அன்புடையீர்,
சற்றுமுன், "IMF loan and ethnic cleansing of Tamils in Sri Lanka" என்ற தலைப்பில் ஓர் எடுகோட்டு வேட்பைப் (on line petition) படித்துக் கையெழுத்திட்டேன்.
http://www.PetitionOnline.com/IMFP1/
அந்த வேட்பு சொல்லும் உண்மையை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். நீங்களும் ஏற்றுக் கொண்டால், சற்று நேரம் எடுத்து, அதைப் படித்து, உங்கள் கையெழுத்தை இடுங்கள்.
கூடவே, மற்ற நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைச் சொல்லுங்கள். உங்கள் வலைப்பதிவுகளில் எழுதுங்கள். தாளிகைகளில் தாருங்கள். குறைந்தது ஓர் இலக்கம் கையெழுத்துகளாவது அந்த வேட்பில் சேர வேண்டும். இதைச் செய்வதற்கு 2 நுணுத்தங்களே ஆகும். ஆனால் பெரும்பலன் இருக்கும்.
நண்பர்களே! உங்களுக்கே தெரியும். பொருளியலால் அடிபடாமல், பணத்தால் அடிபடாமல், சிங்கள அரசு தன் போரை நிறுத்தாது. தமிழ்கூறும் நல்லுலகம் இந்த உதவியை ஈழத் தமிழருக்குச் செய்யக் கூடாதா?
இது போன்ற பொருளியல் கடன் உதவிகளை வைத்துத் தான் சிங்கள அரசு தமிழர்களைக் கொல்லுகிறது. இவற்றை சிங்கள அரசு அடையவிடாது செய்வது தமிழர்களைக் காப்பாற்றுவதில் முகன்மையானது. சிங்கள அரசுக்கு எங்கு வலிக்குமா, அங்கு நாம் தாக்க வேண்டும். உங்கள் கையெழுத்து அதைச் செய்யும்.
அன்புடன்,
இராம.
Monday, March 09, 2009
Saturday, March 07, 2009
எதன் அடிப்படையில் அரசியல் மாற்றம்?
மாற்றம், மாற்றம் என்று நாம் முழங்குகிறோமே, ”அது ஒரு கட்சி ஆளுவதற்கு மாறாய், இன்னொரு கட்சி ஆள வகை செய்யும் ஆட்சி மாற்றத்தைச் சொல்லவில்லை” என்றே நான் எண்ணிக் கொள்கிறேன். நம்மில் பலரும் ”இப்பொழுது, இந்தக் கட்சி பிடிக்கவில்லை, இன்னொரு கட்சி பிடிக்கிறது, இது தான் வெல்லும் குதிரை, இது தோற்றோடும் கழுதை” என்று பொருள் கொள்ளக் கூடாது. மாறாக, ”இனி வருங்காலத்தில் நாட்டு மக்களின் வாழ்வுநிலை செழிக்க, உருப்படியான பொருளியல்வளர்ச்சி நம் குமுகாயத்தில் ஏற்பட, காலங் காலமாய்த் தொடர்ந்து வந்த தமிழின மரபுகள் காப்பாற்றப் பட, தமிழன் என்ற இனம் எதிர்காலத்தில் கரைந்து, சிதைந்து, அழிந்து விடாது நிற்க, தமிழரிடையே ஓர் அடிப்படை அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும்” என்ற விழைவில், ”பட்டதெலாம் போதும், படமுடியாது இனித் துயரம்” என்ற முனைப்பில், நமக்குள்ளே எழுந்த ஓர் எழுச்சியாக, இந்த முழக்கத்தைப் புரிந்து கொள்ளுகிறேன். என்னுடைய பார்வையில் “அந்த அடிப்படை அரசியல் மாற்றம் என்ன?” என்று இந்தக் கட்டுரை மூலம் சொல்ல விழைகிறேன்.
இக்கட்டுரையின் இடுகை 2009 இல் நடந்தது.
இக்கட்டுரையின் இடுகை 2009 இல் நடந்தது.
இனிக் கட்டுரைக்கு வருவோம். இரண்டாம் உலகப்போர் சற்றேறக்குறைய முடிவுற்ற நிலையில், 1940களின் பின்னைந்து ஆண்டுகளில் இரண்டு பெரிய கேள்விகள் இந்தியத் துணைக்கண்டத்தில் பூதகரமாய் எழுந்து நின்றன.
முதற் கேள்வி இந்திய விடுதலை பற்றியது. விடுதலை எப்போது கிடைக்கும்? [இந்தக் கேள்வியின் அடிப்படை, இந்தியாவின் வளங்களும், செல்வமும், உழைப்பும், பிரித்தானிய முற்றாளுமைக்குப் பயன்படாமல், இந்திய மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற வேட்கையில் இருந்தது.] 1947 ஆகத்து 15 இல் விடை கிடைத்தபின், இந்த கேள்வி மக்கள் மனத்தை விட்டு நீங்கத் தொடங்கியது. 1950 சனவரி 26 இல் ”நாமே இந்நாட்டு மன்னர்” என்று உறுதி செய்த நிலையில், பிரித்தானிய அரசின் ஆளுமை அடியோடு அறுக்கப் பட்ட நிலையில், இந்தக் கேள்விக்கு வேலையில்லாமற் போய், முற்றிலுமாய் அகன்றது.
ஆனால், இந்தியாவின் பல்தேசத் தன்மை பற்றிய இரண்டாவது கேள்வி நெடுநாட்கள் தங்கி நம்மிடையே ஊறிக் கிடந்தது. நாடு விடுதலை பெற்றபோது, ”இந்தியா என்பது பல தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் ஓர் இடமாகப்” புரியப்பட்டு, 1969க்குப் பின், தலைகீழாய், அரசியற் பொருளியல் கொள்கைகள் மாறி, இன்று எதிர்மறையாக, ஒற்றைத் தேச நாடாக, கட்டி அமைக்கப்படும் நிலைக்கு வந்திருப்பதால், இந்தக் கேள்வி நம் முன் முகன்மை பெறுகிறது. [இந்தியா என்ற அரசியல் கருத்தீடு 100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் துணைக்கண்டத்தில் இருந்ததில்லை.]
1947 அளவில் இங்கிருந்த பல கட்சிகளும், இயக்கங்களும் [அதில் பேராயமும், சமவுடைமைக் (socialistic) கட்சிகளும், பொதுவுடைமைக் கட்சியும் முகன்மையானவை], ”பல்தேசம்” என்ற உள்ளமை (= reality) நிலையை உணர்ந்தே இருந்ததால், பல்தேசத் தன்மையைக் கவனமாகவே காப்பாற்றின. பேராயக் கட்சியின் ஆவடி மாநாடு கூட அதை ஆழ்ந்து கவனத்தில் எடுத்துக் கொண்டது. இந்தகைய கவனத்தின் காரணமாக, இந்த நாட்டின் பெயரைக் கூட ”இந்திய ஒன்றியம்” என்றே அற்றை அரசியலார் சொல்லிவந்தனர். [1969 ற்கு அப்புறம் நெருக்கடி நிலை உருவான பின் தான், நம்முடைய புகற்கடவுப் (passport) பொத்தகங்களில் “இந்தியக் குடியரசு (Republic of India)” என்று பெயர் பொறிக்கும் நிலை வந்தது. ஒன்றியம் என்ற கருத்தீடு ஓடியே போயிற்று.]
தொடக்கத்தில் ”இந்திய ஒன்றியம்” என்ற புரிதலின் விளைவாக, 1954 இல் ஆந்திராவில் பொட்டி சிரி ராமுலுவின் போராட்டத்திற்கு அப்புறம் உருவான ”மொழிவாரி மாநிலங்கள்” கொள்கையைப் பேராயக் கட்சியும் ஒப்புக் கொண்டது. [இன்றோ, அதிகார வர்க்கத்தில் இருக்கும் பலரும் ”மொழிவாரி மாநிலங்கள்” என்று அன்றைய அரசு ஏற்படுத்தியதே தவறு என்று சொல்லிக் கொண்டு திரிகிறார். அதை இந்தியாத் தரகுமுதலாளியமும் (comprador capitalism) ஏற்றுக் கொள்கிறது.] "வலுவான மாநில அரசுகள் சேர்ந்தே வலுவான நடுவரசு ஏற்படமுடியும்" என்ற அடிப்படை ஆழுணர்வு மாறி, ”வலுவான நடுவரசு, வலுவற்ற மாநிலங்கள்” என்பதே இன்றையக் கட்டுமானத்தின் அடிப்படையாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் தில்லிக்காரனைத் தேடி ஓடும் நாய்ப்பிழைப்பு இன்று ஏற்பட்டிருக்கிறது.
அன்றைய நிலையில் நாட்டின் விளிம்பெங்கணும் (குறிப்பாக, கடல் மற்றும் நில எல்லைகளில்) எல்லாம், வரையறுத்துச் சொல்லத் தக்க தேசிய இனங்கள் ஏற்பட்டிருந்தன. நாட்டின் உட்புறத்தில் மட்டும் இந்தி மொழி பேசும் ஒரு தேசிய இனம் உருவாகாத நிலையில் இருந்தது. நாட்டு விடுதலைக்கு அப்புறம், பொருளியல் வளர்ச்சி ஏற்பட, ஏற்பட, இந்தி பேசும் தேசிய இனம் ஒன்று உருவாகும் என்றே பலரும் எதிர்பார்த்தார். இப்படிச் சொல்லும் போது, ”தேசிய இனங்களுக்கு இடையே முரண்பாடுகள் உண்டு, அந்த முரண்பாடுகள். இந்தியாவின் வளங்கள் மேம்பாடு ஆகாத சூழ்நிலையில், பெரிதாகிப் பின்னால் அந்த வளங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் போது, தேசிய இனங்களின் இடையே பங்குச் சிக்கல் வரத்தான் செய்யும்” என்று ஆய்ந்தோர் அறிந்திருந்தார். அதே பொழுது, ”இந்த முரண்பாடுகளைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள, இந்தியக் குடியரசுச் சட்ட அமைப்பு இடங் கொடுக்கும், பங்குச் சிக்கல்களைப் பேசித் தீர்க்க முடியும்” என்றே அவர் எண்ணினார்.
ஆனால், விடுதலை இந்தியாவில் இருந்த இரண்டுவகை முதலாளிகளில் இந்திய நாட்டு நலனில் அக்கறை கொண்ட தேசிய முதலாளிகள் வளருவார் என்ற எதிர்ப்பார்ப்புப் பொய்த்துப் போய், தரகு முதலாளிகளே வளர்ந்து, இன்றைக்கு ஒற்றை இந்தியா என்ற கட்டுமானம் பெரிதாக ஆகிப் போனது. தரகு முதலாளிகளின் முகவரான (agent) இந்திய தேசியப் பேராயக் கட்சி இன்றைக்கு ஒற்றை இந்தியாவையே முன்வைக்கிறது. அதன் விளைவாக, நாட்டில் அரசுக்கு வரும் வருமானங்கள் [வரி (tax), சுங்கம் (customs duty), உல்கு (excise duty - இதைக் கலால் வரி என்றே நாளிதழ்கள் சொல்லிவருகின்றன)] என எல்லாமே நடுவண் அரசில் குவிந்து, மாநில அரசுகள் பெறும் விற்பனை வரி ஆகக் குறைந்து போக, ஒவ்வோர் ஆண்டும் திட்டக் குழுவோடு நடக்கும் பங்குப் பிரிப்பில் ”ஐயா, சாமி, எங்களுக்கு இன்னுங் கொஞ்சம் பிச்சை போடுங்கள், நாலு மாதமாய்ச் சரியாச் சாப்பிடலை சாமி” என்று ஏந்திப் பிழைக்கும் நிலையே நடந்து வருகிறது.
எந்த தமிழ்நாட்டு முதலமைச்சரும் இந்தப் பங்குப்பிரிப்புக் கூட்டத்திற்குப் போகாமல் இருக்க மாட்டார். [வேறு எத்தனையோ கூட்டங்களுக்குப் போகாமல் இருப்பவர், இதை மட்டும் தவிர்க்கவே மாட்டார். இதில் ஐயாவும், அம்மாவும், ஒன்று போலத்தான்.] “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்று இவர் போடும் கூச்சல்கள் எல்லாம் வெற்று முழக்கங்கள். ”பிச்சை போடும் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பிச்சை போடுகிறார்” என்பதில் தான், இவரின் அந்தந்த ஆண்டு நடைமுறையே இருந்தது/இருக்கிறது. “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது கூட” அந்தக் கூட்டத்தின் வழியே தான் முடிவு செய்யப் படுகிறது.
ஆக, நடுவண் அரசை நத்திப் பிழைக்கும் பிழைப்புத்தான் இன்றைய இந்தியாவில் என்றென்றும் மாநில அரசிற்கு வாய்த்திருக்கிறது. எனவே எந்த மாநில அரசுக் கட்சியும் நடுவரசை எதிர்த்துக் கொள்ளாது. நலத்திட்டங்களில் நக்கிப் பிழைக்க வேண்டுமானால், நடுவண் அரசுக் கட்சியின் சொற்படிதான் கேட்க வேண்டும். தனிப்படச் சொந்தமாக ஒரு கொள்கை வைத்து, அரசியல் பொருளியற் புலங்களில் இவர்கள் செயற்படவே முடியாது. கிட்டத்தட்ட, ஊராட்சி மன்றங்களை தமிழ்நாடு அரசு எப்படி நடத்தி வைத்திருக்கிறதோ, அதே நிலையில் தான் மாநில அரசை, நடுவண் அரசும் நடத்துகிறது. மாநில அரசுகளுக்கு அதிகாரம், உரிமை கிடைத்திருக்கிறது என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் பம்மாத்து என்றே சொல்லவேண்டும்.
இது தான் உள்ளமை நிலை. மாற்றம் வேண்டுமானால் இதில் மாற்றம் வேண்டும். ஒரு மாநிலத்தின் செலவு நடைக்குத் தகுந்தாற்போல, அதன் வரவும் அங்கேயே அதற்குக் கிடைக்க வேண்டும். மாநிலச் செலவு 100 உருவாய் என்றால் உள்ளூர் வரவு 20 உருவாயாய் இருந்து, மீதியை நடுவண் அரசிடம் இருந்து ஏந்திப் பெறவேண்டுமானால், அப்புறம் தமிழினம், தமிழரசு என்று பேசுவதில் பொருளில்லை.
இதே நிலை தான் ஆற்று நீர் வளங்களைப் பெறுவதிலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதிலும் இருக்கிறது. காவிரி ஆற்று நீரைப் பங்கு போட்டுக் கொள்ளுவதில் உச்ச நயன்மை மன்றம் ஒரு தீர்ப்புச் சொல்கிறது. அதைச் செயற் படுத்துவதற்கு ஒரு நடுவாளராகக் (referee) கூட நடுவண் அரசு இருக்க மாட்டேன் என்கிறது. இதன் விளைவாய், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று ஆகிப் போனது. மாநில அரசு வலுவற்றதாக இருந்தால், அப்புறம் என்ன ”சுய ஆட்சி”? ஈழச்சிக்கலில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைப்பாடும் இந்த”ஒற்றை இந்தியா” கொள்கையின் விளைவே. இந்தியத் தரகு முதலாளியத்திற்குத் தமிழீழம் என்பது ஏற்படக் கூடாது என்ற கருத்தும் ”ஒற்றை இந்தியா” என்ற கருத்தீட்டின் பரிமானம் தான். ஊழல் மலிந்த சிங்களப் பேரினவாத அரசு தனக்குப் பணி செய்யும் என்றே இந்தித் தரகு முதலாளியம் எண்ணிக் கொள்கிறது. எனவே தமிழினத்திற்கு எதிராகத்தான் இந்திய நடுவரசு வேலை செய்யும். தி.மு.க. அரசு தான் நிலைத்துநிற்கப் பேராயத்தை அண்ட வேண்டியிருக்கிற நிலையில், ஒற்றை இந்தியாவின் கருத்தை அதனால் மீறவே முடியாது. எனவே, தி,மு.க, அல்லது. அ.தி.மு.க. அரசுகள் தமிழீழம் ஏற்பட எந்தக் காலத்தும் வகைசெய்யா.
ஒற்றை இந்தியா என்ற கருத்தாக்கமும் பல்தேச இந்தியா என்ற கருத்தாக்கமும் ஒன்றிற்கொன்று முரணானவை. இற்றைப் பேராயக் கட்சி ஒற்றை இந்தியா என்ற கருத்தீட்டில் ஊன்றிப் போனது. பாரதீய சனதாக் கட்சியும் அதையேதான் சொல்கிறது. (அதனால் தான் தரகு முதலாளியமும் அதை ஏற்றுக் கொள்ளுகிறது.) பல்தேச இந்தியா என்ற கருத்தீட்டைத் தூக்கிப் பிடித்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியர்) கூட நடைமுறையில் ஒற்றை இந்தியாவைத்தான் செயற்படுத்தி வருகின்றனர். (பல்தேசம் என்ற கருத்தை உதட்டளவில் மட்டுமே அவர் சொல்லிவருகின்றனர்.)
முதற் கேள்வி இந்திய விடுதலை பற்றியது. விடுதலை எப்போது கிடைக்கும்? [இந்தக் கேள்வியின் அடிப்படை, இந்தியாவின் வளங்களும், செல்வமும், உழைப்பும், பிரித்தானிய முற்றாளுமைக்குப் பயன்படாமல், இந்திய மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற வேட்கையில் இருந்தது.] 1947 ஆகத்து 15 இல் விடை கிடைத்தபின், இந்த கேள்வி மக்கள் மனத்தை விட்டு நீங்கத் தொடங்கியது. 1950 சனவரி 26 இல் ”நாமே இந்நாட்டு மன்னர்” என்று உறுதி செய்த நிலையில், பிரித்தானிய அரசின் ஆளுமை அடியோடு அறுக்கப் பட்ட நிலையில், இந்தக் கேள்விக்கு வேலையில்லாமற் போய், முற்றிலுமாய் அகன்றது.
ஆனால், இந்தியாவின் பல்தேசத் தன்மை பற்றிய இரண்டாவது கேள்வி நெடுநாட்கள் தங்கி நம்மிடையே ஊறிக் கிடந்தது. நாடு விடுதலை பெற்றபோது, ”இந்தியா என்பது பல தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் ஓர் இடமாகப்” புரியப்பட்டு, 1969க்குப் பின், தலைகீழாய், அரசியற் பொருளியல் கொள்கைகள் மாறி, இன்று எதிர்மறையாக, ஒற்றைத் தேச நாடாக, கட்டி அமைக்கப்படும் நிலைக்கு வந்திருப்பதால், இந்தக் கேள்வி நம் முன் முகன்மை பெறுகிறது. [இந்தியா என்ற அரசியல் கருத்தீடு 100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் துணைக்கண்டத்தில் இருந்ததில்லை.]
1947 அளவில் இங்கிருந்த பல கட்சிகளும், இயக்கங்களும் [அதில் பேராயமும், சமவுடைமைக் (socialistic) கட்சிகளும், பொதுவுடைமைக் கட்சியும் முகன்மையானவை], ”பல்தேசம்” என்ற உள்ளமை (= reality) நிலையை உணர்ந்தே இருந்ததால், பல்தேசத் தன்மையைக் கவனமாகவே காப்பாற்றின. பேராயக் கட்சியின் ஆவடி மாநாடு கூட அதை ஆழ்ந்து கவனத்தில் எடுத்துக் கொண்டது. இந்தகைய கவனத்தின் காரணமாக, இந்த நாட்டின் பெயரைக் கூட ”இந்திய ஒன்றியம்” என்றே அற்றை அரசியலார் சொல்லிவந்தனர். [1969 ற்கு அப்புறம் நெருக்கடி நிலை உருவான பின் தான், நம்முடைய புகற்கடவுப் (passport) பொத்தகங்களில் “இந்தியக் குடியரசு (Republic of India)” என்று பெயர் பொறிக்கும் நிலை வந்தது. ஒன்றியம் என்ற கருத்தீடு ஓடியே போயிற்று.]
தொடக்கத்தில் ”இந்திய ஒன்றியம்” என்ற புரிதலின் விளைவாக, 1954 இல் ஆந்திராவில் பொட்டி சிரி ராமுலுவின் போராட்டத்திற்கு அப்புறம் உருவான ”மொழிவாரி மாநிலங்கள்” கொள்கையைப் பேராயக் கட்சியும் ஒப்புக் கொண்டது. [இன்றோ, அதிகார வர்க்கத்தில் இருக்கும் பலரும் ”மொழிவாரி மாநிலங்கள்” என்று அன்றைய அரசு ஏற்படுத்தியதே தவறு என்று சொல்லிக் கொண்டு திரிகிறார். அதை இந்தியாத் தரகுமுதலாளியமும் (comprador capitalism) ஏற்றுக் கொள்கிறது.] "வலுவான மாநில அரசுகள் சேர்ந்தே வலுவான நடுவரசு ஏற்படமுடியும்" என்ற அடிப்படை ஆழுணர்வு மாறி, ”வலுவான நடுவரசு, வலுவற்ற மாநிலங்கள்” என்பதே இன்றையக் கட்டுமானத்தின் அடிப்படையாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் தில்லிக்காரனைத் தேடி ஓடும் நாய்ப்பிழைப்பு இன்று ஏற்பட்டிருக்கிறது.
அன்றைய நிலையில் நாட்டின் விளிம்பெங்கணும் (குறிப்பாக, கடல் மற்றும் நில எல்லைகளில்) எல்லாம், வரையறுத்துச் சொல்லத் தக்க தேசிய இனங்கள் ஏற்பட்டிருந்தன. நாட்டின் உட்புறத்தில் மட்டும் இந்தி மொழி பேசும் ஒரு தேசிய இனம் உருவாகாத நிலையில் இருந்தது. நாட்டு விடுதலைக்கு அப்புறம், பொருளியல் வளர்ச்சி ஏற்பட, ஏற்பட, இந்தி பேசும் தேசிய இனம் ஒன்று உருவாகும் என்றே பலரும் எதிர்பார்த்தார். இப்படிச் சொல்லும் போது, ”தேசிய இனங்களுக்கு இடையே முரண்பாடுகள் உண்டு, அந்த முரண்பாடுகள். இந்தியாவின் வளங்கள் மேம்பாடு ஆகாத சூழ்நிலையில், பெரிதாகிப் பின்னால் அந்த வளங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் போது, தேசிய இனங்களின் இடையே பங்குச் சிக்கல் வரத்தான் செய்யும்” என்று ஆய்ந்தோர் அறிந்திருந்தார். அதே பொழுது, ”இந்த முரண்பாடுகளைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள, இந்தியக் குடியரசுச் சட்ட அமைப்பு இடங் கொடுக்கும், பங்குச் சிக்கல்களைப் பேசித் தீர்க்க முடியும்” என்றே அவர் எண்ணினார்.
ஆனால், விடுதலை இந்தியாவில் இருந்த இரண்டுவகை முதலாளிகளில் இந்திய நாட்டு நலனில் அக்கறை கொண்ட தேசிய முதலாளிகள் வளருவார் என்ற எதிர்ப்பார்ப்புப் பொய்த்துப் போய், தரகு முதலாளிகளே வளர்ந்து, இன்றைக்கு ஒற்றை இந்தியா என்ற கட்டுமானம் பெரிதாக ஆகிப் போனது. தரகு முதலாளிகளின் முகவரான (agent) இந்திய தேசியப் பேராயக் கட்சி இன்றைக்கு ஒற்றை இந்தியாவையே முன்வைக்கிறது. அதன் விளைவாக, நாட்டில் அரசுக்கு வரும் வருமானங்கள் [வரி (tax), சுங்கம் (customs duty), உல்கு (excise duty - இதைக் கலால் வரி என்றே நாளிதழ்கள் சொல்லிவருகின்றன)] என எல்லாமே நடுவண் அரசில் குவிந்து, மாநில அரசுகள் பெறும் விற்பனை வரி ஆகக் குறைந்து போக, ஒவ்வோர் ஆண்டும் திட்டக் குழுவோடு நடக்கும் பங்குப் பிரிப்பில் ”ஐயா, சாமி, எங்களுக்கு இன்னுங் கொஞ்சம் பிச்சை போடுங்கள், நாலு மாதமாய்ச் சரியாச் சாப்பிடலை சாமி” என்று ஏந்திப் பிழைக்கும் நிலையே நடந்து வருகிறது.
எந்த தமிழ்நாட்டு முதலமைச்சரும் இந்தப் பங்குப்பிரிப்புக் கூட்டத்திற்குப் போகாமல் இருக்க மாட்டார். [வேறு எத்தனையோ கூட்டங்களுக்குப் போகாமல் இருப்பவர், இதை மட்டும் தவிர்க்கவே மாட்டார். இதில் ஐயாவும், அம்மாவும், ஒன்று போலத்தான்.] “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்று இவர் போடும் கூச்சல்கள் எல்லாம் வெற்று முழக்கங்கள். ”பிச்சை போடும் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பிச்சை போடுகிறார்” என்பதில் தான், இவரின் அந்தந்த ஆண்டு நடைமுறையே இருந்தது/இருக்கிறது. “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது கூட” அந்தக் கூட்டத்தின் வழியே தான் முடிவு செய்யப் படுகிறது.
ஆக, நடுவண் அரசை நத்திப் பிழைக்கும் பிழைப்புத்தான் இன்றைய இந்தியாவில் என்றென்றும் மாநில அரசிற்கு வாய்த்திருக்கிறது. எனவே எந்த மாநில அரசுக் கட்சியும் நடுவரசை எதிர்த்துக் கொள்ளாது. நலத்திட்டங்களில் நக்கிப் பிழைக்க வேண்டுமானால், நடுவண் அரசுக் கட்சியின் சொற்படிதான் கேட்க வேண்டும். தனிப்படச் சொந்தமாக ஒரு கொள்கை வைத்து, அரசியல் பொருளியற் புலங்களில் இவர்கள் செயற்படவே முடியாது. கிட்டத்தட்ட, ஊராட்சி மன்றங்களை தமிழ்நாடு அரசு எப்படி நடத்தி வைத்திருக்கிறதோ, அதே நிலையில் தான் மாநில அரசை, நடுவண் அரசும் நடத்துகிறது. மாநில அரசுகளுக்கு அதிகாரம், உரிமை கிடைத்திருக்கிறது என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் பம்மாத்து என்றே சொல்லவேண்டும்.
இது தான் உள்ளமை நிலை. மாற்றம் வேண்டுமானால் இதில் மாற்றம் வேண்டும். ஒரு மாநிலத்தின் செலவு நடைக்குத் தகுந்தாற்போல, அதன் வரவும் அங்கேயே அதற்குக் கிடைக்க வேண்டும். மாநிலச் செலவு 100 உருவாய் என்றால் உள்ளூர் வரவு 20 உருவாயாய் இருந்து, மீதியை நடுவண் அரசிடம் இருந்து ஏந்திப் பெறவேண்டுமானால், அப்புறம் தமிழினம், தமிழரசு என்று பேசுவதில் பொருளில்லை.
இதே நிலை தான் ஆற்று நீர் வளங்களைப் பெறுவதிலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதிலும் இருக்கிறது. காவிரி ஆற்று நீரைப் பங்கு போட்டுக் கொள்ளுவதில் உச்ச நயன்மை மன்றம் ஒரு தீர்ப்புச் சொல்கிறது. அதைச் செயற் படுத்துவதற்கு ஒரு நடுவாளராகக் (referee) கூட நடுவண் அரசு இருக்க மாட்டேன் என்கிறது. இதன் விளைவாய், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று ஆகிப் போனது. மாநில அரசு வலுவற்றதாக இருந்தால், அப்புறம் என்ன ”சுய ஆட்சி”? ஈழச்சிக்கலில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைப்பாடும் இந்த”ஒற்றை இந்தியா” கொள்கையின் விளைவே. இந்தியத் தரகு முதலாளியத்திற்குத் தமிழீழம் என்பது ஏற்படக் கூடாது என்ற கருத்தும் ”ஒற்றை இந்தியா” என்ற கருத்தீட்டின் பரிமானம் தான். ஊழல் மலிந்த சிங்களப் பேரினவாத அரசு தனக்குப் பணி செய்யும் என்றே இந்தித் தரகு முதலாளியம் எண்ணிக் கொள்கிறது. எனவே தமிழினத்திற்கு எதிராகத்தான் இந்திய நடுவரசு வேலை செய்யும். தி.மு.க. அரசு தான் நிலைத்துநிற்கப் பேராயத்தை அண்ட வேண்டியிருக்கிற நிலையில், ஒற்றை இந்தியாவின் கருத்தை அதனால் மீறவே முடியாது. எனவே, தி,மு.க, அல்லது. அ.தி.மு.க. அரசுகள் தமிழீழம் ஏற்பட எந்தக் காலத்தும் வகைசெய்யா.
ஒற்றை இந்தியா என்ற கருத்தாக்கமும் பல்தேச இந்தியா என்ற கருத்தாக்கமும் ஒன்றிற்கொன்று முரணானவை. இற்றைப் பேராயக் கட்சி ஒற்றை இந்தியா என்ற கருத்தீட்டில் ஊன்றிப் போனது. பாரதீய சனதாக் கட்சியும் அதையேதான் சொல்கிறது. (அதனால் தான் தரகு முதலாளியமும் அதை ஏற்றுக் கொள்ளுகிறது.) பல்தேச இந்தியா என்ற கருத்தீட்டைத் தூக்கிப் பிடித்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியர்) கூட நடைமுறையில் ஒற்றை இந்தியாவைத்தான் செயற்படுத்தி வருகின்றனர். (பல்தேசம் என்ற கருத்தை உதட்டளவில் மட்டுமே அவர் சொல்லிவருகின்றனர்.)
திராவிடநாட்டுக் கொள்கையைக் கைவிட்டபின்பு ”பல்தேச இந்தியா” என்ற கொள்கையைத் தான் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற பெயரில் தி.மு.க. சொல்லி வந்தது. அ.தி.மு.க.விற்கும் கிட்டத்தட்ட இதே கொள்கை தான். ஆனாலும் நடுவண் அரசில் பங்குபெற்றுச் சுவை கண்ட பின்னர் இந்த இரு கட்சிகளும் ”சுய ஆட்சி” என்ற கருத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போகச் செய்து விட்டன. முதுகெலும்பு இழந்த இந்தக் கட்சிகள் இனிமேல் எழுந்துவந்து ”சுய ஆட்சியை”த் தூக்கிப் பிடிக்கும் என்பதெல்லாம் பகற்கனவே.
எனவே கொள்கையளவில், ”பல்தேச இந்தியா” என்பதற்கு எதிராகச் செயற்பட்டு, “ஒற்றை இந்தியா” என்ற கொள்கையை நிலைநாட்டி வரும் பேராயக் கட்சியும், “பல்தேச இந்தியா” என்ற கொள்கையை நீர்த்துப் போகச் செய்து, பேராயத்திற்கு/பா.ச.க. ஆகியவற்றிற்கு அடியாளாக வேலை செய்து கொண்டிருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நாம் ஒதுக்கத்தான் வேண்டும்.
எந்தக் கட்சிகள் “பல்தேச இந்தியா” என்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்றனவோ, அவற்றையே நாம் ஆதரிக்க இயலும்.
அன்புடன்,
இராம.கி.
எனவே கொள்கையளவில், ”பல்தேச இந்தியா” என்பதற்கு எதிராகச் செயற்பட்டு, “ஒற்றை இந்தியா” என்ற கொள்கையை நிலைநாட்டி வரும் பேராயக் கட்சியும், “பல்தேச இந்தியா” என்ற கொள்கையை நீர்த்துப் போகச் செய்து, பேராயத்திற்கு/பா.ச.க. ஆகியவற்றிற்கு அடியாளாக வேலை செய்து கொண்டிருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நாம் ஒதுக்கத்தான் வேண்டும்.
எந்தக் கட்சிகள் “பல்தேச இந்தியா” என்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்றனவோ, அவற்றையே நாம் ஆதரிக்க இயலும்.
அன்புடன்,
இராம.கி.
Thursday, February 26, 2009
இலங்கை இனக்கொலை பற்றிய அறிக்கைகள்
இலங்கையின் மேலுள்ள இனக்கொலைக் குற்றஞ்சாட்டலை ஆய்ந்தறிவதற்காக, அமெரிக்க மேலவை உட்குழுவின் முன்னால் அளிக்கப்பட்ட அறிக்கைகளை கீழே உள்ள சுட்டியில்
http://voicefromtamils.blogspot.com/2009/02/us-subcommittee-to-hear-genocide.html
படிக்கலாம். இதில் இரு அறிக்கைகள் வெள்ளைக்காரர்கள் அளித்தது. மூன்றாவது ஈழத் தமிழர் அளித்தது. யாரேனும் சில ஈழத் தமிழர்கள், மற்ற தமிழரும் அறியும் வகையில், இந்த அறிக்கைகளைத் தமிழாக்கிப் பதிந்து வைத்தால் நன்றாக இருக்கும். வாய்ப்பிருக்கும் தமிழகத் தமிழர்கள் இவற்றைத் தமிழ் மிடையங்களில் (குறிப்பாக அச்சுத் தாளிகைகளில்) வெளிவர வைத்தால் நன்றாக இருக்கும்.
இப்படி நான் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. (என்னை மன்னியுங்கள்.) பொதுவாகத் தமிழர்கள் சொன்னால், மற்ற தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ”அவனும் பழுப்பு, நானும் பழுப்பு, அவன் பேச்சை நானென்ன நம்புவது?” என்ற எகத்தாளம் நம்மிடையே நிறையவே உண்டு. இந்த எண்ணம் சிற்றகவையில் இருந்தே நம்மிடம் வருவதனால், பழுப்பு நிறத்தவர் பேச்சை தமிழர்கள் சட்டென்று நம்புவதில்லை. மிகுந்த விளக்கங்கள் தரவேண்டும். ஆனால், வெள்ளைக்காரர்கள் சொல்லுவதை அப்படியே நம்புவார்கள். (அந்த அளவிற்கு நம்மில் அடிமைப் புத்தி விரவிக் கிடக்கிறது); எனவே தான் இந்த அறிக்கைகள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதால், மொழிமாற்றம் செய்யச் சொல்லுகிறேன்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “தமிழர் பற்றிய அறிக்கைகள் ஒருபக்கம் உலகெங்கும் சொல்ல வேண்டும்; அதற்கு ஆங்கில மொழியில் அறிக்கைகள் வேண்டும். இன்னொரு பக்கம் அவற்றை உலகெங்கும் உள்ள தமிழர்கள் (குறிப்பாக 6.5 கோடி இந்தியத் தமிழர்கள்) உணரவேண்டும்; அதற்குத் தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்யப்படவேண்டும். [இதை நம் போன்றோர் செய்யாததனால் தான் இந்து நாளிதழ் போன்றவர்கள் தமிழரை ஏமாற்ற முடிகிறது.]”
அன்புடன்,
இராம.கி.
http://voicefromtamils.blogspot.com/2009/02/us-subcommittee-to-hear-genocide.html
படிக்கலாம். இதில் இரு அறிக்கைகள் வெள்ளைக்காரர்கள் அளித்தது. மூன்றாவது ஈழத் தமிழர் அளித்தது. யாரேனும் சில ஈழத் தமிழர்கள், மற்ற தமிழரும் அறியும் வகையில், இந்த அறிக்கைகளைத் தமிழாக்கிப் பதிந்து வைத்தால் நன்றாக இருக்கும். வாய்ப்பிருக்கும் தமிழகத் தமிழர்கள் இவற்றைத் தமிழ் மிடையங்களில் (குறிப்பாக அச்சுத் தாளிகைகளில்) வெளிவர வைத்தால் நன்றாக இருக்கும்.
இப்படி நான் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. (என்னை மன்னியுங்கள்.) பொதுவாகத் தமிழர்கள் சொன்னால், மற்ற தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ”அவனும் பழுப்பு, நானும் பழுப்பு, அவன் பேச்சை நானென்ன நம்புவது?” என்ற எகத்தாளம் நம்மிடையே நிறையவே உண்டு. இந்த எண்ணம் சிற்றகவையில் இருந்தே நம்மிடம் வருவதனால், பழுப்பு நிறத்தவர் பேச்சை தமிழர்கள் சட்டென்று நம்புவதில்லை. மிகுந்த விளக்கங்கள் தரவேண்டும். ஆனால், வெள்ளைக்காரர்கள் சொல்லுவதை அப்படியே நம்புவார்கள். (அந்த அளவிற்கு நம்மில் அடிமைப் புத்தி விரவிக் கிடக்கிறது); எனவே தான் இந்த அறிக்கைகள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதால், மொழிமாற்றம் செய்யச் சொல்லுகிறேன்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “தமிழர் பற்றிய அறிக்கைகள் ஒருபக்கம் உலகெங்கும் சொல்ல வேண்டும்; அதற்கு ஆங்கில மொழியில் அறிக்கைகள் வேண்டும். இன்னொரு பக்கம் அவற்றை உலகெங்கும் உள்ள தமிழர்கள் (குறிப்பாக 6.5 கோடி இந்தியத் தமிழர்கள்) உணரவேண்டும்; அதற்குத் தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்யப்படவேண்டும். [இதை நம் போன்றோர் செய்யாததனால் தான் இந்து நாளிதழ் போன்றவர்கள் தமிழரை ஏமாற்ற முடிகிறது.]”
அன்புடன்,
இராம.கி.
Saturday, February 21, 2009
இந்துவை வாங்காதீர்கள்
அன்பிற்குரிய தமிழகத் தமிழர்களுக்கு,
ஈழம் பற்றிய செய்திகளை நம்மூரில் தெரியவிடாமல் செய்து கொண்டிருப்பதில் ஆங்கில மிடையங்களின் பங்கு பெரியது (தமிழ் மிடையங்களில் ஒருசில கொஞ்சமாக வேணும் செய்திகளை வெளியிடுகின்றன.) அதிலும் முகன்மையான பங்கு வகிப்பது இலங்காரத்னாவின் “The Hindu" நாளிதழ் தான். இவர்களின் திமிரான ஆட்டங்கள், ஈழம் பற்றிய குசும்புகள், அங்கு இவர்கள் செய்த குழப்படிகள், ஈழத்தைத் தமிழகத் தமிழரிடமிருந்து உணர்வால் பிரித்தது, தமிழினக் கொலைக்கு உறுதுணையாக இருப்பது எனப் பலவாறாச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நாட்டின், இனத்தின், தேசத்தின் எதிர்காலத்தில் விளையாட என்.ராமுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களின் கூட்டிக் கொடுக்கும் செயலுக்குப் பரிசாகப் பெற்ற இலங்காரத்னா பட்டத்தின் ஆழம் இப்பொழுதாவது நம் மக்களுக்குப் புரியட்டும்.
இவர்களின் அழிச்சாட்டியம் இவர்கள் நாளிதழை நாம் வாங்குகின்ற வரையில் தான் நீளும். இவர்களின் பொய்யும் புளுகும் இவர்களின் வயிற்றில் அடித்தால் தான் நிற்கும். அவர்களை நிற்பாட்டுவது நம் கையில் இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் கூட்டாகச் சேர்ந்தால் செய்யமுடியும்.
இது காந்தி செய்த வழி தான் ”ஒத்துழையாமை இயக்கம்”. இவர்களின் பொருள்களை (இங்கு நாளிதழ்) வாங்காமல் இருந்தால் தானே வழிக்கு வருவார்கள். இது நம்மால் முற்றிலும் செய்யக் கூடிய ஒரு செயல் தான்.
இனி வரும் நாட்களில் யாரும் இந்துவை வாங்காதீர்கள். கால காலப் பழக்கத்தை நிறுத்துவது நம்மில் பலருக்கும் சரவல் தான். ஆனாலும் செய்யுங்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பழக்கத்தை கடினமாய் முயன்று நிறுத்தி ஒரு மாதமாக நான் வாங்காது இருக்கிறேன். இந்த நாளிதழ் ஈழம் பற்றிய செய்திகளில் நொதுமல் (neutral) நிலை எடுக்கும் வரை இதை வாங்குவதில்லை என்பதே என் முடிவு. (அப்படிச் செய்தி தெரியவேண்டுமென்றால் வலைத்தளங்களுக்குப் போய் தெரிந்து கொள்ளுங்கள்.) நம் காசு வாங்கி இவர்கள் பிழைக்க வேண்டாம்.
என்னை அறிந்த பலருக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை உங்களுக்குத் தெரிந்த எல்லோரிடமும் சொல்லுங்கள்.
சிறுதுளி பெருவெள்ளம். இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளம் பெருகியிருந்தால் மனம் கொஞ்சமாவது ஆறுதற்படும்.
அன்புடன்,
இராம.கி..
ஈழம் பற்றிய செய்திகளை நம்மூரில் தெரியவிடாமல் செய்து கொண்டிருப்பதில் ஆங்கில மிடையங்களின் பங்கு பெரியது (தமிழ் மிடையங்களில் ஒருசில கொஞ்சமாக வேணும் செய்திகளை வெளியிடுகின்றன.) அதிலும் முகன்மையான பங்கு வகிப்பது இலங்காரத்னாவின் “The Hindu" நாளிதழ் தான். இவர்களின் திமிரான ஆட்டங்கள், ஈழம் பற்றிய குசும்புகள், அங்கு இவர்கள் செய்த குழப்படிகள், ஈழத்தைத் தமிழகத் தமிழரிடமிருந்து உணர்வால் பிரித்தது, தமிழினக் கொலைக்கு உறுதுணையாக இருப்பது எனப் பலவாறாச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நாட்டின், இனத்தின், தேசத்தின் எதிர்காலத்தில் விளையாட என்.ராமுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களின் கூட்டிக் கொடுக்கும் செயலுக்குப் பரிசாகப் பெற்ற இலங்காரத்னா பட்டத்தின் ஆழம் இப்பொழுதாவது நம் மக்களுக்குப் புரியட்டும்.
இவர்களின் அழிச்சாட்டியம் இவர்கள் நாளிதழை நாம் வாங்குகின்ற வரையில் தான் நீளும். இவர்களின் பொய்யும் புளுகும் இவர்களின் வயிற்றில் அடித்தால் தான் நிற்கும். அவர்களை நிற்பாட்டுவது நம் கையில் இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் கூட்டாகச் சேர்ந்தால் செய்யமுடியும்.
இது காந்தி செய்த வழி தான் ”ஒத்துழையாமை இயக்கம்”. இவர்களின் பொருள்களை (இங்கு நாளிதழ்) வாங்காமல் இருந்தால் தானே வழிக்கு வருவார்கள். இது நம்மால் முற்றிலும் செய்யக் கூடிய ஒரு செயல் தான்.
இனி வரும் நாட்களில் யாரும் இந்துவை வாங்காதீர்கள். கால காலப் பழக்கத்தை நிறுத்துவது நம்மில் பலருக்கும் சரவல் தான். ஆனாலும் செய்யுங்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பழக்கத்தை கடினமாய் முயன்று நிறுத்தி ஒரு மாதமாக நான் வாங்காது இருக்கிறேன். இந்த நாளிதழ் ஈழம் பற்றிய செய்திகளில் நொதுமல் (neutral) நிலை எடுக்கும் வரை இதை வாங்குவதில்லை என்பதே என் முடிவு. (அப்படிச் செய்தி தெரியவேண்டுமென்றால் வலைத்தளங்களுக்குப் போய் தெரிந்து கொள்ளுங்கள்.) நம் காசு வாங்கி இவர்கள் பிழைக்க வேண்டாம்.
என்னை அறிந்த பலருக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை உங்களுக்குத் தெரிந்த எல்லோரிடமும் சொல்லுங்கள்.
சிறுதுளி பெருவெள்ளம். இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளம் பெருகியிருந்தால் மனம் கொஞ்சமாவது ஆறுதற்படும்.
அன்புடன்,
இராம.கி..
Friday, February 06, 2009
மீளுகிறதா 1965? - 2
மொழித்திணிப்புக் கொள்கைக்கு எதிராக அன்றைக்கு எழுந்த தமிழ் மாணவர் போராட்டம் இப்பொழுது நினைவிற்கு வருவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்றும் அதே பேராயக் கட்சி தான் (ஆனால் ஒரு கூட்டணியமைப்பில்) நடுவணரசை ஆளுகிறது. இந்த ஆட்சியின் ஊடாக இன்றைக்குச் சிங்கள அரசின் தமிழின அழிப்புப் போருக்கு முற்றிலும் ஆதரவாய், ஆள்வலுவும், ஆயுத வலுவும், அரண வலுவும் சேர்த்து அளித்துவரும் பேராயக் கட்சியரசின் கொள்கையைக் கண்டித்து இன்றையத் தமிழ் மாணவர் போராட்டம் எழுந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தின் ஓர் ஓட்டமாய் கொலவைநல்லூர் முத்துக் குமரனின் கனல்புகுதலும், பள்ளப்பட்டி இரவியின் தீக்குளிப்பும் நடந்து முடிந்திருக்கின்றன..
[அன்றும், வடவர் ஆட்சியின் இந்தித் திணிப்பைக் கடிந்து, இதைப் போல 5 பேர் எரியுண்டனர். அன்று, செஞ்சிக் கோட்டத்துத் தேவனூர் சிவலிங்கம், சென்னைக் கோடம்பாக்கத்துக் கூடல் மறுகில் (junction) கன்னெய் ஊட்டி எரிபுகுந்து துஞ்சிய செயலை
................................
ஆடுநெய் ஒழுக முச்சியின் அப்பிப்
பாடுவெள் அருவி பாய்தல் போலும்
கன்னெய் முழுகி கனல்புகுந் தாடிய
...........................
என்று நூறாசிரியம் 59 ஆம் பாடலில் பெருஞ்சித்திரனார் மருட்கையுறப் பாடியிருப்பார். (நூறாசிரியத்தில் 12 பாடல்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியே இருக்கின்றன.)]
இது போன்ற இக்கட்டான நேரங்களில், உலகமே பாராமுகமாய் இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் கவனயீர்ப்பாக்கும் வகையில் முத்துக் குமரனைப் போன்றோர் உணர்வு மேலிட்டு, தம் உயிரையும் துச்சமாய் மதித்து, ஈகம் செய்து, நம் அகக் கண்ணைத் திறக்கிறார்கள். அவர் செய்ததைத் தனிமாந்தராய்ப் பார்த்தால் யாராலும் ஏற்க முடியாதது தான், இருந்தாலும் நம்மைச் சுற்றிலும் அரசும், மிடையமும் (media), அதிகார அறிவுய்திகளும் (ruling intelligentia) சேர்ந்து செய்திகளை மறைத்து, திரித்து, பொய்சொல்லி கண்ணைக் கட்டிப் போட்டிருக்கும் காலத்தில், மோனித்துக் கிடக்கும் நம் போன்றோரைத் தட்டி எழுப்புவது இது போன்ற இளைஞர்களுடைய செயற்பாடும் உணர்வும் தான். அதற்கு அப்புறம் இந்தப் புலனத்தில் மரத்துக் கிடந்தால் நமக்கு உய்வு என்பது என்றுமே இல்லை.
[தன்னையே எரித்துக் கொண்டு மற்றாருக்கு ஒளிதரும் இது போன்ற ஈகத்தை ஒருசிலர் கொச்சைப் படுத்தி எழுதுவதும், விதண்டா வாதமாய் ”அந்தத் தலைவனின் மகன் இறந்தானா, இந்தத் தலைவனின் உறவினன் இறந்தானா?” என்று எழுதுவதும் என்ன ஒரு பித்துக்குளித்தனம் என்று நமக்குப் புரிவதில்லை. எந்த ஒரு மகனும் தன் தந்தையிடம் வந்து “நான் தீக்குளிக்கலாமா?” என்று கேட்கவும் மாட்டான், அதே போல எந்தவொரு தந்தையும் தன் மகனைப் பார்த்து ”நீ தீக்குளி” என்று சொல்லவும் மாட்டார். இது போன்ற செயல்கள் உணர்வு மேலீட்டால் தன்மயமான புரிதலில் ஒருசிலர் செய்யும் தன்னேர்ச்சிகள் என்பதே இயல்பு. அந்தக் காலத்து வடக்கிருந்து நோன்பிருத்தல் போல, போருக்கு முன்னால் ஒரு சில மறவர்கள் செய்துகொள்ளும் நவகண்டம் போல, தீக்குளிப்பதும் நம் மரபில் பலகாலம் நடந்திருக்கிறது. [அதை இங்கு நான் எடுத்துரைப்பது சரியாக இருக்காது.] “இதைச்செய்” என்று யாருமே இவர்களுக்குச் சொல்லுவதில்லை. அவர்களாய்ச் செய்கிறார்கள்; நமக்கு ஓர் அவலத்தை உணர்த்துகிறார்கள். இந்தப் புரிதலை விடுத்து, அவரை முட்டாள் என்று சொல்லி அவர் மானத்தைக் குலைப்பது, கொஞ்சங் கூட ஈவு இரக்கம் இல்லாத கொலைக்கே சமம். குறிப்பாக தன் தீக்குளிப்பின் முன்னே முத்துக்குமரன் எழுதிக் கொடுத்திருக்கும் ஆவணம் ”அவன் அறிவாளி, ஈழ அவலத்தை உணர்த்தவே இந்தச் செயலைச் செய்திருக்கிறான், இதன் விளைவுகளை உணர்ந்தே செய்திருக்கிறான்” என்றும் தெளிவாகவே தெரிகிறது. அவன் அளித்த செய்தியை உள்ளார்ந்து கொள்ளுவதே அவனுக்கு நாம் அளிக்கும் மரியாதை.]
நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடம் ஈழத்தில் நடக்கும் அவலம் பற்றியும், அங்கே ஒரு பேரினவாதம் தலைவிரித்து ஆடி தமிழினத்தை அழித்துக் கொண்டிருப்பதைச் சொல்லியும், முத்துக்குமரனின் ஆவணத்தைப் பரப்பியும், செயலாற்ற வேண்டியதே நமக்கு ஏற்படும் முறைமை. இதில் இந்திய நடுவணரசின் ஆதரவு, (அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துச் செய்யும்) உள்ளடிச் செயல் போன்ற பித்தலாட்டங்களைப் பலருக்கு உணர்த்துவதும் நம் கடமை.
ஏதோ இராசீவ் காந்தி தவறிப் போனதற்கு இன்றைக்குப் பேராயக் கட்சியின் தலைவர்கள் பழிவாங்குகிறார்கள் என்பது என் புரிதல் இல்லை. தமிழீழம் ஏற்படக் கூடாது என்று எப்படியோ ஒரு தேற்றத்தில் இந்திய அரசு நினைக்கிறது. தமிழ் ஈழம் என்னும் நாடு, இந்திய அரசின் எதிர்காலத் திட்டங்களுக்குத் தடையாக இருக்கும் என்று பேராயக் கட்சி எண்ணுகிறது. அண்மையில் கோ.திருநாவுக்கரசு சுட்டிக் காட்டிய ஒரு சிங்களவரின் கட்டுரையைப் படித்தபோது [
http://links.org.au/node/885#comment-10821
], அதில் சொல்லப்படும் காரணம் எனக்கு வலிந்ததாகத் தெரிந்தது. அதில் ”திரிகோணமலைத் துறைமுகம் ஊழல் நிறைந்த, சிங்கள அரசின் கையில் இருப்பது நல்லது. புலிகளைப் போன்ற கொள்கைவாதக் குழுக்களிடம் சிக்குவது தன் எதிர்கால முனைப்புகளுக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று இந்திய அரசு எண்ணுகிறது” என்ற கருத்துச் சொல்லப் பட்டிருப்பது எனக்கு வலுவாகத் தெரிகிறது. இந்தியப் பெருங்கடலில் ஆட்சி செலுத்தத் தமிழீழம் தடையாய் இருக்கும் என்று இந்திய அரசு ஒருவேளை எண்ணுகிறது போலும். [இராசேந்திர சோழன், தன் தந்தையோடு நல்ல உறவு கொண்டிருந்த சிரீவிசய அரசனைத் தோற்கடித்து கடற்போக்குவரத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த வரலாறு இங்கு என் நினைவிற்கு வருகிறது.]
இந்தியெதிர்ப்புப் போராட்டம் நடந்த அன்றைக்குப் பக்தவத்சலம் இருந்தது போல், இன்றைக்குக் கலைஞர் கருணாநிதி கையாளாக இருந்து அடக்குமுறைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அன்றைக்குக் கல்லூரிகளை மூடியது போல், இன்றைக்கும் கல்லூரிகளை மூட அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. இன்னும் வரும் கிழமைகளில் என்னென்ன நடக்குமோ என்று சொல்ல முடியாது. இந்தியெதிர்ப்பில் பேராயக் கட்சி நடந்து கொண்ட விதங்களை மறந்துவிடாது, இரண்டு ஆண்டுகளுக்கு நினைவு வைத்திருந்து, பேராயக் கட்சியை மாணவர் கூட்டம் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. இதன் விளைவால் திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை பேராயக் கட்சியினால் மாநில அரசுகட்டில் ஏறமுடியாமலே போய்விட்டது. இந்த வரலாறெல்லாம் உணர்ந்தவர் தான் திரு. கருணாநிதி. அதனால் தான் எழுச்சி கட்டுக்கு அடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது என்றவுடன், கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடிவிட்டார். இனி வருங்காலங்களில் எங்கெல்லாம் நீரூற்றி அணைக்க முடியுமோ, அதையும் செய்வார். “தமிழரைக் காப்பவன் நான் ஒருவன் தான்” என்று எல்லாவிதக் கூப்பாடும் குட்டிக் கரணங்களும் இருக்கும்.
அவருடைய அரசு மாநிலத்திலும், பேராயக் கட்சியின் அரசு நடுவண் மன்றத்திலும் தொங்கிக் கொண்டு இருக்கிநது. நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று நாம் கேட்கவேண்டாம். எப்படி இருந்தாலும் “உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ
கெட்டாய்” என்று இவர்கள் கொண்டையைப் பிய்த்துக் கொண்டு கிடக்கத்தான் போகிறார்கள். .
நாம் செய்ய வேண்டியது மிக எளிது, தமிழக மாணவர்களும், அவர்களுக்கு அணைவான தமிழகப் பெற்றோர்களும், இன்று நடப்பதை ஒரு நாலு மாதங்களுக்கு நினைவு வைத்திருந்தால், நடுவணரசை ஆளமுடியாமலே பேராயக் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அதுவொன்றே தமிழின அழிப்பிற்கு உதவிபோனதற்குப் பேராயக் கட்சிக்குச் சரியான பாடமாய் அமையும். அதாவது, தமிழகத்தில் இருந்து பேராயக் கட்சி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூடப் பெறக் கூடாது.
அதே போல, திராவிட முன்னேற்றக் கழகமும், மாநில அரசையும் இழந்து, நாடாளுமன்ற உறுப்புமையும், முற்றிலும் இழக்க வேண்டும். [தி.மு.க. இல்லையென்றால் தமிழர் எதிர்காலம் இல்லை என்ற மாயை இனிமேலும் இல்லாது தமிழரிடையே மறையவேண்டும். தி.மு.க. எழுந்ததற்கு ஆக்கவேலையை 1967ல் பார்த்த என்னைப் போன்றோர் தான் சொல்லுகிறோம். எதிர்காலம் உறுதியாக இன்னொரு தலைமையைக் கொண்டுவரும்.]
இந்த உறுதியில் இடைபுகுந்து, (ஐயா இல்லையென்றால் அம்மா என்ற வழக்கத்தில்) அ.தி.மு.க.வும் வெற்றி கொள்ளக் கூடாது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பேராயம், தி.மு.க. அ.தி.மு.க என்று மூன்றுமே கருகிப் போகும் நிலை உருவாக வேண்டும் அப்படி ஆவது ஒன்றே இவர்களை உறைக்க வைக்கும். இந்த மூன்று கட்சிகள் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் நம் மக்கள் வாக்கு அளிக்கலாம்.
இதை நாம் வெளிப்படையாகவே ஊரெங்கும் சொல்லிப் பரப்பலாம். அதுவொன்றே, இந்த இரண்டு அரசையும் பதற வைத்து, ஈழத்தில் போரை நிறுத்த வைக்கும். ஈழ உறவுகளுக்கு நாம் உதவ முடிந்ததாயும் அமையும். “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பது தமிழில் ஒரு சொலவடை. அரசியற் கட்சிகளுக்குத் தாங்கள் அடுத்த தேர்தலில் உறுதியாய் வெல்லமாட்டோ என்பது ஒரு மரண அடியே.
இதற்கான முன்முனைப்பும், உறுதியும், தமிழக மக்கள் கையில் தான் உள்ளது.
(இன்னும் வரும்)
அன்புடன்,
இராம.கி.
[அன்றும், வடவர் ஆட்சியின் இந்தித் திணிப்பைக் கடிந்து, இதைப் போல 5 பேர் எரியுண்டனர். அன்று, செஞ்சிக் கோட்டத்துத் தேவனூர் சிவலிங்கம், சென்னைக் கோடம்பாக்கத்துக் கூடல் மறுகில் (junction) கன்னெய் ஊட்டி எரிபுகுந்து துஞ்சிய செயலை
................................
ஆடுநெய் ஒழுக முச்சியின் அப்பிப்
பாடுவெள் அருவி பாய்தல் போலும்
கன்னெய் முழுகி கனல்புகுந் தாடிய
...........................
என்று நூறாசிரியம் 59 ஆம் பாடலில் பெருஞ்சித்திரனார் மருட்கையுறப் பாடியிருப்பார். (நூறாசிரியத்தில் 12 பாடல்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியே இருக்கின்றன.)]
இது போன்ற இக்கட்டான நேரங்களில், உலகமே பாராமுகமாய் இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் கவனயீர்ப்பாக்கும் வகையில் முத்துக் குமரனைப் போன்றோர் உணர்வு மேலிட்டு, தம் உயிரையும் துச்சமாய் மதித்து, ஈகம் செய்து, நம் அகக் கண்ணைத் திறக்கிறார்கள். அவர் செய்ததைத் தனிமாந்தராய்ப் பார்த்தால் யாராலும் ஏற்க முடியாதது தான், இருந்தாலும் நம்மைச் சுற்றிலும் அரசும், மிடையமும் (media), அதிகார அறிவுய்திகளும் (ruling intelligentia) சேர்ந்து செய்திகளை மறைத்து, திரித்து, பொய்சொல்லி கண்ணைக் கட்டிப் போட்டிருக்கும் காலத்தில், மோனித்துக் கிடக்கும் நம் போன்றோரைத் தட்டி எழுப்புவது இது போன்ற இளைஞர்களுடைய செயற்பாடும் உணர்வும் தான். அதற்கு அப்புறம் இந்தப் புலனத்தில் மரத்துக் கிடந்தால் நமக்கு உய்வு என்பது என்றுமே இல்லை.
[தன்னையே எரித்துக் கொண்டு மற்றாருக்கு ஒளிதரும் இது போன்ற ஈகத்தை ஒருசிலர் கொச்சைப் படுத்தி எழுதுவதும், விதண்டா வாதமாய் ”அந்தத் தலைவனின் மகன் இறந்தானா, இந்தத் தலைவனின் உறவினன் இறந்தானா?” என்று எழுதுவதும் என்ன ஒரு பித்துக்குளித்தனம் என்று நமக்குப் புரிவதில்லை. எந்த ஒரு மகனும் தன் தந்தையிடம் வந்து “நான் தீக்குளிக்கலாமா?” என்று கேட்கவும் மாட்டான், அதே போல எந்தவொரு தந்தையும் தன் மகனைப் பார்த்து ”நீ தீக்குளி” என்று சொல்லவும் மாட்டார். இது போன்ற செயல்கள் உணர்வு மேலீட்டால் தன்மயமான புரிதலில் ஒருசிலர் செய்யும் தன்னேர்ச்சிகள் என்பதே இயல்பு. அந்தக் காலத்து வடக்கிருந்து நோன்பிருத்தல் போல, போருக்கு முன்னால் ஒரு சில மறவர்கள் செய்துகொள்ளும் நவகண்டம் போல, தீக்குளிப்பதும் நம் மரபில் பலகாலம் நடந்திருக்கிறது. [அதை இங்கு நான் எடுத்துரைப்பது சரியாக இருக்காது.] “இதைச்செய்” என்று யாருமே இவர்களுக்குச் சொல்லுவதில்லை. அவர்களாய்ச் செய்கிறார்கள்; நமக்கு ஓர் அவலத்தை உணர்த்துகிறார்கள். இந்தப் புரிதலை விடுத்து, அவரை முட்டாள் என்று சொல்லி அவர் மானத்தைக் குலைப்பது, கொஞ்சங் கூட ஈவு இரக்கம் இல்லாத கொலைக்கே சமம். குறிப்பாக தன் தீக்குளிப்பின் முன்னே முத்துக்குமரன் எழுதிக் கொடுத்திருக்கும் ஆவணம் ”அவன் அறிவாளி, ஈழ அவலத்தை உணர்த்தவே இந்தச் செயலைச் செய்திருக்கிறான், இதன் விளைவுகளை உணர்ந்தே செய்திருக்கிறான்” என்றும் தெளிவாகவே தெரிகிறது. அவன் அளித்த செய்தியை உள்ளார்ந்து கொள்ளுவதே அவனுக்கு நாம் அளிக்கும் மரியாதை.]
நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடம் ஈழத்தில் நடக்கும் அவலம் பற்றியும், அங்கே ஒரு பேரினவாதம் தலைவிரித்து ஆடி தமிழினத்தை அழித்துக் கொண்டிருப்பதைச் சொல்லியும், முத்துக்குமரனின் ஆவணத்தைப் பரப்பியும், செயலாற்ற வேண்டியதே நமக்கு ஏற்படும் முறைமை. இதில் இந்திய நடுவணரசின் ஆதரவு, (அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துச் செய்யும்) உள்ளடிச் செயல் போன்ற பித்தலாட்டங்களைப் பலருக்கு உணர்த்துவதும் நம் கடமை.
ஏதோ இராசீவ் காந்தி தவறிப் போனதற்கு இன்றைக்குப் பேராயக் கட்சியின் தலைவர்கள் பழிவாங்குகிறார்கள் என்பது என் புரிதல் இல்லை. தமிழீழம் ஏற்படக் கூடாது என்று எப்படியோ ஒரு தேற்றத்தில் இந்திய அரசு நினைக்கிறது. தமிழ் ஈழம் என்னும் நாடு, இந்திய அரசின் எதிர்காலத் திட்டங்களுக்குத் தடையாக இருக்கும் என்று பேராயக் கட்சி எண்ணுகிறது. அண்மையில் கோ.திருநாவுக்கரசு சுட்டிக் காட்டிய ஒரு சிங்களவரின் கட்டுரையைப் படித்தபோது [
http://links.org.au/node/885#comment-10821
], அதில் சொல்லப்படும் காரணம் எனக்கு வலிந்ததாகத் தெரிந்தது. அதில் ”திரிகோணமலைத் துறைமுகம் ஊழல் நிறைந்த, சிங்கள அரசின் கையில் இருப்பது நல்லது. புலிகளைப் போன்ற கொள்கைவாதக் குழுக்களிடம் சிக்குவது தன் எதிர்கால முனைப்புகளுக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று இந்திய அரசு எண்ணுகிறது” என்ற கருத்துச் சொல்லப் பட்டிருப்பது எனக்கு வலுவாகத் தெரிகிறது. இந்தியப் பெருங்கடலில் ஆட்சி செலுத்தத் தமிழீழம் தடையாய் இருக்கும் என்று இந்திய அரசு ஒருவேளை எண்ணுகிறது போலும். [இராசேந்திர சோழன், தன் தந்தையோடு நல்ல உறவு கொண்டிருந்த சிரீவிசய அரசனைத் தோற்கடித்து கடற்போக்குவரத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த வரலாறு இங்கு என் நினைவிற்கு வருகிறது.]
இந்தியெதிர்ப்புப் போராட்டம் நடந்த அன்றைக்குப் பக்தவத்சலம் இருந்தது போல், இன்றைக்குக் கலைஞர் கருணாநிதி கையாளாக இருந்து அடக்குமுறைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அன்றைக்குக் கல்லூரிகளை மூடியது போல், இன்றைக்கும் கல்லூரிகளை மூட அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. இன்னும் வரும் கிழமைகளில் என்னென்ன நடக்குமோ என்று சொல்ல முடியாது. இந்தியெதிர்ப்பில் பேராயக் கட்சி நடந்து கொண்ட விதங்களை மறந்துவிடாது, இரண்டு ஆண்டுகளுக்கு நினைவு வைத்திருந்து, பேராயக் கட்சியை மாணவர் கூட்டம் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. இதன் விளைவால் திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை பேராயக் கட்சியினால் மாநில அரசுகட்டில் ஏறமுடியாமலே போய்விட்டது. இந்த வரலாறெல்லாம் உணர்ந்தவர் தான் திரு. கருணாநிதி. அதனால் தான் எழுச்சி கட்டுக்கு அடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது என்றவுடன், கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடிவிட்டார். இனி வருங்காலங்களில் எங்கெல்லாம் நீரூற்றி அணைக்க முடியுமோ, அதையும் செய்வார். “தமிழரைக் காப்பவன் நான் ஒருவன் தான்” என்று எல்லாவிதக் கூப்பாடும் குட்டிக் கரணங்களும் இருக்கும்.
அவருடைய அரசு மாநிலத்திலும், பேராயக் கட்சியின் அரசு நடுவண் மன்றத்திலும் தொங்கிக் கொண்டு இருக்கிநது. நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று நாம் கேட்கவேண்டாம். எப்படி இருந்தாலும் “உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ
கெட்டாய்” என்று இவர்கள் கொண்டையைப் பிய்த்துக் கொண்டு கிடக்கத்தான் போகிறார்கள். .
நாம் செய்ய வேண்டியது மிக எளிது, தமிழக மாணவர்களும், அவர்களுக்கு அணைவான தமிழகப் பெற்றோர்களும், இன்று நடப்பதை ஒரு நாலு மாதங்களுக்கு நினைவு வைத்திருந்தால், நடுவணரசை ஆளமுடியாமலே பேராயக் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அதுவொன்றே தமிழின அழிப்பிற்கு உதவிபோனதற்குப் பேராயக் கட்சிக்குச் சரியான பாடமாய் அமையும். அதாவது, தமிழகத்தில் இருந்து பேராயக் கட்சி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூடப் பெறக் கூடாது.
அதே போல, திராவிட முன்னேற்றக் கழகமும், மாநில அரசையும் இழந்து, நாடாளுமன்ற உறுப்புமையும், முற்றிலும் இழக்க வேண்டும். [தி.மு.க. இல்லையென்றால் தமிழர் எதிர்காலம் இல்லை என்ற மாயை இனிமேலும் இல்லாது தமிழரிடையே மறையவேண்டும். தி.மு.க. எழுந்ததற்கு ஆக்கவேலையை 1967ல் பார்த்த என்னைப் போன்றோர் தான் சொல்லுகிறோம். எதிர்காலம் உறுதியாக இன்னொரு தலைமையைக் கொண்டுவரும்.]
இந்த உறுதியில் இடைபுகுந்து, (ஐயா இல்லையென்றால் அம்மா என்ற வழக்கத்தில்) அ.தி.மு.க.வும் வெற்றி கொள்ளக் கூடாது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பேராயம், தி.மு.க. அ.தி.மு.க என்று மூன்றுமே கருகிப் போகும் நிலை உருவாக வேண்டும் அப்படி ஆவது ஒன்றே இவர்களை உறைக்க வைக்கும். இந்த மூன்று கட்சிகள் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் நம் மக்கள் வாக்கு அளிக்கலாம்.
இதை நாம் வெளிப்படையாகவே ஊரெங்கும் சொல்லிப் பரப்பலாம். அதுவொன்றே, இந்த இரண்டு அரசையும் பதற வைத்து, ஈழத்தில் போரை நிறுத்த வைக்கும். ஈழ உறவுகளுக்கு நாம் உதவ முடிந்ததாயும் அமையும். “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பது தமிழில் ஒரு சொலவடை. அரசியற் கட்சிகளுக்குத் தாங்கள் அடுத்த தேர்தலில் உறுதியாய் வெல்லமாட்டோ என்பது ஒரு மரண அடியே.
இதற்கான முன்முனைப்பும், உறுதியும், தமிழக மக்கள் கையில் தான் உள்ளது.
(இன்னும் வரும்)
அன்புடன்,
இராம.கி.
Thursday, February 05, 2009
மீளுகிறதா 1965? - 1
---------------------------------------------
"1965 சனவரி 25 ஆம் பக்கல் மாணவர் எழுச்சிப் போராக இந்தியெதிர்ப்புணர்வு வெடித்தது. இப்போர் பிப்ரவரி 12 ஆம் நாள் வரை தீவிரமாக நடந்தது. அக்கால் பேராயக் கட்சி தமிழகத்தில் அரசு வீற்றிருந்தது. திரு.பக்தவத்சலம் முதல்வராக அமர்ந்து, மாணவர்களின் எதிர்ப்புணர்ச்சியைச் சற்றும் பொருட்படுத்தாது, தில்லியாட்சியரின் கையாளாக இருந்து, அடக்கு முறைகளையும், வன்மங்களையும் கையாண்டு, மாணவர்கள் பலரையும் பொதுமக்கள் பலரையும் சுட்டு வீழ்த்தி, நடுவணரசால், 'எஃகு நெஞ்சர்' என்று பாராட்டப் பெற்றார். அக்கால் நடந்த இந்தியெதிர்ப்புப் போரில் ஏற்பட்ட பொதுவிழப்புகளும், உயிரழிவுகளும் நிகழ்ச்சிகளும் பற்பல. அவற்றுள் சில வருமாறு:
1. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரனும் இளங்கோவனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. கோடம்பாக்கம் சிவலிங்கமும் விருகம்பாக்கம் அரங்கநாதனும் தீக்குளித்தனர்.
3. சென்னை, கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்ற கல்லூரி மாணவர்களைக் காவலர்கள் அடித்து நொறுக்கியதில் ஏறத்தாழ 50 மாணவர்கள் படுகாயமுற்றனர்.
4. முப்பது பொது உந்துகள் கொளுத்தப்பட்டன.
5. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் ஒன்றரை மாத காலத்துக்கு மூடப்பட்டிருந்தன.
6. சென்னை நகர வீதிகளில் குதிரைக் காவலர்கள் உலாவந்த வண்ணம் இருந்தனர்.
7. ஆயிரக்கணக்கான மாணவியர் கறுப்புப் புடவை, சட்டையுடன் மதுரை ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
8. சனவரி 25 முதல் 28 வரை 2000 பேர் சிறைப்படுத்தப்பட்டனர்.
9. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டது.
10. காவலர்கள் கல்லூரிகளுள் புகுந்து மாணவர்களை அடிக்கையில் பேராசிரியர்கள் பலரும் காயம்பட்டனர்.
11. சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சி, சிதம்பரம், சேலம், நெல்லை, திருவாரூர், சிவகாசி, பட்டுக்கோட்டை, அரக்கோணம், தாளவாடி, ஆரணி, இராணிப்பேட்டை, வேலூர், ஆலந்தூர், வளவனூர், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, திண்டிவனம், நெய்வேலி, வெங்காலூர், புதுவை, கடலூர், குன்னூர், கும்பகோணம், கடையநல்லூர், திருப்பூர், நாகர்கோயில், காரைக்கால், சாத்தூர், அருப்புக்கோட்டை, வாசுதேவநல்லூர் முதலிய ஊர்களில் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடந்துவந்தன.
12. சென்னைக் கடற்கரையில் இந்திப் பொத்தகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
13. அமைச்சர் மகன் ஒருவனும், காவல் அதிகாரி மகன் ஒருவனும், அமைச்சர் ஒருவர் மருமகனும் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
14. மதுரையில் மலையுந்துக்கும் (Jeep), பேராயக் கட்சி அலுவலகத்திற்கும், தீவைக்கப்பெற்றது.
15. மதுரையில் வடநாட்டினர் உணவு விடுதியைத் தாக்கி அதன் இந்திப் பெயர்ப்பலகைக்கும், குடியரசு நாளைக் கொண்டாட அமைத்த பந்தலுக்கும் தீவைத்தனர்.
16. நாடெங்கும் இந்தியரக்கியின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.
17. சென்னை இசுடான்லி மருத்துவமனைப் பயிற்சி மருத்துவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர்.
18. சென்னை பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து பேராசிரியர்களை அரம்பர்(ரௌடி)கள் என்று கூறி, மாணவர்களைக் காவலர்கள் அம்மணமாக நிறுத்திவைத்து அடித்தனர். மாணவர்களைப் பார்க்கவந்த பெற்றோர்களும் இந்தக் கொடுமைக்கு ஆளாயினர்.
19. திருச்சி கீரனூரில் 20 அகவை முத்து என்பவர் இந்தித்திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டு இறந்தார்.
20. கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன.
21. தொடர்வண்டிகள் கொளுத்தப்பட்டன.
22. சோமனூர், திருப்பூர், கரூர், குறிஞ்சிப்பாடி, திருவொற்றியூர், தக்கோலம், மணப்பாறை, புதுவை ஆகிய தொடர்வண்டி நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
23. சென்னை, வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், திருப்பூர் முதலிய இடங்களுக்குப் பட்டாளங்கள் அனுப்பப்பட்டன.
24. அமைச்சர்கள் சுப்பிரமணியமும், அழகேசனும் வேலைவிடுப்பு நாடகம் நடத்தினர்.
25. கல்கத்தாவிலும் பள்ளிகள் மூடப்பட்டன.
26. கரூரில் காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டார்.
27. திருச்சி மரக்கடை அஞ்சலகம் தீவைக்கப்பட்டது.
28. ஏறத்தாழ 20 தொடர்வண்டி நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.
29. பொள்ளாச்சி நகரமே வெறிச்சோடிக் கிடந்தது.
30. மதுரை, கூடலூரில் இரு காவலர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். திருப்பூரில் இரு காவல் அதிகாரிகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.
31. நூற்றுக்கணக்கான அஞ்சற்பெட்டிகளும், பொதுத்தொலைபேசி நிலையங்களும் தீக்கிரையாகின.
32. கர்னூலிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
33. தஞ்சை அஞ்சலகம், தூத்துக்குடி அஞ்சலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
34. திருச்சி அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் உழவர் முத்து இருவர் மேலும் தீக்குளித்தனர்.
35. சென்னை ஆழ்வார்ப்பேட்டை மாநகராட்சிப் பள்ளிக்குத் தீவைத்தனர்.
36. அனைத்துத் தொடர்வண்டிகளும் ஒரு கிழமை காலத்துக்கு ஓடவில்லை.
37. அரசினர் உந்துக்கள் பதினைந்து நாட்களுக்கு ஓடவில்லை.
38. பஞ்சாபிலும் துமுக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.
39. மொத்தம் 50 உந்து வண்டிகள் கொளுத்தப்பட்டன.
40. புதுவை அரவிந்தர் பாழி தாக்கப்பட்டு தீவைக்கப்பெற்றது.
41. இந்திப்படம் காட்டாதே என்று நாகர்கோவில், சென்னை, கோவை முதலிய இடங்களில் கொட்டகைகள் முன் போராடித் தடுத்து நிறுத்தினர்.
42. செங்கோட்டையருகில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டது.
43. கல்கத்தாவிலும் போராட்டம் தொடங்கியதால், பள்ளிகளை 15 நாட்கள் மூடும்படி கல்கத்தா அரசு ஆணையிட்டது.
44. ஆரணி அஞ்சலகம் சூறையாடப்பட்டது.
45. திருத்தணியில் மாணவர்கள் தொடர்வண்டிக் கடவைக் கதவுகளை உடைத்துத் தூள்தூளாக்கினர்.
46. அனந்தப்பூரில் ஏறத்தாழ 3000 பேர் தொடர்வண்டி நிலையத்தைத் தாக்கினர்.
47. 12 வானூர்திகளில் பட்டாளம் வரவழைக்கப்பட்டது.
48. குடியேற்றத்தில் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் கைகலப்பு நேர்ந்து, காவலர்கள் மாணவர்கள் மேல் 14 முறை துமுக்கிச்சூடு நடத்தினர்.
49. கடையநல்லூரில் தொலைவரிக் கம்பிகள் அறுக்கப்பட்டன.
50. 1965-இல் இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் காவலர்கள் சுட்டதால் இறந்தவர்கள் மொத்தம் 68 பேர். தீக்குளிப்பில் இறந்தவர்கள் 5 பேர்.
தீயிடலில் மாண்டவர் ஒருவர். மக்களால் தாக்கப்பட்டு மாண்ட காவலர்கள் 4 பேர். இறந்த 68 பேரில் குமாரபாளையத்தில் 15 பேர். பொள்ளாச்சியில் 10 பேர். புதுச்சேரியில் 10 பேர்."
---------------------------------------------------------------
மேலே வருவது பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "நூறாசிரியம்" நூலில் உள்ள 51 -வது பாடலின் கீழ் கொடுக்கப் பட்டுள்ள குறிப்புக்களில் இருந்து எடுத்தது.
இன்று பிப்ரவரி 5, 2009. இன்றிலிருந்து சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை (மேலே வரிசையிட்டவற்றையும் சேர்த்து) இப்பொழுது நினைவு கூர்கிறேன். [கூடவே, என்னுடைய 16 அகவை முடிந்து புகுமுகு வகுப்பிற் படிக்குங் காலத்தில், திருச்சியில் நடந்த இந்தியெதிர்ப்பு எழுச்சியையும், அதை அடக்குமுகமாய், முகனைக் காவற் கதவத்திற்கு (Main Guard Gate) அருகில் புனித வளனார் கல்லூரி, லாலி அரங்கின் முன்னால் நானும் பலரும் காவலரால் பட்ட அடிகளையும், அதன்பின் தொடர்ந்த மற்ற காவல் நிலைய நிகழ்வுகளையும், கூட இதே கணம் எண்ணிப் பார்க்கிறேன்.]
இன்றைக்கு 60 ஐத் தொட்டுக் கொண்டிருக்கும் பலரும் ஏதோவொரு வகையில் இது போன்று இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்பட்டிருந்திருப்பார்கள்.
1965 -இல் அன்றைக்கும் நடுவணரசில் பேராயக் கட்சியே (காங்கிரசு) வீற்றிருந்தது. அதன் இந்தி ஆதிக்கப் போக்கால் ஆடிப் போன மாணவர் குமுகாயம், தங்கள் எதிர்காலமே அடைபட்டுப் போனதாய் எண்ணித் திகைப்புற்று, அதன் விளைவால் அன்றைக்குப் போராட்டம் நடத்தியது. பின்னால் இந்தி ஆதிக்கத்தைத் தமிழ்கொண்டு எதிர்க்காமல், அதைத் தொலைத்து, ஆங்கிலம் கொண்டு எழுந்துவந்து தமிழ்க் குமுகாயம் வளர்ந்தது இன்னொரு விதப்பான (ஆனால் அடிப்படையில் சோரம்போன) கதை. அதை இங்கு நான் பேசவில்லை. நான் சொல்ல வருவது பேராயக் கட்சியின் தமிழெதிர்ப்புப் போக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதே. விடுதலைக்கு முன்னாலும், ஏன் விடுதலைக்குப் பிறகு ஒரு பத்தாண்டு காலமும் கூட, பேராயக் கட்சியானது தமிழரிடையே பெரிதும் ஆதரவு பெற்றிருந்தது உண்மை தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராரைச் சார்ந்த அறிவுய்திகளின் முட்டாள் தனமான யோசனைகளைக் கேட்டு, விடுதலை பெற்ற நாளாய், அடிமேல் அடிவைத்துத் தமிழரை ஒதுக்கும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாய், 1957 ல் இருந்து பெற்றதும் உண்மை. ”அறிவுக்கு நான்தான்” என்ற இந்த அறிவுய்திகள் ஒற்றை இந்தியாவை உருவாக்க ஆசைப்பட்டார்கள். அதற்கு பேராயக் கட்சி தலைசாய்த்தது. அந்தச் சாய்ப்பில் ஒரு முகன்மையான பங்கு தமிழரை எழவொட்டாது அடிப்பதும் ஒரு கூறு.
காட்டாக, மற்ற தேசிய இனங்கள் வெளிநாடுகளில் துரத்தப் பட்டபோது (குறிப்பாக, கென்யா, சாம்பியா, தான்சானியா, உகாண்டா ஆகியவற்றில் இருந்து குசராத்திகள் வெளியேற்றப் பட்டபோது), அவர்களுக்காகக் குரல் கொடுத்த இந்திய அரசு, பர்மாவில் தமிழர் துரத்தப் பட்டபோது, ஒரு முனகலோ, எதிர்ப்போ கூடச் செய்யாமல், வெறும் வதந்தியை நம்பிக் கப்பலை மட்டுமே அனுப்பி அகதிகளைக் கொண்டுவந்தது. துரத்தலைத் தடுத்து நிறுத்தவோ, இழப்பை ஈடுகட்ட பர்மிய அரசசங்கத்துடன் மல்லுக் கட்டவோ, எந்த முயற்சியையும் நேருவின் அரசு எடுக்கவே இல்லை. விடுதலை இந்தியாவில் தமிழருக்கு ஏற்பட்ட முதலடி பர்மாத் தமிழருக்கு ஓர் இழப்பும் வாங்கித் தராது இருந்ததே. பின்னால் பஞ்சையாய்ப் பராரியாய் ஓடிவந்தவர்கள் சென்னையில் "பர்மா பஜார்" ஏற்படுத்தியது மட்டுமே மிஞ்சியது.. இதன் விளைவால், தென்பாண்டி நாட்டில் பிழைப்புக் கெட்டு தஞ்சைத் தரணிக்குக் கூலித் தொழிலாளியாய் ஓடியது எவ்வளவு குடும்பங்கள்? வெளிநாட்டு தொடர்பு பட்ட தமிழகத்தமிழரில் 100க்கு 85/90 விழுக்காடு இவர்களே - இன்றையப் புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துகுடி மாவட்டத்தினரே - அதிகம்.
இது போல, அடுத்த சில ஆண்டுகளில், இலங்கையில் இருந்து தோட்டத் தொழிலாளர் விரட்டப் பட்டபோது, அந்த விரட்டலுக்கும் பேராயக்கட்சி அரசு ஓர் எதிர்ப்பையும் காட்டாமல், சிரிமாவோ - சாத்திரி ஒப்பந்தம் போட்டுச் சிங்களனுக்கு, அணைவாகவே இருந்தது. ”தமிழனா, ஓடிப்போ, உங்கள் ஊருக்கு?” இந்திய அரசு சோப்பளாங்கி என்று தெரிந்தவுடன்., அன்றிலிருந்து சிங்களன் இந்தியக்கழுதையின் மீது ஏறி சுமை சுமக்க வைக்காமல் வேறு என்ன செய்வான்? இத்தனைக்கும் சிங்களனின் தாய் மாநிலமான ஒரிய மாநிலம் கூக்குரலே போடவில்லை. இந்திய அரசு எங்கிருந்தோ தொலைந்து போன உறவுக்காரன் என்று சோறுபோட்டு விருந்து வைக்கிறது. மொத்தத்தில் ஒரு வலுவான எதிர்ப்பைக் கொஞ்சம் கூடக் காட்டாமல் இருந்தால் எப்படி? தமிழ் வரலாறு தெரிந்தவர்கள் இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களிடம் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சாரார், "ஒற்றை இந்தியம்" பேசி அதிகாரம் செய்து தமிழ் தேசிய இனம் உலகெங்கும் குலைந்து போக எல்லா வகையான வேலைகளையும் செய்தார்கள். பல்தேச இந்தியா என்ற கொள்கை இன்றுவரை அவர்களால் முற்றிலும் சாகடிக்கப் படுகிறது. [அதாவது இந்தியன் ஆகவேண்டுமென்றால் தமிழன் என்ற உணர்வைச் சாகடி; தமிழனாயும் இந்தியனாயும் ஒரே நேரத்தில் யாரும் இருக்கக் கூடாது.]
இந்தியத் தேசிய இனங்களில் குடியேற்றக் காலத்தில் பெரிதாக வெளிநாடுகளில் பிழைப்புக்குச் சென்றவர்கள் தமிழரும், ஓரளவு தெலுங்கரும், அதற்கும் குறைவாகக் குசராத்திகளும் (ஆனால் செல்வத்தால் பெரியவர்கள்), குசராத்திகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் கூடிய பீகாரிகளும் (ஆனால் செல்வ வளத்தில் குறைந்தவர்கள்) ஆகியோரே ஆவர்.
[இந்தப் பத்தியைக் கொட்டை எழுத்துக்களில் படித்துக் கொள்ளுங்கள்.] ஈழத்தமிழர்கள் இதில் அடங்கவே மாட்டார்கள். அவர்கள் காலங்காலமாய் அங்கேயே வழிவழியாய் வாழ்ந்தவர்கள். இந்தியர்களில் பலருக்கும், ஏன் தமிழகத் தமிழர்களில் கணிசமானவருக்கும் கூட, இந்த உண்மை தெரிவதே இல்லை. அந்த அளவிற்கு முட்டாள் தனமும், வரலாற்று மறதியும் இங்கே வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது..
[உண்மையை ஆய்ந்தால், பழந்தமிழகம் என்று நாமெல்லோரும் சொல்கிறோமே அதைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களின் ஈழத்திற்கும், இன்றையத் தமிழ்நாட்டிற்கும் இடைப்பட்ட இடமும், தமிழ்நாட்டுக் கடற்கரையை ஒட்டிக் கடலுள் நீளும் நிலமும், இதே போல ஈழக் கடற்கரையை ஒட்டிய நிலமும், எனக் கணிசமான இடைநிலம் கடல் கொண்டதைத் தான் நம் சங்க இலக்கியங்களில் கடல்கொண்ட நிலமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறிப்புக்களாய்ப் பார்க்கிறோம். மொத்தத்தில், இன்றைய ஈழமும், தமிழகமும், இவற்றிற்கு இடைப்பட்ட கடல்கொண்ட நிலமும் சேர்ந்தது தான் மூன்றாம் சங்கத்திற்கு முற்பட்ட பழந்தமிழகம். [அப்படி அழிந்த நிலத்தில் இருந்து கரையேறிய நிலந்தரு திருவிற் பாண்டியன் சோழனிடம் இருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடம் இருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பிடித்தான் என்பது வரலாறு. முத்தூர்க் கூற்றம் இன்றைய புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கடற்கரையை ஒட்டியது.] இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஈழம் அழிவதை நம் பழந்தமிழகத்தின் மிச்சசொச்சம் அழிவதாய்த்தான் கொள்ளமுடியும். இது கூடவா, தமிழகத் தமிழர்களுக்குப் புரியவில்லை? அடங்ஙொப்பரானே? அவன் உறவுக்காரண்டா, பங்காளிடா, அதைப் புரிஞ்சுக்குங்க! இந்திய நாட்டின் வடக்கில் இருந்து தமிழினம் சுருக்கப் பட்டு வடமாலவன் குன்றத்திற்குக் கீழ் நெரிந்தது போல், நம் கண்முன்னே இன்னொரு பக்கம் தென்கிழக்கில் ஈழம் சுருக்கப் படுவது தமிழின அழிப்பில்லாமல் வேறு என்ன? இது கூடப் புரியாமல், தலையில் மண்ணாங்கட்டியா இருக்கிறது?]
ஈழத் தமிழருக்கு என்ன நடந்ததோ அதே நடத்தமே இந்திய நடுவண் அரசு .மலேசியத் தமிழருக்கும் செய்தது. எங்கோ இருக்கிற பிஜி நாட்டில் இந்தியர்கள் நசுக்கப் பட்டால் இவர்கள் அலறுவார்கள். ஆனால் மலேசியத் தமிழனுக்குப் பாதிப்பு நேர்ந்தால் இவர்கள், “அது இன்னொரு நாட்டின் உள்நாட்டுச் சிக்கல்” என்று கீதை படிப்பார்கள். இவ்வளவு ஏன்? ஒரு சிறுசெய்தியைச் சொல்லுகிறேன். மொரிசியசு நாட்டில் தமிழ்ப் பாடப் பொத்தகமும், தமிழாசிரியர்களும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட போது, அங்கும் இங்குமாய்த் தனியார்தான் உதவிசெய்தார்களே தவிர, இந்திய அரசோ, தமிழக அரசோ ஒரு துரும்பை எடுத்துப் போடவில்லை. எப்போதும் போல் மெத்தனமாகவே இருந்தன. பொதுவாக வெளிநாட்டுத் தமிழர் என்றால் இந்திய அரசு என்றுமே கண்டுகொண்டது இல்லை. ”எக்கேடோ கெட்டுப் போங்கள், எம்மை வந்து அண்டாதீர்கள்”
பேராய நடுவண் அரசின் இந்தப் போக்கு, நாளடைவில் இந்தியத் தமிழரை நடத்துவதிலும் கூடிவந்தது. 1972க்கு அப்புறம் ஒரு நடுவனரசுத் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவே இல்லை. "வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது" என்ற கூப்பாடு 1980 வரை கூடத் தமிழ்நாட்டில் இருந்தது. அதற்கு அப்புறம் தமிழ்நாடு வேறுவகையில் தன் பிழைப்பை மீட்டுக் கொண்டது. தமிழைத் தொலைத்தது, ஆங்கிலப் படிப்பின் வழியும், தனியார் முயற்சியாலும் இங்கு தொழில் வளர்ச்சியும், பொருளியல் முன்னேற்றமும் ஏற்பட்டன. இருந்தாலும் பல தடைகளை நடுவண் அரசு விதித்தே வந்தது. இன்றைக்கும் தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கும் மற்ற மாநிலங்கள் எதிர்ப்புப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. நடுவண் அரசு ஒருமுறை கூட அவை சட்டப் புறம்பாகநடப்பதை எடுத்துக் கூறித் தடுத்ததே இல்லை. ஆனால், தமிழன் மட்டும் “நான் கற்புள்ளவள்” என்னுமாப் போல தன் நாட்டுப் பற்றைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டுமாம். :-) மற்ற மாநிலங்கள் ஒற்றை இந்தியாவைத் தூக்கிப் போட்டுக் கீழே மிதித்தாலும் இந்த நடுவண் அரசு மாமியார் கண்டுகொள்ளவே மாட்டாள்.
(இன்னும் வரும்)
அன்புடன்,
இராம.கி.
"1965 சனவரி 25 ஆம் பக்கல் மாணவர் எழுச்சிப் போராக இந்தியெதிர்ப்புணர்வு வெடித்தது. இப்போர் பிப்ரவரி 12 ஆம் நாள் வரை தீவிரமாக நடந்தது. அக்கால் பேராயக் கட்சி தமிழகத்தில் அரசு வீற்றிருந்தது. திரு.பக்தவத்சலம் முதல்வராக அமர்ந்து, மாணவர்களின் எதிர்ப்புணர்ச்சியைச் சற்றும் பொருட்படுத்தாது, தில்லியாட்சியரின் கையாளாக இருந்து, அடக்கு முறைகளையும், வன்மங்களையும் கையாண்டு, மாணவர்கள் பலரையும் பொதுமக்கள் பலரையும் சுட்டு வீழ்த்தி, நடுவணரசால், 'எஃகு நெஞ்சர்' என்று பாராட்டப் பெற்றார். அக்கால் நடந்த இந்தியெதிர்ப்புப் போரில் ஏற்பட்ட பொதுவிழப்புகளும், உயிரழிவுகளும் நிகழ்ச்சிகளும் பற்பல. அவற்றுள் சில வருமாறு:
1. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரனும் இளங்கோவனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. கோடம்பாக்கம் சிவலிங்கமும் விருகம்பாக்கம் அரங்கநாதனும் தீக்குளித்தனர்.
3. சென்னை, கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்ற கல்லூரி மாணவர்களைக் காவலர்கள் அடித்து நொறுக்கியதில் ஏறத்தாழ 50 மாணவர்கள் படுகாயமுற்றனர்.
4. முப்பது பொது உந்துகள் கொளுத்தப்பட்டன.
5. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் ஒன்றரை மாத காலத்துக்கு மூடப்பட்டிருந்தன.
6. சென்னை நகர வீதிகளில் குதிரைக் காவலர்கள் உலாவந்த வண்ணம் இருந்தனர்.
7. ஆயிரக்கணக்கான மாணவியர் கறுப்புப் புடவை, சட்டையுடன் மதுரை ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
8. சனவரி 25 முதல் 28 வரை 2000 பேர் சிறைப்படுத்தப்பட்டனர்.
9. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டது.
10. காவலர்கள் கல்லூரிகளுள் புகுந்து மாணவர்களை அடிக்கையில் பேராசிரியர்கள் பலரும் காயம்பட்டனர்.
11. சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சி, சிதம்பரம், சேலம், நெல்லை, திருவாரூர், சிவகாசி, பட்டுக்கோட்டை, அரக்கோணம், தாளவாடி, ஆரணி, இராணிப்பேட்டை, வேலூர், ஆலந்தூர், வளவனூர், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, திண்டிவனம், நெய்வேலி, வெங்காலூர், புதுவை, கடலூர், குன்னூர், கும்பகோணம், கடையநல்லூர், திருப்பூர், நாகர்கோயில், காரைக்கால், சாத்தூர், அருப்புக்கோட்டை, வாசுதேவநல்லூர் முதலிய ஊர்களில் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடந்துவந்தன.
12. சென்னைக் கடற்கரையில் இந்திப் பொத்தகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
13. அமைச்சர் மகன் ஒருவனும், காவல் அதிகாரி மகன் ஒருவனும், அமைச்சர் ஒருவர் மருமகனும் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
14. மதுரையில் மலையுந்துக்கும் (Jeep), பேராயக் கட்சி அலுவலகத்திற்கும், தீவைக்கப்பெற்றது.
15. மதுரையில் வடநாட்டினர் உணவு விடுதியைத் தாக்கி அதன் இந்திப் பெயர்ப்பலகைக்கும், குடியரசு நாளைக் கொண்டாட அமைத்த பந்தலுக்கும் தீவைத்தனர்.
16. நாடெங்கும் இந்தியரக்கியின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.
17. சென்னை இசுடான்லி மருத்துவமனைப் பயிற்சி மருத்துவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர்.
18. சென்னை பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து பேராசிரியர்களை அரம்பர்(ரௌடி)கள் என்று கூறி, மாணவர்களைக் காவலர்கள் அம்மணமாக நிறுத்திவைத்து அடித்தனர். மாணவர்களைப் பார்க்கவந்த பெற்றோர்களும் இந்தக் கொடுமைக்கு ஆளாயினர்.
19. திருச்சி கீரனூரில் 20 அகவை முத்து என்பவர் இந்தித்திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டு இறந்தார்.
20. கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன.
21. தொடர்வண்டிகள் கொளுத்தப்பட்டன.
22. சோமனூர், திருப்பூர், கரூர், குறிஞ்சிப்பாடி, திருவொற்றியூர், தக்கோலம், மணப்பாறை, புதுவை ஆகிய தொடர்வண்டி நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
23. சென்னை, வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், திருப்பூர் முதலிய இடங்களுக்குப் பட்டாளங்கள் அனுப்பப்பட்டன.
24. அமைச்சர்கள் சுப்பிரமணியமும், அழகேசனும் வேலைவிடுப்பு நாடகம் நடத்தினர்.
25. கல்கத்தாவிலும் பள்ளிகள் மூடப்பட்டன.
26. கரூரில் காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டார்.
27. திருச்சி மரக்கடை அஞ்சலகம் தீவைக்கப்பட்டது.
28. ஏறத்தாழ 20 தொடர்வண்டி நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.
29. பொள்ளாச்சி நகரமே வெறிச்சோடிக் கிடந்தது.
30. மதுரை, கூடலூரில் இரு காவலர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். திருப்பூரில் இரு காவல் அதிகாரிகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.
31. நூற்றுக்கணக்கான அஞ்சற்பெட்டிகளும், பொதுத்தொலைபேசி நிலையங்களும் தீக்கிரையாகின.
32. கர்னூலிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
33. தஞ்சை அஞ்சலகம், தூத்துக்குடி அஞ்சலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
34. திருச்சி அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் உழவர் முத்து இருவர் மேலும் தீக்குளித்தனர்.
35. சென்னை ஆழ்வார்ப்பேட்டை மாநகராட்சிப் பள்ளிக்குத் தீவைத்தனர்.
36. அனைத்துத் தொடர்வண்டிகளும் ஒரு கிழமை காலத்துக்கு ஓடவில்லை.
37. அரசினர் உந்துக்கள் பதினைந்து நாட்களுக்கு ஓடவில்லை.
38. பஞ்சாபிலும் துமுக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.
39. மொத்தம் 50 உந்து வண்டிகள் கொளுத்தப்பட்டன.
40. புதுவை அரவிந்தர் பாழி தாக்கப்பட்டு தீவைக்கப்பெற்றது.
41. இந்திப்படம் காட்டாதே என்று நாகர்கோவில், சென்னை, கோவை முதலிய இடங்களில் கொட்டகைகள் முன் போராடித் தடுத்து நிறுத்தினர்.
42. செங்கோட்டையருகில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டது.
43. கல்கத்தாவிலும் போராட்டம் தொடங்கியதால், பள்ளிகளை 15 நாட்கள் மூடும்படி கல்கத்தா அரசு ஆணையிட்டது.
44. ஆரணி அஞ்சலகம் சூறையாடப்பட்டது.
45. திருத்தணியில் மாணவர்கள் தொடர்வண்டிக் கடவைக் கதவுகளை உடைத்துத் தூள்தூளாக்கினர்.
46. அனந்தப்பூரில் ஏறத்தாழ 3000 பேர் தொடர்வண்டி நிலையத்தைத் தாக்கினர்.
47. 12 வானூர்திகளில் பட்டாளம் வரவழைக்கப்பட்டது.
48. குடியேற்றத்தில் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் கைகலப்பு நேர்ந்து, காவலர்கள் மாணவர்கள் மேல் 14 முறை துமுக்கிச்சூடு நடத்தினர்.
49. கடையநல்லூரில் தொலைவரிக் கம்பிகள் அறுக்கப்பட்டன.
50. 1965-இல் இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் காவலர்கள் சுட்டதால் இறந்தவர்கள் மொத்தம் 68 பேர். தீக்குளிப்பில் இறந்தவர்கள் 5 பேர்.
தீயிடலில் மாண்டவர் ஒருவர். மக்களால் தாக்கப்பட்டு மாண்ட காவலர்கள் 4 பேர். இறந்த 68 பேரில் குமாரபாளையத்தில் 15 பேர். பொள்ளாச்சியில் 10 பேர். புதுச்சேரியில் 10 பேர்."
---------------------------------------------------------------
மேலே வருவது பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "நூறாசிரியம்" நூலில் உள்ள 51 -வது பாடலின் கீழ் கொடுக்கப் பட்டுள்ள குறிப்புக்களில் இருந்து எடுத்தது.
இன்று பிப்ரவரி 5, 2009. இன்றிலிருந்து சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை (மேலே வரிசையிட்டவற்றையும் சேர்த்து) இப்பொழுது நினைவு கூர்கிறேன். [கூடவே, என்னுடைய 16 அகவை முடிந்து புகுமுகு வகுப்பிற் படிக்குங் காலத்தில், திருச்சியில் நடந்த இந்தியெதிர்ப்பு எழுச்சியையும், அதை அடக்குமுகமாய், முகனைக் காவற் கதவத்திற்கு (Main Guard Gate) அருகில் புனித வளனார் கல்லூரி, லாலி அரங்கின் முன்னால் நானும் பலரும் காவலரால் பட்ட அடிகளையும், அதன்பின் தொடர்ந்த மற்ற காவல் நிலைய நிகழ்வுகளையும், கூட இதே கணம் எண்ணிப் பார்க்கிறேன்.]
இன்றைக்கு 60 ஐத் தொட்டுக் கொண்டிருக்கும் பலரும் ஏதோவொரு வகையில் இது போன்று இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்பட்டிருந்திருப்பார்கள்.
1965 -இல் அன்றைக்கும் நடுவணரசில் பேராயக் கட்சியே (காங்கிரசு) வீற்றிருந்தது. அதன் இந்தி ஆதிக்கப் போக்கால் ஆடிப் போன மாணவர் குமுகாயம், தங்கள் எதிர்காலமே அடைபட்டுப் போனதாய் எண்ணித் திகைப்புற்று, அதன் விளைவால் அன்றைக்குப் போராட்டம் நடத்தியது. பின்னால் இந்தி ஆதிக்கத்தைத் தமிழ்கொண்டு எதிர்க்காமல், அதைத் தொலைத்து, ஆங்கிலம் கொண்டு எழுந்துவந்து தமிழ்க் குமுகாயம் வளர்ந்தது இன்னொரு விதப்பான (ஆனால் அடிப்படையில் சோரம்போன) கதை. அதை இங்கு நான் பேசவில்லை. நான் சொல்ல வருவது பேராயக் கட்சியின் தமிழெதிர்ப்புப் போக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதே. விடுதலைக்கு முன்னாலும், ஏன் விடுதலைக்குப் பிறகு ஒரு பத்தாண்டு காலமும் கூட, பேராயக் கட்சியானது தமிழரிடையே பெரிதும் ஆதரவு பெற்றிருந்தது உண்மை தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராரைச் சார்ந்த அறிவுய்திகளின் முட்டாள் தனமான யோசனைகளைக் கேட்டு, விடுதலை பெற்ற நாளாய், அடிமேல் அடிவைத்துத் தமிழரை ஒதுக்கும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாய், 1957 ல் இருந்து பெற்றதும் உண்மை. ”அறிவுக்கு நான்தான்” என்ற இந்த அறிவுய்திகள் ஒற்றை இந்தியாவை உருவாக்க ஆசைப்பட்டார்கள். அதற்கு பேராயக் கட்சி தலைசாய்த்தது. அந்தச் சாய்ப்பில் ஒரு முகன்மையான பங்கு தமிழரை எழவொட்டாது அடிப்பதும் ஒரு கூறு.
காட்டாக, மற்ற தேசிய இனங்கள் வெளிநாடுகளில் துரத்தப் பட்டபோது (குறிப்பாக, கென்யா, சாம்பியா, தான்சானியா, உகாண்டா ஆகியவற்றில் இருந்து குசராத்திகள் வெளியேற்றப் பட்டபோது), அவர்களுக்காகக் குரல் கொடுத்த இந்திய அரசு, பர்மாவில் தமிழர் துரத்தப் பட்டபோது, ஒரு முனகலோ, எதிர்ப்போ கூடச் செய்யாமல், வெறும் வதந்தியை நம்பிக் கப்பலை மட்டுமே அனுப்பி அகதிகளைக் கொண்டுவந்தது. துரத்தலைத் தடுத்து நிறுத்தவோ, இழப்பை ஈடுகட்ட பர்மிய அரசசங்கத்துடன் மல்லுக் கட்டவோ, எந்த முயற்சியையும் நேருவின் அரசு எடுக்கவே இல்லை. விடுதலை இந்தியாவில் தமிழருக்கு ஏற்பட்ட முதலடி பர்மாத் தமிழருக்கு ஓர் இழப்பும் வாங்கித் தராது இருந்ததே. பின்னால் பஞ்சையாய்ப் பராரியாய் ஓடிவந்தவர்கள் சென்னையில் "பர்மா பஜார்" ஏற்படுத்தியது மட்டுமே மிஞ்சியது.. இதன் விளைவால், தென்பாண்டி நாட்டில் பிழைப்புக் கெட்டு தஞ்சைத் தரணிக்குக் கூலித் தொழிலாளியாய் ஓடியது எவ்வளவு குடும்பங்கள்? வெளிநாட்டு தொடர்பு பட்ட தமிழகத்தமிழரில் 100க்கு 85/90 விழுக்காடு இவர்களே - இன்றையப் புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துகுடி மாவட்டத்தினரே - அதிகம்.
இது போல, அடுத்த சில ஆண்டுகளில், இலங்கையில் இருந்து தோட்டத் தொழிலாளர் விரட்டப் பட்டபோது, அந்த விரட்டலுக்கும் பேராயக்கட்சி அரசு ஓர் எதிர்ப்பையும் காட்டாமல், சிரிமாவோ - சாத்திரி ஒப்பந்தம் போட்டுச் சிங்களனுக்கு, அணைவாகவே இருந்தது. ”தமிழனா, ஓடிப்போ, உங்கள் ஊருக்கு?” இந்திய அரசு சோப்பளாங்கி என்று தெரிந்தவுடன்., அன்றிலிருந்து சிங்களன் இந்தியக்கழுதையின் மீது ஏறி சுமை சுமக்க வைக்காமல் வேறு என்ன செய்வான்? இத்தனைக்கும் சிங்களனின் தாய் மாநிலமான ஒரிய மாநிலம் கூக்குரலே போடவில்லை. இந்திய அரசு எங்கிருந்தோ தொலைந்து போன உறவுக்காரன் என்று சோறுபோட்டு விருந்து வைக்கிறது. மொத்தத்தில் ஒரு வலுவான எதிர்ப்பைக் கொஞ்சம் கூடக் காட்டாமல் இருந்தால் எப்படி? தமிழ் வரலாறு தெரிந்தவர்கள் இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களிடம் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சாரார், "ஒற்றை இந்தியம்" பேசி அதிகாரம் செய்து தமிழ் தேசிய இனம் உலகெங்கும் குலைந்து போக எல்லா வகையான வேலைகளையும் செய்தார்கள். பல்தேச இந்தியா என்ற கொள்கை இன்றுவரை அவர்களால் முற்றிலும் சாகடிக்கப் படுகிறது. [அதாவது இந்தியன் ஆகவேண்டுமென்றால் தமிழன் என்ற உணர்வைச் சாகடி; தமிழனாயும் இந்தியனாயும் ஒரே நேரத்தில் யாரும் இருக்கக் கூடாது.]
இந்தியத் தேசிய இனங்களில் குடியேற்றக் காலத்தில் பெரிதாக வெளிநாடுகளில் பிழைப்புக்குச் சென்றவர்கள் தமிழரும், ஓரளவு தெலுங்கரும், அதற்கும் குறைவாகக் குசராத்திகளும் (ஆனால் செல்வத்தால் பெரியவர்கள்), குசராத்திகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் கூடிய பீகாரிகளும் (ஆனால் செல்வ வளத்தில் குறைந்தவர்கள்) ஆகியோரே ஆவர்.
[இந்தப் பத்தியைக் கொட்டை எழுத்துக்களில் படித்துக் கொள்ளுங்கள்.] ஈழத்தமிழர்கள் இதில் அடங்கவே மாட்டார்கள். அவர்கள் காலங்காலமாய் அங்கேயே வழிவழியாய் வாழ்ந்தவர்கள். இந்தியர்களில் பலருக்கும், ஏன் தமிழகத் தமிழர்களில் கணிசமானவருக்கும் கூட, இந்த உண்மை தெரிவதே இல்லை. அந்த அளவிற்கு முட்டாள் தனமும், வரலாற்று மறதியும் இங்கே வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது..
[உண்மையை ஆய்ந்தால், பழந்தமிழகம் என்று நாமெல்லோரும் சொல்கிறோமே அதைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களின் ஈழத்திற்கும், இன்றையத் தமிழ்நாட்டிற்கும் இடைப்பட்ட இடமும், தமிழ்நாட்டுக் கடற்கரையை ஒட்டிக் கடலுள் நீளும் நிலமும், இதே போல ஈழக் கடற்கரையை ஒட்டிய நிலமும், எனக் கணிசமான இடைநிலம் கடல் கொண்டதைத் தான் நம் சங்க இலக்கியங்களில் கடல்கொண்ட நிலமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறிப்புக்களாய்ப் பார்க்கிறோம். மொத்தத்தில், இன்றைய ஈழமும், தமிழகமும், இவற்றிற்கு இடைப்பட்ட கடல்கொண்ட நிலமும் சேர்ந்தது தான் மூன்றாம் சங்கத்திற்கு முற்பட்ட பழந்தமிழகம். [அப்படி அழிந்த நிலத்தில் இருந்து கரையேறிய நிலந்தரு திருவிற் பாண்டியன் சோழனிடம் இருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடம் இருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பிடித்தான் என்பது வரலாறு. முத்தூர்க் கூற்றம் இன்றைய புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கடற்கரையை ஒட்டியது.] இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஈழம் அழிவதை நம் பழந்தமிழகத்தின் மிச்சசொச்சம் அழிவதாய்த்தான் கொள்ளமுடியும். இது கூடவா, தமிழகத் தமிழர்களுக்குப் புரியவில்லை? அடங்ஙொப்பரானே? அவன் உறவுக்காரண்டா, பங்காளிடா, அதைப் புரிஞ்சுக்குங்க! இந்திய நாட்டின் வடக்கில் இருந்து தமிழினம் சுருக்கப் பட்டு வடமாலவன் குன்றத்திற்குக் கீழ் நெரிந்தது போல், நம் கண்முன்னே இன்னொரு பக்கம் தென்கிழக்கில் ஈழம் சுருக்கப் படுவது தமிழின அழிப்பில்லாமல் வேறு என்ன? இது கூடப் புரியாமல், தலையில் மண்ணாங்கட்டியா இருக்கிறது?]
ஈழத் தமிழருக்கு என்ன நடந்ததோ அதே நடத்தமே இந்திய நடுவண் அரசு .மலேசியத் தமிழருக்கும் செய்தது. எங்கோ இருக்கிற பிஜி நாட்டில் இந்தியர்கள் நசுக்கப் பட்டால் இவர்கள் அலறுவார்கள். ஆனால் மலேசியத் தமிழனுக்குப் பாதிப்பு நேர்ந்தால் இவர்கள், “அது இன்னொரு நாட்டின் உள்நாட்டுச் சிக்கல்” என்று கீதை படிப்பார்கள். இவ்வளவு ஏன்? ஒரு சிறுசெய்தியைச் சொல்லுகிறேன். மொரிசியசு நாட்டில் தமிழ்ப் பாடப் பொத்தகமும், தமிழாசிரியர்களும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட போது, அங்கும் இங்குமாய்த் தனியார்தான் உதவிசெய்தார்களே தவிர, இந்திய அரசோ, தமிழக அரசோ ஒரு துரும்பை எடுத்துப் போடவில்லை. எப்போதும் போல் மெத்தனமாகவே இருந்தன. பொதுவாக வெளிநாட்டுத் தமிழர் என்றால் இந்திய அரசு என்றுமே கண்டுகொண்டது இல்லை. ”எக்கேடோ கெட்டுப் போங்கள், எம்மை வந்து அண்டாதீர்கள்”
பேராய நடுவண் அரசின் இந்தப் போக்கு, நாளடைவில் இந்தியத் தமிழரை நடத்துவதிலும் கூடிவந்தது. 1972க்கு அப்புறம் ஒரு நடுவனரசுத் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவே இல்லை. "வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது" என்ற கூப்பாடு 1980 வரை கூடத் தமிழ்நாட்டில் இருந்தது. அதற்கு அப்புறம் தமிழ்நாடு வேறுவகையில் தன் பிழைப்பை மீட்டுக் கொண்டது. தமிழைத் தொலைத்தது, ஆங்கிலப் படிப்பின் வழியும், தனியார் முயற்சியாலும் இங்கு தொழில் வளர்ச்சியும், பொருளியல் முன்னேற்றமும் ஏற்பட்டன. இருந்தாலும் பல தடைகளை நடுவண் அரசு விதித்தே வந்தது. இன்றைக்கும் தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கும் மற்ற மாநிலங்கள் எதிர்ப்புப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. நடுவண் அரசு ஒருமுறை கூட அவை சட்டப் புறம்பாகநடப்பதை எடுத்துக் கூறித் தடுத்ததே இல்லை. ஆனால், தமிழன் மட்டும் “நான் கற்புள்ளவள்” என்னுமாப் போல தன் நாட்டுப் பற்றைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டுமாம். :-) மற்ற மாநிலங்கள் ஒற்றை இந்தியாவைத் தூக்கிப் போட்டுக் கீழே மிதித்தாலும் இந்த நடுவண் அரசு மாமியார் கண்டுகொள்ளவே மாட்டாள்.
(இன்னும் வரும்)
அன்புடன்,
இராம.கி.
Friday, January 16, 2009
ஒரு சில கலவை நிறங்கள்
அண்மையில் திரு ரவிசங்கர் Tux Paint என்னும் திறவூற்றுச் சொவ்வறைக்குத் (open source software) தமிழ் இடைமுகம் செய்யும் பணியில் ஒரு சில கலவை நிறங்களுக்கான தமிழாக்கம் கேட்டிருந்தார். அதற்கான என் பரிந்துரைகள்.
purple,
O.E. purpul, dissimilation (first recorded in Northumbrian, in Lindisfarne gospel) from purpure "purple garment," purpuren "purple," from L. purpura "purple-dyed cloak, purple dye," also "shellfish from which purple was made," from Gk. porphyra (see porphyry), of Semitic origin, originally the name for the shellfish (murex) from which it was obtained. Tyrian purple, produced around Tyre, was prized as dye for royal garments. As a color name, attested from 1398. Also the color of mourning or penitence (especially in royalty or clergy). Rhetorical for "splendid, gaudy" (of prose) from 1598. Purpur continued as a parallel form until 15c., and through 19c. in heraldry. Purple Heart, U.S. decoration for service members wounded in combat, instituted 1932; originally a cloth decoration begun by George Washington in 1782. Hendrix' Purple Haze (1967) is slang for "LSD."
பரிந்துரை: கத்தரி, செந்நீலம் [பொதுவாய்க் கத்தரிக்காய் செந்நீல நிறத்தில் தான் இருக்கும். வெள்ளை, பச்சை நிறத்தில் இருக்கும் ”கத்தரிக்காயை” வழுதுணை என்றே சொல்லுவார்கள். பேச்சு வழக்கில் கத்தரி என்பது purple நிறத்தையே குறிக்கும். சில பெண்டிர் திசம்பர்ப் பூவை வைத்தும் சொல்லுவார்கள். கத்தரி கொஞ்சம் அடர்த்தியானது. திசம்பர்ப் பூ சற்று வெளிறியது.]
lavender,
c.1265, "fragrant plant of the mint family," from Anglo-Fr. lavendre, from M.L. lavendula "lavender" (10c.), perhaps from L. lividus "bluish, livid." Associated with Fr. lavande, It. lavanda "a washing" (from L. lavare "to wash;" see lave) because it was used to scent washed fabrics and as a bath perfume. The meaning "pale purple color" is from 1840.
pale purple என்பதனால் இது “இளங்கத்தரி, இளஞ் செந்நீலம்”
pink,
1573, common name of Dianthus, a garden plant of various colors. Attribution to "pale rose color" first recorded 1733 (pink-coloured is recorded from 1681). The plant name is perhaps from pink (v.) via notion of "perforated" petals, or from Du. pink "small" (see pinkie), from the term pinck oogen "half-closed eyes," lit. "small eyes," which was borrowed into Eng. (1575) and may have been used as a name for Dianthus, which sometimes has pale red flowers. The flower meaning led to a fig. use for "the flower" or finest example of anything (e.g. Mercutio's "Nay, I am the very pinck of curtesie," Rom. & Jul. II.iv.61). Pink slip "discharge notice" is first recorded 1915. Pink-eye "contagious eye infection" first recorded 1882, Amer.Eng. Pink collar in reference to jobs generally held by women first attested 1977. To see pink elephants "hallucinate from alcoholism" first recorded 1913 in Jack London's "John Barleycorn."
சிவப்பில் வெள்ளையைச் சேர்க்கச் சேர்க்க pink நிறம் வந்து சேரும். அலரிப் பூ (=அரளிப் பூ என்பது பேச்சு வழக்கு.) என்பது pink இலேயே அடர்ந்தது. தமிழில் பூ என்னும் முன்னொட்டு பொதுவாக வெளிறிய, வலுக்குறைந்த என்னும் பொருட்பாடுகளைத் தரும். சிவப்பைக் குறிக்கும் செய் என்னும் சொல் கை என்றும் பேச்சு வழக்கில் திரியும். கையும் செய்யும் ஒன்றிற்கொன்று போலி. அதனால் பூஞ்செய் (=பூஞ்சை), பூங்கை, என்பன வெகு எளிதில் pink யைக் குறிக்கும். இது போகப் பூவல், பூங்காவி எனவும் வெளிறிய சிவப்பைக் குறிப்பதாக அகரமுதலிகள் குறிக்கின்றன. பூங்காவி என்பது சற்று மஞ்சளும் கலந்த நிறம். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.
beige,
1858, "fine woolen fabric," from Fr. dialectal "yellowish-grey," from O.Fr. bege "the natural color of wool and cotton," origin obscure. As a shade of color, it is attested from 1879.
silk cotton என்பதைத் தமிழில் இலவம் என்று குறிப்போம். இலவம் பஞ்சின் நிறம் அப்படியே இந்த beige தான். இலவத்தைப் பூளை என்றும் அகரமுதலிகள் குறிக்கின்றன. சற்று பட்டுப் போல் மஞ்சள் நிறம் கூடினால் அதைப் பீது என்றும் சொல்லலாம். பீது என்பது வைக்கோலைக் குறிக்கும் சொல். விண்ணவன் அணியும் பட்டாடையை பீது+அம்பரம் = பீதாம்பரம் என்ற இருபிறப்பிச் சொல்லால் குறிப்பர். வைக்கோலுக்கு வைது என்ற பெயரும் உண்டு. beige என்பதைப் புழுங்கு நிறம் என்றும் சொல்லலாம். புழுங்கல் அரிசி சற்று மங்கியவெள்ளையில் காட்சியளிக்கும்.
tan,
late O.E. tannian "to convert hide into leather" (by steeping it in tannin), from M.L. tannare "tan, dye, a tawny color" (c.900), from tannum "crushed oak bark," used in tanning leather, probably from a Celtic source (e.g. Breton tann "oak tree"). The meaning "make brown by exposure to the sun" first recorded 1530. To tan (someone's) hide in the figurative sense is from 1670. The adj. tan "of the color of tanned leather" is recorded from 1665; the noun sense of "bronze color imparted to skin by exposure to sun" is from 1749; as a simple name for a brownish color, in any context, it is recorded from 1888.
தமிழில் தேன் நிறம் என்பது இதைத்தான் குறிக்கும். நிறங்கள் என்பவை பொருள்முதல் வாதப் படியே ஒப்பீட்டு முறையில் ஒரு மொழியில் பெயரிடப் படுகின்றன.
brown
O.E. brun "dark," only developing a definite color sense 13c., from P.Gmc. *brunaz, from PIE *bher- "shining, brown" (cf. Lith. beras "brown"), related to *bheros "dark animal" (cf. beaver, bear, and Gk. phrynos "toad," lit. "the brown animal"). The O.E. word also had a sense of "brightness, shining," now preserved only in burnish. The Gmc. word was adopted into Romantic (cf. M.L. brunus, It., Sp. bruno, Fr. brun). Colloquial brown-nose (1939) is "from the implication that servility is tantamount to having one's nose in the anus of the person from whom advancement is sought" [Webster, 1961]. Brown Bess, slang name for old British Army flintlock musket, first recorded 1785.
பழுத்தது brown. பழுப்பு / பழுவம் இருவடிவங்களும் அந்தச் சொல்லையே உணர்த்துகின்றன. அடர் பழுப்பு, கரும் பழுப்பு = dark brown, இது போகப் புகர், புற்கு, கபிலம், குரால் என்ற சொற்களும் உண்டு. கபிலம் என்பது சற்று செம்மை கலந்த பழுப்பு. குரால் என்பது அடர்ந்த செம்பழுப்பு
இது போக, அடிப்படையான நிறங்களைச் சற்று ஞாவகப் படுத்திக் கொள்ளுவோம்.
black = கருப்பு
grey = சாம்பல்
violet = ஊதா, செங்கருநீலம், (நாவற் பழம் செங்கரு நீலத்தில் தான் காட்சியளிக்கிறது.) ஊதா என்ற பெயரே இன்றையப் பேச்சு வழக்கில் violet ற்கு இணையாக ஆழ்ந்து பரவிவிட்டது. எனவே அதையே வைத்துக் கொள்ளலாம்.)
violet
c.1330, small plant with purplish-blue flowers, from O.Fr. violette, dim. of viole "violet," from L. viola, cognate with Gk. ion (see iodine), probably from a pre-I.E. Mediterranean language. The color sense (1370) developed from the flower.
iodine
1814, formed by British chemist Sir Humphry Davy from Fr. iode "iodine," coined 1812 by Fr. chemist Joseph Louis Gay-Lussac from Gk. ioeides "violet-colored," from ion "violet" + eidos "appearance" (see -oid). So called from the color of the vapor given off when the crystals are heated.
indigo = அவுரி = கருநீலம் (அவுரிச் செடி என்பது அவிரிச் செடி என்பதன் திரிவு. அது indigo செடியையே குறிக்கும்.
blue = நீலம்
green = பச்சை
yellow = மஞ்சள்
orange = கிச்சிலி, காவி [கிச்சிலிப் பழம் என்பது orange பழம். orange என்பது நம்மூர் நாரங்காயில் (=நார்த்தங்காயில்) சொற்பிறப்பு கொண்டிருந்தாலும் இன்று நம்மூரில் நாரங்காயை orange யைக் குறிப்பதில்லை. எனவே கிச்சிலி என்பதைக் கொள்ளலாம். காவி நிறம் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் துல்லியம் பார்த்தால் காவி orange brown யைக் குறிக்கும். பழங் காலத்தில் காவிச் சாயம் பெரிதும் செய்யப் பட்ட காரணத்தால் காசி என்ற பெயர் எழுந்ததாக தருமானந்த கோசாம்பி சொல்லுவார்.]
red = அரத்தம்
white = வெள்ளை
இது போக சிவப்பும் பழுப்பும் சேர்ந்த நிறத்தை அருணம் என்று தமிழில் சொல்லுவார்கள் திரு அருண மலை > திரு அண்ணாமலையின்
சொற்பிறப்பு இப்படித்தான். = reddish brown
அன்புடன்,
இராம.கி.
purple,
O.E. purpul, dissimilation (first recorded in Northumbrian, in Lindisfarne gospel) from purpure "purple garment," purpuren "purple," from L. purpura "purple-dyed cloak, purple dye," also "shellfish from which purple was made," from Gk. porphyra (see porphyry), of Semitic origin, originally the name for the shellfish (murex) from which it was obtained. Tyrian purple, produced around Tyre, was prized as dye for royal garments. As a color name, attested from 1398. Also the color of mourning or penitence (especially in royalty or clergy). Rhetorical for "splendid, gaudy" (of prose) from 1598. Purpur continued as a parallel form until 15c., and through 19c. in heraldry. Purple Heart, U.S. decoration for service members wounded in combat, instituted 1932; originally a cloth decoration begun by George Washington in 1782. Hendrix' Purple Haze (1967) is slang for "LSD."
பரிந்துரை: கத்தரி, செந்நீலம் [பொதுவாய்க் கத்தரிக்காய் செந்நீல நிறத்தில் தான் இருக்கும். வெள்ளை, பச்சை நிறத்தில் இருக்கும் ”கத்தரிக்காயை” வழுதுணை என்றே சொல்லுவார்கள். பேச்சு வழக்கில் கத்தரி என்பது purple நிறத்தையே குறிக்கும். சில பெண்டிர் திசம்பர்ப் பூவை வைத்தும் சொல்லுவார்கள். கத்தரி கொஞ்சம் அடர்த்தியானது. திசம்பர்ப் பூ சற்று வெளிறியது.]
lavender,
c.1265, "fragrant plant of the mint family," from Anglo-Fr. lavendre, from M.L. lavendula "lavender" (10c.), perhaps from L. lividus "bluish, livid." Associated with Fr. lavande, It. lavanda "a washing" (from L. lavare "to wash;" see lave) because it was used to scent washed fabrics and as a bath perfume. The meaning "pale purple color" is from 1840.
pale purple என்பதனால் இது “இளங்கத்தரி, இளஞ் செந்நீலம்”
pink,
1573, common name of Dianthus, a garden plant of various colors. Attribution to "pale rose color" first recorded 1733 (pink-coloured is recorded from 1681). The plant name is perhaps from pink (v.) via notion of "perforated" petals, or from Du. pink "small" (see pinkie), from the term pinck oogen "half-closed eyes," lit. "small eyes," which was borrowed into Eng. (1575) and may have been used as a name for Dianthus, which sometimes has pale red flowers. The flower meaning led to a fig. use for "the flower" or finest example of anything (e.g. Mercutio's "Nay, I am the very pinck of curtesie," Rom. & Jul. II.iv.61). Pink slip "discharge notice" is first recorded 1915. Pink-eye "contagious eye infection" first recorded 1882, Amer.Eng. Pink collar in reference to jobs generally held by women first attested 1977. To see pink elephants "hallucinate from alcoholism" first recorded 1913 in Jack London's "John Barleycorn."
சிவப்பில் வெள்ளையைச் சேர்க்கச் சேர்க்க pink நிறம் வந்து சேரும். அலரிப் பூ (=அரளிப் பூ என்பது பேச்சு வழக்கு.) என்பது pink இலேயே அடர்ந்தது. தமிழில் பூ என்னும் முன்னொட்டு பொதுவாக வெளிறிய, வலுக்குறைந்த என்னும் பொருட்பாடுகளைத் தரும். சிவப்பைக் குறிக்கும் செய் என்னும் சொல் கை என்றும் பேச்சு வழக்கில் திரியும். கையும் செய்யும் ஒன்றிற்கொன்று போலி. அதனால் பூஞ்செய் (=பூஞ்சை), பூங்கை, என்பன வெகு எளிதில் pink யைக் குறிக்கும். இது போகப் பூவல், பூங்காவி எனவும் வெளிறிய சிவப்பைக் குறிப்பதாக அகரமுதலிகள் குறிக்கின்றன. பூங்காவி என்பது சற்று மஞ்சளும் கலந்த நிறம். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.
beige,
1858, "fine woolen fabric," from Fr. dialectal "yellowish-grey," from O.Fr. bege "the natural color of wool and cotton," origin obscure. As a shade of color, it is attested from 1879.
silk cotton என்பதைத் தமிழில் இலவம் என்று குறிப்போம். இலவம் பஞ்சின் நிறம் அப்படியே இந்த beige தான். இலவத்தைப் பூளை என்றும் அகரமுதலிகள் குறிக்கின்றன. சற்று பட்டுப் போல் மஞ்சள் நிறம் கூடினால் அதைப் பீது என்றும் சொல்லலாம். பீது என்பது வைக்கோலைக் குறிக்கும் சொல். விண்ணவன் அணியும் பட்டாடையை பீது+அம்பரம் = பீதாம்பரம் என்ற இருபிறப்பிச் சொல்லால் குறிப்பர். வைக்கோலுக்கு வைது என்ற பெயரும் உண்டு. beige என்பதைப் புழுங்கு நிறம் என்றும் சொல்லலாம். புழுங்கல் அரிசி சற்று மங்கியவெள்ளையில் காட்சியளிக்கும்.
tan,
late O.E. tannian "to convert hide into leather" (by steeping it in tannin), from M.L. tannare "tan, dye, a tawny color" (c.900), from tannum "crushed oak bark," used in tanning leather, probably from a Celtic source (e.g. Breton tann "oak tree"). The meaning "make brown by exposure to the sun" first recorded 1530. To tan (someone's) hide in the figurative sense is from 1670. The adj. tan "of the color of tanned leather" is recorded from 1665; the noun sense of "bronze color imparted to skin by exposure to sun" is from 1749; as a simple name for a brownish color, in any context, it is recorded from 1888.
தமிழில் தேன் நிறம் என்பது இதைத்தான் குறிக்கும். நிறங்கள் என்பவை பொருள்முதல் வாதப் படியே ஒப்பீட்டு முறையில் ஒரு மொழியில் பெயரிடப் படுகின்றன.
brown
O.E. brun "dark," only developing a definite color sense 13c., from P.Gmc. *brunaz, from PIE *bher- "shining, brown" (cf. Lith. beras "brown"), related to *bheros "dark animal" (cf. beaver, bear, and Gk. phrynos "toad," lit. "the brown animal"). The O.E. word also had a sense of "brightness, shining," now preserved only in burnish. The Gmc. word was adopted into Romantic (cf. M.L. brunus, It., Sp. bruno, Fr. brun). Colloquial brown-nose (1939) is "from the implication that servility is tantamount to having one's nose in the anus of the person from whom advancement is sought" [Webster, 1961]. Brown Bess, slang name for old British Army flintlock musket, first recorded 1785.
பழுத்தது brown. பழுப்பு / பழுவம் இருவடிவங்களும் அந்தச் சொல்லையே உணர்த்துகின்றன. அடர் பழுப்பு, கரும் பழுப்பு = dark brown, இது போகப் புகர், புற்கு, கபிலம், குரால் என்ற சொற்களும் உண்டு. கபிலம் என்பது சற்று செம்மை கலந்த பழுப்பு. குரால் என்பது அடர்ந்த செம்பழுப்பு
இது போக, அடிப்படையான நிறங்களைச் சற்று ஞாவகப் படுத்திக் கொள்ளுவோம்.
black = கருப்பு
grey = சாம்பல்
violet = ஊதா, செங்கருநீலம், (நாவற் பழம் செங்கரு நீலத்தில் தான் காட்சியளிக்கிறது.) ஊதா என்ற பெயரே இன்றையப் பேச்சு வழக்கில் violet ற்கு இணையாக ஆழ்ந்து பரவிவிட்டது. எனவே அதையே வைத்துக் கொள்ளலாம்.)
violet
c.1330, small plant with purplish-blue flowers, from O.Fr. violette, dim. of viole "violet," from L. viola, cognate with Gk. ion (see iodine), probably from a pre-I.E. Mediterranean language. The color sense (1370) developed from the flower.
iodine
1814, formed by British chemist Sir Humphry Davy from Fr. iode "iodine," coined 1812 by Fr. chemist Joseph Louis Gay-Lussac from Gk. ioeides "violet-colored," from ion "violet" + eidos "appearance" (see -oid). So called from the color of the vapor given off when the crystals are heated.
indigo = அவுரி = கருநீலம் (அவுரிச் செடி என்பது அவிரிச் செடி என்பதன் திரிவு. அது indigo செடியையே குறிக்கும்.
blue = நீலம்
green = பச்சை
yellow = மஞ்சள்
orange = கிச்சிலி, காவி [கிச்சிலிப் பழம் என்பது orange பழம். orange என்பது நம்மூர் நாரங்காயில் (=நார்த்தங்காயில்) சொற்பிறப்பு கொண்டிருந்தாலும் இன்று நம்மூரில் நாரங்காயை orange யைக் குறிப்பதில்லை. எனவே கிச்சிலி என்பதைக் கொள்ளலாம். காவி நிறம் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் துல்லியம் பார்த்தால் காவி orange brown யைக் குறிக்கும். பழங் காலத்தில் காவிச் சாயம் பெரிதும் செய்யப் பட்ட காரணத்தால் காசி என்ற பெயர் எழுந்ததாக தருமானந்த கோசாம்பி சொல்லுவார்.]
red = அரத்தம்
white = வெள்ளை
இது போக சிவப்பும் பழுப்பும் சேர்ந்த நிறத்தை அருணம் என்று தமிழில் சொல்லுவார்கள் திரு அருண மலை > திரு அண்ணாமலையின்
சொற்பிறப்பு இப்படித்தான். = reddish brown
அன்புடன்,
இராம.கி.
Saturday, January 10, 2009
பொத்தகத் தடை
நொச்சிப் போர்ச் சிந்தனைகள் சிலநாட்களாகவே என்னை ஆட்கொண்டிருக்கும் நிலையில், (இன்னும் என் கட்டுரைத் தொடரை முடிக்கவில்லை) நேற்றுப் பிற்பகல், 32 ஆவது சென்னைப் பொத்தக வியந்தைக்குப் போயிருந்தேன். [அங்கு சென்னைப் புத்தகக் காட்சி என்று தான் போட்டிருந்தார்கள்; அப்பாடா, ஒருவழியாய்க் ”கண்... ”தொலைந்து, ”காட்சி” மட்டும் நிலைத்ததை ”முன்னேற்றம்” என்றே எண்ணிக் கொண்டேன். ”தொழில் நுட்பத்தில்” தொழில் போய் “நுட்பியல்” என்று இந்தக் காலத்தில் ஆனதல்லவா? அது போல இங்கும் ஆயிற்று போலும் என்று எண்ணிக் கொண்டேன். இனி, எத்தனை நாட்கள் காட்சியை வைத்து exhibition காட்டுவார்களோ, தெரியவில்லை. சொல்லாக்கம் என்று சொன்னால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் நம் பழக்கம் மறையவே மறையாது போலும். சொற்களில் துல்லியம் பார்ப்பதை நம்மவர் என்று உணர்வார்களோ? fair என்பதும் exhibition என்பதும் ஒன்றல்லவே?]
சென்னைப் பொத்தக வியந்தை மிகவும் பெரியது. இந்த முறை 600க்கும் மேற்பட்ட தளிகள் (stalls). இரண்டாவது நாளென்பதாலும், நான் போன நேரம் பிற்பகல் என்பதாலும் அவ்வளவு கூட்டமில்லை. எனவே மெதுவாகப் பொத்தகக் கடைகளைத் துழாவ முடிந்தது. முதல் வரிசையில் ஏதோவொரு கடையில், திரு. குப்புசாமி செல்லமுத்து எழுதிக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “பிரபாகரன்” என்ற வாழ்வரைப்(biography) பொத்தகம் 4 படிகளைப் (copies) பார்த்தேன். பொத்தகத்தைப் புரட்டிய நான், ஆர்வ மிகுதியால் அதை வாங்குவதற்கு விருப்பப் பட்டு, பின் பதிப்பகத்தின் பெயரைப் பார்த்துக் ”கிழக்குத் தளியிலேயே வாங்கிக் கொள்ளலாமே” என்ற எண்ணத்தில், முதலிற் பார்த்த கடையில் வாங்காது நகர்ந்து விட்டேன்.
அப்படியே மெதுவாகச் சென்ற போது, கிழக்குப் பதிப்பகம் பதிப்பாசிரியர் பா.ரா.வையும் பார்த்தேன். அவரைப் பார்த்து நாளாகி விட்டது என்பதால், முகமன் சொல்லி சற்று நேரம் உரையாடி நான் நகர்ந்தேன். அப்பொழுது அந்தப் பொத்தகம் பற்றி அவரிடம் எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.
நாலைந்து வரிசை தள்ளி கிழக்குத் தளிக்கு வந்து அங்கு தேடிய போது தான், அந்தப் பொத்தகம் அங்கு இல்லாததைக் கவனித்தேன். கடையில் இருந்த பணியாளர் ஒருவரிடம், பொத்தகத்தைக் குறிப்பிட்டுக் கேட்டால், அவர் மெதுவாகத் தணிந்த குரலில் “நேற்றுவரை அந்தப் பொத்தகம் இருந்தது; விற்றோம்; அப்புறம் அதை விற்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்” என்று சொன்னார். வியந்து போனேன். பெரும் செலவளித்து அச்சடித்துப் பொத்தகம் போடுபவர்கள் விற்காமல் இருப்பார்களோ? அப்படியானால் யாரோ ஒருவர் அந்தப் பொத்தகத்தை கிழக்குப் பதிப்பகத்தார் அங்கு விற்கக் கூடாது என்று தணிக்கை செய்திருக்கிறார்கள், அல்லது தடை செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். [பத்ரி தான் இதை விளக்க வேண்டும்.] அப்படியானால், முதல் வரிசைக் கடைக்காரர், கிழக்கில் இருந்து முன்னாலேயே மொத்த விற்பனையில் வாங்கி உதிரி விற்பனை செய்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவக்கரம், அவக்கரமாய், முதல் வரிசைக் கடைக்குப் போய்ப் ”பொத்தகம் இருக்கிறதா?” என்று மீண்டும் தேடினேன். இப்பொழுது அங்கும் பொத்தகப் படிகளைக் காணோம். வேறு உதிரி விற்பனைக் கடைகளில் தேடினால், அங்கும் காணோம்.
ஆக, வியந்தை முழுதும் அந்தப் பொத்தகம் இரண்டு மணிநேரத்திற்குள் திடீரென்று மறைந்திருக்கிறது.
என்னய்யா இது, கண்கட்டு வித்தையா? நான் சனநாயக நாட்டில் தான் வாழ்கிறேனா? நடந்ததைக் கண்டு சிரிப்பதா, சினமுறுவதா? வியல்ந்து கிடக்கும் இணையவெளியில் தேடினால் “பிரபாகரனின் வாழ்வரை” யாருக்கும் கிடைக்காமற் போகாதே?. அப்படி இருந்தும், அந்த வாழ்வரையை இந்தியத் தமிழர் வாங்கிப் படிக்கக் கூடாது என்று தடுப்பது யாரோ சில அதிகாரிகளின் விழைவு போலும்.
நினைத்துக் கொண்டேன்; ”இவர்களா, ஈழ விடுதலைக்கு, போர்நிறுத்தத்திற்கு, முயலுவார்கள்?” முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
எனவே, என்னருமை ஈழத் தமிழர்களே! இனி இந்தக் கற்பனையைத் தூக்கிக் கடாசி எறியுங்கள். உங்கள் நாட்டிற் தமிழினம் அழிந்து பெரும் இழவு கூட்டிய பிறகு தான், இவர்கள் சாவுச் செய்தி கேட்க வருவார்கள். அதுவரை தமிழ்நாட்டுத் தமிழரை ஏமாளியாக்கி “இந்தாப் போகிறேன், அந்தாப் போகிறேன்” என்று பாவனை காட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒரு மண்ணும் செய்ய மாட்டார்கள். சிங்களனுக்கே குடைபிடித்துத் திரிவார்கள். இந்தச் செயலுக்கு பேராயக் கட்சியினரும் வால்பிடிப்பார்கள். பாவம், கலைஞர் ....... ஒருவேளை அவரும் இதிற் கூட்டோ என்னவோ?
ஆக, எந்தச் செய்தியையும் தெரிய விடாமல், பத்துப் பதினைந்து ஆண்டு காலம் ஒரு இனத்தின் கண்களையே கட்டி வைத்திருக்கிறார்கள்; வாய்ப்பூட்டு போட்டு இருக்கிறார்கள். இருபத்தைந்து அயிர மாத்திரியில் (கிலோ மீட்டரில்) ஓர் இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றித் தலைமை அமைச்சர் சென்னைக்கு வந்தும் மூச்சு விடமாட்டேன் என்கிறார், எங்கோ இருக்கும் காசாவில் மனித உரிமை பறி போவதை மட்டும் இவர் கண்டிப்பாராம்.
மலேசியப் பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சர் சரியாகத்தான் வெளிநாட்டிந்தியர் மாநாட்டில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நமக்குத் தான் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லை.
வருத்தத்துடன்,
இராம.கி.
சென்னைப் பொத்தக வியந்தை மிகவும் பெரியது. இந்த முறை 600க்கும் மேற்பட்ட தளிகள் (stalls). இரண்டாவது நாளென்பதாலும், நான் போன நேரம் பிற்பகல் என்பதாலும் அவ்வளவு கூட்டமில்லை. எனவே மெதுவாகப் பொத்தகக் கடைகளைத் துழாவ முடிந்தது. முதல் வரிசையில் ஏதோவொரு கடையில், திரு. குப்புசாமி செல்லமுத்து எழுதிக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “பிரபாகரன்” என்ற வாழ்வரைப்(biography) பொத்தகம் 4 படிகளைப் (copies) பார்த்தேன். பொத்தகத்தைப் புரட்டிய நான், ஆர்வ மிகுதியால் அதை வாங்குவதற்கு விருப்பப் பட்டு, பின் பதிப்பகத்தின் பெயரைப் பார்த்துக் ”கிழக்குத் தளியிலேயே வாங்கிக் கொள்ளலாமே” என்ற எண்ணத்தில், முதலிற் பார்த்த கடையில் வாங்காது நகர்ந்து விட்டேன்.
அப்படியே மெதுவாகச் சென்ற போது, கிழக்குப் பதிப்பகம் பதிப்பாசிரியர் பா.ரா.வையும் பார்த்தேன். அவரைப் பார்த்து நாளாகி விட்டது என்பதால், முகமன் சொல்லி சற்று நேரம் உரையாடி நான் நகர்ந்தேன். அப்பொழுது அந்தப் பொத்தகம் பற்றி அவரிடம் எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.
நாலைந்து வரிசை தள்ளி கிழக்குத் தளிக்கு வந்து அங்கு தேடிய போது தான், அந்தப் பொத்தகம் அங்கு இல்லாததைக் கவனித்தேன். கடையில் இருந்த பணியாளர் ஒருவரிடம், பொத்தகத்தைக் குறிப்பிட்டுக் கேட்டால், அவர் மெதுவாகத் தணிந்த குரலில் “நேற்றுவரை அந்தப் பொத்தகம் இருந்தது; விற்றோம்; அப்புறம் அதை விற்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்” என்று சொன்னார். வியந்து போனேன். பெரும் செலவளித்து அச்சடித்துப் பொத்தகம் போடுபவர்கள் விற்காமல் இருப்பார்களோ? அப்படியானால் யாரோ ஒருவர் அந்தப் பொத்தகத்தை கிழக்குப் பதிப்பகத்தார் அங்கு விற்கக் கூடாது என்று தணிக்கை செய்திருக்கிறார்கள், அல்லது தடை செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். [பத்ரி தான் இதை விளக்க வேண்டும்.] அப்படியானால், முதல் வரிசைக் கடைக்காரர், கிழக்கில் இருந்து முன்னாலேயே மொத்த விற்பனையில் வாங்கி உதிரி விற்பனை செய்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவக்கரம், அவக்கரமாய், முதல் வரிசைக் கடைக்குப் போய்ப் ”பொத்தகம் இருக்கிறதா?” என்று மீண்டும் தேடினேன். இப்பொழுது அங்கும் பொத்தகப் படிகளைக் காணோம். வேறு உதிரி விற்பனைக் கடைகளில் தேடினால், அங்கும் காணோம்.
ஆக, வியந்தை முழுதும் அந்தப் பொத்தகம் இரண்டு மணிநேரத்திற்குள் திடீரென்று மறைந்திருக்கிறது.
என்னய்யா இது, கண்கட்டு வித்தையா? நான் சனநாயக நாட்டில் தான் வாழ்கிறேனா? நடந்ததைக் கண்டு சிரிப்பதா, சினமுறுவதா? வியல்ந்து கிடக்கும் இணையவெளியில் தேடினால் “பிரபாகரனின் வாழ்வரை” யாருக்கும் கிடைக்காமற் போகாதே?. அப்படி இருந்தும், அந்த வாழ்வரையை இந்தியத் தமிழர் வாங்கிப் படிக்கக் கூடாது என்று தடுப்பது யாரோ சில அதிகாரிகளின் விழைவு போலும்.
நினைத்துக் கொண்டேன்; ”இவர்களா, ஈழ விடுதலைக்கு, போர்நிறுத்தத்திற்கு, முயலுவார்கள்?” முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
எனவே, என்னருமை ஈழத் தமிழர்களே! இனி இந்தக் கற்பனையைத் தூக்கிக் கடாசி எறியுங்கள். உங்கள் நாட்டிற் தமிழினம் அழிந்து பெரும் இழவு கூட்டிய பிறகு தான், இவர்கள் சாவுச் செய்தி கேட்க வருவார்கள். அதுவரை தமிழ்நாட்டுத் தமிழரை ஏமாளியாக்கி “இந்தாப் போகிறேன், அந்தாப் போகிறேன்” என்று பாவனை காட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒரு மண்ணும் செய்ய மாட்டார்கள். சிங்களனுக்கே குடைபிடித்துத் திரிவார்கள். இந்தச் செயலுக்கு பேராயக் கட்சியினரும் வால்பிடிப்பார்கள். பாவம், கலைஞர் ....... ஒருவேளை அவரும் இதிற் கூட்டோ என்னவோ?
ஆக, எந்தச் செய்தியையும் தெரிய விடாமல், பத்துப் பதினைந்து ஆண்டு காலம் ஒரு இனத்தின் கண்களையே கட்டி வைத்திருக்கிறார்கள்; வாய்ப்பூட்டு போட்டு இருக்கிறார்கள். இருபத்தைந்து அயிர மாத்திரியில் (கிலோ மீட்டரில்) ஓர் இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றித் தலைமை அமைச்சர் சென்னைக்கு வந்தும் மூச்சு விடமாட்டேன் என்கிறார், எங்கோ இருக்கும் காசாவில் மனித உரிமை பறி போவதை மட்டும் இவர் கண்டிப்பாராம்.
மலேசியப் பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சர் சரியாகத்தான் வெளிநாட்டிந்தியர் மாநாட்டில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நமக்குத் தான் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லை.
வருத்தத்துடன்,
இராம.கி.
Wednesday, January 07, 2009
நொச்சிப் போர் எழுப்பிய சிந்தனைகள் - 2
போரியலில் குறிக்கோள் என்பது மிகவும் முதன்மையானது. “இந்த நிலத்தைப் பிடி, இவர்களைச் சாய், இந்தக் கோட்டைகளை வீழ்த்து, முடிவில் இதை அடை” என்றவாறு ஒரு படையணி (battalion) அல்லது அரணத்தின் (Army) முன்பாகக் குறிக்கோள்கள் வைக்கப் படுகின்றன. அந்தப் படை/அரணம் இருக்கும் இடத்தில் இருந்து, அவர்கள் முன்வைத்த குறிக்கோளை அடைய அரண வல்லுநர்கள் தடவரைகளை ஏற்படுத்தித் தருகிறார்கள். ”இது தான் உங்களுக்குச் சரியான தடம், இந்த வழியில் போங்கள், உங்கள் குறிக்கோளை உறுதியாய் அடையலாம்” என்று ஒரு
பருந்துப் பார்வையில் வானில் இருந்து நிலத்தைப் பார்த்தாற்போல் ஒரு கோடு வரைவது தான் தடவரையாகும். strategy என்று ஆங்கிலத்தில் இதைச் சொல்லுவார்கள். Strategy என்பதை ஒரு பாதை போல உருவகிக்கலாம். (யுத்த உபாயங்கள் என்று மணிப் பவளத்தில் சொல்லுவார்கள்.) ஒரு வினையைச் செய்வதற்கு முன்னால் தடவரைகள் வரையப் படுகின்றன.
கணிதத்தில் இடப்பியல் (topology) என்ற பிரிவு ஒன்று உண்டு. அதில் சொல்லுவது போல ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் போக கணக்கற்ற பாதைகள் உண்டு. அதே போல ஒரு குறிக்கோளை அடையவும் கணக்கற்ற தடவரைகள் இருக்கும். அதில் எந்தத் தடவரை சிறப்பானது, நேர்த்தியானது என்பது பல்வேறு காரணங்களால் நடைமுறையில் அறுதி செய்யப் படுகிறது. [நாம் இருக்கும் புள்ளி நமக்குக் கொடுக்கப் பட்டது. நம் குறிக்கோள் நாம் போகவேண்டிய புள்ளியை நிருணயிக்கிறது. போகவேண்டிய புள்ளி நம் தடவரையைப் போட, பெரிதும் உந்துகிறது.]
அந்தத் தடவரையின் படி ஒருவரோ, ஒரு குழுவோ, ஒரு படையோ, ஒரு படையணியோ முன்னே சென்று குறிக்கோளை அடைவதற்கு ”இதை முதலில் செய், இதை அடுத்து ஆற்று, மூன்றாவதாக இப்படி நகர்....” என்று செய்யவேண்டிய ஆற்றங்களை (actions) வரிசையாய் அடுக்குகிறார்களே அதற்கு அடுவரை (tactics) என்று பெயர். [tactics என்ற சொல் tassein (Gk) - arrangements என்ற சொல் - பொருளிலேயே பிறந்திருக்கிறது. design என்ற சொல் கூட tassein (Gk) - arrangements என்பதிற் பிறந்தது தான். (அதை அடவுகள் என்று மொழிபெயர்க்கலாம்.) அடுக்குதல் என்பது to arrange என்றே தமிழில் பொருள் கொள்ளும். tactics என்பது ஒரு பயண நிரலைப் போல அமையும். ஒரு நிரலை விதம் விதமாய் நாம் மாற்றி அடுக்கலாம் அல்லவா? தந்திரோபாயங்கள் என்று மணிப்பவளத்தில் அறிவுய்திகள் (intelligentia) இதைக் குறிப்பார்கள். மணிப்பவளத்தைத் தூக்கிக் குப்பையிற் போட்டு நல்ல தமிழுக்கு வருவோமே? நாம் செய்வதும் செய்ய வேண்டியது என்னவென்று அப்பொழுதாவது விளக்கமாய்ப் புரியும்.] இந்த அடுவரையை அரண வல்லுநர்கள் சொல்லுவதில்லை; படைத்தளபதியே இடம், பொருள், ஏவல் பார்த்து அமைத்துக் கொள்ளுகிறார்.
பொதுவாக எந்த அடுவரையிலும் கொஞ்சம் நீக்குப் போக்கு உண்டு. ஆற்றங்கள் நடக்கும் பாங்கிற்கு ஏற்ப அடுவரையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும்; சற்று பிறழும்; சிலபோது முன்பின்னாகும்; ஏன், புது வடிவம் கூட எடுக்கும். ஆனால் தடவரையில் இது போன்ற பிறழ்ச்சிகள் நெடுகவும் நடந்தால் அப்புறம் அது தடவரை ஆகாது. குடவரை (=கோணவரை) ஆகிப் போகும் ”முதற் கோணல் முற்றுங் கோணல்” என்பது நினைவிருக்கிறதா? அப்படிப் பிறழ்ந்து கொண்டே இருந்தால், போக வேண்டிய ஊருக்கு நாம் போய்ச் சேர மாட்டோம். ”போகாத ஊருக்கு வழி கேட்கக் கூடாது” என்ற சொலவடையும் உங்களுக்கு ஞாவகம் வருகிறதா?
குறிக்கோள் - தடவரை - அடுவரை என்பது ஒரு தொகுதி. போரியல் நிகழ்வுகளை இந்தத் தொகுதியை வைத்தே புரிந்து கொள்ள முடியும். .
எந்தப் போருக்கும் குறிக்கோளாய் மூன்றை மட்டுமே தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லுகிறது. ஒன்று மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ளல். ஒரு காலத்தில் செல்வம் என்பது மாட்டு மந்தைகளே. மாட்டு மந்தைகளைக் கவர்ந்து கொள்ளுவது வெட்சிப் போர், கவர்ந்ததை மீட்டுக் கொள்வது கரந்தைப் போர். அண்மைக் காலத்தில் நடந்த வெட்சி - கரந்தைப் போராகக் குவைத்திற்கும் ஈராக்கிற்கும் இடையே நடந்த போரைக் குறிக்கலாம். ஈராக்கின் பாறைநெய்ச் (petroleum) செல்வத்தை நிலத்திற்கு அடியில், வளைந்த குழாய் போட்டுச் சுரண்டி, குவெய்த் கவரத் தொடங்கியது. ஈராக் அதைத் தடுத்துத் தன் செல்வத்தை மீட்டுக் கொள்ளப் பார்த்தது. முடிவில் அமேரிக்கா, இரோப்பா போன்ற சண்டியர்களின் உறுதுணையால் வெட்சியார் வெற்றி பெற்றார்கள். கரந்தையார் தோற்றார்கள். வளைகுழாய் நுட்பியலில் இன்றைக்கும் இராக்கின் பாறைநெய் குவெய்த்தால் கவரப் பட்டே வருகிறது. [பலநேரம் வெட்சிப் போர் கமுக்கமாய், ஊமைக் குசும்போடு, ஆளரவம் அற்று இருக்கும். கரந்தைப் போர் பெரும் ஆரவாரத்துடன் நடக்கும். உடனே பார்வையாளர் கரந்தையார் தான் போரைத் தொடங்கினார்கள், அவர்களே கெடுதிக்காரர்கள் என்று எண்ணத் தொடங்கிவிடுவார்கள். கடைசிவரை வெட்சியாரின் வேட்கை சாடப் படாமலே போகும். இங்கும் எல்லோரும் இராக்கையே சாடிய நிலையில், குவெய்த் கண்டனத்திற்கு உள்ளாகவே இல்லை.]
அடுத்த வகைப் போரை வஞ்சிப் போர்.என்று தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லும். மண் நசையால் (விருப்பத்தால்) ஒருவன் இன்னொரு நாட்டை போரால் கவருவது. இந்தப் போருக்குக் கணக்கற்ற எடுத்துக் காட்டுக்கள் உண்டு. [சொல்லப் போனால் வஞ்சிப் போர் மிகவும் பரவலானது. முன் நடந்த இரண்டு உலகப் போர்களும் கூட வஞ்சிப் போர்கள் தான்.] நம் முன்னே இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ஈழப் போரும் ஒரு வஞ்சிப் போர் தான்.. சிங்களனுக்குத் தமிழ்மண் வேண்டும். தமிழரைத் துரத்தியடித்து, அவர் நிலத்தில் சிங்களரைக் குடியேற்றி நாட்டின் மக்கள்
பரம்பலை (distribution) அவன் மாற்ற விழைகிறான். இதற்கு அவன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க அவன் அணியமாய் இருக்கிறான். தமிழன் என்ற இனம் அழிந்தால் தான் சிங்களனுக்கு நிலம் கிடைக்கும் என்றநிலையில், ”தமிழன் இறந்தாலும் சரி, அகதியாய் ஓடிப் போய் நிலம் விட்டு நகர்ந்தாலும் சரி,” சிங்களனுக்கு ஏற்கை தான். இந்த நிலையில் தமிழரின் குறிக்கோள் என்ன? ”தமிழ்மண் உரிமையை எக்காலத்தும் விட்டுக் கொடுக்கக் கூடாது; முடிந்தால் அகலவே கூடாது” என்பது தானே?
இதற்கான தடவரையில் புலிகள் போயிருந்தால், ”ஏன் 7 ஆண்டுகளாய் சமதானம் பார்த்தார்கள்?” என்று என் சிந்தனைக்குப் புரிபடவில்லை. சமதானத்திற்கு முன் அகன்று கொண்டே போய், விரிந்த நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் அவர்கள் கொண்டுவந்தார்களே? அதை முற்றிலுமாய் முடித்து தமிழருக்கான முழு நிலத்தையும் தங்கள் வசம் கொண்டு வருவதில் ஏன் சுணக்கம் ஏற்பட்டது? - விளங்கவில்லை.
இந்த 7 ஆண்டுகளில் பல செய்திகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் அடிப்படைக் கேள்வி அப்படியே நிற்கிறது.
நான் போரியலாளன் அல்லன். அதே பொழுது தமிழர் வெல்ல வேண்டும் என்று நினைக்கும் பார்வையாளன். யாராவது விளக்கமாய்ச் செறிவாய்ச் சொன்னால் தெரிந்து கொள்வேன்.
இன்னும் சில சிந்தனைகள் நொச்சிப் போரை ஒட்டி இருக்கின்றன. அடுத்தடுத்துச் சொல்லுகிறேன். .
அன்புடன்,
இராம.கி.
பி.கு. தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லும் மூன்றாவது வகைப்போர் தும்பைப் போர். அது வலிமையை உணர்த்து முகத்தான் ஒருவன் செய்வதும் அதை எதிர்த்து மற்றொருவன் போரிடுவதும் ஆகும். அமெரிக்கா, ஈராக்கின் மேல் தொடுத்ததும், ஆப்கனித்தான் மேல் தொடுத்ததும் தும்பைப் போர்கள். அந்த வகைப் போர்கள் இப்பொழுது நம் உரையாடலுக்குள் உள்ளாத காரணத்தால் அவற்றைப் பற்றி இங்கு பேசவில்லை.
பருந்துப் பார்வையில் வானில் இருந்து நிலத்தைப் பார்த்தாற்போல் ஒரு கோடு வரைவது தான் தடவரையாகும். strategy என்று ஆங்கிலத்தில் இதைச் சொல்லுவார்கள். Strategy என்பதை ஒரு பாதை போல உருவகிக்கலாம். (யுத்த உபாயங்கள் என்று மணிப் பவளத்தில் சொல்லுவார்கள்.) ஒரு வினையைச் செய்வதற்கு முன்னால் தடவரைகள் வரையப் படுகின்றன.
கணிதத்தில் இடப்பியல் (topology) என்ற பிரிவு ஒன்று உண்டு. அதில் சொல்லுவது போல ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் போக கணக்கற்ற பாதைகள் உண்டு. அதே போல ஒரு குறிக்கோளை அடையவும் கணக்கற்ற தடவரைகள் இருக்கும். அதில் எந்தத் தடவரை சிறப்பானது, நேர்த்தியானது என்பது பல்வேறு காரணங்களால் நடைமுறையில் அறுதி செய்யப் படுகிறது. [நாம் இருக்கும் புள்ளி நமக்குக் கொடுக்கப் பட்டது. நம் குறிக்கோள் நாம் போகவேண்டிய புள்ளியை நிருணயிக்கிறது. போகவேண்டிய புள்ளி நம் தடவரையைப் போட, பெரிதும் உந்துகிறது.]
அந்தத் தடவரையின் படி ஒருவரோ, ஒரு குழுவோ, ஒரு படையோ, ஒரு படையணியோ முன்னே சென்று குறிக்கோளை அடைவதற்கு ”இதை முதலில் செய், இதை அடுத்து ஆற்று, மூன்றாவதாக இப்படி நகர்....” என்று செய்யவேண்டிய ஆற்றங்களை (actions) வரிசையாய் அடுக்குகிறார்களே அதற்கு அடுவரை (tactics) என்று பெயர். [tactics என்ற சொல் tassein (Gk) - arrangements என்ற சொல் - பொருளிலேயே பிறந்திருக்கிறது. design என்ற சொல் கூட tassein (Gk) - arrangements என்பதிற் பிறந்தது தான். (அதை அடவுகள் என்று மொழிபெயர்க்கலாம்.) அடுக்குதல் என்பது to arrange என்றே தமிழில் பொருள் கொள்ளும். tactics என்பது ஒரு பயண நிரலைப் போல அமையும். ஒரு நிரலை விதம் விதமாய் நாம் மாற்றி அடுக்கலாம் அல்லவா? தந்திரோபாயங்கள் என்று மணிப்பவளத்தில் அறிவுய்திகள் (intelligentia) இதைக் குறிப்பார்கள். மணிப்பவளத்தைத் தூக்கிக் குப்பையிற் போட்டு நல்ல தமிழுக்கு வருவோமே? நாம் செய்வதும் செய்ய வேண்டியது என்னவென்று அப்பொழுதாவது விளக்கமாய்ப் புரியும்.] இந்த அடுவரையை அரண வல்லுநர்கள் சொல்லுவதில்லை; படைத்தளபதியே இடம், பொருள், ஏவல் பார்த்து அமைத்துக் கொள்ளுகிறார்.
பொதுவாக எந்த அடுவரையிலும் கொஞ்சம் நீக்குப் போக்கு உண்டு. ஆற்றங்கள் நடக்கும் பாங்கிற்கு ஏற்ப அடுவரையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும்; சற்று பிறழும்; சிலபோது முன்பின்னாகும்; ஏன், புது வடிவம் கூட எடுக்கும். ஆனால் தடவரையில் இது போன்ற பிறழ்ச்சிகள் நெடுகவும் நடந்தால் அப்புறம் அது தடவரை ஆகாது. குடவரை (=கோணவரை) ஆகிப் போகும் ”முதற் கோணல் முற்றுங் கோணல்” என்பது நினைவிருக்கிறதா? அப்படிப் பிறழ்ந்து கொண்டே இருந்தால், போக வேண்டிய ஊருக்கு நாம் போய்ச் சேர மாட்டோம். ”போகாத ஊருக்கு வழி கேட்கக் கூடாது” என்ற சொலவடையும் உங்களுக்கு ஞாவகம் வருகிறதா?
குறிக்கோள் - தடவரை - அடுவரை என்பது ஒரு தொகுதி. போரியல் நிகழ்வுகளை இந்தத் தொகுதியை வைத்தே புரிந்து கொள்ள முடியும். .
எந்தப் போருக்கும் குறிக்கோளாய் மூன்றை மட்டுமே தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லுகிறது. ஒன்று மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ளல். ஒரு காலத்தில் செல்வம் என்பது மாட்டு மந்தைகளே. மாட்டு மந்தைகளைக் கவர்ந்து கொள்ளுவது வெட்சிப் போர், கவர்ந்ததை மீட்டுக் கொள்வது கரந்தைப் போர். அண்மைக் காலத்தில் நடந்த வெட்சி - கரந்தைப் போராகக் குவைத்திற்கும் ஈராக்கிற்கும் இடையே நடந்த போரைக் குறிக்கலாம். ஈராக்கின் பாறைநெய்ச் (petroleum) செல்வத்தை நிலத்திற்கு அடியில், வளைந்த குழாய் போட்டுச் சுரண்டி, குவெய்த் கவரத் தொடங்கியது. ஈராக் அதைத் தடுத்துத் தன் செல்வத்தை மீட்டுக் கொள்ளப் பார்த்தது. முடிவில் அமேரிக்கா, இரோப்பா போன்ற சண்டியர்களின் உறுதுணையால் வெட்சியார் வெற்றி பெற்றார்கள். கரந்தையார் தோற்றார்கள். வளைகுழாய் நுட்பியலில் இன்றைக்கும் இராக்கின் பாறைநெய் குவெய்த்தால் கவரப் பட்டே வருகிறது. [பலநேரம் வெட்சிப் போர் கமுக்கமாய், ஊமைக் குசும்போடு, ஆளரவம் அற்று இருக்கும். கரந்தைப் போர் பெரும் ஆரவாரத்துடன் நடக்கும். உடனே பார்வையாளர் கரந்தையார் தான் போரைத் தொடங்கினார்கள், அவர்களே கெடுதிக்காரர்கள் என்று எண்ணத் தொடங்கிவிடுவார்கள். கடைசிவரை வெட்சியாரின் வேட்கை சாடப் படாமலே போகும். இங்கும் எல்லோரும் இராக்கையே சாடிய நிலையில், குவெய்த் கண்டனத்திற்கு உள்ளாகவே இல்லை.]
அடுத்த வகைப் போரை வஞ்சிப் போர்.என்று தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லும். மண் நசையால் (விருப்பத்தால்) ஒருவன் இன்னொரு நாட்டை போரால் கவருவது. இந்தப் போருக்குக் கணக்கற்ற எடுத்துக் காட்டுக்கள் உண்டு. [சொல்லப் போனால் வஞ்சிப் போர் மிகவும் பரவலானது. முன் நடந்த இரண்டு உலகப் போர்களும் கூட வஞ்சிப் போர்கள் தான்.] நம் முன்னே இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ஈழப் போரும் ஒரு வஞ்சிப் போர் தான்.. சிங்களனுக்குத் தமிழ்மண் வேண்டும். தமிழரைத் துரத்தியடித்து, அவர் நிலத்தில் சிங்களரைக் குடியேற்றி நாட்டின் மக்கள்
பரம்பலை (distribution) அவன் மாற்ற விழைகிறான். இதற்கு அவன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க அவன் அணியமாய் இருக்கிறான். தமிழன் என்ற இனம் அழிந்தால் தான் சிங்களனுக்கு நிலம் கிடைக்கும் என்றநிலையில், ”தமிழன் இறந்தாலும் சரி, அகதியாய் ஓடிப் போய் நிலம் விட்டு நகர்ந்தாலும் சரி,” சிங்களனுக்கு ஏற்கை தான். இந்த நிலையில் தமிழரின் குறிக்கோள் என்ன? ”தமிழ்மண் உரிமையை எக்காலத்தும் விட்டுக் கொடுக்கக் கூடாது; முடிந்தால் அகலவே கூடாது” என்பது தானே?
இதற்கான தடவரையில் புலிகள் போயிருந்தால், ”ஏன் 7 ஆண்டுகளாய் சமதானம் பார்த்தார்கள்?” என்று என் சிந்தனைக்குப் புரிபடவில்லை. சமதானத்திற்கு முன் அகன்று கொண்டே போய், விரிந்த நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் அவர்கள் கொண்டுவந்தார்களே? அதை முற்றிலுமாய் முடித்து தமிழருக்கான முழு நிலத்தையும் தங்கள் வசம் கொண்டு வருவதில் ஏன் சுணக்கம் ஏற்பட்டது? - விளங்கவில்லை.
இந்த 7 ஆண்டுகளில் பல செய்திகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் அடிப்படைக் கேள்வி அப்படியே நிற்கிறது.
நான் போரியலாளன் அல்லன். அதே பொழுது தமிழர் வெல்ல வேண்டும் என்று நினைக்கும் பார்வையாளன். யாராவது விளக்கமாய்ச் செறிவாய்ச் சொன்னால் தெரிந்து கொள்வேன்.
இன்னும் சில சிந்தனைகள் நொச்சிப் போரை ஒட்டி இருக்கின்றன. அடுத்தடுத்துச் சொல்லுகிறேன். .
அன்புடன்,
இராம.கி.
பி.கு. தமிழ்ப் புறத்துறை இலக்கணம் சொல்லும் மூன்றாவது வகைப்போர் தும்பைப் போர். அது வலிமையை உணர்த்து முகத்தான் ஒருவன் செய்வதும் அதை எதிர்த்து மற்றொருவன் போரிடுவதும் ஆகும். அமெரிக்கா, ஈராக்கின் மேல் தொடுத்ததும், ஆப்கனித்தான் மேல் தொடுத்ததும் தும்பைப் போர்கள். அந்த வகைப் போர்கள் இப்பொழுது நம் உரையாடலுக்குள் உள்ளாத காரணத்தால் அவற்றைப் பற்றி இங்கு பேசவில்லை.
Sunday, January 04, 2009
நொச்சிப் போர் எழுப்பிய சிந்தனைகள் - 1.
நொச்சி வீழ்ந்தால் என்ன? நொச்சியில் இருந்து உழிஞைக்கு மாறிக் கொள்ள முடியாதா, என்ன? நொச்சியும் உழிஞையும் மாறிமாறி ஏற்படும் செருநிலைக் (battles) குறியீடுகள்; அவ்வளவு தான். அவை மண்ணாசைக்காக எழும் நீண்ட வஞ்சிப் போர் அல்ல, இடைநிலைப் போக்குகள். நீண்ட வஞ்சி இனியும் தொடரும், வாகையில் முடியும் வரை. எங்கள் தம்பி வாகை சூடத்தான் செய்வான். அடச்சே, போங்கடா!
புறம் 271 ல் வெறிபாடிய காமக் காணியார் என்னும் புலவர், நொச்சித் திணையில் செருவிடை வீழ்தல் என்னும் துறையில்
நீரறவு அறியா நிலமுதல் கலந்த
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலையாகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப்
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே
என்று பாடியிருப்பார். இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்தாற் போன்று ஒரு விவரிப்பு.
நொச்சியைப் புதலியற் (Botany) துறையில் Vitex nigundo L. என்பார்கள். (நீர்க் குன்றி என்ற தமிழ்ச்சொல் தான் nirgundi>nigundo என்று ஆகியிருக்கிறது. நொச்சிச் செடி முற்றிலும் ஒரு தமிழ்நிலத்துச் செடி.) ஒரு குறுமரம் என்றே சொல்லத் தக்க நொச்சிச்செடி சமவெளிகளிற் கிட்டத்தட்ட 4 மாத்திரி உயரத்திற்கும், மலைப் பகுதியில் 6 மாத்திரி உயரத்திற்கும் கூட வளரும். எங்கெல்லாம் ஈரம் மிகுந்திருக்குமோ, அங்கு, குறிப்பாக ஆற்றோரங்களில், நொச்சிச் செடி வளரும். காமக் காணியார் பாட்டின் “நீரறவு அறியா நிலமுதல் கலந்த” என்ற முதல்வரி, இந்த அறிவியல் அவதானிப்பைச் சட்டென்று உணர்த்துகிறது. நீரறவு என்பது நீர்க்குறை. நீரறவு அறியா நிலம் என்னும் போது நீர்வளம் குறையாத நிலத்தைக் குறிக்கிறது. நொச்சிச் செடி நஞ்சைப் பகுதியில் (அதாவது மருத நிலத்தில்) வேலியாகக் கூட வளர்க்கப் படுகிறது. எனவே வேலிக்கு உவமையாய் நொச்சி திகழும்.
நொச்சியிலை 7-12 நுறுமாத்திரி (செண்டிமீட்டர்) நீளமும், 2-3 நுறுமாத்திரி அகலமும் கொண்டு ஈட்டி வடிவில், கண்ணை ஈர்க்கும் பசிய நிறத்தில், இருக்கும். மயிலின் தாளைப் போல இலை இருப்பதால் அதை மயிலடி இலை என்று கூட விவரிப்பது உண்டு. இலைக் காம்புகள் ஒன்றரை நுறுமாத்திரி இருப்பதால் இலைகளைத் துணி போலப் பின்னுவது எளிது. நொச்சித் தழையாடையை மருதநிலத்துப் பெண்கள் தம் இடுப்பில் அகன்ற அல்குலை மூடும் வகையில் அணிந்து கொள்வார்களாம். பருத்தித் துணிக்கு மேல் அணிந்து கொண்டிருக்கலாமோ, என்னவோ? இலைகளின் பசியநிறம் கண்களை ஈர்த்ததைப் பல சங்கப் பாடல்கள் சொல்லியிருக்கின்றன. ”கண் ஆர் குரூஉத் தழை, மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் தொடலையாகவும்” என்று மேலே வரும் சொற்றொடரும் அதே செய்தியைச் சொல்கிறது. தொடலை என்பது இலைகளை நெருக்குப்பத்தையாய்த் துணிபோற் பின்னிக் கட்டுவதாகும்.
நொச்சிப் பூவின் இயற்கை நிறம் கருநீலம் செறிந்த செவ்வூதா. பூங்கொத்துக்கள் 25 நுறுமாத்திரி அளவில் பூத்துக் குலுங்கும். சமவெளியில் சனவரி - ஏப்ரல் மாதங்களிலும், மலைப்புறத்தில் சூலை - அக்டோபரிலும் பூக்கும். குரல் என்பது கொத்து. நொச்சிக்கே உரிய மணம் செடிக்கு அருகில் போனாலே கமழ்ந்து தெரியுமாம். செடிப்பட்டை, சிறு இளம் கிளைகள், பூங்கதிர்கள், மற்றும் இலையின் கீழ்ப்புறம் ஆகிய எல்லாமே சாம்பற்பொடி தூவியது போல் இருக்குமாம்.
சங்க இலக்கியங்களில் நொச்சியைக் குறிக்கும் குறியீடாகக் ”கருங்குரல் நொச்சி, மாக்குரல் நொச்சி, மணிக்குரல் நொச்சி, மணிஏர் நொச்சி, ஒண்குரல் நொச்சி” என்று பூங்கொத்தோடு கூட்டியோ, ”தாழ்வின் நொச்சி, தடவுநிலை நொச்சி, கூழை நொச்சி” என்று செடியின் குள்ளத் தன்மை பற்றியோ சொல்லுகிறார்கள். குள்ளப் பெண் கூளி, குள்ளி என்றும் தமிழில் குறிக்கப் படுகிறாள் இல்லையா? குள்ளச் செடியும் அப்படிக் குறிக்கப் படலாம் தானே? குள்ளிநொச்சி மிகுந்த இடம் குள்ளிநொச்சி> கிள்ளிநொச்சி> கிளிநொச்சியாகப் பேச்சுவழக்கில் சொல்லப் படுவது வியப்பில்லை. நான் சொல்லும் களம் புரிகிறதோ?
மருதநிலத்தில் நஞ்சை வேலியாக நொச்சிச் செடி வளர்க்கப் பட்டது என்று பார்த்தோமல்லவா? அதனால் வேலி/மதில் என்பதற்கே நொச்சி ஒரு குறியீடு ஆனது. மருதநிலத்தில் தானே மதில்களும் அரண்களும், கோட்டைகளும்.பரந்து கிடக்கின்றன. அரண்களைக் காக்கும் போர் நொச்சிப் போர். நொச்சிப் போராளிகள் நொச்சிப்பூ தொடுத்த மாலையைக் கழுத்திற் போட்டுக் கொள்ளுவார்கள். மேலே பாட்டின் ஆறாவது வரியில் தெரியல் என்ற சொல் வருகிறதே அது இந்த மாலையைக் குறிக்கும். அரணைத் தகர்க்க வருபவரை உழிஞையார் (உழிஞைப் பூ அணிந்தவர்) என்றும், அரணைக் காப்பவரை நொச்சியார் என்றும் தமிழிலக்கணம் சொல்லும்.
பாட்டில் வரும் மைந்தன் என்ற சொல் போராளியைக் குறிக்கிறது. மைந்து என்பது வலிமை. மறம்புகல் மைந்தன் = போரில் பொருதும் போராளி..
இப்பொழுது பாட்டின் பொருளைப் பார்ப்போமா?
”நீர்வளம் குறையா நிலத்தோடு ஒன்றி, கருநீலப் பூங்கொத்தோடு காட்சியளிக்கும் நொச்சிச் செடியின் (கண் நிறைத்துத் தோற்றும்) தழையைத் தொடலையாக்கி, தம் அழகிய அகன்ற அல்குலை மூடி மகளிர் அணிந்துகொள்வதை முன்பு இனிதாய்ப் பார்த்திருக்கிறோம். போரில் புகுந்த மகன் இறந்து கிடக்கும் இப்பொழுதோ, அச்சம் தரும் குருதியில் முழுதாய்த் தோய்ந்து, நிறம் மயங்கிக் கிடக்கும் நொச்சி மாலையை ஊன் என்று கருதிப் பருந்து கவ்வ விழைவதைப் பார்க்கிறோம்.”
என்ன சொல்ல வருகிறார், புலவர்? ”முன்னால் நொச்சித் தழையாடை உடுத்த காட்சியை இனிது கண்டோம்; இப்பொழுது எங்கள் போராளி நொச்சிமாலை குருதியில் நிறம் மாற, பருந்து கவ்வ வருவதைப் பார்க்கிறோம்”. ”மேலது கீழாய் கீழது மேலாய், இந்த நிலை இனியும் மாறும்” என்பது உடன் வரும் உள்ளுறைப் பொருள் ஆகும். புலவர் சொல்லிய முரண்தொடையால் இந்தப் பொருள் பெறுகிறோம். ஏனென்றால்,
“தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என்றலும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே ....”
- கணியன் பூங்குன்றன், புறம் 192.
அன்புடன்,
இராம.கி.
புறம் 271 ல் வெறிபாடிய காமக் காணியார் என்னும் புலவர், நொச்சித் திணையில் செருவிடை வீழ்தல் என்னும் துறையில்
நீரறவு அறியா நிலமுதல் கலந்த
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலையாகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப்
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே
என்று பாடியிருப்பார். இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்தாற் போன்று ஒரு விவரிப்பு.
நொச்சியைப் புதலியற் (Botany) துறையில் Vitex nigundo L. என்பார்கள். (நீர்க் குன்றி என்ற தமிழ்ச்சொல் தான் nirgundi>nigundo என்று ஆகியிருக்கிறது. நொச்சிச் செடி முற்றிலும் ஒரு தமிழ்நிலத்துச் செடி.) ஒரு குறுமரம் என்றே சொல்லத் தக்க நொச்சிச்செடி சமவெளிகளிற் கிட்டத்தட்ட 4 மாத்திரி உயரத்திற்கும், மலைப் பகுதியில் 6 மாத்திரி உயரத்திற்கும் கூட வளரும். எங்கெல்லாம் ஈரம் மிகுந்திருக்குமோ, அங்கு, குறிப்பாக ஆற்றோரங்களில், நொச்சிச் செடி வளரும். காமக் காணியார் பாட்டின் “நீரறவு அறியா நிலமுதல் கலந்த” என்ற முதல்வரி, இந்த அறிவியல் அவதானிப்பைச் சட்டென்று உணர்த்துகிறது. நீரறவு என்பது நீர்க்குறை. நீரறவு அறியா நிலம் என்னும் போது நீர்வளம் குறையாத நிலத்தைக் குறிக்கிறது. நொச்சிச் செடி நஞ்சைப் பகுதியில் (அதாவது மருத நிலத்தில்) வேலியாகக் கூட வளர்க்கப் படுகிறது. எனவே வேலிக்கு உவமையாய் நொச்சி திகழும்.
நொச்சியிலை 7-12 நுறுமாத்திரி (செண்டிமீட்டர்) நீளமும், 2-3 நுறுமாத்திரி அகலமும் கொண்டு ஈட்டி வடிவில், கண்ணை ஈர்க்கும் பசிய நிறத்தில், இருக்கும். மயிலின் தாளைப் போல இலை இருப்பதால் அதை மயிலடி இலை என்று கூட விவரிப்பது உண்டு. இலைக் காம்புகள் ஒன்றரை நுறுமாத்திரி இருப்பதால் இலைகளைத் துணி போலப் பின்னுவது எளிது. நொச்சித் தழையாடையை மருதநிலத்துப் பெண்கள் தம் இடுப்பில் அகன்ற அல்குலை மூடும் வகையில் அணிந்து கொள்வார்களாம். பருத்தித் துணிக்கு மேல் அணிந்து கொண்டிருக்கலாமோ, என்னவோ? இலைகளின் பசியநிறம் கண்களை ஈர்த்ததைப் பல சங்கப் பாடல்கள் சொல்லியிருக்கின்றன. ”கண் ஆர் குரூஉத் தழை, மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் தொடலையாகவும்” என்று மேலே வரும் சொற்றொடரும் அதே செய்தியைச் சொல்கிறது. தொடலை என்பது இலைகளை நெருக்குப்பத்தையாய்த் துணிபோற் பின்னிக் கட்டுவதாகும்.
நொச்சிப் பூவின் இயற்கை நிறம் கருநீலம் செறிந்த செவ்வூதா. பூங்கொத்துக்கள் 25 நுறுமாத்திரி அளவில் பூத்துக் குலுங்கும். சமவெளியில் சனவரி - ஏப்ரல் மாதங்களிலும், மலைப்புறத்தில் சூலை - அக்டோபரிலும் பூக்கும். குரல் என்பது கொத்து. நொச்சிக்கே உரிய மணம் செடிக்கு அருகில் போனாலே கமழ்ந்து தெரியுமாம். செடிப்பட்டை, சிறு இளம் கிளைகள், பூங்கதிர்கள், மற்றும் இலையின் கீழ்ப்புறம் ஆகிய எல்லாமே சாம்பற்பொடி தூவியது போல் இருக்குமாம்.
சங்க இலக்கியங்களில் நொச்சியைக் குறிக்கும் குறியீடாகக் ”கருங்குரல் நொச்சி, மாக்குரல் நொச்சி, மணிக்குரல் நொச்சி, மணிஏர் நொச்சி, ஒண்குரல் நொச்சி” என்று பூங்கொத்தோடு கூட்டியோ, ”தாழ்வின் நொச்சி, தடவுநிலை நொச்சி, கூழை நொச்சி” என்று செடியின் குள்ளத் தன்மை பற்றியோ சொல்லுகிறார்கள். குள்ளப் பெண் கூளி, குள்ளி என்றும் தமிழில் குறிக்கப் படுகிறாள் இல்லையா? குள்ளச் செடியும் அப்படிக் குறிக்கப் படலாம் தானே? குள்ளிநொச்சி மிகுந்த இடம் குள்ளிநொச்சி> கிள்ளிநொச்சி> கிளிநொச்சியாகப் பேச்சுவழக்கில் சொல்லப் படுவது வியப்பில்லை. நான் சொல்லும் களம் புரிகிறதோ?
மருதநிலத்தில் நஞ்சை வேலியாக நொச்சிச் செடி வளர்க்கப் பட்டது என்று பார்த்தோமல்லவா? அதனால் வேலி/மதில் என்பதற்கே நொச்சி ஒரு குறியீடு ஆனது. மருதநிலத்தில் தானே மதில்களும் அரண்களும், கோட்டைகளும்.பரந்து கிடக்கின்றன. அரண்களைக் காக்கும் போர் நொச்சிப் போர். நொச்சிப் போராளிகள் நொச்சிப்பூ தொடுத்த மாலையைக் கழுத்திற் போட்டுக் கொள்ளுவார்கள். மேலே பாட்டின் ஆறாவது வரியில் தெரியல் என்ற சொல் வருகிறதே அது இந்த மாலையைக் குறிக்கும். அரணைத் தகர்க்க வருபவரை உழிஞையார் (உழிஞைப் பூ அணிந்தவர்) என்றும், அரணைக் காப்பவரை நொச்சியார் என்றும் தமிழிலக்கணம் சொல்லும்.
பாட்டில் வரும் மைந்தன் என்ற சொல் போராளியைக் குறிக்கிறது. மைந்து என்பது வலிமை. மறம்புகல் மைந்தன் = போரில் பொருதும் போராளி..
இப்பொழுது பாட்டின் பொருளைப் பார்ப்போமா?
”நீர்வளம் குறையா நிலத்தோடு ஒன்றி, கருநீலப் பூங்கொத்தோடு காட்சியளிக்கும் நொச்சிச் செடியின் (கண் நிறைத்துத் தோற்றும்) தழையைத் தொடலையாக்கி, தம் அழகிய அகன்ற அல்குலை மூடி மகளிர் அணிந்துகொள்வதை முன்பு இனிதாய்ப் பார்த்திருக்கிறோம். போரில் புகுந்த மகன் இறந்து கிடக்கும் இப்பொழுதோ, அச்சம் தரும் குருதியில் முழுதாய்த் தோய்ந்து, நிறம் மயங்கிக் கிடக்கும் நொச்சி மாலையை ஊன் என்று கருதிப் பருந்து கவ்வ விழைவதைப் பார்க்கிறோம்.”
என்ன சொல்ல வருகிறார், புலவர்? ”முன்னால் நொச்சித் தழையாடை உடுத்த காட்சியை இனிது கண்டோம்; இப்பொழுது எங்கள் போராளி நொச்சிமாலை குருதியில் நிறம் மாற, பருந்து கவ்வ வருவதைப் பார்க்கிறோம்”. ”மேலது கீழாய் கீழது மேலாய், இந்த நிலை இனியும் மாறும்” என்பது உடன் வரும் உள்ளுறைப் பொருள் ஆகும். புலவர் சொல்லிய முரண்தொடையால் இந்தப் பொருள் பெறுகிறோம். ஏனென்றால்,
“தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என்றலும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே ....”
- கணியன் பூங்குன்றன், புறம் 192.
அன்புடன்,
இராம.கி.
Wednesday, December 31, 2008
கொலை
"கொலையைப் பற்றி ஒரு நாள் எழுதுவேன்" என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. ஆனால் பேராசிரியர் முத்து என்பவர் அமெரிக்காவில் இருந்து ஒருமுறை அதைப் பற்றிக் கேட்க, நான் எழுத வேண்டியதாயிற்று. இப்பொழுது பழையதைக் கிண்டிக் கொண்டிருந்த போது, இதை வலைப்பதிவில் போடலாமே, பலருக்கும் தெரிவிக்க வேண்டிய செய்தி தானே என்று தோன்றியது. இப்பொழுது சிறு சிறு மாற்றங்கள் செய்து அதை இங்கு இடுகிறேன்.
ஒவ்வொரு மொழிக்கும் விதப்பான (special) சில சொல்லாட்சிகள் உண்டு. இந்தச் சொல்லாட்சிகள் அந்தந்த மொழி பேசும் மக்களின் தனித்த சிந்தனையாலும், குமுகச் சிந்தனையாலும் ஏற்படுகின்ற சில புதிய பொருட்பாடுகளை (meanings) முன்வைத்து புழக்கத்திற்கு வருகின்றன. இந்தச் சொல்லாட்சிகள் எழுந்தமுறை மிக எளிதாகவே இருக்கலாம். இருப்பினும் இரண்டு வெவ்வேறு சொற்களை ஓரிடத்தில் அடுத்தடுத்துப் பொருத்தும் போதோ, அல்லது ஒரு அடிப்படையில் தோன்றிய கருத்தை இன்னொரு நிகழ்விற்கு உருவகம் செய்யும் போதோ, புதிய பொருட்பாடு அந்த மொழிக்கென வந்து விடுகிறது.
இரண்டு சொற்களைப் பொருத்தி முற்றிலும் புதிதான ஒரு பொருட்பாடு கொள்வதற்கு தமிழில் ஒரு எடுத்துக்காட்டைக் கீழே கொடுக்கிறேன்.
"உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எத்தனையாவது பையன்?" இந்த வாக்கை எப்படி முயன்றாலும் ஆங்கிலத்தில் நேரடியாகச் சொல்ல முடியாது. கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் சொல்ல முடியும். இந்த "எத்தனையாவது" என்ற சொற்கூட்டில் "எத்தனை" என்பதையும் "ஆவது" என்பதையும் தனித்தனியே ஆங்கிலத்தில் பெயர்க்க முடியும். ஆனால் சேர்ந்து வரும் போது ஒரு புதிய பொருட்பாடு வருகிறது பாருங்கள். அதைத் ”தமிழுக்குரிய விதப்பு” என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? (இது போல ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பெயர்க்கும் போதும் சில இடையூறுகள் உண்டு.)
உருவகத்தால் வரும் புதிய பொருட்பாட்டிற்கும் இங்கே ஒரு எடுத்துக் காட்டைக் கொடுக்கிறேன்.
எதிர்பாராத தன்னேர்ச்சி (accident) ஒன்று நாம் போகும் சாலையில் நடக்கிறது; ஒருவர் சாகக் கிடக்கிறார். அவருக்கு மூச்சு இருக்கிறதா என்று இன்னொருவர் பார்க்கிறார். கூட்டத்தில் நிற்கும் மற்றொருவர் சென்னைத் தாழ்நிலை மக்களின் பேச்சுவழக்கில், "இன்னாபா, மெய்யாலுமே பூட்டானா?" என்று கேட்கிறார். . உயிர் போவதை "போய்விட்டார்" என்ற சொல்லால் தமிழில் இப்படி உணர்த்துவதை எவ்வளவு தலை கீழாக நின்றாலும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியுமோ? இத்தனைக்கும் ஆங்கிலத்தில் இதற்கு "gone" என்ற நேரடிச் சொல் இருக்கிறது. தமிழ் மொழிக்கென்ற உருவகம் இங்கே உள்ளடங்கி நிற்பதை நாம் உணருகிறோம் அல்லவா? (இதே போல ஆங்கிலத்தில் சொல்லும் ஒரு மொழியை அப்படியே தமிழில் பெயர்க்க இயலாத நிலைகள் உண்டு.)
குமுகச் சிந்தனையில் கிளரும் பொருட்பாட்டிற்கு தொல்காப்பியத்தில் வரும் ஒரு கூற்றையே எடுத்துக் காட்டாகக் கூறலாம்:
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே
இப்படி, சொல்லுபவன் நிலையைப் பொருத்துச் சொல் தொடுக்கும் பழக்கம் மேலை மொழிகளில் பெரும்பாலும் கிடையாது.
சரி, பேராசிரியர் முத்துவின் கேள்விக்கு வருவோம். ”murder என்பதைத் தமிழில் சொல்ல முடியுமா?” என்று முதலில் கேட்டிருந்தார். அதற்கு விடையாக நான் சில சொற்களைக் குறிப்பிட்டு இருந்தேன். உடனே அவர்
---------------------------------------------------------
தமிழில் "murder" என்ற சொல்லுக்கு இணையான சொல் என்று ஒரு சொல்லைக் கூற முடியுமா? இருக்க வேண்டிய அவசியமோ, இல்லாதது ஒரு குறையோ அல்ல. தமிழ் மொழி தமிழர் பண்பாட்டை ஒட்டியே இருக்கும். கொல்வது என்ற செயலே (வஞ்சத்தினாலோ, தற்காப்புக்காகவோ, வேட்டையிலோ, அறியாமலோ, விபத்தினாலோ) குற்றமாகக் கருதப்பட்டால், ஒரு சொல்லே போதும்; ஒரு மனிதப்பிறவி மற்றொரு மனிதப்பிறவியை, வஞ்சனையால் கொல்வது மட்டுமே குற்றமெனக் கருதப்பட்டால் (இன்றைய தமிழ்ச்சமூகம் மற்றும் மேல்நாட்டுச் சமூகப் பண்பாட்டுப் படி) அப்போது, அந்தச்செயலைக் குறிக்க ஒரு தனிச்சொல் வேண்டும். உதாரணமாக, "Indira Gandhi was assasinated" என்பதைத் தமிழில் "இந்திரா காந்தி கொல்லப்பட்டார்" என்றும், "My cat killed a mouse" என்பதை, "என் பூனை ஒரு எலியைக் கொன்றது" என்றும் ஒரே விதமாகக் கூறுகிறோமே அன்றி, வித்தியாசமாகக் கூறுவதில்லையே! தமிழ் இலக்கியத்தில் இவ்விரு செயல்களும்- உதாரணமாகக் கம்ப இராமாயணத்தில் இராமன் வாலியைக் கொன்றதையும், மனுநீதிச்சோழனின் மைந்தன் தேர் ஓட்டி பசுங்கன்றை மாய்த்ததையும்- வேறு வேறு சொற்களால் வருணிக்கப் பட்டிருக்கின்றனவா?
-----------------------------------------------------------------------------------------
என்று மீண்டும் விரிவாகக் கேட்டிருந்தார். நண்பர் சிரீவாசும் அந்தச் சொற்களுக்கு விளக்கம் கேட்டிருந்தார்.
Cambridge International Dictionary of English என்ற ஆங்கில அகரமுதலியில் murder என்பதற்கு the crime of intentionally killing a person என்றே போட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சொல்லின் வரலாற்றை இலத்தீன், இந்தோயிரோப்பியன் வரை போய்ப் பார்த்தால் அங்கே வெறும் இறப்பு என்ற பொருட்பாடு தான் இருக்கிறது. (The ultimate source of murder is the Indo-European base *mor-, *mr- 'die' (source also of English mortal). "வேண்டும் என்றே கொலை செய்தல்" என்ற இந்தக் காலத்துப் பொருட்பாடு அந்தக் காலத்தில் இல்லை. எங்கேயோ இடைப்பட்ட காலத்தில் (பெரும்பாலும் 19-ம் நூற்றாண்டில்) ஏற்பட்டிருக்கலாம். அந்த *mor- என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மற்ற சொற்களான mortality, mortuary, போன்றவற்றைப் பார்த்தாலும் வெறும் இறப்பு என்ற பொருட்பாடே உள்ளே தொனித்து நிற்கிறது. "*mor- என்ற வேரின் பொருள் என்ன? அது எப்படிப் பிறந்தது?" என்ற விளக்கம் அங்கு இல்லை.
தமிழில் இறத்தல், சாவு, மடிதல் போன்றவை வளைவு என்ற அடிக் கருத்தில் எழுந்தவை. (இன்னும் சில சொற்கள் துண்டாகிப் போன கருத்தில் எழுந்தவை.) ஒருவன் உயிராற்றலை இழந்து சாய்ந்து போனால் அதைச் சாய்வு>சாவு என்கிறோம். சாவு>சவத்தல்>சவம்; சாதல்>சவத்தல்>செத்தல் என்றெல்லாம் அது திரியும். மடிதல் என்பதும் நிற்க முடியாமல் மடங்கிப் போதல் என்றே பொருட்பாடு கொள்ளும். மடிதல்>மரித்தல் (டகரமும் ரகரமும் தமிழில் போலியாகி நிற்கும்)>மரணம், இறத்தல் என்பதும் சரிதல் என்ற பொருளே கொள்ளும். இறக்கம் = சரிவு. சாய்வும் சரிவும் தமிழில் ஒன்றுதானே!
மடிதல்/மரித்தல் என்ற சொல்தான் இந்தையிரோப்பியச் சொல்லடியான mort என்பதோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியானால், மரிப்பு = mortality' மரித்துறை = mortuary (சவ அறை) என்ற சொற்கள் சரியாக இருக்கும்.
மேலே கூறியது போல், இந்தச் சொற்களில் எல்லாம் இறப்பு என்ற கருத்து இருக்கிறதே ஒழிய கொலை என்ற கருத்து உடன் வரவில்லை. பிறகல்லவா "வேண்டும் என்ற கொலை"?
கருத்து வளர்ச்சியில் சொற்கள் விளைவதை ஒரு படி முறை போலப் பார்க்க வேண்டும். முதலில் இறப்பு; "பிறகு எதனால் இறப்பு?" " கொலையால் இறப்பு". அடுத்த கேள்வி: "வேண்டும் என்ற கொலையா?" இது மூன்றாவது படி.
இந்த மூன்றாவது படியைத் தமிழில் ஒரே சொல்லில் சொல்லவியலாது. ஒரு சொற்தொகுதியால் மட்டுமே சொல்ல முடியும். அந்தக் கொலையில் இட்டம் (இழ்+தம் = இட்டம். இழ்+ஐ = இழை>இழைவு; இழைத்தல் என்பது ஈடுபாட்டோடு செய்தல். இட்டத்தை இஷ்டம் என்று வடமொழியில் சிலர் மாற்றுவது உண்டு. ஈடுபாடு = intention) இருக்க வேண்டுமானால் மரியிழைத்தல் என்று சொல்லலாம். இருப்பினும் "வேண்டும் என்றே செய்த கொலை" என்று நீட்டிச் சொல்வதே தமிழுக்குப் பழக்கப் பட்டது. கீழே இருப்பது ”முயன்றால் புழக்கத்திற்குக் கொண்டுவரலாம்” என்று பரிந்து
உரைப்பது.
"இந்த மரியிழைப்பைச் செய்தவர் யார்? (who comitted this murder?) மரியிழையர் = murderer; இல்லையென்றால் வேட்கொலையன் (வேள் = வேண்டுதலின் அடிச்சொல்) என்று கூடச் சொல்லலாம். வேட்கொலை = murder.
இனி நண்பர் சிரீவாசின் கேள்விக்கான விடை:
காட்டு விலங்காண்டிக் காலத்தில் இருந்து இயல்பாக இந்த நாவலந்தீவில் கிளைத்த மொழி தமிழ். நாகரிகம் அடையாத காலத்தில் இருந்தே இங்கு ஒலியும் சொல்லும் கருத்துக்களை ஒட்டி ஒன்றன் பின் ஒன்றாகக் கிளர்ந்தன; ஆனால் மெதுவாக நூற்றாண்டுக் கணக்கில் வளர்ந்த மொழி. இதில் எந்தக் கருத்தில் இருந்து எந்தக் கருத்து கிளைத்தது என்பதை தட்டுத் தடவி மொழியியலார்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கொல்லுதல் என்ற வினை அறுதப் பழங்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். மாந்த நூலார் சொல்லும் படி, தம் உயிர் வாழ்வே முதன்மை என்ற நிலையில், தனக்குப் போட்டியான யாரும் ஒழிக்கப் படவேண்டியவர்கள் என்ற போக்கில், மாந்தர்கள் ஒருவரை ஒருவர் கல்லாலும் மரத்தாலும் உணவைத் தேடும் வேட்டையில், அடித்துக் கொன்று திரிந்திருக்க வேண்டும். பின் நெடுநாட்கள் கழித்து, உலோகம் கண்ட பிறகு, உலோகமே மரக்கருவிகளையும், கற்கருவிகளையும் போல அமைந்தாடி (imitate)க் காட்டத் தொடங்கினாலும், சொல்வரலாறு அடித்தளத்தைக் காட்டிக் கொடுக்கிறது. பெரும்பாலான அடிதடிச் சொற்களும், கொல்லுதற் சொற்களும் உலோகத்தைப் பயன்படுத்தும் முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதையே தமிழ்ச் சொல் வரலாறு காட்டுகிறது.
காட்டாக,
மரத்தின் அடியில் இருந்து பிறந்த வினை அடித்தல்.
மரத் தாளில் இருந்து பிறந்த வினை *தாள்க்குதல்>தாக்குதல்.
மரக் காலில் இருந்து பிறந்த வினை *கால்த்துதல்>*காத்துதல்>காதுதல். (போட்டு காத்திட்டான்யா>போட்டுக் காச்சிட்டான்யா!)
மரத்தின் அடி பெருத்துத் தட்டித்துக் கிடந்ததால் அது தட்டு>தட்டி>தடி; இது மூங்கிலுக்கே சிறப்பாக வந்த பெயர். மூங்கில் தட்டை, மூங்கில் தடி என்ற சொற்கூட்டுகளைப் பார்த்தால் இது புரியும். தமிழன் நாவலந்தீவிலே தன் நாகரிகம் அறியா நிலையில் திரிந்தான், வேறு எங்கிருந்தும் வரவில்லை என்பதற்கு "மூங்கில்அடி"ச் சொற்களே கூட ஆதாரம் ஆகும்; இவையே இந்த வன்சொற்களின் மூலம் வெளிப்படுகிறது. மூங்கில் என்னும் நிலத்திணை நடுவண்நிலக் கரை (mediteranian and middle east countries) நாடுகளில் இருந்ததாகப் புதலியல் (botany) சொல்லவில்லை. மூங்கிலின்
பயன்பாடு பழந்தமிழ் மாந்தனின் வாழ்வில் மிகவும் அதிகம். மூங்கில் தடியால் தட்டலாம். தடி தறியாகும். பின் தறித்தலையும் தரும். தறித்தல் = அடித்தல். இன்னும் கொஞ்சம் நீண்டு, தட்டு தண்டாகும்; தண்டு என்னும் விதப்பான பெயர் பின் பொதுமை நிலைக்கு வந்து மற்ற மரங்களின் தண்டிற்கும் பெயர் கொடுக்கும். மாந்தரின் கணக் கூட்டம் வளர, வளரத் தண்டில் இருந்து தண்டனையும் எழும்.
அடிதடியில் தொடங்குகிற கருத்து, சோர்வுக்கும், தளர்ச்சிக்கும், சாய்வுக்கும், சரிவுக்கும் நீண்டுப் பின் முடிவில் இறப்பிற்கும் ஆகப் பொருட்பாடு நீளுவது தமிழின் இயற்கை. இந்த வன்முறையில் குத்துவது, வெட்டுவது, அடிப்பது எனப் பல்வேறு வகைகளில் தாக்குதல்கள் இருக்கும். கற்கருவிகளும், மரக் கருவிகளும் ஒரே நேரத்தில் மாந்தனுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும். ஆனாலும், கல்லை வைத்து மாந்த நாகரிக வளர்ச்சிக்குக் காலம் சொன்ன மாந்த நூல் கட்டையையும் தடியையும் அவ்வளவு பெரிது படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.
நான் முன்னே சரமிட்ட சொற்களுக்குக் (series of words) கூடிய மட்டும் விளக்கம் தருகிறேன்.
முதற்சொல் எருக்குதல்:
கல்லாலும் கூர்மையான மரத்தாலும் குத்துவது மட்டும் அன்றி ஈர்தலும் செய்ததால் தான் இரண்டு என்பதற்கே இந்த இல்>ஈல்>ஈர் என்பது அடிப்படையாகியது. இல்லுதல் = குத்துதல், புள்ளியிடுதல்.
இல்>ஈல்>ஈர்>ஈர்து>இருடு, இரடு, இருது, இரண்டு
இல்>ஈல்>ஈள்>ஈள்+து>ஈட்டு+ஐ>ஈட்டி (இட்டி என்றும் இதைச் சொல்லுவர்.)
இல்>ஈல்>ஈர்தல்>ஈர்க்குதல்>எருக்குதல்= இரண்டாக வெட்டுதல், தாக்குதல்; குத்திக் கிழிப்பதாலும், தடியால் அடித்தும் இரண்டாக்கலாம். முடிவில் எருக்குதல் என்பதற்குக் கொல்லுதல் என்றும் பொருள் வந்தது.
அடுத்த சொல் எற்றுதல்.
எல் என்பது பெருமை, திரட்சி என்ற கூட்டுப் பொருளின் வேர். எல்லாம், எல்லோரும் என்று சொல்கிறோம் அல்லவா? இங்கே எல்லுதல் = திரளுதல், சேர்த்தல் என்ற அடிப்படைப் பொருள் புலப்படுகிறது.
எல்+து = எற்று = திரண்ட மரம்
எற்றுநூல் = மரக் கோட்டம் பார்க்கும் நூல், மரம் அறுக்க அடையாளம் காட்டும் நூல்.
எற்று>எறு>எறுழ் = தண்டாயுதம், தடி, செந்நிறப் பூவையுடைய குறிஞ்சி நிலத்து மரவகை.
எற்றுதல் = கொல்லுதல்
[இங்கே ஒரு சின்ன இடைவிலக்கு (diversion).
தமிழில் சில விதப்பான மரங்களே கூட அடிதடி வினைகள், கருவிகளைத் தோற்றுவித்தனவோ என்று தோற்றுகிறது. கடம்புக்கு அடிச்சொல் கடு. கட்டை என்ற சொல் கடம்பின் தொடர்பால் வந்ததோ என்று தோன்றுகிறது. யா மரத்தை ஆச்சா மரம் என்றும் சால மரம் என்றும் சொல்வதுண்டு; இதன் தொடர்பால் சால்>சால்+து = சாற்று என்று வந்ததோ?; "அவனைப் போட்டுச் சாத்திட்டாங்கப்பா" என்ற சொல்லாட்சியை எண்ணிப் பாருங்கள்.
மூங்கிலுக்கே தட்டை என்ற சிறப்பான பெயர் உண்டு. மேலே சொன்னேன். "தடிச்சுப் போச்சு" என்ற வழக்கையும் நோக்குங்கள். மூங்கிலின் குருத்தான பிரம்பை வைத்து அடித்தால் தடிக்காமல் வேறு என்ன செய்யும்? கிள்>கிளை>கிழி எல்லாமே மூங்கிலுக்குரிய மற்ற சொற்கள். இதே போல கழி என்பதும் மூங்கிலுக்கான சிறப்புச் சொல். "போட்டுக் கிழிகிழின்னு கீழ்ச்சிட்டான்ய்யா"; (துணிக்குக் கிழி என்று பெயர் வந்தது நாகரிகம் வந்ததற்குப் பின் இருக்க வேண்டும்.)
புளியம் விளாறை வைத்து விளாத்துதல், விளாசுதல் என்றாகும்.
குருந்த மரம் குந்தம் என்றும் சொல்லப் படும். திரண்டு இருக்கும் ஆயுதம் குந்தம் என்று சொல்லப் படும்.
அத்தி மரத்தின் இன்னொரு பெயர் அதம். அதம் பண்ணுதல் என்பது அடிதடி செய்தல்.
அதே போல இங்கே எற்றிற்கும் எறுழுக்கும் உள்ள தொடர்பை மேலே பாருங்கள்.
நான் பலகாலம் சொல்வதுண்டு. விதப்பான சொற்களே (specialized words) பொதுவான கருத்துக்களுக்கு (generic ideas) வித்திட்டன.]
எறியல் = கோடரி (கோடு= மரக்கிளை; மரக்கிளையை அரிவது கோடரி)
எற்றுதல் = திரண்ட மரத்தால் அடித்தல், உதைத்தல், தாக்குதல் (விட்டேற்று என்பது கோலைக் குறிக்கும்)
எற்றியது= அடித்தது; இங்கே மரத்தை உயரத் தூக்கிக் கீழே இறக்குகிறோம் அல்லவா? இந்தக் கருத்தில் இருந்து மேலும் வளர்ந்த கருத்துத்தான் எறிதல்; பின் அது கல்லெறிவிற்கும் பயன்பட்டிருக்க வேண்டும்.
ஒழித்தல் என்ற சொல் அடுத்தது.
உல் = தேங்காய் உரிக்கும் கருவி, கழு, மரம்
உல்லடைப்பு = மரத்தால் ஆற்றிற்கு இடும் அணை.
உல்>உல்லு>உல்லேற்றுதல் = கழுவேற்றுதல் = பிரஞ்சுப் புரட்சியில் இருந்த guilletine போல, ஆனால் மாறுபட்ட ஆயுதம். இதில் கழு நிலைத்து நிற்கும். கொல்லப் பட வேண்டிய ஆள் (man to be murdered; அய்யா முத்து, தமிழில் இபடித்தான் கொல்லப் பட வேண்டிய ஆள் என்று சுற்றி வளைத்தே சொல்ல வேண்டும்.) மேலே இருந்து தூக்கி எறியப் படுவார். கழுவேற்றப் பட்ட சடலம் பின் கோட்டையில் சார்த்தப் பட்டுத் தொங்கிக் கிடக்கும். இதற்கு ஆங்கிலத்தில் spiking என்று சொல்லுவார்கள். கீழை நாடுகளில் எல்லாம் கழுவேற்றுதல் தான். (சப்பான் நாட்டிலும் இதுதான்.
Shogun புதினத்தைப் படித்திருக்கிறீர்களோ?)
உல்லு>உல்லக்கு>உலக்கு=குத்துதல்
உலக்கு>உலக்கை = குத்துகிற மரம், கருவி, தடி, தண்டு
உலக்கு>உழக்குதல் = மிதித்தல், உழுதல், கொன்று திரிதல்
உல்லு>உல்லித்தல்>உலித்தல்(> உலைத்தல்>)*உழித்தல்>ஒழித்தல் = கொல்லுதல், அழித்தல்
மூன்றாவது சொல் காதுதல்:
கல்>கால்>கால்தல் = ஊன்றுதல், இயங்குதல்
கல்>கர்>கரு>கருவி = கூர்மையான ஆயுதம் (கற்கருவி என்பது இப்படித்தான் வந்தது. முதலில் கொல்லப் பயன்பட்ட கருவி பின் கையில் பிடித்தவைக்கெல்லாம் உள்ள சொல்லாகப் பொருள் நீட்டம் கொண்டது.)
கள் = கூட்டப் பொருள்.
கள்>களி>கழி= மூங்கில்; மூங்கில் கூட்டமாகத் தான் வளரும். பின் தனித்து ஒடித்த மூங்கிலுக்கும் கழி என்றே பெயரிடப்பட்டது. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிக் கூடச் சட்டாம்பிள்ளைகள் பிரம்புக் கழி இல்லாமல் இருப்பது இல்லை.
கள்>களை>கழை = மூங்கில்
வேளாண்மையில் பயிரோடு சேர்ந்ததும் கள். அந்தக் கள்ளை நீக்கினால் தான் பயிர் வளரும்.
களை = நீக்கு, அழி. கூட்டத்தில் இருந்து நீக்கப் படுகிற மாந்தர்களும் களையெடுக்கப் பட்டார்கள்.
கள்+து> கட்டு = கூட்டம், சேர்ப்பு, இணைத்தது, பெருத்தது
கட்டு+ஐ>கட்டை = பெருத்த தண்டு
கட்டு>கண்டு=திரண்டது, வெட்டப் பட்டது (கண்டம் துண்டமாக என்பது இரட்டைக் கிளவி. உப்புக் கண்டம் என்பது உப்புப் போட்டு உலரவைக்கப் பட்ட கறித் துண்டு; கற்கண்டு = திரண்டு, கண்டு கண்டாய் வெட்டப் பட்ட வெள்ளைச் சருக்கரை.)
கட்டு>கடு>கடு+அப்பு>கடப்பு = பெருத்த மரம். (மதுரையை அடுத்தவனம் கடம்ப வனம். ஒரு வேளை மிகப் பழங் காலத்தில் வெண்கடம்பு தமிழகத்தில் மிகவும் கூடுதலாய் இருந்ததோ, என்னவோ? இல்லாவிட்டால் இந்த அளவு சிவநெறியிலும், சங்க இலக்கியத்திலும் கடம்பு இவ்வளவு பேசப் படவேண்டிய காரணம் என்ன?)
கடப்பு>கடம்பு>கதம்பு = கடம்ப மரம்
கடு>கடுவு>கதுவு = பெருத்த தடியால் அடி, தாக்கு
கடு என்ற கடம்ப மரம் விதப்பில் இருந்து பொதுமையாகி காட்டையே குறித்தது. பொதுமைப் பொருளில் நிலைத்தது. இதே போல கடு என்பது காட்டிற்கு மட்டும் அல்லாது கூடிக் கிடந்த மலைத் தொகுதியையும் குறித்தது.
கடு>கடம் = காடு,மலை
கடம் ஆர்ந்து (நிறைந்து) கிடந்தது கடாரம்; இன்றைய மலேசிய நாட்டின் கெடா மாநிலம். தமிழன் நாகரிகம் அடைந்து வரலாற்றுக் காலத்தில் சில குறிப்பிட்ட ஆண்டுகள் ஆட்கொண்ட நாடு. இதே போல யா மரம் அடர்ந்து கிடந்த நாடு யாவகம்>ஜாவகம்= Java. இந்தோனேசியாவின் முகன்மையான தீவு. இதைச் சாலித் தீவு என்றும் சொல்வது உண்டு. மேலே சொன்னது போல் யா மரம், சால மரம் என்றும் அழைக்கப் பட்டது. இரண்டு பெயர்கள் அந்தத் தீவிற்கு; இரண்டிற்குமே தமிழ் மூலம் தான். ஆனாலும் "இங்கெல்லாம் வடமொழியே பரவியது; தமிழா, அது எங்கே?" என்று கேட்பவர்களும் உண்டு.
கடு>கடினம்
கடிதல் = காலால் உதைத்தல்
கடு>கடவுதல், கடாவுதல், கடத்துதல் = அடித்தல், ஒரு விலங்கை அடிக்க முற்பட்டு ஓங்கிக் கொண்டே போக அது ஓடத் தொடங்குகிறது. எனவே செலுத்துகிற கருத்து அடிக்கிற கருத்தில் இருந்து பிறக்கிறது. இங்குதான் கடாவுதலில் உள்ள நெட்டொலியின் பொருட்பாடு புரிய வேண்டும். ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்துப் பிறக்கும் நேரத்தில் நெட்டொலி துணைக்கு வரும். அதை நீட்டிப் பாருங்கள்; அடிக்கப் போனது விலங்கைச் செலுத்துவதில் கொண்டுவந்து சேர்ப்பதைக் காட்சியில் பார்ப்பீர்கள்.
கதுவு>கதவு>கதா = பெருத்த தண்டு
கது+ஐ>கதை = பெருத்த தண்டு (வீமனின் ஆயுதம்)
கதா>கதாவு>காது = பெருத்த தண்டால் அடி, தாக்கு
கது>கந்து = மரத்தூண், தெய்வத்தூண் (மரத்தில் தெய்வப் படிமத்தைச் சிறிதாகக் கீறி குறிஞ்சி மாந்தன் வழிபட்டிருக்க வேண்டும். "கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்து" என்பது மணிமேகலை.)
கந்து>கந்தன் = முருகன் (கந்திற்கும், கடம்பிற்கும் உள்ள தொடர்பைப் போல இன்னொரு சொல்லான மரா = கடம்பு என்பதில் இருந்து பிறந்த சொல் மராகன்>மருகன்>முருகன்; முருகு= அழகு என்பது முதற்பொருள் அல்ல; வழிப் பொருள். கந்தைச் சுற்றிப் படர்ந்த கொடி வள்ளி. கொடியைப் பெண்ணாகவும், கந்தை ஆணாகவும் உருவகம் செய்திருக்கிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுவது, இந்த நாகரிகம் புரியாக் காலத்தில் எழுந்த இறையுணர்வால் தான்.)
கந்து = பற்றுக் கோடான தூண்
கந்து+அழி = கந்தழி = தனக்குப் பற்றுக் கோடானதையே அழிக்கும் நெருப்பு
[கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
என்று தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலில் சொற்றம் (சூத்திரம்) 1034-ல் வரும் கந்தழி நெருப்பையே குறிக்கிறது. கொடிநிலை மாறாது என்பது நிலைத்து நிற்கும் சூரியனையும் வள்ளி என்பது வளர்ந்து குறையும் நிலவையும் குறிக்கிறது. சூரியன், நெருப்பு, திங்கள் மூன்றும் கடவுள் வாழ்த்தைப் பாடும் போது வரவேண்டியவை என்று தொல்காப்பியர் சொல்கிறார். இவை முதலானவை என்பதால் தான் சோழர் குலம் சூரிய குலம் என்றும், பாண்டிய குலம் திங்கட்குலம் என்றும் சேரர்குலம் அழற் குலம் (அழல்= நெருப்பு; அழனி>அக்னி) என்றும் கருதப் பட்டது.]
கல்>கள்ளில் இருந்து திரட்சிப் பொருளில் பிறந்த மற்றொரு சொல் கம்பு
நாலாவது சொல் கோறல்:
அகத்தியத்தில் நண்பர் அரி சிலம்பில் உள்ள "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று" என்ற வரியை எடுத்துக் காட்டினார் குல்>கோல் (குல்லில் இருந்து பிறந்தது தான் குத்து) கோல் வளைந்தது. கோலைக் கொண்டவன் கோன். செங்கோல் நேரான, வளையாத கோல்.
கோல் என்பது ஆட்சியையே குறித்தது. கடுங்கோல் என்பது வளைந்த ஆட்சி. "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?" என்ற சொலவடையில் தண்டல்காரன் தடி வைத்திருத்தலை உணர்த்துவதைக் காணலாம். கோல் என்பது காட்டு விலங்காண்டி காலத்தில் உயிரைக் காக்கும் ஆயுதம் அல்லவா?
கோல்>கொல்
கோல்+து>கோறு = தண்டால் அடி
கொல்லுக்கும் kill க்கும் உள்ள இணையை நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஐந்தாவது சவட்டல்
சவளி என்ற தலைப்பில் உள்ள புலவர் இளங்குமரன் கட்டுரையை தமிழ் உலகத்தில் முன்பு இட்டிருந்தேன். மறுபடியும் அதைச் சொல்வதில் இந்தக் கட்டுரை நீண்டுவிடும். சவள்/சவளம் என்பதெல்லாம் தண்டாயுதங்களைக் குறிக்கும். தண்டாயுதத்தால் அடிப்பது சவட்டுதல்.
ஆறாவது படுத்தல்:
அடி, தாள், கால் போல படுவது என்பது படிவது, பதிவது, பாதம் என்றெல்லாம் பொருள் நீளும். படுத்துவது என்பது ஒருவனை கீழே வீழ்த்துவது. பட்டுவது படுவாகும். படு+ஐ = படை எனக் கிளரும். படை என்பது முதலில் தண்டாயுதம் தான். பிறகுதான் மற்றவை எல்லாம்.
மடிவித்தல்
சாய்வித்தல் மடிவித்தலாகும். இது எளிதாகப் புரியும் என்பதால் விடுக்கிறேன்.
மாய்த்தல்
மாய் = இருள்; மாயோன் = இருளன்; திருமால், இறப்பு என்பது அசைவைக் குறித்துப் பின் மறைவையும் குறிக்கிறது. மாய்த்தல் என்பது இருளுக்குள் போகச் செய்வது. இது கொஞ்சம் நாகரிகம் வந்த காலத்தில் தான் பொருள் நீட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய சொல்.
முருக்கல்
கடுவில் இருந்து காதுதல் பிறந்தது போல மராவில் இருந்து பிறந்த சொல் முருக்கல். இன்னொரு மரத்திற்கும் முள் முருக்கு, புனைமுருக்கு, புரச மரம், பலாச மரம் என்றெல்லாம் பொருள். புரசைவாக்கத்தின் பெயர்க் காரணத்தை முன்பு தமிழ் உலகத்திலோ, அகத்தியரிலோ சொல்லியிருந்தேன்.
வீட்டுதல்
வீழ்த்துதல் வீடுதல் என்றும் ஒலிக்கப் பெறும் பொருள் வெள்ளிடை மலை எனத் தெரிகிறது.
இன்னும் விரிவாகச் சொல்லலாம். இத்தோடு தவிர்க்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
ஒவ்வொரு மொழிக்கும் விதப்பான (special) சில சொல்லாட்சிகள் உண்டு. இந்தச் சொல்லாட்சிகள் அந்தந்த மொழி பேசும் மக்களின் தனித்த சிந்தனையாலும், குமுகச் சிந்தனையாலும் ஏற்படுகின்ற சில புதிய பொருட்பாடுகளை (meanings) முன்வைத்து புழக்கத்திற்கு வருகின்றன. இந்தச் சொல்லாட்சிகள் எழுந்தமுறை மிக எளிதாகவே இருக்கலாம். இருப்பினும் இரண்டு வெவ்வேறு சொற்களை ஓரிடத்தில் அடுத்தடுத்துப் பொருத்தும் போதோ, அல்லது ஒரு அடிப்படையில் தோன்றிய கருத்தை இன்னொரு நிகழ்விற்கு உருவகம் செய்யும் போதோ, புதிய பொருட்பாடு அந்த மொழிக்கென வந்து விடுகிறது.
இரண்டு சொற்களைப் பொருத்தி முற்றிலும் புதிதான ஒரு பொருட்பாடு கொள்வதற்கு தமிழில் ஒரு எடுத்துக்காட்டைக் கீழே கொடுக்கிறேன்.
"உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எத்தனையாவது பையன்?" இந்த வாக்கை எப்படி முயன்றாலும் ஆங்கிலத்தில் நேரடியாகச் சொல்ல முடியாது. கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் சொல்ல முடியும். இந்த "எத்தனையாவது" என்ற சொற்கூட்டில் "எத்தனை" என்பதையும் "ஆவது" என்பதையும் தனித்தனியே ஆங்கிலத்தில் பெயர்க்க முடியும். ஆனால் சேர்ந்து வரும் போது ஒரு புதிய பொருட்பாடு வருகிறது பாருங்கள். அதைத் ”தமிழுக்குரிய விதப்பு” என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? (இது போல ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பெயர்க்கும் போதும் சில இடையூறுகள் உண்டு.)
உருவகத்தால் வரும் புதிய பொருட்பாட்டிற்கும் இங்கே ஒரு எடுத்துக் காட்டைக் கொடுக்கிறேன்.
எதிர்பாராத தன்னேர்ச்சி (accident) ஒன்று நாம் போகும் சாலையில் நடக்கிறது; ஒருவர் சாகக் கிடக்கிறார். அவருக்கு மூச்சு இருக்கிறதா என்று இன்னொருவர் பார்க்கிறார். கூட்டத்தில் நிற்கும் மற்றொருவர் சென்னைத் தாழ்நிலை மக்களின் பேச்சுவழக்கில், "இன்னாபா, மெய்யாலுமே பூட்டானா?" என்று கேட்கிறார். . உயிர் போவதை "போய்விட்டார்" என்ற சொல்லால் தமிழில் இப்படி உணர்த்துவதை எவ்வளவு தலை கீழாக நின்றாலும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியுமோ? இத்தனைக்கும் ஆங்கிலத்தில் இதற்கு "gone" என்ற நேரடிச் சொல் இருக்கிறது. தமிழ் மொழிக்கென்ற உருவகம் இங்கே உள்ளடங்கி நிற்பதை நாம் உணருகிறோம் அல்லவா? (இதே போல ஆங்கிலத்தில் சொல்லும் ஒரு மொழியை அப்படியே தமிழில் பெயர்க்க இயலாத நிலைகள் உண்டு.)
குமுகச் சிந்தனையில் கிளரும் பொருட்பாட்டிற்கு தொல்காப்பியத்தில் வரும் ஒரு கூற்றையே எடுத்துக் காட்டாகக் கூறலாம்:
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே
இப்படி, சொல்லுபவன் நிலையைப் பொருத்துச் சொல் தொடுக்கும் பழக்கம் மேலை மொழிகளில் பெரும்பாலும் கிடையாது.
சரி, பேராசிரியர் முத்துவின் கேள்விக்கு வருவோம். ”murder என்பதைத் தமிழில் சொல்ல முடியுமா?” என்று முதலில் கேட்டிருந்தார். அதற்கு விடையாக நான் சில சொற்களைக் குறிப்பிட்டு இருந்தேன். உடனே அவர்
---------------------------------------------------------
தமிழில் "murder" என்ற சொல்லுக்கு இணையான சொல் என்று ஒரு சொல்லைக் கூற முடியுமா? இருக்க வேண்டிய அவசியமோ, இல்லாதது ஒரு குறையோ அல்ல. தமிழ் மொழி தமிழர் பண்பாட்டை ஒட்டியே இருக்கும். கொல்வது என்ற செயலே (வஞ்சத்தினாலோ, தற்காப்புக்காகவோ, வேட்டையிலோ, அறியாமலோ, விபத்தினாலோ) குற்றமாகக் கருதப்பட்டால், ஒரு சொல்லே போதும்; ஒரு மனிதப்பிறவி மற்றொரு மனிதப்பிறவியை, வஞ்சனையால் கொல்வது மட்டுமே குற்றமெனக் கருதப்பட்டால் (இன்றைய தமிழ்ச்சமூகம் மற்றும் மேல்நாட்டுச் சமூகப் பண்பாட்டுப் படி) அப்போது, அந்தச்செயலைக் குறிக்க ஒரு தனிச்சொல் வேண்டும். உதாரணமாக, "Indira Gandhi was assasinated" என்பதைத் தமிழில் "இந்திரா காந்தி கொல்லப்பட்டார்" என்றும், "My cat killed a mouse" என்பதை, "என் பூனை ஒரு எலியைக் கொன்றது" என்றும் ஒரே விதமாகக் கூறுகிறோமே அன்றி, வித்தியாசமாகக் கூறுவதில்லையே! தமிழ் இலக்கியத்தில் இவ்விரு செயல்களும்- உதாரணமாகக் கம்ப இராமாயணத்தில் இராமன் வாலியைக் கொன்றதையும், மனுநீதிச்சோழனின் மைந்தன் தேர் ஓட்டி பசுங்கன்றை மாய்த்ததையும்- வேறு வேறு சொற்களால் வருணிக்கப் பட்டிருக்கின்றனவா?
-----------------------------------------------------------------------------------------
என்று மீண்டும் விரிவாகக் கேட்டிருந்தார். நண்பர் சிரீவாசும் அந்தச் சொற்களுக்கு விளக்கம் கேட்டிருந்தார்.
Cambridge International Dictionary of English என்ற ஆங்கில அகரமுதலியில் murder என்பதற்கு the crime of intentionally killing a person என்றே போட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சொல்லின் வரலாற்றை இலத்தீன், இந்தோயிரோப்பியன் வரை போய்ப் பார்த்தால் அங்கே வெறும் இறப்பு என்ற பொருட்பாடு தான் இருக்கிறது. (The ultimate source of murder is the Indo-European base *mor-, *mr- 'die' (source also of English mortal). "வேண்டும் என்றே கொலை செய்தல்" என்ற இந்தக் காலத்துப் பொருட்பாடு அந்தக் காலத்தில் இல்லை. எங்கேயோ இடைப்பட்ட காலத்தில் (பெரும்பாலும் 19-ம் நூற்றாண்டில்) ஏற்பட்டிருக்கலாம். அந்த *mor- என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மற்ற சொற்களான mortality, mortuary, போன்றவற்றைப் பார்த்தாலும் வெறும் இறப்பு என்ற பொருட்பாடே உள்ளே தொனித்து நிற்கிறது. "*mor- என்ற வேரின் பொருள் என்ன? அது எப்படிப் பிறந்தது?" என்ற விளக்கம் அங்கு இல்லை.
தமிழில் இறத்தல், சாவு, மடிதல் போன்றவை வளைவு என்ற அடிக் கருத்தில் எழுந்தவை. (இன்னும் சில சொற்கள் துண்டாகிப் போன கருத்தில் எழுந்தவை.) ஒருவன் உயிராற்றலை இழந்து சாய்ந்து போனால் அதைச் சாய்வு>சாவு என்கிறோம். சாவு>சவத்தல்>சவம்; சாதல்>சவத்தல்>செத்தல் என்றெல்லாம் அது திரியும். மடிதல் என்பதும் நிற்க முடியாமல் மடங்கிப் போதல் என்றே பொருட்பாடு கொள்ளும். மடிதல்>மரித்தல் (டகரமும் ரகரமும் தமிழில் போலியாகி நிற்கும்)>மரணம், இறத்தல் என்பதும் சரிதல் என்ற பொருளே கொள்ளும். இறக்கம் = சரிவு. சாய்வும் சரிவும் தமிழில் ஒன்றுதானே!
மடிதல்/மரித்தல் என்ற சொல்தான் இந்தையிரோப்பியச் சொல்லடியான mort என்பதோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியானால், மரிப்பு = mortality' மரித்துறை = mortuary (சவ அறை) என்ற சொற்கள் சரியாக இருக்கும்.
மேலே கூறியது போல், இந்தச் சொற்களில் எல்லாம் இறப்பு என்ற கருத்து இருக்கிறதே ஒழிய கொலை என்ற கருத்து உடன் வரவில்லை. பிறகல்லவா "வேண்டும் என்ற கொலை"?
கருத்து வளர்ச்சியில் சொற்கள் விளைவதை ஒரு படி முறை போலப் பார்க்க வேண்டும். முதலில் இறப்பு; "பிறகு எதனால் இறப்பு?" " கொலையால் இறப்பு". அடுத்த கேள்வி: "வேண்டும் என்ற கொலையா?" இது மூன்றாவது படி.
இந்த மூன்றாவது படியைத் தமிழில் ஒரே சொல்லில் சொல்லவியலாது. ஒரு சொற்தொகுதியால் மட்டுமே சொல்ல முடியும். அந்தக் கொலையில் இட்டம் (இழ்+தம் = இட்டம். இழ்+ஐ = இழை>இழைவு; இழைத்தல் என்பது ஈடுபாட்டோடு செய்தல். இட்டத்தை இஷ்டம் என்று வடமொழியில் சிலர் மாற்றுவது உண்டு. ஈடுபாடு = intention) இருக்க வேண்டுமானால் மரியிழைத்தல் என்று சொல்லலாம். இருப்பினும் "வேண்டும் என்றே செய்த கொலை" என்று நீட்டிச் சொல்வதே தமிழுக்குப் பழக்கப் பட்டது. கீழே இருப்பது ”முயன்றால் புழக்கத்திற்குக் கொண்டுவரலாம்” என்று பரிந்து
உரைப்பது.
"இந்த மரியிழைப்பைச் செய்தவர் யார்? (who comitted this murder?) மரியிழையர் = murderer; இல்லையென்றால் வேட்கொலையன் (வேள் = வேண்டுதலின் அடிச்சொல்) என்று கூடச் சொல்லலாம். வேட்கொலை = murder.
இனி நண்பர் சிரீவாசின் கேள்விக்கான விடை:
காட்டு விலங்காண்டிக் காலத்தில் இருந்து இயல்பாக இந்த நாவலந்தீவில் கிளைத்த மொழி தமிழ். நாகரிகம் அடையாத காலத்தில் இருந்தே இங்கு ஒலியும் சொல்லும் கருத்துக்களை ஒட்டி ஒன்றன் பின் ஒன்றாகக் கிளர்ந்தன; ஆனால் மெதுவாக நூற்றாண்டுக் கணக்கில் வளர்ந்த மொழி. இதில் எந்தக் கருத்தில் இருந்து எந்தக் கருத்து கிளைத்தது என்பதை தட்டுத் தடவி மொழியியலார்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கொல்லுதல் என்ற வினை அறுதப் பழங்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். மாந்த நூலார் சொல்லும் படி, தம் உயிர் வாழ்வே முதன்மை என்ற நிலையில், தனக்குப் போட்டியான யாரும் ஒழிக்கப் படவேண்டியவர்கள் என்ற போக்கில், மாந்தர்கள் ஒருவரை ஒருவர் கல்லாலும் மரத்தாலும் உணவைத் தேடும் வேட்டையில், அடித்துக் கொன்று திரிந்திருக்க வேண்டும். பின் நெடுநாட்கள் கழித்து, உலோகம் கண்ட பிறகு, உலோகமே மரக்கருவிகளையும், கற்கருவிகளையும் போல அமைந்தாடி (imitate)க் காட்டத் தொடங்கினாலும், சொல்வரலாறு அடித்தளத்தைக் காட்டிக் கொடுக்கிறது. பெரும்பாலான அடிதடிச் சொற்களும், கொல்லுதற் சொற்களும் உலோகத்தைப் பயன்படுத்தும் முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதையே தமிழ்ச் சொல் வரலாறு காட்டுகிறது.
காட்டாக,
மரத்தின் அடியில் இருந்து பிறந்த வினை அடித்தல்.
மரத் தாளில் இருந்து பிறந்த வினை *தாள்க்குதல்>தாக்குதல்.
மரக் காலில் இருந்து பிறந்த வினை *கால்த்துதல்>*காத்துதல்>காதுதல். (போட்டு காத்திட்டான்யா>போட்டுக் காச்சிட்டான்யா!)
மரத்தின் அடி பெருத்துத் தட்டித்துக் கிடந்ததால் அது தட்டு>தட்டி>தடி; இது மூங்கிலுக்கே சிறப்பாக வந்த பெயர். மூங்கில் தட்டை, மூங்கில் தடி என்ற சொற்கூட்டுகளைப் பார்த்தால் இது புரியும். தமிழன் நாவலந்தீவிலே தன் நாகரிகம் அறியா நிலையில் திரிந்தான், வேறு எங்கிருந்தும் வரவில்லை என்பதற்கு "மூங்கில்அடி"ச் சொற்களே கூட ஆதாரம் ஆகும்; இவையே இந்த வன்சொற்களின் மூலம் வெளிப்படுகிறது. மூங்கில் என்னும் நிலத்திணை நடுவண்நிலக் கரை (mediteranian and middle east countries) நாடுகளில் இருந்ததாகப் புதலியல் (botany) சொல்லவில்லை. மூங்கிலின்
பயன்பாடு பழந்தமிழ் மாந்தனின் வாழ்வில் மிகவும் அதிகம். மூங்கில் தடியால் தட்டலாம். தடி தறியாகும். பின் தறித்தலையும் தரும். தறித்தல் = அடித்தல். இன்னும் கொஞ்சம் நீண்டு, தட்டு தண்டாகும்; தண்டு என்னும் விதப்பான பெயர் பின் பொதுமை நிலைக்கு வந்து மற்ற மரங்களின் தண்டிற்கும் பெயர் கொடுக்கும். மாந்தரின் கணக் கூட்டம் வளர, வளரத் தண்டில் இருந்து தண்டனையும் எழும்.
அடிதடியில் தொடங்குகிற கருத்து, சோர்வுக்கும், தளர்ச்சிக்கும், சாய்வுக்கும், சரிவுக்கும் நீண்டுப் பின் முடிவில் இறப்பிற்கும் ஆகப் பொருட்பாடு நீளுவது தமிழின் இயற்கை. இந்த வன்முறையில் குத்துவது, வெட்டுவது, அடிப்பது எனப் பல்வேறு வகைகளில் தாக்குதல்கள் இருக்கும். கற்கருவிகளும், மரக் கருவிகளும் ஒரே நேரத்தில் மாந்தனுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும். ஆனாலும், கல்லை வைத்து மாந்த நாகரிக வளர்ச்சிக்குக் காலம் சொன்ன மாந்த நூல் கட்டையையும் தடியையும் அவ்வளவு பெரிது படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.
நான் முன்னே சரமிட்ட சொற்களுக்குக் (series of words) கூடிய மட்டும் விளக்கம் தருகிறேன்.
முதற்சொல் எருக்குதல்:
கல்லாலும் கூர்மையான மரத்தாலும் குத்துவது மட்டும் அன்றி ஈர்தலும் செய்ததால் தான் இரண்டு என்பதற்கே இந்த இல்>ஈல்>ஈர் என்பது அடிப்படையாகியது. இல்லுதல் = குத்துதல், புள்ளியிடுதல்.
இல்>ஈல்>ஈர்>ஈர்து>இருடு, இரடு, இருது, இரண்டு
இல்>ஈல்>ஈள்>ஈள்+து>ஈட்டு+ஐ>ஈட்டி (இட்டி என்றும் இதைச் சொல்லுவர்.)
இல்>ஈல்>ஈர்தல்>ஈர்க்குதல்>எருக்குதல்= இரண்டாக வெட்டுதல், தாக்குதல்; குத்திக் கிழிப்பதாலும், தடியால் அடித்தும் இரண்டாக்கலாம். முடிவில் எருக்குதல் என்பதற்குக் கொல்லுதல் என்றும் பொருள் வந்தது.
அடுத்த சொல் எற்றுதல்.
எல் என்பது பெருமை, திரட்சி என்ற கூட்டுப் பொருளின் வேர். எல்லாம், எல்லோரும் என்று சொல்கிறோம் அல்லவா? இங்கே எல்லுதல் = திரளுதல், சேர்த்தல் என்ற அடிப்படைப் பொருள் புலப்படுகிறது.
எல்+து = எற்று = திரண்ட மரம்
எற்றுநூல் = மரக் கோட்டம் பார்க்கும் நூல், மரம் அறுக்க அடையாளம் காட்டும் நூல்.
எற்று>எறு>எறுழ் = தண்டாயுதம், தடி, செந்நிறப் பூவையுடைய குறிஞ்சி நிலத்து மரவகை.
எற்றுதல் = கொல்லுதல்
[இங்கே ஒரு சின்ன இடைவிலக்கு (diversion).
தமிழில் சில விதப்பான மரங்களே கூட அடிதடி வினைகள், கருவிகளைத் தோற்றுவித்தனவோ என்று தோற்றுகிறது. கடம்புக்கு அடிச்சொல் கடு. கட்டை என்ற சொல் கடம்பின் தொடர்பால் வந்ததோ என்று தோன்றுகிறது. யா மரத்தை ஆச்சா மரம் என்றும் சால மரம் என்றும் சொல்வதுண்டு; இதன் தொடர்பால் சால்>சால்+து = சாற்று என்று வந்ததோ?; "அவனைப் போட்டுச் சாத்திட்டாங்கப்பா" என்ற சொல்லாட்சியை எண்ணிப் பாருங்கள்.
மூங்கிலுக்கே தட்டை என்ற சிறப்பான பெயர் உண்டு. மேலே சொன்னேன். "தடிச்சுப் போச்சு" என்ற வழக்கையும் நோக்குங்கள். மூங்கிலின் குருத்தான பிரம்பை வைத்து அடித்தால் தடிக்காமல் வேறு என்ன செய்யும்? கிள்>கிளை>கிழி எல்லாமே மூங்கிலுக்குரிய மற்ற சொற்கள். இதே போல கழி என்பதும் மூங்கிலுக்கான சிறப்புச் சொல். "போட்டுக் கிழிகிழின்னு கீழ்ச்சிட்டான்ய்யா"; (துணிக்குக் கிழி என்று பெயர் வந்தது நாகரிகம் வந்ததற்குப் பின் இருக்க வேண்டும்.)
புளியம் விளாறை வைத்து விளாத்துதல், விளாசுதல் என்றாகும்.
குருந்த மரம் குந்தம் என்றும் சொல்லப் படும். திரண்டு இருக்கும் ஆயுதம் குந்தம் என்று சொல்லப் படும்.
அத்தி மரத்தின் இன்னொரு பெயர் அதம். அதம் பண்ணுதல் என்பது அடிதடி செய்தல்.
அதே போல இங்கே எற்றிற்கும் எறுழுக்கும் உள்ள தொடர்பை மேலே பாருங்கள்.
நான் பலகாலம் சொல்வதுண்டு. விதப்பான சொற்களே (specialized words) பொதுவான கருத்துக்களுக்கு (generic ideas) வித்திட்டன.]
எறியல் = கோடரி (கோடு= மரக்கிளை; மரக்கிளையை அரிவது கோடரி)
எற்றுதல் = திரண்ட மரத்தால் அடித்தல், உதைத்தல், தாக்குதல் (விட்டேற்று என்பது கோலைக் குறிக்கும்)
எற்றியது= அடித்தது; இங்கே மரத்தை உயரத் தூக்கிக் கீழே இறக்குகிறோம் அல்லவா? இந்தக் கருத்தில் இருந்து மேலும் வளர்ந்த கருத்துத்தான் எறிதல்; பின் அது கல்லெறிவிற்கும் பயன்பட்டிருக்க வேண்டும்.
ஒழித்தல் என்ற சொல் அடுத்தது.
உல் = தேங்காய் உரிக்கும் கருவி, கழு, மரம்
உல்லடைப்பு = மரத்தால் ஆற்றிற்கு இடும் அணை.
உல்>உல்லு>உல்லேற்றுதல் = கழுவேற்றுதல் = பிரஞ்சுப் புரட்சியில் இருந்த guilletine போல, ஆனால் மாறுபட்ட ஆயுதம். இதில் கழு நிலைத்து நிற்கும். கொல்லப் பட வேண்டிய ஆள் (man to be murdered; அய்யா முத்து, தமிழில் இபடித்தான் கொல்லப் பட வேண்டிய ஆள் என்று சுற்றி வளைத்தே சொல்ல வேண்டும்.) மேலே இருந்து தூக்கி எறியப் படுவார். கழுவேற்றப் பட்ட சடலம் பின் கோட்டையில் சார்த்தப் பட்டுத் தொங்கிக் கிடக்கும். இதற்கு ஆங்கிலத்தில் spiking என்று சொல்லுவார்கள். கீழை நாடுகளில் எல்லாம் கழுவேற்றுதல் தான். (சப்பான் நாட்டிலும் இதுதான்.
Shogun புதினத்தைப் படித்திருக்கிறீர்களோ?)
உல்லு>உல்லக்கு>உலக்கு=குத்துதல்
உலக்கு>உலக்கை = குத்துகிற மரம், கருவி, தடி, தண்டு
உலக்கு>உழக்குதல் = மிதித்தல், உழுதல், கொன்று திரிதல்
உல்லு>உல்லித்தல்>உலித்தல்(> உலைத்தல்>)*உழித்தல்>ஒழித்தல் = கொல்லுதல், அழித்தல்
மூன்றாவது சொல் காதுதல்:
கல்>கால்>கால்தல் = ஊன்றுதல், இயங்குதல்
கல்>கர்>கரு>கருவி = கூர்மையான ஆயுதம் (கற்கருவி என்பது இப்படித்தான் வந்தது. முதலில் கொல்லப் பயன்பட்ட கருவி பின் கையில் பிடித்தவைக்கெல்லாம் உள்ள சொல்லாகப் பொருள் நீட்டம் கொண்டது.)
கள் = கூட்டப் பொருள்.
கள்>களி>கழி= மூங்கில்; மூங்கில் கூட்டமாகத் தான் வளரும். பின் தனித்து ஒடித்த மூங்கிலுக்கும் கழி என்றே பெயரிடப்பட்டது. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிக் கூடச் சட்டாம்பிள்ளைகள் பிரம்புக் கழி இல்லாமல் இருப்பது இல்லை.
கள்>களை>கழை = மூங்கில்
வேளாண்மையில் பயிரோடு சேர்ந்ததும் கள். அந்தக் கள்ளை நீக்கினால் தான் பயிர் வளரும்.
களை = நீக்கு, அழி. கூட்டத்தில் இருந்து நீக்கப் படுகிற மாந்தர்களும் களையெடுக்கப் பட்டார்கள்.
கள்+து> கட்டு = கூட்டம், சேர்ப்பு, இணைத்தது, பெருத்தது
கட்டு+ஐ>கட்டை = பெருத்த தண்டு
கட்டு>கண்டு=திரண்டது, வெட்டப் பட்டது (கண்டம் துண்டமாக என்பது இரட்டைக் கிளவி. உப்புக் கண்டம் என்பது உப்புப் போட்டு உலரவைக்கப் பட்ட கறித் துண்டு; கற்கண்டு = திரண்டு, கண்டு கண்டாய் வெட்டப் பட்ட வெள்ளைச் சருக்கரை.)
கட்டு>கடு>கடு+அப்பு>கடப்பு = பெருத்த மரம். (மதுரையை அடுத்தவனம் கடம்ப வனம். ஒரு வேளை மிகப் பழங் காலத்தில் வெண்கடம்பு தமிழகத்தில் மிகவும் கூடுதலாய் இருந்ததோ, என்னவோ? இல்லாவிட்டால் இந்த அளவு சிவநெறியிலும், சங்க இலக்கியத்திலும் கடம்பு இவ்வளவு பேசப் படவேண்டிய காரணம் என்ன?)
கடப்பு>கடம்பு>கதம்பு = கடம்ப மரம்
கடு>கடுவு>கதுவு = பெருத்த தடியால் அடி, தாக்கு
கடு என்ற கடம்ப மரம் விதப்பில் இருந்து பொதுமையாகி காட்டையே குறித்தது. பொதுமைப் பொருளில் நிலைத்தது. இதே போல கடு என்பது காட்டிற்கு மட்டும் அல்லாது கூடிக் கிடந்த மலைத் தொகுதியையும் குறித்தது.
கடு>கடம் = காடு,மலை
கடம் ஆர்ந்து (நிறைந்து) கிடந்தது கடாரம்; இன்றைய மலேசிய நாட்டின் கெடா மாநிலம். தமிழன் நாகரிகம் அடைந்து வரலாற்றுக் காலத்தில் சில குறிப்பிட்ட ஆண்டுகள் ஆட்கொண்ட நாடு. இதே போல யா மரம் அடர்ந்து கிடந்த நாடு யாவகம்>ஜாவகம்= Java. இந்தோனேசியாவின் முகன்மையான தீவு. இதைச் சாலித் தீவு என்றும் சொல்வது உண்டு. மேலே சொன்னது போல் யா மரம், சால மரம் என்றும் அழைக்கப் பட்டது. இரண்டு பெயர்கள் அந்தத் தீவிற்கு; இரண்டிற்குமே தமிழ் மூலம் தான். ஆனாலும் "இங்கெல்லாம் வடமொழியே பரவியது; தமிழா, அது எங்கே?" என்று கேட்பவர்களும் உண்டு.
கடு>கடினம்
கடிதல் = காலால் உதைத்தல்
கடு>கடவுதல், கடாவுதல், கடத்துதல் = அடித்தல், ஒரு விலங்கை அடிக்க முற்பட்டு ஓங்கிக் கொண்டே போக அது ஓடத் தொடங்குகிறது. எனவே செலுத்துகிற கருத்து அடிக்கிற கருத்தில் இருந்து பிறக்கிறது. இங்குதான் கடாவுதலில் உள்ள நெட்டொலியின் பொருட்பாடு புரிய வேண்டும். ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்துப் பிறக்கும் நேரத்தில் நெட்டொலி துணைக்கு வரும். அதை நீட்டிப் பாருங்கள்; அடிக்கப் போனது விலங்கைச் செலுத்துவதில் கொண்டுவந்து சேர்ப்பதைக் காட்சியில் பார்ப்பீர்கள்.
கதுவு>கதவு>கதா = பெருத்த தண்டு
கது+ஐ>கதை = பெருத்த தண்டு (வீமனின் ஆயுதம்)
கதா>கதாவு>காது = பெருத்த தண்டால் அடி, தாக்கு
கது>கந்து = மரத்தூண், தெய்வத்தூண் (மரத்தில் தெய்வப் படிமத்தைச் சிறிதாகக் கீறி குறிஞ்சி மாந்தன் வழிபட்டிருக்க வேண்டும். "கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்து" என்பது மணிமேகலை.)
கந்து>கந்தன் = முருகன் (கந்திற்கும், கடம்பிற்கும் உள்ள தொடர்பைப் போல இன்னொரு சொல்லான மரா = கடம்பு என்பதில் இருந்து பிறந்த சொல் மராகன்>மருகன்>முருகன்; முருகு= அழகு என்பது முதற்பொருள் அல்ல; வழிப் பொருள். கந்தைச் சுற்றிப் படர்ந்த கொடி வள்ளி. கொடியைப் பெண்ணாகவும், கந்தை ஆணாகவும் உருவகம் செய்திருக்கிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுவது, இந்த நாகரிகம் புரியாக் காலத்தில் எழுந்த இறையுணர்வால் தான்.)
கந்து = பற்றுக் கோடான தூண்
கந்து+அழி = கந்தழி = தனக்குப் பற்றுக் கோடானதையே அழிக்கும் நெருப்பு
[கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன முன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
என்று தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலில் சொற்றம் (சூத்திரம்) 1034-ல் வரும் கந்தழி நெருப்பையே குறிக்கிறது. கொடிநிலை மாறாது என்பது நிலைத்து நிற்கும் சூரியனையும் வள்ளி என்பது வளர்ந்து குறையும் நிலவையும் குறிக்கிறது. சூரியன், நெருப்பு, திங்கள் மூன்றும் கடவுள் வாழ்த்தைப் பாடும் போது வரவேண்டியவை என்று தொல்காப்பியர் சொல்கிறார். இவை முதலானவை என்பதால் தான் சோழர் குலம் சூரிய குலம் என்றும், பாண்டிய குலம் திங்கட்குலம் என்றும் சேரர்குலம் அழற் குலம் (அழல்= நெருப்பு; அழனி>அக்னி) என்றும் கருதப் பட்டது.]
கல்>கள்ளில் இருந்து திரட்சிப் பொருளில் பிறந்த மற்றொரு சொல் கம்பு
நாலாவது சொல் கோறல்:
அகத்தியத்தில் நண்பர் அரி சிலம்பில் உள்ள "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று" என்ற வரியை எடுத்துக் காட்டினார் குல்>கோல் (குல்லில் இருந்து பிறந்தது தான் குத்து) கோல் வளைந்தது. கோலைக் கொண்டவன் கோன். செங்கோல் நேரான, வளையாத கோல்.
கோல் என்பது ஆட்சியையே குறித்தது. கடுங்கோல் என்பது வளைந்த ஆட்சி. "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?" என்ற சொலவடையில் தண்டல்காரன் தடி வைத்திருத்தலை உணர்த்துவதைக் காணலாம். கோல் என்பது காட்டு விலங்காண்டி காலத்தில் உயிரைக் காக்கும் ஆயுதம் அல்லவா?
கோல்>கொல்
கோல்+து>கோறு = தண்டால் அடி
கொல்லுக்கும் kill க்கும் உள்ள இணையை நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஐந்தாவது சவட்டல்
சவளி என்ற தலைப்பில் உள்ள புலவர் இளங்குமரன் கட்டுரையை தமிழ் உலகத்தில் முன்பு இட்டிருந்தேன். மறுபடியும் அதைச் சொல்வதில் இந்தக் கட்டுரை நீண்டுவிடும். சவள்/சவளம் என்பதெல்லாம் தண்டாயுதங்களைக் குறிக்கும். தண்டாயுதத்தால் அடிப்பது சவட்டுதல்.
ஆறாவது படுத்தல்:
அடி, தாள், கால் போல படுவது என்பது படிவது, பதிவது, பாதம் என்றெல்லாம் பொருள் நீளும். படுத்துவது என்பது ஒருவனை கீழே வீழ்த்துவது. பட்டுவது படுவாகும். படு+ஐ = படை எனக் கிளரும். படை என்பது முதலில் தண்டாயுதம் தான். பிறகுதான் மற்றவை எல்லாம்.
மடிவித்தல்
சாய்வித்தல் மடிவித்தலாகும். இது எளிதாகப் புரியும் என்பதால் விடுக்கிறேன்.
மாய்த்தல்
மாய் = இருள்; மாயோன் = இருளன்; திருமால், இறப்பு என்பது அசைவைக் குறித்துப் பின் மறைவையும் குறிக்கிறது. மாய்த்தல் என்பது இருளுக்குள் போகச் செய்வது. இது கொஞ்சம் நாகரிகம் வந்த காலத்தில் தான் பொருள் நீட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய சொல்.
முருக்கல்
கடுவில் இருந்து காதுதல் பிறந்தது போல மராவில் இருந்து பிறந்த சொல் முருக்கல். இன்னொரு மரத்திற்கும் முள் முருக்கு, புனைமுருக்கு, புரச மரம், பலாச மரம் என்றெல்லாம் பொருள். புரசைவாக்கத்தின் பெயர்க் காரணத்தை முன்பு தமிழ் உலகத்திலோ, அகத்தியரிலோ சொல்லியிருந்தேன்.
வீட்டுதல்
வீழ்த்துதல் வீடுதல் என்றும் ஒலிக்கப் பெறும் பொருள் வெள்ளிடை மலை எனத் தெரிகிறது.
இன்னும் விரிவாகச் சொல்லலாம். இத்தோடு தவிர்க்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
Tuesday, December 23, 2008
குடும்பம் - 2
இனிக் குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மைக்கு வருவோம்.
நண்பர் நாக. கணேசன், ”குடிசெயல் வகை” என்னும் திருக்குறள் 103 ஆம் அதிகாரத்தில் இருந்தே
இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
என்ற 1029 ஆம் குறளை எடுத்துக் காட்டி திருக்குறளுக்கும் முற்பட்டுக் குடும்பம் என்ற சொல் இருந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார். இக் குறளை திரு.ரெ.கா. கவனிக்க மறந்தார் போலும்! குடிசெயல்வகை எனும் அதிகாரமே, குடும்பம் நடத்தும் வகையைச் சொல்லும் அதிகாரம் தான். அந்த அதிகாரம் முழுதிலும் குடி என்ற சொல் அகன்ற குடும்பத்தையே குறிக்கிறது. இக்கால நெற்றுக் குடும்பத்தையே பார்த்துப் பழகிப்போன நமக்கு (நெற்றுக் குடும்பம் = nuclear family; நெற்று = nut; nuct>nuclear என்ற இந்தையிரோப்பிய வளர்ச்சியைப் புரிந்து கொண்டால் நெற்றை எப்படியெலாம் இக்காலத்தில் தமிழ்வழி நெற்றுப் பூதியலைச் (nuclear physics) சொல்லிக் கொடுக்கும் போது புழங்கிக்கொள்ளலாம் என்பது விளங்கும். நாம்தான் இருப்பது தொலைத்துச் ”சங்கரா, சம்போ” என்று தவிப்பவர் ஆயிற்றே? நுக்லியர் குடும்பம் என்று தமிங்கிலம் பழகிக் கொண்டிருந்தால் எப்படி?) அக்காலக் கூட்டுக் குடும்பம் புரிவதில்லை. குலம், குடும்பு, குடி, குடும்பம் போன்றவை குல் என்னும் வேரில் இருந்து கூட்டப் பொருளில் எழுந்த சொற்கள்.
குல்>குலம்;
குல் என்னும் வேர், லகர/ழகரப் போலியொடு, பலுக்க எளிமை கருதி உகரம் சேர்ந்து, குல்>குழு எனவாகிக் கூட்டத்தைக் குறிக்கும். குழுதல்> குழுவுதல்> குழுமுதல்> குழும்புதல் என்ற வினைச்சொல் வளர்ச்சியை இங்கு எண்ணிப் பார்க்கலாம். குழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட்டப் பொருளையே உணர்த்தும். [ராயர் காப்பிக் கிளப் என்னும் மடற்குழுவை, ஒருமுறை அரையர் குழும்பு என்று நான் சொல்லப் போக, அடித்துக் கிளம்பி, குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டவர் உண்டு. என்ன செய்வது, கிளப் என்று தமிங்கிலம் பழகலாமாம்; குழும்பு என்று சொல்லக் கூடாதாம் :-)).] குழாம் என்ற சொல் கூட குழுமுதலின் வளர்ச்சி தான். கோடைக்கானல் ஏரிக்கரையில் படகுக் குழாம் என்று போட்டிருப்பார்.
பொதுவாக, வினைச் சொல் வளர்ச்சியில் X-தல்> X-வுதல்> X-முதல்> X-ம்புதல் என்னும் வளர்ச்சி தமிழில் பல சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது; இந்த வினைச்சொல் உருவாகும் முறை தமிழுக்கே உரிய ஒருமுறை. இந்த வினைச்சொல் உருவாக்க முறையில், சில சொற்களில் குறை வளர்ச்சியும், சில சொற்களில் மிகுவளர்ச்சியும், ஏற்பட்டது. காட்டாகச் சில சொற்களைப் பார்ப்போம்.
அள்ளுதல்>அழுதல்>..........>அழும்புதல் = செறியக் கலத்தல்; அழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட உண்டு.
எழுதல்> எழுவுதல்> எழுமுதல்> எழும்புதல்; எழுமூர் என்ற பழைய பெயர் இன்றைக்கு எழும்பூர் என்றே சென்னையிற் சொல்லப் படுகிறது..
கெழுதல்> கெழுவுதல்> கெழுமுதல். இது நிறைதல், பொருந்துதல் பொருளை உணர்த்தும். அன்பு கெழுமிய என்று சொல்லுகிறோமே, அது அன்பு நிறைந்த என்ற பொருளை உணர்த்தும். கெழு என்ற சொல் இன்னும் ஆழ்ந்து, நிறத்தை உணர்த்தும். இந்தையிரோப்பிய colour என்ற சொல்லுக்கு அது அப்படியே நிகரானது. கெழிறு என்றாலும் கூடக் colour தான். “பால் வார்பு கெழீஇ” என்ற தொடர் மலைபடு கடாம் 114 ஆம் வரியில் வரும். அதற்கு வரும் உரையில் “கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யணர்த்திற்று” என்று சொல்வார். “தேரோடத் துகள் கெழுமி” என்பது பட்டினப்பாலை 47ஆம் வரியில் வரும்.
இதே போல,
சிலுதல்> ....................................> சிலும்புதல்
செழுதல்>....................................> செழும்புதல்
என்ற சொற்களும்,
துள்> ........தழு> தழுவு> தழும்பு என்பதும் மேற்சொன்ன வினையாக்க முறையை உணர்த்தும்,
இனித் துள்> துளுவுதல் (= துள்ளுதல், துளித்தல் என்ற சொற்கள் இதனோடு தொடர்புடையவை) > துளுமுதல்> துளும்புதல்> தளும்புதல்> தளம்புதல் என்ற வினைச்சொல் நீர் தளும்புதலைக் குறிக்கும். இன்னும் வடபால் ஒலிப்பில் தடும்புதல்>ததும்புதல் என்று கூடத் திரியும். ளகரம் டகரமாகிப் பின் வடக்கே தகரமாகும். மூக்கில் நீர்க் கோத்துக் கொண்டு இருக்கும் நிiீக் கோவையை தடுமன் என்று சிவகங்கைப் பக்கம் சொல்வார். நீர்த்திரட்சியைக் குறிக்கும் சொல்; இதிலும் கூட்டப் பொருள் தான்.
அடுத்து, துல்>துள்>தொள்>தொழுதல்>...................................>தொழும்பு = வணக்கம். (வணங்குதலும் தொழுதலும் ஒன்றுதான். நிலவுடைமை ஆதிக்கத்தில் நில அடிமைகள் தொழும்பர் என்றே சொல்லப் படுவார். தொழும்பரும் தொண்டரும் ஒரே பொருள் தான். அடிமையாய் இருப்பவர் என்று பொருள். ழகரம் மூக்கொலியோடு சேர்ந்து வரும் டகரமாய்த் திரிந்து, தொண்டு என்ற பெயர்ச்சொல் ஏற்படுகிறது..
இதே போன்ற வளர்ச்சி புள்>(பிள்)>பிழு>பிழம்பு பிழம்பு = திரட்சி; பிண்டு> பிண்டம் = திரட்சி, என்பதிலும் உண்டு. பிண்டத்தைப் பிழையாக வடமொழி என்பாருண்டு. [எத்தனை சொற்களைத் தான் வடசொல்லெனச் சொல்வாரோ? எத்தனை எடுத்துக் காட்டுகளைக் காட்டினாலும், மீண்டும் மீண்டும் தம் நம்பிக்கையின் பாற்பட்டே பேசிக் கொண்டு இருப்பவரை என்ன சொல்லி அறிவுறுத்த இயலும்?] .
இதேபோல கூர்ந்த குழாய் கொண்டு கொத்தும் கொதுகு (=கொசுகு; கொசு என்றே இக்காலஞ் சொல்கிறோம்.), மாட்டு ஈ போன்றவற்றிற்கு நுளம்பு என்ற பெயர் உண்டு. அது நுள்>நுளுவுதல்> நுளுமுதல்> நுளும்புதல்> நுளம்புதல் = கூர்த்துக் கொத்துதல் என்ற வினையில் இருந்து கிளம்பும் சொல். [கிளம்புதல் கூட கிளுதல் என்னும் கிளைவிடுத்தலைக் குறிக்கும் சொல்லே.]
...ம்புதல் என்ற சொற்களெல்லாம் உணர்த்தும் வினைமுறை நமக்குப் புரிபடவில்லையா?]
பாறையில் துளைப்பட்ட இடத்தைப் புழை என்கிறோமே அதைப் புழம்பு என்றும் சொல்வார். (குகையைக் குறிக்கும் சொல்.) ழகரம் திரிந்து டகரமாகிப் புடம்பு என்றாகி மீண்டும் குகையைக் குறிக்கும். [உயிரை உள்ளே கொண்டது உடல் எனும் உடம்பு. குடம்பை என்பது கூட்டைக் குறிக்கும் சொல். இங்கு ம்பு என்றுமுடியும் ஈற்றைப் பாருங்கள்.]
ழகரம் டகரமாவதற்கு மேலும் சான்று வேண்டுமெனில் புடலங்காய்க் கூட்டு பற்றாதா? புழல்>புடல் ஆகி புடலங்காய் ஆகும். உள்ளே புழை (=ஓட்டை) இருக்கும் காய் புடலங்காய்.
யாரோ கேட்கிறார், ஏன் இப்படித் தமிழ், தமிழ் என்று புலம்புகிறீர்? வேறு ஒன்றுமில்லை “புலு புலு” என்று ஒலித்தலால், பிதற்றுதலால், அழுதலால், புல்>புலுவு>புலுமு>புலம்பு என்றாயிற்று..
நான் சொல்லிப் போகலாம். ”இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன குழம்பு?” என்னும் போது, மசலைப் (மசிக்கப் பட்ட வாசனைப் பொருள் மசலைப் பொருள். அதை மசாலையெனச் சொல்லிக் கொண்டுள்ளோம்.) பொருள் ஒன்றுசேர்ந்து கலங்கிக்கிடக்கும் சாறைச் சொல்கிறோம், இல்லையா?
குழு என்ற சொல்லின் கூட்டப் பொருள், திரட்சிப் பொருளுக்கு இன்னொரு சான்று குழியம் என்ற சொல்லாகும். அது கூடித் திரண்ட உருண்டை அல்லது கோளத்தைக் குறிக்கும். கோளம் கூடக் குல் எனும் வேரில் பிறந்ததே. குழுவல் = கூடுகை, குழூஉக் குறி = கூட்டத்தினரிடை விதப்பாகக் கையாளும் குறி. குளிகை = உருண்டை எனப் பலசொற்களை கூட்டப்பொருளுக்கு வாகாகச் சொல்லமுடியும்.
குல்> குழு> குழுமு> குழும்பு> குடும்பு> குடும்பம் என்னும் வளர்ச்சியில் மகர ஈற்றுச் சொற்கள் மகரம்/பகரம் சேர்ந்த ஈறாக மாறுவது தமிழில் பெரிதும் உள்ள பழக்கம்[குல்>கொல்(yellow)> கொழு> கொழுது>கொழுதுமை>கோதுமை என்ற சொல்கூடக் கோதம்பை என்று தென்பாண்டி நாட்டில் முதுபெண்டிர் வாயில் இன்றும் பலுக்கப் படும். இதே போலத் தேங்காய்க் குடுமியைத் தேங்காய்க் குடும்பி என்று பலுக்குவார்.] தவிர மகர/பகர இணையீறு தமிழுக்கே விதப்பாக உள்ள ஓர் ஈறு. வடமொழியில் அது மிகமிக அரிதாகவே காணப் படும். மற்ற இந்தை யிரொப்பிய மொழிகளில் காணப் படாதது. {ஏதொன்றையும் வடசொல் என்பார் மற்ற இணையான இந்தையிரோப்பிய மொழிச் சொற்களை, வழக்குகளை உடன்காட்ட முயலாதுள்ளார். நாமோ மற்ற தமிழிய மொழிச் சொற்களைக் காட்டிக் கொண்டு உள்ளோம். வடபுலச் சொற்களையும் முடிந்தவரை இணைகாட்டுகிறோம். வெறும் நம்பிக்கையே போதுமென்ற அளவில் ”வசுதெய்வ குடும்பகம்” என்று சங்கதச் சொற்றொடரை எடுத்துக்காட்டும் போக்கு இனியாவது மறைய வேண்டும். Let us do the linguistic analysis properly instead of just quoting this or that saying to support our assertions.}
இனி குளம்>குளம்பு> குடும்பு> கொடும்பு> கொடும்பை = குளம் என்றபொருளில் வரும் கொடும்பை ஆளூர் >கொடும்பாளூர் என்ற ஊர்ப்பெயரையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.
குடும்பின் திரிவான கடும்பு, சுற்றம் என்ற பொருளைச் சுட்டும் வகையை “கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது” என்ற புறம் 68 ஆம் பாட்டின் (சோழன் நலங் கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது) 2 ஆம் வரியில் காணலாம். சங்க காலத்திலேயே குடும்பு இருந்திருக்க வேண்டும், இல்லெனில் கடும்பு என்ற சொல் ஆள முடியாது. சுற்றம் என்ற பொருளின் நீட்சி குடும்பம் தானே?
அவர்கள், இவர்கள் என்று சொல்லுகிறோமே, அந்தக் கள் எனும் விகுதி செறிவு, திரட்சி, கூட்டம் ஆகியவற்றைத் தான் குறிக்கிறது “மீனினங்கள் ஓர் கடும்பாய்” என்று பாகவத புராணத்தில் 9 ஆம் அதிகாரத்தில் .இக்குவாகு 6 -இல் மீன்கள் திரட்சியாய்ப் போவதைக் குறிக்கும்.
புறம் 183 ல் ஆரியப் படை கடந்தநெடுஞ்செழியன் “ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்” எனும் போது ”ஒரு குடும்பத்தில் பிறந்த” என்ற பொருளைத்தான் சொல்கிறான். கொடிவழி என்ற சொல்லைப் பரம்பரை என்ற பொருளில் பிங்கலம் காட்டும். குடிமை என்ற சொல்லால், வள்ளுவரும் ”ஒரு குலத்து ஒழுக்கம்” என்ற பொருளை உணர்த்துகிறார். குடும்பத்தை உணர்த்தும் குடி என்ற சொல் இன்று பொருள் விரிந்து குடியரசு வரை வந்து விட்டது. ஆனாலும் தொடக்கப்பொருள் குடும்பமே. குடும்பு என்ற சொல் பூங்கொத்து, காய்க்குலை ஆகியவற்றையும் குறிக்கும். family பொருளில் பேரரசுச்சோழர்காலக் கல்வெட்டில் “இவ்வாட்டை குடும்பு வாரிய பெரு மக்களும்” [தெ. கல்.தொ.19, கல் 179] என்ற சொற்றொடர் குறிக்கப்பட்டது.
இது போகக் குடும்பு என்றசொல் ஒரு குடும்பம் பயிர் செய்து வாழ்வதற்குப் போதுமானதாகக் கருதப்பட்ட உழவுநிலப் பரப்பை வழிப்பொருளாய்க் குறித்தது. ஒரு குடும்பு = 80 சதுரக் கயிறு. (= 320 காணி = 3.5 ஏக்கர்.)
குடும்பின் முந்தைய நிலையான குழும்பு என்றசொல் களிற்றுக் கூட்டம் அல்லது திரள் (யானை தன் குடும்பத்தைத் தவிர மற்ற யானைகளைக் கூட்டமாய் சேர்க்காது என்பதை நினைவிற் கொள்க.) பொருளில் மதுரைக் காஞ்சி 24 ஆம் அடியில் பிணக்கோட்ட களிற்றுக் குழும்பு என்ற சொற்றொடர் களிற்றுக் குடும்பத்தைக் குறிக்கிறது. ஆகக் குடும்பின் முந்தை வளர்ச்சி சங்க இலக்கியத்தில் காண்கிறது. ழகரம் டகரமாவது தமிழியப் பழக்கம் தான் கோழி தெலுங்கில் கோடியாகும் துளுவில் கோரியும் ஆகும் சோழ மண்டலம் சோர மண்டலம்/ கோர மண்டலம் ஆகவில்லையா? அழிம்பு> அழும்பு> அடிம்பு என்று பலுக்கப் படுவதில்லையா? இதே போல குழி தாழி >குழுதாழி> குழுதாடி (= மாட்டுத் தொட்டி) என்று சொல்லப் படுவது இல்லையா? துளைப் பொருளில் குழி என்ற சொல் குழும்பு என்ற மாற்று வடிவில் ஆளப் பட்டுள்ளது. [“ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர” மதுரைக் 273]
இவை தவிரக் குலை, கலவை, கலம்பம்>கதம்பம், கள், களம், களரி, கழகம், கணம், கட்டு, கருவி, கூளம், கூடல், கூட்டம், கோட்டி, கோடு, கோடி போன்ற பிற சொற்களும் கூட்டற் பொருளைச் சுட்டும். இவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தரலாம் விரிவஞ்சி விடுக்கிறேன்.
அக்காலத்தில் குடும்பம்/குடி என்பது ஏழு தலைமுறை சேர்ந்தது என்பதை நினைவு கொள்ளவேண்டும். [சேயோன், பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் என்ற ஒன்பது தலைமுறைப் பெயரில், சேயோனையும், எள்ளுப் பெயரனையும் தவிர்த்தால் ஏழு தலைமுறையாகும். இந்த அளவிற்கு விரிவாகக் குழப்பம் இல்லாது உறவு முறைப் பெயர்களைக் குறித்திருக்கும் ஒரு பழம் இனமாகத் தமிழினம் தெரிந்ததால், The origin of family, private property and State என்ற பெடரிக் எங்கல்சு (Frederic Engels) நூலில் தமிழர் உறவுமுறை பற்றிய வியப்புக் குறிப்பு வரும்.]
அக்காலத்தில் ஒரு குடும்பத்தினர் கூடிவாழ்ந்த ஊர் ”குடி” எனப் பட்டது. அக் குடியில் மற்ற குடும்பத்தினரும் பின்னால் கூடிவாழத் தலைப்பட்டனர். நாளடைவில் அரசகட்டளையால் மக்கள் கூடிவாழத் தலைப்பட்ட colony யும் குடி எனப்பட்டது. இந்தையிரோப்பியக் colony யும் தொடக்கத்தில் குலந் தொடர்பான சொல்லே. தமிழ்நாடெங்கணும் விரிந்துகிடக்கும் ’குடி”களைப் பார்த்தால், குடிப்பொருள் விளங்கும். குடியேறுதல் என்பது ஓர் அகன்ற குடும்பம் இடம்விட்டு இடம்புகுந்து வாழ முற்படுவதைக் குறிக்கும்.
[சோழநாட்டிலிருந்து அகதியாய் ஓடிவந்து பாண்டிய நாட்டில் குடியேறிய நாட்டுக்கோட்டை நகரத்தார் முதலில் இளையாற்றங்குடியில் தங்கிப் பின் அரசாணையால், இளையாற்றங்குடி, மாற்றூர், வைரவன்பட்டி, இரணியூர், சூரைக்குடி, இலுப்பைக்குடி, வேலங்குடி என்ற ஏழு ஊர்களில் குடியேறினர். பின்னால் இளையாற்றங்குடியாரில் இருந்து நேமம், பிள்ளையார்பட்டி என்ற இரு குடியினர் பிரிந்தனர். இன்றைக்கு ஒன்பது குடியினரும் ஒன்பது அகன்ற குடும்பத்தார் தான். இவர் ஒன்பது கோயிற் பங்காளிகள் என்றே சொல்லப் படுவர். குடும்பச் சொத்தில் பங்கிருக்கும் தந்தை வழி உறவினரைப் பங்காளிகள் என்றே அழைப்பார்.] குடும்பு/குடும்பம் என்பதும் குடி என்பதும் ஒன்று தான் என்பதற்கு இவ்விவரத்தைச் சொன்னேன்.
குடும்பம் என்பதைத் தமிழில்லை எனில், அப்புறம் மேலேகூறிய பெயர்ச் சொற்களையும், அவற்றோடு தொடுகும் வினைச்சொற்களையும் தமிழில்லை என்று சொல்ல வேண்டும். ”அப்புறம் முடிவெங்கே இருக்கிறது?” என்று எண்ணிப் பாருங்கள். கூட்டப் பொருள் என்பது அடிப்படைப் பொருள். அது இல்லாமல் ஓர் இயல்மொழி இருக்க முடியுமா?
குல் என்னும் வேரில் இருந்து கூட்டப்பொருள் அல்லாமல், வளைவுப் பொருளிலும் சொற்கள் (குடி, குடிகை, குடிசை, குடில் போன்றவை) உண்டு. இது தவிர, இல், மனை போன்றவை துளைப் பொருளில் மாந்தர் வாழும் இடத்தைக் குறிக்கும் சொற்களாகும். [வடமொழி வேர்ப்பொருளாக வளைவுப் பொருள் மட்டுமே மோனியர் வில்லிம்சில் காட்டப்பெறும். கூட்டப் பொருள் வளைவுப்பொருளிலிருந்து எப்படி வந்ததென்று அங்கு விளக்கப் படவில்லை.].
முடிவாகச் சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் பெரிதும் பயில்கிறது. [அதன் பொருளை இன்றையப் புரிதல் கொண்டு பார்க்க முடியாது.] “குடும்பம் என்ற சொல்லும் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும்” என்று மற்ற சூழ்நிலைச் சான்றுகளால் உணருகிறோம். அதே பொழுது ”குடும்பம்” என்ற வடிவிற்குச் சங்க இலக்கியத்தில் நேரடிச்சான்று இல்லை தான். என் செய்வது? எப்போதும் நான்சொல்வது போல ”சங்க இலக்கியம், ஓர் அகர முதலி அல்ல. அது நமக்குக்கிடைத்த இலக்கியப்பகுதி. அது காட்டும் சொல்லாட்சிகள் ஒரு சிலவே. தருக்கவழி உய்த்துணர வேண்டியது ஏராளம்.”
அன்புடன்,
இராம.கி.
நண்பர் நாக. கணேசன், ”குடிசெயல் வகை” என்னும் திருக்குறள் 103 ஆம் அதிகாரத்தில் இருந்தே
இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
என்ற 1029 ஆம் குறளை எடுத்துக் காட்டி திருக்குறளுக்கும் முற்பட்டுக் குடும்பம் என்ற சொல் இருந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார். இக் குறளை திரு.ரெ.கா. கவனிக்க மறந்தார் போலும்! குடிசெயல்வகை எனும் அதிகாரமே, குடும்பம் நடத்தும் வகையைச் சொல்லும் அதிகாரம் தான். அந்த அதிகாரம் முழுதிலும் குடி என்ற சொல் அகன்ற குடும்பத்தையே குறிக்கிறது. இக்கால நெற்றுக் குடும்பத்தையே பார்த்துப் பழகிப்போன நமக்கு (நெற்றுக் குடும்பம் = nuclear family; நெற்று = nut; nuct>nuclear என்ற இந்தையிரோப்பிய வளர்ச்சியைப் புரிந்து கொண்டால் நெற்றை எப்படியெலாம் இக்காலத்தில் தமிழ்வழி நெற்றுப் பூதியலைச் (nuclear physics) சொல்லிக் கொடுக்கும் போது புழங்கிக்கொள்ளலாம் என்பது விளங்கும். நாம்தான் இருப்பது தொலைத்துச் ”சங்கரா, சம்போ” என்று தவிப்பவர் ஆயிற்றே? நுக்லியர் குடும்பம் என்று தமிங்கிலம் பழகிக் கொண்டிருந்தால் எப்படி?) அக்காலக் கூட்டுக் குடும்பம் புரிவதில்லை. குலம், குடும்பு, குடி, குடும்பம் போன்றவை குல் என்னும் வேரில் இருந்து கூட்டப் பொருளில் எழுந்த சொற்கள்.
குல்>குலம்;
குல் என்னும் வேர், லகர/ழகரப் போலியொடு, பலுக்க எளிமை கருதி உகரம் சேர்ந்து, குல்>குழு எனவாகிக் கூட்டத்தைக் குறிக்கும். குழுதல்> குழுவுதல்> குழுமுதல்> குழும்புதல் என்ற வினைச்சொல் வளர்ச்சியை இங்கு எண்ணிப் பார்க்கலாம். குழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட்டப் பொருளையே உணர்த்தும். [ராயர் காப்பிக் கிளப் என்னும் மடற்குழுவை, ஒருமுறை அரையர் குழும்பு என்று நான் சொல்லப் போக, அடித்துக் கிளம்பி, குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டவர் உண்டு. என்ன செய்வது, கிளப் என்று தமிங்கிலம் பழகலாமாம்; குழும்பு என்று சொல்லக் கூடாதாம் :-)).] குழாம் என்ற சொல் கூட குழுமுதலின் வளர்ச்சி தான். கோடைக்கானல் ஏரிக்கரையில் படகுக் குழாம் என்று போட்டிருப்பார்.
பொதுவாக, வினைச் சொல் வளர்ச்சியில் X-தல்> X-வுதல்> X-முதல்> X-ம்புதல் என்னும் வளர்ச்சி தமிழில் பல சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது; இந்த வினைச்சொல் உருவாகும் முறை தமிழுக்கே உரிய ஒருமுறை. இந்த வினைச்சொல் உருவாக்க முறையில், சில சொற்களில் குறை வளர்ச்சியும், சில சொற்களில் மிகுவளர்ச்சியும், ஏற்பட்டது. காட்டாகச் சில சொற்களைப் பார்ப்போம்.
அள்ளுதல்>அழுதல்>..........>அழும்புதல் = செறியக் கலத்தல்; அழும்பு என்ற பெயர்ச்சொல்லும் கூட உண்டு.
எழுதல்> எழுவுதல்> எழுமுதல்> எழும்புதல்; எழுமூர் என்ற பழைய பெயர் இன்றைக்கு எழும்பூர் என்றே சென்னையிற் சொல்லப் படுகிறது..
கெழுதல்> கெழுவுதல்> கெழுமுதல். இது நிறைதல், பொருந்துதல் பொருளை உணர்த்தும். அன்பு கெழுமிய என்று சொல்லுகிறோமே, அது அன்பு நிறைந்த என்ற பொருளை உணர்த்தும். கெழு என்ற சொல் இன்னும் ஆழ்ந்து, நிறத்தை உணர்த்தும். இந்தையிரோப்பிய colour என்ற சொல்லுக்கு அது அப்படியே நிகரானது. கெழிறு என்றாலும் கூடக் colour தான். “பால் வார்பு கெழீஇ” என்ற தொடர் மலைபடு கடாம் 114 ஆம் வரியில் வரும். அதற்கு வரும் உரையில் “கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யணர்த்திற்று” என்று சொல்வார். “தேரோடத் துகள் கெழுமி” என்பது பட்டினப்பாலை 47ஆம் வரியில் வரும்.
இதே போல,
சிலுதல்> ....................................> சிலும்புதல்
செழுதல்>....................................> செழும்புதல்
என்ற சொற்களும்,
துள்> ........தழு> தழுவு> தழும்பு என்பதும் மேற்சொன்ன வினையாக்க முறையை உணர்த்தும்,
இனித் துள்> துளுவுதல் (= துள்ளுதல், துளித்தல் என்ற சொற்கள் இதனோடு தொடர்புடையவை) > துளுமுதல்> துளும்புதல்> தளும்புதல்> தளம்புதல் என்ற வினைச்சொல் நீர் தளும்புதலைக் குறிக்கும். இன்னும் வடபால் ஒலிப்பில் தடும்புதல்>ததும்புதல் என்று கூடத் திரியும். ளகரம் டகரமாகிப் பின் வடக்கே தகரமாகும். மூக்கில் நீர்க் கோத்துக் கொண்டு இருக்கும் நிiீக் கோவையை தடுமன் என்று சிவகங்கைப் பக்கம் சொல்வார். நீர்த்திரட்சியைக் குறிக்கும் சொல்; இதிலும் கூட்டப் பொருள் தான்.
அடுத்து, துல்>துள்>தொள்>தொழுதல்>...................................>தொழும்பு = வணக்கம். (வணங்குதலும் தொழுதலும் ஒன்றுதான். நிலவுடைமை ஆதிக்கத்தில் நில அடிமைகள் தொழும்பர் என்றே சொல்லப் படுவார். தொழும்பரும் தொண்டரும் ஒரே பொருள் தான். அடிமையாய் இருப்பவர் என்று பொருள். ழகரம் மூக்கொலியோடு சேர்ந்து வரும் டகரமாய்த் திரிந்து, தொண்டு என்ற பெயர்ச்சொல் ஏற்படுகிறது..
இதே போன்ற வளர்ச்சி புள்>(பிள்)>பிழு>பிழம்பு பிழம்பு = திரட்சி; பிண்டு> பிண்டம் = திரட்சி, என்பதிலும் உண்டு. பிண்டத்தைப் பிழையாக வடமொழி என்பாருண்டு. [எத்தனை சொற்களைத் தான் வடசொல்லெனச் சொல்வாரோ? எத்தனை எடுத்துக் காட்டுகளைக் காட்டினாலும், மீண்டும் மீண்டும் தம் நம்பிக்கையின் பாற்பட்டே பேசிக் கொண்டு இருப்பவரை என்ன சொல்லி அறிவுறுத்த இயலும்?] .
இதேபோல கூர்ந்த குழாய் கொண்டு கொத்தும் கொதுகு (=கொசுகு; கொசு என்றே இக்காலஞ் சொல்கிறோம்.), மாட்டு ஈ போன்றவற்றிற்கு நுளம்பு என்ற பெயர் உண்டு. அது நுள்>நுளுவுதல்> நுளுமுதல்> நுளும்புதல்> நுளம்புதல் = கூர்த்துக் கொத்துதல் என்ற வினையில் இருந்து கிளம்பும் சொல். [கிளம்புதல் கூட கிளுதல் என்னும் கிளைவிடுத்தலைக் குறிக்கும் சொல்லே.]
...ம்புதல் என்ற சொற்களெல்லாம் உணர்த்தும் வினைமுறை நமக்குப் புரிபடவில்லையா?]
பாறையில் துளைப்பட்ட இடத்தைப் புழை என்கிறோமே அதைப் புழம்பு என்றும் சொல்வார். (குகையைக் குறிக்கும் சொல்.) ழகரம் திரிந்து டகரமாகிப் புடம்பு என்றாகி மீண்டும் குகையைக் குறிக்கும். [உயிரை உள்ளே கொண்டது உடல் எனும் உடம்பு. குடம்பை என்பது கூட்டைக் குறிக்கும் சொல். இங்கு ம்பு என்றுமுடியும் ஈற்றைப் பாருங்கள்.]
ழகரம் டகரமாவதற்கு மேலும் சான்று வேண்டுமெனில் புடலங்காய்க் கூட்டு பற்றாதா? புழல்>புடல் ஆகி புடலங்காய் ஆகும். உள்ளே புழை (=ஓட்டை) இருக்கும் காய் புடலங்காய்.
யாரோ கேட்கிறார், ஏன் இப்படித் தமிழ், தமிழ் என்று புலம்புகிறீர்? வேறு ஒன்றுமில்லை “புலு புலு” என்று ஒலித்தலால், பிதற்றுதலால், அழுதலால், புல்>புலுவு>புலுமு>புலம்பு என்றாயிற்று..
நான் சொல்லிப் போகலாம். ”இன்றைக்கு உங்கள் வீட்டில் என்ன குழம்பு?” என்னும் போது, மசலைப் (மசிக்கப் பட்ட வாசனைப் பொருள் மசலைப் பொருள். அதை மசாலையெனச் சொல்லிக் கொண்டுள்ளோம்.) பொருள் ஒன்றுசேர்ந்து கலங்கிக்கிடக்கும் சாறைச் சொல்கிறோம், இல்லையா?
குழு என்ற சொல்லின் கூட்டப் பொருள், திரட்சிப் பொருளுக்கு இன்னொரு சான்று குழியம் என்ற சொல்லாகும். அது கூடித் திரண்ட உருண்டை அல்லது கோளத்தைக் குறிக்கும். கோளம் கூடக் குல் எனும் வேரில் பிறந்ததே. குழுவல் = கூடுகை, குழூஉக் குறி = கூட்டத்தினரிடை விதப்பாகக் கையாளும் குறி. குளிகை = உருண்டை எனப் பலசொற்களை கூட்டப்பொருளுக்கு வாகாகச் சொல்லமுடியும்.
குல்> குழு> குழுமு> குழும்பு> குடும்பு> குடும்பம் என்னும் வளர்ச்சியில் மகர ஈற்றுச் சொற்கள் மகரம்/பகரம் சேர்ந்த ஈறாக மாறுவது தமிழில் பெரிதும் உள்ள பழக்கம்[குல்>கொல்(yellow)> கொழு> கொழுது>கொழுதுமை>கோதுமை என்ற சொல்கூடக் கோதம்பை என்று தென்பாண்டி நாட்டில் முதுபெண்டிர் வாயில் இன்றும் பலுக்கப் படும். இதே போலத் தேங்காய்க் குடுமியைத் தேங்காய்க் குடும்பி என்று பலுக்குவார்.] தவிர மகர/பகர இணையீறு தமிழுக்கே விதப்பாக உள்ள ஓர் ஈறு. வடமொழியில் அது மிகமிக அரிதாகவே காணப் படும். மற்ற இந்தை யிரொப்பிய மொழிகளில் காணப் படாதது. {ஏதொன்றையும் வடசொல் என்பார் மற்ற இணையான இந்தையிரோப்பிய மொழிச் சொற்களை, வழக்குகளை உடன்காட்ட முயலாதுள்ளார். நாமோ மற்ற தமிழிய மொழிச் சொற்களைக் காட்டிக் கொண்டு உள்ளோம். வடபுலச் சொற்களையும் முடிந்தவரை இணைகாட்டுகிறோம். வெறும் நம்பிக்கையே போதுமென்ற அளவில் ”வசுதெய்வ குடும்பகம்” என்று சங்கதச் சொற்றொடரை எடுத்துக்காட்டும் போக்கு இனியாவது மறைய வேண்டும். Let us do the linguistic analysis properly instead of just quoting this or that saying to support our assertions.}
இனி குளம்>குளம்பு> குடும்பு> கொடும்பு> கொடும்பை = குளம் என்றபொருளில் வரும் கொடும்பை ஆளூர் >கொடும்பாளூர் என்ற ஊர்ப்பெயரையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.
குடும்பின் திரிவான கடும்பு, சுற்றம் என்ற பொருளைச் சுட்டும் வகையை “கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது” என்ற புறம் 68 ஆம் பாட்டின் (சோழன் நலங் கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது) 2 ஆம் வரியில் காணலாம். சங்க காலத்திலேயே குடும்பு இருந்திருக்க வேண்டும், இல்லெனில் கடும்பு என்ற சொல் ஆள முடியாது. சுற்றம் என்ற பொருளின் நீட்சி குடும்பம் தானே?
அவர்கள், இவர்கள் என்று சொல்லுகிறோமே, அந்தக் கள் எனும் விகுதி செறிவு, திரட்சி, கூட்டம் ஆகியவற்றைத் தான் குறிக்கிறது “மீனினங்கள் ஓர் கடும்பாய்” என்று பாகவத புராணத்தில் 9 ஆம் அதிகாரத்தில் .இக்குவாகு 6 -இல் மீன்கள் திரட்சியாய்ப் போவதைக் குறிக்கும்.
புறம் 183 ல் ஆரியப் படை கடந்தநெடுஞ்செழியன் “ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்” எனும் போது ”ஒரு குடும்பத்தில் பிறந்த” என்ற பொருளைத்தான் சொல்கிறான். கொடிவழி என்ற சொல்லைப் பரம்பரை என்ற பொருளில் பிங்கலம் காட்டும். குடிமை என்ற சொல்லால், வள்ளுவரும் ”ஒரு குலத்து ஒழுக்கம்” என்ற பொருளை உணர்த்துகிறார். குடும்பத்தை உணர்த்தும் குடி என்ற சொல் இன்று பொருள் விரிந்து குடியரசு வரை வந்து விட்டது. ஆனாலும் தொடக்கப்பொருள் குடும்பமே. குடும்பு என்ற சொல் பூங்கொத்து, காய்க்குலை ஆகியவற்றையும் குறிக்கும். family பொருளில் பேரரசுச்சோழர்காலக் கல்வெட்டில் “இவ்வாட்டை குடும்பு வாரிய பெரு மக்களும்” [தெ. கல்.தொ.19, கல் 179] என்ற சொற்றொடர் குறிக்கப்பட்டது.
இது போகக் குடும்பு என்றசொல் ஒரு குடும்பம் பயிர் செய்து வாழ்வதற்குப் போதுமானதாகக் கருதப்பட்ட உழவுநிலப் பரப்பை வழிப்பொருளாய்க் குறித்தது. ஒரு குடும்பு = 80 சதுரக் கயிறு. (= 320 காணி = 3.5 ஏக்கர்.)
குடும்பின் முந்தைய நிலையான குழும்பு என்றசொல் களிற்றுக் கூட்டம் அல்லது திரள் (யானை தன் குடும்பத்தைத் தவிர மற்ற யானைகளைக் கூட்டமாய் சேர்க்காது என்பதை நினைவிற் கொள்க.) பொருளில் மதுரைக் காஞ்சி 24 ஆம் அடியில் பிணக்கோட்ட களிற்றுக் குழும்பு என்ற சொற்றொடர் களிற்றுக் குடும்பத்தைக் குறிக்கிறது. ஆகக் குடும்பின் முந்தை வளர்ச்சி சங்க இலக்கியத்தில் காண்கிறது. ழகரம் டகரமாவது தமிழியப் பழக்கம் தான் கோழி தெலுங்கில் கோடியாகும் துளுவில் கோரியும் ஆகும் சோழ மண்டலம் சோர மண்டலம்/ கோர மண்டலம் ஆகவில்லையா? அழிம்பு> அழும்பு> அடிம்பு என்று பலுக்கப் படுவதில்லையா? இதே போல குழி தாழி >குழுதாழி> குழுதாடி (= மாட்டுத் தொட்டி) என்று சொல்லப் படுவது இல்லையா? துளைப் பொருளில் குழி என்ற சொல் குழும்பு என்ற மாற்று வடிவில் ஆளப் பட்டுள்ளது. [“ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர” மதுரைக் 273]
இவை தவிரக் குலை, கலவை, கலம்பம்>கதம்பம், கள், களம், களரி, கழகம், கணம், கட்டு, கருவி, கூளம், கூடல், கூட்டம், கோட்டி, கோடு, கோடி போன்ற பிற சொற்களும் கூட்டற் பொருளைச் சுட்டும். இவை ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தரலாம் விரிவஞ்சி விடுக்கிறேன்.
அக்காலத்தில் குடும்பம்/குடி என்பது ஏழு தலைமுறை சேர்ந்தது என்பதை நினைவு கொள்ளவேண்டும். [சேயோன், பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் என்ற ஒன்பது தலைமுறைப் பெயரில், சேயோனையும், எள்ளுப் பெயரனையும் தவிர்த்தால் ஏழு தலைமுறையாகும். இந்த அளவிற்கு விரிவாகக் குழப்பம் இல்லாது உறவு முறைப் பெயர்களைக் குறித்திருக்கும் ஒரு பழம் இனமாகத் தமிழினம் தெரிந்ததால், The origin of family, private property and State என்ற பெடரிக் எங்கல்சு (Frederic Engels) நூலில் தமிழர் உறவுமுறை பற்றிய வியப்புக் குறிப்பு வரும்.]
அக்காலத்தில் ஒரு குடும்பத்தினர் கூடிவாழ்ந்த ஊர் ”குடி” எனப் பட்டது. அக் குடியில் மற்ற குடும்பத்தினரும் பின்னால் கூடிவாழத் தலைப்பட்டனர். நாளடைவில் அரசகட்டளையால் மக்கள் கூடிவாழத் தலைப்பட்ட colony யும் குடி எனப்பட்டது. இந்தையிரோப்பியக் colony யும் தொடக்கத்தில் குலந் தொடர்பான சொல்லே. தமிழ்நாடெங்கணும் விரிந்துகிடக்கும் ’குடி”களைப் பார்த்தால், குடிப்பொருள் விளங்கும். குடியேறுதல் என்பது ஓர் அகன்ற குடும்பம் இடம்விட்டு இடம்புகுந்து வாழ முற்படுவதைக் குறிக்கும்.
[சோழநாட்டிலிருந்து அகதியாய் ஓடிவந்து பாண்டிய நாட்டில் குடியேறிய நாட்டுக்கோட்டை நகரத்தார் முதலில் இளையாற்றங்குடியில் தங்கிப் பின் அரசாணையால், இளையாற்றங்குடி, மாற்றூர், வைரவன்பட்டி, இரணியூர், சூரைக்குடி, இலுப்பைக்குடி, வேலங்குடி என்ற ஏழு ஊர்களில் குடியேறினர். பின்னால் இளையாற்றங்குடியாரில் இருந்து நேமம், பிள்ளையார்பட்டி என்ற இரு குடியினர் பிரிந்தனர். இன்றைக்கு ஒன்பது குடியினரும் ஒன்பது அகன்ற குடும்பத்தார் தான். இவர் ஒன்பது கோயிற் பங்காளிகள் என்றே சொல்லப் படுவர். குடும்பச் சொத்தில் பங்கிருக்கும் தந்தை வழி உறவினரைப் பங்காளிகள் என்றே அழைப்பார்.] குடும்பு/குடும்பம் என்பதும் குடி என்பதும் ஒன்று தான் என்பதற்கு இவ்விவரத்தைச் சொன்னேன்.
குடும்பம் என்பதைத் தமிழில்லை எனில், அப்புறம் மேலேகூறிய பெயர்ச் சொற்களையும், அவற்றோடு தொடுகும் வினைச்சொற்களையும் தமிழில்லை என்று சொல்ல வேண்டும். ”அப்புறம் முடிவெங்கே இருக்கிறது?” என்று எண்ணிப் பாருங்கள். கூட்டப் பொருள் என்பது அடிப்படைப் பொருள். அது இல்லாமல் ஓர் இயல்மொழி இருக்க முடியுமா?
குல் என்னும் வேரில் இருந்து கூட்டப்பொருள் அல்லாமல், வளைவுப் பொருளிலும் சொற்கள் (குடி, குடிகை, குடிசை, குடில் போன்றவை) உண்டு. இது தவிர, இல், மனை போன்றவை துளைப் பொருளில் மாந்தர் வாழும் இடத்தைக் குறிக்கும் சொற்களாகும். [வடமொழி வேர்ப்பொருளாக வளைவுப் பொருள் மட்டுமே மோனியர் வில்லிம்சில் காட்டப்பெறும். கூட்டப் பொருள் வளைவுப்பொருளிலிருந்து எப்படி வந்ததென்று அங்கு விளக்கப் படவில்லை.].
முடிவாகச் சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் பெரிதும் பயில்கிறது. [அதன் பொருளை இன்றையப் புரிதல் கொண்டு பார்க்க முடியாது.] “குடும்பம் என்ற சொல்லும் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும்” என்று மற்ற சூழ்நிலைச் சான்றுகளால் உணருகிறோம். அதே பொழுது ”குடும்பம்” என்ற வடிவிற்குச் சங்க இலக்கியத்தில் நேரடிச்சான்று இல்லை தான். என் செய்வது? எப்போதும் நான்சொல்வது போல ”சங்க இலக்கியம், ஓர் அகர முதலி அல்ல. அது நமக்குக்கிடைத்த இலக்கியப்பகுதி. அது காட்டும் சொல்லாட்சிகள் ஒரு சிலவே. தருக்கவழி உய்த்துணர வேண்டியது ஏராளம்.”
அன்புடன்,
இராம.கி.
குடும்பம் - 1
2008 திசம்பரில் மின் தமிழ் மடற்குழுமத்தில் மலேசிய எழுத்தாளர் திரு.ரெ.கா. "திருக்குறளில் குடும்பம் என்ற சொல் இல்லை. இது வள்ளுவருக்குப் பிற்காலத்திய சொல்லாக இருக்கலாம். 'இல்வாழ்க்கை', 'மனை மாட்சி' என்றே குறளில் ஆளப் பெறுகிறது. குடும்பம் என்ற சொல்லின் மூலம் என்ன? அறிந்தவர் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தார். தவிர, அச்சொல் “தமிழில் இருந்து வடமொழிக்குப் போனதா, வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்ததா?” என்றும் கேட்டிருந்தார். உடனே, “குடும்பம், குடும்பகம் - இரண்டும் வட சொற்களே. ‘உதார சரிதாநாம் து வஸுதைவ குடும்பகம்’ என்று மனுவும், யாக்ஞவல்கியரும் சொல்கிறார். ’பரந்த மனமுடையோர்க்கு உலகம் முழுவதும் ஒரே குடும்பம்’ என்று பொருள் கொள்ளலாம். உறவினர், மக்கள், வம்சம் போன்றவற்றைக் குறிக்கவும் இச்சொல் பயனாகிறது" என்று திரு.தேவு சொல்லியிருந்தார். ஆனால்,
ayaM nijaH paroveti gaNanA laghu-chetasAm
udAra charitAnAM tu vasudhaiva kuTumbhakam ||
""This is my own and that a stranger" - is the calculation of the narrow-minded,
For the magnanimous-hearts however, the entire earth is but a family"
என்ற சொற்றொடர் மனு ஸ்மிர்தியில் ஆளப்படவேயில்லை என்று சர்வேஷ் திவாரி என்பவர் அழுத்தந்திருத்தமாகச் சொல்லுகிறார். (http://www.blogs.ivarta.com/Hoax-Called-Vasudhaiva-Kutumbakam-I-Hitopadesha/blog-148.htm). {மேலும், இவ்வாசகம் வரும் நூலாக யஞ்யவல்கிய ஸ்மிர்தியை திரு. திவாரி குறிப்பிடவில்லை. அதேபொழுது இச்சொற்றொடர் பல வடமொழி நூல்களில் ஆளப் பட்டிருப்பது உண்மை தான் என்று சில காட்டுக்களைத் தருகிறார். அவர் கட்டுரைகளைப் படித்தால், ஒரு பருந்துப் பார்வை கிடைக்கக்கூடும். பின், மூலங்களுக்குப் போய் முழு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். ”வசுதெய்வ குடும்பகம்” என்ற சொற்றொடர் குறிக்கப் படும் நூல் விதப்பாக ஹிதோபதேசம் என்றும், அதற்குமுன் பஞ்ச தந்திரக் கதைகளிலும், அதற்கும் முன்னால் [இராமனுசரின் ஸ்ரீ பாஷ்யத்தின் இரண்டாம் அதிகாரத்தில் ஏழாம் அதிகரணத்தில் கூறும் விளக்கங்கள் வழியாக, அரிதில் அறியப் பட்ட] மகா உபநிடதம் 6- ஆம் அதிகாரத்தில் வரும் 70-73 ஆம் வரிச் சொலவங்களிலும் இச் சொற்றொடர் ஆளப்பட்டதாக திவாரியின் கட்டுரைகள் சொல்கின்றன.} மனு ஸ்மிர்தியிலும், யஞ்யவல்கிய ஸ்மிர்தியிலும் எவ்விடத்தில் இச்சொற்றொடர் ஆளப்பட்டுள்ளதென அதிகாரம், வரிக்குறிப்புகளோடு திரு. தேவு கொடுத்தால் எடுகோளைப் பார்க்க ஏந்தாக இருக்கும்.
பொதுவாக இரண்டாம் வழிப்பட்ட பரப்புரைக் கட்டுரைகளைக் கொண்டு அடித்துச் சொல்லுவது நம்மை வழுக்கிவிடும். [அதே பொழுது, குடும்ப என்ற சொல் சந்தோக்ய உபநிடதம் தொடங்கி, பின் ஆபஸ்தம்ப தர்மசூத்ரம், மனுஸ்மிர்தி ஆகியவற்றில் ஆளப் படுவதாகத்தான் மோனியர் வில்லியம்சு அகரமுதலி குறிப்பிடுகிறது.]
மனு ஸ்மிர்தி முதல் நூற்றாண்டு நூலென்றே பெரும்பாலோர் கருதுகிறார். ஹிதோபதேசம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அளவில் எழுந்த, கதைகள் நிரம்பிய, நூல். பஞ்சதந்திரம் பல்வேறு காலப்பட்டது. அதன் தொடக்கம் புத்தருக்கும் முற்பட்டது என்பார். வேதநெறி பயிலாத (ஆசீவகம், சைனம், புத்தம் போன்ற) மாற்று நெறியாளரிடம் பெரிதும் புழங்கியவை பஞ்சதந்திரக் கதைகள். தொடக்ககாலத்தில் அவற்றைப் பயன்படுத்த வேதநெறி தயங்கியது. பின், நெடுங்காலம் கழித்தே, வேதநெறி தன் பரப்புரைகளில் ஒருசில பஞ்சதந்திரக் கதைகளைப் பயன்படுத்தியது. உபநிடதங்கள் கி.மு.800 தொடங்கி புத்தருக்கும் அப்புறம் கி.மு.400 வரைக்கும் எழுதப் பட்டிருக்கலாம் என்றே வரலாற்று ஆய்வாளர் சொல்கிறார்.
குடும்பம் என்ற சொல் சில வடநூல்களில் ஆளப்படுவதாலேயே அதை வடசொல்லென அறுதியிட்டுச் சொல்லமுடியாது. குடும்பம் என்ற சொல்லின் வேர், அந்த வேரடியில் பிறந்த மற்ற சொற்கள், அச்சொற்களின் வளர்ச்சி, அவற்றின் சொற்கூறுகள், சொற்கள் அமையும் பாங்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டால், அப்படி அறுதியாய்ச் சொல்ல முடியாது. [குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மையைக் கீழே நிறுவுவேன்.]
பொதுவாக, நாவலந்தீவு தழுவிய பழந்தமிழின் விரிவை ஏதோ காரணங் கருதி மறுத்து (குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட காலமும் ஒன்று இருந்தது, அது பல்வேறு காரணங்களால் மாலவன் குன்றத்திற்கும் கீழே சுருங்கியது.), ”வேதநெறிக்கும், மாற்று நெறிகளுக்கும் இடையே நடந்த தருக்கப் போராட்டத்தில் பல்வேறு சமய நெறியாளரும் அங்கும் இங்குமாய் ஓடி, முடிவில் தற்காப்பிற்காகத் தெற்கு நோக்கி பெருமளவில் வந்ததையும், குறிப்பாக வேதநெறியாளர் இரண்டு மூன்று அலைகளாய் ஓடி வந்ததையும் புறந்தள்ளி, [காண்க: பார்ப்பனரில் உள்ள பெருங்கணம் (ப்ருஹச்சரணம்), வடமர் போன்ற கூட்ட உட்பிரிவுகள்; தமிழக, இந்தியவரலாற்றில் ஒரு குறித்த பகுதி; ஆய்வுசெய்யாமல் அழிந்து கொண்டு உள்ளது. ”வரலாற்றுத் திருத்தங்கள்” தங்களுக்கு இடைஞ்சலானவற்றை மறைத்து அழித்துக் கொண்டுள்ளன.], பல சங்கத நூல்கள் தெற்கிருந்தே எழுதப் பட்டன என்பதையும் புரிந்து கொள்ள மறுத்து, வன்கண் வழக்குச் செய்வதாலேயே, பலரும் வேதகாலத்தில் சிறிதளவும், உபநிடதக் காலத்தில் பேரளவும் தமிழ்ச் சொற்கள் சங்கதத்துள் நுழைந்து ஆட்சி செய்திருக்க வாய்ப்புக்களுண்டு என்பதை மறுக்கிறார். [அப்புறம் காழ்ப்பு காழ்ப்பு என்று சொல்லுவதில் பொருளென்ன உள்ளது?] சிந்தனை மாற்றங்கள் ஏற்படாமல், ஒருபக்கமாகவே எண்ணிக் கொண்டிருந்தால், மொழியாய்விற்கு வடக்கு மட்டுமே வாசலென முட்டிக்கொள்ள வேண்டியது தான். மற்ற வாசல்களைத் திறந்தால் என்ன, குடி முழுகியா போய்விடும்? புதுக் காற்று தென்றலாய் வந்து அடிக்கட்டுமே?
அன்புடன்,
இராம.கி.
ayaM nijaH paroveti gaNanA laghu-chetasAm
udAra charitAnAM tu vasudhaiva kuTumbhakam ||
""This is my own and that a stranger" - is the calculation of the narrow-minded,
For the magnanimous-hearts however, the entire earth is but a family"
என்ற சொற்றொடர் மனு ஸ்மிர்தியில் ஆளப்படவேயில்லை என்று சர்வேஷ் திவாரி என்பவர் அழுத்தந்திருத்தமாகச் சொல்லுகிறார். (http://www.blogs.ivarta.com/Hoax-Called-Vasudhaiva-Kutumbakam-I-Hitopadesha/blog-148.htm). {மேலும், இவ்வாசகம் வரும் நூலாக யஞ்யவல்கிய ஸ்மிர்தியை திரு. திவாரி குறிப்பிடவில்லை. அதேபொழுது இச்சொற்றொடர் பல வடமொழி நூல்களில் ஆளப் பட்டிருப்பது உண்மை தான் என்று சில காட்டுக்களைத் தருகிறார். அவர் கட்டுரைகளைப் படித்தால், ஒரு பருந்துப் பார்வை கிடைக்கக்கூடும். பின், மூலங்களுக்குப் போய் முழு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். ”வசுதெய்வ குடும்பகம்” என்ற சொற்றொடர் குறிக்கப் படும் நூல் விதப்பாக ஹிதோபதேசம் என்றும், அதற்குமுன் பஞ்ச தந்திரக் கதைகளிலும், அதற்கும் முன்னால் [இராமனுசரின் ஸ்ரீ பாஷ்யத்தின் இரண்டாம் அதிகாரத்தில் ஏழாம் அதிகரணத்தில் கூறும் விளக்கங்கள் வழியாக, அரிதில் அறியப் பட்ட] மகா உபநிடதம் 6- ஆம் அதிகாரத்தில் வரும் 70-73 ஆம் வரிச் சொலவங்களிலும் இச் சொற்றொடர் ஆளப்பட்டதாக திவாரியின் கட்டுரைகள் சொல்கின்றன.} மனு ஸ்மிர்தியிலும், யஞ்யவல்கிய ஸ்மிர்தியிலும் எவ்விடத்தில் இச்சொற்றொடர் ஆளப்பட்டுள்ளதென அதிகாரம், வரிக்குறிப்புகளோடு திரு. தேவு கொடுத்தால் எடுகோளைப் பார்க்க ஏந்தாக இருக்கும்.
பொதுவாக இரண்டாம் வழிப்பட்ட பரப்புரைக் கட்டுரைகளைக் கொண்டு அடித்துச் சொல்லுவது நம்மை வழுக்கிவிடும். [அதே பொழுது, குடும்ப என்ற சொல் சந்தோக்ய உபநிடதம் தொடங்கி, பின் ஆபஸ்தம்ப தர்மசூத்ரம், மனுஸ்மிர்தி ஆகியவற்றில் ஆளப் படுவதாகத்தான் மோனியர் வில்லியம்சு அகரமுதலி குறிப்பிடுகிறது.]
மனு ஸ்மிர்தி முதல் நூற்றாண்டு நூலென்றே பெரும்பாலோர் கருதுகிறார். ஹிதோபதேசம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அளவில் எழுந்த, கதைகள் நிரம்பிய, நூல். பஞ்சதந்திரம் பல்வேறு காலப்பட்டது. அதன் தொடக்கம் புத்தருக்கும் முற்பட்டது என்பார். வேதநெறி பயிலாத (ஆசீவகம், சைனம், புத்தம் போன்ற) மாற்று நெறியாளரிடம் பெரிதும் புழங்கியவை பஞ்சதந்திரக் கதைகள். தொடக்ககாலத்தில் அவற்றைப் பயன்படுத்த வேதநெறி தயங்கியது. பின், நெடுங்காலம் கழித்தே, வேதநெறி தன் பரப்புரைகளில் ஒருசில பஞ்சதந்திரக் கதைகளைப் பயன்படுத்தியது. உபநிடதங்கள் கி.மு.800 தொடங்கி புத்தருக்கும் அப்புறம் கி.மு.400 வரைக்கும் எழுதப் பட்டிருக்கலாம் என்றே வரலாற்று ஆய்வாளர் சொல்கிறார்.
குடும்பம் என்ற சொல் சில வடநூல்களில் ஆளப்படுவதாலேயே அதை வடசொல்லென அறுதியிட்டுச் சொல்லமுடியாது. குடும்பம் என்ற சொல்லின் வேர், அந்த வேரடியில் பிறந்த மற்ற சொற்கள், அச்சொற்களின் வளர்ச்சி, அவற்றின் சொற்கூறுகள், சொற்கள் அமையும் பாங்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டால், அப்படி அறுதியாய்ச் சொல்ல முடியாது. [குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மையைக் கீழே நிறுவுவேன்.]
பொதுவாக, நாவலந்தீவு தழுவிய பழந்தமிழின் விரிவை ஏதோ காரணங் கருதி மறுத்து (குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட காலமும் ஒன்று இருந்தது, அது பல்வேறு காரணங்களால் மாலவன் குன்றத்திற்கும் கீழே சுருங்கியது.), ”வேதநெறிக்கும், மாற்று நெறிகளுக்கும் இடையே நடந்த தருக்கப் போராட்டத்தில் பல்வேறு சமய நெறியாளரும் அங்கும் இங்குமாய் ஓடி, முடிவில் தற்காப்பிற்காகத் தெற்கு நோக்கி பெருமளவில் வந்ததையும், குறிப்பாக வேதநெறியாளர் இரண்டு மூன்று அலைகளாய் ஓடி வந்ததையும் புறந்தள்ளி, [காண்க: பார்ப்பனரில் உள்ள பெருங்கணம் (ப்ருஹச்சரணம்), வடமர் போன்ற கூட்ட உட்பிரிவுகள்; தமிழக, இந்தியவரலாற்றில் ஒரு குறித்த பகுதி; ஆய்வுசெய்யாமல் அழிந்து கொண்டு உள்ளது. ”வரலாற்றுத் திருத்தங்கள்” தங்களுக்கு இடைஞ்சலானவற்றை மறைத்து அழித்துக் கொண்டுள்ளன.], பல சங்கத நூல்கள் தெற்கிருந்தே எழுதப் பட்டன என்பதையும் புரிந்து கொள்ள மறுத்து, வன்கண் வழக்குச் செய்வதாலேயே, பலரும் வேதகாலத்தில் சிறிதளவும், உபநிடதக் காலத்தில் பேரளவும் தமிழ்ச் சொற்கள் சங்கதத்துள் நுழைந்து ஆட்சி செய்திருக்க வாய்ப்புக்களுண்டு என்பதை மறுக்கிறார். [அப்புறம் காழ்ப்பு காழ்ப்பு என்று சொல்லுவதில் பொருளென்ன உள்ளது?] சிந்தனை மாற்றங்கள் ஏற்படாமல், ஒருபக்கமாகவே எண்ணிக் கொண்டிருந்தால், மொழியாய்விற்கு வடக்கு மட்டுமே வாசலென முட்டிக்கொள்ள வேண்டியது தான். மற்ற வாசல்களைத் திறந்தால் என்ன, குடி முழுகியா போய்விடும்? புதுக் காற்று தென்றலாய் வந்து அடிக்கட்டுமே?
அன்புடன்,
இராம.கி.
Sunday, November 30, 2008
ஒட்டியாணம் - 4
”யா! ஒருவேர்ச்சொல் விளக்கம்” என்ற தலைப்பில், தமிழ்ச்சொற்களின் பிறப்பு பற்றி அறிய விழையும் பலரும் படிக்க வேண்டியதொரு பொத்தகமே எழுதினார் சொல்லாய்வறிஞர் அருளி. யா - என்னும் வேர்ச்சொல்லுக்கு கருமைப் பொருளும், பொருந்தற் பொருளும், வினாப் பொருளும் சொல்லி அந்தப் பொருட்பாடுகளை உணர்த்தும் பல்வேறு சொற்பிறப்புகளையும் அதில் தருக்கித்து நிறுவியிருப்பார். கூடவே பல சொற்களில் யா>ஞா>நா என்ற ஒலித்திரிவு
நடந்திருப்பதையும் பெருஞ்சான்றுகளோடு அவர் எடுத்துக் காட்டியிருப்பார். அந்தப் பொத்தகத்தின் வீச்சு மிக அருமையானது; தெளிவு தரக்கூடியது.
அவர் கூற்றுப்படி, இய் என்னும் அடிவேரில் இருந்து யா என்னும் பெரு வேர் பொருந்தற் கருத்தில் உருவாகுமாம். இயைதல்>இசைதல், இயைதல்>இழைதல், யாத்தல், யாக்கை, யாழ், ஆப்பு, ஆவம், ஆவித்தல், ஆவல்,
ஆவணம், ஆசு, ஆசை, நார், நரம்பு, ஆத்தி, ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம், ஆணை, ஆம், யாண் (=கவின், அழகு), யாணர், யானம் (=ஊர்தி), ஆடை, ஆம்பல், ஆமை போன்ற சொற்களையும், இவற்றோடு
சேர்ந்த மற்ற சொற்களையும் அந்தப் பொத்தகத்தில் அருளி விவரித்திருப்பார். இங்கு நாம் காண விழைவது பொருந்தற் கருத்து மட்டுமே என்பதால், அவர் பொத்தகத்தில் இருந்து ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம் என்ற
சொற்களின் பிறப்புக்களை மட்டுமே இங்கு விவரிக்க முற்படுகிறேன். [பெரும்பாலும் அவருடைய வாசகங்களையே இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். சில இடங்களில் என்னுடைய வாசகங்களும் இடையிடையே உண்டு.]
யா - த்தல் என்னும் வினை பொருத்துதல், சேர்த்தல், கட்டுதல், தைத்தல் என்று பலவாறாய் விரிந்த பொருட்பாடுகளைக் காட்டும். தமிழ் இலக்கணத்தில் யாப்பு என்று சொல்கிறோமே, அதுகூட ஒரு கட்டுத் தான். சொற்கட்டு; அடிக்கட்டு; பாக் கட்டு எனப் பல்வேறு அணிகளை அது காட்டும். இனி விளக்கங்களுக்கு வருவோம்.
யாத்தல் என்னும் வினையின் கீழ்ப் பிறக்கும் சொல் யாணி>ஆணி. இது யா>யாஅண்> யாண்> யாண்+இ> யாணி> ஆணி என்று உருவாகும். இரு பொருள்களை இறுகப் பிணைப்பதற்காக அடிக்கப் பெறும் தைப்புப் பொருள் ஆணியாகும். ஆணி தைத்தல் என்னும் வழக்கு, இரு பொருள்களை ஒன்றுடனொன்று பொருத்துதற்கான
ஆணியடித்தலைக் குறிப்பதாகும். மரப்பலகைகளை ஒன்றோடு ஒன்றாகப் பொருந்தச் செய்வதற்குப் பயன்பெற்ற செறிப்புறுப்பு (யாண்>) யாணி என்னப் பெற்று, பின் ஆணி என்றவாறு செப்ப வடிவுற்றது. மரப்பலகைகளை ஒன்றோடொன்றாகப் பிணித்துக் கட்டில் முதலியவற்றை உருவாக்கும் தச்சர் “யாணர்” என்று அழைக்கப்
பெற்றமையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.
ஆணியின் பிறப்பைத் தெரிவித்து, பின் அதன் வழிப்பொருள்களான இரும்பாணி, சுள்ளாணி, கடையாணி, யாழின் உறுப்பாகிய மரவாணி, எழுத்தாணி, பொன்னின் மாற்று அறியக் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்க்கப் பயன்பெறும் உரையாணி, தீயைத் தூண்டப் பயன்படும் சூட்டுக்கோல் ஆணி, நுகத்தின் நடுவில் அமையும் பகலாணி, துலையாணி, முறுக்காணி, உரலாணி (=உலக்கை), திருகாணி, வரிச்சாணி, வரிச்சலாணி, வலிச்சலாணி, கட்டாணி, வேம்பாணி, கையாணி, குடையாணி, சடையாணி, குமிழாணி, கூராணி எனப் பல ஆணிகளை திரு. அருளி விவரித்திருப்பார். கூடவே
ஆணி என்ற பயன்பாடு சங்கதம், பாலி, ஒரியா, மராத்தியில் அப்படியே இருப்பதையும், ஆனி என்று வங்காளியில் புழங்குவதையும், அவர் காட்டியிருப்பார்.
அவர் காட்டும் அடுத்த சொல் யா> யாஅண்> யாண்> ஞாண் ஆகும். இது கட்டுக்கயிறு என்னும் பொருளில் “திண்ஞாண் எழினி வாங்கிய” [முல்லை: 63] என்ற பயன்பாட்டிலும், வில்லின் நாண் என்ற பொருளில் “சாப நோன் ஞாண்” [புறம் 1:49] என்ற பயன்பாட்டிலும் வருவதை எடுத்துக் காட்டுவார். இனி, அரைஞாண் என்பது அரையில் கட்டுங் கயிறு, அரையணி [பிங்] என்று புழங்குவதைக் கூறி அரைஞாண் கயிறு என்னுங் கூட்டுச் சொல் “அண்ணாக் கயிறு” என்னும் வடிவில், கடுங்கொச்சைத் தொகுத்தல் திரிபாக இக்காலப் பேச்சு வழக்கில் பயிலப் பெறுவதையும் சுட்டுவார்.
{அரைஞாண் என்பதும் உடைஞாண்/ஒட்டியாண் என்பதும் மிக நெருங்கிய பொருட்பாடு கொண்ட சொற்கள். ஒன்று கயிறு, இன்னொன்று அணிகலன். அவ்வளவுதான் வேறுபாடு. -இராம.கி}
ஞாண்>நாண் என்னும் திரிவில் கயிறு என்னும் பொருளில் “மரப்பாவை நாணால் உயிர் மருட்டிற்று” - குறள் 1020” என்று வருவதையும், வில்லின் நாண் என்னும் பொருளில் “வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் - கலி: 15:2 என்று
வருவதையும் நோக்கலாம். தவிர, அரைஞாண் பொருளில் “நாணும் அரைத்தொடரும்” என்ற வகையில் திவ்யப் பெரியாழ்வார் 1,2,4 - -இலும், மங்கலக் கயிறு என்னும் பொருளில் “ உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம் என்றான்” - கம்பர். நகர் நீங்கு:49 - இலும், நாண்>நாணி என்ற திரிவில வில்லின் நாண் என்னும் பொருளில் ”நாணியிற் கோலொன்றினால் - தேவா: 616:4” - இலும் வருகின்றன. தமிழிய மொழிகள் சிலவற்றில் ஞாண் (மலையாளம்), நூணி (=கயிறு; பெட்ட குருள), நொண் (தோடா), நேணு (கன்னடம்), நேண, நேணு (துளு),
நோனே (கோண்டி), நானு (a sort of necklace, தெலுங்கு), நோணொ (குவி) என்று இந்தச் சொல் அமைந்திருக்கிறது.
ஞாணுக்கு அடுத்த சொல் ஞாண்+அல்>ஞாணல்>நாணல் என்று அமையும் சொல். இது கட்டுக்கயிறு போன்ற தோற்றமுடைய புல், நாணற் புல், நாணற் கோரை என்ற பயன்பாடுகளையும், நாணல் (மலையாளம், கன்னடம்), நாஞ்சி (=Bambusa arundinacea, கோண்டி) என்ற பயன்பாடுகள் மற்ற தமிழிய மொழிகளில இருப்பதையும் நோக்கலாம். [நாணலைப் பற்றியும், அதை வைத்துத் தெப்பம் படகு கட்டியதையும் பின்னால் எழுத வேண்டும். அது ஒரு பெரிய ஆய்வு. எகிப்திய, சுமேரிய, சிந்து வெளி நாகரிகங்கள் ஆகிய எல்லாமே இந்த நாணற் படகில் இருந்தே தங்கள் நீர்வழிப் போக்குவரத்துகளைத் தொடங்கியிருக்கிறார்கள். நார்வேக்காரரான தோர் அயர்தால் இது பற்றிய விவரிப்பு நூல்களை
எழுதியிருக்கிறார்.]
அடுத்த சொற்கள் சாணம், சாணான், சணல் போன்றவையாகும்.
யாண்> யாண்+அம்> யாணம்> சாணம் [யகர - சகரத் திரிபு]; சாணம் = நாரால் ஆகிய
பொருள் [நன்னூல்: 266, மயிலைநாதர்], கட்டுக் கயிறு
சாணம் = சணற் கயிறு “ இறுக்கிய சாணமும் கட்டின கச்சும்” [ திவ்யப். திருநெடுந்: 21 வியாக்: பக்:170]
யாண்+அன்>யாணன்>சாணன் = கயிறு அல்லது நாரினைக் கொண்டு மரமேறிக கள்ளிறக்குநன்.
சாணன்>சாணான் [உயிரிசைவு மாற்றம்]
[குறிப்பு: தமிழகத் தொழிற் குலங்களுக்கிடையில் உயர்வு - தாழ்வு கற்பித்துக் கொண்டு இயங்கிய இடைக்கால மடத்தனப் போக்குக்கு எதிராகத் தம் தொழிற்குலப் பெயருக்கு ஏற்றம் தந்து கொள்ளும் முயற்சியாகவே அத்தொழில்
வகுப்பினர் “சான்றான் = (பண்பு நலங்கள் நிறைந்தோன்)” என்றவாறு ஒரு போன்மை ஒலிப்பீட்டினைக் கொண்டு தம்மைக் குறித்துக் கொள்வாராயினர் [காண்க: சான்றார் = சாணார் “சான்றான் மாட்டு மேனிப் பொன்னும்” - T.A.S. II, 67] [சான்றான் என்னும் சொல் சாணான் என்றவாறு திரிபடையவே அடையாது. இரண்டும் தனித்தனிச் சொற்கள். சாணார் என்றவாறு அத்தொழிற் குலத்தவரைக் குறிப்பிடுகையில் அக்குறிப்பீட்டை இழிவாகக் கருதுபவரும், அல்லது
பயன்படுத்துபவரும், அவர் எவராயினும் அன்னார் குமுக நல எதிரியரும், இழிஞரும், மாந்த நேயமற்ற மடையருமே ஆவர்.]
இனிச் சணல் என்னும் வளர்ச்சியைப் பார்ப்போம்.
யாண்> யாண்+அல்> யாணல்> சாணல்> சணல் = நார்ச்செடி வகை (sunn - hemp, Crotalaria juncea), அந்த நார்ச்செடியினின்று பிரிந்தெடுத்த கயிறு.
யாணம்> சாணம்> சணம் [நெடுமுதற் குறுகல்] = சணல் (மூலிகை அக.)
சணம் + பு = சணம்பு = சணல் “சணம்போடு பருத்தி” (காசிகண்டம் - பிரமச: 14)
சணம்பு> சணப்பு = சணல் (பதார்த்த. குண. 250)
சணப்பு + ஐ > சணப்பை = சணல்,
சணப்பை + நார் = சணப்பைநார் = சணல்நார் (Janapanaara - தெலுங்கு)
சணப்பு + அன் = சணப்பன் = சணலினின்று நாரெடுக்கும் தொழிற் குலத்தான் "சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது” என்பது ஒரு தமிழ்ச் சொலவடை; பழமொழி!
சணம்> (Sanskrit) s'aNa = சணல்; s'aNaka = சணல்
சணல் என்னும் சணப்ப நாரைக் குறித்து மக்கள் வழங்கிய சொல், பொருந்துதற் கருத்து வேர் வழியில் தோன்றியமைக்குச் சான்றாகச் சணலைக் குறித்து ஆங்கிலத்தில் வழங்கும் Jute என்னும் சொல்லின் தோற்ற வரலாற்றையும் ஓர் ஒப்பு நோக்குக்காகக் காணுதலும் இவ்விடத்தில் தெளிவுக்கு வழி வகுப்பதாகும்.
அடு> அடு+ஐ> அடை = பொருந்து, சேர், சேர்ந்திறுகு
அடை> சடை = கற்றை, செறிவு, கற்றையாக அமைந்த மயிர்முடி, அடர்ந்த மயிர் “விரிசடைப் பொறையூழ்ந்து” பரிபா: 9:5, பின்னிய கூந்தல் (பிங்) சடை + முடி > சடை முடி = முடியாகப் புனைந்த சடைமயிர் “புன்மயிர்ச்
சடைமுடிப் புலரா உடுக்கை” [சிலம்பு:25:126] சடை> (Sanskrit) Jataa = matted hair
சடை என்னும் தூய செந்தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் Jataa என்றவாறு திரிபெய்தி நிலைத்தபின் Juuta என்றவொரு வடிவம் புடை கொண்டது. பதப்படுத்தி அடித்துப் பிரிக்கும் நிலையில் சடை போன்ற தோற்ற அமைப்பில் இருந்த சணல்
நார்க் கற்றையை வங்காளியர் Jhoota என்றவாறு குறிக்கத் தொடங்கினர். இச்சொல் Juuta என்ற சமற்கிருதச் சொல்லினின்று தோன்றியதாகும். இது பின் Jute என்ற திரிப்பமைப்பில் ஆங்கில மொழிக்கண் உலகெங்கணும் பரவியது. இவ்வனைத்திற்கும் அடிப்படை தமிழ்ச்சொல்லாகிய சடை என்பதுவே. [Jute = fibre from bark of East Indian plants of genus Corchorus used for sacking, mats, cords etc.. f. Bengali Jhoto, fr.Skr.Juuta = Jataa = braid of
hair} C.O.D.
அடுத்த சொல் யாணம். இது யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் என்று விரியும். பின்னால் யாணம்>ஆணம் என்றும் விரியும்.உள்ளக்கட்டு, அன்பு, விருப்பம் [”ஆணம் சான்ற அறிவர்” - தொல்.பொருள்:491 இளம், “ஆணமில் பொருள் எமக்கு” - கலி: கடவுள்:17, “ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்கு” - நாலடி:374, “புரிவு ஆணம்
நேயமும் பேர்” - சூடா.நி. 8:33] என்ற பொருளையும், பற்றுக்கோடு [”தேவரை ஆணமென்று அடைந்து” - திருமழிசை - திருச்சந்: 69] என்ற பொருளையும், அரணம், காப்பு [என் மம்மர் வெந்நோய்க்கு ஆணமாகிய ஆயிழை” - பெருங்: 3,22, 57-58 என்ற பொருளையும், கூட்டு, குழம்பு [”ஆணம் குழம்பு ஆம்” - பிங்.நி:1124, ஆமை அவியல் ஆணம் கண்டறியோம்” - திருவ. சித்து:66] என்ற பொருளையும் இன்னும் கஞ்சி, மணமுள்ள கூட்டுப்பொருள், காட்டுக் கறி என்ற பொருள்களையும்
காட்டுவார்.
{சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெந்தாணம்>வெந்தணம்>வெஞ்சணம் என்ற சொல்லால் கூட்டு, அவியல், பொரியல் எனச் சோற்றோடு சேர்த்துச் சாப்பிடும் மரக்கறி உணவைக் குறிப்பார்கள். “இன்றையச் சாப்பாட்டுக்கு வெஞ்சணம் என்ன?” - இராம.கி.}
அடுத்தது கட்டு என்னும் பொருள் கொண்ட யாணம். யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் = கட்டு
கலி + யாணம்> கலியாணம் = ஆரவாரத்தோடு கூடிய புதிய மண இணையரைக் கட்டுவிக்கும் மங்கல நிகழ்வு விழா.
{நான் இந்தச் சொல்லில் அருளியிடம் இருந்து வேறுபடுவேன். கலித்தல் = கூடுதல், புணருதல். கலவி என்ற சொல் ஆண், பெண் புணர்ச்சியைக் குறிக்கும் சொல். குலவு>கலவு>களவு என்ற சொல்லும் அதைக் குறிப்பதே. களவு என்பது
பெற்றோர் அறியாமல் கள்ளத்தனமாகக் காதலிப்பது என்று பலரும் பொருள கொள்ளுகிறார்கள். அதைக் காட்டிலும் கூடுதல் பொருள் மிகச் சரியாகப் பொருந்தும். கலியாணம் = கலிப்பதற்காக ஏற்படும் கட்டு என்பதே நான் கொள்ளும்
சொற்பிறப்பு. கலிகட்டு என்னும் சொல் திரிந்து கால்கட்டு என்று இன்றையப பேச்சு வழக்கில் இருப்பதைப் புரிந்து கொண்டால் கலியாணம் முற்றிலும் தமிழே என்பதை உணர்ந்து கொள்ளலாம். கலித்தல், யாத்தல் என்ற இரு வினைச்சொற்கள் இந்தக் கூட்டுச் சொல்லின் உள்ளே இருக்கின்றன. ”கல்யாண” என்ற சொல்லுக்குத் திருமணம் என்ற பொருள் மோனியர் வில்லியம்சு வடமொழி அகராதியில் கிடையாது. “கல்யாண குணங்கள்” என்ற பயன்பாட்டில் வரும் “நல்ல” என்றே பொருளே அதில் கூறப்பட்டிருக்கிறது. எனவே வடமொழிக் கல்யாணம் என்பது வேறு, தமிழ்க் கலியாணம் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொண்டு “கலியாணம்” வடமொழிச்சொல் என்றே புரிந்து கொண்டு தொங்குகிறவர்களை என்ன சொல்வது, போங்கள்? அந்தளவிற்கு நம்மிடையே வடமொழித் தாக்கம் இருக்கிறது என்று மட்டுமே சொல்லுகிறேன். கால்கட்டு என்ற திரிவுச் சொல்லைப் பார்த்த பிறகாவது கலியாணம் தமிழ் என்று புரிய வேண்டாமா? - இராம.கி.}
அடுத்து ஒட்டியாணம் என்ற சொல்லை ”இடையை உள்ளொடுங்குமாறு ஒட்டிக் காட்டும் அரைவளை, அரையணி ஒட்டியாணம்” என்று அருளியார் எடுத்துக் காட்டுவார். அது பற்றி இந்தக் கட்டுரைத் தொடர் நெடுகிலும் நான் பேசியாகிவிட்டது. ஒட்டி யாணம் என்னும் கூட்டுச் சொல் முற்றிலும் தமிழ் என்பதே சரி. இதை வடசொல்
என்று சொல்லுகிறவர்கள் மேலோட்டமாய்ச் சொல்லுகிறார்கள். கேள்வி கேட்பவரில்லாமல், நாட்டுப்புறங்களில் “இன்னார் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்” என்று என்று அமைந்து விடுவது போல எத்தனை காலம் தாம் மற்றோர் அடங்கி நிற்பது? என்றோ ஒரு நாள் எழுந்து நின்று மறுக்க முற்பட்டால், நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் பாடுபட வேண்டியிருக்கும் போது, சலித்துப் போகிறது. அந்தளவிற்கு அடிமைத்தனம் நம்மிடையே ஊறிக் கிடக்கிறது. இப்பொழுது ஒட்டியாணம், இன்னும் அடுத்துக் குடும்பம்...... இப்படி நீண்டு கொண்டே போகும். நல்ல பிழைப்புப் போங்கள் :-).
அன்புடன்,
இராம.கி.
நடந்திருப்பதையும் பெருஞ்சான்றுகளோடு அவர் எடுத்துக் காட்டியிருப்பார். அந்தப் பொத்தகத்தின் வீச்சு மிக அருமையானது; தெளிவு தரக்கூடியது.
அவர் கூற்றுப்படி, இய் என்னும் அடிவேரில் இருந்து யா என்னும் பெரு வேர் பொருந்தற் கருத்தில் உருவாகுமாம். இயைதல்>இசைதல், இயைதல்>இழைதல், யாத்தல், யாக்கை, யாழ், ஆப்பு, ஆவம், ஆவித்தல், ஆவல்,
ஆவணம், ஆசு, ஆசை, நார், நரம்பு, ஆத்தி, ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம், ஆணை, ஆம், யாண் (=கவின், அழகு), யாணர், யானம் (=ஊர்தி), ஆடை, ஆம்பல், ஆமை போன்ற சொற்களையும், இவற்றோடு
சேர்ந்த மற்ற சொற்களையும் அந்தப் பொத்தகத்தில் அருளி விவரித்திருப்பார். இங்கு நாம் காண விழைவது பொருந்தற் கருத்து மட்டுமே என்பதால், அவர் பொத்தகத்தில் இருந்து ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம் என்ற
சொற்களின் பிறப்புக்களை மட்டுமே இங்கு விவரிக்க முற்படுகிறேன். [பெரும்பாலும் அவருடைய வாசகங்களையே இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். சில இடங்களில் என்னுடைய வாசகங்களும் இடையிடையே உண்டு.]
யா - த்தல் என்னும் வினை பொருத்துதல், சேர்த்தல், கட்டுதல், தைத்தல் என்று பலவாறாய் விரிந்த பொருட்பாடுகளைக் காட்டும். தமிழ் இலக்கணத்தில் யாப்பு என்று சொல்கிறோமே, அதுகூட ஒரு கட்டுத் தான். சொற்கட்டு; அடிக்கட்டு; பாக் கட்டு எனப் பல்வேறு அணிகளை அது காட்டும். இனி விளக்கங்களுக்கு வருவோம்.
யாத்தல் என்னும் வினையின் கீழ்ப் பிறக்கும் சொல் யாணி>ஆணி. இது யா>யாஅண்> யாண்> யாண்+இ> யாணி> ஆணி என்று உருவாகும். இரு பொருள்களை இறுகப் பிணைப்பதற்காக அடிக்கப் பெறும் தைப்புப் பொருள் ஆணியாகும். ஆணி தைத்தல் என்னும் வழக்கு, இரு பொருள்களை ஒன்றுடனொன்று பொருத்துதற்கான
ஆணியடித்தலைக் குறிப்பதாகும். மரப்பலகைகளை ஒன்றோடு ஒன்றாகப் பொருந்தச் செய்வதற்குப் பயன்பெற்ற செறிப்புறுப்பு (யாண்>) யாணி என்னப் பெற்று, பின் ஆணி என்றவாறு செப்ப வடிவுற்றது. மரப்பலகைகளை ஒன்றோடொன்றாகப் பிணித்துக் கட்டில் முதலியவற்றை உருவாக்கும் தச்சர் “யாணர்” என்று அழைக்கப்
பெற்றமையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.
ஆணியின் பிறப்பைத் தெரிவித்து, பின் அதன் வழிப்பொருள்களான இரும்பாணி, சுள்ளாணி, கடையாணி, யாழின் உறுப்பாகிய மரவாணி, எழுத்தாணி, பொன்னின் மாற்று அறியக் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்க்கப் பயன்பெறும் உரையாணி, தீயைத் தூண்டப் பயன்படும் சூட்டுக்கோல் ஆணி, நுகத்தின் நடுவில் அமையும் பகலாணி, துலையாணி, முறுக்காணி, உரலாணி (=உலக்கை), திருகாணி, வரிச்சாணி, வரிச்சலாணி, வலிச்சலாணி, கட்டாணி, வேம்பாணி, கையாணி, குடையாணி, சடையாணி, குமிழாணி, கூராணி எனப் பல ஆணிகளை திரு. அருளி விவரித்திருப்பார். கூடவே
ஆணி என்ற பயன்பாடு சங்கதம், பாலி, ஒரியா, மராத்தியில் அப்படியே இருப்பதையும், ஆனி என்று வங்காளியில் புழங்குவதையும், அவர் காட்டியிருப்பார்.
அவர் காட்டும் அடுத்த சொல் யா> யாஅண்> யாண்> ஞாண் ஆகும். இது கட்டுக்கயிறு என்னும் பொருளில் “திண்ஞாண் எழினி வாங்கிய” [முல்லை: 63] என்ற பயன்பாட்டிலும், வில்லின் நாண் என்ற பொருளில் “சாப நோன் ஞாண்” [புறம் 1:49] என்ற பயன்பாட்டிலும் வருவதை எடுத்துக் காட்டுவார். இனி, அரைஞாண் என்பது அரையில் கட்டுங் கயிறு, அரையணி [பிங்] என்று புழங்குவதைக் கூறி அரைஞாண் கயிறு என்னுங் கூட்டுச் சொல் “அண்ணாக் கயிறு” என்னும் வடிவில், கடுங்கொச்சைத் தொகுத்தல் திரிபாக இக்காலப் பேச்சு வழக்கில் பயிலப் பெறுவதையும் சுட்டுவார்.
{அரைஞாண் என்பதும் உடைஞாண்/ஒட்டியாண் என்பதும் மிக நெருங்கிய பொருட்பாடு கொண்ட சொற்கள். ஒன்று கயிறு, இன்னொன்று அணிகலன். அவ்வளவுதான் வேறுபாடு. -இராம.கி}
ஞாண்>நாண் என்னும் திரிவில் கயிறு என்னும் பொருளில் “மரப்பாவை நாணால் உயிர் மருட்டிற்று” - குறள் 1020” என்று வருவதையும், வில்லின் நாண் என்னும் பொருளில் “வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் - கலி: 15:2 என்று
வருவதையும் நோக்கலாம். தவிர, அரைஞாண் பொருளில் “நாணும் அரைத்தொடரும்” என்ற வகையில் திவ்யப் பெரியாழ்வார் 1,2,4 - -இலும், மங்கலக் கயிறு என்னும் பொருளில் “ உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம் என்றான்” - கம்பர். நகர் நீங்கு:49 - இலும், நாண்>நாணி என்ற திரிவில வில்லின் நாண் என்னும் பொருளில் ”நாணியிற் கோலொன்றினால் - தேவா: 616:4” - இலும் வருகின்றன. தமிழிய மொழிகள் சிலவற்றில் ஞாண் (மலையாளம்), நூணி (=கயிறு; பெட்ட குருள), நொண் (தோடா), நேணு (கன்னடம்), நேண, நேணு (துளு),
நோனே (கோண்டி), நானு (a sort of necklace, தெலுங்கு), நோணொ (குவி) என்று இந்தச் சொல் அமைந்திருக்கிறது.
ஞாணுக்கு அடுத்த சொல் ஞாண்+அல்>ஞாணல்>நாணல் என்று அமையும் சொல். இது கட்டுக்கயிறு போன்ற தோற்றமுடைய புல், நாணற் புல், நாணற் கோரை என்ற பயன்பாடுகளையும், நாணல் (மலையாளம், கன்னடம்), நாஞ்சி (=Bambusa arundinacea, கோண்டி) என்ற பயன்பாடுகள் மற்ற தமிழிய மொழிகளில இருப்பதையும் நோக்கலாம். [நாணலைப் பற்றியும், அதை வைத்துத் தெப்பம் படகு கட்டியதையும் பின்னால் எழுத வேண்டும். அது ஒரு பெரிய ஆய்வு. எகிப்திய, சுமேரிய, சிந்து வெளி நாகரிகங்கள் ஆகிய எல்லாமே இந்த நாணற் படகில் இருந்தே தங்கள் நீர்வழிப் போக்குவரத்துகளைத் தொடங்கியிருக்கிறார்கள். நார்வேக்காரரான தோர் அயர்தால் இது பற்றிய விவரிப்பு நூல்களை
எழுதியிருக்கிறார்.]
அடுத்த சொற்கள் சாணம், சாணான், சணல் போன்றவையாகும்.
யாண்> யாண்+அம்> யாணம்> சாணம் [யகர - சகரத் திரிபு]; சாணம் = நாரால் ஆகிய
பொருள் [நன்னூல்: 266, மயிலைநாதர்], கட்டுக் கயிறு
சாணம் = சணற் கயிறு “ இறுக்கிய சாணமும் கட்டின கச்சும்” [ திவ்யப். திருநெடுந்: 21 வியாக்: பக்:170]
யாண்+அன்>யாணன்>சாணன் = கயிறு அல்லது நாரினைக் கொண்டு மரமேறிக கள்ளிறக்குநன்.
சாணன்>சாணான் [உயிரிசைவு மாற்றம்]
[குறிப்பு: தமிழகத் தொழிற் குலங்களுக்கிடையில் உயர்வு - தாழ்வு கற்பித்துக் கொண்டு இயங்கிய இடைக்கால மடத்தனப் போக்குக்கு எதிராகத் தம் தொழிற்குலப் பெயருக்கு ஏற்றம் தந்து கொள்ளும் முயற்சியாகவே அத்தொழில்
வகுப்பினர் “சான்றான் = (பண்பு நலங்கள் நிறைந்தோன்)” என்றவாறு ஒரு போன்மை ஒலிப்பீட்டினைக் கொண்டு தம்மைக் குறித்துக் கொள்வாராயினர் [காண்க: சான்றார் = சாணார் “சான்றான் மாட்டு மேனிப் பொன்னும்” - T.A.S. II, 67] [சான்றான் என்னும் சொல் சாணான் என்றவாறு திரிபடையவே அடையாது. இரண்டும் தனித்தனிச் சொற்கள். சாணார் என்றவாறு அத்தொழிற் குலத்தவரைக் குறிப்பிடுகையில் அக்குறிப்பீட்டை இழிவாகக் கருதுபவரும், அல்லது
பயன்படுத்துபவரும், அவர் எவராயினும் அன்னார் குமுக நல எதிரியரும், இழிஞரும், மாந்த நேயமற்ற மடையருமே ஆவர்.]
இனிச் சணல் என்னும் வளர்ச்சியைப் பார்ப்போம்.
யாண்> யாண்+அல்> யாணல்> சாணல்> சணல் = நார்ச்செடி வகை (sunn - hemp, Crotalaria juncea), அந்த நார்ச்செடியினின்று பிரிந்தெடுத்த கயிறு.
யாணம்> சாணம்> சணம் [நெடுமுதற் குறுகல்] = சணல் (மூலிகை அக.)
சணம் + பு = சணம்பு = சணல் “சணம்போடு பருத்தி” (காசிகண்டம் - பிரமச: 14)
சணம்பு> சணப்பு = சணல் (பதார்த்த. குண. 250)
சணப்பு + ஐ > சணப்பை = சணல்,
சணப்பை + நார் = சணப்பைநார் = சணல்நார் (Janapanaara - தெலுங்கு)
சணப்பு + அன் = சணப்பன் = சணலினின்று நாரெடுக்கும் தொழிற் குலத்தான் "சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது” என்பது ஒரு தமிழ்ச் சொலவடை; பழமொழி!
சணம்> (Sanskrit) s'aNa = சணல்; s'aNaka = சணல்
சணல் என்னும் சணப்ப நாரைக் குறித்து மக்கள் வழங்கிய சொல், பொருந்துதற் கருத்து வேர் வழியில் தோன்றியமைக்குச் சான்றாகச் சணலைக் குறித்து ஆங்கிலத்தில் வழங்கும் Jute என்னும் சொல்லின் தோற்ற வரலாற்றையும் ஓர் ஒப்பு நோக்குக்காகக் காணுதலும் இவ்விடத்தில் தெளிவுக்கு வழி வகுப்பதாகும்.
அடு> அடு+ஐ> அடை = பொருந்து, சேர், சேர்ந்திறுகு
அடை> சடை = கற்றை, செறிவு, கற்றையாக அமைந்த மயிர்முடி, அடர்ந்த மயிர் “விரிசடைப் பொறையூழ்ந்து” பரிபா: 9:5, பின்னிய கூந்தல் (பிங்) சடை + முடி > சடை முடி = முடியாகப் புனைந்த சடைமயிர் “புன்மயிர்ச்
சடைமுடிப் புலரா உடுக்கை” [சிலம்பு:25:126] சடை> (Sanskrit) Jataa = matted hair
சடை என்னும் தூய செந்தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் Jataa என்றவாறு திரிபெய்தி நிலைத்தபின் Juuta என்றவொரு வடிவம் புடை கொண்டது. பதப்படுத்தி அடித்துப் பிரிக்கும் நிலையில் சடை போன்ற தோற்ற அமைப்பில் இருந்த சணல்
நார்க் கற்றையை வங்காளியர் Jhoota என்றவாறு குறிக்கத் தொடங்கினர். இச்சொல் Juuta என்ற சமற்கிருதச் சொல்லினின்று தோன்றியதாகும். இது பின் Jute என்ற திரிப்பமைப்பில் ஆங்கில மொழிக்கண் உலகெங்கணும் பரவியது. இவ்வனைத்திற்கும் அடிப்படை தமிழ்ச்சொல்லாகிய சடை என்பதுவே. [Jute = fibre from bark of East Indian plants of genus Corchorus used for sacking, mats, cords etc.. f. Bengali Jhoto, fr.Skr.Juuta = Jataa = braid of
hair} C.O.D.
அடுத்த சொல் யாணம். இது யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் என்று விரியும். பின்னால் யாணம்>ஆணம் என்றும் விரியும்.உள்ளக்கட்டு, அன்பு, விருப்பம் [”ஆணம் சான்ற அறிவர்” - தொல்.பொருள்:491 இளம், “ஆணமில் பொருள் எமக்கு” - கலி: கடவுள்:17, “ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்கு” - நாலடி:374, “புரிவு ஆணம்
நேயமும் பேர்” - சூடா.நி. 8:33] என்ற பொருளையும், பற்றுக்கோடு [”தேவரை ஆணமென்று அடைந்து” - திருமழிசை - திருச்சந்: 69] என்ற பொருளையும், அரணம், காப்பு [என் மம்மர் வெந்நோய்க்கு ஆணமாகிய ஆயிழை” - பெருங்: 3,22, 57-58 என்ற பொருளையும், கூட்டு, குழம்பு [”ஆணம் குழம்பு ஆம்” - பிங்.நி:1124, ஆமை அவியல் ஆணம் கண்டறியோம்” - திருவ. சித்து:66] என்ற பொருளையும் இன்னும் கஞ்சி, மணமுள்ள கூட்டுப்பொருள், காட்டுக் கறி என்ற பொருள்களையும்
காட்டுவார்.
{சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெந்தாணம்>வெந்தணம்>வெஞ்சணம் என்ற சொல்லால் கூட்டு, அவியல், பொரியல் எனச் சோற்றோடு சேர்த்துச் சாப்பிடும் மரக்கறி உணவைக் குறிப்பார்கள். “இன்றையச் சாப்பாட்டுக்கு வெஞ்சணம் என்ன?” - இராம.கி.}
அடுத்தது கட்டு என்னும் பொருள் கொண்ட யாணம். யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் = கட்டு
கலி + யாணம்> கலியாணம் = ஆரவாரத்தோடு கூடிய புதிய மண இணையரைக் கட்டுவிக்கும் மங்கல நிகழ்வு விழா.
{நான் இந்தச் சொல்லில் அருளியிடம் இருந்து வேறுபடுவேன். கலித்தல் = கூடுதல், புணருதல். கலவி என்ற சொல் ஆண், பெண் புணர்ச்சியைக் குறிக்கும் சொல். குலவு>கலவு>களவு என்ற சொல்லும் அதைக் குறிப்பதே. களவு என்பது
பெற்றோர் அறியாமல் கள்ளத்தனமாகக் காதலிப்பது என்று பலரும் பொருள கொள்ளுகிறார்கள். அதைக் காட்டிலும் கூடுதல் பொருள் மிகச் சரியாகப் பொருந்தும். கலியாணம் = கலிப்பதற்காக ஏற்படும் கட்டு என்பதே நான் கொள்ளும்
சொற்பிறப்பு. கலிகட்டு என்னும் சொல் திரிந்து கால்கட்டு என்று இன்றையப பேச்சு வழக்கில் இருப்பதைப் புரிந்து கொண்டால் கலியாணம் முற்றிலும் தமிழே என்பதை உணர்ந்து கொள்ளலாம். கலித்தல், யாத்தல் என்ற இரு வினைச்சொற்கள் இந்தக் கூட்டுச் சொல்லின் உள்ளே இருக்கின்றன. ”கல்யாண” என்ற சொல்லுக்குத் திருமணம் என்ற பொருள் மோனியர் வில்லியம்சு வடமொழி அகராதியில் கிடையாது. “கல்யாண குணங்கள்” என்ற பயன்பாட்டில் வரும் “நல்ல” என்றே பொருளே அதில் கூறப்பட்டிருக்கிறது. எனவே வடமொழிக் கல்யாணம் என்பது வேறு, தமிழ்க் கலியாணம் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொண்டு “கலியாணம்” வடமொழிச்சொல் என்றே புரிந்து கொண்டு தொங்குகிறவர்களை என்ன சொல்வது, போங்கள்? அந்தளவிற்கு நம்மிடையே வடமொழித் தாக்கம் இருக்கிறது என்று மட்டுமே சொல்லுகிறேன். கால்கட்டு என்ற திரிவுச் சொல்லைப் பார்த்த பிறகாவது கலியாணம் தமிழ் என்று புரிய வேண்டாமா? - இராம.கி.}
அடுத்து ஒட்டியாணம் என்ற சொல்லை ”இடையை உள்ளொடுங்குமாறு ஒட்டிக் காட்டும் அரைவளை, அரையணி ஒட்டியாணம்” என்று அருளியார் எடுத்துக் காட்டுவார். அது பற்றி இந்தக் கட்டுரைத் தொடர் நெடுகிலும் நான் பேசியாகிவிட்டது. ஒட்டி யாணம் என்னும் கூட்டுச் சொல் முற்றிலும் தமிழ் என்பதே சரி. இதை வடசொல்
என்று சொல்லுகிறவர்கள் மேலோட்டமாய்ச் சொல்லுகிறார்கள். கேள்வி கேட்பவரில்லாமல், நாட்டுப்புறங்களில் “இன்னார் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்” என்று என்று அமைந்து விடுவது போல எத்தனை காலம் தாம் மற்றோர் அடங்கி நிற்பது? என்றோ ஒரு நாள் எழுந்து நின்று மறுக்க முற்பட்டால், நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் பாடுபட வேண்டியிருக்கும் போது, சலித்துப் போகிறது. அந்தளவிற்கு அடிமைத்தனம் நம்மிடையே ஊறிக் கிடக்கிறது. இப்பொழுது ஒட்டியாணம், இன்னும் அடுத்துக் குடும்பம்...... இப்படி நீண்டு கொண்டே போகும். நல்ல பிழைப்புப் போங்கள் :-).
அன்புடன்,
இராம.கி.
Subscribe to:
Posts (Atom)