Thursday, September 04, 2003

காலங்கள் - 4

4. பொழுதுகளின் பொருளாழம்

ஒரு வினையை அல்லது விளையாட்டைத் தொடங்கும் போது, நாணயத்தைத் தூக்கிப் போட்டு "தலையா, பூவா" என்று பார்க்கிறோம் இல்லையா? இதில் ஒன்றை ஏற்பதும் மற்றொன்றை மறுப்பதும் வழக்கமானது தான். இந்தத் தலையா/பூவாப் பார்வை சிலபோதுகளில் நாம் புழங்கும் மொழியின் சொல்வடைகளுக்குக் கூட உண்டு. "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி" என்ற ஒரு சொலவடையை வாழ்த்துக் கூறும் முகமாகத் தமிழில் கேள்விப்பட்டிருக்கும் நீங்கள் அதன் இன்னொரு பக்கத்தை ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களோ? ஆலோ, அறுகோ மற்றொரு நிலத்திணையைத் தான் இருக்கும் புலத்திற்குள் வளரவிடாது என்ற கருத்தை எண்ணிப் பார்த்ததுண்டா? இந்த அளவுக்கு முற்றாளுமை கொண்ட நிலத்திணைகளை நிலத்தில் பதிய வைக்க முற்படும் முன்னர் சிந்தனை வேண்டாமா? ஆலின் நிழலில் மாவை நட முடியுமோ?

இப்படித் தழைத்து வேரோடும் முற்றாளுமை சில நாகரீகங்களுக்குக் கூட உண்டு. இவற்றை எங்கு நடவேண்டும், எப்படி நட வேண்டும் என்பதில் பல நேரம் நாம் கவனம் கொள்ளத் தவறி விடுகிறோம். இற்றைக் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் வளர்ந்துள்ள மேலை நாகரிகத்தின் தாக்கம் நல்லதா, கெட்டதா என்பதை உரையாட நான் இங்கு முற்பட வில்லை. ஆனால் மேலை நாகரிகம் அந்தந்த நாட்டு நாகரிகங்களை வளரவிடாது தானே முற்றாளுமை கொண்டு உலகத்தை மாற்றி வருகிறது என்பது உண்மையாக இருக்கிறது. அது நுழைந்த ஒரு சில ஆண்டுகளில், உள்ளூர் மரபுகள் மாறிவிடுகின்றன. ஆழ்ந்து பார்த்தால், உள்ளூர் திருவிழாக்களைக் கொண்டாடுவது கூடக் குறைந்து வருகிறது; பேச்சு, நடை, உடை, பழக்க வழக்கங்கள் எல்லாமே மாறுகின்றன. முடிவில் "காலமே மாறிப் போச்சுங்க" என்று சொல்லத் தொடங்கி விடுகிறோம். கால மாற்று என்பது உணர்ந்து அறிய வேண்டியது.

இந்த அதிகாரத்தில் காலம், பொழுது போன்ற பொதுமைக் கருத்துக்களையும் சிறு பொழுதுகள் பற்றியும் பார்ப்போம்.

காலம் என்னும் போது நாள்பிறப்பு, மாதப் பிறப்பு, ஆண்டுப் பிறப்பு போன்றவையும் அதில் உள்ளடங்கும். நமக்குத் தெரிந்து இந்தக் காலத்தில் எத்தனையோ தமிழர்கள் ஆங்கில ஆண்டுப் பிறப்பின் போது நள்ளிரவு வரை காத்திருப்பதும், இரவு பன்னிரண்டு மணி ஆனவுடன் ஒருவருக்கொருவர் கையைக் குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லுவதும் ஆகப் புதிய சடங்கிற்கு மாறிக் கொண்டு வருகிறார்கள். இதைப் போன்றவற்றைக் காட்டாகச் சொல்லித்தான் "தமிழர்கள் குறைந்துத் தமிங்கிலர்கள் பெருத்து விட்டார்கள்", என்று நான் அவ்வப்பொழுது கூறுவது உண்டு.

ஆனாலும் நாள் என்பது நள்ளிரவில் தான் பிறக்கிறதா? புவியின் தன்னுருட்டலில் தொடக்கம் என்று எதைச் சொல்ல முடியும்? நாகரிகங்களின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நாட்கள் பிறப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கும் சந்திரமானத்தைக் கடைப்பிடிக்கும், அதாவது நிலவை மட்டுமே வைத்து மானிக்கும் - அளவு செய்யும் - அரபு நாடுகள் எல்லாம், "நிலவும் விண்மீன்களும் கண்முன்னே தோன்றும் போதே" நாள் பிறப்பதாகக் கொள்ளுகின்றன. முந்தைய அதிகாரங்களில், நாள் என்றால் இரவு என்றும், பின் இரவில் வரும் விண்மீன் என்றும் பொருள் ஆழம் சொன்னோமே நினைவிருக்கிறதா? அந்தப் பொருளின் வழி பார்த்தால், ஒரு நாளை இப்படி வரையறை செய்வதும் ஒருவகையில் பொருத்தம் தான்.

முற்றிலும் சூரிய மானத்தையே பின் பற்றுகிற மேலை நாகரிகமோ இன்னொரு வகையில் இதைப் பார்க்கிறது. புவியின் நடுக் கோட்டில் ஓரிடத்தில் நாம் வாழ்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். புவியின் தன்னுருட்டலில் சூரியனைப் பார்ப்பதில் இருந்து நாம் விலகிக் கொண்டே சுற்றி வருகிறோம். ஒரு நேரத்தில் நாம் வாழும் இடம் சூரியனுக்கு நேரெதிராக 180 பாகையில் வந்து விடுகிறது. அந்தப் பொழுதை நாம் நள்ளிரவு என்று சொல்லுவோம். மறுபடியும் சூரியனை நோக்கிச் சுற்றத் தொடங்குவதை புது நாள் என்று கொள்வது மேலை நாட்டுப் பார்வை.

சூரிய-சந்திரமானத்தைப் பின் பற்றும் நாமோ, சூரியன் கீழ்வானத்தில் முதலில் தெரிவதையே நாட்பிறப்பாகக் கொள்கிறோம். இன்றையக் கீழ்வானச் சூரியனில் இருந்து அடுத்த கீழ்வானச் சூரியன் தெரியும் வரை நீளும் காலத்தை ஒரு நாள் என்றும், இந்த ஒரு நாளைப் பகுத்து சிறிய காலங்களைக் குறிக்கும் வகையில் அறவட்டாக (arbitrary) ஒரு நாளைக்கு 24 மணி என்றும், அதனிலும் சிறிய அலகை, நுணுத்தம் (minute) என்று கொண்டு ஒரு மணிக்கு 60 நுணுத்தம் என்றும், அதனினும் சிறிய அலகை நொடி (second) என்று கொண்டு ஒரு நுணுத்தத்திற்கு 60 நொடி என்றும் இந்தக் காலத்தில் வகுத்திருக்கிறோம். இதே போல நம் முன்னோர் ஒரு நாளை 60 நாழிகையாகவும் அதை இன்னும் சிறிதாக 60 விநாழிகையாகவும் பகுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் காலத்தை அணு அணுவாக நமக்கு உணர வைக்கும் ஏதுக்கள்.

அந்தக் காலத்தில் நீர்க் கடிகையும், மணற் கடிகையும் போன்றவற்றைக் கொண்டும், நட்டு வைத்த குச்சியின் நிழலைக் கொண்டும் தான் நாழிகைகளை அளந்தார்கள். நாழி>நாழிகை = உள் துளைப் பொருள். நாழிகை வட்டிலில் உள்ள நீர் அல்லது மணல் முழுவதும் விழும் நேரம் நாழிகை எனப்பட்டது. இந்தக் காலத்தில் இது 24 நுணுத்தங்களுக்கு ஒப்பானது. இந்த உள் துளைப் பொருளில் தான், கோயிலில் முலவர் இருக்கும் உள்ளறை கூட உள் நாழிகை என்றே அழைக்கப் பட்டது. இந்த நாழிகை என்னும் சொல் மலையாளத்தில் நாழிக என்றும், கன்னடத்தில் நாழிகே என்றும் அழைக்கப் பட்டது. நாழிக் கிணறு (இது தான் அய்யா இந்தக் காலத்துப் புரைக் கிணறு - bore well), நாழிச் செம்பு, நாழி மணி, நாழியோடு, நாழி வழி என்ற சொல்லாட்சிகளையும் இணைத்துப் பார்த்து அறியலாம். நாழிகை என்பதையே கடிகை என்று சொல்லுவாரும் உண்டு.

நாழிகைக்கு அடுத்துச் சிறிய அளவில் நிமையம் என்ற அலகு ஒன்று உண்டு. சொற்பொருள் அளவில் பார்த்தால் அதை இமைக்கின்ற அல்லது நொடிக்கின்ற நேரம் என்று தான் சொல்ல முடியும். ஆனால் அது நிமையம் என்று திரிந்து, நொடியைக் குறிப்பதற்கு மாறாகப் பிறழ்ச்சி ஏற்பட்டு இன்று நுணுத்தத்தைக் குறித்து நிற்கிறது. இந்தப் பிறழ்ச்சி எதனால் எப்போது ஏற்பட்டது என்று விளங்கவில்லை.

இனிக் காலம், நேரம், வேளை, அமையம், சமையம், பருவம் போன்ற பொதுச் சொற்களின் பொருட்பாட்டைப் பார்ப்போம்.

"பொழுது புறப்பட்டது, பொழுது சாய்ந்தது" என்னும் போது அது நேரத்தை மட்டும் குறிக்கவில்லை; சூரியனையும் குறிக்கிறது. போழ்தல் என்றால் பிளத்தல், வெட்டுதல், நீக்குதல் என்ற பொருள் உண்டு. மலையாளத்தில் கூடப் போழ் என்றும், கன்னடத்தில் ஹொத்து (போழ்து>போது>பொத்து>ஹொத்து) என்றும், தெலுங்கில் ப்ரொத்து (ழகர ரகரப் போலி) என்றும், துளுவில் பொர்து என்றும் இந்தச் சொல் அழைக்கப் படும். பொழுது என்ற சொல் பொள்ளுதல் என்னும் வினையின் அடிப் பிறந்தது. பொள்ளுதல் என்பது பிளப்பதே. இருளைப் பிளப்பதால் சூரியன் பொழுது என அழைக்கப் பட்டான். நாளாவட்டத்தில் நேரம் என்ற பொதுமைப்பாட்டையும் இந்தப் பொழுது என்ற சொல் அடைந்தது.

அதே போல கல்லுதல் என்பது இயற்கையாகவும் செயற்கையாலும் நடக்கும் தோண்டுதல் வினையைக் குறிக்கும் சொல். தோண்டுவதால் பிரிவு, அடிநிலம் போன்ற பொருட்பாடுகளும் உடன் பயின்றன. கல்லிக் கொண்டே இருந்தால் அது காலுவது என்று ஓசையில் நீளும். தமிழில் நீட்சியைக் குறித்துவரும் பல சொற்கள் நீட்டொலி கொண்டே இருக்கின்றன. காலப்பட்டது என்பது உண்மையில் பள்ளப் படுவதே! காலப் பாட்டது நீண்டோ அன்றேல் ஆழ்ந்தோ இருக்கும். இணையாக இன்னும் இரண்டு சொற்களைச் சொல்லலாம். பள்ளப் பட்டது நீண்டு போய்ப் பாழ் என்றும், பாழப் பட்ட தலம் பாழ்தலம்> பாதலம்> பாதாளம் என்றும், பறியப் பட்டது நீளும் போது பாறியதாகவும் மாறும்.

காலப் பட்ட வாய்(=வழி) கால்வாய். இந்தப் பொருட்பாட்டு வளர்ச்சியில் கால் என்ற சொல்லுக்கே நீண்டது என்றே பொருட்பாடு பயிலத் தொடங்குவது இயற்கையே.

கல்லப் பட்ட பள்ளம் நீண்டு கிடந்து கால் என ஆனது போலக் கல்லி எடுக்கப் பட்ட நீண்ட தூணும் கால் என்றே வழங்கப் பட்டது. இணையாகப் பள்ளி எடுக்கப் பட்டது பாளம் என்றும், பறிந்து எடுக்கப் பட்டது பாறை என்றும் சொல்லப் பெறுகிறதல்லவா?

இன்னும் தொடர்ச்சியாகத் தூணைப் போன்ற உடல் உறுப்பும் கால் என்றே ஒப்புமையால் வழங்கியிருக்க வேண்டும். இனித் தனித்தெடுத்த தூணை வேறொரு இடத்தில் ஊன்றும் போது காலுதல், கால்கோள் என்றே சொல்லப் பட்டது. தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பான கால் உடம்பின் நாலில் ஒரு பகுதியையும் குறித்தது. (முடிவில் கால் என்ற எண்ணையும் குறித்தது.) கால் போன்ற உறுப்பு முக்காலி, நாற்காலி என்று வகை தெரிந்து அழைக்கப் பட்டது. காலப் பட்ட (ஊன்றப் பட்ட) காரணத்தால் கொடிக்கால், நாற்றங்கால் என்ற சொல்லாட்சிகளும் ஏற்பட்டன. நீண்டு தொடரும் கால் மேலும் பொருள் விரிட்சி பெற்று குடி மரபையும் குறித்தது.

காலின் பொருட்பாடு அதோடு நிற்கவில்லை; இன்னும் பொருட்பாடு பெருகி, கால் என்னும் உடல் உறுப்பு இயங்குகிற காரணத்தால் காலுதல் (=அசைதல்) என்ற இன்னொரு புழக்கத்தையும் தோற்றுவித்திருக்கிறது. அந்த இயக்கத்தை போன்று, கிளைகளும் மரங்களும் அசைவதால் நம்மைச் சுற்றி ருக்கிற வளிமண்டலத்தின் அசைவையும் கால் என்றே பழந்தமிழன் அழைத்தான். இப்படி அசையும் கால் மேலும் துகர ஈறு பெற்று காற்று என ஆயிற்று.

காலுக்கு நீட்சி என்ற பொருள் வந்தபின் நீண்டு போன நேரமும் கூடக் கால் என்றே அழைக்கப் பட்டது. கால் காலையாகி, காலமும் ஆகி பொழுது நேரம் எனப் பொதுமைக் கருத்தைக் குறித்தது.

பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் - தொல். 108
எல்லா எழுத்துஞ் சொல்லும் காலை - தொல் 83
காலம் தாமே மூன்றென மொழிப - தொல் 684

என்ற தொல்காப்பிய வரிகளும் இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கவை.
மொத்தத்தில் காலின் பொருட்பாட்டு வளர்ச்சி மிகப் பெரிது; காலங்களும்
நீண்டவை தானே!

நேர்ந்தது நேரம் என்றும் நிகழ்ந்தது நிகழ்வு என்றும், அமைந்தது அமையம்/சமையம் என்றும், காலத்தைப் பகுத்து (விள்ளியது) வேளை/வேலை என்றும், சொற்கள் கிளர்ந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தக் காலத்தில் கனிந்து பக்குவமான வேளையே, சமையம் என்று அழைக்கப் படுகிறது. சரியான சமையம் என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள். அதே போல ஒரு பொருள் நுகர்ச்சிக்கேற்ற அளவு கனிந்து பருத்திருக்கும் நிலை பருவம் என்றே அழைக்கப் படுகிறது. ஒப்புமையில் அந்த நிலை அமைவதற்கான நேரமும் பருவம் என்றே அழைக்கப் படுகிறது.

இனிச் சிறு பொழுதுகளைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம். ஒரு நாளை ஆறு போதுகளாகப் பிரித்து ஒவ்வொரு போதுக்கும் 10 நாழிகைகள் என்று கொண்டு, காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை (அல்லது) விடியல் என்றும் நம்மவர்கள் அழைத்தார்கள். மேல்நாட்டினர் இப்படி ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பகுத்தது இல்லை. அதே பொழுது morning, noon, evening, night என்ற வேறுபட்ட சொற்களைப் புழங்குகிறார்கள்.

காலுதல் என்ற சொல் ஊன்றுதல் என்ற பொருளில் ஒரு நாளின் முதற் சிறுபொழுதைக் குறிக்கிறது. இந்தப் பொழுதின் தொடக்கத்தில் சூரியனின் ஒளி உலகின் மேல் ஊன்றிக் கொள்கிறது; கொஞ்சம் கொஞ்சமாக அது இடம் பிடித்துக் கொள்ளுகிறது. கல்>கால்>காலை என்று ஆகிறது. காலை என்பது தமிழ் வழக்கப் படி சூரியன் கீழ்வானில் தோன்றியதில் இருந்து 4 மணி நேரம் (அதாவது 10 நாழிகை) கொண்ட ஒரு பொழுது.

அடுத்தது பகல்.

வய் என்ற தமிழ் வேர் ஒளியைக் குறித்தது. வயக்கம், வயங்கல் என்பன ஒளியைக் குறிக்கும் சொற்கள். வயமீன் என்பது ஒளி மிகுந்த உரோகிணி மீனைக் குறிப்பது. இனி, ஒளி படைத்த கல் வயிரம். வயிரக் கல் கூர்மை உடையதாக அமைந்து, பின் கிழிக்கக் கூடியதாக இருப்பதால் வயிர்த்தது கிழித்ததானது. வயிர்த்தது மெய்த்திரிவால் "வகுத்ததாகி" பிரிப்பு என்னும் பொருள் நீண்டது. பகர வகரப் போலியில் வகுத்தது பகுத்தது என்று ஆகும்.

ஒளியைப் பகுத்துக் கிடைத்த நாளின் நடுப் பொழுது பகல் என்றே அழைக்கப் பட்டது. பகலின் முதலிரு மணிகள் முற்பகல் என்றும், பின்னிரு மணிகள் பிற்பகல் என்றும் அழைக்கப் பட்டன.. நடுவே கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போகும் காலம் நண்பகல் (செறிந்த பகல்) என்றே அழைக்கப் பட்டது. பகு என்னும் சொல்லடி பகு>பகல்>பால் = பிரிவு என்ற பொருளில் நீளும். நண்பகல் என்பது வெப்பத்தின் உச்சி என்பதால் உச்சிப் பொழுது, உச்சி வேளை என்றும், உருக்கி எரிப்பதால் உருமம் என்றும் அழைப்பது உண்டு.

சூரியன் உயரத்தில் தொங்கி இருப்பதை நூங்கி இருப்பது என்றும் சொல்ல முடியும். நூங்கர் என்பவர் உயரத்தில் உள்ள தேவர். நூங்கு என்பது உச்சி. (உயர்ந்த பனை மரம் நுகம்பு/நுகங்கு என்று அழைக்கப் படும். நுகங்கின் காய் நுங்கு.) ஆங்கிலத்தில் noon என்பது பகலின் நடு நேரம் தானே! பகல் என்பது உச்சிக்கு இரண்டு மணி கழித்து முடிகிற பருவம். அல்லும் பகலும் அறுபது நாழிகை என்பது பழமொழி

அல் என்னும் இரவு முப்பது நாழிகை என்பது போல எல் என்னும் சூரியன் இயங்கும் நேரமும் முப்பது நாழிகையே. அந்த எல் படுகின்ற நேரம் எற்பாடு. இந்தப் பொழுது பிற்பகலின் 2 மணி நேரம் கழியும் கணத்தில் ஏற்படுகின்ற பொழுது. இந்தப் பொழுதின் இறுதியில் சூரியன் சாய்கிறான். அதனால் இந்தப் பொழுது சாயுங்காலம் என்றும் அழைக்கப் பட்டது. சாயும் பொழுது சாயுந்தரம் என்றும் அழைக்கப் பட்டது. தருவது என்பது வாய்ப்பது; தருணம் என்பதும் வாய்ப்பே.

பழந்தமிழில் சில துணை வினைகள் உண்டு அவை யாழ்ப்பாணத்தமிழ், மலையாளம் போன்ற வற்றில் இன்னும் ஆளுகையில் உள்ளவை. "எனக்கு இதை அறியத் தருவீர்களா?" இந்த வாக்கில் தருதல் என்பது துணைவினை. அதைப் போல "அப்படி வரச் செய்கையிலே நான் பார்த்தேன்" என்னும் ஆட்சியை சோழர்களின் இடைக் காலக் கல்வெட்டுக்களில் பழகக் காணலாம். "வரச் செய்கையிலே" என்பது தஞ்சாவூர்த் தமிழிலும், பார்ப்பனர் வழக்கிலும் "வரச்சே" என்றே பயிலும். இது போல "சூரியன் சாயச் செய்கையிலே" "சூரியன் சாயச்சே" " சூரியன் சாய்கிறச்சே" என்றும் பேச்சு வழக்கில் மாறும். இதை யாரோ வடமொழிக் காதலர் சாய்கிரட்சை என்று ஒலி பெயர்க்க நாம் மயங்கி சாயுங்காலம் என்ற சொல்லே வடமொழி என்று தவறாக உணர்ந்து கிடக்கிறோம்.

சூரியன் சாய்ந்த பின் இருளும் ஒளியும் முயங்கிக் கிடக்கிறது; பின் மயங்கிக் கிடக்கிறது. முள்>முய்>முயங்கு>மயங்கு என்பது சொற்பிறப்பின் வழி முறை.
மயந்து கிடந்த வினை மயலுதல் என்று சொல்லப் பெறும். மயல்>மால் என்றும்
நீளும். மாலுதல் = மயங்குதல். மயங்கிய வண்ணம் கொண்டதால் தான் விண்ணவன் மாயோன் எனப் படுகிறான். மால் என்றும் சொல்லப் படுகிறான். பகலும் இரவும் கலக்கும் வேளை மாலை நேரம் என்றே சொல்லப் படுகிறது. இதே போல பல மலர்கள் கலந்து தொடுத்த தொடை மாலை; பின்னால் ஒரே மலரால் தொடுக்கப் பட்டதும் மாலை என்றே சொல்லப் பட்டது. மயங்கல் நேரம் பேச்சு வழக்கில் மசங்கல், மசங்கும் பொழுது, மசண்டை, மயண்டை என்றெல்லாம் அழைக்கப் பெறும்.

இரவும் பகலும் பொருந்துகின்ற மாலையை அந்தி என்றும் சொல்லுவது உண்டு. அந்தி>சந்தி. அத்துதல் = ஒட்டுதல், பொருத்தித் தைத்தல், அந்தித்தல் = நெருங்குதல் கூடுதல், ஒன்று சேர்தல். இந்தச் சொல்லின் பிறப்பை உம்> உந்து> அந்து> அந்தி என்று கூறுவர். இதைப் போல காலை நேரத்திற்குச் சற்றுமுன் உள்ள நேரம் காலை அந்தி இது முன்னந்தி, வெள்ளந்தி என்றும்
மாலை அந்தி பின்னந்தி, செவ்வந்தி என்றும் அழைக்கப் பெறும். இந்தச் செவ்வந்தி நேரத்தில் அதே வண்ணத்தில் பூக்கும் பூவைச் செவ்வந்திப்பூ என்றே நம் முன்னோர் அழைத்தனர். "அந்திக்கடை, அந்திக்காப்பு, அந்திமல்லிகை, அந்தி வண்ணன், அந்தி வேளை" என்ற சொல்லாட்சிகளையும் ஓர்ந்து அறியலாம்.

அந்தி என்பது நேரங்கள் கூடுவதை மட்டும் அல்லாது முத்தெருக்கள் கூடும் இடத்தையும் பொருள் விரிவு கொண்டு குறித்தது.

"அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் - சிலப் 14.213
சதுக்கமும் சந்தியும்" திருமுருகு 225

என்ற எடுத்துக் காட்டுக்கள் இதைக் காட்டும்.

இப்படித் தெருக்கள் நேர்வது சந்து என்றும் சந்திப்பு என்றும் அழைக்கப் பட்டது. பலரும் ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி பண்டமாற்றுச் செய்யும் இடம் சந்தை என்றே அழைக்கப் பட்டது.

நாம் அந்தியை இப்படிப் பகலும் இரவும் நேர்கின்ற பொழுது என்று சொல்லுகின்ற போது, மேலையர் evening என்ற சொல்லை சூரியன் அமைகின்ற, அவைகின்ற அவிகின்ற நேரம் என்ற பொருளிலேயே புழங்குவதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இனி, இந்தக் காலத்தில் நாம் கொள்ளும் காலப் பிறழ்ச்சி: மாலை என்பது ஆறு மணிக்குத் தொடங்கி 10 மணிக்கு முடிகிறது. ஆனால் பிறழ்ச்சியாக ஏதோ 4 மணிக்குத் தொடங்கு஢கிறது என்று பலரும் தவறாகக் கொள்ளுகிறோம். இதற்குக் காரணம் எற்பாடு என்ற வேளையையே நம்மில் பலர் மறந்தது தான். இதில் மேலையர் சரியாக இருக்கின்றனர். We will meet in the evening during the dinner" என்னும் போது நேரப் பிறழ்ச்சி கிடையாது.

மாலைக்கு அடுத்த பொழுது யாமம். "யா" என்னும் வேருக்கு இருள், கருமை என்றே பொருள். யா>யாம்>யாமம் = இரவு என்றே அது விரியும். யா மரம் பற்றிச் சங்க இலக்கியங்கள் பெரிதும் சொல்லுகின்றன. யா மரங்கள் நிறைந்த தீவு யாவகம் அது வடமொழிப் பலுக்கலில் ஜாவகம் என்று இன்று அழைக்கப் படுகிறது. யானை, யாடு, ஏனம், ஆந்தை, நாகம், நாவல், ஆம்பி, யாறு, யமன், ஆயம், ஆலம் பொன்ற சொற்கள் எல்லாம் கருமைக் கருத்தில் யா என்ற வேரில் இருந்து தோன்றியவையே.

நாள் என்ற சொல்லே முதலில் இரவைக் குறிக்கும் பொருளில் யா> யாஅல்> யால்> ஞால்> ஞாள்> நாள் என்று அமைந்தது. அரைநாள் என்பது ஒரு காலத்தில் நள்ளிரவு, அரையிரவு என்பதையே குறித்தது. பால்+நாள் = பானாள் என்ற சொல்லும், நடு நாள் என்ற சொல்லும் இதே போல பாதிஇரவு, நடு இரவு என்பதையே குறித்தன. யாமம் என்பது வடமொழிப் பலுக்கலில் யாமம்> சியாமம்> ஜாமம் என்று மாறும். சாமக்காரன், சாமக்காவல், சாமக்கோழி போன்றவை பேச்சு வழக்கில் உள்ள சொற்கள்.

யாமம் என்பது இரவு 10 ல் இருந்து நாலுமணி நேரம் நீண்டிருப்பது. பின்னாளில் முழு இரவையுமே ( ஆறில் இருந்து ஆறு வரை) யாமம் என்று சொல்லத் தலைப் பட்டு மாலையாமம், இடையாமம், வைகறையாமம் என்ற மூன்று பகுதிகள் வரையறுக்கப் பட்டன. நச்சினார்க்கினியர் காலத்தில் இரவு 12 மணியும் நான்கு பகுதிகளாகக் கருதப் பட்டு முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நாலாம் யாமம் என்ற பிரிவுகள் தோன்றின.

கடைசிப் பொழுது இரண்டு பெயர்களால் அழைக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பொழுதின் முடிவில் தான் கதிரவன் எழுகிறான். கதிரவன் வரவால் அடி வானம் வெளுக்கிறது. வெள்>வெளு=வெண்மையாகு என்றும் வெளித்தல் = வெண்ணிறங் கொள்ளுதல் என்றும் பொருள் கொளுகின்றன. வெளி>வெடி = விடி என்று பலுக்கலில் வேறுபடும். விடியல் என்பது வெளுப்பதே. இப்படி ஒளியில் இருந்து பெயரிட்டது விடியல்; மாறாக இருளில் இருந்து பெயரிட்டது வைகறை.
 
வைகுறு>வைகுறை>வைவகறை. வை என்பது இங்கு இருளையே குறிக்கிறது. வைகும் இருள் குறைந்து வரும் இறுதிக் காலம் வைகுறைக் காலம் . இதற்குப் பின் ஒரு நாளில் இருள் கிடையாது. பின் மறு நாள் பிறந்து விடும் எனவே இது வைகுறை. மேலையரும் மையிருட்டு அறுகும் காலம் என்ற பொருளிலேயே (மாய்+அறுகு =மாயறுகு>மாறுகு) morgan>morn>morning என்ற சொல்லை ஆளுகிறார்கள்.

இந்தச் சிறு பொழுதுகளை அந்தந்தப் பொருளில் புழங்கத் தொடங்கினால் காலப் பிறழ்ச்சி குறையும். தமிழர்கள் காலம் பற்றி அக்கறையில்லாதவர்கள் என்ற இந்தக் காலப் பொதுவான கருத்தை மாற்றுவோமே! என்ன சொல்கிறீர்கள்?

முடிப்பதற்கு முன், சிறு பொழுது ஒன்றிற்கு பெருஞ்சித்திரனாரின் கூறிய உவமையை இங்கு எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
"கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப் போகும் சிறு கல்லைப் போல வாழ்க்கையின் விசைப்பு ஒரு அளவு பட்ட சிறு பொழுதே"
வாழ்க்கையே அவ்வபவு தாங்க. "சர்ர்ர்ர்ர்ர்........"

இறைவன் உண்மையை அவர் இந்தப் பாடலில் சொல்லியிருக்கும் கருத்து உணர்ந்து அறிய வேண்டியது.
----------------------------------------------------------------------------------------------
எவன்கொல் அறிகும்

எவன்கொல் அறிகும் இறையவன் கிடக்கை!
கவண்முகத்து உருவிய சிறுகல் போல
விசைப்பே அளவிடைப் பொழுதே! வினையே
நசையள வயினே; நலிதலும் மெலிதலும்
அதனுட் பட்ட வை பொறி வழிய!
செவ்விதின் அமையா ஐம்பொறி முனைப்பும்
எல்லையுள் வாங்கும் அறிவின் ஆன!
இவைகொடு தெளிவே இறையவன் உண்மை!
அவன் திறல் மேற்றே அண்டம்;
அவிழ்தலும் குவிதலும் அரிது மற்று அறிவே!

-நூறாசிரியம் - 31

பொழிப்பு:

இறைவனின் இருக்கையை எவரே அறிகுவர்? கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப் போகும் சிறு கல்லைப் போலும் வாழ்க்கையின் விசைப்பு ஓர் அளவு பாட சிறு பொழுதே. அவ்விடைப் பொழுதில் செய்யப் பெறும் வினையோ, உள்ளத்து எழுந்த விருப்பத்தைப் பொருத்தது. உடல், உள்ள நலிவுகளும், மெலிவுகளும் அவ்விருப்பத்தின் உள்ளடங்குவன. அந் நலிவும் மெலிவும் உள்ளடங்கிய விருப்பமும், வினையும் உடலின் ஐம்பொறிகளை வாயாகக் கொண்டன. ஒன்றுக்கொன்று மேலவும் தாழவும் ஆகச் செப்பமுற அமையாத அவ்வைம்பொறிகளும் தம்முன் முனைத்து நிற்பினும், அவற்றின் அறிதிறனோ ஓர் எல்லையுள் வாங்கும் அளவுடையது. இயல்வனவும் இயலாதனவும் ஆகிய இவற்றைக் கொண்டுதான் இறைவனின் உண்மை தெளியப் பெறுதல் வேண்டும் அத்தகு இறைவனின் ஒளியின் மேலும் வலியின் மேலும் அளாவி நிற்பவைதாம் இவ்வுலக உருண்டையும் இதுபோல் பிறவும். அவற்றின் மலர்ச்சியாகிய தோற்றத்தையும், கூம்புதலாகிய ஒடுக்கத்தையும் அறிவது அரியது; இயலாதது.

விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அகச்செருக்கும் அறிவுச் செருக்கும் வினைச்செருக்கும் மிகுந்து அருளும், மெய்யறிவும் அடக்கமும் குறைந்தவரும் தற்காலத்து இறைமை பொதுளிய இயற்கைத் தன்மையினை மறந்து வாழும் மாந்த உயிர்களுக்கு உள்ளொளி கொளுத்தி உயிர் இயக்கம் சிறக்கக் கூறியதாகும் இப்பாட்டு.

இப்பாடல் இறைப்பொருளின் இருப்பு நிலை பற்றித் தெளியவிலாதார்க்கும் தெளிந்தார்ப் போலப் பிதற்றுநர்க்கும் உலகியல் கூறி அறிவின் தன்மையையும் அறியப் பெறும் பொருளின் நுண்மையையும் புலப்படுத்துவதாகும்.

இது பொதுவியல் என் திணையும் முதுமொழிக் காஞ்சி என் துறையுமாம்.
-------------------------------------------------------------------------------------------------------

In TSCII:

¸¡Äí¸û - 4

4. ¦À¡ØÐ¸Ç¢ý ¦À¡ÕÇ¡Æõ

´Õ Å¢¨É¨Â «øÄРŢ¨Ç¡ð¨¼ò ¦¾¡¼íÌõ §À¡Ð, ¿¡½Âò¨¾ò à츢ô §À¡ðÎ "¾¨Ä¡, âÅ¡" ±ýÚ À¡÷츢§È¡õ þø¨Ä¡? þ¾¢ø ´ý¨È ²üÀÐõ Áü¦È¡ý¨È ÁÚôÀÐõ ÅÆì¸Á¡ÉÐ ¾¡ý. þó¾ò ¾¨Ä¡/âÅ¡ô À¡÷¨Å º¢Ä§À¡Ð¸Ç¢ø ¿¡õ ÒÆíÌõ ¦Á¡Æ¢Â¢ý ¦º¡øÅ¨¼¸ÙìÌì ܼ ¯ñÎ. "¬ø §À¡ø ¾¨ÆòÐ «ÚÌ §À¡ø §Å§Ã¡Ê" ±ýÈ ´Õ ¦º¡ÄŨ¼¨Â Å¡úòÐì ÜÚõ Ó¸Á¡¸ò ¾Á¢Æ¢ø §¸ûÅ¢ôÀðÊÕìÌõ ¿£í¸û «¾ý þý¦É¡Õ Àì¸ò¨¾ µ÷óÐ À¡÷ò¾¢Õ츢ȣ÷¸§Ç¡? ¬§Ä¡, «Ú§¸¡ Áü¦È¡Õ ¿¢Äò¾¢¨½¨Âò ¾¡ý þÕìÌõ ÒÄò¾¢üÌû ÅÇÃÅ¢¼¡Ð ±ýÈ ¸Õò¨¾ ±ñ½¢ô À¡÷ò¾Ðñ¼¡? þó¾ «Ç×ìÌ Óüȡ٨Á ¦¸¡ñ¼ ¿¢Äò¾¢¨½¸¨Ç ¿¢Äò¾¢ø À¾¢Â ¨Åì¸ ÓüÀÎõ ÓýÉ÷ º¢ó¾¨É §Åñ¼¡Á¡? ¬Ä¢ý ¿¢ÆÄ¢ø Á¡¨Å ¿¼ ÓÊÔ§Á¡?

þôÀÊò ¾¨ÆòÐ §Å§Ã¡Îõ Óüȡ٨Á º¢Ä ¿¡¸Ã£¸í¸ÙìÌì ܼ ¯ñÎ. þÅü¨È ±íÌ ¿¼§ÅñÎõ, ±ôÀÊ ¿¼ §ÅñÎõ ±ýÀ¾¢ø ÀÄ §¿Ãõ ¿¡õ ¸ÅÉõ ¦¸¡ûÇò ¾ÅÈ¢ Ţθ¢§È¡õ. þü¨Èì ¸¡Äò¾¢ø ¦ÀÕõÀ¡Ä¡É ¿¡Î¸Ç¢ø ÅÇ÷óÐûÇ §Á¨Ä ¿¡¸Ã¢¸ò¾¢ý ¾¡ì¸õ ¿øÄ¾¡, ¦¸ð¼¾¡ ±ýÀ¨¾ ¯¨Ã¡¼ ¿¡ý þíÌ ÓüÀ¼ Å¢ø¨Ä. ¬É¡ø §Á¨Ä ¿¡¸Ã¢¸õ «ó¾ó¾ ¿¡ðÎ ¿¡¸Ã¢¸í¸¨Ç ÅÇÃÅ¢¼¡Ð ¾¡§É Óüȡ٨Á ¦¸¡ñÎ ¯Ä¸ò¨¾ Á¡üÈ¢ ÅÕ¸¢ÈÐ ±ýÀÐ ¯ñ¨Á¡¸ þÕ츢ÈÐ. «Ð ѨÆó¾ ´Õ º¢Ä ¬ñθǢø, ¯ûé÷ ÁÃÒ¸û Á¡È¢Å¢Î¸¢ýÈÉ. ¬úóÐ À¡÷ò¾¡ø, ¯ûé÷ ¾¢ÕŢơ츨Çì ¦¸¡ñ¼¡ÎÅРܼì ̨ÈóÐ ÅÕ¸¢ÈÐ; §ÀîÍ, ¿¨¼, ¯¨¼, ÀÆì¸ ÅÆì¸í¸û ±øÄ¡§Á Á¡Ú¸¢ýÈÉ. ÓÊÅ¢ø "¸¡Ä§Á Á¡È¢ô §À¡îÍí¸" ±ýÚ ¦º¡øÄò ¦¾¡¼í¸¢ Ţθ¢§È¡õ. ¸¡Ä Á¡üÚ ±ýÀÐ ¯½÷óÐ «È¢Â §ÅñÊÂÐ.

þó¾ «¾¢¸¡Ãò¾¢ø ¸¡Äõ, ¦À¡ØÐ §À¡ýÈ ¦À¡Ð¨Áì ¸ÕòÐ츨ÇÔõ º¢Ú ¦À¡ØÐ¸û ÀüÈ¢Ôõ À¡÷ô§À¡õ.

¸¡Äõ ±ýÛõ §À¡Ð ¿¡ûÀ¢ÈôÒ, Á¡¾ô À¢ÈôÒ, ¬ñÎô À¢ÈôÒ §À¡ýȨÅÔõ «¾¢ø ¯ûǼíÌõ. ¿ÁìÌò ¦¾Ã¢óÐ þó¾ì ¸¡Äò¾¢ø ±ò¾¨É§Â¡ ¾Á¢Æ÷¸û ¬í¸¢Ä ¬ñÎô À¢ÈôÀ¢ý §À¡Ð ¿ûÇ¢Ã× Å¨Ã ¸¡ò¾¢ÕôÀÐõ, þÃ× ÀýÉ¢ÃñÎ Á½¢ ¬É×¼ý ´ÕÅÕ즸¡ÕÅ÷ ¨¸¨Âì ÌÖ츢 Òò¾¡ñÎ Å¡úòÐ츨Çî ¦º¡øÖÅÐõ ¬¸ô Ò¾¢Â º¼í¸¢üÌ Á¡È¢ì ¦¸¡ñÎ ÅÕ¸¢È¡÷¸û. þ¨¾ô §À¡ýÈÅü¨Èì ¸¡ð¼¡¸î ¦º¡øÄ¢ò¾¡ý "¾Á¢Æ÷¸û ̨ÈóÐò ¾Á¢í¸¢Ä÷¸û ¦ÀÕòРŢð¼¡÷¸û", ±ýÚ ¿¡ý «ùÅô¦À¡ØÐ ÜÚÅÐ ¯ñÎ.

¬É¡Öõ ¿¡û ±ýÀÐ ¿ûÇ¢ÃÅ¢ø ¾¡ý À¢È츢Ⱦ¡? ÒŢ¢ý ¾ýÛÕð¼Ä¢ø ¦¾¡¼ì¸õ ±ýÚ ±¨¾î ¦º¡øÄ ÓÊÔõ? ¿¡¸Ã¢¸í¸Ç¢ý ÅÇ÷¢ø ´ù¦Å¡ÕÅÕõ ´ù¦Å¡ÕÅ¢¾Á¡¸ ¿¡ð¸û À¢ÈôÀ¨¾ì ¸½ì¸¢ø ±ÎòÐì ¦¸¡ñÎ þÕ츢ȡ÷¸û.

þý¨ÈìÌõ ºó¾¢ÃÁ¡Éò¨¾ì ¸¨¼ôÀ¢ÊìÌõ, «¾¡ÅÐ ¿¢Ä¨Å ÁðΧÁ ¨ÅòÐ Á¡É¢ìÌõ - «Ç× ¦ºöÔõ - «ÃÒ ¿¡Î¸û ±øÄ¡õ, "¿¢Ä×õ Å¢ñÁ£ý¸Ùõ ¸ñÓý§É §¾¡ýÚõ §À¡§¾" ¿¡û À¢ÈôÀ¾¡¸ì ¦¸¡ûÙ¸¢ýÈÉ. Óó¨¾Â «¾¢¸¡Ãí¸Ç¢ø, ¿¡û ±ýÈ¡ø þÃ× ±ýÚõ, À¢ý þÃÅ¢ø ÅÕõ Å¢ñÁ£ý ±ýÚõ ¦À¡Õû ¬Æõ ¦º¡ý§É¡§Á ¿¢¨ÉÅ¢Õ츢Ⱦ¡? «ó¾ô ¦À¡ÕÇ¢ý ÅÆ¢ À¡÷ò¾¡ø, ´Õ ¿¡¨Ç þôÀÊ Å¨ÃÂ¨È ¦ºöÅÐõ ´ÕŨ¸Â¢ø ¦À¡Õò¾õ ¾¡ý.

ÓüÈ¢Öõ Ýâ Á¡Éò¨¾§Â À¢ý ÀüÚ¸¢È §Á¨Ä ¿¡¸Ã¢¸§Á¡ þý¦É¡Õ Ũ¸Â¢ø þ¨¾ô À¡÷츢ÈÐ. ÒŢ¢ý ¿Îì §¸¡ðÊø µÃ¢¼ò¾¢ø ¿¡õ Å¡ú¸¢§È¡õ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û. ÒŢ¢ý ¾ýÛÕð¼Ä¢ø Ýâ¨Éô À¡÷ôÀ¾¢ø þÕóÐ ¿¡õ Ţĸ¢ì ¦¸¡ñ§¼ ÍüÈ¢ ÅÕ¸¢§È¡õ. ´Õ §¿Ãò¾¢ø ¿¡õ Å¡Øõ þ¼õ ÝâÂÛìÌ §¿¦Ã¾¢Ã¡¸ 180 À¡¨¸Â¢ø ÅóРŢθ¢ÈÐ. «ó¾ô ¦À¡Ø¨¾ ¿¡õ ¿ûÇ¢Ã× ±ýÚ ¦º¡øÖ§Å¡õ. ÁÚÀÊÔõ Ý̢嬃 §¿¡ì¸¢î ÍüÈò ¦¾¡¼íÌŨ¾ ÒÐ ¿¡û ±ýÚ ¦¸¡ûÅÐ §Á¨Ä ¿¡ðÎô À¡÷¨Å.

ÝâÂ-ºó¾¢ÃÁ¡Éò¨¾ô À¢ý ÀüÚõ ¿¡§Á¡, ÝâÂý ¸£úÅ¡Éò¾¢ø ӾĢø ¦¾Ã¢Å¨¾§Â ¿¡ðÀ¢ÈôÀ¡¸ì ¦¸¡û¸¢§È¡õ. þý¨ÈÂì ¸£úÅ¡Éî ÝâÂÉ¢ø þÕóÐ «Îò¾ ¸£úÅ¡Éî ÝâÂý ¦¾Ã¢Ôõ Ũà ¿£Ùõ ¸¡Äò¨¾ ´Õ ¿¡û ±ýÚõ, þó¾ ´Õ ¿¡¨Çô ÀÌòÐ º¢È¢Â ¸¡Äí¸¨Çì ÌÈ¢ìÌõ Ũ¸Â¢ø «ÈÅ𼡸 (arbitrary) ´Õ ¿¡¨ÇìÌ 24 Á½¢ ±ýÚõ, «¾É¢Öõ º¢È¢Â «Ä¨¸, ÑÏò¾õ (minute) ±ýÚ ¦¸¡ñÎ ´Õ Á½¢ìÌ 60 ÑÏò¾õ ±ýÚõ, «¾É¢Ûõ º¢È¢Â «Ä¨¸ ¦¿¡Ê (second) ±ýÚ ¦¸¡ñÎ ´Õ ÑÏò¾ò¾¢üÌ 60 ¦¿¡Ê ±ýÚõ þó¾ì ¸¡Äò¾¢ø ÅÌò¾¢Õ츢§È¡õ. þ§¾ §À¡Ä ¿õ Óý§É¡÷ ´Õ ¿¡¨Ç 60 ¿¡Æ¢¨¸Â¡¸×õ «¨¾ þýÛõ º¢È¢¾¡¸ 60 Å¢¿¡Æ¢¨¸Â¡¸×õ ÀÌò¾¢Õ츢ȡ÷¸û. þ¨Å¦ÂøÄ¡õ ¸¡Äò¨¾ «Ï «ÏÅ¡¸ ¿ÁìÌ ¯½Ã ¨ÅìÌõ ²Ðì¸û.

«ó¾ì ¸¡Äò¾¢ø ¿£÷ì ¸Ê¨¸Ôõ, Á½ü ¸Ê¨¸Ôõ §À¡ýÈÅü¨Èì ¦¸¡ñÎõ, ¿ðÎ ¨Åò¾ Ì¢ý ¿¢Æ¨Äì ¦¸¡ñÎõ ¾¡ý ¿¡Æ¢¨¸¸¨Ç «Çó¾¡÷¸û. ¿¡Æ¢>¿¡Æ¢¨¸ = ¯û ШÇô ¦À¡Õû. ¿¡Æ¢¨¸ ÅðÊÄ¢ø ¯ûÇ ¿£÷ «øÄÐ Á½ø ÓØÅÐõ Å¢Øõ §¿Ãõ ¿¡Æ¢¨¸ ±ÉôÀð¼Ð. þó¾ì ¸¡Äò¾¢ø þÐ 24 ÑÏò¾í¸ÙìÌ ´ôÀ¡ÉÐ. þó¾ ¯û ШÇô ¦À¡ÕÇ¢ø ¾¡ý, §¸¡Â¢Ä¢ø ÓÄÅ÷ þÕìÌõ ¯ûÇ¨È Ü¼ ¯û ¿¡Æ¢¨¸ ±ý§È «¨Æì¸ô Àð¼Ð. þó¾ ¿¡Æ¢¨¸ ±ýÛõ ¦º¡ø Á¨Ä¡Çò¾¢ø ¿¡Æ¢¸ ±ýÚõ, ¸ýɼò¾¢ø ¿¡Æ¢§¸ ±ýÚõ «¨Æì¸ô Àð¼Ð. ¿¡Æ¢ì ¸¢½Ú (þÐ ¾¡ý «ö¡ þó¾ì ¸¡ÄòÐô Ò¨Ãì ¸¢½Ú - bore well), ¿¡Æ¢î ¦ºõÒ, ¿¡Æ¢ Á½¢, ¿¡Æ¢§Â¡Î, ¿¡Æ¢ ÅÆ¢ ±ýÈ ¦º¡øÄ¡ðº¢¸¨ÇÔõ þ¨½òÐô À¡÷òÐ «È¢ÂÄ¡õ. ¿¡Æ¢¨¸ ±ýÀ¨¾§Â ¸Ê¨¸ ±ýÚ ¦º¡øÖÅ¡Õõ ¯ñÎ.

¿¡Æ¢¨¸ìÌ «ÎòÐî º¢È¢Â «ÇÅ¢ø ¿¢¨ÁÂõ ±ýÈ «ÄÌ ´ýÚ ¯ñÎ. ¦º¡ü¦À¡Õû «ÇÅ¢ø À¡÷ò¾¡ø «¨¾ þ¨Á츢ýÈ «øÄÐ ¦¿¡Ê츢ýÈ §¿Ãõ ±ýÚ ¾¡ý ¦º¡øÄ ÓÊÔõ. ¬É¡ø «Ð ¿¢¨ÁÂõ ±ýÚ ¾¢Ã¢óÐ, ¦¿¡Ê¨Âì ÌÈ¢ôÀ¾üÌ Á¡È¡¸ô À¢Èú ²üÀðÎ þýÚ ÑÏò¾ò¨¾ì ÌÈ¢òÐ ¿¢ü¸¢ÈÐ. þó¾ô À¢Èú ±¾É¡ø ±ô§À¡Ð ²üÀð¼Ð ±ýÚ Å¢Çí¸Å¢ø¨Ä.

þÉ¢ì ¸¡Äõ, §¿Ãõ, §Å¨Ç, «¨ÁÂõ, º¨ÁÂõ, ÀÕÅõ §À¡ýÈ ¦À¡Ðî ¦º¡ü¸Ç¢ý ¦À¡ÕðÀ¡ð¨¼ô À¡÷ô§À¡õ.

"¦À¡ØÐ ÒÈôÀð¼Ð, ¦À¡ØÐ º¡öó¾Ð" ±ýÛõ §À¡Ð «Ð §¿Ãò¨¾ ÁðÎõ ÌÈ¢ì¸Å¢ø¨Ä; Ýâ¨ÉÔõ ÌȢ츢ÈÐ. §À¡ú¾ø ±ýÈ¡ø À¢Çò¾ø, ¦Åðξø, ¿£ì̾ø ±ýÈ ¦À¡Õû ¯ñÎ. Á¨Ä¡Çò¾¢ø ܼô §À¡ú ±ýÚõ, ¸ýɼò¾¢ø ¦†¡òÐ (§À¡úÐ>§À¡Ð>¦À¡òÐ>¦†¡òÐ) ±ýÚõ, ¦¾Öí¸¢ø ô¦Ã¡òÐ (Ƹà øÃô §À¡Ä¢) ±ýÚõ, ÐÙÅ¢ø ¦À¡÷Ð ±ýÚõ þó¾î ¦º¡ø «¨Æì¸ô ÀÎõ. ¦À¡ØÐ ±ýÈ ¦º¡ø ¦À¡ûÙ¾ø ±ýÛõ Å¢¨É¢ý «Êô À¢Èó¾Ð. ¦À¡ûÙ¾ø ±ýÀÐ À¢ÇôÀ§¾. þÕ¨Çô À¢ÇôÀ¾¡ø ÝâÂý ¦À¡ØÐ ±É «¨Æì¸ô Àð¼¡ý. ¿¡Ç¡Åð¼ò¾¢ø §¿Ãõ ±ýÈ ¦À¡Ð¨ÁôÀ¡ð¨¼Ôõ þó¾ô ¦À¡ØÐ ±ýÈ ¦º¡ø «¨¼ó¾Ð.

«§¾ §À¡Ä ¸øÖ¾ø ±ýÀÐ þÂü¨¸Â¡¸×õ ¦ºÂü¨¸Â¡Öõ ¿¼ìÌõ §¾¡ñξø Å¢¨É¨Âì ÌÈ¢ìÌõ ¦º¡ø. §¾¡ñΞ¡ø À¢Ã¢×, «Ê¿¢Äõ §À¡ýÈ ¦À¡ÕðÀ¡Î¸Ùõ ¯¼ý À¢ýÈÉ. ¸øÄ¢ì ¦¸¡ñ§¼ þÕ󾡸 «Ð ¸¡ÖÅÐ ±ýÚ µ¨ºÂ¢ø ¿£Ùõ. ¾Á¢Æ¢ø ¿£ðº¢¨Âì ÌÈ¢òÐÅÕõ ÀÄ ¦º¡ü¸û ¿£ð¦¼¡Ä¢ ¦¸¡ñ§¼ þÕ츢ýÈÉ. ¸¡ÄôÀð¼Ð ±ýÀÐ ¯ñ¨Á¢ø ÀûÇô ÀÎŧ¾! ¸¡Äô À¡ð¼Ð ¿£ñ§¼¡ «ý§Èø ¬ú󧾡 þÕìÌõ. þ¨½Â¡¸ þýÛõ þÃñÎ ¦º¡ü¸¨Çî ¦º¡øÄÄ¡õ. ÀûÇô Àð¼Ð ¿£ñÎ §À¡öô À¡ú ±ýÚõ, À¡Æô Àð¼ ¾Äõ À¡ú¾Äõ> À¡¾Äõ> À¡¾¡Çõ ±ýÚõ, ÀÈ¢Âô Àð¼Ð ¿£Ùõ §À¡Ð À¡È¢Â¾¡¸×õ Á¡Úõ.

¸¡Äô Àð¼ Å¡ö(=ÅÆ¢) ¸¡øÅ¡ö. þó¾ô ¦À¡ÕðÀ¡ðÎ ÅÇ÷¢ø ¸¡ø ±ýÈ ¦º¡øÖ째 ¿£ñ¼Ð ±ý§È ¦À¡ÕðÀ¡Î À¢Äò ¦¾¡¼íÌÅÐ þÂü¨¸§Â.

¸øÄô Àð¼ ÀûÇõ ¿£ñÎ ¸¢¼óÐ ¸¡ø ±É ¬ÉÐ §À¡Äì ¸øÄ¢ ±Îì¸ô Àð¼ ¿£ñ¼ àÏõ ¸¡ø ±ý§È ÅÆí¸ô Àð¼Ð. þ¨½Â¡¸ô ÀûÇ¢ ±Îì¸ô Àð¼Ð À¡Çõ ±ýÚõ, ÀÈ¢óÐ ±Îì¸ô Àð¼Ð À¡¨È ±ýÚõ ¦º¡øÄô ¦ÀÚ¸¢È¾øÄÅ¡?

þýÛõ ¦¾¡¼÷¡¸ò ਽ô §À¡ýÈ ¯¼ø ¯ÚôÒõ ¸¡ø ±ý§È ´ôÒ¨Á¡ø ÅÆí¸¢Â¢Õì¸ §ÅñÎõ. þÉ¢ò ¾É¢ò¦¾Îò¾ ਽ §Å¦È¡Õ þ¼ò¾¢ø °ýÚõ §À¡Ð ¸¡Ö¾ø, ¸¡ø§¸¡û ±ý§È ¦º¡øÄô Àð¼Ð. àñ§À¡ø ¯¼õ¨Àò ¾¡íÌõ ¯ÚôÀ¡É ¸¡ø ¯¼õÀ¢ý ¿¡Ä¢ø ´Õ À̾¢¨ÂÔõ ÌÈ¢ò¾Ð. (ÓÊÅ¢ø ¸¡ø ±ýÈ ±ñ¨½Ôõ ÌÈ¢ò¾Ð.) ¸¡ø §À¡ýÈ ¯ÚôÒ Ó측Ģ, ¿¡ü¸¡Ä¢ ±ýÚ Å¨¸ ¦¾Ã¢óÐ «¨Æì¸ô Àð¼Ð. ¸¡Äô Àð¼ (°ýÈô Àð¼) ¸¡Ã½ò¾¡ø ¦¸¡Ê측ø, ¿¡üÈí¸¡ø ±ýÈ ¦º¡øÄ¡ðº¢¸Ùõ ²üÀð¼É. ¿£ñÎ ¦¾¡¼Õõ ¸¡ø §ÁÖõ ¦À¡Õû Ţâ𺢠¦ÀüÚ ÌÊ ÁèÀÔõ ÌÈ¢ò¾Ð.

¸¡Ä¢ý ¦À¡ÕðÀ¡Î «§¾¡Î ¿¢ü¸Å¢ø¨Ä; þýÛõ ¦À¡ÕðÀ¡Î ¦ÀÕ¸¢, ¸¡ø ±ýÛõ ¯¼ø ¯ÚôÒ þÂí̸¢È ¸¡Ã½ò¾¡ø ¸¡Ö¾ø (=«¨º¾ø) ±ýÈ þý¦É¡Õ ÒÆì¸ò¨¾Ôõ §¾¡üÚÅ¢ò¾¢Õ츢ÈÐ. «ó¾ þÂì¸ò¨¾ §À¡ýÚ, ¸¢¨Ç¸Ùõ ÁÃí¸Ùõ «¨ºÅ¾¡ø ¿õ¨Áî ÍüÈ¢ Õì¸¢È ÅÇ¢Áñ¼Äò¾¢ý «¨º¨ÅÔõ ¸¡ø ±ý§È ÀÆó¾Á¢Æý «¨Æò¾¡ý. þôÀÊ «¨ºÔõ ¸¡ø §ÁÖõ иà ®Ú ¦ÀüÚ ¸¡üÚ ±É ¬Â¢üÚ.

¸¡ÖìÌ ¿£ðº¢ ±ýÈ ¦À¡Õû Åó¾À¢ý ¿£ñÎ §À¡É §¿ÃÓõ Ü¼ì ¸¡ø ±ý§È «¨Æì¸ô Àð¼Ð. ¸¡ø ¸¡¨Ä¡¸¢, ¸¡ÄÓõ ¬¸¢ ¦À¡ØÐ §¿Ãõ ±Éô ¦À¡Ð¨Áì ¸Õò¨¾ì ÌÈ¢ò¾Ð.

¦À¦áΠ¦À¨Ãô Ò½÷ìÌí ¸¡Öõ - ¦¾¡ø. 108
±øÄ¡ ±ØòÐï ¦º¡øÖõ ¸¡¨Ä - ¦¾¡ø 83
¸¡Äõ ¾¡§Á ãý¦ÈÉ ¦Á¡Æ¢À - ¦¾¡ø 684

±ýÈ ¦¾¡ø¸¡ôÀ¢Â Åâ¸Ùõ þíÌ ±ñ½¢ô À¡÷ì¸ò ¾ì¸¨Å.
¦Á¡ò¾ò¾¢ø ¸¡Ä¢ý ¦À¡ÕðÀ¡ðÎ ÅÇ÷ Á¢¸ô ¦ÀâÐ; ¸¡Äí¸Ùõ
¿£ñ¼¨Å ¾¡§É!

§¿÷ó¾Ð §¿Ãõ ±ýÚõ ¿¢¸úó¾Ð ¿¢¸ú× ±ýÚõ, «¨Áó¾Ð «¨ÁÂõ/º¨ÁÂõ ±ýÚõ, ¸¡Äò¨¾ô ÀÌòÐ (Å¢ûÇ¢ÂÐ) §Å¨Ç/§Å¨Ä ±ýÚõ, ¦º¡ü¸û ¸¢Ç÷ó¾¾¢ø Å¢ÂôÒ ´ýÚõ þø¨Ä. þó¾ì ¸¡Äò¾¢ø ¸É¢óÐ ÀìÌÅÁ¡É §Å¨Ç§Â, º¨ÁÂõ ±ýÚ «¨Æì¸ô Àθ¢ÈÐ. ºÃ¢Â¡É º¨ÁÂõ ±ýÈ ¦º¡øÄ¡ðº¢¨Âì ¸ÅÉ¢Ôí¸û. «§¾ §À¡Ä ´Õ ¦À¡Õû Ѹ÷째üÈ «Ç× ¸É¢óÐ ÀÕò¾¢ÕìÌõ ¿¢¨Ä ÀÕÅõ ±ý§È «¨Æì¸ô Àθ¢ÈÐ. ´ôÒ¨Á¢ø «ó¾ ¿¢¨Ä «¨Ážü¸¡É §¿ÃÓõ ÀÕÅõ ±ý§È «¨Æì¸ô Àθ¢ÈÐ.

þÉ¢î º¢Ú ¦À¡ØÐ¸¨Çì ÌÈ¢ìÌõ ¦º¡ü¸¨Çô À¡÷ô§À¡õ. ´Õ ¿¡¨Ç ¬Ú §À¡Ð¸Ç¡¸ô À¢Ã¢òÐ ´ù¦Å¡Õ §À¡ÐìÌõ 10 ¿¡Æ¢¨¸¸û ±ýÚ ¦¸¡ñÎ, ¸¡¨Ä, À¸ø, ±üÀ¡Î, Á¡¨Ä, ¡Áõ, ¨Å¸¨È («øÄÐ) Å¢ÊÂø ±ýÚõ ¿õÁÅ÷¸û «¨Æò¾¡÷¸û. §Áø¿¡ðÊÉ÷ þôÀÊ ´Õ ¿¡¨Ç ¬Ú À̾¢¸Ç¡¸ô ÀÌò¾Ð þø¨Ä. «§¾ ¦À¡ØÐ morning, noon, evening, night ±ýÈ §ÅÚÀð¼ ¦º¡ü¸¨Çô ÒÆí̸¢È¡÷¸û.

¸¡Ö¾ø ±ýÈ ¦º¡ø °ýÚ¾ø ±ýÈ ¦À¡ÕÇ¢ø ´Õ ¿¡Ç¢ý Ó¾ü º¢Ú¦À¡Ø¨¾ì ÌȢ츢ÈÐ. þó¾ô ¦À¡Ø¾¢ý ¦¾¡¼ì¸ò¾¢ø ÝâÂÉ¢ý ´Ç¢ ¯Ä¸¢ý §Áø °ýÈ¢ì ¦¸¡û¸¢ÈÐ; ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ «Ð þ¼õ À¢ÊòÐì ¦¸¡ûÙ¸¢ÈÐ. ¸ø>¸¡ø>¸¡¨Ä ±ýÚ ¬¸¢ÈÐ. ¸¡¨Ä ±ýÀÐ ¾Á¢ú ÅÆì¸ô ÀÊ ÝâÂý ¸£úšɢø §¾¡ýȢ¾¢ø þÕóÐ 4 Á½¢ §¿Ãõ («¾¡ÅÐ 10 ¿¡Æ¢¨¸) ¦¸¡ñ¼ ´Õ ¦À¡ØÐ.

«Îò¾Ð À¸ø.

Åö ±ýÈ ¾Á¢ú §Å÷ ´Ç¢¨Âì ÌÈ¢ò¾Ð. ÅÂì¸õ, ÅÂí¸ø ±ýÀÉ ´Ç¢¨Âì ÌÈ¢ìÌõ ¦º¡ü¸û. ÅÂÁ£ý ±ýÀÐ ´Ç¢ Á¢Ìó¾ ¯§Ã¡¸¢½¢ Á£¨Éì ÌÈ¢ôÀÐ. þÉ¢, ´Ç¢ À¨¼ò¾ ¸ø Å¢Ãõ. Å¢Ãì ¸ø Ü÷¨Á ¯¨¼Â¾¡¸ «¨ÁóÐ, À¢ý ¸¢Æ¢ì¸ì Üʾ¡¸ þÕôÀ¾¡ø Å¢÷ò¾Ð ¸¢Æ¢ò¾¾¡ÉÐ. Å¢÷ò¾Ð ¦Áöò¾¢Ã¢Å¡ø "ÅÌò¾¾¡¸¢" À¢Ã¢ôÒ ±ýÛõ ¦À¡Õû ¿£ñ¼Ð. À¸Ã ŸÃô §À¡Ä¢Â¢ø ÅÌò¾Ð ÀÌò¾Ð ±ýÚ ¬Ìõ.

´Ç¢¨Âô ÀÌòÐì ¸¢¨¼ò¾ ¿¡Ç¢ý ¿Îô ¦À¡ØÐ À¸ø ±ý§È «¨Æì¸ô Àð¼Ð. À¸Ä¢ý Ó¾Ä¢Õ Á½¢¸û ÓüÀ¸ø ±ýÚõ, À¢ýÉ¢Õ Á½¢¸û À¢üÀ¸ø ±ýÚõ «¨Æì¸ô Àð¼É.. ¿Î§Å ¸ñ½¢¨ÁìÌõ §¿Ãò¾¢ø ÅóÐ §À¡Ìõ ¸¡Äõ ¿ñÀ¸ø (¦ºÈ¢ó¾ À¸ø) ±ý§È «¨Æì¸ô Àð¼Ð. ÀÌ ±ýÛõ ¦º¡øÄÊ ÀÌ>À¸ø>À¡ø = À¢Ã¢× ±ýÈ ¦À¡ÕÇ¢ø ¿£Ùõ. ¿ñÀ¸ø ±ýÀÐ ¦ÅôÀò¾¢ý ¯îº¢ ±ýÀ¾¡ø ¯îº¢ô ¦À¡ØÐ, ¯îº¢ §Å¨Ç ±ýÚõ, ¯Õ츢 ±Ã¢ôÀ¾¡ø ¯ÕÁõ ±ýÚõ «¨ÆôÀÐ ¯ñÎ.

ÝâÂý ¯ÂÃò¾¢ø ¦¾¡í¸¢ þÕôÀ¨¾ áí¸¢ þÕôÀÐ ±ýÚõ ¦º¡øÄ ÓÊÔõ. áí¸÷ ±ýÀÅ÷ ¯ÂÃò¾¢ø ¯ûÇ §¾Å÷. áíÌ ±ýÀÐ ¯îº¢. (¯Â÷ó¾ À¨É ÁÃõ ѸõÒ/ѸíÌ ±ýÚ «¨Æì¸ô ÀÎõ. Ñ¸í¸¢ý ¸¡ö ÑíÌ.) ¬í¸¢Äò¾¢ø noon ±ýÀÐ À¸Ä¢ý ¿Î §¿Ãõ ¾¡§É! À¸ø ±ýÀÐ ¯îº¢ìÌ þÃñÎ Á½¢ ¸Æ¢òÐ Óʸ¢È ÀÕÅõ. «øÖõ À¸Öõ «ÚÀÐ ¿¡Æ¢¨¸ ±ýÀÐ ÀƦÁ¡Æ¢

«ø ±ýÛõ þÃ× ÓôÀÐ ¿¡Æ¢¨¸ ±ýÀÐ §À¡Ä ±ø ±ýÛõ ÝâÂý þÂíÌõ §¿ÃÓõ ÓôÀÐ ¿¡Æ¢¨¸§Â. «ó¾ ±ø Àθ¢ýÈ §¿Ãõ ±üÀ¡Î. þó¾ô ¦À¡ØÐ À¢üÀ¸Ä¢ý 2 Á½¢ §¿Ãõ ¸Æ¢Ôõ ¸½ò¾¢ø ²üÀθ¢ýÈ ¦À¡ØÐ. þó¾ô ¦À¡Ø¾¢ý þÚ¾¢Â¢ø ÝâÂý º¡ö¸¢È¡ý. «¾É¡ø þó¾ô ¦À¡ØÐ º¡Ôí¸¡Äõ ±ýÚõ «¨Æì¸ô Àð¼Ð. º¡Ôõ ¦À¡ØÐ º¡Ôó¾Ãõ ±ýÚõ «¨Æì¸ô Àð¼Ð. ¾ÕÅÐ ±ýÀÐ Å¡öôÀÐ; ¾Õ½õ ±ýÀÐõ Å¡öô§À.

ÀÆó¾Á¢Æ¢ø º¢Ä Ш½ Å¢¨É¸û ¯ñÎ «¨Å ¡úôÀ¡½ò¾Á¢ú, Á¨Ä¡Çõ §À¡ýÈ ÅüÈ¢ø þýÛõ ¬Ù¨¸Â¢ø ¯ûǨÅ. "±ÉìÌ þ¨¾ «È¢Âò ¾ÕÅ£÷¸Ç¡?" þó¾ š츢ø ¾Õ¾ø ±ýÀРШ½Å¢¨É. «¨¾ô §À¡Ä "«ôÀÊ ÅÃî ¦ºö¨¸Â¢§Ä ¿¡ý À¡÷ò§¾ý" ±ýÛõ ¬ðº¢¨Â §º¡Æ÷¸Ç¢ý þ¨¼ì ¸¡Äì ¸ø¦ÅðÎì¸Ç¢ø ÀÆ¸ì ¸¡½Ä¡õ. "ÅÃî ¦ºö¨¸Â¢§Ä" ±ýÀÐ ¾ïº¡ç÷ò ¾Á¢Æ¢Öõ, À¡÷ôÀÉ÷ ÅÆì¸¢Öõ "ÅÃ" ±ý§È À¢Öõ. þÐ §À¡Ä "ÝâÂý º¡Âî ¦ºö¨¸Â¢§Ä" "ÝâÂý º¡Â" " ÝâÂý º¡ö¸¢È" ±ýÚõ §ÀîÍ ÅÆì¸¢ø Á¡Úõ. þ¨¾ ¡§Ã¡ ż¦Á¡Æ¢ì ¸¡¾Ä÷ º¡ö¸¢Ã𨺠±ýÚ ´Ä¢ ¦ÀÂ÷ì¸ ¿¡õ ÁÂí¸¢ º¡Ôí¸¡Äõ ±ýÈ ¦º¡ø§Ä ż¦Á¡Æ¢ ±ýÚ ¾ÅÈ¡¸ ¯½÷óÐ ¸¢¼ì¸¢§È¡õ.

ÝâÂý º¡öó¾ À¢ý þÕÙõ ´Ç¢Ôõ ÓÂí¸¢ì ¸¢¼ì¸¢ÈÐ; À¢ý ÁÂí¸¢ì ¸¢¼ì¸¢ÈÐ. Óû>Óö>ÓÂíÌ>ÁÂíÌ ±ýÀÐ ¦º¡üÀ¢ÈôÀ¢ý ÅÆ¢ Ó¨È.
ÁÂóÐ ¸¢¼ó¾ Å¢¨É ÁÂÖ¾ø ±ýÚ ¦º¡øÄô ¦ÀÚõ. ÁÂø>Á¡ø ±ýÚõ
¿£Ùõ. Á¡Ö¾ø = ÁÂí̾ø. ÁÂí¸¢Â Åñ½õ ¦¸¡ñ¼¾¡ø ¾¡ý Å¢ñ½Åý Á¡§Â¡ý ±Éô Àθ¢È¡ý. Á¡ø ±ýÚõ ¦º¡øÄô Àθ¢È¡ý. À¸Öõ þÃ×õ ¸ÄìÌõ §Å¨Ç Á¡¨Ä §¿Ãõ ±ý§È ¦º¡øÄô Àθ¢ÈÐ. þ§¾ §À¡Ä ÀÄ ÁÄ÷¸û ¸ÄóÐ ¦¾¡Îò¾ ¦¾¡¨¼ Á¡¨Ä; À¢ýÉ¡ø ´§Ã ÁÄáø ¦¾¡Îì¸ô Àð¼Ðõ Á¡¨Ä ±ý§È ¦º¡øÄô Àð¼Ð. ÁÂí¸ø §¿Ãõ §ÀîÍ ÅÆì¸¢ø Áºí¸ø, ÁºíÌõ ¦À¡ØÐ, Áºñ¨¼, ÁÂñ¨¼ ±ý¦ÈøÄ¡õ «¨Æì¸ô ¦ÀÚõ.

þÃ×õ À¸Öõ ¦À¡Õóи¢ýÈ Á¡¨Ä¨Â «ó¾¢ ±ýÚõ ¦º¡øÖÅÐ ¯ñÎ. «ó¾¢>ºó¾¢. «òоø = ´ðξø, ¦À¡Õò¾¢ò ¨¾ò¾ø, «ó¾¢ò¾ø = ¦¿Õí̾ø Üξø, ´ýÚ §º÷¾ø. þó¾î ¦º¡øÄ¢ý À¢Èô¨À ¯õ> ¯óÐ> «óÐ> «ó¾¢ ±ýÚ ÜÚÅ÷. þ¨¾ô §À¡Ä ¸¡¨Ä §¿Ãò¾¢üÌî ºüÚÓý ¯ûÇ §¿Ãõ ¸¡¨Ä «ó¾¢ þÐ ÓýÉó¾¢, ¦ÅûÇó¾¢ ±ýÚõ
Á¡¨Ä «ó¾¢ À¢ýÉó¾¢, ¦ºùÅó¾¢ ±ýÚõ «¨Æì¸ô ¦ÀÚõ. þó¾î ¦ºùÅó¾¢ §¿Ãò¾¢ø «§¾ Åñ½ò¾¢ø âìÌõ â¨Åî ¦ºùÅó¾¢ôâ ±ý§È ¿õ Óý§É¡÷ «¨Æò¾É÷. "«ó¾¢ì¸¨¼, «ó¾¢ì¸¡ôÒ, «ó¾¢ÁøÄ¢¨¸, «ó¾¢ Åñ½ý, «ó¾¢ §Å¨Ç" ±ýÈ ¦º¡øÄ¡ðº¢¸¨ÇÔõ µ÷óÐ «È¢ÂÄ¡õ.

«ó¾¢ ±ýÀÐ §¿Ãí¸û ÜÎŨ¾ ÁðÎõ «øÄ¡Ð Óò¦¾Õì¸û ÜÎõ þ¼ò¨¾Ôõ ¦À¡Õû Å¢Ã¢× ¦¸¡ñÎ ÌÈ¢ò¾Ð.

"«ó¾¢Ôõ ºÐì¸Óõ ¬Å½ Å£¾¢Ôõ - º¢Äô 14.213
ºÐì¸Óõ ºó¾¢Ôõ" ¾¢ÕÓÕÌ 225

±ýÈ ±ÎòÐì ¸¡ðÎì¸û þ¨¾ì ¸¡ðÎõ.

þôÀÊò ¦¾Õì¸û §¿÷ÅÐ ºóÐ ±ýÚõ ºó¾¢ôÒ ±ýÚõ «¨Æì¸ô Àð¼Ð. ÀÄÕõ ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ ¿¡Ç¢ø ÜÊ Àñ¼Á¡üÚî ¦ºöÔõ þ¼õ ºó¨¾ ±ý§È «¨Æì¸ô Àð¼Ð.

¿¡õ «ó¾¢¨Â þôÀÊô À¸Öõ þÃ×õ §¿÷¸¢ýÈ ¦À¡ØÐ ±ýÚ ¦º¡øÖ¸¢ýÈ §À¡Ð, §Á¨ÄÂ÷ evening ±ýÈ ¦º¡ø¨Ä ÝâÂý «¨Á¸¢ýÈ, «¨Å¸¢ýÈ «Å¢¸¢ýÈ §¿Ãõ ±ýÈ ¦À¡ÕÇ¢§Ä§Â ÒÆíÌŨ¾ ±ñ½¢ô À¡÷ì¸ §ÅñÎõ.

þÉ¢, þó¾ì ¸¡Äò¾¢ø ¿¡õ ¦¸¡ûÙõ ¸¡Äô À¢Èú: Á¡¨Ä ±ýÀÐ ¬Ú Á½¢ìÌò ¦¾¡¼í¸¢ 10 Á½¢ìÌ Óʸ¢ÈÐ. ¬É¡ø À¢Èú¡¸ ²§¾¡ 4 Á½¢ìÌò ¦¾¡¼íÌ¢¸¢ÈÐ ±ýÚ ÀÄÕõ ¾ÅÈ¡¸ì ¦¸¡ûÙ¸¢§È¡õ. þ¾üÌì ¸¡Ã½õ ±üÀ¡Î ±ýÈ §Å¨Ç¨Â§Â ¿õÁ¢ø ÀÄ÷ ÁÈó¾Ð ¾¡ý. þ¾¢ø §Á¨ÄÂ÷ ºÃ¢Â¡¸ þÕ츢ýÈÉ÷. We will meet in the evening during the dinner" ±ýÛõ §À¡Ð §¿Ãô À¢Èú ¸¢¨¼Â¡Ð.

Á¡¨ÄìÌ «Îò¾ ¦À¡ØÐ ¡Áõ. "¡" ±ýÛõ §ÅÕìÌ þÕû, ¸Õ¨Á ±ý§È ¦À¡Õû. ¡>¡õ>¡Áõ = þÃ× ±ý§È «Ð ŢâÔõ. ¡ ÁÃõ ÀüÈ¢î ºí¸ þÄ츢Âí¸û ¦ÀâÐõ ¦º¡øÖ¸¢ýÈÉ. ¡ ÁÃí¸û ¿¢¨Èó¾ ¾£× ¡Ÿõ «Ð ż¦Á¡Æ¢ô ÀÖì¸Ä¢ø ƒ¡Å¸õ ±ýÚ þýÚ «¨Æì¸ô Àθ¢ÈÐ. ¡¨É, ¡Î, ²Éõ, ¬ó¨¾, ¿¡¸õ, ¿¡Åø, ¬õÀ¢, ¡Ú, ÂÁý, ¬Âõ, ¬Äõ ¦À¡ýÈ ¦º¡ü¸û ±øÄ¡õ ¸Õ¨Áì ¸Õò¾¢ø ¡ ±ýÈ §Åâø þÕóÐ §¾¡ýȢ¨ŧÂ.

¿¡û ±ýÈ ¦º¡ø§Ä ӾĢø þèÅì ÌÈ¢ìÌõ ¦À¡ÕÇ¢ø ¡> ¡«ø> ¡ø> »¡ø> »¡û> ¿¡û ±ýÚ «¨Áó¾Ð. «¨Ã¿¡û ±ýÀÐ ´Õ ¸¡Äò¾¢ø ¿ûÇ¢Ã×, «¨Ã¢Ã× ±ýÀ¨¾§Â ÌÈ¢ò¾Ð. À¡ø+¿¡û = À¡É¡û ±ýÈ ¦º¡øÖõ, ¿Î ¿¡û ±ýÈ ¦º¡øÖõ þ§¾ §À¡Ä À¡¾¢þÃ×, ¿Î þÃ× ±ýÀ¨¾§Â ÌÈ¢ò¾É. ¡Áõ ±ýÀРż¦Á¡Æ¢ô ÀÖì¸Ä¢ø ¡Áõ> º¢Â¡Áõ> ƒ¡Áõ ±ýÚ Á¡Úõ. º¡Á측Ãý, º¡Áì¸¡Åø, º¡Á째¡Æ¢ §À¡ýȨЧÀîÍ ÅÆì¸¢ø ¯ûÇ ¦º¡ü¸û.

¡Áõ ±ýÀÐ þÃ× 10 ø þÕóÐ ¿¡ÖÁ½¢ §¿Ãõ ¿£ñÊÕôÀÐ. À¢ýɡǢø ÓØ þèÅÔ§Á ( ¬È¢ø þÕóÐ ¬Ú ŨÃ) ¡Áõ ±ýÚ ¦º¡øÄò ¾¨Äô ÀðÎ Á¡¨Ä¡Áõ, þ¨¼Â¡Áõ, ¨Å¸¨È¡Áõ ±ýÈ ãýÚ À̾¢¸û ŨÃÂÚì¸ô Àð¼É. ¿îº¢É¡÷츢ɢÂ÷ ¸¡Äò¾¢ø þÃ× 12 Á½¢Ôõ ¿¡ýÌ À̾¢¸Ç¡¸ì ¸Õ¾ô ÀðÎ Ó¾ø ¡Áõ, þÃñ¼¡õ ¡Áõ, ãýÈ¡õ ¡Áõ, ¿¡Ä¡õ ¡Áõ ±ýÈ À¢Ã¢×¸û §¾¡ýÈ¢É.

¸¨¼º¢ô ¦À¡ØÐ þÃñÎ ¦ÀÂ÷¸Ç¡ø «¨Æì¸ô ÀðÊÕ츢ÈÐ. þó¾ô ¦À¡Ø¾¢ý ÓÊÅ¢ø ¾¡ý ¸¾¢ÃÅý ±Ø¸¢È¡ý. ¸¾¢ÃÅý ÅÃÅ¡ø «Ê Å¡Éõ ¦ÅÙ츢ÈÐ. ¦Åû>¦ÅÙ=¦Åñ¨ÁÂ¡Ì ±ýÚõ ¦ÅÇ¢ò¾ø = ¦Åñ½¢Èí ¦¸¡ûÙ¾ø ±ýÚõ ¦À¡Õû ¦¸¡Ù¸¢ýÈÉ. ¦ÅÇ¢>¦ÅÊ = Å¢Ê ±ýÚ ÀÖì¸Ä¢ø §ÅÚÀÎõ. Å¢ÊÂø ±ýÀÐ ¦ÅÙôÀ§¾. þôÀÊ ´Ç¢Â¢ø þÕóÐ ¦ÀÂâð¼Ð Å¢ÊÂø; Á¡È¡¸ þÕÇ¢ø þÕóÐ ¦ÀÂâð¼Ð ¨Å¸¨È.
¨ÅÌÚ>¨Ą̊È>¨ÅŸ¨È. ¨Å ±ýÀÐ þíÌ þըǧ ÌȢ츢ÈÐ. ¨ÅÌõ þÕû ̨ÈóÐ ÅÕõ þÚ¾¢ì ¸¡Äõ ¨Ą̊Èì ¸¡Äõ . þ¾üÌô À¢ý ´Õ ¿¡Ç¢ø þÕû ¸¢¨¼Â¡Ð. À¢ý ÁÚ ¿¡û À¢ÈóРŢÎõ ±É§Å þÐ ¨Ą̊È. §Á¨ÄÂÕõ ¨Á¢ÕðÎ «ÚÌõ ¸¡Äõ ±ýÈ ¦À¡ÕÇ¢§Ä§Â (Á¡ö+«ÚÌ =Á¡ÂÚÌ>Á¡ÚÌ) morgan>morn>morning ±ýÈ ¦º¡ø¨Ä ¬Ù¸¢È¡÷¸û.

þó¾î º¢Ú ¦À¡ØÐ¸¨Ç «ó¾ó¾ô ¦À¡ÕÇ¢ø ÒÆí¸ò ¦¾¡¼í¸¢É¡ø ¸¡Äô À¢Èú ̨ÈÔõ. ¾Á¢Æ÷¸û ¸¡Äõ ÀüÈ¢ «ì¸¨È¢øÄ¡¾Å÷¸û ±ýÈ þó¾ì ¸¡Äô ¦À¡ÐÅ¡É ¸Õò¨¾ Á¡üÚ§Å¡§Á! ±ýÉ ¦º¡ø¸¢È£÷¸û?

ÓÊôÀ¾üÌ Óý, º¢Ú ¦À¡ØÐ ´ýÈ¢üÌ ¦ÀÕﺢò¾¢Ãɡâý ÜȢ ¯Å¨Á¨Â þíÌ ±ÎòÐî ¦º¡øÄ¡Áø þÕì¸ ÓÊÂÅ¢ø¨Ä.
"¸ø¦ÄÈ¢ ¸ÕŢ¢ý ӨɢɢýÚ ¯ÕÅ¢ô §À¡Ìõ º¢Ú ¸ø¨Äô §À¡Ä Å¡ú쨸¢ý Å¢¨ºôÒ ´Õ «Ç× Àð¼ º¢Ú ¦À¡Ø§¾"
Å¡ú쨸§Â «ùÅª× ¾¡í¸. "º÷÷÷÷÷÷........"

þ¨ÈÅý ¯ñ¨Á¨Â «Å÷ þó¾ô À¡¼Ä¢ø ¦º¡øÄ¢Â¢ÕìÌõ ¸ÕòÐ ¯½÷óÐ «È¢Â §ÅñÊÂÐ.
----------------------------------------------------------------------------------------------
±Åý¦¸¡ø «È¢Ìõ

±Åý¦¸¡ø «È¢Ìõ þ¨ÈÂÅý ¸¢¼ì¨¸!
¸ÅñÓ¸òÐ ¯ÕŢ º¢Ú¸ø §À¡Ä
Å¢¨ºô§À «ÇÅ¢¨¼ô ¦À¡Ø§¾! Å¢¨É§Â
¿¨ºÂÇ Å¢§É; ¿Ä¢¾Öõ ¦ÁÄ¢¾Öõ
«¾Ûð À𼠨ЦÀ¡È¢ ÅÆ¢Â!
¦ºùÅ¢¾¢ý «¨Á¡ ³õ¦À¡È¢ Ó¨ÉôÒõ
±ø¨ÄÔû Å¡íÌõ «È¢Å¢ý ¬É!
þ¨Å¦¸¡Î ¦¾Ç¢§Å þ¨ÈÂÅý ¯ñ¨Á!
«Åý ¾¢Èø §Áü§È «ñ¼õ;
«Å¢ú¾Öõ ÌÅ¢¾Öõ «Ã¢Ð ÁüÚ «È¢§Å!

-áÈ¡º¢Ã¢Âõ - 31

¦À¡Æ¢ôÒ:

þ¨ÈÅÉ¢ý þÕ쨸¨Â ±Å§Ã «È¢ÌÅ÷? ¸ø¦ÄÈ¢ ¸ÕŢ¢ý ӨɢɢýÚ ¯ÕÅ¢ô §À¡Ìõ º¢Ú ¸ø¨Äô §À¡Öõ Å¡ú쨸¢ý Å¢¨ºôÒ µ÷ «Ç× À¡¼ º¢Ú ¦À¡Ø§¾. «ùÅ¢¨¼ô ¦À¡Ø¾¢ø ¦ºöÂô ¦ÀÚõ Å¢¨É§Â¡, ¯ûÇòÐ ±Øó¾ Å¢ÕôÀò¨¾ô ¦À¡Õò¾Ð. ¯¼ø, ¯ûÇ ¿Ä¢×¸Ùõ, ¦ÁĢ׸Ùõ «ùÅ¢ÕôÀò¾¢ý ¯ûǼíÌÅÉ. «ó ¿Ä¢×õ ¦ÁÄ¢×õ ¯ûÇ¼í¸¢Â Å¢ÕôÀÓõ, Å¢¨ÉÔõ ¯¼Ä¢ý ³õ¦À¡È¢¸¨Ç š¡¸ì ¦¸¡ñ¼É. ´ýÚ즸¡ýÚ §ÁÄ×õ ¾¡Æ×õ ¬¸î ¦ºôÀÓÈ «¨Á¡¾ «ù¨Åõ¦À¡È¢¸Ùõ ¾õÓý Ó¨ÉòÐ ¿¢üÀ¢Ûõ, «ÅüÈ¢ý «È¢¾¢È§É¡ µ÷ ±ø¨ÄÔû Å¡íÌõ «Çר¼ÂÐ. þÂøÅÉ×õ þÂÄ¡¾É×õ ¬¸¢Â þÅü¨Èì ¦¸¡ñξ¡ý þ¨ÈÅÉ¢ý ¯ñ¨Á ¦¾Ç¢Âô ¦ÀÚ¾ø §ÅñÎõ «ò¾Ì þ¨ÈÅÉ¢ý ´Ç¢Â¢ý §ÁÖõ ÅĢ¢ý §ÁÖõ «Ç¡Å¢ ¿¢üÀ¨Å¾¡õ þù×ĸ ¯Õñ¨¼Ôõ þЧÀ¡ø À¢È×õ. «ÅüÈ¢ý ÁÄ÷¡¸¢Â §¾¡üÈò¨¾Ôõ, ÜõҾġ¸¢Â ´Îì¸ò¨¾Ôõ «È¢ÅÐ «Ã¢ÂÐ; þÂÄ¡¾Ð.

ŢâôÒ:
þôÀ¡¼ø ÒÈòШȨÂî º¡÷ó¾Ð.

«¸î¦ºÕìÌõ «È¢×î ¦ºÕìÌõ Å¢¨ÉÕìÌõ Á¢ÌóÐ «ÕÙõ, ¦ÁöÂÈ¢×õ «¼ì¸Óõ ̨Èó¾ÅÕõ ¾ü¸¡ÄòÐ þ¨È¨Á ¦À¡ÐǢ þÂü¨¸ò ¾ý¨Á¢¨É ÁÈóÐ Å¡Øõ Á¡ó¾ ¯Â¢÷¸ÙìÌ ¯û¦Ç¡Ç¢ ¦¸¡Ùò¾¢ ¯Â¢÷ þÂì¸õ º¢Èì¸ì ÜȢ¾¡Ìõ þôÀ¡ðÎ.

þôÀ¡¼ø þ¨Èô¦À¡ÕÇ¢ý þÕôÒ ¿¢¨Ä ÀüÈ¢ò ¦¾Ç¢ÂŢġ¾¡÷ìÌõ ¦¾Ç¢ó¾¡÷ô §À¡Äô À¢¾üÚ¿÷ìÌõ ¯Ä¸¢Âø ÜÈ¢ «È¢Å¢ý ¾ý¨Á¨ÂÔõ «È¢Âô ¦ÀÚõ ¦À¡ÕÇ¢ý Ññ¨Á¨ÂÔõ ÒÄôÀÎòО¡Ìõ.

þÐ ¦À¡ÐÅ¢Âø ±ý ¾¢¨½Ôõ ÓЦÁ¡Æ¢ì ¸¡ïº¢ ±ý ШÈÔÁ¡õ.
-------------------------------------------------------------------------------------------------------

Wednesday, September 03, 2003

காலங்கள் - 3

3. ஆட்டமும், பொழுதும்

"ஆடிய ஆட்டம் என்ன?' என்ற கேள்வியைக் கிளப்பி

"வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ?"

என்றொரு திரைப் பாட்டைக் கண்ணதாசன் எழுதியிருப்பார். அவர் மனிதன் ஆடிய ஆட்டத்தையும் தேடிய செல்வத்தையும் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். நாம் "வாழ்ந்து கொண்டிருக்கும் புவியின் ஆட்டம் எப்படி?" என்று கேள்வி எழுப்புகிறோம். நெற்றாட்டம், கிறுவாட்டம், வலயம், உருட்டு என்ற எல்லா இயக்கங்களும் நின்று போனால் புவியாட்டம் என்னவாகும்?

" என்னங்க நீங்க, இது தெரியாதா? போயே போச்சு; போயிந்தி, சுக்குச் சுக்காகச் சிதறிப் போகும்."

இதுதான் நிலைமை என்றால், தன்னை இருத்திக் கொள்ளத்தான் இவ்வளவு ஆட்டம் போடுகிறதா இந்தப் புவி? இதைப் புரிந்து கொள்ள ஒவ்வொரு இயக்கத்தையும் முகமையானதில் இருந்து மற்றவற்றைப் பொருத்திப் பார்ப்போம். 

மேலே உள்ள நான்கு இயக்கங்களில் முதலில் நாம் உடனே உணருகிற இயக்கம் உருட்டல். இதுதான் பெரியுதி (priority) கொண்ட இயக்கம். இந்த இயக்கத்தின் போது புவிக் கோளத்தின் ஒரு பகுதி பகலில் ஒளிவாங்கிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இருளில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரம் கழித்து பகலாய் இருந்த பகுதி இருளாகி, இருள் பகலாகிறது. உருட்டல் நின்று போனால், பகல் பகலேதான், இருள் இருளே தான். இருள் உள்ள பகுதியில் உயிரே எழுந்திருக்காது. ஒளியுள்ள பகுதியில் உயிரெழுந்தாலும் அழிந்து போயிருக்கும். மொத்தத்தில் இன்று நாம் அறிந்த நிலவைப் போலப் புவியும் வறண்டு உயிரற்றுக் கிடக்கும்.

அப்புறம் நாமாவது ஒன்றாவது? நாம் யார்க்குமே குடியல்லோம்! புவி உருட்டல் என்பது அவ்வளவு அடிப்படையான நம் உயிருக்கே அடிப்படையான இயக்கம்.

இனி உருட்டல் இருந்து வலயம் நின்று போனது என்று வைத்துக் கொள்ளுவோம். சூரியனின் ஈர்ப்பு புவியை என்றோ இழுத்து இனிதே முயங்கிக் கொண்டிருக்கும்.

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படா முயக்கு"

ன்று வள்ளுவன் சொல்லும் உவமை இங்கு அப்படியே பொருந்தும். இந்த முயக்கு நடப்பதற்கு முன், ஒரு சில ஆண்டுகளே இந்தப் புவி இருந்திருக்கும். அந்த ஆண்டுகள் எத்தனை? அதற்குள் உயிர் எழுந்திருக்குமா? மனிதன் தோன்றுவதற்கு சாற்றுக் கூறுகள் உண்டா? இத்தகைய கேள்விகள் எல்லாம் இந்தக் கட்டில் (case; வழக்கறிஞர்கள் கேஸ்கட்டு என்று சொல்கிறார்களே அது நடுச் செண்டர் போல இரு பிறப்பி இரட்டைக் கிளவி) கற்பனைதான்.

தவிர புவி வலயம் ஒரு நீள்வட்டம். அதில் சூரியன் ஒரு குவியம் என்று சொன்னோம் அல்லவா? சூரியனில் இருந்து புவியின் தூரத்தை அளந்தோம் என்றால் மிகக் குறைந்த தூரம் உள்ளதுதான் வேனில் முடங்கல்; மிகக் கூடிய தூரம் உள்ளது தான் பனி முடங்கல்; இந்த இரண்டிற்கும் நடுப்பட்ட காலத்தில் தான் இரு ஒக்க நாள்கள் (பகலும் இரவும் ஒரே பொழுது கொண்ட நாட்கள்). அவற்றை மேழ விழு என்றும் துலை விழு என்றும் கூறினோம். இந்த நான்கு நாட்களையும் வைத்தே மேலையர் பருவத்தைக் கணிக்கிறார்கள்.

மேலையரின் வானியல் அறிவிலும், வடவரின் வானியல் அறிவிலும் தமிழரின் கருத்துக்கள் ஊடுறுவிக் கிடக்கின்றன என்றே ஆழ்ந்து படிக்கும் போது புலப்படுகிறது. அதற்குப் பெரும்பொழுதுகளின் பெயர்களே சான்றாக இருக்கின்றன. கொஞ்சம் பார்ப்போமே!

பனி முடங்கலில் வாடைக் காலம் தொடங்குகிறது. வடக்கே இருந்து வருவது வாடை. இது வடந்தை என்றும் வடந்தல் என்றும் தமிழில் சொல்லப் பெறும். வடந்தைக் காற்று குளிர் காற்று. இந்தையிரோப்பிய மாந்தன் தெற்கிருந்து தான் வடக்கே போயிருக்க வேண்டும் என்று சொல்லுவதற்கு வடந்தல்>vadanther>vidanther>winther>winter என்பதும் ஒரு காரணம்.

அடுத்து மேழ விழுவில் பசந்தம் தொடங்குகிறது. (பசுமைக் காலம் வசந்தம் என்று பலுக்கப் பட்டதால் வடமொழியென மயங்கி நிற்கிறோம்.) ஆங்கிலத்தில் பொங்கு என்று சொல்கிறார்கள். ஆடிப் பெருக்கு என்று வெள்ளப் பெருக்கை நாம் சொல்கிறோம் இல்லையா? அது போல இயற்கை திடீரென்று பெருகிப் பொங்குகிறதாம். பொங்கு என்பது இந்தையிரோப்பிய வழக்கப் படி பொங்கு>prong>prung>pring>spring என்றாகும்.

வேனில் முடங்கலில் வெம்மைக் காலம் தொடங்குகிறது. வெம்மல் காலம் கோடைக் காலம். வெம்மல் இந்தையிரோப்பியப் பழக்கப் படி ஸகரம் சேர்த்து swemmer>summer என்றாகும்.

மீண்டும் துலை விழுவில் உதிர் காலம் என்னும் இலைகள் அவிழும் காலம் தொடங்குகிறது. இந்தையிரோப்பியத்தில் அவிழும்>அவுதும்>autumn என்று ஆகும்.

இந்த வட்டத்தில் ஒவ்வொரு பருவமும் கிட்டத்தட்டத் தொண்ணூறு நாட்கள் வரும்.

தமிழர்கள் இன்னொரு விதமாக பருவங்களை இரண்டிரண்டு மாதங்களாக இருது (ருது என்று வடமொழிப் படுத்தப் படும்) எனப் பார்த்தார்கள். இதில் முடங்கல்களைப் பெரிதாகக் கருதவில்லை. அதை ஒரு கணுத்துவமாகவே (continuum) பார்த்தார்கள். இந்த முறையில் ஆறு பருவங்கள் கொள்ளப் பெறும். நான் இங்கே சந்திரமான மாதங்களை வைத்துச் சொல்லுகிறேன். (வெவ்வேறு வகையான மாதங்களைப் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம்.)

இளவேனில் = சித்திரை, வைகாசி
முதுவேனில் = ஆனி, ஆடி
கார் = ஆவணி, புரட்டாசி
கூதிர் = ஐப்பசி, கார்த்திகை
முன்பனி = மார்கழி, தை
பின்பனி = மாசி, பங்குனி

மேலே வேனில் என்பதற்குப் பொருள் சொல்ல வேண்டாம் என்று எண்ணுகிறேன்.

கார் என்பது கரிய முகிலையும், முகில் பொழியும் மழையையும், மழைக் காலத்தையும் குறிக்கும். கார் = மழைக் காலம், ஆவணி தொடக்கம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புவி மேழவோரைக்கு நேரே இருந்த போது மிகச் சரியாக இருந்தது. இந்தக் காலத்தில் புவியின் கிறுவாட்டம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மீனவோரைக்கு நேரே கொண்டு சேர்த்த காரணத்தால் பழந்தமிழ்க் காலங்கள் மாறி வருகின்றன. ஆவணியின் தொடக்கத்தில் வரவேண்டிய மழை ஆடி பதினெட்டிலேயே வந்து விடுகிறது. எப்படி பசந்த காலத் தொடக்கம் சித்திரை முதலுக்கு(ஏப்ரல் 14-ற்கு)ப் பதிலாக மார்ச்சு 21/22 க்கே வந்து விடுகிறதோ அது போலத் தான் இந்த மாற்றத்தையும் கொள்ள வேண்டும்.

கூதிர் என்பதை நம்மில் பலர் கூதற்காலம் என்று எண்ணிக் கொள்கிறோம். அது கருத்துப் பிழை. சில அகரமுதலிகளிலும் அப்படி வந்து விட்டது. அதுதான் சரியென்றால் காலங்களை உணர்வது தவறென்று ஆகிவிடும். அப்புறம் முன்பனி, பின்பனி எதற்கு? இலைகள் கூர்ந்து கொள்ளுகிற, மூடிக் கொள்ளுகிற, உதிர்ந்து கொள்ளுகிற காலம் கூதிர்க் காலம். குதிர் என்பது கூம்பிக் கிடப்பது. கூர்ந்தது கூலம் = விதை; கூர்ந்து கொட்டிக் கிடக்கும் குப்பையைக் கூளம் என்று சொல்கிறோமே, இவையெல்லாம் தொடர்புள்ள சொற்கள்.

பனிக் காலம் என்பது அப்பொழுது உள்ள குளிரால் காலை நேரத்தில் காற்றில் உள்ள ஈரம் துளிகளாய் மாறிப் பலவாகிக் கிடப்பதையே குறிக்கும். பல் பலவாகும். பன்னாகவும் ஆகும்.

"மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல"

என்பது தொல்காப்பியம். பன்னிப் பன்னிப் பேசுதல் என்பது பலவாறாகப் பேசுதல், பன்னுதல் பனித்தலாக நீளும். பனி என்பது ஆங்கில dew விற்குச் சரிசமமானது.

இனி வடமொழி வழியான பருவப் பெயர்களைப் பார்ப்போம்.

முதலில் வருவது மேழ விழுவில் தொடங்கும் பசந்த இருது. இது வடமொழியில் வசந்த ருது என்று வரும்.

அடுத்தது கரும இருது. வெய்யிலில் கருத்துவிட்டான் என்று சொல்கிறோம் இல்லையா? முதுவேனில் கருக்க வைக்கும். கரும>grishma; கருநன்>Krishnan ஆனது போல.

மூன்றாவது வழிய இருது; மழை பொழிகிறது; வழிகிறது. வழி>varshi

நான்காவது இலை உதிர்ந்து சொரிகின்ற காலம் சொரிதற் காலம். சொரிதல்>sharad

ஐந்தாவது பருவம் பனித் துகள்கள்  பலவாகி அவை குமிந்து கிடக்கும் காலம் = குமையும் காலம். குமியும் பனித்துகள் ஒவ்வொன்றும் குமம்* என்று சொல்லப் படும். குமம்* >  உமம்>  இமம் = பனித் துகள் என்பது அடுத்த வளர்ச்சி. குமஞ் சேர்ந்து கிடக்கும் மலை குமய மலை = பனி(த்துகள்)  மலை. தமிழில் இமய மலை என்போம். குமய மலை சங்கதத்தில் ஹிமயம் ஆகும். குமைந்த இருது = பனித்துகள் பெய்யும் இரு மாதக் காலம். இது hemantha rtu என்று சங்கதத்தில் வரும். 

ஆறாவது பருவம் சிதறல் பருவம்; பனிச் சிதறல் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறிக் குறைகிறது. சிதற இருது> sisira rtu.

மற்ற இந்தையிரொப்பியர் எல்லாம் நாலு பருவம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, வடமொழியாளர் மட்டும் தமிழரின் ஆறுபருவங்கள் பேசுவது விந்தையானது. ஆனால் நாலு பருவம், ஆறு பருவம் அந்தப் பெயர்களின் பொருள்கள் எல்லாமே நாவலந்தீவின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் தான் பொருள் சரியாக விளங்குகின்றன.

இந்தப் பருவங்கள் வட்டமாக வந்து கொண்டே இருக்கின்றன. இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. இந்தப் பெரும்பொழுதுகள் போலவே சிறுபொழுதுகளையும் நாலாகவும், ஆறாகவும் பகுக்கலாம். அதை அடுத்த முறை பார்ப்போம்.

பகலையும், நிழலையையும் வைத்து பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் ஒரு குமுகவியற் கருத்தைக் கூறுவதைப் படியுங்கள்.

----------------------------------------------------------------------
பெறும் பெற்றி

நிலமுதுகு ஒருபுறம் நீடிய நிழலும்
பலகதிர் ஓடிய பகலும் போல
உளவோர் உண்மையும் இலவோர் இன்மையும்
அளவு வரைத்து அன்றே! ஆய் இரு மருங்கும்
நின்று நீளுதல் நீள் நிலத்து இன்றே!
குன்றன்ன கொடி நிறுத்தித்
தின்று உய்யத் திரு வாழினும்
ஒன்றிலார்க்கு ஒன்று வந்து உதவல்
பின்றைத் தாம் பெறும் பெற்றியாம் ஆறே!

பொழிப்பு:

நிலக் கோளத்தின் வளைந்த புற முதுகின் ஒரு புறத்தே முன்னோக்கி நீண்டு கொண்டே போகின்ற நிழலாகிய இருளும், மற்றொரு புறத்தே பல்கோடிக் கதிர்க் கற்றைகளால் விளைந்து முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிற பகலொளியும் போல், இவ்வுலகின் கண் பொருள் உள்ளவரின் உளவாம் தன்மையும், அஃதில்லவரின் இலவாம் தன்மையும் எல்லை நிலைப்புடையன அல்ல. அவ்விருபுறத்தும் ஒரு பொழுதில் நின்ற நிலையே தொடர்ந்து நீடிக்கப் பெறுதல் இவ்வகன்ற நிலத்தின் கண் யாண்டும் இல்லை. குன்றின் உயர்ச்சி அளவாகத் தம் இலச்சினைக் கொடியை நிறுத்தி, அதன் பரும அளவாகத் தாமும் தம் பிறங்கடையரும் தின்று உய்யும் படி தமக்குச் செல்வவளம் வாய்ந்திருப்பினும், அந் நிலைகளில் ஒன்று தானும் அடைந்திலார்க்கு வேண்டுவதாகிய ஒரு பொருளைத் தம் உள்லம் உவக்குமாறு உதவுதலே, தமக்குப் பொருந்திய வளம் குன்றிய காலத்துத் தாம் துய்ப்பதற்கு உரிய வாய்ப்பு உருவாகும் வழியாம்!

விரிப்பு.

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

உலக உருண்டையைச் சுற்றிச் சுழல்கின்ற இரவும் பகலும் போல் மக்கட்கு வாய்க்கும் செல்வ நிலையும் வறுமை நிலையும் வரையறுக்கப் பட்டன அல்ல. இரு நிலைகளும் ஒரு நிலையிலேயே நிற்றல் மாறாச் சுழற்சியுடைய நிலத்தின் கண் யாண்டும் நடை பெறுதல் இல்லை. குன்றுபோல் குவித்த செல்வம் உடையவரும் பிற்காலத்து அதைத் தவறாது துய்த்தல் அரிது; அவ்வாறு துய்க்கும் வழி அந்நிலை எதும் இல்லாதவர்க்கு உளம் மகிழ்வடையும் படிக் கொடுத்து உதவுதலே ஆகும் என்று உலக வியற்கையை உணர்த்திக் கூறியதாகும் இப்பாட்டு.

இது பொதுவியல் என் திணையும், பொருண் மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.
-------------------------------------------------------------------------------------------------
In TSCII:

¸¡Äí¸û - 3

3. ¬ð¼Óõ, ¦À¡ØÐõ

"¬Ê ¬ð¼õ ±ýÉ?' ±ýÈ §¸ûÅ¢¨Âì ¸¢ÇôÀ¢

"Å£ÎŨà ¯È×
Å£¾¢ Ũà Á¨ÉÅ¢
¸¡ÎŨà À¢û¨Ç
¸¨¼º¢ Ũà ¡§Ã¡?"

±ýÚ ´Õ ¾¢¨Ãô À¡ð¨¼ì ¸ñ½¾¡ºý ±Ø¾¢Â¢ÕôÀ¡÷. «Å÷ ÁÉ¢¾ý ¬Ê ¬ð¼ò¨¾Ôõ «Åý §¾Ê ¦ºøÅò¨¾Ôõ ÀüÈ¢ì §¸ûÅ¢ ±ØôÒ¸¢È¡÷. ¿¡õ "Å¡úóÐ ¦¸¡ñÊÕìÌõ þó¾ô ÒŢ¢ý ¬ð¼õ ±ôÀÊ?" ±ýÚ §¸ûÅ¢ ±ØôÒ¸¢§È¡õ.

¦¿üÈ¡ð¼õ, ¸¢ÚÅ¡ð¼õ, ÅÄÂõ, ¯ÕðÎ ±ýÈ ±øÄ¡ þÂì¸í¸Ùõ ¿¢ýÚ §À¡É¡ø ÒŢ¡ð¼õ ±ýÉÅ¡Ìõ?

" ±ýÉí¸ ¿£í¸, þÐ ¦¾Ã¢Â¡¾¡? §À¡§Â §À¡îÍ; §À¡Â¢ó¾¢, ÍìÌî Í측¸î º¢¾È¢ô §À¡Ìõ."

þо¡ý ¿¢¨Ä¨Á ±ýÈ¡ø, ¾ý¨É þÕò¾¢ì ¦¸¡ûÇò¾¡ý þùÅÇ× ¬ð¼õ §À¡Î¸¢È¾¡ þó¾ô ÒÅ¢?

þ¨¾ô ÒâóÐ ¦¸¡ûÇ ´ù¦Å¡Õ þÂì¸ò¨¾Ôõ Ó¸¨Á¡ɾ¢ø þÕóÐ ÁüÈÅü¨Èô ¦À¡Õò¾¢ô À¡÷ô§À¡õ. þí§¸ ¯Õð¼Öõ, ÅÄÂÓõ À¼õ -1 -ø ¸¡ð¼ô ÀðÊÕ츢ýÈÉ.

§Á§Ä ¯ûÇ ¿¡ýÌ þÂì¸í¸Ç¢ø ӾĢø ¿¡õ ¯¼§É ¯½Õ¸¢È þÂì¸õ ¯Õð¼ø. þо¡ý ¦ÀâԾ¢ (priority) ¦¸¡ñ¼ þÂì¸õ. þó¾ þÂì¸ò¾¢ý §À¡Ð ÒÅ¢ì §¸¡Çò¾¢ý ´Õ À̾¢ À¸Ä¢ø ´Ç¢Å¡í¸¢ì ¦¸¡ñÊÕì¸ þý¦É¡Õ Àì¸õ þÕÇ¢ø «Á¢úóÐ ¦¸¡ñÊÕ츢ÈÐ. ÌÈ¢ôÀ¢ð¼ §¿Ãõ ¸Æ¢òÐ À¸Ä¡ö þÕó¾ À̾¢ þÕÇ¡¸¢, þÕû À¸Ä¡¸¢ÈÐ. ¯Õð¼ø ¿¢ýÚ §À¡É¡ø, À¸ø À¸§Ä¾¡ý, þÕû þÕ§Ç ¾¡ý. þÕû ¯ûÇ À̾¢Â¢ø ¯Â¢§Ã ±Øó¾¢Õ측Ð. ´Ç¢ÔûÇ À̾¢Â¢ø ¯Â¢¦ÃØó¾¡Öõ «Æ¢óÐ §À¡Â¢ÕìÌõ. ¦Á¡ò¾ò¾¢ø þýÚ ¿¡õ «È¢ó¾ ¿¢Ä¨Åô §À¡Äô ÒÅ¢Ôõ ÅÈñÎ ¯Â¢ÃüÚì ¸¢¼ìÌõ.

«ôÒÈõ ¿¡Á¡ÅÐ ´ýÈ¡ÅÐ? ¿¡õ ¡÷ì̧Á ÌÊÂø§Ä¡õ! ÒÅ¢ ¯Õð¼ø ±ýÀÐ «ùÅÇ× «ÊôÀ¨¼Â¡É ¿õ ¯Â¢Õ째 «ÊôÀ¨¼Â¡É þÂì¸õ.

þÉ¢ ¯Õð¼ø þÕóÐ ÅÄÂõ ¿¢ýÚ §À¡ÉÐ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙ§Å¡õ. ÝâÂÉ¢ý ®÷ôÒ ÒÅ¢¨Â ±ý§È¡ þØòÐ þÉ¢§¾ ÓÂí¸¢ì ¦¸¡ñÊÕìÌõ.

"Å£Øõ þÕÅ÷ìÌ þÉ¢§¾ ÅǢ¢¨¼
§À¡Æô À¼¡ ÓÂìÌ"

ýÚ ÅûÙÅý ¦º¡øÖõ ¯Å¨Á þíÌ «ôÀʧ ¦À¡ÕóÐõ. þó¾ ÓÂìÌ ¿¼ôÀ¾üÌ Óý, ´Õ º¢Ä ¬ñθ§Ç þó¾ô ÒÅ¢ þÕó¾¢ÕìÌõ. «ó¾ ¬ñθû ±ò¾¨É? «¾üÌû ¯Â¢÷ ±Øó¾¢ÕìÌÁ¡? ÁÉ¢¾ý §¾¡ýÚžüÌ º¡üÚì ÜÚ¸û ¯ñ¼¡? þò¾¨¸Â §¸ûÅ¢¸û ±øÄ¡õ þó¾ì ¸ðÊø (case; ÅÆì¸È¢»÷¸û §¸Š¸ðÎ ±ýÚ ¦º¡ø¸¢È¡÷¸§Ç «Ð ¿Îî ¦ºñ¼÷ §À¡Ä þÕ À¢ÈôÀ¢ þÃð¨¼ì ¸¢ÇÅ¢) ¸üÀ¨É¾¡ý.

¾Å¢Ã ÒÅ¢ ÅÄÂõ ´Õ ¿£ûÅð¼õ. «¾¢ø ÝâÂý ´Õ ÌÅ¢Âõ ±ýÚ ¦º¡ý§É¡õ «øÄÅ¡? ÝâÂÉ¢ø þÕóÐ ÒŢ¢ý àÃò¨¾ «Ç󧾡õ ±ýÈ¡ø Á¢¸ì ̨Èó¾ àÃõ ¯ûÇо¡ý §ÅÉ¢ø Ó¼í¸ø; Á¢¸ì ÜÊ àÃõ ¯ûÇÐ ¾¡ý ÀÉ¢ Ó¼í¸ø; þó¾ þÃñÊüÌõ ¿ÎôÀð¼ ¸¡Äò¾¢ø ¾¡ý þÕ ´ì¸ ¿¡û¸û (À¸Öõ þÃ×õ ´§Ã ¦À¡ØÐ ¦¸¡ñ¼ ¿¡ð¸û). «Åü¨È §ÁÆ Å¢Ø ±ýÚõ Ð¨Ä Å¢Ø ±ýÚõ ÜÈ¢§É¡õ. þó¾ ¿¡ýÌ ¿¡ð¸¨ÇÔõ ¨Åò§¾ §Á¨ÄÂ÷ ÀÕÅò¨¾ì ¸½¢ì¸¢È¡÷¸û.

§Á¨ÄÂâý Å¡É¢Âø «È¢Å¢Öõ, żÅâý Å¡É¢Âø «È¢Å¢Öõ ¾Á¢ÆÃ¢ý ¸ÕòÐì¸û °ÎÚÅ¢ì ¸¢¼ì¸¢ýÈÉ ±ý§È ¬úóÐ ÀÊìÌõ §À¡Ð ÒÄôÀθ¢ÈÐ. «¾üÌô ¦ÀÕõ¦À¡ØÐ¸Ç¢ý ¦ÀÂ÷¸§Ç º¡ýÈ¡¸ þÕ츢ýÈÉ. ¦¸¡ïºõ À¡÷ô§À¡§Á!

ÀÉ¢ Ó¼í¸Ä¢ø Å¡¨¼ì ¸¡Äõ ¦¾¡¼í̸¢ÈÐ. ż째 þÕóÐ ÅÕÅÐ Å¡¨¼. þÐ Å¼ó¨¾ ±ýÚõ Å¼ó¾ø ±ýÚõ ¾Á¢Æ¢ø ¦º¡øÄô ¦ÀÚõ. żó¨¾ì ¸¡üÚ ÌÇ¢÷ ¸¡üÚ. þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â Á¡ó¾ý ¦¾ü¸¢ÕóÐ ¾¡ý ż째 §À¡Â¢Õì¸ §ÅñÎõ ±ýÚ ¦º¡øÖžüÌ Å¼ó¾ø>vadanther>vidanther>winther>winter ±ýÀÐõ ´Õ ¸¡Ã½õ.

«ÎòÐ §ÁÆ Å¢ØÅ¢ø Àºó¾õ ¦¾¡¼í̸¢ÈÐ. (ÀͨÁì ¸¡Äõ źó¾õ ±ýÚ ÀÖì¸ô À𼾡ø ż¦Á¡Æ¢¦ÂÉ ÁÂí¸¢ ¿¢ü¸¢§È¡õ.) ¬í¸¢Äò¾¢ø ¦À¡íÌ ±ýÚ ¦º¡ø¸¢È¡÷¸û. ¬Êô ¦ÀÕìÌ ±ýÚ ¦ÅûÇô ¦ÀÕ쨸 ¿¡õ ¦º¡ø¸¢§È¡õ þø¨Ä¡? «Ð §À¡Ä þÂü¨¸ ¾¢Ë¦ÃýÚ ¦ÀÕ¸¢ô ¦À¡í̸¢È¾¡õ. ¦À¡íÌ ±ýÀÐ þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ÅÆì¸ô ÀÊ ¦À¡íÌ>prong>prung>pring>spring ±ýÈ¡Ìõ.

§ÅÉ¢ø Ó¼í¸Ä¢ø ¦Åõ¨Áì ¸¡Äõ ¦¾¡¼í̸¢ÈÐ. ¦ÅõÁø ¸¡Äõ §¸¡¨¼ì ¸¡Äõ. ¦ÅõÁø þó¨¾Â¢§Ã¡ôÀ¢Âô ÀÆì¸ô ÀÊ …¸Ãõ §º÷òÐ swemmer>summer ±ýÈ¡Ìõ.

Á£ñÎõ Ð¨Ä Å¢ØÅ¢ø ¯¾¢÷ ¸¡Äõ ±ýÛõ þ¨Ä¸û «Å¢Øõ ¸¡Äõ ¦¾¡¼í̸¢ÈÐ. þó¨¾Â¢§Ã¡ôÀ¢Âò¾¢ø «Å¢Øõ>«×Ðõ>autumn ±ýÚ ¬Ìõ.

þó¾ Åð¼ò¾¢ø ´ù¦Å¡Õ ÀÕÅÓõ ¸¢ð¼ò¾ð¼ò ¦¾¡ñßÚ ¿¡ð¸û ÅÕõ.

¾Á¢Æ÷¸û þý¦É¡Õ Å¢¾Á¡¸ ÀÕÅí¸¨Ç þÃñÊÃñÎ Á¡¾í¸Ç¡¸ þÕÐ (ÕÐ ±ýÚ Å¼¦Á¡Æ¢ô ÀÎò¾ô ÀÎõ) ±Éô À¡÷ò¾¡÷¸û. þ¾¢ø Ó¼í¸ø¸¨Çô ¦À⾡¸ì ¸Õ¾Å¢ø¨Ä. «¨¾ ´Õ ¸ÏòÐÅÁ¡¸§Å (continuum) À¡÷ò¾¡÷¸û. þó¾ ӨȢø ¬Ú ÀÕÅí¸û ¦¸¡ûÇô ¦ÀÚõ. ¿¡ý þí§¸ ºó¾¢ÃÁ¡É Á¡¾í¸¨Ç ¨ÅòÐî ¦º¡øÖ¸¢§Èý. (¦Åù§ÅÚ Å¨¸Â¡É Á¡¾í¸¨Çô ÀüÈ¢ «ÎòÐ ÅÕõ À̾¢¸Ç¢ø À¡÷ô§À¡õ.)

þǧÅÉ¢ø = º¢ò¾¢¨Ã, ¨Å¸¡º¢
ÓЧÅÉ¢ø = ¬É¢, ¬Ê
¸¡÷ = ¬Å½¢, ÒÃ𼡺¢
ܾ¢÷ = ³ôÀº¢, ¸¡÷ò¾¢¨¸
ÓýÀÉ¢ = Á¡÷¸Æ¢, ¨¾
À¢ýÀÉ¢ = Á¡º¢, ÀíÌÉ¢

§Á§Ä §ÅÉ¢ø ±ýÀ¾üÌô ¦À¡Õû ¦º¡øÄ §Åñ¼¡õ ±ýÚ ±ñϸ¢§Èý.

¸¡÷ ±ýÀÐ ¸Ã¢Â Ó¸¢¨ÄÔõ, Ó¸¢ø ¦À¡Æ¢Ôõ Á¨Æ¨ÂÔõ, Á¨Æì ¸¡Äò¨¾Ôõ ÌÈ¢ìÌõ. ¸¡÷ = Á¨Æì ¸¡Äõ, ¬Å½¢ ¦¾¡¼ì¸õ ±ýÀÐ þÃñ¼¡Â¢Ãõ ¬ñθÙìÌ Óý ÒÅ¢ §ÁƧš¨ÃìÌ §¿§Ã þÕó¾ §À¡Ð Á¢¸î ºÃ¢Â¡¸ þÕó¾Ð. þó¾ì ¸¡Äò¾¢ø ÒŢ¢ý ¸¢ÚÅ¡ð¼õ ¿õ¨Á ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ Á£É§Å¡¨ÃìÌ §¿§Ã ¦¸¡ñÎ §º÷ò¾ ¸¡Ã½ò¾¡ø ÀÆó¾Á¢úì ¸¡Äí¸û Á¡È¢ ÅÕ¸¢ýÈÉ. ¬Å½¢Â¢ý ¦¾¡¼ì¸ò¾¢ø ÅçÅñÊ Á¨Æ ¬Ê À¾¢¦Éðʧħ ÅóРŢθ¢ÈÐ. ±ôÀÊ Àºó¾ ¸¡Äò ¦¾¡¼ì¸õ º¢ò¾¢¨Ã Ó¾ÖìÌ(²ôÃø 14-üÌ)ô À¾¢Ä¡¸ Á¡÷îÍ 21/22 째 ÅóРŢθ¢È§¾¡ «Ð §À¡Äò ¾¡ý þó¾ Á¡üÈò¨¾Ôõ ¦¸¡ûÇ §ÅñÎõ.

ܾ¢÷ ±ýÀ¨¾ ¿õÁ¢ø ÀÄ÷ ܾü¸¡Äõ ±ýÚ ±ñ½¢ì ¦¸¡û¸¢§È¡õ. «Ð ¸ÕòÐô À¢¨Æ. º¢Ä «¸ÃӾĢ¸Ç¢Öõ «ôÀÊ ÅóРŢð¼Ð. «Ð¾¡ý ºÃ¢¦ÂýÈ¡ø ¸¡Äí¸¨Ç ¯½÷ÅÐ ¾Å¦ÈýÚ ¬¸¢Å¢Îõ. «ôÒÈõ ÓýÀÉ¢, À¢ýÀÉ¢ ±¾üÌ? þ¨Ä¸û Ü÷óÐ ¦¸¡ûÙ¸¢È, ãÊì ¦¸¡ûÙ¸¢È, ¯¾¢÷óÐ ¦¸¡ûÙ¸¢È ¸¡Äõ ܾ¢÷ì ¸¡Äõ. ̾¢÷ ±ýÀÐ ÜõÀ¢ì ¸¢¼ôÀÐ. Ü÷ó¾Ð ÜÄõ = Å¢¨¾; Ü÷óÐ ¦¸¡ðÊì ¸¢¼ìÌõ Ìô¨À¨Âì ÜÇõ ±ýÚ ¦º¡ø¸¢§È¡§Á, þ¨Å¦ÂøÄ¡õ ¦¾¡¼÷ÒûÇ ¦º¡ü¸û.

ÀÉ¢ì ¸¡Äõ ±ýÀÐ «ô¦À¡ØÐ ¯ûÇ ÌǢáø ¸¡¨Ä §¿Ãò¾¢ø ¸¡üÈ¢ø ¯ûÇ ®Ãõ ÐÇ¢¸Ç¡ö Á¡È¢ô ÀÄÅ¡¸¢ì ¸¢¼ôÀ¨¾§Â ÌÈ¢ìÌõ. Àø ÀÄÅ¡Ìõ. ÀýÉ¡¸×õ ¬Ìõ.

"Á¢ýÛõ À¢ýÛõ ÀýÛõ ¸ýÛõ
«ó¿¡ü ¦º¡øÖõ ¦¾¡Æ¢ü¦ÀÂ÷ þÂÄ"

±ýÀÐ ¦¾¡ø¸¡ôÀ¢Âõ. ÀýÉ¢ô ÀýÉ¢ô §À;ø ±ýÀÐ ÀÄšȡ¸ô §À;ø, ÀýÛ¾ø ÀÉ¢ò¾Ä¡¸ ¿£Ùõ. ÀÉ¢ ±ýÀÐ ¬í¸¢Ä dew Å¢üÌî ºÃ¢ºÁÁ¡ÉÐ.

þÉ¢ ż¦Á¡Æ¢ ÅÆ¢Â¡É ÀÕÅô ¦ÀÂ÷¸¨Çô À¡÷ô§À¡õ.

ӾĢø ÅÕÅÐ §ÁÆ Å¢ØÅ¢ø ¦¾¡¼íÌõ Àºó¾ þÕÐ. þРż¦Á¡Æ¢Â¢ø źó¾ ÕÐ ±ýÚ ÅÕõ.

«Îò¾Ð ¸ÕÁ þÕÐ. ¦Åö¢Ģø ¸ÕòÐÅ¢ð¼¡ý ±ýÚ ¦º¡ø¸¢§È¡õ þø¨Ä¡? ÓЧÅÉ¢ø ¸Õì¸ ¨ÅìÌõ. ¸ÕÁ>grishma; ¸Õ¿ý>Krishnan ¬ÉÐ §À¡Ä.

ãýÈ¡ÅÐ ÅÆ¢Â þÕÐ; Á¨Æ ¦À¡Æ¢¸¢ÈÐ; ÅÆ¢¸¢ÈÐ. ÅÆ¢>varshi

¿¡ý¸¡ÅÐ þ¨Ä ¯¾¢÷óÐ ¦º¡Ã¢¸¢ýÈ ¸¡Äõ ¦º¡Ã¢¾ü ¸¡Äõ. ¦º¡Ã¢¾ø>sharad

³ó¾¡ÅÐ ÀÕÅõ ÀÉ¢òÐÇ¢ ÀÄÅ¡¸¢ì ÌÁ¢óÐ ¸¢¼ìÌõ ¸¡Äõ ÌÁ¢¾ø= ´ýÚ ÀÄÅ¡¾ø. ÌÁõ* > þÁõ = ÀÉ¢. ÌÁ狀÷óÐ ¸¢¼ìÌõ Á¨Ä ̨Áó¾ Á¨Ä = ÀÉ¢ Á¨Ä= ±É§Å ÌÁ Á¨Ä = †¢ÁÂõ; ̨Áó¾ þÕÐ = hemantha rtu

¬È¡ÅÐ ÀÕÅõ º¢¾Èø ÀÕÅõ; ÀÉ¢î º¢¾Èø ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸î º¢¾È¢ì ̨ȸ¢ÈÐ. º¢¾È þÕÐ> sisira rtu.

ÁüÈ þó¨¾Â¢¦Ã¡ôÀ¢Â÷ ±øÄ¡õ ¿¡Ö ÀÕÅõ ÀüÈ¢ô §Àº¢ì ¦¸¡ñÊÕì¸, ż¦Á¡Æ¢Â¡Ç÷ ÁðÎõ ¾Á¢ÆÃ¢ý ¬ÚÀÕÅí¸û §ÀÍÅРŢó¨¾Â¡ÉÐ. ¬É¡ø ¿¡Ö ÀÕÅõ, ¬Ú ÀÕÅõ «ó¾ô ¦ÀÂ÷¸Ç¢ý ¦À¡Õû¸û ±øÄ¡§Á ¿¡ÅÄó¾£Å¢ý «ÊôÀ¨¼Â¢ø ¨ÅòÐô À¡÷ò¾¡ø ¾¡ý ¦À¡Õû ºÃ¢Â¡¸ Å¢Çí̸¢ýÈÉ.

þó¾ô ÀÕÅí¸û Åð¼Á¡¸ ÅóÐ ¦¸¡ñ§¼ þÕ츢ýÈÉ. þÃ× À¸Ä¡¸¢ÈÐ; À¸ø þÃÅ¡¸¢ÈÐ. þó¾ô ¦ÀÕõ¦À¡ØÐ¸û §À¡Ä§Å º¢Ú¦À¡ØÐ¸¨ÇÔõ ¿¡Ä¡¸×õ, ¬È¡¸×õ ÀÌì¸Ä¡õ. «¨¾ «Îò¾ Ó¨È À¡÷ô§À¡õ.

À¸¨ÄÔõ, ¿¢Æ¨Ä¨ÂÔõ ¨ÅòÐ À¡ÅÄ÷ ²Ú ¦ÀÕﺢò¾¢ÃÉ¡÷ ´Õ ÌӸŢÂü ¸Õò¨¾ì ÜÚŨ¾ô ÀÊÔí¸û.

----------------------------------------------------------------------
¦ÀÚõ ¦ÀüÈ¢

¿¢ÄÓÐÌ ´ÕÒÈõ ¿£Ê ¿¢ÆÖõ
Àĸ¾¢÷ µÊ À¸Öõ §À¡Ä
¯Ç§Å¡÷ ¯ñ¨ÁÔõ þħš÷ þý¨ÁÔõ
«Ç× Å¨ÃòÐ «ý§È! ¬ö þÕ ÁÕíÌõ
¿¢ýÚ ¿£Ù¾ø ¿£û ¿¢ÄòÐ þý§È!
ÌýÈýÉ ¦¸¡Ê ¿¢Úò¾¢ò
¾¢ýÚ ¯öÂò ¾¢Õ šƢÛõ
´ýȢġ÷ìÌ ´ýÚ ÅóÐ ¯¾Åø
À¢ý¨Èò ¾¡õ ¦ÀÚõ ¦ÀüȢ¡õ ¬§È!

¦À¡Æ¢ôÒ:

¿¢Äì §¸¡Çò¾¢ý ŨÇó¾ ÒÈ Óи¢ý ´Õ ÒÈò§¾ Óý§É¡ì¸¢ ¿£ñÎ ¦¸¡ñ§¼ §À¡¸¢ýÈ ¿¢ÆÄ¡¸¢Â þÕÙõ, Áü¦È¡Õ ÒÈò§¾ Àø§¸¡Êì ¸¾¢÷ì ¸ü¨È¸Ç¡ø Å¢¨ÇóÐ Óý§É¡ì¸¢ µÊì ¦¸¡ñÊÕì¸¢È À¸¦Ä¡Ç¢Ôõ §À¡ø, þù×ĸ¢ý ¸ñ ¦À¡Õû ¯ûÇÅâý ¯ÇÅ¡õ ¾ý¨ÁÔõ, «·¾¢øÄÅâý þÄÅ¡õ ¾ý¨ÁÔõ ±ø¨Ä ¿¢¨ÄôÒ¨¼ÂÉ «øÄ. «ùÅ¢ÕÒÈòÐõ ´Õ ¦À¡Ø¾¢ø ¿¢ýÈ ¿¢¨Ä§Â ¦¾¡¼÷óÐ ¿£Êì¸ô ¦ÀÚ¾ø þùŸýÈ ¿¢Äò¾¢ý ¸ñ ¡ñÎõ þø¨Ä. ÌýÈ¢ý ¯Â÷ «ÇÅ¡¸ò ¾õ þÄ¨Éì ¦¸¡Ê¨Â ¿¢Úò¾¢, «¾ý ÀÕÁ «ÇÅ¡¸ò ¾¡Óõ ¾õ À¢Èí¸¨¼ÂÕõ ¾¢ýÚ ¯öÔõ ÀÊ ¾ÁìÌî ¦ºøÅÅÇõ Å¡öó¾¢ÕôÀ¢Ûõ, «ó ¿¢¨Ä¸Ç¢ø ´ýÚ ¾¡Ûõ «¨¼ó¾¢Ä¡÷ìÌ §ÅñΞ¡¸¢Â ´Õ ¦À¡Õ¨Çò ¾õ ¯ûÄõ ¯ÅìÌÁ¡Ú ¯¾×¾§Ä, ¾ÁìÌô ¦À¡Õó¾¢Â ÅÇõ ÌýȢ ¸¡ÄòÐò ¾¡õ ÐöôÀ¾üÌ ¯Ã¢Â Å¡öôÒ ¯ÕÅ¡Ìõ ÅÆ¢Â¡õ!

ŢâôÒ.

þôÀ¡¼ø ÒÈòШȨÂî º¡÷ó¾Ð.

¯Ä¸ ¯Õñ¨¼¨Âî ÍüÈ¢î ÍÆø¸¢ýÈ þÃ×õ À¸Öõ §À¡ø Áì¸ðÌ Å¡öìÌõ ¦ºøÅ ¿¢¨ÄÔõ ÅÚ¨Á ¿¢¨ÄÔõ ŨÃÂÚì¸ô Àð¼É «øÄ. þÕ ¿¢¨Ä¸Ùõ ´Õ ¿¢¨Ä¢§Ä§Â ¿¢üÈø Á¡È¡î ÍÆüº¢Ô¨¼Â ¿¢Äò¾¢ý ¸ñ ¡ñÎõ ¿¨¼ ¦ÀÚ¾ø þø¨Ä. ÌýÚ§À¡ø ÌÅ¢ò¾ ¦ºøÅõ ¯¨¼ÂÅÕõ À¢ü¸¡ÄòÐ «¨¾ò ¾ÅȡРÐöò¾ø «Ã¢Ð; «ùÅ¡Ú ÐöìÌõ ÅÆ¢ «ó¿¢¨Ä ±Ðõ þøÄ¡¾Å÷ìÌ ¯Çõ Á¸¢úŨ¼Ôõ ÀÊì ¦¸¡ÎòÐ ¯¾×¾§Ä ¬Ìõ ±ýÚ ¯Ä¸ Å¢Âü¨¸¨Â ¯½÷ò¾¢ì ÜȢ¾¡Ìõ þôÀ¡ðÎ.

þÐ ¦À¡ÐÅ¢Âø ±ý ¾¢¨½Ôõ, ¦À¡Õñ ¦Á¡Æ¢ì ¸¡ïº¢ ±ý ШÈÔÁ¡Ìõ.
-----------------------------------------------------------------------------------------------------

Tuesday, September 02, 2003

காலங்கள் - 2

2. புவியாடும் கிறுவாட்டம்

பத்து, பன்னிரண்டு அகவையில் பம்பரம் விளையாடி இருக்கிறீர்களோ?

("அட நீங்க ஒண்ணு, யாருங்க இப்பவெல்லாம் பம்பரம் விளையாடுறா?
இப்போதுதான் எங்கு பார்த்தாலும் மட்டையும் பந்துமா, ஆங்கிலக் கிட்டிப்புள் அல்லவா ஆடுகிறார்?

எத்தனை இளையருக்கு நாம் பம்பரம் சொல்லிக் கொடுக்கிறோம்? " - என்கிறீர்களோ? "நீங்கள் சொல்வதும் சரிதான், மொத்தத்தில் இன்னொரு பண்பாட்டுச் சின்னம் போயே போச்சு!")

பம்பரத்தை நூலோடு பிணைத்து சொடுக்கித் தரையில் குத்தும் போது, அது 4 விதமான இயக்கங்களைக் காட்டும்.

முதலில், கூரான அச்சில் இருந்தவாறே தன்னைத்தானே பம்பரம் உருட்டிக் கொள்ளும். (பம்முதல் = நூலோட்டுதல்)

2 ஆவதாகத் தரையில் பரவி (பம்புதல் = பரவுதல்) ஒரு முழு வலயமோ, பாதி வலயமோ போடும்.

இதுபோக 3 ஆவது இயக்கமும் காட்டும். கிறுவாட்டம் (gyration) எனும் இந்த இயக்கத்தை வாழ்வின் பலகாலங்களில் பார்த்துள்ளோம். கீழே விவரமாகப் பார்ப்போம்..

4 ஆவது இயக்கம் தலையாட்டுவது; அதை நெற்றாட்டம் (nutation) என ஆங்கிலத்தில் குறிப்பர்.

சில போதுகளில் தலை கிறுகிறுக்கிறது என்கிறோம் அல்லவா? குறிப்பாக உருளைக் கூட்டைகளில் (roller coaster) ஏறி இறங்கிச் சுற்றி விளையாடி முடிந்தபின் ஏற்படுகிற கிறுகிறுப்பு இக் கிறுவாட்டத்தால் ஏற்படுகிறது. (கிர்ரென்று சுற்றுகிறது, கிறுவுதல், கிறுக்கு, கிறுக்காட்டம், கிறங்கு, கறங்கு போன்றவை இதனோடு தொடர்புடைய சொற்கள்.)

ஊரிலே தென்னம் பாளையைக் குடத்திலிட்டு அம்மனுக்கு மதுக் குடம் எடுக்கிறார்; இதுபோல முருகனை நினைந்து பழனிக்குப் பால்குடம், காவடியாட்டம் எடுத்துப் போகிறார்; இப்பொழுதுகளில் சிலருக்கு மெய்ம் மறந்த நிலையில் கிறுவாட்டம் வருகிறது; தன்னினைவு உள்ளபோது ஆடமுடியாத இக்கிறுவாட்டம் மெய்ம்மறந்து முருகனை நினைக்கும் போது தன்னுளே ஈடுபட்டுச் சட்டென வந்துவிடும். அதில் ஏதோ ஒரு துரித கதி, தாளக் கட்டு, மொத்தத்தில் ஒரு கிறுகிறுப்பு. இக் கிறுகிறுப்பிலும் குடம் கீழே விழாது நிற்கிறது. காவடி அசராது நிற்கிறது.

கிறுவாட்டத்தில் கூடக்குறையத் தலையாட்டுவதைத் தான் நெற்றாட்டம் என்று சொல்லுகிறோம். (நெற்று = nut, இந்த nut -ல் இருந்துதான் nucleus, nuclear science எல்லாம் பிறந்தன. தமிழில் நெற்றுழை என்ற சொல்லே nucleus என்பதை மிகச் சரியாகக் குறிக்கும். தேங்காய் நெற்றை எண்ணிப்பார்த்தால் பொருத்தம் புலப்படும். நெற்றுழை அறிவியல் = nuclear science. நெற்றுவதைத் தான் பேசும் தமிழில் நொட்டுவது என்கிறோம்.)

சூரியனைச் சுற்றி வரும் புவியும் தன்னுருட்டல், வலைத்தல், கிறுவாடல், நெற்றாடல் என 4 இயக்கங்கங்களைக் காட்டுகிறது.

புவியின் தன்னுருட்டு நமக்கு ஞாயிற்றின் ஒளி கூடிக் குறைந்து காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், விடியல் என்ற சிறு பொழுதுகள் வாயிலாகத் தெரிகிறது,

புவியின் வலையம் நமக்கு ஞாயிற்றின் வலயமாகத் தெரிகிறது. இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்ற காலங்களாகப்  பெரும் பொழுதுகளை உணருகிறோம்.

இந்த ஞாயிற்றின் வலயத் தோற்றத்தைத்தான் புறநானூறு 30-ல், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடும் போது சொல்லுவார்:

"செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே"

"எப்படி, எப்படி?"

" நேரே சென்று அளந்து அறிந்தாற் போல".

"செலவு என்றது செல்லப்படும் வீதியை (path); பரிப்பு (speed) என்றது இத்தனை நாழிகைக்கு இத்தனை யோசனை செல்லும் எனும் இயக்கத்தை (motion); மண்டிலம் என்றது வட்டமாதலின் ஈண்டு நிலவட்டத்தைப் பார்வட்டம் என்றார்" என்று உரைகாரர் சொல்லுவார். நாம் என்னடா என்றால், அறிவியலைத் தமிழில் சொல்ல வழியில்லை என்கிறோம்.

மறுபடியும் பம்பரத்துக்கு வருவோம். எடைகுறைந்த பம்பரத்தின் கிறுவாட்டம் சிறுநேரத்தில் முடிவதால் நம் கண்ணுக்கு உடனே தெரிந்து விடுகிறது; தவிரவும் நாம் பம்பரத்தின் மேல் வாழவில்லை. புவியின் கிறுவாட்டம் நமக்குச் சட்டெனப் புரிவதில்லை. ஏனெனில் நாம் புவியின் மேலேயே இருக்கிறோம்; தவிர, புவியின் எடை மிகப் பெரியது. வெறுமே பின் புலத்தை மட்டுமே பார்த்து மிகவும் மெதுவான கிறுவாட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இது சரவலாகிறது. இதை ஆண்டின் 2 நாட்களில் மட்டுமே ஆழப் புரியமுடிகிறது. அது எப்படி?

ஒவ்வொரு பருவகாலத்திலும் பகலும் இரவும் ஒரே பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீள்கிறது; வாடையில் இரவு நீள்கிறது. ஆனாலும் ஆண்டில் 2 நாட்கள் மட்டும் பகலும் இரவும் ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என மேலையர் அழைக்கிறார்.

இளவேனில் தொடக்கத்தில், கிட்டத்தட்ட மார்ச்சு 21/22-ல் ஏற்படும் ஒக்க நாள் பசந்த ஒக்க நாள் [வடமொழியில் வசந்த ஒக்கநாளென்று இச்சொல் மாறும். பசந்த இருது> வசந்த ருது; இருது = 2 மாதம். பசந்தம் எனும்பொழுது இயற்கை பச்சையாடை போடத் துவங்கி விட்டது என்று பொருள். பச்சை, பசலை, பசிதல், பசந்தம் போன்றவை ஒருபொருட்சொற்கள். ஆங்கிலத்தில் இந்நிகழ்வை spring equinox என்பர்.]

கூதிர்காலத் தொடக்கத்தில் ஏறத்தாழ செப்டம்பர் 22/23 -ல் ஏற்படும் ஒக்க நாள் கூதிர் ஒக்கநாள் [இலைகள் கூய்ந்து (குவிந்து) கொட்டத் தொடங்கும் காலம் கூதிர் காலம்; இக்காலத் தமிழில் நீட்டிமுழக்கி இலையுதிர் காலம் என்போம். கூதிர் என்றாலே போதும். இலைகள் கழன்று சொரிவதால் இதைச் சொரிதற் காலம் என்றும் சொல்லலாம். சொரிதல் இருது>சரத் ருது என வடமொழியில் திரியும். ஆங்கிலத்தில் autumn என்பர்]

பசந்த ஒக்கநாளை மேழ விழு என்றும், கூதிர் ஒக்கநாளை துலை விழு என்றும் வானியல் வழி சொல்லுகிறோம். அதை உணரப் புவிவலயம் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும்.

புவிவலயம் ஓர் இயல்வட்டமல்ல. அது நீள்வட்டம். ஓர் இயல்வட்டத்திற்கு ஒரு கூர்ந்தம் (centre) மட்டுமே உண்டு. ஆனால், நீள்வட்டத்திற்கு 2 கூர்ந்தங்கள் குவியமாக (focus) உண்டு. 2 கூர்ந்தங்களில் ஒன்றில்தான் சூரியன் இருக்கிறது. மற்றது வானவெளியில் வெறும் புள்ளி. அங்கே எந்தத் தாரகையோ, கோளோ கிடையாது.

இந் நீள்வட்டத்தில் செல்லும் புவியிலிருந்து சூரியனின் தூரத்தை அளந்தால், ஓரிடத்தில் அதிகத் தூரமாயும் இன்னொரிடத்தில் குறை தூரமாகவும் அமையும். கூடிய தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாள் பனி முடங்கல் (முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல்) என்கிறோம். இது திசம்பர் 22-ம் நாள் ஆகும்.

அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாள் வேனில் முடங்கல் (வேனில் = வெய்யிற் காலம்.) இது சூன் 22ம் நாள்.

பனி முடங்கலில், இரவுநேரம் கூடியும், வேனில் முடங்கலில் பகல்நேரம் கூடியுமிருக்கும். இந்த 2 முடங்கல்களுக்கும் இடையே ஆண்டின் 2 நாட்களில் தான் ஒக்கநாட்கள் வருகின்றன. இன்னொரு விதமாயும் ஒக்க நாட்களைப் புரிந்து கொள்ளலாம். சூரியனின் சுற்றுத்தளம் புவியின் நடுக்கோட்டு வரையை வெட்டும்புள்ளிகள் விழுக்களென ஏற்கனவே கூறினோம் அல்லவா? அவ்விழுக்கள் தான் இந்த ஒக்கநாட்கள். ஒக்கநாட்களில் சூரியனைப் பார்க்கும் போது பின்புலமாகத் தெரியும் நாள்காட்டு, ஓரையின் மூலம் ஒரு மெதுவான இயக்கம் புலப்படும். [மறந்து விடாதீர். நாள்காட்டுக்களும் ஒரைகளும் (இராசிகளும்) வெறும் பின்புலங்களே.]

இன்றைக்கு பசந்த ஒக்கநாளின் போது தெரிகிற பின்புலம் மீன ஓரையாகும். அதுவும் அஃகர ஓரைக்குச் (aquarius) சற்றுமுந்தைய சில பாகைகளில் உள்ள நிலை. (அஃகு = நீரூற்று. அஃகு>aqua; இலத்தீனிலிருந்து பல சொற்கள் இந்தையிரோப்பிய மொழிகளில் இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ளன.) இன்னும் பத்தே ஆண்டுகளில் பசந்த ஒக்க நாள் மீன ஓரையும் அஃகர ஒரையும் கூடும் சந்திப்பிற்கு வந்துசேரும்.

அதேபோல் கூதிர் ஒக்கநாளில் இன்று தெரியும் பின்புலம் கன்னி ஓரை. ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் துலை ஓரை இருந்தது. இனிவரும் 10 ஆண்டுகளுக்குப் பின் மடங்கல் ஒரை (ஆளி ஓரை = leo) வந்து  சேரும்.

இந்திய வானியல் அக்கால அறிவின் தொடக்கத்தை இன்னும் மறவாது, பழம் நினைப்பில் பசந்த ஒக்க நாளை மேழ விழு (மேஷாதி என்று வடமொழியில் கூறுவர்) என்றும் கூதிர் ஒக்க நாளை துலைவிழு என்றும் கூறி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒக்கநாள் சிச்சிறிதாய் முன்நகர்ந்து கொண்டுள்ளது. இதை முன்செலவம் (precession; precede = முன்செல்லு) என்கிறோம். ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரைக்கு முன்வந்த ஒக்கநாள் இன்று மார்சு 21/22-இலேயே நிகழ்கிறது. மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று மீனத்தில் விழுகிறது. கூடிய விரைவில், இன்னும் பத்தாண்டுகளில், கி.பி. 2012 - ல் அஃகர ஓரையில் விழும். அப்படி விழும்போது, புதிய உகத்திற்கு (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga in Sanskrit) நாம் போகிறோம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்.

மொத்த முன் செலவம் முடிய கிட்டத்தட்ட 25800 ஆண்டுகள் ஏற்படும்.. அளவு கோல்கள் நுணுக நுணுக இவ்வியக்கத்தின் நடவுகாலம் துல்லியப்பட்டு வருகிறது. 25800 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஓர் ஓரையில் (உகத்தில்) 25800/12 = 2150 ஆண்டுகள் என்ற பருவ காலம் அமையும்.

ஏசு பெருமான் பிறந்ததற்கு உலகம் எற்றுக் கொண்ட ஆண்டில் இருந்து (இப் பிறந்த நாளே ஆய்வின்பின் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அவர் பிறந்தது 29 சூலை கி.மு. 7 என விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு விவரங்களை வானியலோடு பொருத்தி "Magi - The quest for a secret tradition" என்ற நூலில் Adrian G. Gilbert என்பார் நிறுவுவார்.) 148 ஆண்டுகளின் முன் ஒக்கநாள், மேழத்தைத் தாண்டியிருக்க வேண்டும். அதற்கும் 2150 ஆண்டுகளின் முன் மேழத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.

ஏசுவின் காலத்தில் இரட்டை மீன் அடையாளம் கிறித்தவர்களைக் குறிக்கப் பயன்பட்டது தமிழ் வரலாற்றிலும் இரட்டைமீன், இணைகயல் எனக் குறிக்கப் பட்டு பாண்டியரின் சின்னமானது. இவையெலாம் உகப்பொருத்தம் பற்றியே. மீன உகத்திற்கு முன்னிருந்த ஆட்டையுகம் பற்றித் தான் ஆடு>ஆண்டு என்ற சொல் பிறந்தது. ஆட்டையின் மறு பெயரே மேழம். மேழத்திற்கும் முன் இருந்தது விடை யுகம்.

உகம் உகமாகக் காலம் போய்க் கொண்டுள்ளது. இதோ நேற்றுத்தான் நாம் பிறந்தது போல இருக்கிறது; இன்றோ நம் பிள்ளைகள்; நாளை நம் பெயரர்; அதற்குப்பின் கொள்ளூப் பெயரர்; பின் எள்ளுப் பெயரர். மொத்தத்தில் மாந்த வரலாறு உகங்களால் கணிக்கப் படுகிறது.

காலப் பரிமானங்கள் பலவிதமாக வெளிப்படும். ஆண்டுகள் ஒரு தலை முறையைக் குறிக்கவும், உகங்கள் வாழையடி வாழையைக் குறிக்கவும் பயன்படுகின்றன. போன அதிகாரத்தில் ஆண்டைப் பார்த்தோம். இந்த அதிகாரத்தில் உகங்களைப் பார்க்கிறோம்.

பாவலர் ஏறு பெருஞ் சித்திரனார் காலங்களின் நகர்ச்சி பற்றி ஒரு சுவையான பா இயற்றியுள்ளார். இது அவரின் நூறாசிரியத்தில் எட்டாவது பாவாக வரும்.
---------------------------------------------------------

வலிதே காலம்


வலிதே காலம்; வியப்பல் யாமே!!
முலைமுகம் பதிய மாந்திப் பாஅல்
ஒழுக வாய்வாங்கி "ஊ, ஆய்" என உமிழ்ந்து
தந்தை கழிநகை பெறக் காட்டி, இழிந்து
குறுநடந்தும் ஒடியும் முதுகு இவர்ந்து ஓச்சியும்
நெருநல் ஓவத்து நினைவு அழியாமே,
பார்த்த மேனி படர நடை நெற்றி
ஆடு சிறுகால் அதைந்து உரம் ஏற
மெலிந்த புன் மார்பு பொலிந்து வலியக்
குரல் புலர்ந்தே அணல் தாவ
உளை பொதிந்து கழுத்து அடர
வளை மாதர் மனம் மிதிப்பத்
திமிர்ந்து எழுந்து நின்றார்க்குப்
பணைந்து எழுந்த இணை நகிலம்
குறு நுசுப்புப் பேர் அல்குல்
வால் எயிற்றுக் கழை தோளி
முனை ஒருநாள் வரைக் கொண்டு
மனை தனி வைக்க என் சிறுமகன் தானும்
பெறல் தந்த பெரு மகன் உவக் காண்,
திறல் நந்த யாங்கு இவன் தேடிக் கொண்டதே!

- நூறாசிரியம் - 8

பொழிப்பு:

வலிவுடையது காலம்; வியப்புறுவோம் யாம்! தாயிடத்து முலையின் மிசை, குழவியின் முகம் முற்றும் பதியும் படி பாலை வயிறு முட்ட அருந்தி, அஃது ஒழுகிக் கொண்டிருக்கும் படி தன் வாயை மீட்டு வெளியெடுத்தும், "ஊ, ஆய்" என உமிழ்ந்து, தன் தந்தை பெருநகை செய்யுமாறு காட்டி, எம் மடியின் நின்று இறங்கிக் குறுகிய அடிகள் சார்ந்த நடை இட்டும், சில பொழுது ஓடியும், சிலகால் தன் தந்தையின் முதுகின் மிசை ஏறி, அவரைக் குதிரையாக எண்ணி ஓச்சியும் நின்ற, நேற்றையப் பொழுதின் ஓவியம் எனப் பதிந்த என் நினைவுகள் அழியாமல் நிற்கவும், யாம் பார்த்து மகிழ்வுற்ற மேனி படர்ந்து பொலியவும், நடை தடுமாறி அடி நின்ற சிறிய கால்கள் விம்மிப் புடைத்து உரம் ஏறி நிற்கவும், மெலிந்து நின்ற சிறிய மார்பு அழகு பெற, வலிவு பெற்று நிற்பவும், குரல் தடிப்பவும், முக வாயினும் தாடையினும் அடர்ந்த மீசையும் தாடியும் தாவி நிற்பவும், தலை மயிர் அடர்ந்து, வளர்ந்து கழுத்தை அளாவி நிற்பவும், உடல்கட்டு மிகுந்து வளர்ச்சியுற்று நிற்கவும் செய்தானுக்குப் பருந்து விம்மி இணைந்து நின்ற முலைகளும், குறுகி ஒடுங்கிய இடைகளும், அகன்ற இடைக்கீழ் கடிதடமும், வெள்ளிய எயிறும், மூங்கில் போன்ற தோள்களும் கண்டாள் ஒருத்தியை, முன்னைய ஒரு நாள் மணங் கொண்டு, தனி மனையில் வதியும் படி வைக்க, எம் சிறு மகனாகிய அவன் தானும் பெற்றுத் தந்த பெருமை பொருந்திய தன் மகனை உதோ, இவன் காண்! தன்க்குற்ற திறமை நிறையும் படி அவ்வாற்றலைத் தேடிக் கொண்டது யாங்ஙன்?

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தன் மகனின் குழவிப் பருவத்தையும், அவன் விரைந்து வளர்ந்து இளைஞனாகி மணம் புரிந்து, ஈண்டொரு மகனுக்குத் தந்தையாகி நின்ற காலத்தையும் கண்ட தாய் ஒருத்தி, வன் இத்திறம் பெற்றது எங்ஙனோ என வியந்து கூறியதாக அமைந்தது இப்பாட்டு.

இது தாயொருத்தித் தன் தாய்மையுள்ளத்தால் தன் மகன் பெற்ற பிள்ளையைக் கண்டு மகிழ்ந்து கூறிக் காலத்தை வியந்தது.

இஃது இல்லிருந்து மனையறாம் பூண்ட தன் மகன் திறம் உரைத்ததாகலின் முல்லையென் திணையும், கிளந்த தமர் வயின் நற்றாய் கிளத்தல் என் துறையுமாம்.

காலத்தின் பெரிய பரிமானம் பார்த்தோம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII

¸¡Äí¸û - 2

2. ÒŢ¡Îõ ¸¢ÚÅ¡ð¼õ

´Õ ÀòÐ, ÀýÉ¢ÃñÎ «¸¨Å¢ø ÀõÀÃõ Å¢¨ÇÂ¡Ê þÕ츢ȣ÷¸§Ç¡?

("«¼ ¿£í¸ ´ñÏ,
¡Õí¸ þôÀ¦ÅøÄ¡õ ÀõÀÃõ Å¢¨Ç¡ÎÈ¡?
þô§À¡Ð¾¡ý ±íÌ À¡÷ò¾¡Öõ Áð¨¼Ôõ ÀóÐÁ¡, ¬í¸¢Äì ¸¢ðÊôÒû «øÄÅ¡ ¬Î¸¢È¡÷¸û?
±ò¾¨É þ¨ÇÂÕìÌ ¿¡õ ÀõÀÃõ ¦º¡øÄ¢ì ¦¸¡Î츢§È¡õ? " - ±ý¸¢È£÷¸§Ç¡?

"¿£í¸û ¦º¡øÅÐõ ºÃ¢¾¡ý, ¦Á¡ò¾ò¾¢ø þý¦É¡Õ ÀñÀ¡ðÎî º¢ýÉõ §À¡§Â §À¡îÍ!")

ÀõÀÃò¨¾ á§Ä¡Î À¢¨½òÐ ¦º¡Î츢ò ¾¨Ã¢ø ÌòÐõ §À¡Ð, «Ð ¿¡ýÌ Å¢¾Á¡É þÂì¸í¸¨Çì ¸¡ðÎõ.

ӾĢø, ÜÃ¡É «îº¢ø þÕó¾ Å¡§È ¾ý¨Éò¾¡§É ÀõÀÃõ ¯ÕðÊì ¦¸¡ûÙõ. (ÀõÓ¾ø = á§Ä¡ðξø)

þÃñ¼¡Å¾¡¸ò ¾¨Ã¢ø ÀÃÅ¢ (ÀõÒ¾ø = ÀÃ×¾ø) ´Õ ÓØ ÅħÁ¡, À¡¾¢ ÅħÁ¡ §À¡Îõ.

þÐ §À¡¸ ãýÈ¡ÅРŢ¾Á¡É þÂì¸Óõ ¸¡ðÎõ. ¸¢ÚÅ¡ð¼õ (gyration) ±ýÈ þó¾ þÂì¸ò¨¾ Å¡úÅ¢ý ÀÄ ¸¡Äí¸Ç¢ø À¡÷ò¾¢Õ츢§È¡õ. ¸£§Æ Å¢ÅÃÁ¡¸ô À¡÷ô§À¡õ..

¿¡Ä¡ÅÐ þÂì¸õ ¾¨Ä¡ðÎÅÐ; «¨¾ ¦¿üÈ¡ð¼õ (nutation) ±É ¬í¸¢Äò¾¢ø ÌÈ¢ôÀ÷.

º¢Ä §À¡Ð¸Ç¢ø ¾¨Ä ¸¢Ú¸¢Ú츢ÈÐ ±ýÚ ¦º¡ø¸¢§È¡õ «øÄÅ¡? ÌÈ¢ôÀ¡¸ ¯Õ¨Çì Ü𨼸Ǣø (roller coaster) ²È¢ þÈí¸¢î ÍüÈ¢ Å¢¨ÇÂ¡Ê ÓÊó¾À¢ý ²üÀθ¢È ¸¢Ú¸¢ÚôÒ þó¾ì ¸¢ÚÅ¡ð¼ò¾¡ø ¾¡ý ²üÀθ¢ÈÐ. (¸¢÷¦ÃýÚ ÍüÚ¸¢ÈÐ, ¸¢Ú×¾ø, ¸¢ÚìÌ, ¸¢Ú측ð¼õ, ¸¢ÈíÌ, ¸ÈíÌ §À¡ýȨЦ¾¡¼÷Ò¨¼Â ¦º¡ü¸û.)

°Ã¢§Ä ¦¾ýÉõ À¡¨Ç¨Âì ̼ò¾¢ø þðÎ «õÁÛìÌ ÁÐì̼õ ±Î츢ȡ÷¸û; þÐ §À¡Ä ÓÕ¸¨É ¿¢¨ÉóÐ ÀÆÉ¢ìÌô À¡øÌ¼õ, ¸¡ÅÊ¡ð¼õ ±ÎòÐô §À¡¸¢È¡÷¸û; þó¾ô ¦À¡ØÐ¸Ç¢ø º¢ÄÕìÌ ¦ÁöõÁÈó¾ ¿¢¨Ä¢ø ¸¢ÚÅ¡ð¼õ ÅÕ¸¢ÈÐ; ¾ýÉ¢¨É× ¯ûÇ §À¡Ð ¬¼ÓÊ¡¾ þó¾ì ¸¢ÚÅ¡ð¼õ ¦Áö ÁÈóÐ ÓÕ¸¨É ¿¢¨ÉìÌõ §À¡Ð ¾ýÛû§Ç ®ÎÀðÎî ºð¦¼É ÅóРŢθ¢ÈÐ. «¾¢ø ²§¾¡ ´Õ Ðâ¾ ¸¾¢, ¾¡Çì ¸ðÎ, ¦Á¡ò¾ò¾¢ø ´Õ ¸¢Ú¸¢ÚôÒ. þó¾ì ¸¢Ú¸¢ÚôÀ¢Öõ ̼õ ¸£§Æ ŢơР¿¢ü¸¢ÈÐ. ¸¡ÅÊ «ºÃ¡Ð ¿¢ü¸¢ÈÐ.

¸¢ÚÅ¡ð¼ò¾¢ø ܼì ̨ÈÂò ¾¨Ä¡ðÎŨ¾ò ¾¡ý ¦¿üÈ¡ð¼õ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. (¦¿üÚ = nut, þó¾ nut -ø þÕóо¡ý nucleus, nuclear science ±øÄ¡õ À¢Èó¾É. ¾Á¢Æ¢ø ¦¿üÚ¨Æ ±ýÈ ¦º¡ø§Ä nucleus ±ýÀ¨¾ Á¢¸î ºÃ¢Â¡¸ì ÌÈ¢ìÌõ. §¾í¸¡ö ¦¿ü¨È ±ñ½¢ô À¡÷ò¾¡ø ¦À¡Õò¾õ ÒÄôÀÎõ. ¦¿üÚ¨Æ «È¢Å¢Âø = nuclear science. ¦¿üÚŨ¾ò¾¡ý §ÀÍõ ¾Á¢Æ¢ø ¦¿¡ðÎÅÐ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.)

Ýâ¨Éî ÍüÈ¢ÅÕõ ÒÅ¢Ôõ ¾ýÛÕð¼ø, ŨÄò¾ø, ¸¢ÚÅ¡¼ø, ¦¿üÈ¡¼ø ±É ¿¡ýÌ þÂì¸í¸í¸¨Çì ¸¡ðθ¢ÈÐ.

ÒŢ¢ý ¾ýÛÕðÎ ¿ÁìÌ »¡Â¢üÈ¢ý ´Ç¢ ÜÊì ̨ÈóÐ ¸¡¨Ä, À¸ø, ±üÀ¡Î, Á¡¨Ä, ¡Áõ, Å¢ÊÂø ±ýÈ º¢Ú ¦À¡ØÐ¸û š¢ġ¸ò ¦¾Ã¢¸¢ÈÐ,

ÒŢ¢ý ŨÄÂõ ¿ÁìÌ »¡Â¢üÈ¢ý ÅÄÂÁ¡¸ò ¦¾Ã¢¸¢ÈÐ. þǧÅÉ¢ø, ÓЧÅÉ¢ø, ¸¡÷, ܾ¢÷, ÓýÀÉ¢, À¢ýÀÉ¢ ±ýÈ ¸¡Äí¸Ç¡¸ þó¾ô ¦ÀÕõ ¦À¡ØÐ¸¨Ç ¯½Õ¸¢§È¡õ.

þó¾ »¡Â¢üÈ¢ý ÅÄÂò §¾¡üÈò¨¾ò¾¡ý ÒÈ¿¡ëÚ 30-ø, ¯¨Èä÷ Óиñ½ý º¡ò¾É¡÷ §º¡Æý ¿Äí¸¢ûÇ¢¨Âô ÀüÈ¢ô À¡Îõ §À¡Ð ¦º¡øÖÅ¡÷:

"¦ºï»¡Â¢üÚî ¦ºÄ×õ «ï »¡Â¢üÚô
ÀâôÒõ ÀâôÒî Ýúó¾ ÁñÊÄÓõ,
ÅÇ¢¾¢Ã¢¾Õ ¾¢¨ºÔõ
ÅȢР¿¢¨Äþ ¸¡ÂÓõ ±ýÚ þ¨Å
¦ºýÚ «ÇóÐ «È¢ó¾¡÷ §À¡Ä ±ýÚõ
þ¨ÉòÐ ±ý§À¡Õõ ¯Ç§Ã"

"±ôÀÊ, ±ôÀÊ?"

" §¿§Ã ¦ºýÚ «ÇóÐ «È¢ó¾¡ü §À¡Ä".

"¦ºÄ× ±ýÈÐ ¦ºøÄôÀÎõ Å£¾¢¨Â (path); ÀâôÒ (speed) ±ýÈÐ þò¾¨É ¿¡Æ¢¨¸ìÌ þò¾¨É §Â¡º¨É ¦ºøÖõ ±ýÛõ þÂì¸ò¨¾ (motion); ÁñÊÄõ ±ýÈÐ Åð¼Á¡¾Ä¢ý ®ñÎ ¿¢ÄÅð¼ò¨¾ô À¡÷Åð¼¦ÁýÈ¡÷" ±ýÚ ¯¨Ã¸¡Ã÷ ¦º¡øÖÅ¡÷.

¿¡õ ±ýɼ¡¦ÅýÈ¡ø, «È¢Å¢Â¨Äò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÅÆ¢Â¢ø¨Ä ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

ÁÚÀÊÔõ ÀõÀÃòÐìÌ ÅÕ§Å¡õ. ±¨¼ ̨Èó¾ ÀõÀÃò¾¢ý ¸¢ÚÅ¡ð¼õ º¢È¢Â §¿Ãò¾¢ø ÓÊŨ¼Å¾¡ø ¿õ ¸ñÏìÌ ¯¼§É ¦¾Ã¢óÐŢθ¢ÈÐ; ¾Å¢Ã×õ ¿¡õ ÀõÀÃò¾¢ý §Áø Å¡ÆÅ¢ø¨Ä. ¬É¡ø, ÒŢ¢ý ¸¢ÚÅ¡ð¼õ ¿ÁìÌ «ùÅÇ× ºð¦¼Éô Ò➢ø¨Ä. ²¦ÉýÈ¡ø ¿¡õ ÒŢ¢ý §Á§Ä§Â þÕ츢§È¡õ; ¾Å¢Ã, ÒŢ¢ý ±¨¼ Á¢¸ô ¦ÀâÂÐ. ¦ÅÚ§Á À¢ý ÒÄò¨¾ ÁðΧÁ À¡÷òÐ Á¢¸×õ ¦ÁÐÅ¡É ¸¢ÚÅ¡ð¼ò¨¾ô ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÊ þÕ츢ÈÐ. þÐ ºÃÅÄ¡ö þÕ츢ÈÐ. þ¨¾ ¬ñÊý þÕ ¿¡ð¸Ç¢ø ÁðΧÁ ¬Æô Òâ Óʸ¢ÈÐ.

«Ð ±ôÀÊ?

´ù¦Å¡Õ ÀÕŸ¡Äò¾¢Öõ À¸Öõ þÃ×õ ´§Ã ¦À¡Ø¾¡¸ 12 Á½¢ §¿Ãõ þÕôÀ¾¢ø¨Ä. §¸¡¨¼Â¢ø À¸ø ¿£Ù¸¢ÈÐ; Å¡¨¼Â¢ø þÃ× ¿£Ù¸¢ÈÐ. ¬É¡Öõ ¬ñÊø þÕ ¿¡ð¸û À¸Öõ þÃ×õ ´ò¾ ¿¡ð¸Ç¡¸ «¨Á¸¢ýÈÉ. «ó¾ ¿¡ð¸¨Ç ´ì¸ ¿¡ð¸û (equinoxes) ±ý§È §Á¨ÄÂ÷ «¨Æì¸¢ýÈÉ÷.

þǧÅÉ¢ø ¦¾¡¼ì¸ò¾¢ø, ¸¢ð¼ò¾ð¼ Á¡÷îÍ 21/22-ø ²üÀÎõ ´ì¸ ¿¡û Àºó¾ ´ì¸ ¿¡û [ż¦Á¡Æ¢Â¢ø Åºó¾ ´ì¸¿¡¦ÇýÚ þó¾î ¦º¡ø Á¡Úõ. Àºó¾ þÕÐ> źó¾ ÕÐ; þÕÐ = þÃñÎ Á¡¾õ. Àºó¾õ ±ýÛõ ¦À¡ØÐ þÂü¨¸ À¡¨¼ §À¡¼ò ÐÅí¸¢ Å¢ð¼Ð ±ýÚ ¦À¡Õû. À, Àº¨Ä, Àº¢¾ø, Àºó¾õ §À¡ýȨŠ´Õ¦À¡Õû ¦º¡ü¸û. ¬í¸¢Äò¾¢ø þó¾ ¿¢¸ú¨Å spring equinox ±ýÀ÷.]

ܾ¢÷ ¸¡Äò ¦¾¡¼ì¸ò¾¢ø ¸¢ð¼ò¾ð¼ ¦ºô¼õÀ÷ 22/23 -ø ²üÀÎõ ´ì¸ ¿¡û ܾ¢÷ ´ì¸ ¿¡û [þ¨Ä¸û ÜöóÐ (ÌÅ¢óÐ) ¦¸¡ð¼ò ¦¾¡¼íÌõ ¸¡Äõ ܾ¢÷ ¸¡Äõ; þó¾ì ¸¡Äò ¾Á¢Æ¢ø ¿£ðÊ ÓÆì¸¢ þ¨ÄÔ¾¢÷ ¸¡Äõ ±ý§À¡õ. ܾ¢÷ ±ýÈ¡§Ä §À¡Ðõ. þ¨Ä¸û ¸ÆñÎ ¦º¡Ã¢¸¢È¾¡ø þ¨¾î ¦º¡Ã¢¾ü ¸¡Äõ ±ýÚõ ¦º¡øÄÄ¡õ. ¦º¡Ã¢¾ø þÕÐ>ºÃò ÕÐ ±É ż¦Á¡Æ¢Â¢ø ¾¢Ã¢Ôõ. ¬í¸¢Äò¾¢ø autumn ±Éî ¦º¡øÅ÷]

Àºó¾ ´ì¸¿¡¨Ç §ÁÆ Å¢Ø ±ýÚõ, ܾ¢÷ ´ì¸ ¿¡¨Ç Ð¨Ä Å¢Ø ±ýÚõ Å¡É¢Âø ÅÆ¢ ¦º¡øÖ¸¢§È¡õ. «¨¾ ¯½Ãô ÒŢ¢ý ÅÄÂõ ÀüÈ¢ô ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÎõ.

ÒŢ¢ý ÅÄÂõ ´Õ þÂø Åð¼ÁøÄ. «Ð ´Õ ¿£û Åð¼õ. ´Õ þÂø Åð¼ò¾¢üÌ ´Õ Ü÷ó¾õ (centre) ÁðΧÁ ¯ñÎ. ¬É¡ø, ¿£û Åð¼ò¾¢üÌ þÕ Ü÷ó¾í¸û ÌÅ¢ÂÁ¡¸ (focus) ¯ñÎ. þÕ Ü÷ó¾í¸Ç¢ø ´ýÈ¢ø ¾¡ý ÝâÂý þÕ츢ÈÐ. ÁüÈРšɦÅǢ¢ø ¦ÅÚ§Á ´Õ ÒûÇ¢. «í§¸ ±ó¾ò ¾¡Ã¨¸§Â¡, §¸¡§Ç¡ ¸¢¨¼Â¡Ð.

þó¾ ¿£ûÅð¼ò¾¢ø ¦ºøÖõ ÒŢ¢ø þÕóÐ ÝâÂÉ¢ý àÃò¨¾ «Ç󾡸, µÃ¢¼ò¾¢ø «¾¢¸ àÃÁ¡¸×õ þý¦É¡Õ þ¼ò¾¢ø ̨Èó¾ àÃÁ¡¸×õ «¨Á¸¢ÈÐ. ÜÊ àÃò¾¢ø ÒÅ¢Ôõ ÝâÂÛõ «¨ÁÔõ ¿¡û ÀÉ¢ Ó¼í¸ø (Ó¼í¸ø = «¨Á¾ø; Ó¼í¸¢ô §À¡¾ø; Á¡ðÊì ¦¸¡ûÙ¾ø; ÀÉ¢ì ¸¡Äò¾¢ø «¨Á¾ø) ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þÐ ¾¢ºõÀ÷ 22-õ ¿¡û ¬Ìõ.

«ñ¨Áò àÃò¾¢ø ÒÅ¢Ôõ ÝâÂÛõ «¨ÁÔõ ¿¡û §ÅÉ¢ø Ó¼í¸ø (§ÅÉ¢ø = ¦Åö¢ü ¸¡Äõ.) þÐ Ýý 22õ ¿¡û.

ÀÉ¢ Ó¼í¸Ä¢ø, þÃ× §¿Ãõ ÜÊÔõ, §ÅÉ¢ø Ó¼í¸Ä¢ø À¸ø §¿Ãõ ÜÊÔõ þÕìÌõ. þó¾ þÕ Ó¼í¸ø¸ÙìÌõ þ¨¼§Â ¬ñÊý þÕ ¿¡ð¸Ç¢ø ¾¡ý ´ì¸ ¿¡ð¸û ÅÕ¸¢ýÈÉ. þý¦É¡Õ Å¢¾Á¡¸×õ þó¾ ´ì¸ ¿¡ð¸¨Çô ÒâóÐ ¦¸¡ûÇÄ¡õ. ÝâÂÉ¢ý ÍüÚò¾Çõ ÒŢ¢ý ¿Î째¡ðÎŨè ¦Åðθ¢ýÈ ÒûÇ¢¸û Å¢Øì¸û ±ýÚ ²ü¸É§Å ÜÈ¢§É¡õ «øÄÅ¡? «ó¾ Å¢Øì¸û ¾¡ý þó¾ ´ì¸ ¿¡ð¸û. þó¾ ´ì¸ ¿¡ð¸Ç¢ø Ýâ¨Éô À¡÷츢ýÈ §À¡Ð «¾ý À¢ýÒÄÁ¡¸ò ¦¾Ã¢Ôõ ¿¡û¸¡ðÎ, µ¨Ã¢ý ãÄõ ´Õ ¦ÁÐÅ¡É þÂì¸õ ÒÄôÀθ¢ÈÐ. [ÁÈóРŢ¼¡¾£÷¸û, ¿¡û¸¡ðÎì¸Ùõ ´¨Ã¸Ùõ (þẢ¸Ùõ) ¦ÅÚõ À¢ýÒÄí¸û ¾¡ý.]

þý¨ÈìÌ Àºó¾ ´ì¸ ¿¡Ç¢ý §À¡Ð ¦¾Ã¢¸¢È À¢ýÒÄõ Á£É µ¨Ã. «Ð×õ «·¸Ã µ¨ÃìÌî (aquarius) ºüÚ Óó¾¢Â º¢Ä À¡¨¸¸Ç¢ø þÕìÌõ ¿¢¨Ä. («·Ì = ¿£åüÚ. «·Ì>aqua; þÄò¾£É¢ø þÕóÐ ÀĦº¡ü¸û þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø þó¾î ¦º¡ø¨Ä «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ ±Øó¾¢Õ츢ýÈÉ.) þýÛõ Àò§¾ ¬ñθǢø Àºó¾ ´ì¸ ¿¡û Á£É µ¨ÃÔõ «·¸Ã ´¨ÃÔõ ÜÎõ ºó¾¢ôÀ¢üÌ ÅóÐ §ºÕõ.

«§¾ §À¡Äì ܾ¢÷ ´ì¸ ¿¡Ç¢ý §À¡Ð þý¨ÈìÌò ¦¾Ã¢¸¢È À¢ýÒÄõ ¸ýÉ¢ µ¨Ã. ¬É¡ø ¸¢ð¼ò ¾ð¼ þÃñ¼¡Â¢Ãõ ¬ñθÙìÌ Óý Ð¨Ä µ¨Ã þÕó¾Ð. þÉ¢ ÅÕõ Àò¾¡ñθÙìÌô À¢ý Á¼í¸ø ´¨Ã (¬Ç¢ µ¨Ã = leo)
ÅóÐ §ºÕõ.

þó¾¢Â Å¡É¢Âø «ó¾ì ¸¡Ä «È¢Å¢ý ¦¾¡¼ì¸ò¨¾ þýÛõ ÁÈ측Áø, À¨ÆÂ ¿¢¨ÉôÀ¢ø Àºó¾ ´ì¸ ¿¡¨Ç §ÁÆ Å¢Ø (§Á„¡¾¢ ±ýÚ Å¼¦Á¡Æ¢Â¢ø ÜÚÅ÷) ±ýÚõ ܾ¢÷ ´ì¸ ¿¡¨Ç ШÄÅ¢Ø ±ýÚ§Á ÜÈ¢ ÅÕ¸¢ÈÐ.

´ù¦Å¡Õ ¬ñÎõ ´ì¸ ¿¡û º¢È¢Ð º¢È¢¾¡¸ Óý¿¸÷óÐ ¦¸¡ñÊÕ츢ÈÐ. þ¨¾ Óý¦ºÄÅõ (precession; precede = Óý¦ºøÖ) ±ýÚ ÜÚ¸¢§È¡õ. ´Õ ¸¡Äò¾¢ø ²ôÃø 14 -ø §ÁÆ ´¨ÃìÌ Óý Åó¾ ´ì¸ ¿¡û þý¨ÈìÌ Á¡÷Í 21/22-§Ä§Â ¿¢¸ú¸¢ÈÐ. §ÁÆò¾¢ø Å¢Øó¾ Àºó¾ ´ì¸ ¿¡û þýÚ Á£Éò¾¢ø Ţظ¢ÈÐ. ÜÊ Ţ¨ÃÅ¢ø, þýÛõ Àò¾¡ñθǢø ¸¢.À¢. 2012 - ø «·¸Ã µ¨Ã¢ø Å¢Øõ. «ôÀÊ Å¢Øõ §À¡Ð, Ò¾¢Â ¯¸ò¾¢üÌ (¯¸õ = ´ýÚ §ºÕõ ¸¡Äõ; ¯¸õ>Ô¸õ>yuga in Sanskrit) ¿¡õ §À¡¸¢§È¡õ ±ýÚ ÅÃÄ¡üÈ¡º¢Ã¢Â÷¸û ¦º¡øÖ¸¢È¡÷¸û.

¦Á¡ò¾ Óý ¦ºÄÅõ ÓÊ ¸¢ð¼ò¾ð¼ 25800 ¬ñθû ²üÀθ¢ýÈÉ. «Ç× §¸¡ø¸û Ñϸ Ñϸ þó¾ þÂì¸ò¾¢ý ¿¼× ¸¡Äõ ÐøÄ¢Âô ÀðÎ ÅÕ¸¢ÈÐ. 25800 ¬ñθû ±ýÚ ±ÎòÐì ¦¸¡ñ¼¡ø, ´Õ µ¨Ã¢ø (¯¸ò¾¢ø) 25800/12 = 2150 ¬ñθû ±ýÈ ÀÕÅ ¸¡Äõ «¨ÁÔõ.

²Í ¦ÀÕÁ¡ý À¢Èó¾¾üÌ ¯Ä¸õ ±üÚì ¦¸¡ñ¼ ¬ñÊø þÕóÐ (þó¾ô À¢Èó¾ ¿¡§Ç ¬öÅ¢ý À¢ý þý¨ÈìÌ §¸ûÅ¢ìÌ ¯ûÇ¡ì¸ô Àθ¢ÈÐ. «Å÷ À¢Èó¾Ð 29 Ý¨Ä ¸¢.Ó. 7 ±ýÚ Å¢Å¢Ä¢Âò¾¢ý Ò¾¢Â ²üÀ¡ðΠŢÅÃí¸¨Ç Å¡É¢Â§Ä¡Î ¦À¡Õò¾¢ "Magi - The quest for a secret tradition" ±ýÈ áÄ¢ø Adrian G. Gilbert ¿¢Ú×Å¡÷.) 148 ¬ñθǢý Óý ´ì¸¿¡û, §ÁÆò¨¾ò ¾¡ñÊ¢Õì¸ §ÅñÎõ. «¾üÌõ 2150 ¬ñθǢý Óý §ÁÆò¾¢üÌû ѨÆó¾¢Õì¸ §ÅñÎõ.

²ÍÅ¢ý ¸¡Äò¾¢ø þÃ𨼠Á£ý «¨¼Â¡Çõ ¸¢È¢ò¾Å÷¸¨Çì ÌÈ¢ì¸ô ÀÂýÀð¼Ð ¾Á¢ú ÅÃÄ¡üÈ¢Öõ þÃ𨼠Á£ý, þ¨½ ¸Âø ±Éì ÌÈ¢ì¸ô ÀðÎ À¡ñÊÂâý º¢ýÉõ ¬ÉÐ. þ¨Å¦ÂøÄ¡õ þó¾ ¯¸ô ¦À¡Õò¾õ ÀüÈ¢§Â. Á£É ¯¸ò¾¢üÌ Óý þÕó¾ ¬ð¨¼Ô¸õ ÀüÈ¢ò¾¡ý ¬Î>¬ñÎ ±ýÈ ¦º¡ø À¢Èó¾Ð. ¬ð¨¼Â¢ý ÁÚ ¦À§à §ÁÆõ. §ÁÆò¾¢üÌõ Óý þÕó¾Ð Å¢¨¼ Ô¸õ.

¯¸õ ¯¸Á¡¸ì ¸¡Äõ §À¡öì ¦¸¡ñÊÕ츢ÈÐ. þ§¾¡ §¿üÚò¾¡ý ¿¡õ À¢Èó¾Ð §À¡Ä þÕ츢ÈÐ; þý§È¡ ¿õ À¢û¨Ç¸û; ¿¡¨Ç ¿õ ¦ÀÂÃ÷¸û; «¾üÌô À¢ý ¦¸¡ûéô ¦ÀÂÃ÷¸û; À¢ý ±ûÙô ¦ÀÂÃ÷¸û. ¦Á¡ò¾ò¾¢ø Á¡ó¾ ÅÃÄ¡Ú ¯¸í¸Ç¡ø ¸½¢ì¸ô Àθ¢ÈÐ.

¸¡Äí¸Ç¢ý ÀâÁ¡Éí¸û ÀÄÅ¢¾Á¡¸ ¦ÅÇ¢ôÀÎõ. ¬ñθû ´Õ ¾¨ÄӨȨÂì ÌÈ¢ì¸×õ, ¯¸í¸û Å¡¨ÆÂÊ Å¡¨Æ¨Âì ÌÈ¢ì¸×õ ÀÂýÀθ¢ýÈÉ. §À¡É «¾¢¸¡Ãò¾¢ø ¬ñ¨¼ô À¡÷ò§¾¡õ. þó¾ «¾¢¸¡Ãò¾¢ø ¯¸í¸¨Çô À¡÷츢§È¡õ.

À¡ÅÄ÷ ²Ú ¦ÀÕï º¢ò¾¢ÃÉ¡÷ ¸¡Äí¸Ç¢ý ¿¸÷ ÀüÈ¢ ´Õ ͨÅÂ¡É À¡ þÂüȢ¢Õ츢ȡ÷. þÐ «ÅÕ¨¼Â áÈ¡º¢Ã¢Âò¾¢ø ±ð¼¡ÅÐ À¡Å¡¸ ÅÕõ.
---------------------------------------------------------

ÅÄ¢§¾ ¸¡Äõ


ÅÄ¢§¾ ¸¡Äõ; Å¢ÂôÀø ¡§Á!!
Ó¨ÄÓ¸õ À¾¢Â Á¡ó¾¢ô À¡«ø
´Ø¸ Å¡öÅ¡í¸¢ "°, ¬ö" ±É ¯Á¢úóÐ
¾ó¨¾ ¸Æ¢¿¨¸ ¦ÀÈì ¸¡ðÊ, þÆ¢óÐ
ÌÚ¿¼óÐõ ´ÊÔõ ÓÐÌ þÅ÷óÐ µîº¢Ôõ
¦¿Õ¿ø µÅòÐ ¿¢¨É× «Æ¢Â¡§Á,
À¡÷ò¾ §ÁÉ¢ À¼Ã ¿¨¼ ¦¿üÈ¢
¬Î º¢Ú¸¡ø «¨¾óÐ ¯Ãõ ²È
¦ÁÄ¢ó¾ Òý Á¡÷Ò ¦À¡Ä¢óÐ ÅÄ¢Âì
ÌÃø ÒÄ÷ó§¾ «½ø ¾¡Å
¯¨Ç ¦À¡¾¢óÐ ¸ØòÐ «¼Ã
Å¨Ç Á¡¾÷ ÁÉõ Á¢¾¢ôÀò
¾¢Á¢÷óÐ ±ØóÐ ¿¢ýÈ¡÷ìÌô
À¨½óÐ ±Øó¾ þ¨½ ¿¸¢Äõ
ÌÚ ÑÍôÒô §À÷ «øÌø
Å¡ø ±Â¢üÚì ¸¨Æ §¾¡Ç¢
 ´Õ¿¡û ŨÃì ¦¸¡ñÎ
Á¨É ¾É¢ ¨Åì¸ ±ý º¢ÚÁ¸ý ¾¡Ûõ
¦ÀÈø ¾ó¾ ¦ÀÕ Á¸ý ¯Åì ¸¡ñ,
¾¢Èø ¿ó¾ ¡íÌ þÅý §¾Êì ¦¸¡ñ¼§¾!

- áÈ¡º¢Ã¢Âõ - 8

¦À¡Æ¢ôÒ:

ÅĢר¼ÂÐ ¸¡Äõ; Å¢ÂôÒÚ§Å¡õ ¡õ! ¾¡Â¢¼òРӨĢý Á¢¨º, ÌÆÅ¢Â¢ý Ó¸õ ÓüÚõ À¾¢Ôõ ÀÊ À¡¨Ä ÅÂ¢Ú Óð¼ «Õó¾¢, «·Ð ´Ø¸¢ì ¦¸¡ñÊÕìÌõ ÀÊ ¾ý Å¡¨Â Á£ðÎ ¦ÅÇ¢¦ÂÎòÐõ, "°, ¬ö" ±É ¯Á¢úóÐ, ¾ý ¾ó¨¾ ¦ÀÕ¿¨¸ ¦ºöÔÁ¡Ú ¸¡ðÊ, ±õ ÁÊ¢ý ¿¢ýÚ þÈí¸¢ì ÌÚ¸¢Â «Ê¸û º¡÷ó¾ ¿¨¼ þðÎõ, º¢Ä ¦À¡ØÐ µÊÔõ, º¢Ä¸¡ø ¾ý ¾ó¨¾Â¢ý Óи¢ý Á¢¨º ²È¢, «Å¨Ãì ̾¢¨Ã¡¸ ±ñ½¢ µîº¢Ôõ ¿¢ýÈ, §¿ü¨ÈÂô ¦À¡Ø¾¢ý µÅ¢Âõ ±Éô À¾¢ó¾ ±ý ¿¢¨É׸û «Æ¢Â¡Áø ¿¢ü¸×õ, ¡õ À¡÷òÐ Á¸¢ú×üÈ §ÁÉ¢ À¼÷óÐ ¦À¡Ä¢Â×õ, ¿¨¼ ¾ÎÁ¡È¢ «Ê ¿¢ýÈ º¢È¢Â ¸¡ø¸û Å¢õÁ¢ô Ò¨¼òÐ ¯Ãõ ²È¢ ¿¢ü¸×õ, ¦ÁÄ¢óÐ ¿¢ýÈ º¢È¢Â Á¡÷Ò «ÆÌ ¦ÀÈ, ÅÄ¢× ¦ÀüÚ ¿¢üÀ×õ, ÌÃø ¾ÊôÀ×õ, Ó¸ š¢Ûõ ¾¡¨¼Â¢Ûõ «¼÷ó¾ Á£¨ºÔõ ¾¡ÊÔõ ¾¡Å¢ ¿¢üÀ×õ, ¾¨Ä Á¢÷ «¼÷óÐ, ÅÇ÷óÐ ¸Øò¨¾ «Ç¡Å¢ ¿¢üÀ×õ, ¯¼ø¸ðÎ Á¢ÌóÐ ÅÇ÷ÔüÚ ¿¢ü¸×õ ¦ºö¾¡ÛìÌô ÀÕóРŢõÁ¢ þ¨½óÐ ¿¢ýÈ Ó¨Ä¸Ùõ, ÌÚ¸¢ ´Îí¸¢Â þ¨¼¸Ùõ, «¸ýÈ þ¨¼ì¸£ú ¸Ê¾¼Óõ, ¦ÅûǢ ±Â¢Úõ, ãí¸¢ø §À¡ýÈ §¾¡û¸Ùõ ¸ñ¼¡û ´Õò¾¢¨Â, Óý¨É ´Õ ¿¡û Á½í ¦¸¡ñÎ, ¾É¢ Á¨É¢ø ž¢Ôõ ÀÊ ¨Åì¸, ±õ º¢Ú Á¸É¡¸¢Â «Åý ¾¡Ûõ ¦ÀüÚò ¾ó¾ ¦ÀÕ¨Á ¦À¡Õó¾¢Â ¾ý Á¸¨É ¯§¾¡, þÅý ¸¡ñ! ¾ýìÌüÈ ¾¢È¨Á ¿¢¨ÈÔõ ÀÊ «ùÅ¡üȨÄò §¾Êì ¦¸¡ñ¼Ð ¡í¹ý?

ŢâôÒ:

þôÀ¡¼ø «¸òШȨÂî º¡÷ó¾Ð.

¾ý Á¸É¢ý ÌÆÅ¢ô ÀÕÅò¨¾Ôõ, «Åý Å¢¨ÃóÐ ÅÇ÷óÐ þ¨Ç»É¡¸¢ Á½õ ÒâóÐ, ®ñ¦¼¡Õ Á¸ÛìÌò ¾ó¨¾Â¡¸¢ ¿¢ýÈ ¸¡Äò¨¾Ôõ ¸ñ¼ ¾¡ö ´Õò¾¢, Åý þò¾¢Èõ ¦ÀüÈÐ ±í¹§É¡ ±É Å¢ÂóÐ ÜȢ¾¡¸ «¨Áó¾Ð þôÀ¡ðÎ.

þÐ ¾¡¦Â¡Õò¾¢ò ¾ý ¾¡ö¨ÁÔûÇò¾¡ø ¾ý Á¸ý ¦ÀüÈ À¢û¨Ç¨Âì ¸ñÎ Á¸¢úóÐ ÜÈ¢ì ¸¡Äò¨¾ Å¢Âó¾Ð.

þ·Ð þøÄ¢ÕóÐ Á¨ÉÂÈ¡õ âñ¼ ¾ý Á¸ý ¾¢Èõ ¯¨Ãò¾¾¡¸Ä¢ý Óø¨Ä¦Âý ¾¢¨½Ôõ, ¸¢Çó¾ ¾Á÷ Å¢ý ¿üÈ¡ö ¸¢Çò¾ø ±ý ШÈÔÁ¡õ.

¸¡Äò¾¢ý ¦Àâ ÀâÁ¡Éõ À¡÷ò§¾¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Monday, September 01, 2003

மாட்டுத் தோலும் மதங்கமும்

மாட்டுத் தோலும் மதங்கமும்

இன்று ஒரு கட்டுரையை செப்டம்பர் 8-இல் வெளிவந்த Outlook தாளிகையில் படித்தேன். கர்நாடக இசையின் மதங்க (ம்ருதங்கம் என்று வடமொழிப் படுத்தினால் தான் புரிபடுமோ?) வாத்தியக்காரர்கள், அவர்களுக்கு மதங்கத்தைச் செய்து கொடுக்கும் தொழிலாளர்கள் ஆகியோரைப் பற்றிய ஒரு கட்டுரை. அதில் சிலவற்றை மட்டும் வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன்.

Thyagaraja's Cow

S. ANAND

Mridangam-makers have always been Dalits and, in our era, frequently Dalit Christians. One such family, in fact, traces its roots right up to the time of Thyagaraja (1767-1847). Originally from Thanjavur, today most of them are settled in Chennai's Mylapore area, the nerve-centre of Tamil-Brahmin culture of which Carnatic music is a crucial part. Each of the three Veerabhadrasamy Koil streets here houses one mridangam-maker's shop. Yesudas, Aruldas, (the late) Gunaseelan and Johnson are brothers who have crafted and serviced the mridangams of almost every artist who matters. In fact, one brother camps in Mumbai twice a year to repair mridangams. From T.K. Murthy, Umayalpuram Sivaraman, Karaikudi R. Mani, T.V. Gopalakrishnan (TVG), Guruvayur Dorai, Mannargudi Easwaran and Srimushnam Raja Rao to the Canada-based Trichy Sankaran, each pro seeks them out. Just like the late Palghat Mani Iyer and Pazhani Subramania Pillai sought out Antony Sebastian (known as Setty), the father of these brothers, and Antony's two brothers Senkol and Fernandes. These three were, in turn, the sons of a man who responded to the name Sevittiyan to those who could not get around to uttering his real name, Sebastian.

Recalls 80-year-old maestro Murthy: "I had met Sevittiyan as a nine-year-old. He made mridangams for Narayanasamiappa who introduced the instrument to the concert platform during the regime of the Maratha kings in 19th century Thanjavur." Sevittiyan carried the mantle from his father Adaikkalam, who must have crafted the instrument for mridangists who accompanied Thyagaraja. We are also talking about a family that must have been one of the first Dalit converts to Christianity in 18th century Tamil Nadu.

The present generation has no memory of when the conversion could have happened. But surely, if the 'Paraiyar' ancestors of today's drum-makers had hoped to overcome the stigma of untouchability by embracing Christianity, their hope has been belied. Even the shifting to Madras in the '60s did not offer the anonymity that urbanity usually brings with it, since dealing with untreated leather, especially cowhide, continued to invite social opprobrium. Says Aruldas alias Raju (most of the mridangam-makers are given new 'Hindu names' by the artists they are associated with), the first to move to the city with his father Setty: "It was most difficult even to rent a house. People would turn us away because we handled animal hides."

The hides of three animals go into the making of a mridangam: goat, buffalo and cow. Buffalo skin is used to make the ropes (vaar) that run along the hollow jack-wood frame and also for the thoppi (cap) on the left head that provides the bass effect. The thoppi has two overlapping layers of buffalo skin with a layer of goatskin in the middle.The right head, valanthalai (see pix), is made of three concentric layers of skin. Moving inwards, first we have meetu thol, made of cowhide. Next, the mostly invisible chapu thol, made of goatskin. At the centre is a black circle (soru), made of a mixture of iron ore and manganese laced with rice starch, for tonal variations. In a scientific paper C.V. Raman wrote on Indian percussion instruments in 1922, he pointed out that while the drums the world over produced "inharmonic overtones" (that is, mere sound), "the mridangam forms an exception to the rule and gives rise to harmonic or musical overtones in the same manner as a stringed instrument." A bow to the faceless artisans of the Thanjavur parampara.

The irony is that Brahmins, who are most touchy about the cow's perceived divinity, have to necessarily run their fingers on a slaughtered cow's hide to produce music. When asked if they would oppose the proposed ban on artistic grounds, top mridangam players Outlook spoke to஗Murthy, Sivaraman, Karaikudi Mani and TVG஗dodged the question. While Murthy and Mani admitted that without cowhide there would be no mridangam, Sivaraman talked of importing synthetic parchment and TVG suggested importing cowhide. Aruldas, Yesudas, Johnson and their next generation஗Lawrence, Martin and Arokkiyam஗are shocked that the exponents of the art refuse to accept the fact that the making of a mridangam involves the killing of a cow in its prime. Mani, a finicky player whose mridangam needs to be serviced (for Rs 1,500) after every concert, insists: "Only those cows are killed that are old and are of no use." Adds Sivaraman: "Cows are not killed to make mridangams. They are slaughtered anyway and we merely use the hide."

Thiruvarur's Rajamanikkam, at 70 the oldest surviving flag-bearer of the Thanjavur tradition and nephew of the legendary Setty, scoffs at these views. "Have these people ever been to a slaughterhouse to see what we do? We examine cows and choose the healthy ones that have good, lustrous, soft skin. The cow should have given birth at least a couple of times but shouldn't be too old. We pay Rs 1,500 for the hide of one such cow." The mridangam craftsmen point out that they would never buy cowhide from Chennai's slaughterhouses "since cows here live on newsprint and other waste". They make regular trips to Thanjavur to buy the hide of well-nourished cows. Only goat and buffalo skins are procured in Chennai.
Says Yesudas, who has been exclusively making mridangams for Mani: "If the ban does come into force, we will defy it and use cowhide come what may." Unwittingly admitting that he would even do something illegal to procure a drum, mridangist Mani says, "Despite the ban on the use of pangolin skin, the kanjira (tambourine) is still available but at a premium. Similarly, we might have to shell out more for mridangams." However, Umayalpuram Sivaraman wants to change with the times: "Today doctors fit synthetic valves to the heart.Similarly, we will find a substitute for cowhide."

Irrespective of whether a cow-slaughter ban is effected, the mridangam-makers expect a little more respect from the players. And from society. "We deserve to be treated better than the cows," says Rajamanikkam.

மதங்கம் இல்லாத கருநாடக இசை உண்டோ ? மதங்கமோ, மத்தளமோ, மேளமோ போன்ற எந்த முழவாய் இருந்தாலும் மாட்டுத்தோலும், ஆட்டுத்தோலும், எருமைத்தோலும் இல்லாமல் செய்ய இயலுமோ? இன்றைக்கு வேண்டுமானால் அதற்கு செயற்கைத் தோல்களைக் கொண்டுவந்து செய்து பார்க்கலாம் என்று சொல்லலாம். ஒருவேளை அது இயலவும் கூடும். ஆனால் இது தேவையா? போலித்தனம் எங்கெல்லாம் நம்மைக் கொண்டு சேர்க்கும்?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

Á¡ðÎò §¾¡Öõ Á¾í¸Óõ

þýÚ ´Õ ¸ðΨè ¦ºô¼õÀ÷ 8-þø ¦ÅÇ¢Åó¾ Outlook ¾¡Ç¢¨¸Â¢ø ÀÊò§¾ý. ¸÷¿¡¼¸ þ¨ºÂ¢ý Á¾í¸ (õÕ¾í¸õ ±ýÚ Å¼¦Á¡Æ¢ô ÀÎò¾¢É¡ø ¾¡ý ÒâÀΧÁ¡?) Å¡ò¾¢Â측Ã÷¸û, «Å÷¸ÙìÌ Á¾í¸ò¨¾î ¦ºöÐ ¦¸¡ÎìÌõ ¦¾¡Æ¢Ä¡Ç÷¸û ¬¸¢§Â¡¨Ãô ÀüȢ ´Õ ¸ðΨÃ. «¾¢ø º¢ÄÅü¨È ÁðÎõ ¦ÅðÊ þí§¸ ´ðÊ¢Õ츢§Èý.

Thyagaraja's Cow

S. ANAND

Mridangam-makers have always been Dalits and, in our era, frequently Dalit Christians. One such family, in fact, traces its roots right up to the time of Thyagaraja (1767-1847). Originally from Thanjavur, today most of them are settled in Chennai's Mylapore area, the nerve-centre of Tamil-Brahmin culture of which Carnatic music is a crucial part. Each of the three Veerabhadrasamy Koil streets here houses one mridangam-maker's shop. Yesudas, Aruldas, (the late) Gunaseelan and Johnson are brothers who have crafted and serviced the mridangams of almost every artist who matters. In fact, one brother camps in Mumbai twice a year to repair mridangams. From T.K. Murthy, Umayalpuram Sivaraman, Karaikudi R. Mani, T.V. Gopalakrishnan (TVG), Guruvayur Dorai, Mannargudi Easwaran and Srimushnam Raja Rao to the Canada-based Trichy Sankaran, each pro seeks them out. Just like the late Palghat Mani Iyer and Pazhani Subramania Pillai sought out Antony Sebastian (known as Setty), the father of these brothers, and Antony's two brothers Senkol and Fernandes. These three were, in turn, the sons of a man who responded to the name Sevittiyan to those who could not get around to uttering his real name, Sebastian.

Recalls 80-year-old maestro Murthy: "I had met Sevittiyan as a nine-year-old. He made mridangams for Narayanasamiappa who introduced the instrument to the concert platform during the regime of the Maratha kings in 19th century Thanjavur." Sevittiyan carried the mantle from his father Adaikkalam, who must have crafted the instrument for mridangists who accompanied Thyagaraja. We are also talking about a family that must have been one of the first Dalit converts to Christianity in 18th century Tamil Nadu.

The present generation has no memory of when the conversion could have happened. But surely, if the 'Paraiyar' ancestors of today's drum-makers had hoped to overcome the stigma of untouchability by embracing Christianity, their hope has been belied. Even the shifting to Madras in the '60s did not offer the anonymity that urbanity usually brings with it, since dealing with untreated leather, especially cowhide, continued to invite social opprobrium. Says Aruldas alias Raju (most of the mridangam-makers are given new 'Hindu names' by the artists they are associated with), the first to move to the city with his father Setty: "It was most difficult even to rent a house. People would turn us away because we handled animal hides."

The hides of three animals go into the making of a mridangam: goat, buffalo and cow. Buffalo skin is used to make the ropes (vaar) that run along the hollow jack-wood frame and also for the thoppi (cap) on the left head that provides the bass effect. The thoppi has two overlapping layers of buffalo skin with a layer of goatskin in the middle.The right head, valanthalai (see pix), is made of three concentric layers of skin. Moving inwards, first we have meetu thol, made of cowhide. Next, the mostly invisible chapu thol, made of goatskin. At the centre is a black circle (soru), made of a mixture of iron ore and manganese laced with rice starch, for tonal variations. In a scientific paper C.V. Raman wrote on Indian percussion instruments in 1922, he pointed out that while the drums the world over produced "inharmonic overtones" (that is, mere sound), "the mridangam forms an exception to the rule and gives rise to harmonic or musical overtones in the same manner as a stringed instrument." A bow to the faceless artisans of the Thanjavur parampara.

The irony is that Brahmins, who are most touchy about the cow's perceived divinity, have to necessarily run their fingers on a slaughtered cow's hide to produce music. When asked if they would oppose the proposed ban on artistic grounds, top mridangam players Outlook spoke to—Murthy, Sivaraman, Karaikudi Mani and TVG—dodged the question. While Murthy and Mani admitted that without cowhide there would be no mridangam, Sivaraman talked of importing synthetic parchment and TVG suggested importing cowhide. Aruldas, Yesudas, Johnson and their next generation—Lawrence, Martin and Arokkiyam—are shocked that the exponents of the art refuse to accept the fact that the making of a mridangam involves the killing of a cow in its prime. Mani, a finicky player whose mridangam needs to be serviced (for Rs 1,500) after every concert, insists: "Only those cows are killed that are old and are of no use." Adds Sivaraman: "Cows are not killed to make mridangams. They are slaughtered anyway and we merely use the hide."

Thiruvarur's Rajamanikkam, at 70 the oldest surviving flag-bearer of the Thanjavur tradition and nephew of the legendary Setty, scoffs at these views. "Have these people ever been to a slaughterhouse to see what we do? We examine cows and choose the healthy ones that have good, lustrous, soft skin. The cow should have given birth at least a couple of times but shouldn't be too old. We pay Rs 1,500 for the hide of one such cow." The mridangam craftsmen point out that they would never buy cowhide from Chennai's slaughterhouses "since cows here live on newsprint and other waste". They make regular trips to Thanjavur to buy the hide of well-nourished cows. Only goat and buffalo skins are procured in Chennai.
Says Yesudas, who has been exclusively making mridangams for Mani: "If the ban does come into force, we will defy it and use cowhide come what may." Unwittingly admitting that he would even do something illegal to procure a drum, mridangist Mani says, "Despite the ban on the use of pangolin skin, the kanjira (tambourine) is still available but at a premium. Similarly, we might have to shell out more for mridangams." However, Umayalpuram Sivaraman wants to change with the times: "Today doctors fit synthetic valves to the heart.Similarly, we will find a substitute for cowhide."

Irrespective of whether a cow-slaughter ban is effected, the mridangam-makers expect a little more respect from the players. And from society. "We deserve to be treated better than the cows," says Rajamanikkam.

Á¾í¸õ þøÄ¡¾ ¸Õ¿¡¼¸ þ¨º ¯ñ§¼¡? Á¾í¸§Á¡, Áò¾Ç§Á¡, §ÁǧÁ¡ §À¡ýÈ ±ó¾ ÓÆÅ¡ö þÕó¾¡Öõ Á¡ðÎò§¾¡Öõ, ¬ðÎò§¾¡Öõ, ±Õ¨Áò§¾¡Öõ þøÄ¡Áø ¦ºö þÂÖ§Á¡? þý¨ÈìÌ §ÅñÎÁ¡É¡ø «¾üÌ ¦ºÂü¨¸ò §¾¡ø¸¨Çì ¦¸¡ñÎÅóÐ ¦ºöÐ À¡÷ì¸Ä¡õ ±ýÚ ¦º¡øÄÄ¡õ. ´Õ§Å¨Ç «Ð þÂÄ×õ ÜÎõ. ¬É¡ø þÐ §¾¨Å¡? §À¡Ä¢ò¾Éõ ±í¦¸øÄ¡õ ¿õ¨Áì ¦¸¡ñÎ §º÷ìÌõ?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Sunday, August 31, 2003

காலங்கள் - 1

முதற் காரியமாக காலங்கள் என்ற தொடரை இங்கு குடியேற்றுகிறேன். இந்தத் தொடர் நண்பர் ஆல்பர்ட்டின் தூண்டுதலில் 4 அதிகாரங்கள் மட்டும் சிங்கை இணையத்தில் எழுதியது. நேரம் பற்றாமல் போனதாலும், இந்தத் தொடருக்கு அதிக உழைப்புத் தேவைப் படுவதாலும் தொடர்ச்சி தவறிப் போயிற்று. பின் அண்மையில் தமிழ் உலகத்தில் 5 ம் அதிகாரத்தை எழுதினேன். இராசிகளின் உருவகப் பெயர்களை விளக்கும் 6-அதிகாரம் இன்னும் பாதி முடிந்த நிலையில் இருக்கிறது. இது எப்பொழுது முடியும் என்பது தெரியவில்லை. இனிக் காலங்கள் தொடர்.

1.இன்று புதிதாய்ப் பிறந்தோம்

மேலே உள்ள சொலவடையை எழுத்தாளர் நா.பா தன் புதினம் ஒன்றில் (அது குறிஞ்சி மலரா, பொன்விலங்கா என இப்போது நினைவுக்கு வரவில்லை) எழுதுவார். இப்படிப் புதிதாய்ப் பிறக்கும் உணர்வு, பழையதை  அழித்துக் கழித்த பின் ஆர்வத்தோடு புதியதை எதிர்கொள்ளும் பாங்கு, நமக்கெலாம் மிகத் தேவையான பழக்கம். இவ்வாழ்வின் ஓட்டத்தில், விழுந்து எழுந்து, முக்கி முனகி, போராடித் தள்ளாடி, முன்வந்து நிற்கும் வேளையில் சோர்வு நம்மை அடைந்தாலும், மறுநாளைச் சந்திக்க வேண்டுமே எனும் பொழுது, புத்துணர்வு நமக்கு மிகத் தேவையாகிறது.

சில குறிப்பிட்ட நாட்கள் - பொழுதுகள் - காலங்களில் புத்துணர்வைத் தூண்டும் நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு நிகழ்வே ஆண்டுப் பிறப்பு. ஒரு பாவலன் சொன்னதுபோல், ”ஆண்டொன்று போனால் அகவை ஒன்று அல்லவா போகிறது?” வாழ்வில் எத்தனை கனவுகளை நம்முள் தேக்கி நனவு ஆக்கத் துடிக்கிறோம்? வருமாண்டில் ”அது செய்வோம், இது செய்வோம்” என உறுதி கொள்கிறோம் அல்லவா? அவ்வுறுதி இல்லெனில் வாழ்வு ஏது?

உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆண்டுப் பிறப்பு ஒரே காலத்தில் வருவது அல்ல. இடத்திற்கிடம் மாறலாம்; ஏன் ஒரே நாட்டுவரலாற்றில் காலத்துக்குக் காலங்கூட மாறலாம். ஆயினும் ஆண்டுப்பிறப்பு, அனைவரும் எதிர்நோக்கும் நிகழ்வாகும். பண்பாட்டுக் குழப்பத்தால் தமிழர் இக்காலத்தில் ஆங்கில ஆண்டுப் பிறப்பை மட்டுமே கொண்டாடுவது அதிகரித்தாலும், தமிழாண்டுப் பிறப்பை விழிவைத்து எதிர்கொள்வோர் இன்னும் இருக்கிறார்.

என்ன? ”திருப்பதியிலும், பழனியிலும், இன்னும் ஓராயிரம் கோயில்களிலும், இதுபோலக் கிறித்துவ தேவாலயங்களிலும், சனவரி முதல்நாளுக்குக் கூடும் கூட்டம், சித்திரை முதல் நாளுக்குக் கூடுமா?” என்பது ஐயமே. எச்சமய நெறியாயின் என்ன, தமிழனுக்குரிய சித்திரைநாளைக் கொண்டாட நம்மில் பலர், குறிப்பாக தமிங்கிலராகிப் போனவர், ஏன் தயங்குகிறார், வெட்கப் படுகிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, தனிப்பட்டுப் போனதாய் உணர்கிறாரோ? "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்பதன் பொருள் நம் தனித் தன்மையை இழப்பதோ?" என்று ஒரோர் சமயம் உள்ளத்தை உறுத்துகிறது.

இருந்தாலும், விட்டகுறை தொட்ட குறை மறக்காத சில தமிழர் சித்திரைத் திங்கள் பிறக்கும்நாளை ஆண்டுப்பிறப்பென இன்னும் கொண்டாடித் தான் இருக்கிறோம். அன்றைக்குக் கோயிலுக்கும், தேவாலயத்திற்கும், இன்னும் பள்ளி வாசலுக்கும் போய், "இறைவா, இவ்வாண்டில் இன்னும் நல்லவற்றைச் செய்ய உறுதி கொடும் ஐயா" என வேண்டுகிறோம். உறவினரையும், நண்பரையும் அன்று கூப்பிட்டு முகமன் கூறுகிறோம். வீட்டுவாசலில் கோலம் போடுகிறோம். மாத்தோரணம் கட்டுகிறோம். ஆண்டின் பெயரைக் கோலத்திற்கு அருகிலெழுதி வரவேற்கிறோம். வீட்டை முடிந்த வரை அழகு படுத்துகிறோம். (இந்நாளில் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து யாரோ ஒரு திரைப்படக் கலைஞனின் விடலைத்தனத்தை விழிநீர் தேங்க, வாய்நீர் வடியப் பார்த்து நேரங்கழிப்பது விழா சேர்ந்ததல்ல; அது இன்னொரு வகை)

பனைவெல்லம் சேர்த்து, வேப்பம்பூப் பச்சடி வைக்கிறோம். ஓர் இனிப்பாவது அற்றைச் சமையலில் சேர்கிறது. மறவாமல் பாயசம் வைக்கிறோம். முடிந்தால் ஒரு உளுந்து வடை. இன்னும் சிலர், குறிப்பாக ஒருசில தென் மாவட்டத்தினர் காலையில் எழுந்தவுடன் பூசை அறைக்குப் போய் கண்ணாடி பார்க்கிறோம். பூசைவேளையில் புத்தாண்டிற்கான அஞ்சாங்கம் படிக்கிறோம். அந்த ஆண்டுப்பலன் என்று சொல்லப்பட்டதை அறிய முற்படுகிறோம். புத்தாடை, பூ, பழம் எனப் புதுக்கிட்டுப் பெரியவரிடம் வாழ்த்துப் பெறுகிறோம். ஊரெலாம் வலம்வந்து யாரைக் காணினும் வழுத்திக் கொள்கிறோம். இப்படியெலாம் செய்து "செல்வம் நம் வாழ்வில் பொங்கி வழியட்டும்" என்று இறையை வேண்டிக் கொள்கிறோம்..

மேற்சொன்னதை ஒருசில மாற்றங்களோடு இசுலாமியர், கிறித்தவர், சிவநெறியர், விண்ணெறியர், சமணர், புத்தர் என எல்லாச் சமயத்தாரும் செய்ய முடியும். ஏனென்றால், ஆண்டுப் பிறப்பு என்பது குமுகாயப் பழக்கம், பண்பாட்டுப் பழக்கம். அதைச் சமயம் தடுக்க இயலாது. ஓணம் வந்தால் சேரலர் அனைவரும் கொண்டாடவில்லையா, என்ன? இதிற் சமயம் குறுக்கே வருகிறதோ? இல்லையே! விவரங்கெட்ட ஆங்கில அடிமைத்தனம் ஊடுவந்து கேரளரைத் தடுக்கிறதா? இல்லையே! அப்படியெனில், தமிழர்மட்டும் ஏன் சமயநெறியை ஊடே கொணர்ந்து தமிழாண்டுப் பிறப்பைத் தவிர்க்கிறோம்? தமிழர் எல்லோருக்கும் உரியது தமிழாண்டுப் பிறப்பு அல்லவா?

இந்நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ளும் நிலையில் நம் சிறார்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் விடைகூறக் கடமைப் பட்டுள்ளோம்.

தமிழ் ஆண்டுக் கணக்கு எப்படி வந்தது?

அச்சிறாரை எண்ணி, அவருக்கு விடைசொல்லும் வகையால், கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போமா? காலங்கள் என்ற இத்தொடரின் முதல் விளக்கம் இது.

நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கும் இப்பேரண்டத்தில் எங்கோ ஒரு மூலையில், ஒரு பால்வழி மண்டலத்தில் நம் சூரியக் குடும்பம் உள்ளது. இச் சூரியக் குடும்பத்தின் முதற்கோளாக அறிவனும் (புதனும்), 2 - ஆவதாய் வெள்ளியும், 3 ஆவதாய் நாம்வாழும் புவியும், 4-ஆவதாய்ச் செவ்வாயும், 5-ஆவதாய் வியாழனும், 6- ஆவதாய்க் காரி (சனி)யும் வலம்வருகின்றன. 3 ஆம் கோளான புவி தன்னைத்தானே உருட்டியும், அதேபொழுது, சூரியனை வலமாகவும் வருகிறது. புவி தன்னை உருட்டிக் கொள்ளூம் நேரம் ஒரு நாள் என்றும், சூரியனை வலம்வரும் காலம் ஓராண்டு என்றும் கொள்ளப் பட்டு மற்றக் காலங்கள் இப் பின்னணியிலேயே கணக்கிடப் படுகின்றன.

இந்த உருட்டுதலும், வலைத்தலும் ஆகிய 2 அடிப்படைகளுக்கும் இடையே ஓர் ஒருப்பாடு (togetherness) இருப்பதை நாமெலாம் அறிவோம். அதாவது சூரியனை வலக்கும் ஒராண்டு வலயத்துள், ஏறத்தாழ 365 1/4 தன்னுருட்டுகளை புவி செய்து விடுகிறது. ஒவ்வொரு தன்னுருட்டும் ஒரு நாளாகிறது.

இந்தத் தன்னுருட்டை முற்கால மாந்தர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்?

கீழது மேலாய், மேலது கீழாய் இருளும் ஒளியும் மாறிமாறி வருகின்றன. பகல் வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது. எவ்வளவு முயன்றாலும், கண நேரத்திற்கு மேல் நம்மாற் சூரியனைப் பார்க்க முடிவதில்லை. மாறாக, இருளில் வானம் கண் சிமிட்டுகிறது. குளிர்ந்த நிலா வானத்தில் எழுந்து, குறிப்பிட்ட நேரம் பயணம் செய்து, பின் மறைவதைப் பார்க்க முடிகிறது. அப்போது மங்கிய ஒளிகலந்த இருள், மாந்தனின் அறிவார்வத்தைத் தூண்டுகிறது. பகல் பசிக்கு ஆனவுடன், இருள் ஓய்வுக்கும் ஆய்வுக்கும் ஆகிவிடுகிறது.

நாள் முதலில் இருளையே குறித்தது. இருளில் தொடங்கிப் பின் ஒளிவந்து, மறுபடியும் இருள் வரும்வரை, ஆகும் பொழுதை ஒரு நாளெனப் பழந்தமிழர் அழைத்திருக்கிறார். ஒவ்வொரு இருட்பொழுதிலும் நிலவைப் பார்க்கும் போது அதன் பின்புலம் மாறுவதை தமிழ்மாந்தன் பார்த்திருக்கிறான். நிலவுக்குப் பின் இருக்கிற, கண்சிமிட்டி மின்னிடுகிற, ஒளிக்கூட்டத்தில் தனக்குத் தெரிந்த உருவகங்களை இவன் பார்க்கிறான்.

மின்னுவதை மீன் என்றே பழந்தமிழன் குறிப்பிட்டான். ஒரு மீன் வளைந்த முடப்பனையாகத் தெரிந்தது; இன்னொன்று எரியும் தழலாய்த் தெரிந்தது; இன்னும் ஒன்று நீர்நிறைந்த குளமாகத் தெரிந்தது. இப்படியே 28  பின் புலங்களை (மீன்களை) அவனால் அடையாளம் காட்ட முடிந்தது. மீள மீள இப் பின்புலங்கள் புவியைச் சுற்றுவதாகக் காட்சியளித்தன. எப்படி ஒடும் ஆற்றில் படகு போகையில் 2 கரையிலும் இருக்கும் காட்சிகள் மறைந்து கொண்டேவந்து படகு நிலையாய் இருப்பதுபோல் தோற்றம் அளித்தாலும், "கரைகள் நிலையானவை; படகே  நகர்கிறது" என்று பட்டறிந்து உணர முடிந்ததோ (கணியர் ஆரிய பட்டா தன் வானியல் நூலில் இவ்வுவமையைக் கூறுவார்), அதுபோல "புவி தன்னை உருட்டிக் கொள்கிறது; பின் புலங்கள் நிலையாக உள்ளன" என்று பழந்தமிழ் மாந்தன் புரிந்துணர்ந்தான்.

உண்மையில் இப் பின்புலங்கள் அவனுக்கு நாள்காட்டும் அடையாளங்களாக நாள்காட்டுகளாக, நாள்மீன்களாகத் தெரிந்தன. (இந் நாள்காட்டு வடவர் பலுக்குமுறையால் நாள்காட்டு> நாட்காட்டு> நாட்காத்து> நாட்காத்தம்> நாக்கத்தம்> நாக்ஷத்தம்> நாக்ஷத்ரம்> நக்ஷத்ரம் எனச் சங்கதத்திற் திரியும். நாம் மீண்டும் தமிழொலிப் படுத்தி நட்சத்ரம் என்போம். இதற்குப் பேசாமல், நாள்காட்டையே வைத்துக்கொள்ளலாம்.) அக்காலக் கல்வெட்டுக்களில் நாள்காட்டு அடையாளமே குறிக்கப்பட்டு இருக்கும். இன்றைக்கு இருப்பது போல திகதிகளைக் குறிக்கும் வழக்கம் கிடையாது.

இந்த 28 நாட்களில் நிலவொளி மிகுந்து நிறைவடைந்து பூரித்தும் (பூரணித்தல்> பூரணம்> பௌரணம்> பௌர்ணமை full moon இப்படித் தமிழிலிருந்து வடமொழி போகும்.), பின் ஒளி குறைந்து, கருத்தும், அமைந்தும் (அமைவாதல்> அமைவாதை> அமவாதை> அமவாசை> அமாவாசை, new moon மறுபடியும் வடமொழி மாற்றம்) நிலவு போகும் போக்கை தமிழ்மாந்தன் பார்த்தான். சொக்கிச் சொலித்து ஒளி கொடுக்கும் பக்கம் (சொக்கொளிப் பக்கம்>சொக்கிள பக்கம்>சொக்கில பக்கம்>சுக்ல பக்கம்> சுக்ல பக்ஷம் bright fortnight) 14 நாளும், கருத்த பக்கம் (கருவின பக்கம்>கருயின பக்கம்>கருஷ்ண பக்கம்>க்ருஷ்ண பக்ஷம் dark fortnight) 14 நாளும் ஆக, இரண்டு பக்கம் சேர்ந்தது ஒரு மாதம் என்றும் கொள்ள நேர்ந்தது. (இதை இரு பதினைந்து நாட்கள் எனக் கொண்டது இன்னும் பலகாலம் சென்று ஏற்பட்ட பழக்கம்.) மதி எனும் நிலவே காலத்தை மதிக்கச் செய்தது. மாதம் என்றசொல் பிறந்தது. மதித்தல் = அளவு கொள்ளல். அதே போல மானித்தலும் அளவிடுவதலே. இந்தையிரோப்பிய மொழிகளில் மானித்தல்>month, monAt என்றாகும்.

நாளாவட்டத்தில் 28 நாள்காட்டுகளில் ஒரு நாள்காட்டை முற்றிலும் தெளிவாக அடையாளம் காணமுடியா நிலையில் 27 நாள்காட்டுகள் மிஞ்சின. (இவற்றின் தமிழ்ப் பெயர்களை இங்குநான் விவரிக்கவில்லை.) ஒவ்வொரு நாள் காட்டிலும் பல விண்மீன் கூட்டங்கள் அடையாளம் காணப் பட்டன. இரவு எலாம் வான வேடிக்கை தானே? பின் கூர்த்த மதியால் அடையாளம் காண்பது சரவலா என்ன? ஒரு வியப்பைப் பார்த்தீர்களா? பார்ப்பது மதியை (நிலவை); அதை மதிப்பது (அளவிடுவது) மதியால் (அறிவு, மூளை). இயல் மொழியான தமிழில் இப்படித் தான் சொற்கள் ஏற்படுகின்றன.

இந்த விண்மீன் கூட்டங்களை வெறொரு வகையில் உருவகப் படுத்தித் தொகுதிகளாக்கிய போது அவை 12 தொகுதிகளாகத் தெரிந்தன. அவை இரைந்து கிடந்த பக்குவம் இரைதி = தொகுதி> இராதி> இராசி ஆனது. ஒவ்வொரு இராசியையும் வீடு என்றே பழம்மாந்தன் சொல்ல முற்பட்டான். பகலெல்லாம் பசிக்கு அலைந்து இரவில் இல்தேடி, தான் வருவது போல், இவ் விண்மீன் கூட்டங்களும் இரவில் வீடுதேடி வந்ததாக உருவகித்து அவை இருக்கும் அண்டவெளியை வீடென்றே உரைத்தான். 12 தொகுதிகளும் 12 வீடுகளாகக் கொள்ளப் பெற்றன. ஒரு வீடு ஆடாக (மேழம்) த் தெரிந்தது; இன்னொன்று மாடாக (விடை)த் தெரிந்தது; மேலும் ஒன்று நண்டாகத் தெரிந்தது; இன்னும் மற்றொன்று சுறாமீனாகத் தெரிந்தது. இப்படி மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் எனப் 12 இராசிகளுக்குப் பெயரிட்டான். இவ் விளக்கங்களைப் பின்னர் ஒரு முறை பார்ப்போம்.

மேற்சொன்ன 27 நாள்காட்டுக்களை இன்னும் பகுத்து 108 பாதங்கள் (பகுத்தது பாதம்) எனக்கொண்ட தமிழன், 12 வீடுகளையும் 108 பாதங்களோடு ஒப்பிட்டு ஒரு வீட்டில் 9 பாதம் என ஈவு வகுத்தான். இவ்வீடுகளும் நாள்காட்டுகளும், பாதங்களும் நம் புவியிலிருந்து பார்க்கும் விண்வெளியைப் புலம் பிரிக்கும் அடையாளங்கள். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று புவியில் திசை காண்கிறோம் இல்லையா? அதுபோல் விண்வெளியில் திசை காட்டும் அடையாளங்களே இந் நாள்காட்டுகளும், இராசிகளும், பாதங்களும் என உணர வேண்டும். சூரியன் சித்திரையில் உதித்தது என்றால், சித்திரை நாண்மீன் இருக்கும் திசையில் காட்சியளித்தது என்று பொருள்.

இனி அடுத்துக் கோள்மீன்களுக்கு வருவோம். விண்மீன்களைப் போலவே ஒளிகொண்டு ஆனால் பெரிதாக ஊடகம் இன்றி வெறும் கண்ணுக்கே கோளமாகக் காட்சியளித்தவை கோள்மீன்களாகும். அவையே அறிவன், வெள்ளி, செவ்வாய், வியாழன், காரி என்று அழைக்கப் பட்டன. அறிவன் கோள் பச்சைக கூறு கலந்து தெரிந்தது. வெள்ளி வெள்ளையாகக் காட்சி யளித்தது. செவ்வாய் செம்மை நிறத்தோடும், வியன்று அகலமான வியாழன் பொன் நிறத்தோடும், காரி கருநிறத்தோடும் காட்சியளித்தன. இவற்றோடு கண்ணைக் கூசும் அளவு ஒளிறுகிற ஞாயிறும் (யா = இருள்; யா+இறு > ஞா+யிறு = இருளை இறுக்கும் கோள்; சுள் என்று எரிக்கும் கோள் சூரியன்) ஒரு கோளாகக் கொள்ளப் பெற்றது.

உண்மையில் புவியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றினாலும், புவியை, ஞாயிறும் மற்ற கோள்களும் சுற்றுவதாகவே நமக்குத் தோற்றம் அளிக்கும். புவியில் இருந்து ஞாயிறு தவறிய மற்ற கோள்களைப் பார்த்தால் அவை யெலாம் ஏறத்தாழ ஒரே தளத்தில் புவியைச் சுற்றுவதாகவே நமக்குத் தோற்றம் அளிக்கின்றன. இச் சுற்றுத்தளமும் (plane of revolution) புவியின் நடுக் கோட்டுத் தளமும் (equatorial plane) ஒன்றாகவே நம் கண்ணுக்குத் தென்படும்.

இதுதவிர புவியைச் சுற்றுவதாகத் தோற்றமளிக்கும் ஞாயிற்றின் சுற்றுத் தளம் புவி நடுக்கோட்டுத் தளத்தை 23.5 பாகையில் விழுந்து வெட்டுவது போலக் காட்சியளிக்கும். இந்த 2 தளங்களின் வெட்டு விழுப்பை "விழு" (point of intersection) என்றே தமிழில் சொல்ல முற்பட்டனர். ஒரு வட்டத்தளம் இன்னொரு வட்டத்தளத்தை 2 இடங்களில் அல்லவா வெட்ட வேண்டும்? அதை யொட்டி 2 விழுக்கள் நமக்குப் புரிபடுகின்றன. ஒன்று மேழ விழு மற்றொன்று துலை விழு. அதாவது ஒரு விழு மேழ இராசி இருக்கும் திசையிலும், மற்றொன்று துலை இராசி இருக்கும் திசையிலும் காட்சியளித்தன.

புவி சூரியனைச் சுற்றுவதே உண்மைநிலை என்றாலும் சூரியன் புவியைச் சுற்றுவது போலத் தோற்றமளிக்கிறது என்றோமல்லவா? அந்தப் புவியின் வலயமும் (revolution) நேர் வட்ட வலயம் அல்ல. அது நீள் வட்ட வலயம். இந் நீள்வட்ட வலயத்தில் தான் புவி 365 1/4 நாளில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதன் வலயத்தில் ஓவ்வொரு சிறுபகுதியும் ஒரு நாளைக் குறிக்கும். ஒவ்வொரு நாள்பகுதிக்கும், புவி வருகையில், சூரியனுக்கும் இடையுள்ள தொலைவைப் பொறுத்தே நாம் வெப்பத்தைப் பெறுகிறோம். அந்த நீள் வட்டத்தில் சூரியனுக்கு மிக அருகில் வரும்நாள் வேனில் முடங்கல் (summer solstice) என்றும் சூரியனுக்கு மிகத் தொலைவில் இருக்கும் நாள் பனி முடங்கல் (winter solstice) என்றும் சொல்லப் பெறும்.

2 விழுக்களும், 2 முடங்கலும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை. இப் புவி சுற்றும் வலயத்தில் மேழ விழுவும், துலை விழுவும் ஆன 2 புள்ளிகள் ஒன்றிற்கு ஒன்று எதிரும் புதிருமானவை. அதேபோல் வேனில் முடங்கலும், பனி முடங்கலும் எதிரும் புதிருமானவை. அதேபொழுது, முடங்கலும் விழுவும் 90 பாகைப் பிரிவைக் கொண்டவை. பனி முடங்கலில் இருந்து பார்த்தால், மேழ விழு 90 பாகை தள்ளியிருக்கும். அதனின்றும் 90 பாகையில் வேனில்  முடங்கல் இருக்கும். அதனின்றும் 90 பாகையில் துலைவிழு இருக்கும். முடிவில் 360 பாகை கடந்த பின் மீண்டும் பனி முடங்கல் வந்து சேரும்.

இப் புவிவலயத்திற்கு தொடக்கமென ஏதேனும் இருக்க முடியாதல்லவா? ஆனாலும், தொடக்கம் வேண்டுமென மாந்த மனம் கேட்கிறதே? இங்கு தான் பண்பாடு, பழக்கம் என்று வருகிறது. பனிமுடங்கலில் தொடங்குவது மேல் நாட்டு முறை, பழக்கம். பனி முடங்கல் சனவரிக்கு அருகில் ஏற்படுகிறது.

மேழ விழுவில் தொடங்குவது தமிழரின் ஒருவகைப் பழக்கம். (இந்தியாவின் பல மாநிலங்களின் முறையும் கூட இது தான்). மேலையரைப் போலப் பனி முடங்கலிலும் தமிழர் தொடங்கியுள்ளார். இது இன்னொரு வகைப் பழக்கம். மூன்றாம் வகையிற் துலை விழுவில் தொடங்கும் முறை சேரலத்தின் ஒரு பகுதியில் இருந்தது. அதை வேறொரு இடத்திற் சொல்வோம்.

மேழம் (=மேடம்>மேஷம்) என்பது ஆடு என்றும் கூறப்படும். ஆட்டின் பருவம்  ஆட்டை. நாம் பார்க்கும்முறையில் வலயத்தொடக்கம் ஆட்டை என்பதால் வலயமே ஆட்டையாயிற்று. மூக்கொலி நுழைந்து ஆண்டும் ஆயிற்று. மேஷாதி என்று சங்கதத்தில் ஒலி பெயர்ப்பர்.

இன்றைக்குச் சோதிடம் எனப்படும் சோதியம்(>சோதிஷம்>சோதிடம் = சோதி தரும் ஒளி மீன்களை வைத்து எதிர்காலம் கணிக்கும் இயல் = அதாவது கணியம்) வானவியல், கணிப்பியல் என்று இரண்டாகப் பிரிந்தது. நாம் கணிப்பியலுக்குள் செல்லவில்லை. அக்கால வானவியல் அறிய வேண்டும் எனில், தமிழ்க் கணியத்தை நாம் அறியத்தான் வேண்டும்.

சரி! தமிழ் ஆண்டுப்பிறப்பு மேழவிழுவை ஒட்டி எனில் அது மார்ச்சு 21ம் நாளை ஒட்டியல்லவா வரவேண்டும்? பின் ஏன் ஏப்ரல் 14-ல் சொல்லி வைத்தாற் போல் ஒரே நாளாய் வருகிறது? அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

இவ்விளக்கத்தை முடிக்குமுன் பாவலரேறு பெருஞ் சித்திரனாரின் ஒரு பாடல். இது எல்லா விழாக்களுக்கும் பொருந்தும்.
----------------------------------------------------
நகையாகின்றே!
இது கொல் விழவே; நகையா கின்றே!
புதுமடிக் கலிங்கங் கதுமத் தாங்கி
உழுந்தின் கொழுமாப் புழுவை முக்கிப்
பயறு தலைப்பெய்த பாஅல் மிதவை
வயிறு முகந் தெரிய மாந்தி உயிர்ப்பறும்
அரம்ப மாக்கள் ஆடும்
உரந்தவிர் நாளின் ஒழுகிலா நிகழ்வே!

- நூறாசிரியம் - 20

பொழிப்பு:

இதுவோ விழா எனப் பெறுவது; நகை விளைகின்றது. புதிய மடியுடைய மெல்லுடையைப் பெருமையுடன் உடுத்து, உழுந்தினது கொழுவிய மாவினால் செய்த புழையுடைய பண்ணியத்தை முச்சு முட்ட உண்டு, பயறு பெரும்பான்மையுங் கலந்த பால் சேர்ந்த கும்மாயத்தை, வயிற்றின் முக முழுதும் எழுந்து தோன்றும் படி ஆர வுண்டு, செயலற்றுத் திரிதரும் விலங்கு போல்வார் ஆடிக் களிக்கும், அறிவு விலக்கப் பெற்ற முறையிலாத செயலே!

விரிப்பு:

இப்பாடல் புறம்.

புதிய உடையைப் பெருமையுடன் உடுப்பதுவும், பல பண்ணியங்களை வயிறு நிறையும் படி மாந்திச் செயலிலாது விலங்கு போல ஆரவாரத்தோடு ஆடிக் களிப்பதுவும் ஆகிய அறிவு தவிர்க்கப் பெற்ற முறையிலாதா இச் செயல் நகைப்பிற்குரியது ஆகும் அன்றி விழா எனப்படுவது ஆகாது என வலியுறுத்திப் பேசுவதாகும் இப்பாட்டு.

விழா என்று பொதுவிற் குறித்தமையான் குல சமய விலக்கின்றி நடைபெறும் எல்லா விழாக்களுக்கும் பொருந்துவதாகும் இக்கருத்து.

விழா உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் மக்களிடத்துப் பரவ வேண்டி அமையப் பெறுவதாகும். அவையன்றி உடுப்பதும் உண்பதும் ஆரவாரித்தலும் செயலற்றுத் திரிதலும் ஆகிய தாழ்வும், தந்நலமும் மிக்க நோக்கம் கொண்டு விளங்கும் விழாக்கள், முறையில்லாத விலங்குச் செயல்களேயாம் என்று தெருட்டிக் கூறுவதாகும் இப்பாட்டு.

இது புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.

-----------------------------------------------------

என்ன பார்க்கிறீர்கள்?

ஆரவாரம் தகாது என்று பாவலர் ஏறு சொல்லவில்லை. உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் கூடவே இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறார். ஆண்டுப் பிறப்பு என்பது அப்படி உள்ள ஒரு விழா தான்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் எல்லா நலன்களும் பெற்றுச் சிறக்க என் வாழ்த்துக்கள். அடுத்த சந்திப்பில், காலங்கள் பற்றித் தொடர்வோம்.

அன்புடன்,
இராம.கி.