ஓர் அறிஞர் சொன்னவற்றில் எது சரி என்று அறிவியல்  அலசிப் பார்க்கிறது. எதை ஏற்க முடியுமோ, அதை ஏற்கிறது. அல்லாதவற்றை அது ஒதுக்குகிறது. அதற்காக குறிப்பிட்ட அறிஞர் செய்தவற்றின் புகழ் குறையாது.

உலகப்புகழ் பெற்ற ஐசக் நியுட்டனின் விதிகளை நம்பி உலகம் 150/200 ஆண்டுகள் நகர்ந்தது. பின்னால் ஐன்சுடைன் வந்து பூதியலின் (physics) அடிப்படையையே மாற்றினார். ஆனாலும் நியூட்டனின் மாகனவியலுக்கு (Newtonian mechanics) இன்றும் அரங்குண்டு. நியூட்டன் தேற்றுகள் (theories), நம் வேகம் ஒளி வேகத்திற்கு அருகில் வந்தால் மட்டுமே குழறுபடி ஆகின்றன. மற்றபடி அவர் விதிகள் குறைவேகத்தில் நன்றாகவே வேலை செய்கின்றன. எனவே தான், நியூட்டனை இன்றும் மதித்துப் பள்ளிகளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

அதுபோல் பாவாணரின் மொழிக்கொள்கை Nostratic என்பது வரை சரியாக உள்ளது. அதற்கு மேல் கட்டாயம் சிக்கல் தருகிறது. நான் பட்டறிவால் இதைச் சொல்கிறேன். அவர் மேலை மொழிகளையே பெரிதும் பார்த்தார். ஆப்பிரிக்க, அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய, சைபீரிய, ஆர்க்குடிக் மொழிகள் தொடர்பான செய்திகள் அவர்காலத்தில் அவருக்குக் கிடடவில்லை. இன்று கிட்டுகின்றன. இன்று கிடைத்த எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், ”தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று” என்று மட்டுமே சொல்லமுடியும். முதன்மொழி என இப்போதைக்குச் சொல்ல முடியாது. இன்னும் பல தரவுகள் வேண்டும். இன்னும் பல ஆண்டுகள் ஆய்வும் செய்யவேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா? உலகப் புகழ்பெற்ற நியூட்டன் பூதியலில் மட்டுமின்றி மறைமுகமாய் தாழ் உலோகத்தை (low metal) இதள் (mercury) கொண்டு பொன்னாய் மாற்ற விழையும் "இரசாயனம் / இதள்வழிச் செலுத்தம் (Alchemistry) என்ற துறையிலும் 16 ஆண்டு காலம் பணிசெய்தார். ஆனால் அக் குறிப்புகளை எங்கும் வெளியிடாமல், தானே சேர்த்து வைத்தார். இன்று அவர் பூதியலார் என்று அறியப்படுகிறார். வேதியலார் என யாராவது சொல்கிறோமா? ஒருவர் வெற்றி பெற்ற புலத்தை வைத்தே பின்னாளில் அறியப் படுவார்.

பாவாணர் மொழியாளர், அதே பொழுது வரலாற்று, முந்தை வரலாற்று ஆசிரியர், கடலாய்வாளர் இல்லை, இதைப் புரிந்து கொள்ளுங்கள். அவருக்கு அறியாத இத்துறை பற்றி அவர் சொல்வது எடுபடாது. பாவாணரை எல்லோரும் போற்றுவோம். ஆனால் அவர் எல்லாம் அறிந்தவர் என்று கொள்ளாதீர். அவர் கடவுளில்லை. பாவாணரும் கிடுக்கி (criticize) அலசப் (analyse) பட வேண்டியவரே. அவரை மதித்துக் கொண்டே தான் இப்படிச் சொல்கிறேன். நாளைக்கு நான் சொன்னவற்றைத் தூக்கியெறியவும் யாரொவொரு இளைஞன் முன்வருவான். இதை மறவாதீர்

அவருடைய மொழியியல் வழிமுறையை நானும் பின்பற்றுகிறேன். தமிழ் உலக முதன்மொழி என்று சொல்ல இன்னும் பெருந்தரவுகள் எட்டவில்லை. Nostratic பெருங்குடும்பத்தில் தமிழியம் என்பது ஒரு முகன்மையான குடும்பம் என்று சொல்லக் கட்டாயம் தரவுகள் நம்மிடம் உள்ளன. நெஞ்சை நிமிர்த்தி நாம் சொல்லலாம். மற்றவைகளுக்குக் நாம் காத்திருக்கவேண்டும்.


Friday, June 07, 2024

ஒரு சில்லின் (cell) வாழ்க்கை.

 ஒரு சில்லின் சினைகளுக்குள் முறையான ஒருங்கம் (organization) அமைந்து,

செல்லுக்குத் தேவையானவற்றை உள்ளீர்த்துச் செரித்து,

தேவையில்லாதவற்றை வெளிப்பொழியும் செரிப்பொழிவு (metabolism)

சில்லிற்குள் தொடர்ந்து நடைபெற்று,
எவ்வளவு தான் வெளிச்சூழல் மாறினும்,

சில்லுக்குள் ஒரே சூழல் அமையும்படி

சில்லின் உள்நிலைப்பைக் (homeostasis) அமைத்துக் கொண்டு,
காலத்திற்கேற்ற, வளர்ச்சி (growth) காட்டி,
,
கொடிவழிப் புதுக்கத்தை (reproduction) விடாது நடத்தி,
வெளிச்சூழலுக்கேற்ப எதிர்விளைவும் (response) காட்டி,
எவ்வெழுச்சியை (evolution) விடாது

தொடர்ந்து நடைபெற வைத்து,இருக்குமானால்,
அந்தச் சில் வாழ்கிறதென்று பொருளாகும்

Thursday, May 30, 2024

தென்கிழக்கு ஆசியரும், தமிழரும்

தென்கிழக்கு ஆசிய நாகரிகங்களோடு  தமிழர்க்குத் தொடர்புள்ளது என்பதை நானென்றும் மறுத்ததில்லை. ”அங்குள்ள கோயில்களைக் கட்டியது தமிழரே” என்று சில வரலாற்றார்வலர் தம் ஆர்வக் கோளாற்றில் சொல்வதைத் தான் நான் மறுக்கிறேன். எதிர்க்கிறேன். ”கட்டியது அவர். துணை செய்தது தமிழர்” என்றுசொல்லுங்கள். முற்று முழுதாய் நீவீர் சொல்வதை நான் ஏற்பேன். 

இப்படி ஓர் அண்ணன்காரத் தோரணையை, தென்கிழக்கு ஆசிரியர் மேல் தமிழர் கொள்வது மிகமிகத் தவறு. கம்போடிய அரசகுடும்பத்திற்கும், பல்லவ அரசகுடும்பத்திற்கும் எவ்வளவு தான் உறவு சொன்னாலும், கம்போடிய அரசரைப் பல்லவர் என்று சொல்வது மிகமிகத் தவறு.  பிள்ளை இல்லாத பங்காளிகளுக்குள் பிள்ளைகளைத் தத்துக் கொடுப்பது ஒரு காலத்தில் தமிழரிடமிருந்த மரபே. ஆனாலும் அவரவர் ”விலாசத்தை”  மதிக்க வேண்டும் என்பதை ஆழப் புரிந்துகொண்டே இம்மரபு தொடர்ந்தது. அவரின் தனித் தன்மை மறுத்து, ”மடையரான உமக்கெல்லாம் நாங்களே சொல்லித் தந்தோம்” என்பது ”கருப்பருக்கும் செவ்விந்தியருக்கும் ஒன்றும் தெரியாது, வெள்ளையர் ஆன நாங்களே அவருக்கு எல்லாம் சொல்லித் தந்தோம்” என்ற இரோப்பியர் குடியேற்ற (colonial) மனப்பாங்கு கொண்டதை ஒக்கும். 

முற்றிலும் இது பொதுக்கை (fascist) மனப்பான்மை ஆகும். இப்பான்மையோடு  தொடர்ந்து நாம் பேசினால், உலகிலுள்ள பெரும்பாலோர் நம்மை மதியார், நமக்கு ஆதரவும் தரமாட்டார். நம்மூரிலுள்ள சில தமிழ் வறட்டு வாதருக்கு இந்தச் சூதானம் என்றுதான் புரியுமோ? தெரியவில்லை.



Monday, April 08, 2024

ambulance

 ஆங்கிலச் சொற்பிறப்பியலில், amble (v.): என்பதை early 14c., from Old French ambler, of a horse or other quadruped, "go at a steady, easy pace" (12c.), from Latin ambulare "to walk, to go about, take a walk," perhaps a compound of ambi- "around" (from PIE root *ambhi- "around") and -ulare, from PIE root *el- "to go" (source also of Greek ale "wandering," alaomai "wander about;" Latvian aluot "go around or astray"). Until 1590s used only of horses or persons on horseback. Related: Ambled; ambling. என்றும், 

ambulance (n.) என்பதை, 1798, "mobile or field hospital," from French ambulance, formerly (hôpital) ambulant (17c.), literally "walking (hospital)," from Latin ambulantem (nominative ambulans), present participle of ambulare "to walk, go about" (see amble) என்றும் லிளக்கிச் சொல்வர்.

இங்கே அலைதலும், அலம்புதலுமே சொல்லுக்குள் இருக்கும் அடிப்படைக் கருத்தாகும். பிரஞ்சில் சொல்லப்படும் (hôpital) ambulant என்ற கூட்டுச் சொல்லில் இக்காலத்தில் (hôpital) என்னும் முதற்சொல் தொக்கியே நிற்கிறது. சங்கதச் சொல்லான ஜல சமுத்ரத்தில், ஜல என்று இன்று யாருஞ் சொல்வதில்லை. சமுத்ரம் என்றே சுருங்கச் சொல்கிறோம். ”நிறைந்துகிடப்பது” என்றுமட்டுமே அதற்குப் பொருள். எந்தவொரு மொழியிலும், நாட்பட்ட பயன்பாட்டில் சில சொற்கள் இப்படி அடங்கியிருப்பது இயற்கை. 

மின்சாரம் என்பதில் இன்று சாரத்தை யாருஞ் சொல்வதில்லை. தொழில் நுட்பத்தில் தொழிலைத் தொகுத்து நுட்பியலாக்கிவிட்டோம். இதேபடி, ”பண்டுவ அலம்பூர்தி” என்று சொல்லத்தொடங்கிப் பின்னாளில் ”அலம்பூர்தி” என்றுமட்டுமே சொல்லலாம். பண்டுவம் உள்ளிருப்பது புரிந்துபோகும். (வட தமிழகத்தாருக்கு மருத்துவத்திற்கும் பண்டுவத்திற்கும் வேறுபாடு தெரியாது. தென்தமிழகத்தாருக்கு பண்டுவம் மிக இயல்பான சொல். பண்டுவத்திற்கும் மருத்துவத்திற்கும் சிறிய வேறுபாடுண்டு. எங்கெல்லாம் ”சிகிச்சை” என்ற வடசொல் வருகிறதோ, அங்கெல்லாம், “பண்டுவம்” என்று சொல்லலாம். இதில் மருந்தும் மட்டும் முகன்மையல்ல. அறுப்பு, காயம், மருந்து கட்டுதல், உடல் நிலை கவனித்துக்கொள்ளுதல் என எல்லாம் சேர்ந்தது. ஆங்கிலத்தில் MBBS Medicino bachelor and Bachelor of surgery என்று இரட்டைப் பட்டம் பெறுகிறார்கள். தமிழில் அவர்கள் இளம் மருத்துவராகவும் இளம் பண்டுவராகவும் ஆவதாகவே சொல்லவேண்டும். இதை விளக்கப்போனால் நீளும். 

அலம்பூர்திக்கு முன்னொட்டாய் மருத்துவம் சொல்வது சரிவராது. 

என் பரிந்துரை: (பண்டுவ) அலம்பூர்தி. 

இன்னொரு பரிந்துரையும் உண்டு. ambulance = ஆதுலி (ஆதுலர் = மருத்துவர், மருத்துவச்சி போன்று உடல்நலம் பேண உதவுவோர். இது பெருஞ்சோழர் காலத்துக் கல்வெட்டுச் சொல். இங்கு ஆதுலி என்பதால் நகரும் ஆதுல வண்டியைக் குறிக்கிறோம்.) 

அன்புடன்,

இராம.கி.    


Sunday, April 07, 2024

வேக்கைப் பண்டங்கள்

 வேக்கைப் பண்டங்கள்

கேக்கு = கடிகு
குக்கீ = குயிக்கி
வேஃபர்கள் இன்னும் ஓர்ந்துகொண்டுள்ளேன்.
பிரஞ்சு பிரை = பிரஞ்சு வறுவல்
பீஸ்ஸா = பிட்டிகை
பாஸ்தா = பிழிகை
பர்கர் = பருகர் (இது hamburger என் சுருக்கம். ஊர்ப்பெயரை அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
சூப் = சூப்பு
சாஸ் = சவறு
பப்ஸ் = புவ்வுகள் (ஒலிக்குறிப்பில் எழுந்த சொல்.)
bakery = வேக்கை


    அங்கப் ப்ரதக்ஷணம்

    அலங்கம் என்பது அங்கமானது என்று ஆய்வின் மூலம் உணர்கிறோம். (https://valavu.blogspot.com/2018/07/organ.html)
    தக்கணம் என்ற தமிழ்ச்சொல் தக்ஷணம் என்று சங்கதத்தில் திரியும். மீண்டும் அதைக் கடன்வாங்கித் தட்சணம் என்பார். சங்கத வழக்கிற்கு மாற்றாய் நம் ஊற்றில் உருவான தக்கணத்தையே வைத்துக் கொள்ளலாம். தக்கு + அணம் = தக்கணம். தங்குதல் = கீழேயிருத்தல். தக்கு என்பது தங்கு-தலில் பிறந்த பெயர்ச்சொல். தக்கணம் = கீழே அமையும் இருப்பு. அணம் = இருப்பு என்பதைக் குறிக்கும் சொல்லாக்க ஈறு.
    பரி-தல் = சுற்றி வருதல். பரிதக்கணம்> ப்ரதக்ஷணம் .
    அலங்கப் பரிதக்கணம் = அங்கப் ப்ரதக்ஷணம்.
    Like
    Comment
    Share

    Tuesday, March 26, 2024

    mutual

     mutual (adj.) late 15c., "reciprocally given and received," originally of feelings, from Old French mutuel (14c.), from Latin mutuus "reciprocal, done in exchange," from PIE root *mei- (1) "to change, go, move," "with derivatives referring to the exchange of goods and services within a society as regulated by custom or law" [Watkins

    நம் திருமணங்களில் மொய் எழுதுவோம். ஓர் உறவுக்காரர் வீட்டு விழாவில் நாம் மொய் எழுதினால் அவர் நம் வீட்டு விழாவில் மொய் எழுதவேண்டும் என்பது நம்மூரில் பலராலும் தொடர்ந்து காப்பாற்றப்படும்  மரபு. அடிப்படையில் மொய்யுறவு என்பது ஒரு reciprocal  relation. மேலே வரையறை படித்தால், நம்மூர் மொய்யின் பொருளைக் கொஞ்சம்  நீட்டலாம் என்று தோன்றுகிறது, மொய் அன்ன என்பது போல் கொள்க. அன்ன என்ற உவமை உருபு தொக்கலாம். தவறில்லை. அப்படிப் பார்த்தால், 

    mutual = மொய், மொய்ம்பு

    mutual respect = மொய் மதிப்பு (நான் மதிப்புக் கொடுத்தால், எனவே நீயும் மதிப்புக் கொடு.)

    mutual friend = மொய்த் தோழர் (எனக்கும் தோழர், எனவே உனக்கும் தோழர்) 

    mutual fund = மொய்ம்பு நிதி.

    mutually attractive = மொய்யாய் ஈர்க்கும்படி (எனக்கும் ஈர்ப்பு, எனவே உனக்கும் ஈர்ப்பு) 

    mutually exclusive = மொய்யாய் விடுக்கும்படி (எனக்கு விடுப்பு, எனவே உனக்கும் விடுப்பு) 

    mutually interactive = மெய்யாய் இடையாற்றும்படி. (நான் இடையாற்றுகிறேன், எனவே நீயும் இடையாற்று,)

    "programming language and scripting languages are not mutually exclusive terms" இதைத் தமிழில் எப்படிச்சொல்லலாம்?

    நிரல் மொழியும்,  எழுதுவிப்பு மொழியும், மொய்ம்பாக விடும்படியான தீர்மங்கள் இல்லை 

    (இந்த மொய்யுறவின் ஒரு பகுதியார் பங்காளிகள். நம் தந்தைவழிச் சொத்துரிமையாளர், இன்னொருவர் சுற்றத்தார் இதில் தந்தை வழியில் சொத்துரிமை உறவில்லா எல்லோரும், தாய்வழிச் சுற்றத்தாரும் அடங்குவர். சொத்துரிமைச் சட்டங்கள் இன்று மாறிவிட்ட்ன என இது பற்றிப் பேசினால் குழப்பமே.)

    Monday, February 12, 2024

    க(/சி)ல்லிகம் - silicon

     silica (n.) என்பது "hard silicon dioxide," 1801 - ஐக் குறிக்கும். இது Latin silex (genitive silicis) "flint, pebble," என்ற சொல்லால் எழுந்தது. silica என்ற சொல் alumina, soda போன்ற சொற்களைப் போல் ஆகாரமிட்டு எழுந்தது. siica வின் வேர் சில் என்பது தான். "flint, pebble." 

    கல்லுதலும் சில்லுதலும் குறுத்தல், சிறுத்தல் பொருள் கொண்டவை. ஒரு பாறையில் இருந்து குல்லி>குத்தித் தெறிக்க வைத்துக் கிடைப்பதைக் குல்>கல் என்றும், இன்னொன்றைச் சில் என்றும் சொல்வார். கல்லும் சில்லும் எப்படி தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வேர்களாயின என்பது வேறு புலம். ஆயினும் அவற்றைப் பொது வேர்கள் என்று சொன்னால் ஏற்க மறுக்கும் மொழியியலாளர் உலகில் மிகுதி. குறிப்பாகத் தமிழறியாது, அதற்கு முயற்சியும் செய்யாது சங்கத மயக்கத்தில் இழைந்து, தமிழ் முன்மையைக் கேலிசெய்யும் மேலை மொழியியலார் மிகுதி. ”ஏதோ இந்தையிரோப்பியத்தையும் தமிழியத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கவே கூடாது” என்பது போல் racial thinking இல் பேசுவோரும் உள்ளார்.    

    எல்லாப் பாறைகளிலும் சில்லும் போது சில்லுகளும், குருனைகளும் (grains) கிட்டும். மண், மணல், களி போன்றவற்றில் சில் போன்ற குருனைகளே உள்ளன. மள்> மண் என்பது சில்கள்/கல்கள் செறிந்தது அதாவது அவற்றின் அடர்த்தி அல்லது திணிவு (density) கூடியது. மண்ணில் கொஞ்சம் ஈரமும் இருக்கும். மணல் என்பது செறிவு, அடர்த்தி, திணிவு இல்லாதது. கல்>கள்>களி என்பது ஈரம் கூடிக் குழைந்து போன நிலை.  

    silica வில் இருந்து பிரித்தெடுத்த silicon மாழையைச் கல்லிகம் அல்லது சில்லிகம் எனலாம்.  

    silicon valley = க(/சி)ல்லிக விளை. விளை என்ற சொல் valley க்கு இணையாய் நெல்லை, குமரி மாவட்டங்களில் உண்டு. அருவி இருக்க நீர்வீழ்ச்சி படைத்தது போல் விளை இருக்க யாரோ பள்ளத்தாக்கு படைத்துள்ளார்.


    Wednesday, January 31, 2024

    சாமி

     சாமி என்ற சொல்லின் பெண்பால் பெயரைக் கவிஞர் இரவாக் கபிலன் தன் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார்.அந்தச் சொல் பால் குறிக்காச் சொல். அதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று இறைப்படிமம், இன்னொன்று துறவி. (ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம்.) 

    முதலில் இறைப் படிமத்திற்கு வருவோம். அது மரம், மண், கல், மாழை என்று பலவற்றால் அமையும். எதில் செய்தாலும் பளபள என்று ஒளி தரும் படி, இருட்டிலும் ஓரளவு தெரியும்படி, தேய்த்துப் பளபளப்புக் கூட்டியே செய்வர். சொல்>சொலித்தல், சொலுத்தல் போன்றவை ஒளியோடு இருக்கும் நிலையைக் குறிக்கும். சொல்>சொலுவம் = படிமம். சொலுவத்தைச் சொருபம் என்று சங்கதம் ஆக்கும். 

    இனி ஒளிக்கு வருவோம். சூரியன் சாயும் நேரததில் வெள்ளொளி தெறித்து வெவ்வேறு நிறங்கள் பிரிந்து மறுபளித்தோ, ஒளிமுறித்தோ காட்டும். சாயும் நேரத்தை சாயுங்காலம் என்பார். அந்நேரத்தில் சூரியன் சாம்புகிறது. பொழுது (சூரியனுக்கு இன்னொரு பெயர்) சாயும் காலத்தைச் சாம்பும்> சாமும் காலம் என்றும் சொல்லலாம். 

    மாலை மங்கும் நேரத்தில் சாம்பி> சாமித் தெரியும் சொலுவம் சாமி என்று அழைக்கப்பட்டது. இன்றும் கோயில் கருவறை இருட்டில் வெறும் அகல் விளக்கு ஒளியில் இறைப் படிவம் மங்கலாய்ச் சாமித் தெரிவதால் அது சாமி என்றும் அழைக்கப்பட்டது. எல்லா இறைப் படிமங்களுக்கும் இது பொதுவான சொல்.  

    சாமி என்ற சொல் இந்தையிரோப்பியனில் கிடையாது. சங்கதம், பாகதம் சேர்ந்த வடபுல மொழிகளில் தமிழ் சார்ந்த கோயில் பண்பாட்டால் பயனாகிறது.அது அங்கு கடன் சொல். “இந்து மதம்” என்று இன்று சொல்லப்படும் கலவை மதப்பெயர் உண்மையில் தென்னக ஆகம மரபையே குறிப்பிடுகிறது. எல்லாவற்றையும் ஆரியம் என்பது அறியாமை.

    இனித் துறவிகளுக்கு வருவோம். பொ.உ.மு. 2500 க்கு முன்னால், தனிச்சொத்து ஏற்படுவதற்கு முன்னால், நிலைத்த மருத, நகர வாழ்க்கைக்கு முன்னால், துறவு என்ற சிந்தனை மாந்தருள் எழ வாய்ப்பேயில்லை. சொத்தின் நேரெதிர்ச் சிந்தனை துறவாகும். கண்ணை மூடிக்கொண்டு சம்மணம் கொட்டிச் சிந்தனையை ஒன்றுகூட்டித் தானிப்பது தானம் ஆனது. தானத்தைத் தான் சங்கதம் த்யானம் என்றாக்கும். சம்முதல் என்பது 2 கால்களையும் ஒன்றேபோல் கூட்டி உட்காருவது. இச் சமநிலையில் இருந்துசெய்யும் தானம் சமதானம்  இது சமயம் எனப்பட்டது. இச்சிந்தனை நிலைப்பைக் கடவுளை நம்புபவனும் செய்யலாம். கடவுளை நம்பாது தன்மனத்தை ஒருங்குபடுத்த விழைபவனும் செய்யலாம். சமயம் என்பது ஓர் ஒருங்குபட்ட சிந்தனை. அவ்வளவு தான்.

    சமயத்தில் ஆழ்ந்தவன் சமயி. சம்முதலின், சமயுதலின் நீட்சி சாமுதல். சாமுகிறவன் சாமி. தானம் செய்பவன் என்று அதற்குப் பொருள் அமையும். மற்கலியும், வர்த்தமானனும், புத்தனும் சாமிகள். அதனால் தான் பகவான் என்றும் அவர் அழைக்கப்பட்டார். சாமி என்ற இத் தனிச்சொல் பால் ஏற்காது. பால் ஏற்க வேண்டுமெனில் கூட்டுச்சொல் வேண்டும் துறவேற்ற சாமிகளில் ஆண் சாமியும் உண்டு. பெண் சாமியும் உண்டு.                                

    Sunday, January 21, 2024

    பெண்பாற் சொற்கள்

     அண்மையில், “மாந்தன், மன்னன், அமைச்சன், புலவன், கவிஞன், கலைஞன், சிற்பி, கஞ்சன், ஒற்றன், தச்சன், வணிகன், காப்பாளன், வீரன், அறிஞன், மூடன், தொண்டன், சீடன், தளபதி, ஆசான், பங்காளி - இவற்றின் பெண்பாற் சொற்கள் என்ன?” என்று திரு. தாமரைச்செல்வன், தமிழ்ச் சொல்லாய்வுக் களத்தில் கேட்டிருந்தார்.

    நான் பின்பற்றும் முறை கீழே வருகிறது. 

    ----------------------  

    பொதுவாய், அன் ஈற்றை எடுத்தபின், மிஞ்சிய பகுதி: 

    1. கு,சு,டு,து,பு,று என முடிந்தால், அள் ஈறும் (காட்டு: அமைச்சள், ஆசாள். ஒற்றள், கஞ்சள், சீடள், தச்சள், தொண்டள், மாந்தள், மூடள், வணிகள்),    

    2. கு,சு,டு,து,பு,று என முடியேல், மெய்ம்மயக்கம் கண்டு, ஐகார மெய்யும் (காட்டு: அறிஞை, கவிஞை, கலைஞை, புலவை, மன்னை, வீரை) 

    சேர்க்கலாம். மூன்றாம் முறையாய், எல்லாவற்றிற்கும் அன் ஈறு எடுத்துப் பின் அத்துச் சாரியை + இகரம் இட்டும் சொல்லலாம்.

    சிற்பி, (தள)பதி, (பங்கு)ஆளி  போன்றவை பால் குறியாச் சொற்கள்.

    காப்பாளன் என்று சொல்லாது காப்பாளி என்பது சிறப்பு. 

    Thursday, January 18, 2024

    ஐயடிகள் காடவர்கோன்.

    தேவாரம் 11 ஆம் திருமுறையில் உள்ள. சிவத்தளி வெண்பா (அல்லது சேத்திரக் கோவை) எனும் இவர் நூலில் 24 வெண்பாக்கள் உள்ளன. இவ் வெண்பாக்கள் யாவும், ‘யாக்கை  நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்போதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்’ என அறிவுறுத்தும். 

    ஐயு-தல் = இதுவோ, அதுவோ எனத் தடுமாறல். 

    ஐயம்/ ஐயப்பாடு ஐயு-தலின் வழி எழுந்த பெயர்ச்சொற்கள். 

    ஐயப்பாட்டின் காரணமாய் எழுந்த கூர்த்த சிந்தனையால் இவர் பாக்கள் எழுந்ததால், இவர் ஐ அடிகள் எனப்பட்டார். ஐ = கூர்மை. ஐ-த்தல் = கூர்த்தல்/.

    ஐயு-தல், ஐ-த்தல் என்னும் 2 வினைகளுமே இவரின் துறவுப்பெயரின் கீழ் பொருந்தும். காட்டாக, இவர் நூலின் 4 ஆம் பாட்டைப் பார்க்கலாம். 

    காளை வடிவொழிந்து கையறவோ(டு) ஐயுறவாய்

    நாளும் அணுகி நலியாமுன் - பாளை

    அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க்

    கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

    காளைவடிவு ஒழிந்து உன் கை செயலற்ற நிலையில், ”ஆகா, இறையை இதுவரை நினையாது இருந்தோமே என நாளும் அணுகி நலியாமுன், ஆரூரர்க்கு ஆளாய், முகங்கவிழ்த்து, கைகூப்புக” என்கிறார் ஐயடிகள்.

    இவர் மிகுந்த கோயில்களைப் பாடவில்லை. இவர் காலத்தில் மிகக் குறைந்த கோயில்களே இருந்திருக்கலாம். இவர் பாடிய கோயில்கள்.

    1.தில்லைச் சிற்றம்பலம் (காவிரி வடகரை)

    2.திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் (காவிரி தென்கரை) 

    3.திருவையாறு (காவிரி வடகரை)

    4.திருவாரூர் (காவிரி தென்கரை)

    5.திருத்துருத்தி (காவிரி தென்கரை)

    6.திருக்கோடிகா (காவிரி வடகரை)

    7.திரு இடைவாய் (காவிரி தென்கரை)

    8.திரு நெடுங்களம் (காவிரி தென்கரை)

    9.திருக் குழித்தண்டலை / திருத் தண்டலை நீள்நெறி (காவிரித் தென்கரை)

    10.”கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதி” என்ற விவரிப்பு உள்ள ஊர் எதுவென்று சொல்ல முடியவில்லை. 

    11.திருவானைக்கா (காவிரி தென்கரை)

    12.திருமயிலை புன்னையங்கானல் (தொண்டை)

    13.உஞ்சேனை மாகாளம் (உச்செயினி)

    14.வளைகுளம்/வளர்புரம் (தொண்டை) - வைப்புத் தலம்.

    15.திருச்சாய்க்காடு (காவிரி வடகரை)

    16.திருப்பாச்சில் ஆச்சிராமம் (காவிரி வடகரை)

    17.திருச்சிராமலை (காவிரி தென்கரை)

    18.திருமழபாடி (காவிரி வடகரை)

    19.திரு ஆய்ப்பாடி (கொள்ளிடத் தென்கரை, காவிரி வடகரை))

    20.திருக்கச்சி ஏகம்பம் (தொண்டை)

    21.திருப்பனந்தாள் (காவிரி வடகரை)

    22,திருவொற்றியூர் (தொண்டை)

    23.திருக்கடவூர் (காவிரி தென்கரை) 

    24.திரு மயானம் (இது கச்சி மயானமா, கடவூர் மயானமா, நாலூர் மயானமா? - தெரியாது. 

    முன்னே சொன்னது போல், இவர் பாடல்கள் எல்லாம் நிலையாமையையே பேசுவதால் ஐயடிகள் என்னும் இவரின் துறவுப்பெயர் இவருக்கு முற்றும் பொருத்தமே. காடவர் என்பது 6ஆம் நூற்றாண்டிற்குப் பின்வந்த பல்லவ நாட்டு மன்னரையும் குறிக்கும். காடவர் எனும் பெயரின் காரணத்தைப் பின்னர்  வேறு இடத்தில் கூறுகிறேன். 

    சிம்ம விண்ணுவின் தந்தை சிம்ம வர்மன் (பொ.570-585) தான் ஐயடிகள் காடவர் கோன் என்று ஒரு சிலரும், இரண்டாம் நரசிம்மவர்மனின் (கழற்சிங்கனின்) தந்தையான முதலாம் பரமேச்சுரவர்மன் (பொ.உ.670-695) தான் என்று வேறு சிலரும் குறிப்பர். இருவருக்கும் இடையே ஏறத்தாழ 100 ஆண்டுகள் இடைவெளி உண்டு. ”யார் உண்மையில் ஐயடிகள்?” என்று சரியாக நிறுவ, கல்வெட்டுகள் உதவலாம். ஆர்வமுள்ளோர் தேடுக.  

    [ஐயடிகள் என்பதை ”5 பாதங்கள்” என்று தவ்றாய்ப் பொருளைப் புரிந்து கொண்டு, சிம்மவர்மனைச் சிம்ஹாங்க, பாதசிம்ஹா, பஞ்சபாத சிம்ஹா எனச் சில வரலாறு திருத்தியர் வடமொழி வழி அழைத்துள்ளார். இதுபோன்ற தவறான மொழிபெயர்ப்புகள் கோயில்கள் தொடர்பாய் அதிகம். வட மொழியில் இருந்து தமிழுக்குப் பெயர்த்ததாய் இதையும் விக்கிப்பீடியா தலைகீழ்ப் பாடம் சொல்லும். இதையெலாம் யாரும் எப்போதும் சரி செய்ததில்லை.]


    Sunday, January 07, 2024

    விசாரணை

     இது தமிழ் தான்.

    அள்> அண்= மேல்.

    அண்> அண்ணம்= மேல்வாய்

    அண்ணுதல்= மேலுதல், நெருங்குதல்;

    அள-த்தல்> அண-த்தல்= மேல்நோக்குதல், மேலறிதல்

    அணவு, அணம், அணை= மேலும் அறிந்தது. தடுத்தது, காத்தது


    ஆர்-தல்= நிறை-தல். முழு-தல்

    ஆர்+ அணை= ஆரணை முழுதாய் மேலறிந்தது


    விள்> விய்> விய்யு-தல்= விரி-தல்; விய்யம்> வியம்= விரிவு;

    விய+ ஆரணை= வியாரணை= விரிவாய், முழுதாய், மேலறிந்தது.

    வியாரனை> விசாரணை. இது வடக்கே விசாரண் என்று போகும்


    Friday, January 05, 2024

    புகார் நகர அடித்தளச் சிந்தனை.

    அண்மையில் வெனீசு நகரம் பற்றிய ஒரு விழியத்தை என் முகநூல் பக்கத்தில் முன்வரித்தேன். அது என் சிந்தனையைத் தூண்டியது. இத்தாலிய வெனிசு நகரம் மரத்தூண்களின் மேல்  அமைந்தது போல் புகாரின் ஒரு பக்கமும் மரத்தூண்களின் மேல் அமைந்திருக்கலாம். அது நடக்கக் கூடியதே. ஏனெனில் புகாரின் ஒரு பகுதியும் சதுப்பு நிலத்தின் மேல் அமைந்ததே.  

    (அங்கிருந்து வெளிவந்த நகரத்தார் நீரழிவிற்குப் பயந்து செட்டிநாட்டில் தரையில் இருந்து 6 அடிக்கும் மேலுயர்ந்து காட்சியளிக்க்கும் வீடுகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறார். 

    புகாரின் பெரும் செல்வந்தர் வீடுகளுக்கு முன்னால் ஆண்டு முழுதும் நீர் (அது ஆறோ, கடலோ, மொத்தத்தில் ஒரு கழி நிலம்) இருந்துகொண்டே இருக்கும். வீட்டிற்குள் நீர் வந்துவிடாமல் இருக்க இவ்வளவு உயரம் வேண்டுமாம். தவிர வீட்டிற்குள் நுழைய ஏழெட்டுப் படிகள். படகு வந்தால், அதைச் சீராய்க் கட்டி நிறுத்துதற்குத் தோதாய், வீட்டுவாசலில் 2 தூண்கள். தூண்களில் படகைக் கட்டி படிகளில் இறங்கி வீட்டிற்குள் போகவேண்டும். நெய்தல் நகரத்திற்கான ஒரு கட்டிட அடவு , இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டப் பாலை நிலத்தில் முற்றிலும் முரண் தோற்றத்தில் காட்சியளிக்கும். 

    நகரத்தாருக்குத் தெரிந்த ஒரே அடிப்படைக் கட்டட அடவு (design) அது போலும்.  20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் நாட்டு விடுதலைக்கு அப்புறம் தான் இந்த அடவை அவர் மாற்றினார். அதுவரை எங்கு நோக்கினும் புகார் அடவு தான். 

    ஒரு காலத்தில் ”நகரம்” என்றால் புகார் தான்.  1950 களில் “பட்டணம்” என்றால் சென்னை  என்பது போல் இதைக் கொள்ளலாம். ”எம் புள்ளை பட்டணம் போயிருக்கான்.”  

    புகார்ச் செல்வந்தர் வீடுகளின் எச்சம் இன்றும் செட்டிநாட்டில் மிஞ்சுகிறது. கூடவே பெரிதும் அழிந்து வருகிறது. பராமரிக்கச் செல்வமில்லை; ஆட்களும் இல்லை. கால காலமாய்த் தொகுத்துச் சேர்த்த பட்டறிவும் செல்லரித்துப் போய்விட்டது. வீட்டு மேங்கோப்பைப் (superstructure) பிரித்து, தேக்கு மரத் தூண்கள், உத்தரங்கள், பட்டைகள் , பலகைகள் ஆகியவற்றை விற்று, சுவர்களை இடித்து, நிலத்தை மனைகளாக்கி விற்கத் தொடங்கிவிட்டார். நிலத்தின் விலையும் கன்னாப் பின்னா என்று போகிறது.   

    புகார் நகரத்தில் இருந்த மற்றோரின் கட்டமைப்பு காவிரிப் புலத்தின் கால்வாய்கள் ஓரத்தில் அங்கும் இங்குமாய் இன்றும் சிறிதளவு வெளிப்படும். புகாரின் ஒருங்கு சேர்ந்த நகரமைப்போ இன்றும் நம் யாருக்கும் தெரியாது. நுட்பியல் தெரிந்த வரலாற்றாய்வாளர் யாரும் பிச்சாவரம், முத்துப்பேட்டை, திருமறைக்காடு போன்ற இடங்களில் அலையாத்திக் காடுகளுக்கிடையே தூண்களின் மேல்நிற்கும் கட்டுமானத்தைச் செய்துபார்க்க முயன்றதில்லை. இதுபோல் செய்து பார்த்து உண்மை தேரும்  வெள்ளோட்டக் கட்டுமானங்களில் நமக்கு ஆர்வமும் இல்லை. 

    மேலையரும், 20 ஆம் நூற்றாண்டு ஆசிரியரும் எழுதிய வறட்டு வரலாறே  நமக்குப் போதும் போலும். அவர் எழுதியதைப் பின்பற்றி, தமிழர் வரலாற்றைப் புறக்கணித்து, ”அசோகர் சத்திரம் கட்டினார், சாவடி கட்டினார், சாலையின் இரு மருங்கும் மரங்கள் நட்டார்” என்று நெட்டுருப் போட்டு வரலாற்றுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு ஒரு விடைத்தாளில் கொப்பளித்தால் நமக்குப் போதும். “2 மார்க்” கிடைத்துவிடும். இதுபோல் 35 மதிப்பெண்கள் கிடைக்கத் தான் நாம் எல்லோரும் வரலாறு படிக்கிறோம். அதற்கு மிஞ்சிய ஆர்வமெல்லாம் நம்மிடம் இல்லை. தமிழர் நாகரிகமாவது ஒன்றாவது? இவர் எக்கேடோ கெட்டுத் தொலையட்டும்.) 

    இற்றைக் கொச்சி, எரணாகுளமும் கூடப் பழங்காலப் புகார் போலத் தான். பல இடங்களில் மரத்தூண்களின் மேல் பல்வேறு கட்டுமானங்கள் இருக்கும். கொற்றவை புதினத்தில் புகாரின் இதுபோன்ற கட்டுமானத்தை எழுத்தாளர் செயமோகன் மிக நன்றாய் விவரித்திருப்பார். (அது படிக்க வேண்டிய, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, ஒரு புதினம். செயமோகனைத் திட்ட மட்டும் செய்யாமல், அவர் எழுதிய இது போன்ற நல்லதையும் நாம் போற்றலாம்.)

    தொல்லியலார், வரலாற்றாய்வர் போன்றோர் இதுபோன்ற கட்டுமானத்தை ஆய்ந்து மேலும் தம் களப்பணியால் கடலுள் தேடினால், ஒருவேளை மாய்ந்த புகாரைக் கண்டுபிடிக்க முடியலாம். 


    Tuesday, January 02, 2024

    Gig workers = கறங்குழையர்

    ”ஏன் கிக் தொழிலாளர் என்று பெயர்வைக்க வேண்டும்? அலுவல் சாராத் தொழிலாளர் எனலாமா?அல்லது வேறுசொல் வழக்கில் உண்டா?” என 3 நாட்கள் முன் திரு.Neechalkaran Raja “ தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” குழுவில் கேட்டார். என் பரிந்துரை கீழே: 

    அதற்கு முன், ”காலங்கள்” தொடரில் 2 ஆம் பகுதி ”புவியாடும் கிறுவாட்டம்” எனும் இடுகையைப். (https://valavu.blogspot.com/2003/09/2.html) படித்து விடுங்கள்.  அதிலிருந்து தேவையானதை வெட்டிக் கீழே ஒட்டியுள்ளேன். 

    --------------------------------

    பத்து, பன்னிரண்டு அகவையில் பம்பரம் விளையாடி இருக்கிறீர்களோ?

    அட நீங்க ஒண்ணு, யாருங்க இப்பவெல்லாம் பம்பரம் விளையாடுறா? இப்பத்தான் எங்கு பார்த்தாலும் மட்டையும் பந்துமா, ஆங்கிலக் கிட்டிப்புள் அல்லவா ஆடுகிறார்?

    ”எத்தனை இளையருக்குப் பம்பரம் சொல்லித் தருகிறோம்? " - என்கிறீரோ? நீர் சொல்வதும் சரிதான், மொத்தத்தில் இன்னொரு பண்பாட்டுச் சின்னம் போயே போச்சு!

    பம்பரத்தை நூலோடு பிணைத்து சொடுக்கித் தரையில் குத்தும் போது, 4 வித இயக்கங்களைக் காட்டும். முதலில், கூரான அச்சில் இருந்தவாறே தன்னைத் தானே உருட்டிக் கொள்ளும். (பம்முதல் = நூலோட்டுதல்) 2 ஆவதாகத் தரையில் பரவி (பம்புதல் = பரவுதல்) ஒரு முழு வலயமோ, பாதியோ போடும். இதுபோக 3 ஆம் இயக்கமும் காட்டும். கிறுவாட்டம் (gyration) எனும் இதை வாழ்வின் பல காலங்களில் பார்த்துள்ளோம். கீழே விவரமாகப் பார்ப்போம். 4 ஆம் இயக்கம் தலையாட்டுவது; அதை நெற்றாட்டம் (nutation) என ஆங்கிலத்தில் குறிப்பர்.

    சில போதுகளில் தலை கிறுகிறுக்கிறது என்கிறோம் அல்லவா? குறிப்பாக உருளைக் கூட்டைகளில் (roller coaster) ஏறியிறங்கிச் சுற்றி விளையாடி , அது முடிந்தபின் ஏற்படும் கிறுகிறுப்பு இக் கிறுவாட்டத்தால் ஏற்படுகிறது. (கிர்ரென்று சுற்றுகிறது, கிறுவுதல், கிறுக்கு, கிறுக்காட்டம், கிறங்கு, கறங்கு போன்றவை இதனோடு தொடர்புடைய சொற்கள்.)

    ஊரிலே தென்னம் பாளையைக் குடத்திலிட்டு அம்மனுக்கு மதுக்குடம் எடுக்கிறார்; இதுபோல, முருகனை நினைந்து பழனிக்குப் பால்குடம், காவடியாட்டம் எடுத்துப் போகிறார்; இப்பொழுதுகளில் சிலருக்கு மெய்ம்மறந்த நிலையில் கிறுவாட்டம் வருகிறது; தன்னினைவு உள்ளபோது ஆடமுடியாத கிறுவாட்டம் மெய்ம்மறந்து முருகனை நினைக்கையில் தன்னுளே ஈடுபட்டுச் சட்டென வந்துவிடும். அதிலேதோ துரித கதி, தாளக் கட்டு, மொத்தத்தில் ஒரு கிறுகிறுப்பு. இக் கிறுகிறுப்பிலும் குடம் கீழே விழாது நிற்கிறது.காவடி அசராது நிற்கிறது.

    கிறுவாட்டத்தில் கூடக்குறையத் தலையாட்டுவதைத் தான் நெற்றாட்டம் என்கிறோம். (நெற்று = nut, இந்த nut -ல் இருந்துதான் nucleus, nuclear science எல்லாம் பிறந்தன. தமிழில் நெற்றுழை என்ற சொல்லே nucleusஐ மிகச் சரியாகக் குறிக்கும். தேங்காய் நெற்றை எண்ணிப்பார்த்தால் நான் சொல்லிம் நெற்றுப்பொருத்தம் புலப்படும். நெற்றுழை அறிவியல் = nuclear science. நெற்றுவதைத் தான் பேச்சுத்தமிழில் நொட்டுவது என்கிறோம்.)

    சூரியனைச் சுற்றி வரும் புவியும் தன்னுருட்டல், வலைத்தல், கிறுவாடல், நெற்றாடல் என 4 இயக்கங்கங்களைக் காட்டுகிறது.

    ---------------------

    இனி gig இற்கு வருவோம். ஆங்கிலத்தில் 2 விதப் பொருள்கள் சொல்வர். ஒன்று பம்பரம் பற்றியது. gig (n.1):"light, two-wheeled carriage, usually drawn by one horse" (1791), also "small boat," 1790, perhaps imitative of bouncing. There was a Middle English ghyg "spinning top" (in whyrlegyg, mid-15c.), also "giddy girl" (early 13c., also giglet), from Old Norse geiga "turn sideways," or Danish gig "spinning top." Similar to words in continental Germanic for "fiddle" (such as German Geige); the connecting sense might be "rapid or whirling motion."

    அடுத்தது இன்றுள்ள பொருள். Definitions of gig - a job, especially a temporary job. type of: business, job, line, line of work, occupation.

    இதன் தொடர்ச்சியாய் Gig workers are independent contractors, online platform workers, contract firm workers, on-call workers, and temporary workers. Gig workers enter into formal agreements with on-demand companies to provide services to the company's client என்றும் சொல்வார்.

    இதில் அடிப்படையைப் புரிந்துகொள்வது.  குறிப்பிட்ட வேலையைக் கிறுகிறு என்று சுற்றிச் சுழன்று கருமமே கண்ணாய் இருந்து சட்டுப்புட்டென அதே பொழுதில் குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதாய்ச் சொல்லும் வேலை gig ஆகும். நாம் பம்பரத்தைப் போல்மமாக்கி இச்சொல்லைக் ”கறங்கு” எனலாம். எச் சிக்கலும் பயன்பாட்டில் எழாது ஆங்கிலச் சொல்லின் சாற்றை ”கறங்கு” என்பதால் கொண்டுவந்து விடலாம்.

    gig workers: கறங்கு உழையர் = கறங்குழையர்.  (தொழிலாளர், உழைப்பாளர் என நீட்டுதற்கு மாறாய் உழையரென்று சுருங்கச் சொல்ல விழைவேன்.)




    Saturday, December 30, 2023

    Cursive Connection

    ”இக் கலைச்சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கையெழுத்தில் இணைத்து எழுதப்படும் எழுத்துகள் இணையும் இடத்தை 'cursive connection' என்றும், சில வேளைகளில் 'cursive attachment' என்றும் சொல்வர். 'கர்சீவ்' எனும் சொல் பயன்பாட்டில் எனக்கு விருப்பம் இல்லை 😉 நல்ல தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்யலாம். பரிந்துரைகள் இருந்தால் பகிருங்கள்” என்று நண்பர் முத்து நெடுமாறன் அவரின் முகநூல் பக்கத்தில் நேற்றுக் கேட்டிருந்தார்.

    கீழே வருவது என் பரிந்துரை:

    ஒரு மாந்தன் இன்னொருவனோடு பூதிகமாய் (physical) இணைத்துக் கொள்கையில், ஒரு கையை நீட்டியே இன்னொருவன் கையைப் பற்றுவான். நீட்டு-தல் பொருளில் நம் பேச்சில் வரும் இன்னொரு வினைச்சொல் வீசு-தல். இதில் பெறும் பெயர்ச்சொல் வீச்சு. வளைகின்ற கையை வீச்சு என்றும் குறிப்பார். வீச்சு = வளைவு = curve. எல்லா நல்ல அகரமுதலிகளிலும் இச்சொல் உண்டு. (காட்டு: செ.சொ.பெ. எட்டாம் மடலம் - இரண்டாம் பாகம், பக்கம் 314.)  இச்சொல் என் வலைப்பதிவிலும் 2006 இல் இருந்து 4  கட்டுரைகளில் உண்டு அங்கு துழாவினால் கிடைக்கும். 

    ஓர் ஓலையில்  ஒரு கீற்றைத் தொடங்கி முடிக்கையில், எழுத்தாணியை எடுக்காது முன்னதைத் தொட்ட வண்ணமே தொடர்ந்து அடுத்ததைக் கீற வேண்டுமெனில், அடுத்ததைத் தொடங்குமுன், முதற்கீற்றின் முடிவை கொஞ்சம் வளைத்து ஒரு வீச்சை உருவாக்கி நீட்டுவோம். 

    [ஒரு தாளில் ஓரெழுத்தைத் தொடங்கி முடிக்கையில், தூவலை எடுக்காது முன்னதைத் தொட்ட வண்ணமே தொடர்ந்து அடுத்ததை எழுத வேண்டும் எனில், அடுத்ததைத் தொடங்குமுன், முதலெழுத்தின் முடிவை கொஞ்சம் வளைத்து ஒரு வீச்சை உருவாக்கி நீட்டுவோம்.] 

    இதைக் கைநீட்டம் எனாது கைவீச்சு என ஏன் சொல்கிறோமெனில், ஒரு கீற்றின் வீச்சு (அல்லது எழுத்தின் வீச்சு) எங்கெழுகிறது என அறுதியாய்ச் சொல்ல முடியாது. நம் கைவண்ணம், எழுத்துருவம், எழுதும் பரப்பின் மேடுபள்ளம் இப்படிப் பலவற்றைப் பொறுத்து வீச்சு அமையும். ”போகிற போக்கு” என்கிறோமே அதுதான் வீச்சு. அங்குமிங்கும் அலையும் இவ்வுறுப்பை வீச்சு என்றுவிட்டால், ஏற்ற இறக்கத்தைச் சரிபண்ணியது போல் ஆகிவிடும். இந்த வீச்சுத் தான் ஆங்கிலத்தில் சொல்லப்படும் cursive.  

    இது கொண்டு ஒரு சொல்லில் வரும் எல்லா எழுத்தையும் இணைத்துவிடலாம். வேகமாய் எழுதப்படும் எந்த ஓலைச்சுவடியிலும் வீச்செழுத்து இல்லாது இருக்காது. (புணர்ச்சி கொண்டு ஓரடியையே, ஏன் ஒரு பாவையே, ஒரு தொடர் போல் ஆக்க முடியும்.) வீச்செழுத்தைப் பிரித்துப் பதிப்பது என்பது பென்னம் பெரும் முயற்சி. செய்தாருக்கு எம் தலை வணக்கம். ஓலையை விட்டுத் தாளுக்கு வந்தபின்னும் நம்மூரில் வீச்செழுத்துக் குறையவில்லை. 1850 களில் இருந்து 1950 வரைக்கும்கூட வடிப்பச்சு (type writer) வாராத வரை, கையால் எழுதப்பட்ட நம் வீட்டுப்பத்திரங்கள் எல்லாமும் வீச்செழுத்தில் தான் இருக்கும். அவரவர் குடும்ப பழைய ஆவணப் பத்திரங்களைத் தேடிப் படியுங்கள். 

    ஒரு சொல்லிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் வீச்சுகள் கொண்டு மாந்தர் கைகள் இணைவது போல் அமைவதால் அந்த எழுத்து முறைக்கு வீச்செழுத்து முறை என்று பெயர். இக் கலைச்சொல்லை இராம.கி. உருவாக்கவில்லை. கால காலமாய் நம்மிடம் இதே துறையில் இருந்த சொல் தான். எங்கள் மாவட்டத்தில் உண்டு. சிறு பிள்ளையில் ஏட்டில் எழுதிப் படித்த எல்லோருக்கும் வீச்செழுத்து என்ற சொல் தெரியும்.    

    cursive connection = வீச்சுக் கணுக்கம்.

    Friday, December 29, 2023

    சதுக்க பூதமும் பிள்ளையாரும்

     சதுக்கபூதம் பற்றி வரலாற்றாசிரியர் திரு. ந. சுப்பிரமணியன், தன் "Sangam Polity" நூலில், (Ennes Publications, Udmalpet 642128, Third ed 1996.) ஓர் அரிய ஊகத்தைக் கூறுவார்: பலரும் எண்ணிப் பாரக்க வேண்டிய கருத்து அதுவாகும்.

    "It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam Literature; but it seems quite proper to trace him back to Perum Chadukka bhUtham which punished all offenders and had a pAsam or rope in its hand; it gave 'Vigna' to those who offended and protected from ' Vigna' those who behaved; so it had 'pAsahasta' and 'Vignaraja'; it was the demon on the cross-road distinguished from the gods who were housed in temples. Vignesvara, too, punished the offenders and protected the good; he has a pAsam in His hands and He is generally on the cross-road. The Demon on the cross-road was ;'BhUta nAtan', a literal equivalent of 'Bhuta' or 'GaNa' nAtan or 'Ganapati'. The elephant face in fact indicates a South Indian origin, and the pot-belly suggests an ancestry traceable back to Demons."]

    பெரும்பாலும் சங்க காலச் சதுக்க பூதமே, சங்கம் மருவிய காலத்தில் பொ.உ.300 க்குப் பிறகு பிள்ளையாராய் மாறியிருக்கலாம். சங்க இலக்கியத்தில், பிற்காலத்தில் இணைத்த கடவுள் வாழ்த்துகள், பாடல்கள் அன்றி விநாயகன் பற்றிய குறிப்புகள் உண்டோ?

    Wednesday, December 27, 2023

    பொன்னம்பலத்தில் தேவாரம் பாட விடாமை

     சிதம்பரம் தீக்கிதரின் பொன்னம்பலக் கொள்ளை பற்றி நண்பர். நாக. இளங்கோவன் இட்ட பதிவில் அவர் கூறிய வேறொரு கருத்து என்னையும் வருந்த வைப்பதால் கீழ்வருவதை அங்கிருந்து இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.


    அவர் பதிவிற்கும் சென்று படியுங்கள். இனி அவர் கருத்து.
    -----------------------------
    பதிவில் சொல்ல மறந்த விதயம் தான் நெடுங்காலமாக என்னை வாட்டுவது. ஒருமுறை அந்தியில் தில்லை போயிருக்கேன். மற்றபடி நான் போனதெல்லாம் உச்சிகால பூசைக்குதான். எப்படி பயணத்திட்டம் போட்டாலும் உச்சிகாலத்தில்தான் எனக்கு அமையும். பொன்னம்பலத்தில் நின்று தெரிசனம் செய்வதே இன்று சிக்கல் என்றால், அங்கே தேவாரம் பாடுவது முழுமையாகத் தடை செய்யப் பட்டிருக்கிறது. சரி, பொதுமக்கள் பாட வேண்டாம். ஓதுவார் பாடலாம்தானே. பொன்னம்பலத்திற்கும் (கனகசபை), நடனவம்பலத்திற்கும் (நிருத்தசபை) இடையே நடைபாதைப் பள்ளம் இருக்கும் அல்லவா? உச்சிகால தீபம் காட்டியதும் அங்குதான் ஒதுவார் நின்று இரண்டு பாட்டுப் பாடுகிறார். பள்ளத்தில் கும்பலோடு கும்பலாக தலையைத் தூக்கி எட்டிப் பார்த்து ஓதுவார் பாடுவதைப் பார்க்கும்போது இரங்கத்தக்கதாக இருக்கிறது. மொத்த பூசையையும் சிற்றம்பலத்தில், பொன்னம்பலத்தில் சமற்கிருதத்தில் செய்துவிட்டு, அவற்றின் அடிப்பள்ளத்தில் நிற்க வைத்துத் தமிழை ஓதுவைப்பது எவ்வளவு கொடுமை? பலமுறை இது எனக்கு வலித்துள்ளது. அதே கொடுமை இன்றும் தொடர்கிறது. இப்பொழுதும் பார்த்து நொந்து போம் வந்தேன். இன்னொரு வலி என்ன தெரியுமா? உச்சிகால பூசை நடவரசனுக்குச் செய்கையில் அம்மன் சன்னதி பூட்டியிருக்கிறது. 50 தீட்சிதர் நடவரசனைச் சுற்றி நிற்கிறார். ஒருத்தர் கூட சிவகாமவல்லியிடம் இல்லை. பூட்டிவிடுகின்றனர். தில்லை போய்வரும் போதெல்லாம் ஒரு கண்ணில் களி மறுகண்ணில் வலி என்ற நிலையே தொடர்கிறது.

    ......................................................
    இனி என் கூற்று. பொன்னம்பலத்தில் தேவாரம் பாட ஆறுமுகசாமி ஓதுவார் எவ்வளவு முறை போராடி இருப்பார்? எத்தனை முறை எழுதியிருப்போம், பேசியிருப்போம்? தமிழகமே அவருக்கு முழு ஆதரவாய் நின்றதே? இன்று எல்லாம் தலைகீழாய்ப் போய் விட்டதே? . வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதே? தமிழகம் இனி என்ன செய்யப் போகிறது? கோயில் நிருவாகம் தீக்கிதர் கட்டில் இருந்து முற்றாய் வெளிவந்தால் ஒழிய இது மாறாது. தமிழர் எல்லோரும் கொஞ்சம் வெளிப்படப் பேசுங்கள். சிவநெறியார் ஏன் வாய்மூடி மோனியாகிறார்? எப்படி விண்ணவ நெறிக்குத் திருவரங்கமே ”கோயிலோ” அதுபோல் சிவநெறிக்குச் சிற்றம்பலமே “கோயில்”. என்று உங்களுக்குத் தெரியுமா? கத்தோலிக்கத்திற்கு வத்திக்கான் போலச் சிவநெறிக்குச் சிற்றம்பலம் தான். அங்கு, அம்பலத்தின் மீது நின்று நடவரசன் முன்னால் நம் தமிழைப் பாட வழியில்லையா?

    தாண்டவம்

    நேற்றுப் பார்த்தால் ”ஆரூத்ராத் தர்ஸனம், ஆருத்ரா அபிஷேகம், ஆரூத்ரா ரதோற்சவம்” என்று எல்லாம் சங்கத மயம்.

    ஆரூத்ராவை மூன்றுவிதமாய் அணுகலாம். முதல் வகைக்கு வருவோம்.

    இது சிவன் பற்றியது. நடவரசன் தொன்மம் எழாத ஆதிக்காலத்தில் ஆதித் தமிழ்மாந்தன் எரியும் நெருப்பைக் கண்டு அச்சப் பட்டான். அது அவனை உலுக்கியது. உருக்கியது. ஒளித்தது. பின் ஒழிக்கவும் செய்தது.

    எல்லாம் உல் எனும் வேரில் தொடங்கிய சொற்கள். உருத்தது முதலில் எருத்தது. பின் எரித்தது, உரு> எரு> எரி. உல்> ஒல்> ஒள்> ஒளி. ஒளியில் பொன்னிறமும், சிவப்பு நிறமும் தெரிந்தன. சிவப்புப் பொருளில், உருத்தது, அருத்து, அரத்து, அரத்தமானது. சிவன் இன்னும் திரிந்து அருத்தன்> அர்த்தன்> ஆர்த்தன் ஆனான். ஆர்த்தன் என்பது சிவனுக்கு இன்னொரு பெயர். ஆர்த்தனைச் சங்கதம் ஆ(ர்/)ருத்ரா> ஆரூத்ரா என்றாக்கும். மீளக் கடன்வாங்கிப் பயன் உறுத்துகையில் அரத்தன் என்ற சொல்லின் இணைப்பை நாம் மறப்போம்.

    அடுத்து இரண்டாம் வகைக்கு வருவோம்.

    அதே ஆதித் தமிழ்மாந்தன் இரவு நேரத்தில் வானத்தின் உடுக்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது வானத்தின் ஒரு பக்கலில் ஒவ்வொரு ஆண்டின் குறித்த மாதங்களில் 7,8 உடுக்கள் மிகவும் சொலித்தும், அவற்றின் நடுவில் சிவந்த உடுவொன்று வெகுதொலைவில் தெரிவதையும் கண்டான்

    அதற்கு ஆர்த்தை> ஆர்த்திரை> ஆத்திரை> ஆதிரை என்ற செம்பொருள் பெயரை இட்டான். தான் வணங்கும் ஆர்த்தன் ஆர்த்தையில் வதிவதாய் ஒரு தொன்மம் கற்பித்துக் கொண்டான். எனவே சிவனுக்கு ஆதிரையான் என்பது இன்னொரு பெயராயிற்று.

    திகரம் தவிர்த்த ஆரையான் என்ற சொல் இன்று மேலை வானியலில் Orion உடுக்கூட்டத்திற்குப் பயன்படும் இந்த ஆரையான் உடுக்கூட்டத்தின் நடுவே ஆதிரை (Betelgeuse is the brightest near-infrared source in the sky with a J band magnitude of −2.99; only about 13% of the star's radiant energy is emitted as visible light. If human eyes were sensitive to radiation at all wavelengths, Betelgeuse would appear as the brightest star in the night sky.) தென்படும். ஆக இரண்டாம் வகையில் ஆதிரை என்பது சிவனின் விண்ணுலக இருப்பிடத் தொன்மம்.

    இனி, மூன்றாம் வகைக்கு வந்துவிட்டோம்.

    காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம் பற்றிய தொன்மம், பெரும்பாலும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுந்திருக்கலாம். காலைத் தூக்கி உயர்த்துவதைத் தமிழில் உந்துதல்> உத்துதல் என்பார். உந்து, உத்து, உந்தம், உதை போன்ற சொற்களை இங்கே எண்ணிப் பாருக. உத்தம்>ஊர்த்தம் என்பது நிற்றலையும், உயர்த்தலையும் குறிக்கும்.

    ஆல்-தல் = சுற்றல், ஆடல். ஆடு என்பதன் வேர் ஆல் தான். ஆல்> ஆலு> .ஆளு> ஆடு. ஆலூர்த்தம் = காலைத் தூக்கி நின்றாடும் ஆட்டம் இதில் மேலும் ல்>ர் மாற்றம் செய்வதும் தமிழில் உண்டு. ஆரூர்த்தம் என்பதற்கும் அதே பொருள் தான், வழக்கம் போல் ஆருர்த்தத்தில் ரகரம் நுழைத்து ”ஆரூர்த்ரா” என்று சங்கதம் ஆக்கும். இந்த மூன்றாம் கருத்தே நடவரசனைக் குறித்தது. நடத்தின் அரசன் நடவரசன்.

    வழக்கம் போல் தமிழை விட்டுச் சங்கதத்தைப் பிடித்து நாம் தொங்குவோம். அம்மாவை எத்தனை தடவை வேண்டுமாயினும் உதைக்கலாம். அவள் பொறுத்துக் கொள்வாள் எனும் அலட்சியம் நமக்கு நிறையவே உண்டு..

    இந் நடத்திற்கு இன்னொரு சொல்லும் உண்டு. காலைத் தூக்கி நின்றாடு-தல் எனும் நீள வினையைத் ”தாண்டு-தல்” என்றும் தமிழில் சுருங்கச் சொல்லலாம். அவன் ஆடுவது தாண்டவம். அவன் தாண்டவன். தாண்டுகை - dance. (ஆங்கில c ஒலிப்பை k என ஒலித்துப் பாருக. இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.)

    ”தாண்டவன் தெரியனம், தாண்டவன் முழுக்காட்டு, தாண்டவன் தேரோட்டம்” என்று எப்போது தமிழில் சொல்வோம்?

    Friday, December 22, 2023

    சங்ககால மக்கள் தொகை

    1968 இல் திரு.M. E. MANICKAVASAGAM PILLAI, எளிமையான முறையில் சங்ககால மக்கள் தொகையைக் கணக்கிட்டு, ஒரு கட்டுரையாக ஆக்கி, மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் அளித்தார். இவ் எளிய கட்டுரை அற்றைத் தமிழரிடம் மிகப் பெருவலம் கொண்டதாய் அமைந்தது. (இற்றைத் தமிழர்தாம் பழையனவற்றைக் காப்பாற்றாது விட்டோம்.) 

    இம்மாநாட்டில் மலேசியப் பேராளரில் ஒருவராய்க் கலந்து கொண்ட என் தந்தையார் முத்தமிழ்ச் செல்வர் ரெ.இராமசாமியின் வழி, 1966/67 இல் இக்கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பும் பெற்றேன்.  Proceedings of the first international conference seminar of Tamil studies: Kuala Lumpur, Malaysia Apeil 1966 நூலில் 346-349 பக்கங்களில் உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பின்  ஒரு படி எம் வீட்டிலும் இருந்தது. என் தந்தையார் மறைவிற்குப் பின் இக்கட்டுரையைத் தேடிக் கண்டு பிடிக்கமுடியாமல் பல்லாண்டு தடுமாறி, முடிவில் 2010களில், நண்பர் விருபா குமரேசன் உதவியோடு இக்கட்டுரையின் படியைப் பெற்றேன். 

    இப்போது https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdk0xy#book1/ வலைத்தளத்தின் வழி இருப்பதையும் தெரிவிக்கிறேன். உங்கள் வாசிப்பிற்கு ஒரு படி இணைத்துள்ளேன். 

    படிக்கவேண்டிய கட்டுரை.

    அவர் கட்டுரையை இங்கு கொடுத்தது போக,  கட்டுரைக்குள்ளே சில பெருக்கல்களில் இருந்த Logarithm பிழைகளைச் சரி செய்துள்ளேன். முடிவில் பெரிதும் மாற்றம் இல்லை.   


    POPULATION OF TAMILAKAM DURING THE SANGHAM AGE*

    M. E. MANICKAVASAGAM PILLAI


    INTRODUCTION

    In this paper an attempt is made to probe into the possibilities of reconstructing the population of Tamilakam during the Sangham period.Such an idea would strike the imagination of any one who finds the note of caution cited by the Demographical Year Book of the U.N.O. It mentions the future trends in the population of the world that would become three times greater by a.D. 2000, than what it was in A.D. 1950. If the future trends can be calculated, why would it not be possible for us to calculate backwards? Physical anthropologists have calculated the age of the first true men as 30,000 years{!}. But the number of the species who lived at that time is not known. At the same time the population of the world at the time of the birth of Christ is said to have been 200 millions{2}.

    Regarding the population of any country in the present century, we are posted with sufficient information, thanks to the reports of the Census Commissions. Based on these figures, the future trends in population are calculated. Similarly the past trends in population also have to be calculated. The relationship between population and other aspects of culture deems it a necessity to formulate a method to calculate the past trends in population.

    IMPORTANCE OF THE POPULATION ANALYSIS

    In any country, a proper study of the population should precede the assessment of her economic prosperity. They are relative entities and none of them is absolute of the other. Therefore an analysis of the population of Tamilakam during the Sangham age is essential, if we have to evaluate fully her economic prosperity, as it is gleaned out from the Sangham literature, which does not help us in any way, as no clue is available to probe into the population figures. So a different method is to be adopted.

    FORMULATION OF THE METHOD

    It is possible to reconstruct the culture of the ancient phase on the basis of modern culture traits existing in cognate cultures within a culture area. A similar method should be formulated for calculating the past population also.

    Let P be the population of a country at a given time and n be the number of decades before which R the population to be reconstructed existed. If r is the percentage of variation during a decade, then a formula can be arrived at as follows:

    Let R be the population in the beginning, and r the % variation per decade.Then at the end of the first decade, the population will be: R+ R*X*r/100; 

    i.e. = R*(1 + r/100). Then the population after n decades will be R (1 + 1/100)^n which is P.: So P= R (1 + r/100)^n 

    CALCULATION OF  r

    Using the above formula, r can be calculated, if the value of the other entities are known. If we accept the view that the population of the world during the time of Christ was 200 millions, r can be calculated as follows:

    P = 1,500 millions in AD. 1900.R = 200 millions and n = 190 decades.By positing these values, we can calculate the value of r:

    P = R*(1+r/100)"

    ie. 1550 = 200*(1 + r/100)^!90

    1550/200 = (1 + r/100)^190

    Taking natural logarithm on both sides, 

    190*ln (1 + r/100) = ln (1550/200) = ln 7.75 

    Therefore, ln(1+r/100) = (ln 7.75)/190 = 0.010777330754554

    i.e. (1+r/100) = 1.010835615379693

    Hence, r = 1.0835615379693 % per decade.

    RECONSTRUCTION OF THE POPULATION OF TAMILAKAM

    The Tamilakam of the Sangham age and the modern Tamilnad are not the same. The former comprised the modern states of Kerala also within her area. So the modern Indian states of Kerala and Madras would roughly correspond with the Tamilakam of the Sangham age. The population of Madras according to the Census Report of 1911 was 20,902,616: while that of Kerala in that report was 7,147,673. Therefore the population of the modern area corresponding to the

    ancient Tamilakam of the period in question (i.e.1910 the year) is (20,902 + 7,148) x 1,000 = 28,050 x 1,000. If the population of Tamilakam in the first decade of the beginning of the Christian Era is to be calculated, then n = 191 decades.

    P = R*(1 + r/100)^191

    ie. 28:05 = R*(1 + 1.0835615379693/100)^191

    R = 28-05/[(1.010835615379693)^191]

      = 28.05/7.833976019192718 = 3.580557296994447 millions.

    Tamil scholars and historians agree with regard to the age of the Sangham period, as the first three centuries of the Christian era. So if we

    take up the upper limit of the Sangham period as AD 300, then the population figures can be calculated as follows:

    P = R(l + r/100); P = 3.580557296994447 * (1.010835615379693)^30 = 4.942782225693111 millions.

    Now we know the minimum and maximum limits of the population range in Tamilakam during the Sangham period. The range is between 3.581 millions in the beginning and 4-962 millions towards the close of that epoch.

    FURTHER IMPLICATIONS

    As we have calculated above, the population of Tamilakam during the entire Sangham period varied between 3-583 millions 4-951 millions respectively. This knowledge of the population of Tamilakam helps us to make a valid assessment of the economic structure of the ancient Tamil Society. We learn from the Classics that the land was fertile, agriculture flourished and great progress was made in the spheres of internal and international commerce.{4} Foreign ships loaded with gold visited the harbours of the Tamil states to exchange gold for the precious commodities like pepper and the spices.{5} As a consequence Tamilakam maintained a favourable balance of trade. All these aspects suggest that the people enjoyed a prosperous economy which, with a limited population might have maximised the intensity.In the political life of the country, the three crowned kings and the chieftains are said to have maintained a standing four-fold army, in addition to the militia, mobilised during occasions of war[6}. The population figures would explain this discrepancy. There might not have existed ample scope for maintaining a huge standing army with a limited population, for other economic activities also might have needed the services of the people in order to have a stable economy.

    Literature does not mention more than one or two diseases and the stress seems to have been on administering curative medicines.Thus it is possible to establish the fact that a study of the population of ancient Tamilakam has great implications on the culture of the ancient Tamils {7)

    Thus it is possible to establish the fact that a study of the population of ancient Tamilakam has great implications on the culture of the ancient Tamils.  

    ------------------------------

    References:

    1 Krober’s Anthropology, pp. 23-27. 

    2.The information is obtained from KUMUDAM, Tamil weekly published from Madras.

    3 On the basis of the synchronization of the contents of the Sangham works with those of the foreign works of Pliny, Ptolemy and others, Profeason  S. Valyapuri Pillai and K. A. Nilakanda Sastri have fixed this date. The Roman coins un-earthed in different parts of Tamilakam also confirm this view.

    4. Refer to the section ‘Economic Conditions’ in the author’s thesis “Culture of the Early Cheras”, pp. 254-314.

    5 Ibid.

    6 Ibid. “Political Conditions”, pp. 193-253.

    7 Ibid. “Economic Conditions”, pp. 254-314.

    SELECT BIBLIOGRAPHY

    Kroser, A. L., Anthropology — George G. Harrap & Company, Limited,London, 1923. 

    MANICKAVASAGAM PILLAI, M. E., “Culture of The Early Cheras”, M. Litt.Dissertation (Unpublished) submitted to the University of Kerala, Trivandrum,1964.

    The author is greatly indebted to Prof. V. I. Subramoniam, of the Kerala University. and Prof. Eliezer of the Department of Mathematics, University of Malaya, for their valuable suggestions in drafting this revised draft of the paper.