Sunday, December 17, 2023

Heliocentrism in Sangam period

"வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த, 

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து" 

                      - சிறுபா242-243, 

ஒளி நிறைக்கும் (இளங்காலை) வானத்தின், கோள்கள் சூழ்ந்த, இளங்கதிர் ஞாயிற்றை இகழும் தோற்றத்து” 

என்பது மேலேயுள்ள அடிகளின் பொருள். இங்கே வியக்க வேண்டியது 2000 ஆண்டுகளுக்கு முன் ”கோள்கள் ஞாயிற்றைச் சூழ்ந்தன, ஞாயிறு நடுவில் உள்ளது” எனும் சூரிய நடுவக் கொள்கை பேசப் படுகிறது. 

தமிழன் ஒன்றும் சோடையில்லை. நம் பிள்ளைகளுக்கும் உலகத்திற்கும் நம் முன்மை சொல்லப்பட்டுள்ளதோ? பெரிய கேள்வி. 

பொ.உ.மு. 300 இல் Aristarchus of Samos இதைக் ஒரு கருத்தீடாய்ச் சொல்லி யுள்ளார். இங்கே கருத்தீடாக அல்ல, பட்டகையாய் (fact), முடிந்த முடிவாய்ச் சொல்லப் படுகிறது. 

பொ.உ.16 ஆம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசு சொன்னபிறகு தான் அறிவியல் புரட்சி ஏற்பட்டதாம். சூரிய நடுவக் கொள்கை ஏற்கப்பட்டதாம். தெரிந்து கொள்க. 

எங்கேயாவது ஆங்கில விக்கிப்பீடியாவில் சூரிய நடுவக் கொள்கையோடு சேர்த்து, சிறுபாணாற்றுப் படை, இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பெயரைப் பார்த்துள்ளீரா? 

ஐயா, தமிழ்நாட்டு விக்கிப்பீடியரே! நீவிர் ஏதும் செய்யலாமே?

No comments:

Post a Comment