Friday, October 24, 2025

massage

உடம்புத் தசைகளின் பயன்பாட்டில், பல்வேறு எலும்பியக்கங்களை செயற்படுத்துவதும் ஒன்றாகும். மூளை, நரம்புகள், தசைகள், எலும்புகள் என்ற உறுபுகளின் வழி இந்த இயக்கங்கள் நடைபெறும். சில போது முறையிலா இயக்கத்தால் ஒன்றிற்கொன்றான நரம்புகள், தசைகள் போன்றவை பிசகிக் கொள்ளும் போது (பிறழ்ச்சி ஆகும்போது) வலி எழும்புவதையும், குறிப்பிட்ட இயக்கத்தை மேற்கொண்டு செய்ய முடியாதது போலதும் கூட நடக்கலாம். மொத்தத்தில் நடக்கவேண்டிய இயக்கம் நடக்கமுடியாது போவதைத் தான் நரம்பு/தசைச் சுளுக்கு என்பார். சுளுக்குப் பிடித்தல் என்றும் சொல்வார். இச் சுளுக்கைச் சரியாக்குவதில் தான் massage எனும் மருத்துவ நடைமுறை வருகிறது. சுளுக்கு எடுத்தல் என்றும், சுளுக்கு வழித்தல் என்றும், சுளுக்கு உருவுதல் என்றும், தசைகளை நெகிழ்த்தி விடுதல் என்றும் இம்முயற்சியைச் சொல்வார்.

சுல்>சுழு>சுளு  சுளுக்கு< சுருக்கு/நரம்பு பிசகுதல்   

அடுத்து, உருகு(/வு)-தல் (தன்வினை) = இளகுதல், நெகிழ்தல். சுளுக்குப் பாய்ந்தவிடத்தை விரல்களால் அழுத்தி மெதுவாய் நெகிழ்த்தி விடுதல், A gentle movement of the affected part by someone else pressing with fingers and drawing the hand down a number of times, paasive movement.

உருக்கு-தல் (பிறவினை) =  இளகிவிழச் செய்தல், மனம்நெகிழ்த்தல்  

உருவுகை (தொழிற்பெயர்) = சுளுக்கு முதலியவற்றைப் போக்கத் தடவுதல், to massage, draw the hand down over a sprained part of the body.    

இன்னொரு விதமாய், தன்வினையில் நெகிழ்(வு)-தல்> நெகுழ்(வு)-தல்> நெகு(வு)-தல்> நிகு(வு) -தல்> நீவு-தல் என்றாகும். அதுவே பிறவினையில், நெகிழ்(வி)-த்தல்> நெகுழ்(வி)-த்தல்> நெகு(வி)-த்தல்> நிகு(வி)-த்தல்> நீவி-த்தல் என்றுமாகும்.

இன்னொரு விதமாய் நெகிழ்(வி)-த்தல் என்பதில் விகரம் ஒதுக்கி நெகிழ்த்துகை என்றும் இதைச் சொல்லலாம்.

நெகிழ்த்துகை = massage


Friday, August 08, 2025

சம்பவம்

இப்போதெல்லாம் ”சம்பவம்” என்ற இருபிறப்பிச் சொல் மக்களிடையே பெரிதாய்ப் புழங்குகிறது. இதன் தோற்றம் எப்படி எழுந்தது?    

உம்முதல்> கும்முதல்> சம்முதல் = சேருதல், கூடுதல், உம் என்பது தமிழில் பன்மையைக் குறிக்கும் ஓர் ஈறு. அவனும் நானும் வந்தோம். சம் என்பது சங்கதத்திலும் பெரிதாய்ப் பயிலப் படுகிறது. மேலை நாடுகளில் com, cum என்று பயன்படும். தமிழிய, இந்தையிரோப்பிய மொழிக் குடும்பங்களில் இது பயன்படுகிறது.   

புல்>புள்>.புழு> புகு>பூ-த்தல் = தோன்றுதல்; பூ- என்பது புகு->புவு- என்றும் திரியும். பூவைப் பூவு என்றும் பேச்சுவழக்கில் சொல்வோம். புவ்வு>பவ்வு-தல். ”புவ்வத் தாமரை புதையுங் கண்ணன்” என்பது 15 ஆம் பரிபாடலின் 49 அடியில் வரும். bhava = coming into existence. பவ்வு-நம்>பவ்வுனம்>பவனம் என்பது புதிதாய்த் தோன்றிய வீடு, அரண்மனை. நிலம், துறக்கம் போன்றவற்றையும் இது குறிக்கும். பவம் = புதிதாய்த் தோன்றிய கட்டுமானம்.

ஆக, சம்மும், பவமும் தனித்தனியே பார்த்தால், தமிழ் தான். அதே பொழுது, இரண்டையும் ஒன்றுசேர்த்த கூட்டுச்சொல்லைத்  தமிழில் பயிலமாட்டோம். . சங்கதத்தில் கூடவே பயில்வார். கோயிலில் சங்கத மொழி வழி அருச்சனை செய்யும் போது வேண்டுதலில் ”பவதே” என்று வரும்.   

சம்பவம் = கூடி உண்டாவது. = நிகழ்வு.